Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1347
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. 6 hours ago, Eppothum Thamizhan said:

    Umpire , match referee எண்டு எல்லாரும் சேர்ந்து அளாப்பி வென்று விட்டார்கள். முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான ரோஹித்தை இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆட விட்டிருக்க கூடாது. இந்தியாவில் எதுவும் நடக்கும்!!]

    If the same batter didn't bat or didn't get out or had retired hurt in the first 'Super Over', the said batter is allowed to be listed among the three batters for the second 'Super Over' as well. But if the batter was dismissed in the first 'Super Over', the rules don't allow his inclusion for a second go.

    Rohit walks off retired out. Gamesmanship? Well within the rules. Rinku comes out without a helmet, seemingly to sprint his lungs out to try and complete two. Rohit has a laugh as he goes back into the dug out. Call it excellent game awareness.

     

    உலக கோப்பை நடைபெற்றபோதே தமது வசதிக்கு ஏற்றபடி தமக்கு அனுகூலமாக அமையும்படி பல ஆட்டங்களில் புகுந்து விளையாடினார்கள் என கருத்து கூறப்பட்டது. 

    என்ன செய்வது இவர்கள் டிசைன் அப்படி. 

    • Haha 1
  2. ஐ பி எல் எல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்குமோ எதிர்காலத்தில். 

    முன்னாள் யாழ் கிரிக்கெட் வீரர்களின் புதல்வர்கள் தந்தையின் சுவடை பின்பற்றியுள்ளார்கள். பெண் பிள்ளைகள் அப்பா போல் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டி ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.  

  3. இந்தியாவில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்த வசதி உபயோகமானது. 

    ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்தியா அகதிமுகாமை விட்டு இந்த கடவுச்சீட்டில் இலங்கைக்கு ஏதும் அலுவலாக சென்றால் திரும்பி வர முடியாதாம். இது உண்மையா பொய்யா என தெரியவில்லை.  அகதி முகாமில் உள்ள ஒருவர் கூறினார்.

    இந்திய அகதி முகாமில் மிக நீண்ட காலமாக உள்ளவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் சுதந்திரம் பல வழிகளில் மறைமுகமாக மட்டுப்படுத்தப்பட்டது. 

    உண்மையை சொல்லப்போனால் இவர்களுக்கு மீண்டும் இலங்கை வந்து வாழ்வது மிக கடினமானது. இதற்கான அடிப்படை தேவைகள், பொருளாதார கட்டமைப்புக்கள் எதற்கும் உத்தரவாதம் இல்லை. 

    இங்கு இன்னோர் சவால் என்ன என்றால் இந்தியாவில் பிறந்த மற்றும் குழந்தை பருவத்தில் பெற்றோரினால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் திருமண வயதை அடைந்து விட்டார்கள். இப்படியான பிள்ளைகளை கரை சேர்ப்பது பெற்றோருக்கு அவர்கள் சக்தியை மீறிய கடினமான பொறுப்பு.

    இங்கே மத நிறுவனங்கள் சிறிதளவு ஆதரவு கொடுக்கின்றன. 

    • Thanks 2
  4. உண்மைச் சம்பவம் வாசிக்க திகிலாக உள்ளது. மொகமது இப்படி செய்ய தூண்டியது அல்லது இதை செய்ய கட்டளையிட்டது மாபியா குழுவோ எனவும் சந்தேகம் வருகின்றது. 

    வாகன இலக்க தகட்டை மறைக்கும்/மாற்றும் யோசனையே மொகமதுவுக்கு தோன்றாதது அவன் ஆத்திரத்தில் பின்விளைவை நினைக்காது/ எதேச்சையாக முடிவு எடுத்தானோ என எண்ண தோன்றுகின்றது.

    எனக்கும் மொகமது எனும் பெயரில் ஒரு முதலாளி பழக்கம். அவன் சாவகசமாக கதைக்கும்போது தங்களுக்கு வெட்டு, கொத்து எல்லாம் சாதாரண கைவந்த கலை என்று கூறுவான். 

