-
Posts
13297 -
Joined
-
Days Won
47
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by putthan
-
-
On 14/4/2024 at 18:35, கிருபன் said:
ஈரானின் ஜனாதிபதி சிறிலங்காவுக்கு உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொள்ள போகின்றாராம் என செய்திகள் வருகின்றது...2008 ஆம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு இப்ப திறக்க போறார்...
வளைகுடா தியட்டர் ஒவ் ஒபரேசன் முடிவுக்கு வந்து ....தென்னாசியா வில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் தியட்டர் ஒஃப் ஒப்பரேசன் தொடங்க போகின்றார்களோ?நம்ம லங்கா மாதா உசாராக இருக்க வேணும்...ஒரு பக்கம் ஈரான் சீனா ரஸ்யா கூட்டு....மறு புறம் அமெரிக்கா மேற்கு கூட்டு ...வழமை போல இந்தியா இரண்டு பேருக்கும் வாலாட்டி கொண்டு சிறிலங்கா மாதவை லவ் பண்ண முயற்சிகள் ஆனால் சிறிலன்கா மாதா இவரை கனவிலும் கை பிடிக்க மாட்டார்...என்பது
உலகமறிந்த உண்மை -
10 minutes ago, பையன்26 said:
கூலிக்கு மார் அடிக்கும் சிங்களவன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு வட்டின அமுக்கிறது சின்ன வேலை
புத்தன் மாமா🤣😁😂.......................................கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
-
1 hour ago, goshan_che said:
இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.
உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?
திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?
நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.
இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.
சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும்.
இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது.
புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்?
சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.
உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி.
இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம்.
லாம் இல்லை. செய்ய வேண்டும்.
ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல.
அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்...
நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
-
12 hours ago, தமிழ் சிறி said:
பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
சரி போகுது.... யார் குற்றினாலும், அரிசி ஆனால் சரிதானே... 🤣
(இலங்கை ராணுவம் பலி)தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
- 1
-
இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
-
3 hours ago, பெருமாள் said:
சிங்கள ராணுவத்தில் முக்காவாசிக்கு சிங்களம் ஒன்றை தவிர மற்ற மொழிகள் வேப்பம் காயே ரஸ்யாவில் என்ன மொழியில் கதைத்து இருப்பாங்கள் ?
வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்...
வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .
- 1
-
On 14/4/2024 at 18:35, கிருபன் said:
இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
- 3
-
6 minutes ago, island said:
நான் காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.
சகலரும் தங்கள் நலன் சார்ந்தே செயல் படுகின்றனர் என்பதை தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நியாயம் உண்டு....அதற்காக ஒர் அட்டவனைப்படி செயல் படுவது இந்த உலகில் சாத்தியமில்லை
-
11 hours ago, ஏராளன் said:
இவர்கள் இனவாதத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட ‘அரகல’வின் சக்தியை அறிந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் சிங்கள, பௌத்த இனவாத விடயங்களை மையப்படுத்தி அரசியல் செய்வதற்கு விளைய மாட்டார்கள்.
"அரகல" சிங்கள மக்களை பட்டினி போட்டு ஒன்றிணைய வைத்த போராட்டம் ...இனவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்த போராட்டம் அல்ல ....இருவரும் தமிழ் மக்களுக்கு பொருளாதர பிரச்சனை தான் இருக்கு என பிரச்சாரம் செய்பவர் ...
-
30 வருடமா மைதானம் அமைக்கிறாங்கள் இன்னும் இடம் தேடி பிடிக்கவில்லை ...நல்லிணக்க அரசியல் வாதிகளுக்கே இந்த நிலை என்றால் ..
-
5 hours ago, nunavilan said:
அப்போ நாங்கள் —— இப்படிக்கு செலன்ஸ்கி??
கொஞ்ச நாளைக்கு கெரில்லா போரை செய்து கொண்டிரு ...இப்படிக்குநெட்டோ
- 1
-
12 hours ago, island said:
அமெரிக்கா மட்டுமல்ல தமிழர்களாகிய நாமும் அப்படித்தான். 1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக மூச்சசுகூட விடவில்லை. ஏன்? 1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக மூச்சு கூட விடவில்லை. ஏன்? சுயநலம்.
நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.
