பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,
மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...
என்று மஹாகவி காளிதாசனுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். பிறப்பால் வரதன் ஒரு வைணவனானாலும் மோஹனாங்கி எனும் சைவ சமயத்தைச் சேர்ந்த நடனமாது ஒருத்தியை அவன் மனதாரக் காதலித்தான். அவளும் அவன்மேல் தீராத மோஹம் கொண்டிருந்தாள்.
ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சியொன்றில் மோஹானங