    • Like 1
  5. 19 hours ago, ஏராளன் said:

    இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த  காற்று இலங்கையின் சில  பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

     

    இந்தியா பல விடயங்களில் இலங்கைக்கு ஒரு சாபக்கேடு.

    • Like 1
  6. பெரும்பாலும் உருளைக்கிழங்கு, பருப்பு இவை இரண்டையும் சமைத்து காலத்தை ஓட்டுகின்றார்கள். 

    பெரியவர்களுக்கு வண்டி வைப்பது தொடக்கம் எல்லோருக்கும் மலச்சிக்கல் ஏற்படுவது வரை இது ஒரு சமுதாயத்தையே நீண்ட காலத்தில் ஆரோக்கியம் குன்றியதாக மாற்றிவிடும். 

  7. 17 hours ago, விசுகு said:

    இவற்றில் பலதும் வெளிநாட்டு இறக்குமதி போல் உள்ளது. ஏன் மக்கள் உள்ளூர் மரக்கறிகளை தேடுவதில்லையா?!

     

    எனது வினாவும் மக்களினால் தமது காய்கறி தேவையின் குறிப்பிடத்தக்களவு பகுதியை வீட்டுதோட்டம் மூலம் பூர்த்தி செய்யமுடியாதா? 

    • Like 1
  8. On 12/1/2024 at 06:04, ஏராளன் said:

    க.பொ.த உயர்தரப் பரீட்சை: புதிய அறிவிப்பு

    தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

    புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பாடத்திற்கான புதிய
    வினாத்தாள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

    குறித்த பரீட்சை நடைபெறும் திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பின்னர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    https://thinakkural.lk/article/287996

     

    ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் எத்தனை பேருக்கு சிரமம். சோதனை எடுக்கும் பிள்ளைகள் தான் பாவம். 

  9. தகவல் தேடலில் பார்த்தால் இந்திய விமானப்படை இந்த ரக விமானங்கள் பலவற்றை விபத்தில் இழந்துள்ளது.  இலங்கை ஒன்றை இரத்மலானை விபத்திலும், மற்றொன்றை புலிகள் அமைப்பு சுட்டு வீழ்த்தியதாலும் இழந்துள்ளது. 

    இலங்கை, இந்தியா தவிர பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் சில இந்த ரக விமானத்தை பயன்படுத்துகின்றன. 

    கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டறிவார்களோ. 

  10. 1 hour ago, Kapithan said:

    உலகத் தமிழர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தால் அது நன்மையே. 

     

    அது எல்லாம் நடக்குமோ தெரியாது.  ஆனால் எல்லா தமிழ் பிரதிநிதிகளும் சேர்ந்து றோ விரித்துள்ள குடையின் கீழ் செயற்படலாம்.

  11. On 7/1/2024 at 18:18, பையன்26 said:

    இந்தியா ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் harmanpreet kaur ஒரு நாள் தோல்விக்கும் இவா தான் கார‌ண‌ம் இப்ப‌ ந‌ட‌க்கும் 20ஓவ‌ர் விளையாட்டு தோல்விக்கும் இவா தான் கார‌ண‌ம்.............ம‌ற்ற‌ ம‌க‌ளிர்க‌ள் ந‌ல்லா விளையாடும் போது தொட‌ர்ந்து ர‌ன்ஸ் அடிக்காம‌ சீக்கிர‌ம் அவுட் ஆகிறா...............தேர்வுக்குழு இவாக்கு சிறு ஓய்வு கொடுக்க‌னும்..................

     

    நான் இந்த அம்மாவின் ரசிகன். மிகவும் மோசமாக விளையாடுகின்றார்.  இப்போது 34 வயது.  வயது ஒரு காரணமோ தெரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இந்திய தேசிய அணியில் இவரால் நின்று பிடிக்கமுடியும், அத்துடன் எவ்வளவு காலம் சர்வதேச போட்டிகள் விளையாடமுடியும் என தெரியவில்லை.  விரைவில் அணியின் கப்டன் பதவியை/அங்கத்துவத்தை இழப்பாரோ பார்ப்போம். ஐ பில் எல் விளையாடலாம். இவருக்கு என்றும் அதில் மவுசு காணப்படும்.  

