Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    49420
  • Joined

  • Days Won

    33

nunavilan last won the day on January 21 2022

nunavilan had the most liked content!

About nunavilan

  • Birthday 02/16/1980

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA

Recent Profile Visitors

202411 profile views

nunavilan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Year In

Recent Badges

4.9k

Reputation

1

Community Answers

  1. ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா? ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர். டிரம்ப் தரப்பு கூறுவது என்ன? ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார். டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். ஜோ பைடன் கருத்து என்ன? வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார். 2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார். ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன. மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும். டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். டிரம்ப் கைதாகிறாரா? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது. டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா? மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம். உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம். பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும். விசாரணை எப்போது? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும். நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம். விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம். பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா? தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது. என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது. 1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும். எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும் https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/will-trump-be-arrested-123040100029_1.html
  2. ’புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது’ செந்தூரன் பிரதீபன் “தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார். “பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக வழக்கு தொடர்ந்தால் அதை பாவிக்க முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மிகவும் பலத்தை வழங்குகின்றது. இராணுவ கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது. அத்துடன் தடுப்பணை, தற்போது உள்ள சரத்தின் படி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்க முடியும், தற்போது உள்ள புதுச் சட்டம், ஜனாதிபதிக்கான அதிகாரத்தில் மேலும் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு மீது தடை விதிக்கின்றது. அதனை வருத்தமானியில் பிரசுரிக்க முடியும் அது நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும். ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அத்துடன் வர்த்தமானியில் வெளியிட முடியும். அதற்கு பொலிஸ் அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-சட்டம்-பன்மடங்கு-மோசமானது/150-315090
  3. மோடியின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை! கேட்டவருக்கு அபராதம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராத பணத்தை கெஜ்ரிவால் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் வைப்புச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை ஆட்சேபித்தே குஜராத் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. https://thinakkural.lk/article/247352
