Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1345
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. 20 hours ago, குமாரசாமி said:

    இன்று உலகை ஆள்வது அமெரிக்கா என்பது உலகறிந்த விடயம்.ஆகையால்  டரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த நான்கு வருடங்களுக்குள் மாற்றுக்கருத்து சரித்திரங்கள் எழுதப்படலாம் என பலர் ஊகிக்கின்றனர். 😄

     

    டிரம்ப் நமது நண்பனும் அல்ல.  பைடின் நமது எதிரியும் அல்ல.  ஆனால், சிங்கத்தின் சிளிர்ப்பை பார்த்துமெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை. 😁

    • Haha 1
  2. நிலமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.  சிங்கன் மீண்டும் வந்தால்தான் உள்ளது மிச்சம் கதை எல்லாருக்கும். 😁

    • Like 1
  3. மஞ்சள் சிவப்பு வர்ணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் கொடி கட்டவில்லை. இல்லாவிட்டால் கருத்துக்கள் கூறும் சிலருக்கு புகையாது. சிலவேளைளில் தம்மைவிட கற்றவர்கள், முன்னேறியவர்கள் ஏதும் நல்லது செய்து பெயர் எடுக்கின்றார்கள் என்று புகையிதோ தெரியாது. இளனி குடித்து பார்க்கலாமே.  

    மானிப்பாய் வைத்தியசாலை மீது ஒரு காலத்தில் விமான குண்டு வீசப்பட்டது. குண்டு வீசப்பட்ட சில தினங்களில் அழிவை பார்த்தேன்.  மீண்டும் நல்ல நிலைக்கு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்!

    • Like 1
    • Thanks 2
  4. On 2/3/2024 at 08:20, island said:

    எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. 

    படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று  போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.

     

    இந்திய ஊடகங்களின் கருத்துப்படி சாந்தன் விடுதலை புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்.  விடுதலை புலிகளால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நின்று விடுதலை புலிகளுக்காக வேலை பார்த்தார். 

    வெவ்வேறு புலனாய்வு போராளிகள் வெவ்வேறு திட்டங்களில் செயற்பட்டார்கள் என வைத்தால் சாந்தனும் அவ்வாறு செயற்பட்டு உள்ளார். அவர் ராஜீவ் கொலை திட்டத்தில் பங்குபற்றாமல் போய் இருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்காக இந்தியாவில் செயற்பட்டு உள்ளார் தானே?

    அப்படி பார்த்தால் வீரவணக்கம் சொல்வது தவறாக தெரியவில்லை.

    நாங்கள் நீங்கள் சமூக ஊடகத்தில் எழுதுவதை வைத்து உலகம் விடயங்களை அறியும் என எண்ணுவது நகைப்பானது. 

    ஆளாளுக்கு தமது மன அழுத்தங்களை போக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பொழுது போகவும், பெருமைக்கும், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு கருத்துக்கள் கூறுகின்றார்கள்.

    இப்போது சாந்தன் பேசுபொருள் ஆகி உள்ளார். சிறிது நாட்களில் தலைப்பு இன்னோரிடம் சென்றுவிடும். 

    • Like 1
    • Thanks 1
  5. On 2/3/2024 at 03:48, ஏராளன் said:
    02 MAR, 2024 | 11:29 AM
    image
     

    இலங்கையில் நீதி செத்துவிட்டது என போராட்டம் நடத்தியவர்கள் இன்று தமது உட்கட்சி பிரச்சினைக்கு நீதி வேண்டி இலங்கை நீதிமன்றங்களையே நாடியுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இன்றைய தினம் சனிக்கிழமை (02) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

    அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

    இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள், முல்லைத்தீவு நீதிபதி நாட்டை விட்டுப்போனதை வைத்து இலங்கையில் நீதி செத்துவிட்டதென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியவர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணையே தேவை என்றவர்கள், தமது உட்கட்சி விவகாரத்துக்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்துக்கும் போவோம் என்பார்கள். தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடு இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

    இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்துவிட்டது" என்றுள்ளது.

    https://www.virakesari.lk/article/177731

     

    நிதர்சனமான உண்மை. கூறுபவரை வைத்து கூறப்படும் செய்தியை தவறாக புரியக்கூடாது. 

    நடப்பது நாடகம் தானே?