    விளையாட்டு துறையில் பிரகாசிக்கும் ஆண்கள் பொதுவாழ்வை வாழ்வதுபோல் பெண்கள் வாழ முடியாது. அது சவால்கள் நிறைந்தது. திருமணம், குடும்பம், குழந்தை என வந்தால் அல்லது அந்த அந்த வயதுக்குரிய சமூக அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும்போது தமது திறமையை வெளிப்படுத்த முடியாது போகலாம்.  

    இவருக்கு என்ன பிரச்சனையோ!

    • Like 1
  12. 12 minutes ago, குமாரசாமி said:

    இளைய சமுதாயத்தினருக்கு உற்சாகம் தரும் செயல்.
    இவர் ஓரின சேர்க்கையாளர் என நினைக்கின்றேன்.
    வாழ்த்துகள்.

    அடேயப்பா மனுசன் ஒருத்தனுக்கு உள்ள ஆயிரம் விசயங்களில் இதைத்தான் குறிப்பிட்டு சொல்வீர்களோ?

    மிக இளம் வயதில் பிரதமர் ஆகியுள்ளார்.  இவரது திறமைகளை, ஆற்றல்களை கூறலாமே. 

  13. 32 minutes ago, Cruso said:

    அது நிலைமையை பொறுத்தது. காலத்துக்கு காலம் அது மாற்றம் பெரும்.

    ஹூத்தி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால்தான் இலங்கை அதட்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் இலங்கையில் மேலும் விலையேற்றம் உருவாக்கி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதட்காகவும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்துவதை தவறென்று கூற முடியாதுதானே. 

     

    சாமி, மக்கள் நலனில் அரசுக்கு அக்கறை என்றால் நாட்டின் சொத்துக்களை தின்று ஏப்பம் விட்ட திருட்டு கூட்டத்தை அடக்கலாம். இதைவிடுத்து இவ்வளவு கடல் மைல் தூரங்களுக்கு படையை அனுப்ப தேவை இல்லை.

  14. 1 hour ago, putthan said:

    என்ன சஜீத் மாத்தையா இது கூட தெரியாதா?
    அமேரிக்கா ஏனைய நாடுகளை தாக்கும் பொழுது சில நாடுகளை தன் பக்கம் வைத்து கொள்ளுவது வழமை ...(கூட்டு படைகள்)...ஏதாவது சட்ட சிக்கல் வந்தால் ...நாங்கள் தனியாக தாக்கவில்லை கூட்டாக தாக்கினோம் என சொல்வார்கள்.
    சிறிலங்காவுக்கு உலக வங்கியின் பணம் தொடர வேண்டுமாயின் அமெரிக்கா சொல்படி நடக்க வேண்டும்...
    இல்லை என்றால் இந்தியா மாதிரி தனியாக சென்று தங்களது கப்பலை பாதுகாத்து விட்டு அந்த பிராந்தியத்தில் நிற்கவேணும்...இந்த விடயத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என தெரியவில்லை...(மாலைதீவில் புளோட் குழுவினரை அனுப்பி சதி செய்தது போல் சோமாலி கடற்கொள்ளையரை செற் பண்ணிச்சினமோ தெரியவில்லை)

     

    கடற்படையினருக்கு தேவையான எரிபொருள், உணவு, ஆயுத வழங்கல், இதர தேவைகள் எல்லாம் யாரோ கொடுக்கப்போகின்றார்கள். இங்கே நங்கூரமிட்டுள்ள கப்பலையும், வெட்டியாக உள்ள கடற்படையினரையும் அங்கு அனுப்புகின்றார்கள் போல. அரசுக்கு பொருட்செலவு ஏற்படுமா என்று தெரியவில்லை.  ஆனால், தேவையில்லாத எதிரிகளை உருவாக்குகின்றார்கள். 

    ஐநா படைகளில் பங்குபற்றியது போல இது எடுக்கப்படமுடியாது என நினைக்கின்றேன். 

