Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BLUE BIRD

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    6659
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Posts posted by BLUE BIRD

  1.  

     

    தோல்வியில் மீளுவோம்
    ************************
    நீண்ட பயணம்….,
    முடிவு வரும் ஆனால் பாதை
    கடினமானது.

    தெரிந்து பயணம் செய்தான்
    எங்கள் தலைவன்.
    வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….!

    பயணத்தின் பாதை
    அது மிகக் கொடுமையானதாய்
    கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..!


    சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய்
    குருதியாற்றில் குளிர்தோடிய பயணம்
    அது முடியும் தருவாயில்…..!

    இதோ கனவின் கடைசித்துளி
    நிசமாகியதாய் நினைவு.
    நாங்கள் வென்றோம்…..!

    பாதியில் பயங்கரக்கனவு போல்
    பறிபோன கனவின் மீதமாய்
    தோற்றுப் போனோம்….!

    பயணம் முடியாமல் தோல்வியாய்
    பயணவழி வந்தவர்கள்
    பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும்
    பயங்கர அறைகளிலும்…..!

    எனினும் எல்லைகளை எட்டும்வரை
    பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த
    சிலர் மட்டுமே வந்தவழி நடக்க
    வரலாற்றைச் சுமந்தபடி….!

    பாதிவழி முடியாத
    பயணத்தை முடித்துவைக்க
    பார்த்திபன்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்…..!

    இலட்சிய வேர்களின் உறுதியில்
    மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி
    எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!

    காலநதியோடு கரை(லை)ந்திடாமல்
    காலச்சூரிய ஒளிதேடிய கடைசி யாத்திரை
    மீளும் உறுதியோடு…..!

    காலத்தை மாற்ற புறப்பட்ட போராளி நினைவாக !
    404947_128750057297092_1515610167_n.jpg

     

     

    Arun Journalist

     

    From FaceBook

  2. [size=3]20449413.png[/size]

    [size=3]எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

    Nov 27 2012 09:42:28[/size]

    [size=3]மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

    வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

    விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

    இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

    [/size]

    http://ekuruvi.com/maverrar%20day%202012

  3. cf979971582ccd2db9d8846e9f971eed.jpg[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size][size=2]

    [size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன.

    இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் விதி பற்றியும் முற்பிறப்பு, பலாபலன்கள் பற்றியும் பாவ வினை பற்றியும் பேசுவார்கள்.

    இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் தோற்றுப் போனவர்களாக மீளவும் விதி பற்றியும் வினை பற்றியும் பேசிக் கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றனர்.

    எண்ணிக்கைகளற்ற வித்துக்கள்

    இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதி தமிழ் மக்களுக்குரிய பண்பாட்டு கலாசார விழுமியங்களுடன் கூடிய பாரம்பரிய தேசமாகக் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுச் சான்றுகளுடன் இந்த உண்மை நிறுவப்பட்டாலும் அதற்கான முழு அங்கீகாரமும் இதுவரை எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    வடக்குக் கிழக்கு தமிழர்களது தேசம் என்பதையும் அதை தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணய உரிமைகளுடனும் ஆள வேண்டும் என்பதற்காகபோராட ஆரம்பித்தனர். இந்தத் தூண்டுதலை தமிழ் மக்களுக்கு வழங்கியவர்கள் சிங்கள மக்களே. அதிகாரத்தின் இருப்பு யாருடைய கையில் என்பது இந்தப் போராட்டத்துக்கு உந்துதல் ஆகியது.

    ஒரு காலத்தில் அரசியல் சாணக்கியம் பெற்றவர்களாக தமிழ்த் தலைவர்கள் இருந்த போது சிங்களத் தலைவர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருந்தனர். அந்த வளர்ப்பு பின்னர் விஷமாய் திருப்பி விடப்பட்டது. இந்த நாள் கொண்டு தமிழ் மக்கள் சிங்கள தேசத்தை எதிர்க்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டனர்.

    அஹிம்சை வழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வலுவடைந்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. இதுவரையில் இருந்த அடக்கு முறைகளை ஆயுதம் கொண்டு மாற்றியமைக்க முற்பட்ட இளைஞர் அணி வலுவடைந்து ஓர் இனத்தின் விடுதலை இயக்கமாக மாற்றமடைந்திருந்தது.

    அந்தநாளில் இருந்து தேச விடுதலையை நோக்காகக் கொண்டு போராளிகள் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணங்கள் என்று சொல்லப்படும் நாள்கள் வரை எண்ணிக்கையற்ற வித்துக்கள் விதைக்கப்பட்டன. தேசம் விடிய வேண்டும். ஈழம் மலர வேண்டும் என்ற நோக்கத்துக்காய் இந்த வித்துக்கள் விதையாக்கப்பட்டன.