  6. 7 hours ago, பையன்26 said:

    அண்ணா முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடித்த‌ அணிக‌ள்
    சூப்ப‌ர் சிக்ஸ்சுக்கு போகின‌ம் 

    அதில் இர‌ண்டு குருப் இருக்கு...........ஒவ்வொரு அணிக‌ளும் இர‌ண்டு த‌ர‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன்   விளையாட‌னும்.............அந்த‌ இர‌ண்டு குருப்பில் முத‌ல் இர‌ண்டு இட‌த்தை பிடிக்கும் அணிக‌ள்  சிமி பின‌லுக்கு போவின‌ம்...........

    இப்ப‌ புரியுதா அண்ணா......................

     

    Screenshot-20240129-204211-ESPNCricinfo.

    ஆர‌ம்ப‌ சுற்றில் பெற்ற‌ புள்ளிக‌ள் சூப்ப‌ர் சிக்ஸ் ப‌ட்டிய‌லும் இருக்கும் அண்ணா...........உதார‌ண‌த்துக்கு சூப்ப‌ர் சிக்ஸ்சில் இந்தியா ஒரு  ம‌ச்சிலும் தோத்தா கூட‌ இந்தியா சிமிபின‌லுக்கு போகும் அள‌வுக்கு ஆர‌ம்ப சுற்று போட்டியில் அதிக‌ புள்ளிய‌  பெற்றுள்ளார்க‌ள்............இலங்கை சிமி பின‌லுக்கு போகுவில் க‌ண்டிப்பாய் இர‌ண்டு ம‌ச்சும் வெல்ல‌னும் ஏன் என்றால் அவுஸ்ரேலியாவிட‌ம் இல‌ங்கை தோத்த‌ ப‌டியால்.............

     

    இந்தியா

    பாக்கிஸ்தான்

    இலங்கை

    அவுஸ்ரேலியா.........இவ‌ர்க‌ள் சிமி பின‌லுக்கு போக‌க் கூடும்

    ஒவ்வொரு அணியும் இர‌ண்டு முறை தான் விளையாட‌லாம் அதில் புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இர‌ண்டு இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் சிமி பின‌லுக்கு

    சிமி பின‌லில் வென்ற‌ இர‌ண்டு அணிக‌ள் பின‌லில் விளையாடுவின‌ம்.....................

    அரை இறுதி விடயத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகளை விட  அவுஸுடன், தென் ஆபிரிக்கா/இங்கிலாந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம் தானே? மற்றைய குழுவில் இந்தியாவுடன் பாகிஸ்தான்/நியூசிலாந்து/பங்களாதேஷ் போகும். 

  7. அரசியல் வேறு விளையாட்டு வேறு, அரசியல் வேறு மதம் வேறு எனும் கோட்பாடுகள் எல்லாம் இந்தியாவிலும் சாத்தியம் இல்லை, இலங்கையிலும் சாத்தியம் இல்லை? மேற்கத்தைய நாடுகளில் சிறிதளவு சாத்தியமோ?

  8. நானும் இப்போது பார்த்தேன். இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். கால் இறுதி இல்லை.  

    ஆனால், இரண்டு குழுக்களையும் பார்த்த அளவில் இரண்டும் சமநிலையில் காணப்படுவது போல தென்படவில்லை. 

    இலங்கை அணி உள்ள குழு மிகவும் பலமானது. இங்கே போட்டியிட்டு அரையிறுதிக்கு செல்வது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் என்ன ஒரு காலத்தில் தேசிய அணிக்காக விளையாடப்போகும் எதிர்கால நட்சத்திரங்களுக்கு நல்ல பயிற்சி, அனுபவம் இங்கு கிடைக்கும்.   

    • Like 1
  9. 11 hours ago, பையன்26 said:

    ஒவ்வொரு குருப்பிலும் முத‌ல் மூன்று இட‌ங்க‌ள் பிடிக்கும் அணிக‌ள் 
    உள்ள‌ க‌ட‌சி இட‌ம் பிடிக்கும் அணிக‌ள் வெளிய‌..........அதாவ‌து 4வ‌து இட‌ம் பிடித்த‌ அணிக‌ள் வெளிய‌ 

    கிட்ட‌ த‌ட்ட‌ ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து விட்ட‌ன‌  தென் ஆபிரிக்கா அணி அனைத்து விளையாட்டிலும் மிக‌ சிற‌ப்பாக‌ விளையாடிச்சின‌ம்.........இவை 2014ம் ஆண்டு 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பையை முத‌ல் தூக்கின‌வை இந்த‌ முறையும் தூக்க‌ கூடும் சொந்த‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் கூடுத‌ல் ப‌ல‌ம்............