  4. Srilanka போராட்டக்காரர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன? அது ஒரு நாள் போராட்டம் என்று தான் பலரும் கருதினர். அடுத்த சில தினங்களில் மிகப்பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 2022 மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்கிய போராட்டம், அன்றிரவைக் கடந்து, நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, சுமார் 100 நாட்களை கடந்த போது, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். அந்தப் போராட்டத்தில் களமிறங்கிப் போராடியவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து, பிபிசி தமிழ், அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.
  5. ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் – இதற்கிடையே ஏதேனும் இணைப்பு உள்ளதா? நீங்கள் அடிக்கடி தலைவலியைப் பற்றி புகார் செய்தால், அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை என்றால், ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள இது உதவும். ஒற்றைத் தலைவலி என்பது தீவிரத்தில் மாறுபடும் தலைவலி மற்றும் பெரும்பாலும் குமட்டல் மற்றும் ஃபோட்டோசென்சிட்டிவிட்டி உடன் தொடர்புடையது. இது ஒரு பரவலான நிலை மற்றும் பொதுவாக சுயமாக கண்டறியக்கூடியது. சாதாரண இரத்த விநியோகத்தை விட மூளைக்கு இரத்த ஓட்டம் குறுக்கிடப்பட்ட அல்லது குறைக்கப்பட்டதன் மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த குறுக்கீடு சில நரம்பியல் கோளாறுகள் மற்றும் மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும். ஒற்றைத் தலைவலி போலல்லாமல், பக்கவாதம் ஒரு மருத்துவ அவசரநிலை மற்றும் இதற்கு உடனடி கவனம் தேவை. பக்கவாதத்தின் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் அதற்குத் தேவையான சிகிச்சை எதிர்கால சிக்கல்களைக் குறைக்க உதவும். பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு என்ன வித்தியாசம்? பக்கவாதத்திற்கும் ஒற்றைத் தலைவலிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய பின்வரும் காரணிகளை அறியுங்கள்: ● ஒற்றைத் தலைவலியுடன், அறிகுறிகள் படிப்படியாகத் தோன்றும், மேலும் காலப்போக்கில் நிலைமையின் முன்னேற்றம் மெதுவாக அதிகரிக்கிறது. இருப்பினும், ஒரு பக்கவாதம் ஏற்பட்டால், அறிகுறிகளின் ஆரம்பம் திடீரென்று மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும். ● ஒற்றைத் தலைவலி நேர்மறையான அறிகுறிகளைக் கொண்டுள்ளது, அதே சமயம் பக்கவாதம் எதிர்மறையான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. நேர்மறை அறிகுறிகளில் ஒளியின் ஃப்ளாஷ்கள் அல்லது கூச்ச உணர்வு போன்ற கூடுதல் உணர்வுகள் அடங்கும். எதிர்மறை அறிகுறிகள் உணர்ச்சியுடன் தொடர்புடைய பார்வை இழப்பு, மேல் அல்லது கீழ் முனைகளில் தொடுதல் இழப்பு போன்றவை. ● இளம் வயதில், ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் இளம் வயதினராக இருந்தால், அது பெரும்பாலும் ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம். வயதானவர்களில், அறிகுறிகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறிப்பாக ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளை இதற்கு முன் நீங்கள் அனுபவித்திருக்கவில்லை என்றால். ஒற்றைத் தலைவலி பக்கவாதத்துடன் தொடர்புடையதா? பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி இணைப்பு இன்றுவரை நிறுவப்படவில்லை. இருப்பினும், கிளாசிக் மைக்ரேன் (ஒருபக்கத்துடன் கூடிய