    • Like 1
  15. 7 hours ago, Kapithan said:

    கப்பலில் வந்த பலரின்  நிலை இப்படித்தான். 

    கப்பலில் பயணிகளுக்கு பரஸ்பரம் உதவியோரின் நிலையும் இதுதான். தேனீருக்கு சுடுதண்ணீர்  வைத்தோர்,  பரஸ்பரம் உதவியோர் பலர் ஆட்கடத்தலுக்கு  உடந்தை  என்று குற்றச்சாட்டின் கீழ் பிரச்சனைகளை எதிர் கொண்டனர். 

    உண்மை. 

    ஆனாலும் நான்  விபு வில் இருந்தேன், அவர்களது போராட்ட வழிமுறையை ஆதரித்தேன் என்று  பகிரங்கமாக அல்லது மறைமுகமாகக்  கூறினால் அவர்களது  அகதிக் கோரிக்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். 

     

    இது என்ன ஐயா கனேடிய அரசாங்கத்தின் அணுகுமுறை ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளதே.  அகதி கோரிக்கை கிடைத்தபின் விடுதலை புலிகள் ஆதரவாளராக கனடாவில் வாழலாம். ஆனால் அகதி கோரிக்கைக்கு விண்ணப்பிக்கும்போது ஆதரவாளர் என்று சொன்னால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்?

    20 hours ago, பெருமாள் said:

    அப்ப காலிஸ்தான் போராளிகளை எப்படி அரவனைகிரார்கள் ?இந்த கேள்வியின் விடையில் நாம் எங்கே கோட்டை விடுகிறேம் என்பது தெரியும் .

     

    இதற்கான விடை தெரிந்தும் ஒருத்தனை முட்டாள் ஆக்கவேணும் என்றே கொஞ்சம் வெளிக்கிடும் அதுகளுக்கு விடை சொல்லி நேரம்தான் வீணாகும் .

     

    சீக்கியர்கள் விவசாயம்/தொழில் செய்வதற்காக மிக நீண்ட காலம் முன்பே கனடாவுக்கு கொண்டுவரப்பட்டார்களாம். சீக்கியர்களுக்கு நிகராக உரிமை கேட்பதற்கு நீங்கள் இன்னும் ஒரு நூறு வருடங்கள் கனடாவின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் தலை.  

  16. நான் இந்த சம்பவம் பற்றிய காணொளி பார்த்தேன். இங்கு தமிழ்வின்னில் குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற முக்கியவிடயம் குறிப்பிடப்படவில்லை.  

    அவர் திடீர் என நீதிபதி மீது பாயும் அளவுக்கு நீதிபதி என்ன சொன்னார் என அறியுங்கள் காரணம் புரியும். 

    இந்த நீதிபதி ஒரு பக்குவப்பட்ட பொறுப்பான நீதிபதி போல் தோன்றவில்லை.  அவரது நக்கல் கதை குற்றவாளிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.  

    பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நீதிபதிகளின் நிகழ்ச்சிகள் பார்க்கின்றோம். அவை நாடகம் போன்றவை.  இங்கே நீதிபதி தனது வார்த்தைகளில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

    எல்லாரும் ஒரு பொறுப்புக்கு வந்தபின்னர் அதிகாரம் கிடைத்தபின் சக மனிதனை எப்படியும் நடத்தலாம் என நினைக்கின்றனர்.  ஆணவம் தலைக்கேறுகின்றது.  

    தீர்ப்பு கூறும்போது இனிமேல் இந்த நீதிபதி நையாண்டி நக்கல் கதை கதைக்கும்போது (கதைத்தால்) இந்த பாயும் மனிதன் (பாய்ந்து தாக்கியவர்) நினைவில் வருவார்.  

