அல்லிகா
-
Posts
225 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by அல்லிகா
-
-
"ன்" உடன் "னா" தான் வரவேண்டும். அதனால்தான் "பன்னாடு" என்று எழுதுவார்கள்.
பன்மை - ஒன்றுக்கு மேற்பட்டது.
பன்னெடுங்காலம் - பல காலம் .
என்று "பன்" இல் ஆரம்பிக்கும் பன்மையைக் குறிக்கும் சொற்களும் வழக்கத்திலுள்ளன.
"அநாதை" யை "அனாதை" என்றும் எழுதுவார்கள். ஒருமுறை தமிழக முதல்வர் தனது ஆசிச்செய்தியிலே இப்படி இரண்டுவிதமாகவும் எழுதியிருந்ததை விழா மலர் ஒன்றில் பார்த்திருக்கிறேன்.
ஆசிரியருக்கு நன்றி. இவ்விளக்கம் சரியானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ன் உடன் ந புணரும்பொழுது ன வாக மாறுகிறது என்பது உண்மை. இதை விளக்கும் செய்யுள்பற்றிய இணையத்தளங்கள் ஏதாவதுண்டா?
என் தமிழ் ஆசிரியர் ஒரு புத்தகம் வைத்திருந்தார். அதன் பெயரை மறந்து போனேன். அதில் இலக்கண சொற்புணர்ச்சிகள் செய்யுள் வடிவில் விளக்கப்பட்டிருந்தன.
அவரும் தற்போது இடம் மாறிவிட்டார். களத்தில் எவருக்காவது அந்நூலின் பெயர் தெரிந்தால், தயவுடன் அறியத்தரவும்.
நன்றியுடன் அல்லிகா
-
அந்நாடு, என்று ந கரம் புணரும்போது சரி என்பவர்கள் ஏன் பன்னாடு என்று சிலர் எழுதுகிறார்கள். அது பிழையல்லவா? :?: :?
-
முயற்சி செய்த அனைவருக்கும் என் நன்றி!
பந்நாடு என்பதே சரியான சொற்புணர்ச்சியென கீழ்வரும் இணையத்தளத்தில் அறிந்துகொண்டேன்!
http://www.muthamilmantram.com
பன்னாடை என்பது பன்னுதல் என்ற வினையில் பிறந்த சொல். பன்னுதல் = முடைதல், பன்னப் பட்டது பன்னாடை. பன்னல் இன்று பின்னல் என்றும் வழங்குகிறது.
விளக்கத்துடன் அல்லிகா!
-
பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா?
அல்லிகா :?:
தமிழ் சொற்புண்ர்ச்சி
in தமிழும் நயமும்
Posted
நன்றி! தமிழினி உங்கள் உதவிக்கு!!!
8) அன்புடன் அல்லிகா!
அது சரி, இங்கே ஒரு விடயத்தைப் பற்றிய கேழ்விகள் எழுப்பினால் ஏன் சிலர் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். யாழ்களத்தின் தூய்மையை கெடுக்கிறார்களே! தமிழைத் தூயதமிழ் நடையில் அனவரும் தெரிந்து கொண்டால்தான் தமிழ் தமிழாக இருக்கும். கன்னித்தமிழில் காதல் கொண்டால் அதன் பின் மீழ்வே வேண்டாம். அப்படியான இனிய தமிழை, தமிழின் ஆதியை, அதன் ஒவ்வொரு அங்கங்களை நம் தலைமுறையன்றி பின்வரும் தலைமுறைகளும் அறியவேண்டும், அறிய முற்படவேண்டும்!