இன்றும் வெளிநாட்டில் செயல் படும் காளிஸ்தான் செயல் பாட்டாளரை இந்திய வேட்டையாடுகிறது ..கனடா பிர்ஜை அவர்...பிரிவினை கோருபவர்களை எந்த சந்தர்ப்பதிலும் இவர்கள் வர வேற்கப்போவதில்லை...மேற்கின் நலன் கருதி பிரிவனை அடைந்த நாடுகள் தான் அதிகம்
-
நான் அங்கிகரிக்கவில்லை😃
பலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்களுடன் இணக்க அரசியலில் ஈடுபட வேண்டும் ..இஸ்ரேலின் இறையாண்மை பாதுகாக்க பட வேண்டும் -
இவைக்கும் வியாபாரம் தான் முக்கியம் ....சும்மா புருடா விட்டுக்கொண்டிருக்கினம்
-
5 hours ago, ஏராளன் said:
இஸ்ரேலின் பாதுகாப்பே எங்கள் வெளிவிவகார கொள்கையின் முக்கியமான அம்சம் - ஜேர்மனி
Published By: RAJEEBAN 10 APR, 2024 | 03:54 PM
5 hours ago, ஏராளன் said:Published By: SETHU 08 APR, 2024 | 06:33 PM
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது என நிக்கரகுவா சட்டத்தரணி டேனியல் முவெல்லர் நீதிமன்றத்தில் கூறினார்.
இனப்படுகொலைக்கு இந்த ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதற்கான ஆபத்துள்ளது என்பதை ஜேர்மனி அறிந்துள்ளது என மற்றொரு சட்டத்தரணி அலெய்ன் பெலெட் கூறினார்.
ஜேர்மனி சர்வதேச நீதிமன்றத்தில் நாளை தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.
ரஸ்யாக்காரன் சொன்னானோ ,சீனா சொன்னானோ?
Nicaragua ( Sandinistas) இவையின்ற ஆட்களும் புரட்சிகர படை வைத்திருந்தவையள் அல்லோ? நண்பேன்டா... கொள்கை ....
எங்கன்ட சிவப்புகச்சை போராளிகளும் உவையளின்ட போராட்டத்தை பற்றி பாடங்கள் எடுத்து கொண்டு திரிஞ்சவையல் அல்லோ...79/80 களில் ...மீண்டும் உலகம் அமேரிக்கா எகாதிபத்தியம்...ரஸ்யா ,சீனா கம்னியுசம் என்ற பாதையில் செல்ல போகிறதா..
இந்த சைக்கிள் கப்பில இஸ்லாமிய தீவிரவாதம் தனது இலக்கை நோக்கி நகருகிறது போல...- 1
-
On 10/4/2024 at 00:44, ஏராளன் said:
“இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தாக்குவினம் தாக்குவினம்....79 ஆம் ஆண்டு( ஈராணில் உள்ள)அமெரிக்கா தூதகரத்தை கைப்பற்றி அங்கு அதிகாரிகளை பயணக்கைதிகளாக வைத்திருந்த காலம் தொடக்கம் இன்று வரை பயங்கரவாதத்தை வளர்த்தை விட இவர்கள் செய்த ஆக்க பூர்வமான செயல் ஏதாவது?
அன்றைய மாணவர் எழுச்சியில் (79 களில்),புரட்சிகர படையில் பங்கு பற்றிய மாணவர்கள் கள் தான் இன்று ஈரானின் புரட்சிபடையில் தளபதிகளாக இருக்கின்றனர்....
- 1
-
7 hours ago, ஈழப்பிரியன் said:
இந்தியாவிடம் விழவில்லை.அதற்காக எங்கும் விழவில்லை என்பது ஏற்கத்தக்க அல்ல
இந்தியாவின் ரூபாவை விட அமெரிக்கன் டொலர் பெறுமதி அதிகம் என அவருக்கு தெரியாத என்ன
- 1
-
4 hours ago, பெருமாள் said:
போனகிழமை செய்தியில் கிளிநொச்சி அல்லது பூநகரி பக்கமாய் இருக்கனும் சனம் அடிக்க கலைக்க ரோட்டால் போன மோட்டார் சைக்கிளை மறித்து ஆள் மட்டு மட்டா தபியோடினவர் அதன் பின் வந்த முடிவாய் இருக்கும் .
அது தப்பியோட்டம் எப்படி நீங்கள் சொல்ல முடியும்?😄
கெரில்லா போர் முறையில் இதெல்லாம் சகயம்...பனங்காட்டு நரி ஒடியது பாய்வதற்கே...தொகுதிவாரியான தேர்தல் வரும் என அறிந்து கொண்டார் போலும்...- 1
-
அண்மையில் சிட்னியில் தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டார்கள் போதை பொருள் விற்பனை செய்த குற்றசாட்ட்டின் பெயரில்ல் ....இந்த இளைஞர்கள் மூவரும் பட்டதாரிகள் என நினைக்கிறேன் ..ஒருவர் சட்டத்தரணி ...வசதியாக வாழக்கூடிய நிலமை இருந்தும் ஏன் இப்படியான செயலில் ஈடுபதின்றனர் என தெரியவில்லை...