    எண்ணிக் கொண்ட நாள்கள்.

    தமிழீழ விடுதலைப் போராட்டம் கெரில்லா முறையில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு சகல கட்டமைப்புக்களையும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றிக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் சர்வதேச ரீதியில் இருந்த நெருக்கடிகளும் தடைகளும் தமிழீழ விடுதலைப்புலிகளை மரபு வழி இராணுவமாக ஏற்றுக் கொள்ளாது உலகத்தில் இருக்கக் கூடிய பயங்கரவாத அமைப்புப் பட்டியலிலேயே சேர்த்து வைத்திருந்தது.

    அரசு என்ற அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச ரீதியில் இதற்கான தூண்டுதல்களை வழங்கியிருந்ததுடன் காலத்துக்குக் காலம் அந்தத் தடையை நீடிப்பதற்கான வியூகங்களை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.

    ஆயுத விற்பனைக்காக இராஜ தந்திரத் தொடர்புகளை வைத்திருந்த நாடுகள் தவிர ஏனைய நாடுகள் எல்லாம் பிராந்திய ஆதிக்க போட்டிகளின் அடிப்படையில் செயற்பட்டதால் இலங்கைத் தீவில் இரண்டு அரசுகள் இருக்கவிரும்பவில்லை. இதன் காரணமாக இலங்கையில் இடம்பெற்ற போர்குறித்து அவை உன்னிப்பான அவதானத்தைச் செலுத்தவில்லை.

    சில வல்லரசுகள் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்ளும் வகையில் அயல்நாடுகள் இடையே உள்முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு அவதானிப்புக்களை அவற்றின் மீது செலுத்திவிட்டன. இதனால் விடுதலைப் புலிகள் எதற்காகப் போராடுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையே மாறுபட்டு புரியவைக்க முற்பட்டுள்ளனர். தவிர போராட்டம் குறித்து, சில சர்வதேச நாடுகள் புரிந்து வைத்திருந்தாலும் நேரடித் தலையீடுகளுக்கு அவை பின்னடித்தன அல்லது பாராமுகமாக இருந்தன.

    இதனால் விடுதலைப் புலிகளை ஒழித்து விட வேண்டும் என்ற கை மேலோங்கியது.

    தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி கொண்ட விடுதலைப் புலிகள் மீது வலிந்த போர் நிறுத்த உடன்படிக்கையோடு அழித்தொழிப்பதற்கான திட்டத்தை சில வல்லரசு நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து தீட்டிவிட்டன.

    இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் அழிவு சர்வதேச நாடுகளால் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் தமிழ் மக்களின் பல நூறு உயிர்கள் தினமும் மாண்டு போவதையும் அந்தச் சமூகம் பார்த்துக் கொண்டேயிருந்தது.

    பயிரிடையே களைகள்

    விடுதலைப்போராட்டம் மரபு வழிக்கட்டமைப்பை அடைந்திருந்த போது திறமை மிக்க போராளிகள் உருவாக்கப்பட்டிருந்தனர். அவர்களது தியாகம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு போராட்டத்தை நின்று நிலைக்கச் செய்தது.

    2001 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்துக்கான விலைப்பேச்சு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் கேள்விகள் திட்டமிட்டு மலிய வைக்கப்பட்டன. (விலைப்பேச்சு என்பது நோர்வே நாட்டின் அனுசரணையுடன் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை குறிக்கிறது.)

    உண்மையில் நோர்வே விடுதலைப் புலிகளை அழிக்கத் தூண்டியதா அல்லது தார்மீகப் பொறுப்புடன் நடந்து கொண்டதா என்பதில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளிவருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் இறுக்கமான கட்டமைப்புக்குள்ளேயே நம்பிக்கை மிக்க போராளிகள் எதிராளிகளாக மாற்றப்பட இந்த இடைவெளி போதுமானதாக இருந்தது.

    கிழக்கில் பெயர் குறிப்பிடக் கூடிய போராளியாக இருந்த கருணா விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறிக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழனை தமிழனே கொல்லும் கொடுமை நிகழ்ந்தேறியது.

    கருணாவின் சூழ்ச்சியை விடுதலைப் புலிகள் வெளியளவில் பெரிதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இராணுவ ரீதியில் கருணாவுக்கு இருந்த போரிடும் ஆற்றல் மற்றும் விடுதலைப் புலிகளின் இரகசியத் திட்டங்கள், நகர்வுகள் குறித்த விவரங்கள் சிங்கள இராணுவத்துக்கு கொடுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற எதிரான போராளிகள் பலர் இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்த அமைப்பில் இருந்தே செயற்பட்டிருந்தனர் என வாய் வழி வியாக்கியானங்கள் பேசப்படுகின்றன.

