
puthalvan
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Content Count
432 -
Joined
-
Last visited
-
Days Won
1
puthalvan last won the day on December 10 2019
puthalvan had the most liked content!
Community Reputation
106 ExcellentAbout puthalvan
-
Rank
உறுப்பினர்
Profile Information
-
Interests
Politics, Tamil Issues, International Affairs
Recent Profile Visitors
-
வைத்தியர் ஒருநாளும் உங்களிடம் கடன் கேட்க வரமாட்டார். பாவம் மனுஷன். குற்றவாளியை கண்டவுடன் தண்டனையை நிறைவேற்றிப்போட்டுது! நோயிலிருந்து மீண்டது சந்தோசம். அதுவும் இந்த கொரோன காலத்தில்.
-
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
கடந்தகால அனுபவங்கள் தான் வருங்கால படிக்கட்கள். எந்த அணுகுமுறை பலனை தந்தது. எதனால் பலன் வரவில்லை. ஏன் பலன் வரவில்லை என்பவற்றை நாம் எமக்குள் பகிர்ந்து அதன் மூலம் புதிய அணுகுமுறைகளை கண்டறிந்து பயணிப்பது தான் நாம் விரைவில் எமது இலக்குகளை அடைய வழிகோலும். இங்குள்ள ஒவொருவரும் தமது நேரத்தை செலவழித்து தமது மக்கள் மீது கரிசனை கொண்டு கருத்துக்களை பகிர்கின்றனர். அதில் ஒரு சில வீதத்தினர் அந்த அனுபவங்களை உள்வாங்கி தங்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள். நான் கூட இந்த வருடம் தான் அதிகளவு பதிவிடுகிறேன். ஆனால வடக்கு/கிழக்கு விடயங்களில் மும்மரமாக இருந்த காலத்தில் இந்த களத்தில் இருந்து செய்திகள், கருத்துக்களை வாசித -
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழரின் இருப்பை உறுதிசெய்ய பின்வருவன முக்கியமானது: 1. சனத்தொகையை கூட்டுதல்/சனத்தொகை பரம்பலை குறைதல் a . இளைய சமூதாயம் வாய்ப்புகள் தேடி வெளியுலகு செல்லாமல் (Brain Drain) அங்கிருக்க பொருளாதார வாய்ப்புகளை ஏட்படுத்தவேண்டும். இளைய சமூதாயம் வருங்கால மூளை வளம் (Human Capital) அதோடு அவர்கள் தான் பிறப்பு விகிதத்தை (Birth Rate) உறுதிசெய்ய தேவையானவர்கள். b . பொருளாதார ஊக்குவிப்பு/முதலீடுகள் வடக்கு/கிழக்கை மையப்படுத்தி நடக்கவேண்டும். அதன் மூலம் சனத்தொகை பரம்பலை (population spread) குறைத்து சனத்தொகை செறிவை (increase population density) நீண்டகால அளவில் கூட்டவேண்டும். இதன் மூலம் தென் பகுதி -
சூரரைப் போற்று - விமானம் வாங்கிய ஈழத் தமிழன்.!
puthalvan replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in வாழும் புலம்
வாழ்த்துக்கள் சந்திரன். எம்பிராயரா செஸ்னாவா? இனி கலஃஸ்ட்ரீம் g650? -
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மக்களுக்கு உதவும் கட்டமைப்புகளை உருவாகும் திடடம் வரையப்பட்டு புலம்பெயர் நிபுணர்களும் தமிழர் நலன்விரும்பிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் விடயங்களை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை. இந்த முயட்சிகள் 2009 ம் ஆண்டில் இருந்து 2010 வரை நடைபெற்றது. இது பற்றி முன்னர் எழுதிய ஜாபகம். மனித உரிமை, மீள்கட்டுமானம், பொருளாதார, அரசியல் விவகாரங்கள் என வகைப்படுத்தப்பட்டு அதட்கான நிர்வாகமுறைமை முதல் கொண்டு பல விடயங்களை புலம்பெயர் ஆர்வலர்கள் செய்ய முன்வந்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரின் நலன் சார்ந்த ஒரு நிழல் அரசு போல இயங்கவேண்டும் என்ற கருத்தியலில் இந்த முயறசிகள் இடம்பெ -
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மன்னிக்கவும் சுமந்திரன் என்று வந்திருக்கவேண்டும் -
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அங்கே தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பனிப்போர் நடக்கிறது. ஒரு சாரார் மாவையின் கீழும் இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும் தமது தரப்பு அரசியல் இமேஜ்ஜை கட்டியிழுப்புவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மாவை, ஆரம்பகால தமிழ் தேசிய அரசியலில் இருந்து இன்றுவரை ஒரு வரலாற்றை கொண்டவர் என்பதை தனக்கு சார்பாக பயன்படுத்தி பல காரியங்களில் இறங்கியுள்ளார். அதே சமயம் தமிழ் தேசிய அரசியலை அவபோட்து தனது கருத்தாக்களாலும் செய்கைகளாலும் விமர்சித்தவர் இன்று மாவையை வெல்ல அது மிகவும் தேவை என கண்டுபிடித்து இயங்குகிறார். இதில் சோகம் என்னவென்றால் தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவும் திமுகவும் எப்பட்டி தமிழருடைய போராட்டத்த -
மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சந்தர்ப்பவாத அரசியல் (Political opportunism) என்று பெயர். இவர் விளக்கேத்துறார் இன்னொருத்தர் தன்னுடைய தாய் மொழி தமிழ் என்கிறார். இனி ஒருவர் மாவீரர் தின உரை ஆற்றினாலும் நீங்கள் ஆச்சரியப்படாதையுங்கோ. -
என்ன தங்க முலாம் பூசப்பட்ட டயரா செய்கிறார்கள் 300பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்து?. 300மில்லினியனாக இருக்க வேண்டும். அடுத்தது 300மில்லியன் முதலீடு ராஜபக்ஷ அரசை நோக்கியது என எண்ணலாம். நேரடியாக கடன் கொடுப்பதை விட்டு தங்கள் தொழிற்சாலைகளை தங்கள் செல்வதில் அங்கே போடுகிறார்கள். அப்ப கடன் பொறி கதையை மடக்க இன்னொரு திட்டம். வெகு வேகமாக காய்களை நகர்த்துகிறார்கள் சரி எப்ப எங்கடை ஆட்கள் இந்திய பிரதமரோடை கதைக்கினமாம்?. இன்னும் மொபைல் சார்ஜ் காணாதமே ஸும்ல (zoom) கதைக்க?. எங்களுக்கும் இப்படி ஒரு தொழில் வலயத்தை பலாலிக்கு கிட்ட கட்டி தருவினமாமே? 3 வருடத்தில நாங்கள் மாடுவளர்த்து மூத்திரம் அனுப
-
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ட்டர் (Charter tours) விமானம் மற்றும் ஹெலிகாப்டர் எடுத்து திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் சுற்றுலா போகலாம். ஆனால் பயணிகள் விமானம் நடத்த பிரச்னை. அவர்களுக்கு நல்லா தெரியும். எங்களை கொஞ்சம் வளரவிட்டால் எட்டி பிடிக்க கஷடம் என்று. இந்த விமான விவகாரம் ஒரு உதாரணம் மட்டுமே. புலம்பெயர் முதலீட்டுக்கான நிதி பொறிமுறையில் இருந்து அகதிகளுக்கான வீடு வரை எத்தனை திட்டங்களுக்கு முட்டுக்கட்டை, இழுத்தடிப்பு என்று. ஒரு நாள் அது நடக்கும் ராஜவன்னியன். தலைமுறைகள், உலக ஒழுங்குகள் மாற என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் எங்கள் காலத்தில் அது நடக்குமா எ
-
நான் ராஜாவானியன் 2018கு பிறகு இந்த விடயங்களில் இருந்து விலகிவிட்டேன். ஆனாலும் ஆட்களை சந்திக்கும் போது அரசியல் தான் முதலிடம். எனக்கு தெரிந்த படி கடந்த அரசு அதன் இறுதிநாட்களில் சிலவற்றை செய்ய முனைந்தனர். எல்லாம் தேர்தலில் ஒரு கண் வைத்து. அதனால் தான் விமான நிலையமும் தட்காலிக வழிகாட்டு கோபுரமும் வெள்ளத்தில் கிடக்கும் படம் களத்தில் பார்த்த ஞாபகம்!. தட்காலிக வழிகாட்டு கோபுரம் போட வந்த இந்திய பொறியியலாளரையும் அங்கிருந்த இராணுவ அதிகாரி அவமதித்து அனுப்பி வைத்திருந்தாராம். இப்பொது விமான நிலைய கட்டணங்கள் தொடர்பாக பிரச்னை படுகிறார்கள் என்று தான் செய்திகள் வாயிலாக அறிகிறேன். விமானம் வந்து இறங்கிதோ இல
-
ஆம் நிச்சயமாக. இந்த விடயங்களில் சர்வதேச/உள்ளக நுகவோர் (அதாவது பயணிகள்) நடத்தை (Consumer Behaviour) எப்படியிருக்கும் என 2014 - 2018 காலப்பகுதியில் நடந்த பல தரப்புடன் நடந்த பேச்சுக்களில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்த கருத்துப்பரிமாற்றங்களில் எனது கருத்துக்களை பகிர்ந்தவன் என்ற வகையிலும் வர்த்தக ரீதியில் விமான நிலையதின் நீண்டகால வருமானத்தை நிலைநிறுத்துவது என்பது பற்றி எனது தொடர்பாடுகளில் ஈடுபட்டவன் என்ற வகையிலும் சில கருத்துக்கள். முதல் சர்வேதேச பயணிகள் (தமிழர் உட்பட) பற்றி பார்ப்போம். இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயத்தினாலும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாண விமான இணைப்பு ரத்ம
-
எந்த அரசாங்கமும் நல்ல நோக்கத்துடன் தமிழர்களை அணுகவில்லை – கலையரசன்
puthalvan replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு அரசுகளை கையாளும் தந்திரம் இம்மியளவும் இல்லை என்பதை இந்த கூற்று சுட்டிக்காட்டுகிறது! -
ஜெனீவா அனுசரணை நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் – சுமந்திரன்
puthalvan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இராஜ தந்திர விடயங்கள் கண்ணியமாக விளம்பரம் இல்லாமல் முன்னெடுக்கப்படவேண்டும். அப்படியிருக்க நாங்கள் ஏன் இலங்கை அரசுக்கு முன்னறிவித்தல் கொடுப்பது போல இந்த விவகாரங்களை வெளியில் இப்பொது தெரிவிக்க வேண்டும்? சுமந்திரன் ஒரு பொது துறை பதவியில் (public official/elected official) இருப்பவர். பொதுத்துறையில் உள்ள ஒருவர் தனது கருமங்களை ஆற்றும் விதம் மற்றும் அந்த பதவியின் பின்னணியில் அது சார்ந்த அவரின் போக்குகள் நிச்சயமாக ஆழ்ந்த அலசல்கள், விமர்சனகள், கடும் வார்த்தை பிரோகங்களுக்கு உட்படுவது சகஜம். மேலும் பொதுத்துறையில் உள்ள ஒருவரின் நடவடிக்கைகளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படக்கூடிய ஒரு தரப்பு அத