அடி வாங்கின மாணவர்களும் தப்பு செய்கின்றனர்
அடி வாங்காத மாணவர்களும் தப்பு செய்கின்றனர்..- 1
-
10 minutes ago, ரசோதரன் said:
'முருங்கா' என்று இங்கு வேறு பல நாட்டவர்கள் இதைச் சொல்கின்றனர். Super Food என்று இங்கு பலரும் இதைக் கொண்டாடுகின்றனர். இங்கு வீட்டில் இரண்டு பெரிய மரங்கள் நிற்கின்றன. எக்கச்சக்கமான டிமாண்ட், இலை, காய், பூ எல்லாவற்றிற்கும்.
பாக்யராஜ் சொன்ன விடயத்தை இங்கிருக்கும் ஒரு இந்திய மருத்துவரிடம் சும்மா ஒரு தடவை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஏங்க, நீங்க படித்தவர் தானே......😀
முருங்கைக்கு மார்க்கட்டிங் டெக்னிக் ....பாக்கியராஜ் செய்தது😄 ....படிச்ச டாக்குத்தர் சொலுறவையள் முருங்கை காயை சப்பி சாப்பிட கூடாது என சிறுநீரக கல் வருவதற்கு காரணமாம்
- 1
-
13 minutes ago, goshan_che said:
.
அதை பயன்படுத்தி சில நாடுகள் இலங்கயின் அத்தனை அரசியல் கட்சியையும், பெளத்த பீடத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டில் எடுத்து விட்டன.
வழமையாக தமிழனுக்கு எதை கொடுத்தாலும் வீரவசனம் பேசும் பூமிபுத்திராக்கள் இப்ப அமைதியாக கை கட்டி எஜமானர்களின் (கட்சி பேதமின்றி) காலில் விழுந்து ஜனாதிபதியாக வர தவிக்கின்றனர்
-
20 minutes ago, goshan_che said:
இது விளங்கினால் இந்த இனம் எப்போதோ தனக்கென ஒரு நாட்டை அடைந்திருக்கும்.
இரண்டு இனங்களுக்கும் விளங்கவில்லை ....நாட்டை உருவாக்கியவர்கள் நல்ல நிலையில் தான் கொடுத்து விட்டு சென்றார்கள் தங்களுடன் சேர்ந்து பயணித்தால் சிறப்பாக வாழலாம் என்று....சேர் பொன் ராமநாதன் ,அருணாச்சலம் போன்ற தலைவர்கள் பல்கலாச்சார சமுகமாக வாழ வேணும் என்ற நல்லெண்ணத்துடன் நல்லிணக்கமாக செயல்பட்டனர்.....
ஆனால் காலப்போக்கில் பல சித்தாத்தங்கள் அரசியல் தலைவர்களால் மக்களுக்கு புகுத்தப்படதின் விளைவு ....
நாட்டில் பல்கலாச்சாரம் போய் பல் வல்லாதிக்க சக்திகளின் சித்தாந்த,அரசியல் மாட்டி தத்தளிக்கின்றது- 1
-
6 minutes ago, goshan_che said:
இலங்கையில் கடைசியாக எந்த வருடம் 20% கீழான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்தார்கள் என யாராவது நினைத்தீர்களா?
அல்லது நாட்டு நிலமையை கண்டு வந்து சொன்னர் மீதுள்ள கடுப்பில் இப்படியான கேள்விகளை மறந்தே விட்டீர்களா?
இது கூட நாட்டுமக்களின் கையில் இல்லை ....இனவாதம் ,மத வாதத்தை விட நாட்டு மக்களை வறுமை மற்றும் பொருள் தட்டுப்பாடு என்ற சிக்கலில் மாட்டி ஆட்சியை கைப்பற்றலாம் ,மாற்றலாம் என்ற புதிய பாடத்தை மேய்ப்பாளர்கள் (வல்லாதிக்க சக்திகள்)
கண்டுபிடித்துவிட்டார்கள் ... -
இவர் சும்ம புலம் பெயர் பிரதேசத்திலிருந்து கூவிக்கொண்டிருக்கிறார்😃
அந்த மண்ணிலிருந்து இதை சொல்வதற்கு ஒர் துணிச்சல் வேண்டும்💪
"போதும் இந்த நரகம்..!"
in கதைக் களம்
Posted
சபலங்கள் வரும் பொழுது மனைவியின் துணை யுடன் சபலத்தை தீர்த்துவிட்டால் சகலதும் சுபமென சொல்லுறீயல்...என்ன ஒரு வயதுக்கு பின்பு வள்ளுவரின் காமத்துபாலை விட அறத்துப்பால் சிறப்பு என புலம்பத்தொடங்கிவிடுவார்கள் ..