     

    நீங்கள் சொல்வதின்படி பார்த்தால் 12 அணிகள் அல்லவா வரப்போகின்றது? அடுத்த சுற்று நொக் அவுட் சுற்று தானே? எட்டு அணிகள் தானே?

  10. 1 hour ago, பையன்26 said:

    ஓம் அண்ணா

    அவ‌ர்க‌ளின் குருப்பில் அவ‌ர்க‌ள் தான் முத‌ல் இட‌ம்

    அப்கானிஸ்தான் விளையாடின‌ அனைத்து போட்டியிலும் தோல்வி.........உல‌க‌ கோப்பையில் இருந்து அப்கானிஸ்தான் வெளிய‌🙈............

    இல்லை செல்லவில்லை போல. அவர்கள் குழுவில் தென் ஆபிரிக்காவும், இங்கிலாந்தும் முன்னணியில் உள்ளன. சாரசரி ஓட்ட விகிதம் அடிப்படையில் இன்று தென் ஆபிரிக்கா முன்னணிக்கு வந்துள்ளது. 

  11. இரவு நேரம் மணிக்கு கடுகதி பாதையில் 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்தப்பட்டதாம். 

    அமைச்சர் அனுமதி இல்லாமல் சாரதி இப்படி வேகமாக ஓட வாய்ப்பு இல்லை.  முன்பும் இப்படி வேகமாக சென்றுள்ளார்கள் என கருதவேண்டி உள்ளது.

    கண்மண் தெரியாமல் வாகனம் ஓடினால் சாவு வராமல் வேறு என்ன வரும்.  

    தவிர, இலங்கை கடுகதி பாதைகள் இவ்வளவு வேகமாக ஓடல்கூடிய வகையில் இல்லை.  இதே கடுகதி பாதையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓடுபவர்கள் உள்ளார்கள். 

    பதவி, அதிகாரம் உள்ளது என்பதற்காக எப்படியும் வாகனத்தை செலுத்தலாம் என நினைப்பவர்கள் உயிரில் ஆசை என்றால் இனியாவது இந்த விபத்தை பார்த்து திருந்தட்டும். 

  12. இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ.

    இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும்.

    இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ. 

     

    • Like 1
  13. தனது மனைவியின் கொலையை திட்டமிட்ட கணவன் மனைவி கொலை செய்யப்பட்டு ஒரு கிழமையில் தான் குற்றவாளி என காவல்துறை அறிந்துவிட்டதால் தற்கொலை செய்துவிட்டாராம். 

    அவர் மனைவியை கொலை செய்ய வேலைக்கு அமர்த்திய ஏஜண்ட் ஆயுள் தண்டனை பெற்று நோய் வந்து இறந்துவிட்டார். ஏஜெண்ட் இடம் தலா ஆயிரம்டொலர் கூலி பெற்று பெண்ணை கொலை  செய்தவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்றவர் இவர். 

    மரண தண்டனை கூடாது என கூறும் நாங்கள் எமது உறவுகள் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையாளிகள் மரண தண்டனை பெறுவதை ஆதரிப்போமா அல்லது ஆதரிக்க மாட்டோமா?

  14. On 23/1/2024 at 20:12, பையன்26 said:

    இந்தியா

    பாக்கிஸ்தான்

    இங்லாந்

    தென் ஆபிரிக்கா

     

    இந்த‌ அணிக‌ள் வ‌ர‌க் கூடும்........நியுசிலாந் அணியும் ந‌ல்லா விளையாடின‌ம்.............இதில‌ திற‌மையை காட்டினால் தான் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ளை போட்டி போட்டு கொண்டு வேண்டுவின‌ம்

     

    இல‌ங்கை அணியில் ஒரு த‌மிழ‌ன் இட‌ம் பிடித்து இருக்கிறார்............என‌து பார்வையில் அவ‌ருக்கு கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு...............இந்த‌ உல‌க‌ கோப்பை இல‌ங்கையில் இந்த ஆண்டு ந‌டை பெற‌ இருந்த‌து அர‌சிய‌ல் கிரிக்கேட்டுக்குள்ளும் வ‌ர‌............உல‌க‌ கோப்பையை தென் ஆபிரிக்காவில் ந‌ட‌த்துகின‌ம் அண்ணா.................

