100 பச்சைகளைத் தாண்டிய சோழியானுக்கும், தாண்ட வைச்ச கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்!!
அதற்காக 2003ல் 'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?" எனும் சினிமாப் பாடல் மெட்டில் யாழ் களத்துக்காக எழுதிய வாழ்த்துப்பாடல் உங்களுக்காக..!!
நித்தம் நித்தம் வந்தவர்கள் எத்தனைபேர் - யாழ்
களத்தினிலே எழுதியவர் எத்தனைபேர்
(நித்தம்..)
எழுதிப்போட்டு அழித்தவர்கள் எத்தனைபேர் - அதில்
தலை கவிழ்ந்துநின்றவர்கள் எத்தனைபேர்
(நித்தம்..)
கரு வந்த இடத்தில் பல கதை முளைத்தது - அது
முடியுமுன்னே வேறும்பல செயல் விளைந்தது
கருத்துக்கள பூட்டுவந்து கடமை என்றது - கூட
தணிக்கை என்றும் சிவப்பில் வந்து வெருட்டி நின்றது
(நித்தம்..)
கவிதை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது - சிலர்
கருத்தும்கூட ஆண்கள் என்று அடிக்க வந்தது
பெண்களெல்லாம் அடிமையென கருத்தும் வந்தது - சில
ஆண்க ளென்ன பெண்க ளென்ன சமமே என்றது
(நித்தம்..)
தனிமகனாய் சோர்விழந்து உழைத்தது ஒன்று - அதன்
துணைக்கு வந்து எழுதிக் காட்டி நின்றது ஒன்று
இருவருக்கும் வாழ்த்து என்று சொல்வதில் இன்று - நாம்
யாழ் களத்தை வரவேற்போம் வாழ்க வாழ்கவே..!!
(நித்தம்..)
http://www.yarl.com/forum/index.php?showtopic=42