முதலில் என்னுடைய பிறந்த நாளில் தங்களுடைய பிறந்தநாளைக் கொண்ட உறவுகளான ரகுநாதன், R.ராஜா, சிற்றம்பலம் ஆகியோருக்கும் எனது மனங்கனிந்த பிறந்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேர்களை இழந்துவரும் விழுமியங்கள் புகழ் புங்கையூரான்,
நெருடிய நெருஞ்சித் தம்பி கோமகன்
யாழின் இணைய நரம்பு இணையவன்,
சித்திரநகைச் செம்மல் தமிழ்சிறீ,
காதல் ஒழிப்பாளன் நெடுக்காலபோவான்
கொடுமிளகாய் கு.சா அண்ணை,
திப்பிலி ஆட்டும் தப்பிலி
விண்ணானச் சூரர் விசுகு அண்ணா,
தகவல் தங்கம் தமிழரசு,
புதிய மன்னன் சுபேஸ்,
பல்லறிவுடைய புலவர்,
தகவுகள் நவிலும் நுணா,
பாறைகள் தகர்க்கும் அலை அரசி,
முத்து நகை நிலாமதி,
கலக்கல் மன்னன் இசைக்கலைஞன்,
காந்தத் தமிழோன் வாத்தியார்,
அன்புச் செல்வி தமிழினி,
கண்மறைந்த ஓவியம் அர்யூன்
எல்லாம் அறிந்த ஈஸ்
வெட்டுக்கிளி நிழலி,
அடாவடித் தம்பி அறிவிலி,
அமைதிப்பபூங்கா சுவி
கண்மை அழகி? கறுப்பி,
கருத்துப்பிள்ளை ராஜா
முத்திரைப்புடையன் நெல்லை,
அம்மாமி அலைமகள்
ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.....அடடா முகமே அறியாத எத்தனை நண்பர்களை இந்த யாழ்க்கருத்துக்களம் எனக்கு வழங்கி இருக்கிறது. முகமறியா நட்பின் முகவரிகள் முத்திரை பதிக்கும் இடம் யாழ்கருத்துக்களமாக இன்றும் இனியும் தொடரட்டும்.