-
Posts
10942 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by ampanai
-
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், ஆனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களின் முதலீடு பாகிஸ்தானுக்கு நன்மையே தரும் என்றார். -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வணக்கம் கடஞ்சா, உங்கள் விரிவான பதிலுக்கு, தேடலுக்கு நன்றிகள். வாரஇறுதியில் நீங்கள் பகிர்ந்த இணைப்புக்களை வாசிக்க உள்ளேன். இந்த உலகத்திற்குள் நாங்களும் எங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லவேண்டும். மீண்டும் உங்களின் நேரத்திற்கும் இவை சம்பந்தமான கருத்துக்களுக்கும் நன்றிகள். -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கடஞ்சா, இந்த எம்.சி.சி. இனை இதுவரை பெற்ற நாடுகள் பற்றி தெரியுமா? அந்தந்த நாடுகளில் என்னமாதிரியான அரசியல் ஆதரவு/எதிர்ப்புக்கள் இருந்தன? அங்கும் சீனாவின் தாக்கங்கள் இருந்தனவா? நன்றி -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
பாவம் சஜித். பெரிய பெரிய வல்லரசுகள் கைவிட்டு விட்டன -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இருபது வருசத்திற்குப்பின்னரும் தேடலில் இதுவே கிடைக்கலாம், உண்மையும் ஆகிவிடும் -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நிலத்தாலும் நீராலும் அமெரிக்கா தவிர்ந்த கண்டங்களை இணைக்கும் திட்டம். -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மொட்டு விரிந்ததால் மட்டுமே அமெரிக்கா இதை கையில் எடுக்கும் நிலை வந்துள்ளது/வரும். அன்னம் பறந்திருந்தால், அமெரிக்கா இதை கையில் எடுக்கும் தேவை அநேகமாக வந்திருக்காது. இந்தியாவை பொறுத்தவரையில் மனித உரிமைகளை, போர் குற்றங்களை தானாக கையில் எடுக்காது. ஆனால், அமெரிக்கா எடுத்தால் ஆதரிக்கும். இந்தியா வடக்கிலும் கிழக்கிலும் முதலீடுகளை இந்த ஐந்து வருடத்திற்க்கு செய்ய சிங்களம் விடுமா என்பதையும் காலம் தான் சொல்லும். பலாலி விமான நிலைய அபிவிருத்திகளை கூட ரணில் அரசு அவசரமாய் செய்து முடித்தது. இந்தியாவிற்கு சஜித் தோற்றால் அது முடியாமல் போய்விடும் என தெரிந்திக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
1962 conflict with China significantly damaged India's standing at world stage: S Jaishankar Nov 14, 2019, 08.35 PM IST India's position at world stage seemed assured but the 1962 conflict with China significantly damaged the country's standing, External Affairs Minister S Jaishankar said on Thursday. "If the world is different (today), we need to think, talk and engage accordingly. Falling back is unlikely to help," he said, adding "purposeful pursuit of national interest is shifting global dynamics." https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/1962-conflict-with-china-significantly-damaged-indias-standing-at-world-stage-s-jaishankar/articleshow/72059047.cms -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
Status Of Force Agreement SOFA : The other irritant in US-Lanka relations could be the US anxiety to get Colombo to move forward on the Millennium Challenge Corporation’s projects which have already been approved by the Lankan cabinet. While Gotabaya might take the US$ 480 million MCC project forward by getting it parliamentary approval, he would be most reluctant to sign the Status of Forces Agreement (SOFA), which, in its new avatar, would turn Lanka into a US military base.But given the American fear that the Chinese might use Hambantota harbor as a naval base sooner or later, exploiting the 99 year lease they enjoy, the Americans are unlikely to give up on SOFA. மகிந்த ஆட்சி போன்று கோத்தாவும் சீனாவுடன் அதிகரித்த உறவை பேணுவார் என இந்தியாவும் அமெரிக்காவும் எண்ணி காய்களை நகர்த்தவேண்டிய நிலை. -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நாம் இந்த விடயத்தில் எதை முயற்சித்தோம் என தெரியவில்லை. முயற்சிக்கும் அளவிகிற்கு எம்மிடம் அரசியல் தலைமையும் இல்லை என்றே நம்புகின்றேன். ஆனால், எமக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை அடையக்கூடிய தலைமையை உருவாக்கவேண்டும். -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
#1 : தென்கிழக்கு ஆசிய கடல் எல்லையை பொறுத்தவரையிலும் பிரிக்கப்பட முடியாத இறைமை என்னும் அடிப்படையில் சீனாவின் தொடர்ச்சியான ஆதிக்கமே 80% ஆன கடல் பிராந்தியம் சீனாவுக்கு சொந்தமானது #2: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்ததாக பொருளாதார வல்லரசாகவும், ஆசியாவின் இராணுவ வல்லரசாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவமும் பெற்றது சீனா #3: இந்தியாவின் விஷயத்தில், சீனா எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் அளவுருக்கள் 2005ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், சீனா தொடர்ச்சியாக தனது எல்லை மீள்நிர்ணயத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை உள்ளடங்கலாக விரிவுபடுத்தியமையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது -
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு
ampanai replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்தியாவின் அதிருப்தியையும் மீறி, சீனாவுடன் சிங்களம் 'ஒரே பாதை'யில் பயணிப்பதது தமிழர்களுக்கு நன்மை பயக்கும் என பார்க்கலாம். -
யாழ் கள உறவின் ஞாபகார்த்த நினைவஞ்சலிகள்.!
-
முடிந்தது நல்லாட்சி
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் மலையக மக்களுக்கு வாக்குறுதியளித்து வருகின்றனர். எனினும் இழுபறி நிலைக்குள்ளாகி வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மீண்டும் ஒரு ஏமாற்றத்தைப் பெற்றுக்கொடுக்காது இதிலுள்ள தெளிவுத்தன்மைகளை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பசறை, லுணுகலை மற்றும் கோணக்கலை ஆகிய பெருந்தோட்ட புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாம் இவ்விடயத்தில் குழப்பமடைந்திருப்பதாகவும் எவ்வாறு இத்தொகையினை தரப்போகின்றனர் என்று புரியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ள அதேவேளை தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை ஏற்று நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவிக்குமாறு குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் மேற்படி பிரதேச மக்களிடத்தில் வினவியபோது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக 2015 ஆம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் அந்த தொகை இதுவரையில் தொழிலாளர்களுக்கு கிட்டவில்லை. இறுதியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தத்தின் போதும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று மேலும் 50 ரூபா கொடுப்பனவை வழங்கப்போவதாகவும் கூறினர். அமைச்சரவையிலும் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாகவே கூறப்பட்டது. ஆனாலும் இதுவரையில் அந்த 50 ரூபா கிடைக்கப்பெறவில்லை. அதுமாத்திரமன்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முற்பணத் தொகையில் மேலும் 5000 ரூபா பெற்றுத்தரப்போவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது புதிதான விடயமல்ல. காலகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து தரப்பினராலும் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. இவ்வாறான நிலையில் தற்போது 1500 ரூபா என்றும் 1000 ரூபா என்றும் பிரதான வேட்பாளர்கள் கூறுகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு தரப்புக்களுமே மேற்படி வாக்குறுதிகளுக்கு துணை நிற்கின்றன. 1500 ரூபாவை பெற்றுத் தருவதாக கூறும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் அதனை எவ்வாறு பெற்றுத்தரப் போகிறார். அண்மைக்காலமாக 50 ரூபாவுக்கே அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் 1500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருவதாக இருப்பின் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் இதுவும் ஒரு வகையில் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் வாக்குறுதியா என்பது புரியவில்லை. அதேபோன்று மறுபுறத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய 1000 ரூபா பெற்றுத்தருவதாகக் கூறுகிறார். ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 1000 ரூபாவை வழங்குவது என்பது சாத்தியமற்றது. அத்தோடு அடுத்த கூட்டு ஒப்பந்தத்தின்போது 1000 ரூபா பெற்றுத்தரப்படும் என்று கோத்தபாய கூறுவாரானால் அது இயல்பாகவே இடம்பெறும் 1000 ரூபா அதிகரிப்புக்கு பெயர் போட்டுக்கொண்டதாகவே ஆகிவிடும். ஏனெனில் அந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது தோட்டத் தோழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபாவை எட்டிவிடும் என்பது திண்ணமாகும். ஆகவே கோத்தபாய ராஜபக் ஷ கூறுகின்ற 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தேர்தல் முடிவுற்றதும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் இதுவும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர் என்பது புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இம்முறையேனும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றாது உண்மையானதும் இயலுமானதுமான வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/68770
-
ஒரு பூசணிக்காய் தோட்டம் ஆரம்பிக்கலாம் என கடுமையாக யோசிக்கின்றேன்
-
பிரிவால் துயர் கொண்டிருக்கும் சக உறவு வாதவூரன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்ளுகின்றேன்.
-
-
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
- 2995 replies
-
- தமிழ்நாடு
- நாம் தமிழர் கட்சி
-
(and 1 more)
Tagged with:
-
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் இலங்கைத் தமிழ் யுவதி!
ampanai replied to விசுகு's topic in வாழும் புலம்
"ஊடகமொன்றிற்கு அளித்த போட்டியில், இலங்கை எனது நாடு அல்லவென குறிப்பிட்டுள்ளார் மைத்திரேயி. ஆனால் நிச்சயமான தமிழ்தான் எனது கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். “இலங்கை எங்களை அழிக்க முயன்ற நாடு. நாங்கள் விருப்பத்தால் அல்ல, சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தோம். கடந்த பல வருடங்களாக இலங்கை அரசியலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். 10 வருடங்களின் முன்னர் பெற்றோருடன், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். போர்க்குற்றம் பற்றிய விழிப்பணர்வை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்“ என தெரிவித்துள்ளார்." WOW! தொடர்ந்தும் இதை உரக்க கூற வேண்டும். உணர்வை ஊட்டி வளர்த்த குடும்பத்திற்கு பாராட்டுக்கள்.