ஒற்றைத் தலைவலி) பெறும் நபர்களுக்கு பக்கவாதம் வராதவர்களை விட அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரா என்பது ஜிக்ஜாக் கோடுகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் அல்லது பொதுவாக நரம்பியல் நிகழ்வுக்கு முன்னதாக உடல் பாகங்களில் கூச்ச உணர்வு போன்ற உணர்வுகளைக் குறிக்கிறது. கிளாசிக் மைக்ரேன் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த இணைப்பு ஒற்றைத் தலைவலியால் இரத்த நாளங்களைச் சுற்றியுள்ள செல்களில் ஏற்படும் சேதத்துடன் தொடர்புடையது என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. இது உங்கள் தமனிகளை வீக்கமடையச் செய்து, அவற்றை விறைப்பாக அல்லது உறுதியானதாக ஆக்குகிறது மற்றும் இரத்தம் உறைவதை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வுகள் உங்கள் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள் என்ன? சில அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் இரண்டிற்கும் பொதுவானவை. இங்கே, ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் படிப்படியாகத் தோன்றும், அதே சமயம் பக்கவாதத்தால் ஏற்படும் அறிகுறிகள் திடீரென்று ஏற்படும். பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலியின் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு: ● முக உணர்வின்மை ● கடுமையான தலைவலி ● மயக்கம் சில அறிகுறிகள் ஒரு நிலையில் தோன்றும் ஆனால் மற்றொன்றில் இல்லை. ஒற்றைத் தலைவலியின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்: ● குமட்டல் மற்றும் வாந்தி. ● ஒளியின் ஃப்ளாஷ்கள் மற்றும் ஜிக்ஜாக் கோடுகள் போன்ற காட்சி தொந்தரவுகள். ● ஒலி, தொடுதல், ஒளி மற்றும் வாசனைக்கு அதிக உணர்திறன். ● கூச்ச உணர்வு. பக்கவாதத்தின் அறிகுறிகள்: ● தளர்ந்த புன்னகை ● முகம் தொங்குதல் ● தெளிவற்ற பேச்சு ● பேச்சை புரிந்து கொள்ள இயலாமை. ● திடீர் குழப்பம் ● பார்வையில் திடீர் குறைபாடு. ● சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு இழப்பு. நான் எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்? உங்கள் தலைவலி என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் மற்றும் உங்களுக்கு பக்கவாதம் இருக்கலாம் என்று உங்களுக்குச் சிறிதளவு சந்தேகம் இருந்தால், பக்கவாதத்தை நிராகரிக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. ஆரம்பகால சிகிச்சையானது உங்கள் உயிரைக் காப்பாற்றும் மற்றும் மூளை பாதிப்பைக் குறைக்கும். பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? ஒற்றைத் தலைவலி ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள் தெரியவில்லை. இருப்பினும், ஒற்றைத் தலைவலியின் வளர்ச்சியில் மரபணு மற்றும் சுற்றுச்சூழல் பங்கை ஆய்வுகள் நிறுவியுள்ளன. மூளையின் இரசாயனங்களின் அசாதாரண அதிகரிப்பு வீக்கத்தை ஏற்படுத்தும் போது ஒற்றைத் தலைவலி ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்த வீக்கம் இரத்த நாளங்கள் வீங்கி, நரம்புகளில் அழுத்தி, ஒற்றைத் தலைவலி அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. பக்கவாதம் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்: ● தடுக்கப்பட்ட தமனி: இரத்தக் கட்டிகள், கொழுப்பு படிவுகள் அல்லது பிற குப்பைகள் உங்கள் மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளைத் தடுக்கும் போது, அவை சுருங்குகின்றன. இது உங்கள் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கடுமையாக குறைக்கிறது, இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது. ● சிதைந்த இரத்த நாளங்கள்: உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள், அனியூரிசிம்கள், அதிர்ச்சி