Jump to content

akootha

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    27353
  • Joined

  • Last visited

  • Days Won

    74

Everything posted by akootha

  1. 29.04- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  2. 24.04- கிடைக்கப்பெற்ற 17 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  3. 20.04- கிடைக்கப்பெற்ற 53 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  4. 19.04- கிடைக்கப்பெற்ற 36 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  5. 18.04- கிடைக்கப்பெற்ற 43 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  6. 17.04- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  7. 15.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  8. 13.04- கிடைக்கப்பெற்ற 13 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  9. 10.04- கிடைக்கப்பெற்ற 99 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  10. 08.04- கிடைக்கப்பெற்ற 24 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள் !!!
  11. 07.04- கிடைக்கப்பெற்ற 22 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!
  12. மாணவர் போராட்டம் இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் ஆசிரியர் மாலன், ஏழு மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலின் டிரான்ஸ்கிரிப்ட் வெளியாகியிருந்தது. கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் நிகழ்ந்த பல மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. போராட்டம் எதிர்பார்த்தபடியே, தனித் தமிழ் ஈழம், ராஜபட்சேவைத் தூக்கிலிடு, (இலங்கையில்) பொது வாக்கெடுப்பு, தனித் தமிழ்நாடு, காங்கிரஸை ஒழிப்போம், துரோகி கருணாநிதி, அமெரிக்காவின் இரட்டை வேடம் என்று போகத் தொடங்கியிருந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் புரிதல் பற்றி அவர்களின் ஆரம்பக்கட்ட ஒன்பது கோரிக்கைகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பெரும் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இறுதிவரை இந்த வருத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதவகையிலேயே மாணவர் பிரதிநிதிகளும் நடந்துகொண்டதுபோலவே தோன்றியது. புதிய தலைமுறை கலந்துரையாடலில் ஒரு மாணவர் தினேஷ் (சென்னை சட்டக்கல்லூரி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டக்குழு) சொல்லியுள்ள ஒரு கருத்து மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். தினேஷ்: தலைநகர் தில்லியில், குறிப்பாக, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கங்கள் எப்போதுமே மிக வலுவாக இருக்கின்றன. காரணம், அங்கு அந்த மாணவர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொடர்ச்சியாக விவாதிக்கிறார்கள். அரசியல், சமூகப் பிரச்னைகள் மீதான ஆர்வமும் அரசியல் உணர்வும் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாணவர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படிப்பட்ட சூழல், தமிழகக் கல்வி நிலையங்களில் கிடையாது. ஜே.என்.யூவில் எந்த அளவுக்கு மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளையும் பிரச்னைகளையும் அலசுகின்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாணவர் தினேஷ் சொல்லியுள்ளபடி, தமிழகக் கல்லூரிகளில் இந்த அலசல் ஆரம்பித்துவிட்டாலே போதும். அவர்கள் எந்தக் கோணத்திலிருந்து வேண்டுமானாலும் இந்தப் பிரச்னைகளை அலசட்டும் - திராவிட, தலித், பிராமண, வலது, இடது என்று எதுவாகவேண்டுமானாலும் இருக்கட்டும். பேச ஆரம்பித்துவிட்டார்கள், வலுவாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றாலே அவர்களோடு பிறரால் உரையாட முடியும். அதிலிருந்து மாணவர்கள் ஏதேனும் ஓரிடத்தை அடைந்து அந்த அரசியலை முன்னெடுக்கட்டும். பாலச்சந்திரனின் படம் ஏற்படுத்திய அதிர்வுகள் சில நாளைக்குள் மறைந்துபோகலாம். ஆனால் கார்டன் வெய்ஸ் அல்லது ஃபிரான்செஸ் ஹாரிசன் எழுதிய புத்தகங்களைப் படித்து அவைபற்றி ஆழ்ந்து சிந்தித்து, மனத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் வெகு நாள்களுக்கு இருக்கும். பொறியியல் கல்லூரிகளைவிட கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளில்தான் இதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பெரும் நன்மையாக, மாணவர்கள் தினமும் நாட்டு அரசியலை விவாதிக்கத் தொடங்கிவிட்டாலே, ஒருவிதத்தில் நமக்கான விடிவு பிறந்துவிடும். http://www.badriseshadri.in/2013/04/blog-post.html
  13. 05.04- கிடைக்கப்பெற்ற 54 மாவீரர்களின் விபரங்கள். மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள் !!!
  14. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்காகப் போராடும் என் இரத்தச் சொந்தங்களான மாணவச் செல்வங்களுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமா, மட்டை விளையாட்டு, பேருந்து நாள் கொண்டாட்டம், முகநூல் இவற்றில் தொலைந்து போனவர்கள் தமிழக மாணவர்கள் என்கிற தப்பிதமான கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டது உங்கள் உணர்வுப் போராட்டம். அந்த எழுச்சி எப்படி சாத்தியப்பட்டது என்பது தெரியுமா..? நான் சொல்லவா? ஈழம் குறித்த சரியான புரிதல் உலகில் யாருக்கும் இல்லை என்பேன் நான். ஈழப் பிரச்னையில் உலகத்துக்கான பார்வைகள் மாற வேண்டும். உதாரணத்துக்கு, அங்கு நடந்த விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது மாற வேண்டும். இன்னும் பல விடயங்களில் உலகின் பார்வை ஆரோக்கியமானதாக எப்படி மாற வேண்டும் என்பதைச் சொல்கிறேன். இங்கு தமிழ்நாடு என்று வாய் நிறையச் சொல்கிறீர்கள். ஆனால், அங்கு மட்டும் 'தமிழ் ஈழம்’ என்று மனமுவந்து சொல்ல என்ன தயக்கம்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன? சொல்கிறேன், கேளுங்கள். பலர் காஷ்மீர் பிரச்னையுடன் ஈழப் பிரச்னையை ஒப்பிடுகிறார்கள். எவ்வளவு பெரிய அபத்தம் தெரியுமா அது? காஷ்மீரில் ஒருவர் இந்தியப் பிரதமர் ஆக முடியும். ஆனால், தமிழர் ஒருவர் இலங்கை அதிபர் ஆக முடியுமா? காஷ்மீரிலும் பிரச்சினைகள் இருக்கின்றன... மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... நான் இல்லை என்று சொல்லவில்லை. காஷ்மீர் மக்களின் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தவில்லை. ஆனால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளுக்கும் இலங்கைத் தமிழர்கள் சந்திக்கும் கொடுமைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நண்பனின் நண்பன் நமக்கு நண்பனே. ஆனால், எதிரியின் நண்பன்? நட்பு நாடு என்று நீங்கள் அழைக்கும் இலங்கை உங்கள் எதிரிகளுடன் எப்படியெல்லாம் இறுக்கமாகக் கைகோத்துள்ளது தெரியுமா? ஆனால், என்றைக்குமே இந்தியாவை எதிரியாகப் பார்க்காத... உளமார்ந்த நண்பனாக மட்டுமே பார்த்துப் பழகிப்போன நாங்கள் என்றேனும் பாகிஸ்தான் போன்ற இந்திய விரோத சக்திகளோடு கைகோத்து இருக்கிறோமா? இன்னும் விவரமாகச் சொல்கிறேன். உண்மையை உணருங்கள்! ஒரு நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடக் கூடாது’ என்கிறார்கள். இறையாண்மையின் உண்மையான பொருள் என்னவென்று தெரியுமா? உயிரைத் தவிர, அனைத்தையும் இழந்து நிற்கும் பாவப்பட்ட எம் ஈழத்து மக்களுக்காக... உங்கள் சகோதர, சகோதரிகளுக்காக ஒருசில நிமிடங்களை ஒதுக்குவீர்கள்தானே... எம் சனங்களின் நிதர்சனம் புரிந்துகொள்ள விரும்புவீர்கள்தானே... 4.4.2013 முதல் 10.4.2013 வரை 044 - 66802911*எண்ணில் என்னை அழையுங்கள். உண்மை பேசுவோம். அன்புடன் காசி ஆனந்தன்
  15. வன்னி படைத்தலைவன் தீபன் மறைந்தானா இல்லை கண்முன் இருக்கிறான் களத்தில் இருக்கிறான் எங்கள் பிள்ளை தீபன் இருக்கிறான் புலிகள் வடிவிலே வீரன் அவன் பயணம் இன்னும் முடியவில்லை
  16. மார்ச் 30 ம் நாள், ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டியும் இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உலகசமூகத்தை வலியுறுத்தியும் வட சென்னை வாழ் திருநங்கைகள் நடத்திய உண்ணாநிலை போராட்டம் பற்றிய தகவல்களையும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் திருநங்கை ஐஸ்வர்யா.
  17. நீ மறையவில்லை விதுசா தலைவர் மதித்த தங்கை பெண்புலிகள் வளர்த்த அன்னை உன் இழப்பை நினைக்கும் நேரம் என் இமையில் வழியும் ஈரம் உன் சிறப்பை நினைக்கும் நேரம் என் விழியில் விளையும் வீரம்
  18. தமிழக மாணவர் போராட்டம் மற்றும் ஐநா மனித உரிமைச்ச்சபை தீர்மானம் குறித்து உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வழங்கிய நேர்காணல்.
  19. அழைத்தான் எங்கள் அண்ணன் களமாடினான் மணிவண்ணன் வீரம் படைத்தான் களத்திலே விழுந்தான் மலைபோல் நிலத்திலே மறப்போமா மறப்போமா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.