    இது உண்மையென்று அறியப்படாவிடினும் சூழ்ச்சி ஊடுருவல் மூலம் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை முற்று முழுதாக அறிந்து கொண்டது என்பதை மறுக்க முடியாது.

    புலம்பெயர்ந்து போராட்டம்

    நிலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலவீனப்பட்டுக் கொண்டிருந்த வேளை புலத்தில் அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புலம் பெயர்ந்திருக்கக்கூடிய தமிழ் மக்கள் வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை நிறுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனாலும் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை. அவர்களது கோரிக்கைகள் கொலை செய்யப்பட்டதுடன் இறுதிவரை தமிழ் மக்கள் மீதான கொலைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்புப் போராட்டம் ஏட்டுச்சுரக்காய் ஆனது.

    உண்மையில் விடுதலைப் போராட்டம் பற்றி அடிப்படைகள் எதனையும் புரிந்து கொள்ளாத தமிழகத் தலைவர்கள் ஈழப்படுகொலையை நிறுத்துமாறு கோரிக் கொண்டனர். இன்றும் அவர்களது கோஷம் நிறைவுறவில்லை. ஆனாலும் இவர்களின் கருத்து ஒரு பொருட்டாகவே கொள்ளப்பட்டதாகத்தெரியவில்லை.

    மீட்பர்களாக இராணுவம்

    இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த இராணுவம் எஞ்சியோரை மீட்டு அகதி முகாம்களுக்கு கொண்டு சென்றனர். இதன்போது பயங்கரவாத போரை தாம் வெற்றி கொண்டு விட்டதாகவும் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டனர் எனவும் மகிழ்ச்சி கொண்டாடிய இராணுவம் தமிழ் மக்களின் மீட்பர்களாக தம்மை காட்டிக் கொள்ள முற்பட்டது.

    இன்றளவும் வடக்குக் கிழக்கில் சமூக சேவைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலையான புரிந்துணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அரசு கூறிக்கொள்கிறது.

    மாவீரர்கள்

    ஈழக்கனவோடு உயிர் நீத்த தமிழ்ப் போராளிகள் "தங்களின் சாவால் இன்னொரு தமிழன் வாழ்வான்" என்ற நம்பிக்கையோடு இரையாகிப் போக, இன்று தமிழ் இனம் தனது இருப்புக்காக அலைய விடப்பட்டுள்ளது. கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கைகளும், விடுதலைப் போர் பற்றிய அபிப்பிராயங்களும் நசுங்கிப் போக இறந்து போன வீரர்களை எள்ளி நகையாடும் கூட்டம் எம்மிடத்திலே தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

    இவர்களின் இறப்பை நியாயப்படுத்திய பலர் அநியாயம் அந்தப் பிள்ளைகள் என்று கவலைப்படுகின்றனர். இது இவர்களின் இருப்புக்கான பரிதவிப்பு. போராளி தனது உயிரை எதற்காக அர்ப்பணித்தானோ அந்த நோக்கம் இன்று சிதைந்து போயிருக்கின்றது.

    திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான தமிழ் உணர்வுள்ள எந்த மனிதர்கள் மத்தியிலும் வீரத்தின் உருவம் சிதைந்து போகவில்லை. எம்மில் இருக்கும் களைகளை களைவதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் தியாகம்.[/size][/size][size=2]

    http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6341042127217000[/size]

    • Like 1
  4. தூயவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்!வாழச்சொல்லுகிறேன்!வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.

  5. உலக தமிழர்களின் சொந்தம்..

    4055546386_3061501862.jpg

    செஞ்சிகோட்டையின் சிங்கம்..

    24 கேரட்டு கோல்டு தங்கம்..

    22_9_2009_8_04_5810_gold-coins-images%5B1%5D.jpg

    நாளை பிறந்ததினம் கொண்டாடும் புரட்சியை இங்கிட்டு வந்து வாழ்த்துங்கோ...

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்து சொல்லுகிறேன்!வாழச்சொல்லுகிறேன்!வண்ண நிலவை பார்த்து சொல்லுகிறேன்.

  6. வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி!அத்துடன் உணவு வழங்கி விழாவை சிறப்பித்த உறவு புரட்சிகர தமிழ்தேசியன் க்கும் நன்றி!அத்துடன் நடு நிசி பன்னிரண்டு மணிக்கு கேக் வெட்டிய எனது மனைவி மற்றும் செல்ல குட்டிகளுக்கும் நன்றி!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.