போன்ற சில காரணிகள் உங்கள் இரத்த நாளங்களை உடைத்து கசிவை ஏற்படுத்தலாம். மூளையில் ஏற்படும் இந்த உள் இரத்தப்போக்கு பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது? ஒற்றைத் தலைவலி ஒற்றைத் தலைவலியை முழுமையாக குணப்படுத்த முடியாது. உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை நிர்வகிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம். சில சிகிச்சை விருப்பங்கள் பின்வருமாறு: ● OTC மருந்து: வலி நிவாரணிகள் மற்றும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்கும். ● தடுப்பு மருந்துகள்: வலிப்பு எதிர்ப்பு மருந்துகள், பீட்டா-தடுப்பான்கள், ஆண்டிடிரஸண்ட்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்கள் மற்றும் ஹார்மோன் சிகிச்சை (தங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது ஒற்றைத் தலைவலி உள்ள பெண்களில்) தாக்குதலைத் தடுப்பதற்கான மருந்துகளில் இதில் அடங்கும். ● வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஒற்றைத் தலைவலி ஆபத்து காரணிகள் மற்றும் தூண்டுதல்களைத் தவிர்ப்பது அறிகுறிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை குறைக்கும். காஃபின் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும். மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தவும். ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். பக்கவாதம் பக்கவாதத்திற்கான சிகிச்சையானது பக்கவாதத்தின் வகையைப் பொறுத்தது. ● இஸ்கிமிக் ஸ்ட்ரோக்: இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கிற்கான மிகவும் பொதுவான சிகிச்சையானது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதாகும். அல்டெப்ளேஸ் எனப்படும் ‘க்ளாட் பஸ்டர்’ மருந்து குணமடைய சிறந்த வாய்ப்பாகும் மற்றும் அறிகுறிகள் தோன்றிய 3 முதல் 4 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும். ● ரத்தக்கசிவு பக்கவாதம்: இந்த வகை பக்கவாதத்திற்கான சிகிச்சையானது, நோயாளியின் இரத்தத்தை மெலிக்கும் மற்றும் இரத்தக் கசிவை நிறுத்த பிளேட்லெட் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வதாகும். உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், அனீரிசம் கிளிப்பிங், தமனி குறைபாடு மற்றும் சுருள் எம்போலைசேஷன் ஆகியவற்றிற்கான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பக்கவாதம் மற்றும் ஒற்றைத் தலைவலியின் தூண்டுதல்கள் யாவை? ஒற்றைத் தலைவலி சில காரணிகள் கட்டுப்படுத்தப்படலாம், மற்றவை தவிர்க்க முடியாதவை. ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்க, முடிந்தவரை பின்வரும் தூண்டுதல்களில் எச்சரிக்கையாக இருங்கள்: ● மது மற்றும் காஃபின் போன்ற பானங்கள். ● மன அழுத்தம் ● பிரகாசமான விளக்குகள், சூரிய ஒளி, புகை, உரத்த ஒலிகள், கடுமையான வாசனை போன்ற உணர்வு தூண்டுதல்கள். ● தீவிர உடல் உழைப்பு ● நிலையான வானிலை மாற்றங்கள் ● வாய்வழி கருத்தடை மற்றும் வாசோடைலேட்டர்கள் போன்ற மருந்துகள். ● பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில். ● ஜெட் லேக், தூக்கமின்மை மற்றும் அதிக தூக்கம் போன்ற தூக்க மாற்றங்கள். ● இனிப்புகள் மற்றும் பாதுகாப்பற்ற உணவு நுகர்வுகள். பக்கவாதம் பக்கவாதத்தின் சில தூண்டுதல்கள்: ● உயர் இரத்த அழுத்தம் ● ஹைப்பர்லிபிடெமியா ● புகைபிடித்தல் மற்றும் புகையிலை ● சர்க்கரை நோய் ● உடல் பருமன் ● உடற்பயிற்சி இல்லாமை ● மது அருந்துதல் ● தூக்கத்தில் தடை ஏற்படுத்தக்கூடிய மூச்சுத்திணறல் ● கோகோயின் போன்ற போதைப் பொருட்கள் கோவிட்-19க்கும் பக்கவாதத்துக்கும் தொடர்பு உள்ளதா? ஒரு சில ஆரம்ப ஆய்வுகள் கோவிட்-19க்கும் பக்கவாதத்துக்கும் இடையிலான உறவை நிறுவியுள்ளன. கோவிட்-19 நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறிப்பாக இஸ்கிமிக் வகை. கோவிட்-19 பரவல் உள்ள பல பகுதிகள் கிரிப்டோஜெனிக் பக்கவாதம் (பக்கவாதத்திற்கான பொதுவான காரணமில்லாதவர்கள்) அதிகரித்த நிகழ்வுகளைப் புகாரளித்துள்ளன. முடிவுரை ஒற்றைத் தலைவலி மற்றும் பக்கவாதம் எவ்வாறு தொடர்புடையது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒன்று மற்றொன்றால் பாதிக்கப்படுவதன் விளைவாக இது போன்ற நிலை உருவாகும் அபாயங்கள் உள்ளன. பொதுவாக பக்கவாதம், ஒளி உட்பட எதிர்கால ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) 1. பக்கவாதத்தின் வகைகள் யாவை? பக்கவாதம் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: ● நிலையற்ற இஸ்கிமிக்: இந்த வகை பக்கவாதம் உண்மையான பக்கவாதத்தின் குறுகிய காலப் பதிப்பாகும். இது லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளது மற்றும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இது பொதுவாக ஒரு உண்மையான பக்கவாதத்திற்கு முன்னதாக இருக்கும். ● இஸ்கிமிக்: இந்த வகை மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனியில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகிறது. ● ரத்தக்கசிவு: இந்த வகை மூளையின் உள் இரத்தப்போக்கினால் வகைப்படுத்தப்படுகிறது. 2. பக்கவாதத்தால் ஏற்படும் சிக்கல்கள் என்ன? பக்கவாதத்தின் சிக்கல்கள் பின்வருமாறு: ● பக்கவாதம் மற்றும் தசை இயக்கம் இழப்பு ● மந்தமான அல்லது முணுமுணுத்த பேச்சு ● நினைவாற்றல் இழப்பு மற்றும் குழப்பம். ● உணர்ச்சி மற்றும் மனநலப் பிரச்சனைகள் ● நடத்தையில் மாற்றம் https://healthlibrary.askapollo.com/tamil/migraine-stroke-is-there-a-link/
  6. தசைநார் சிதைவுக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை கண்ணோட்டம் தசைநார் சிதைவு என்பது பரம்பரை நோய்களின் குழுவைக் குறிக்கிறது, இது காலப்போக்கில் உங்கள் தசைகளை சேதப்படுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும். அவை தசை வெகுஜன இழப்பு மற்றும் சாதாரண தசை செயல்பாட்டிற்குத் தேவையான டிஸ்ட்ரோபின் புரதத்தின் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன. இதில் பிறழ்வுகள் நடைபெறுகின்றன மற்றும் அசாதாரண மரபணுக்கள் ஆரோக்கியமான தசைகளை உருவாக்க மற்றும் பராமரிக்க தேவையான புரதங்களின் இயல்பான உற்பத்தியில் தலையிடுகின்றன. இது எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தை பருவத்தில் கண்டறியப்படுகிறது. தசைநார் சிதைவு என்பது ஒரு அரிய மருத்துவ நிலை. எனவே, இந்த முற்போக்கான தசை பலவீனம் நோயைப் பற்றி நாம் மேலும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். தசைநார் சிதைவு என்றால் என்ன? தசைநார் சிதைவு என்பது தசை வெகுஜனத்தின் முற்போக்கான இழப்பைத் தொடர்ந்து வலிமை இழப்பை ஏற்படுத்தும் கோளாறுகளின் குழுவைக் குறிக்கிறது. முப்பது வெவ்வேறு வகையான தசைநார் சிதைவுகள் உள்ளன. மிகவும் பொதுவான வகை டுச்சேன் தசைநார் சிதைவு ஆகும், இது பொதுவாக சிறுவர்களை பாதிக்கிறது. இந்த மருத்துவ நிலை டிஸ்ட்ரோபின் எனப்படும் புரதம் இல்லாததால் நடைபயிற்சி, விழுங்குதல் மற்றும் தசை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த புரதம் உங்கள் உடலில் உள்ள தசைகளை கட்டியெழுப்புவதற்கும் சரிசெய்வதற்கும் அவசியம். இந்த நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை, ஆனால் இதற்கான சிகிச்சைகள் அறிகுறிகளை மீட்டெடுக்கவும் நோயின் வேகத்தை குறைக்கவும் உதவுகின்றன. தசைநார் சிதைவின் அறிகுறிகள் 30 க்கும் மேற்பட்ட வகையான தசைநார் சிதைவுகள் உள்ளன, இவை அனைத்தும் அவற்றின் அறிகுறிகள் மற்றும் தீவிரத்தன்மையில் வேறுபடுகின்றன. நோயறிதலுக்கு, ஒன்பது வெவ்வேறு பிரிவுகள் குறிப்பிடப்படுகின்றன. இதன் குறிப்பிட்ட அறிகுறிகள் வெவ்வேறு வயதில், வெவ்வேறு தசைக் குழுக்களில், அதன் வகையைப் பொறுத்து தொடங்குகின்றன. பொதுவான வகைகளுக்கான பொதுவான அறிகுறிகள் இங்கே: டுச்சேன் வகை இது மிகவும் பொதுவான வடிவம். இது சிறுவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. ஓட்டம் மற்றும் குதிப்பதில் சிரமம், அடிக்கடி விழுதல், தள்ளாடும் நடை, பெரிய கன்று தசைகள், அமர்ந்த அல்லது உட்கார்ந்த நிலையில் இருந்து எழுவதில் சிரமம், தசை வலி, விறைப்பு மற்றும் கற்றல் குறைபாடுகள் போன்ற அடையாளங்களும் அறிகுறிகளும் அடங்கும். பெக்கர் வகை பெரும்பாலான அறிகுறிகள் டுசென் வகையைப் போலவே இருக்கின்றன, ஆனால் இவை மிகவும் லேசானவை. தசைப்பிடிப்பு, கால்விரல்களில் நடப்பது அல்லது எழுந்திருப்பதில் சிரமம் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். மயோடோனிக் வகை இது ஸ்டெய்னெர்ட் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. முகம் மற்றும் கழுத்து தசைகள் முதலில் பாதிக்கப்படுவதால் இது வகைப்படுத்தப்படுகிறது. முகத்தின் தசைகள் தொங்குதல், கண் இமைகள், பலவீனமான கழுத்து தசைகள், ஆரம்ப வழுக்கை, கண்புரை, எடை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். பிறவி வகை இந்த வகை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கிறது. இது பிறந்த உடனேயே அல்லது ஒரு நபரின் வாழ்க்கையின் முதல் 2 ஆண்டுகளில் நடக்கும். தசை பலவீனம், ஆதரவின்றி உட்காரவோ அல்லது நிற்கவோ இயலாமை, பேசும்போது, விழுங்கும்போது அல்லது பார்க்கும்போது சிரமம், மோசமான இயக்க கட்டுப்பாடு, ஸ்கோலியோசிஸ் (வளைந்த முதுகெலும்பு), கால் குறைபாடுகள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் அறிவுசார் குறைபாடு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஃபேசியோஸ்காபுலோஹுமரல் வகை இந்த வகை கோளாறுகளில், தசை பலவீனம் முகம் மற்றும் தோள்களில் தொடங்குகிறது. அத்தகைய நோயாளிகள் தங்கள் கைகளை உயர்த்தும்போது தோள்பட்டையில் பாதிப்பு ஏற்படலாம். சாய்ந்த தோள்கள், மெல்லுவதில் சிரமம் மற்றும் வாய் வளைந்த தோற்றம் ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும். மூட்டு-கச்சை வகை இந்த வகைகளில் முதலில் இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் பாதிக்கப்படுகின்றன. நாற்காலியில் இருந்து எழுவதில் சிரமம், படிக்கட்டுகளில் ஏறுதல், எளிதில் தடுமாறுதல், கனமான பொருட்களை எடுத்துச் செல்ல இயலாமை போன்றவை இதன் அறிகுறிகளாகும். தசைநார் சிதைவுக்கான காரணங்கள் மரபணு மாற்றங்களால் தசைநார் சிதைவு ஏற்படலாம் – குறிப்பாக எக்ஸ் குரோமோசோமில் ஏற்படும் பிறழ்வுகள். தசை நார்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் புரதத்தை ஒருங்கிணைக்க தேவையான குறிப்பிட்ட மரபணுக்கள் குறைபாடுடையவையாக இருக்கும். இப்போது, இந்த மரபணு மாற்றங்கள் பொதுவாக மரபுரிமையாக உள்ளன, ஆனால் சில தாயின் முட்டை அல்லது கருவில் இது தன்னிச்சையாக உருவாகலாம். ஒவ்வொரு வகையான தசைநார் சிதைவும் அந்த வகையான மரபணு மாற்றத்தின் காரணமாக ஏற்படுகிறது. இது இருபாலருக்கும் மற்றும் எல்லா வயதினருக்கும் ஏற்படலாம், ஆனால் டுச்சேன் வகை பெரும்பாலும் இளம் சிறுவர்களுக்கு ஏற்படுகிறது, பெக்கர் வகை 11 முதல் 25 வயதிற்குள் ஏற்படுகிறது, பிறவி வகை பிறக்கும் போது ஏற்படுகிறது, மயோடோனிக் வகை 20 முதல் 30 வயதிற்குள் நிகழ்கிறது, மற்றும் லாம்ப் கர்டில் வகையானது 20 வயது வரை மக்களை முடக்கலாம். தசைச் சிதைவின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து சந்தேகத்திற்கு இடமின்றி அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. தசைநார் சிதைவுக்கான சிகிச்சை தற்போது, இந்த நோய்க்கு முழுமையான சிகிச்சை எதுவும் இல்லை, இருப்பினும், மருந்துகள் மற்றும் பல்வேறு சிகிச்சைகள் முன்னேற்றத்தை மெதுவாக்க உதவுகின்றன மற்றும் நோயாளியை முடிந்தவரை செயலில் வைத்திருக்க முயற்சிக்கின்றன. பின்வரும் சிகிச்சைகள் இதில் அடங்கும்: மருந்துகள் கார்டிகோஸ்டீராய்டுகள் தசை வலிமையை அதிகரிக்கவும், முன்னேற்றத்தை குறைக்கவும் உதவுகின்றன. பீட்டா பிளாக்கர்ஸ் மற்றும் ஆஞ்சியோடென்சின்-மாற்றும் என்சைம் இன்ஹிபிட்டர்கள் இதயத்தை பாதித்தால் உதவுகிறது. Eteplirsen ஒரு ஊசி மருந்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது ஒரு குறிப்பிட்ட வகையான DMD மரபணு மாற்றத்திற்கு உதவுகிறது. வலிப்பு எதிர்ப்பு மருந்துகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மற்றும் கிரியேட்டின் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை பிற விருப்பங்கள் ஆகும். உடல் சிகிச்சை இது தசைகளை நெகிழ்வாகவும், செயலுடனும் வைத்திருக்க உதவும் பல்வேறு பயிற்சிகள் மற்றும் நீட்சி இயக்கங்களைப் பயன்படுத்துகிறது. நடைபயிற்சி மற்றும் நீச்சல் போன்ற குறைந்த தாக்க பயிற்சிகளும் உதவும். தொழில் சிகிச்சை இது குழந்தைகளுக்கு அவர்களின் தசைகள் செய்யக்கூடிய திறனைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறது. சிகிச்சையாளர்கள் சக்கர நாற்காலிகள், பிரேஸ்கள், கைப்பிடிகள் அல்லது நடைபயிற்சிக்கு உதவும் கம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அன்றாட வாழ்வில் இவை எவ்வாறு உதவுகின்றன என்பதும் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. பேச்சு சிகிச்சை இந்த பயிற்சிகள் நோயாளிகள் முன்பை விட எளிதாக பேசவும், பலவீனமான தொண்டை அல்லது முக தசைகளை சமாளிக்கவும் உதவுகின்றன. சுவாச சிகிச்சை மூச்சுத் திணறல் ஏற்பட்டால் நோயாளிக்கு இது உதவும். அவர்/அவள் சுவாசிக்க எளிதான வழிகளைக் கற்றுக்கொள்வார், மேலும் வென்டிலேட்டர் போன்ற பிற சாதனங்களைப் பயன்படுத்துவார். அறுவை சிகிச்சை இறுதியாக, இதயப் பிரச்சனைகள், விழுங்குவதில் சிரமம், ஸ்கோலியோசிஸ், கண்புரை போன்ற இந்த நோயின் பல்வேறு சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. தசைநார் சிதைவு தடுப்பு இந்த நோய் மரபணு மாற்றங்களை மையமாகக் கொண்டிருப்பதால், இது தற்செயலாக அல்லது குடும்ப வரலாறு காரணமாக நிகழலாம், தசைநார் சிதைவைத் தடுக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ எந்த வழியும் இல்லை. இருப்பினும், சரியான ஆலோசனை, சிகிச்சைகள் மற்றும் அன்புக்குரியவர்களின் ஆதரவுடன், ஒருவர் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறலாம் மற்றும் நோயின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தலாம். எனவே, ஒரு MD நோயாளி ஆரோக்கியமான, நன்கு சமநிலையான உணவை உண்ணுதல், சுறுசுறுப்பாக இருத்தல், போதுமான தூக்கம் மற்றும் சரியான உதவி சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். முடிவுரை தசைநார் சிதைவு என்பது வெவ்வேறு நபர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் ஒரு கோளாறு. இந்த நோய் வெவ்வேறு நபர்களில் வெவ்வேறு வேகத்தில் முன்னேறும். எனவே, உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ எந்த வகையான தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளதோ அதைப் பற்றி முழுமையாக விவாதித்து, அனைத்தையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். சுகாதார நிபுணர்களுடன் சேர்ந்து, சிறந்த சிகிச்சைத் திட்டத்தை நீங்கள் தீர்மானிக்கலாம். சிகிச்சை முறைகள் முன்னேறி வருவதால், அத்தகைய நோயாளிகளின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். https://healthlibrary.askapollo.com/tamil/causes-and-treatment-for-muscular-dystrophy/
  7. இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டிற்கு 340,000 யூரோக்களுக்கு மேல் செலவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டிசம்பர் மாதத்தில் சுனக்கின் லாட்வியா மற்றும் எஸ்டோனியா பயணத்திற்கு 62,498 யூரோ பயணச் செலவு ஏற்பட்டுள்ளது. மக்கள் தங்களின் சொந்த கட்டணத்தையே செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில், வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/247481
  8. சிக்சரை தடுக்கும் முயற்சியில் காயமடைந்த வீரர்! ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது. இப்போட்டியின் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சிக்சருக்கு சென்ற பந்தை கேட்க் பிடிக்க முயன்றபோது பலத்த காயமடைந்தார். பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய அவர் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை. வலியால் துடித்த அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர். பின்னர் அவர் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=172217
  9. பாடல்: நான் பிழை நீ மழலை பாடியவர்கள்; ஸாஸா திருப்பதி & ரவி.ஜி இசை: அனிருத் படம்: காத்துவாக்கில இரண்டு காதல் வரிகள்: விக்னேஸ் சிவன் ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை… பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே… அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே… ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்… நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ… அடி அழகா சிரிச்ச முகமே… நினைச்சா தோணும் இடமே… நான் பிறந்த தினமே… கெடச்ச வரமே… ஓ ஓ… ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை… ஆண் : ஹோ… ஓ ஓ ஓ… ஆண் : அவள் விழி மொழியை… படிக்கும் மாணவன் ஆனேன்… அவள் நடைமுறையை… ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ… பெண் : அவன் அருகினிலே… கணல் மேல் பனிதுளி ஆனேன்… அவன் அணுகயிலே… நீர் தொடும் தாமரை ஆனேன்… ஆண் : அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்… அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்… பெண் : ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே… அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே… ஆண் : அடி அழகா சிரிச்ச முகம்… நான் நினைச்சா தோணும் இடமே… ஏ ஏ… அடி அழகா சிரிச்ச முகமே… நினைச்சா தோணும் இடமே… நான் பிறந்த தினமே… கெடச்ச வரமே… ஓ ஓ ஓ… ஆண் : நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
  10. என்னுடைய சில நண்பர்கள் Folsom ல் இருக்கிறார்கள். அங்கே வந்து தங்கி விட்டு பிறகு லேக்குக்கு போறது சமரிலே.
  11. Wall Street jiurnal நிருபர் உளவாளியாக செயற்பட்டார் என கூறி அவரை Russia கைது செய்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா அமெரிக்கர்களை ரஸ்யாவில் இருந்து வெளியேறும்படி கூறுகிறது.
  12. டெல்லியில் மனிதனிருக்க முடியாத அளவுக்கு வளி மாசு. இவர் என்ன சொல்கிறார். இதனை தானே சொல்ல வருகிறார் எரிக்.
  13. தொடருங்கள் அண்ணா. வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.
  14. ஆகக்கூடியது ஒரு வருடம் சிறையில் போடப்படுவார் என ஒரு வழக்கறிஞர் கூறுகிறார். Michael Cohenன் வழக்கறிஞர் Lanny Davis கூறும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வரை ரம்ப் குற்றமற்றவர் என்கிறார். மற்றுமொரு வழக்கறிஞர் கூறும் போது ட்ரம்ப் அடுத்த கிழமையளவில் கைதாவர் என்கிறார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.