-
Posts
10942 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by ampanai
-
உலகெங்கும் தமிழை தனது குரல் வளத்தால் வளர்த்தவருக்கு எனது நன்றிகள். நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புக்கள் தமிழை வளர்க்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
சிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்!
ampanai replied to nochchi's topic in அரசியல் அலசல்
-
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். இந்தத் தேர்தலின் வெற்றிக்காக தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வரும் ஜோ பிடன், தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்தினார். இந் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை இதன்மூலம் கமலா ஹரிஸ் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/87891 தாய் வழி சொந்தங்களுடன் கமலா கமலா ஹாரிஸ் பெற்றோர்
-
சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகளில் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. ஏற்கனவே Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்
-
கோவிட்டின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பலருக்கும் சிக்கலைகளை உருவாக்க பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில்... மத்திய வாங்கிகள் பணத்தை அச்சடிக்க, அதனால் தங்கம், வெள்ளி மற்றும் பிட்ககொயின் பெறுமதிகள் கூடுகின்றன. ஆனால், பல நாடுகளின் பங்கு சந்தைகள், குறிப்பாக அமெரிக்காவின், தொடர்ந்தும் அதிகரிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. குறிப்பாக ஆப்பிள், அமேசான், மைக்ரோசொப்ட் மற்றும் அல்பபாட் எனப்படும் கூகிள் ஒரு த்ரிலயனையும் தாண்டி, அதிலும் ஆப்பிள் இரண்டு த்ரிலியன்களை நோக்கி வேக படை போடுகின்றது. ஆக, பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுவான் என கூறுவது போன்று வழிகளை தேடி முன்னேற முடியும் என்பதை மீண்டும் உலகம் காட்டி நிற்கின்றது.
-
கோவிட்19ன் தாக்கம் உலக நிறுவனங்களை முடக்கி விட்டுள்ளது. சரியும் வேலைவாய்ப்புக்கள்,குறையும் நிறுவன இலாபங்கள், தடுமாறும் வங்கிகள் என அடுக்கி செல்லலாம். ஆனால், நாம் எந்த துறைகள் இந்த காலத்தில் வளர்ந்து வருகின்றன எனவும் பார்க்கவேண்டும். குறிப்பாக இரண்டு துறைகள் : தொழில்நுட்பம் அடுத்து மருத்துவம். தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த பத்து வருட வளர்ச்சியை வரும் இரண்டு வருடங்களில் காணலாம் என்கிறார்கள். அதேபோன்று, மருத்துவ துறையும் அசாதாரண வளர்ச்சியை காணும் என்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்ய மற்றும் கற்க, இவை சம்பத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வைத்தியரை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன், "கிளவுட்" என்ற எங்கோ ஒரு இடத்தில் இருந்து சேவைகளை வழங்கும் தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளன. மருத்துவ துறைக்கு அதிகளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. மருந்துகளை கண்டுபிடித்து அவற்றுக்கான அங்கீகாரம் பெறுவது என்பது அதிக செலவீனம் கூடிய முதலீடாக இருந்தாலும், அதன் முக்கியத்தை கோவிட்டார் உணர்த்தியுள்ளார்.
-
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
தோலை உரிக்கும் கேள்விகள். சீனாவின் உற்பத்தி ஆளுமைக்குள் பணக்கார நாடுகள் மட்டுமல்ல, முன்னேறும் நாடுகளும் - அடிமைதான் -
-
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
அணி சேரா கொள்கை ? உண்மை அதுவல்ல. சீனாவே சிங்களத்தின் நண்பன் ஆனால், அந்த கசப்பான உண்மையை இந்திய கொள்கை வகுப்பாளர்களும், தமிழின விரோதிகளும் திட்டமிட்டு மறைக்கிறார்கள். விமலநாதன் விமலாதித்தன் யார் என்றே தெரியவில்லை. இந்த கட்டுரை கூட சிங்களத்தின் ஊடக பரப்புரையில் அங்கமோ என எண்ணத்தோன்றுகின்றது. -
-
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
வறுமை காரணமாக இராணுவத்தில் இணைந்தார் -
-
-
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் சிங்கள சிறிலங்காவும் சீனாவின் ஒரு முகவர் என்றும் சிங்கள சிறிலங்கா இந்தியாவிற்கு எதிரானது என்ற உண்மையை ஆங்கில மற்றும் முடிந்த ஹிந்திய ஊடகங்களிலும் பதியவேண்டும். Sri Lanka too a close ally of China The leaders of Sri Lanka too like Pakistani leaders China has a strong presence in Sri Lanka. Should India worry there too? In the south, in Sri Lanka and Maldives, China has built ports to convert as military installations -
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
வெளியில் ஒரு இராணுவ போராக சிக்கலாக இது இருந்தாலும், உண்மையில் பொருளாதார வல்லரசாக இந்தியா வளராமல் இருக்க சீனா செய்யும் நடவடிக்கைளில் ஒரு அங்கமே. இந்த முறுகலை இதுவரை மேற்குலகம் மற்றும் உலக பொருளாதாரம் பொருட்படுத்தவில்லை. காரணம், இவர்கள் பெரியளவில் சண்டை செய்யும் சாத்தியம் இல்லை. இந்தியாவை சுற்றி உள்ள 'நட்பு' நாடுகள் அனைத்தும் இந்தியாவின் காலை வாரும் நாடுகளாக இன்று உள்ளன. அதற்கான காரணத்தை இந்தியா தனக்குள் தேட வேண்டும். அதன் வெளிவிவகார கொள்கையை மீள் ஆய்வு செய்யவேண்டும். -
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
ampanai replied to உடையார்'s topic in அயலகச் செய்திகள்
வீர மரணம் அடைந்த தமிழக உறவிற்கு வீர வணக்கம். -
-
-
-
இனவெறுப்பு பிரச்சாரத்தால் ஜேர்மனியை நாசி ஜேர்மனியாக்கிய ஹிட்லர் - பகுதி 1
ampanai replied to tulpen's topic in அரசியல் அலசல்
ஒரு சனநாயக நாட்டில் ஒரு பலமான எதிர்க்கட்சியும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அறியும் முக்கியம். இல்லாவிட்டால், மக்களாட்சி அரசியல் அமைப்பும் சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். -
-