     

    இலங்கை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ் உடனான போட்டியில் உண்மையான பலம் தெரியவரும். 

    • Like 2
  15. இந்த விபத்து செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அது ஒரு கோரக்காட்சி. 

    பேருந்து ஓட்டுனர் கண் மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டினாரோ?

    எட்டு மாடுகள் ஒரே நேரத்தில் பேருந்து முன்னால் வர வாய்ப்பில்லை. மாடுகள் சாரதியின் கண்களில் முன்கூட்டியே தென்படவில்லையோ. 

    தெருவில் மிருகங்கள் காணப்பட்டால் வேகத்தை குறைத்து அவதானமாக வாகனத்தை ஓட்டவேண்டும் என பேருந்து சாரதிகளுக்கு தெரியாதோ அல்லது சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லையோ. 

    வாகன சாரதிகள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மீண்டும் பயிற்சி எடுக்கவும், வீதி பரீட்சை சித்தி அடையவும் வேண்டும் எனும் நடைமுறை கொண்டு வரப்படவேண்டும் அப்படி ஏதும் இல்லை என்றால். 

    தவிர ஒரு வருடத்துக்கு ஒரு தடவையாவது வாகனம் ஓட்டுதல் சம்மந்தமான கல்வியூட்டல் வழங்கப்பட வேண்டும்.

    • Like 1
  16. சதுரங்க போட்டிகள் பாடசாலைகளில் வைக்கப்படுகின்றன.  நம்மவர்களில் பலரும் நீண்டகாலமாகவே விளையாடுகின்றார்கள். உலக அளவில் யாராவது முன்னணிக்கு வந்து உள்ளார்களா?

    4 hours ago, தமிழன்பன் said:

    கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்று வரும் இந்த 8 வயது இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன் தனது 4 வயதிலிருந்து சதுரங்கத்தை விரும்பி கற்றுக் கொள்ள ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து விதமான சதுரங்கப் போட்டிகளிலும் இவரது வயதுப் பிரிவில் 90 வீதமான சாம்பியன் பட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாழ்த்துக்கள் வேணுகானன் நயனகேஷன்!

  17. இது மிக நல்லதொரு வரவேற்கத்தக்க திட்டமும் ஆரம்பமும். பேருந்து சங்கத்தின் சொட்டை காரணமும், எதிர்ப்பும் கண்டிக்கத்தக்கது. 

    • Like 1
  18. On 20/1/2024 at 17:22, ஏராளன் said:

    சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர்.

     

     

    கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய். இதை காசாக வழங்கலாமா? வங்கியில் இவ்வளவு பெரிய தொகையை காசாக கொடுப்பார்களா?

  19. சீ என் என் இல் கடந்த சில நாட்களாக இதுதான் தலைப்பு செய்தி.

    சீ என் என் இலேயே தலைப்பு செய்தியாக பிரசுரிக்கின்றார்கள் என்றால் இஸ்ரேல் எவ்வளவு மோசமான முறையில் செயற்படுகின்றது என்பதை கற்பனை செய்யலாம்.  

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்ற பொன்மொழி இஸ்ரேல் விடயத்தில் எப்போது காண்பிக்கப்படும் என அவதானிப்போம். 

  20. 6 hours ago, Eppothum Thamizhan said:

    Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!]

    If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go.

    Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.

     

    உலக கோப்பை நடைபெற்றபோதே தமது வசதிக்கு ஏற்றபடி தமக்கு அனுகூலமாக அமையும்படி பல ஆட்டங்களில் புகுந்து விளையாடினார்கள் என கருத்து கூறப்பட்டது. 

    என்ன செய்வது இவர்கள் டிசைன் அப்படி. 

    • Haha 1
  21. ஐ பி எல் எல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ எதிர்காலத்தில். 

    முன்னாள் யாழ் கிரிக்கெட் வீரர்களின் புதல்வர்கள் தந்தையின் சுவடை பின்பற்றியுள்ளார்கள். பெண் பிள்ளைகள் அப்பா போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.