எல்லோருக்கும் வணக்கம்.
இப்போதுதான் இங்கே நுழைந்தேன். சிலேடைக் கவிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. 'தனிப்பாடல் திரட்டு" என்ற புத்தகத்தில் இங்கு இருப்பவற்றில் பலவற்றைக் காணலாம்.
எட்டேகால் லட்சணமே... என்று ஆரம்பிக்கும் பாடல் ஒளவையார் விடயத்தில் மனத்தில் வேறுபாடு கொண்ட கம்பர் அவளை, 'அடீ' என்று அலட்சியமாக முன்னிலைப் படுத்தி விளித்தபோது பாடியது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கம்பர் காலத்தில் ஒளவையார் வாழ்ந்தாரோ இல்லையோ எமக்கு அருமையான சிலேடைக் கவி கிடைத்தது மட்டும் உண்மை.
என் மனதில் நிழலாடும் பாடல்களில் ஒன்று இது. அது இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணுக