-
Posts
22123 -
Joined
-
Last visited
-
Days Won
63
இசைக்கலைஞன் last won the day on March 12 2017
இசைக்கலைஞன் had the most liked content!
Profile Information
-
Gender
Male
-
Location
கனடா
-
Interests
இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D
Recent Profile Visitors
இசைக்கலைஞன்'s Achievements
-
புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!
இசைக்கலைஞன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது. -
திராவிடம் எனும் பெயரை etymology படி ஆராய்ந்து போனால், தென்னகத்து பிராமணரை குறிக்கும் வட மொழிச் சொல் என்பதில் போய் முடியும். அதை ஏன் அரசியலில் கொண்டு வந்து ஆரிய எதிர்ப்பாக கட்டி எழுப்பினார்கள் என்று பார்த்தால். அதுவும் ஆதிக்க மனப்பான்மை என்பதில் வந்து முடியும். - தமிழரை பீரங்கி கொண்டு அடிமைப் படுத்தியது வெள்ளை இன ஆதிக்கம். - இந்தியம் என அடிமைப்படுத்தியது ஆரிய ஆதிக்கம். - திராவிடம் என அடிமைப்படுத்தியது வடுக ஆதிக்கம். That’s all your honour !
-
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
நன்றி விசுகு அண்ணா. நலமறிய ஆவல். நல்ல அரசியலுக்கான களம் ஐந்து வருடங்கள் பிற்போடப் பட்டுள்ளன என கருதுகிறேன். இந்தக் காணொளியில் 14:00 நிமிடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் தமிழ்நாட்டின் நிலை. முத்துக்குமார் இறந்தபோது விடுமுறை கிடைத்துவிட்டது என எண்ணும் நிலையில்தான் தமிழக இளைஞர்களில் பலர் இருந்துள்ளார்கள் (கார்த்திக் உட்பட). இன்றும் பலர் அவ்வாறே. -
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
எழுவர் விடுதலையை பற்றி சீமான் பேச ஆரம்பித்தது இவரை சிறையில் போடவும், அவர்களுடன் இவர் சிறையில் உரையாட ஆரம்பித்த பிறகும்தான். இது கடந்த பத்தாண்டுகளுக்குள் நடந்ததுதான். ஆதற்கு முன் இருபது ஆண்டுகளாக அவர்கள் சிறையில்தான் உள்ளார்கள். இயக்கங்கள் உள்ளரங்குக்குள் பேசானார்கள். மக்கள் வாழாவிருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை. எழுவர் விடுதலை குறித்து பேசினால் தமிழகத்தில் வாக்கு விழாது என்பதுதான் எதார்த்தமான நிலை. 2008 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருச்சியில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர், ராஜீவ் மரணம் மட்டும் நடக்கவில்லை என்றால் தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அமோகமாக இருக்கும் என்றார். ஆனால் 1986 இல் இருந்து திருச்சியில் பார்த்து வருகிறேன். புலிகளின் காணொளயை vcr இல் போடுவதாக இருந்தாலும் ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். அப்போது எம்ஜியார் ஆட்சி. இப்படியாகத்தான் கள நிலைமை இருந்துள்ளது. இது இவ்வாறு இருக்க, சீமான் தலையிடவில்லை என்றால், அந்த எழுவரும் விடுதலையாகி வாழ்க்கை நடத்துவார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் இறக்கும் வரையில் சிறையில் போட்டு வதைப்பார்கள் என்பதுதான் எனது அனுமானம். காரணம், வெளியே வந்தால் அவர்களை கட்டுப்படுத்தி வைக்க முடியாது. ஆனால் இந்த முனைப்புகளுக்கு எதிரான முனைப்பு என்பதுதானே அரசியல். -
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
எடப்பாடி, ஜெயா எல்லோருமேதான் பார்வை அனுமதி கொடுத்தார்கள். அரசியல்வாதிகள் தமக்கு சாதகம் என்றால் அனுமதி தருவார்கள். ஆனால், அதை பயன்படுத்திக்கொண்டு ஏழுபேர் விடுதலையை முன்னுக்கு கொண்டுவருவது நல்லதுதானே? அரசியல் என்பது “யார் எதை எப்போது எவ்வாறு பெறுகிறார்கள்” என்பதே. அதற்கேற்ப நடவடிக்கை மற்றும் எதிர் நடவடிக்கை செய்வதுதான் அரசியலின் இயங்குதளம். சீமானின் கையசைவுகள் பிரபலம் ஆகும் காரணம் என்பது, எதிராளிகளின் கடுமையான ஊடக பலம் மட்டுமே. உதாரணத்துக்கு கமல் நல்ல அசத்தலாக இருப்பார். ஆனால் சிந்தனையும் தனிப்பட்ட செயல்களும் அசிங்கமாக இருக்கும். ஸ்டாலின் அந்தக் காலத்தில் பெண்களை கடத்தியவராக இருந்தாலும், ஊடக பலத்தினால் இன்று “சிறந்த முதல்வர்”. இறக்கும்வரையில் ஜெயாவும் அவ்வாறே. சீமானுக்கு எதிராக கட்டமைக்கப்படும் விம்பங்கள் உடைந்துபோக காலம் செல்லலாம். பொறுத்திருந்து காண்போம். -
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
ஸ்டாலின் தமிழக முதல்வர். நரேந்திர மோடி இந்திய பிரதமர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (கோல்மால் நடந்தாலும் நடக்காவிட்டாலும் அதுதான் உண்மை. இவர்களை இந்திய குடிமக்கள் சந்திப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. சீமான் தமிழக முதல்வரை சந்தித்தாரே தவிர, திமுக தலைவரை அல்ல. -
தமிழக அரசியலில் வளர்ச்சி கண்டுள்ள நாம் தமிழருக்கு வாழ்த்துகள்..!
-
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நீங்கள் ஜெர்மனி போனதுக்கு பதிலாக மாத்தறையிலயே இருந்திருக்கலாம் தொழில் முனைவோருக்கும் (entrepreneurs), சட்டம் இயற்றுவோருக்கும் (lawmakers) வேறுபாடுகள் உண்டு. -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
வணக்கம் கிருபன். வந்தேறி முதலாளிகள் என நான் எதுவும் சொல்லவில்லையே?! தமிழ் தேசிய முதலாளிகள் என்பவர்கள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் எனும் பொருளில் காண வேண்டும். நாசகார திட்டங்களுக்கு அவர்கள் துணை போக மாட்டார்கள். எனது தமிழக கல்லூரி நண்பர் மாற்று மொழி பேசுபவர். கணினித்துறையில் டாட்டா TCS இல் நல்ல பொறுப்பில் உள்ளார். அவர் இன்று பகுதி நேர தொழிலாக இயற்கை ஆட்டுப்பண்ணை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றார். இப்போது காலம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பழைய கல்லூரி மாணவர்களை சந்தித்தபோது, யாரும் என் மீது வெறுப்பை உமிழவில்லை. நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்பது பலருக்கும் தெரியும். இணையத்திலும், கட்சி வட்டாரங்களிலும் மட்டுமே வெறுப்பை கக்குகின்றார்கள். காரணம் அரசியல் எனும் தொழில் பாதிக்கப்படுகிறது எனும் காரணம்தான். -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
/ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார்./ திருட்டு சாவிக்கு இணைய தளம் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வெளியே வரவேண்டும்! யாராவது கணித பாடத்தை வேண்டாம் என்பார்களா?! நாம் தமிழர் சொல்வது, தனித்திறன் கல்வியை. எனக்கு உயிரியல் துறையில் ஆர்வம் என்றால், அது குறித்த கல்விதான் முதன்மைப் பாடங்கள். கணிதம், வரலாறு, புவியியல் எல்லாம் துணைப்பாடங்கள். இதைத்தான் நாம் தமிழர் வலியுறுத்துகிறது. இதை தற்போதைய மிழக கல்வித் திட்டத்தில் இருந்து நோக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் ஒரு பிரிவு உண்டு. அதில் உயிரியலும், கணிதவியலும் முதன்மைப் பாடங்கள். தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியலுக்கும் விண்ணப்பிப்பார்கள்; மருத்துவத்துக்கும் விண்ணப்பிப்பார்கள். மருத்துவம் கிடைத்தால் பொறியியலை கைவிடுவார்கள். இதுபோன்ற அபத்தமான கல்வித் திட்டம் அங்கே உள்ளது. அதன் பொருட்டுதான் கல்விச் சீழ்திருத்தத்தை முன்மொழிகிறார்கள். இது கனடா போன்ற நாடுகளில் உள்ள திட்டம்தான். -
சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்
இசைக்கலைஞன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன். நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும். -
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேறியது!
இசைக்கலைஞன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
மிகவும் நல்லதொரு செய்தி. உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்..! -
இதே ரவீந்திரன் துரைசாமி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னம் கோடுத்த பேட்டியை கீழே இணைக்கிறேன். இதில் நாம் தமிழரை இவர் கணக்கில் கொள்ளவே இல்லை. இதுபோலவே, நம்மவர்களும் (சிலர்) வேலிக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதும், கேலி செய்வதுமாக உள்ளனர். விடுதலை அரசியலில் காலத்தை சரியாக கணிக்கத் தெரிய வேண்டும்! குதிரை லாயத்தை விட்டு ஓடிவிட்ட பின்னால் கதவைப் பூட்டுவதில் பயனில்லை!