  17. 4 hours ago, Kapithan said:

    சிறு விளக்கம்; 

    விடுதலைப் புலிகள் என்றில்லை, வன்முறையை ஊக்குவிக்கும் அல்லது வன்முறை மூலம் அரசியல்  இலக்கை அடைய முயற்சிக்கும் அமைப்பிற்கு ஆதரவளித்த அல்லது உறுப்பினராக இருந்த எவருடைய அகதிக் கோரிக்கையையும்  கனேடிய  குடிவரவு, குடியகல்வு, அகதிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் உண்டு. 

    அதன் அர்த்தம் கனடாவில் முன்னாள் விபு க்கள்  அகதிக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என்பது அல்ல. அகதிக் கோரிக்கையை முன்வைக்கலாம் ஆனால் அதில் வெல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

    ஆனால் இலங்கையில் உயிராபத்துக்கள்  இருப்பதனால்  முன்னாள் விபு க்களை  இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது  என Canadian courts தீர்ப்பளித்த பல  உதாரணங்கள் உள்ளன. 

     

    காணொளி பார்க்கவில்லை. இது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஏதாவது புதிய நடைமுறையா அல்லது ஏற்கனவே உள்ள விடயமா? பிரான்சில் விடுதலை புலிகள் முன்னாள் போராளிகளுக்கு அகதி உரிமை இலகுவாக எடுக்கலாம் என்று கேள்விப்பட்டேன் (ஊரில் உலவும் கதை) உண்மையா?

    • Thanks 1
  18. பிரபல கிரிக்கெட் வீரர் சாகிப் அல் கசன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிள்ளார். 

    இவர் வாக்களிப்புக்கு முன்னர் தனது ரசிகர் ஒருவருக்கு அடித்துபோட்டாராம் என்று ஒரு செய்தி/காணொளி பரபரப்பாக ஓடி திரிகின்றது. 

    கிரிக்கெட் துறையில் பிரகாசித்தது போல் அரசியலிலும் உலக அளவில் பிரகாசிப்பாரோ சாகிப்?

  19. 5 hours ago, nedukkalapoovan said:

    சில வேளைகளில் வேலை செய்யாது. அந்த வகையில்.. 

    Other Media (you can see it at the right bottom corner of text box where you type your message to post)---> Insert image from URL ---> copy and paste image link address---> click insert into post

    இப்படி செய்தால் வேலை செய்யும். 

    நான் நினைக்கிறேன் சில ஊடகங்களில் இருந்து நேரடியாக வெட்டி ஒட்ட அனுமதிக்கினம் இல்லை.படம் இணைப்பு சோதனை

    spacer.png

    எனக்கும் வேலை செய்கின்றது

    • Like 1
  20. 4 hours ago, ஏராளன் said:

    நான் கணனி ஊடாக இணைப்பதால் பிரச்சனை இல்லைப்போல!

     

    2 hours ago, மோகன் said:

    ஏராளன் குறிப்பிட்டதைப் போன்று இணைப்பினைக் கொப்பி செய்து இங்கு ஒட்டினால் போதுமானது. ஏன் உங்களுக்குப் பிழைக்கின்றது எனத் தெரியவில்லை.

    படங்களின் முகவரியினையே இணைக்க வேண்டும்.

    சரியாக மின்னஞ்சல் முகவரி கடவுச் சொல் கொண்டு கணினி அல்லது கைத்தொலைபேசியில் இணைந்து கொள்வதில் பிரச்சனையிருக்க சந்தர்பம் இல்லை. நீங்கள் உங்கள் விபரங்களைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

    நீங்கள் ஒரு பதிவினை இணைத்து 12 மணித்தியாலங்கள் வரை மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். அதன் பின் மாற்ற வேண்டிய தேவையிருப்பின் மட்டுறுத்துனர் ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

     

    இப்போது காணொளி தோன்றுகின்றது. நன்றி!

    யூரியூப்பில் இணைப்பு முகவரி எடுக்கும்போது முன்பு நகல் செய்தேன். இப்போது வட்சப் பகிர்வு இணைப்பை சொடுக்கி அதை இங்கு இணைக்கும் போது காணொளி தோன்றுகின்றது. முதலாவது முறையில் முகவரி சுருக்கப்பட்டு உள்ளதோ தெரியாது. 

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.