-
Posts
31883 -
Joined
-
Days Won
143
கிருபன் last won the day on February 12
கிருபன் had the most liked content!
Contact Methods
-
Website URL
https://kirubans.blogspot.com/
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
முடிவிலி வளையம்
-
Interests
போஜனம், சயனம்
கிருபன்'s Achievements
-
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களில் இருந்தவேளை ஆட்டம் மழையால் தடைபட்டது. முடிவு: DLS முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.
-
பழங்குடிகளின் நிஜமான பிரச்சினையை பேசியதா விடுதலை! -சாவித்திரி கண்ணன் சமகாலத்தின் மையப் பிரச்சினையான பெரு நிறுவனங்களின் கனிம வளக் கொள்ளை, தீவிரவாதம், பழங்குடிகளுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சினிமா தான் விடுதலை. வெற்றி மாறன் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்? கதைக் களத்திற்கான தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு, காட்சிகளின் வழியே விரியும் சினிமா மொழி.. ஆகியவற்றில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கலையின் நோக்கம் தான் முக்கியமானது! படத்தின் ஆரம்பமே தமிழர் படை வைத்த வெடி குண்டால் ரயில் கவிழ்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதுவும் இந்தக் காட்சி தேவையின்றி மிக நீளமாக குற்றுயிரும் குலை உயிருமாக அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் வைத்த வெடி குண்டால் கொல்லப்பட்டதாக அழுத்தமாக நிறுவுகிறது. இதைத் தொடர்ந்த பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக எழுதுவதாக அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுகின்றனர். மிரட்டப்படுகின்றனர். உண்மையிலேயே அந்த தமிழர் படை என்பது எப்படி உருவானது. அந்த கனிம வளத்திற்கு எதிரான மக்களின் முதல் கட்ட சாத்வீக போராட்டம் எப்படி இருந்தது? பின்னர் அவர்கள் அரசை எதிர்க்கும் நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டனர்? என்ற விபரம் எதுவுமில்லை. மிக முக்கியமாக வரப் போகும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அரசின் அராஜக நடவடிக்கைகள் தான் மலைவாழ் மக்கள் மத்தியில் புரட்சியாளர்கள் உருவாவதற்கு வழி ஏற்படுத்துகிறது என்ற அடிப்படை புரிதலை இந்தப் படம் உருவாக்கத் தவறிவிட்டது. பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரக் கூடிய பெரும் தொழிற்சாலை மலை பிரதேசத்தில் நிறுவப்படும் போது அங்குள்ள இயற்கை வளமும், பழங்குடிகளின் வாழ்வாதாரமும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதைப் பற்றி படம் மக்களின் மொழியில் பேசவே இல்லை. பழங்குடிகளுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு, வரவுள்ள அந்த நிறுவனத்தால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள்..போன்ற எதையுமே இயக்குனர் காட்சிபடுத்தவில்லை. தமிழ் தீவிரவாதிகளுக்கும், காவல்துறைக்குமான சாகஸச் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தியதிலும், காவல்துறையின் கொடூரங்களையும் மிக நீண்ட நேரம் காட்சிப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை கதையின் நோக்கத்தில் காட்டத் தவறிவிட்டார் வெற்றிமாறன். அதுவும் காவல்துறையின் கொடூர அத்துமீறல்களை காட்டும் போது, இளகிய மனம் படைத்த யாருக்கும் அதை பார்க்கும் சக்தி இருக்காது என்பது திண்ணம். என்னைப் பொறுத்த வரை இந்தக் காட்சிகள் அளவுக்கு மீறி காட்டப்படும் போது, திரையரங்கில் இருந்து நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கூட நினைக்கத் தோன்றியது. தமிழகத்தில் தமிழரசன் போன்றோரால் நடத்தப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கம் கூட எந்த காலகட்டத்திலும் இத்தனை துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் கொண்டு செயல்படவில்லை. ‘போலீசாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வாத்தியார் விஜய் சேதுபதி மக்களுக்கு பாதுகாப்பு தந்தார் என்பதால் மக்கள் ஆதரவை பெற்றார்’ என ஒற்றைக் காரணம் போதுமானதல்ல! சூரியின் கதாபாத்திர வார்ப்பு உயிர்ப்பானது. மனித நேயமும், நேர்மையும் ஒருங்கே பெற்ற ஒரு இளைஞனின் பாத்திரத்தில் சூரி நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சாடிஸ்ட் மேலதிகாரியாக சேத்தன் பாத்திரமும் நிஜத்தில் பார்ப்பது போன்றே உள்ளது! அவருக்கும் மேலதிகாரியாக வரும் கெளவுதம் மேனன், தலைமை செயலாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தி போகின்றனர். விஜய் சேதுபதிக்கு போதுமான வாய்ப்பு தரப்படவில்லை. கிடைத்த வரையில் மிகச் சிறப்பாக தன் பங்களிப்பை தந்துள்ளார். கதாநாயகியாக வரும் பவானிஸ்ரீயும் இயல்பாக நடித்துள்ளார். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த சினிமா எடுக்கப்பட்டு உள்ளது. ஜெயமோகனுக்கு தமிழ் மற்றும் இடதுசாரி போராளி குழுக்களை குறித்த பார்வை உண்மைக்கு நேர் எதிரானது, நேர்மையற்றது என்பது அனைவரும் அறிந்ததே! அந்த சிறுகதையை நான் படித்ததில்லை. ஆனால், மலை கிராமங்களில் இயற்கைவளச் சுரண்டல் குறித்து சினிமா எடுக்க விரும்பி இருந்தால் வெற்றிமாறன் தேர்வு செய்திருக்க வேண்டியது ‘ஆற்றங்கரை ஓரம்’ என்ற நாவல் தான்! நர்மதை நதியில் மிகப் பெரிய அணை கட்டுவதற்காக அப்புறப்படுத்தப்படும் பழங்குடிகளின் வலிகளையும், அதற்காக பழங்குடிகளை இணைத்து மேதா பட்கர் நடத்திய போராட்டங்களையும் ரத்தமும், சதையுமாக எழுதி இருந்தார் வெ.இறையன்பு. இதற்காக ஒரு மாதகாலம் இறையன்பு அவர்களோடு தங்கி எழுதியதாக அறிந்தேன். இந்தியா முழுமையிலும் தற்போது பழங்குடி மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையை பேச முன்வந்துள்ளது இந்தச் சினிமா! யாரும் எடுக்கத் துணியாத கதைக் கருவை எடுத்தற்காக வெற்றி மாறனை பாராட்டலாம். ஆனால், சொல்ல வந்த கருத்தில் தெளிவோ, ஆழமோ இல்லை என்பது தான் கவலையளிக்கிறது. இரண்டாம் பாகத்தில் சொல்லப்படுமா.. பார்க்கலாம்! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/12945/vituthalai-verrimaran-soori/
-
புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை “பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பயணியை அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வெள்ளை வான் ஒன்றில் வந்த ஒரு குழு அவரை எதிர்கொண்டது. அந்தக் குழு ரமேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தி, அவருடைய கண்களைக் கட்டி, அந்த வானுக்குள் தள்ளியது – அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. அவரை ஒரு கைவிடப்பட்ட வீட்டுக்கு கடத்திச் சென்று, நான்கு நாட்கள் தடுத்துவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு வார காலத்துக்கு அவர் வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். “அந்த இடம் குறித்து என்னால் எந்தவொரு விடயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய சகோதரரின் பையும், சப்பாத்துக்களும் அங்கு சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன. அதன் காரணமாக, எனது சகோதரரும் என்னுடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை மட்டும் நான் தெரிந்து கொண்டேன்.” அடுத்த நாள் ரமேஷ்குமார் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், பல மாத காலம் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். “பயங்கரவாதத் தடைச் சட்டம் என அழைக்கப்படும் ஒரு விடயத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.” தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைப்பு என்பவற்றுக்கு இடமளிக்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டில் ஒரு தற்காலிக ஏற்பாடாக நிறைவேற்றப்பட்ட காலம் தொடக்கம் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும், விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த பிரஜைகளினதும் கரிசனைக்குரிய ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. அண்மையில் மாணவ செயற்பாட்டாளர் வசந்த முதலிகேயை எத்தகைய சாட்சிகளும் இல்லாத விதத்தில் கைதுசெய்து, ஆறு மாத காலம் தடுத்து வைப்பதற்கென பயன்படுத்தப்பட்ட இச்சட்டம் மீண்டும் மீண்டும் நியாயமற்ற தடுத்து வைப்புக்கள் மற்றும் நாட்டின் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தல் என்பவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற அறகலய போராட்டத்தை அடுத்து இத்தகைய செயல்கள் நிகழ்ந்துள்ளன. ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான 2022 மனித உரிமைகள் அறிக்கையின் பிரகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டம் குற்றம் சாட்டப்பட்டவரால் எந்தவொரு நேரத்திலும் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குமூலத்தையும் சாட்சியமாக ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றங்களுக்கு அனுமதியளிப்பதுடன், சித்திரவதை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் குற்ற வாக்குமூலங்கள் தொடர்பாக எத்தகைய விதிவிலக்குகளும் இருந்து வரவில்லை. பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது வழங்கப்படும் குற்ற வாக்குமூலங்களை நீதிமன்றங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கும் உறுப்புரையை நீக்காமல், சித்திரவதைக்கெதிரான பாதுகாப்பு தொடர்பான நீதித்துறை மேற்பார்வையை உள்வாங்குவற்கென மார்ச் 22ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தியமைத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும் என்றும், இறுதியில் அது முற்றாக நீக்கப்பட்டு, சர்வதேச தரநியமங்களுடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு சட்டவாக்கம் எடுத்துவரப்பட வேண்டும் என்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசு சாரா அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளன. குறிப்பாக, வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சித்திரவதை மற்றும் பொலிஸ் கொடூரம் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்களும், சிவில் சமூக அமைப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன. ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்கென அல்லது சாட்சியத்தைப் பெற்றுக் கொள்வதற்கென பொலிஸார் சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தி, சித்திரவதை செய்திருப்பது தொடர்பான பல அறிக்கைகள் கிடைத்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னைய வருடங்களைப் போலவே, சித்திரவதை, மோசமாக நடத்தப்பட்டமை, பலவந்தமாக வாக்குமூலங்கள் பெறப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகளையும், குடும்ப உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்து கைது செய்யப்பட்ட நபர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். இவ்வருடத்தின் போது பொலிஸாருக்கு எதிராக சுமார் 1200 முறைபாடுகள் கிடைத்திருப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு நவம்பர் 15ஆம் திகதி அறிவித்தது. தான் ஒருபோதும் வட பிரதேசத்துக்கு சென்றிருக்கவில்லை எனக் கூறும் ரமேஷ்குமார், இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டிருந்த பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்து விளக்குகிறார். “அவர்கள் எங்களை கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்துக்கும், கண்டி பொலிஸ் நிலையத்துக்கும் இடையில் நாளாந்தம் அழைத்துச் சென்றார்கள் என்ற விடயத்தை நான் பின்னர் தெரிந்து கொண்டேன் – ஒவ்வொரு இரவும் அவர்கள் எம்மை சித்திரவதை செய்தார்கள் “அவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை எமது தலைகளில் போட்டு மூடி, சிகரட்களை கொளுத்தி எமது முகங்களில் போடுவார்கள். அப்பொழுது அந்த ப்ளாஸ்டிக் பைகள் உருகி எமது தோல்களில் வடியும். அவர்கள் ஒரு முறை எனது அந்தரங்க உறுப்பை மிக கடுமையாக நசுக்கினார்கள். அதன் காரணமாக ஒரு வார காலம் நான் சிறுநீர் கழிக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டது.” அவருடைய கைது இடம்பெற்று இரண்டு மாதங்களின் பின்னர் கண்டியில் செயற்பட்டு வரும் ஓர் அரசு சாரா அமைப்பான மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் அருட் தந்தை நந்தன மனதுங்க, ரமேஷ்குமாரின் விவகாரத்தில் தலையிட்டதுடன், இறுதியில் அவருடைய குடும்பத்தினர் ராமேஷ்குமாரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் பதினான்கு நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், வழக்கறிஞரின் பிரதிநிதித்துவம் இல்லாத விதத்தில் அவ்விதம் ஆஜர்படுத்தப்பட்டார். “என்னை தடுத்து வைத்திருந்த ஐந்து வருட காலப் பிரிவில் ஒரு சட்டத்தரணியை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. எம்மை சந்தித்த அனைவரிடமும் நாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றோம் என்ற விடயத்தை கூறினோம். ஆனால், எமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக சிறைக்கூட அறைச் சுவர்களில் தனது தலையை மோதியதை ரமேஷ்குமார் நினைவு கூருகிறார். அவருடைய கைதின் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இறுதியாக ரமேஷ்குமாரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டதுடன், அதன் விளைவாக உயர் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு கட்டளையிட்டது. ஆனால், தான் அனுபவித்து வரும் இந்தத் துன்பம் முடிவுக்கு வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேயே இவ்விதம் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவர் கூறுகிறார். ரமேஷ்குமாரின் கைது மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்பன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் எனக் கூறப்பட்ட ஒரு முகாமுக்குள் இருந்த அவருடைய புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். அவை அவர் தென்னிந்தியாவுக்கு சபரிமலை யாத்திரை சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என ரமேஷ்குமார் உறுதிப்படுத்துகிறார். சபரிமலை உலகின் மிகப் பெரும் யாத்திரை தலங்களில் ஒன்றாக இருந்து வருவதுடன், வருடாந்தம் சுமார் 10 – 15 மில்லியன் ஆண் யாத்திரிகர்கள் அங்கு செல்கிறார்கள். “சம்பிரதாயங்களின் பிரகாரம் அந்த யாத்திரையின் போது நாங்கள் கறுப்பு ஆடைகளையே அணிகிறோம். அந்த யாத்திரைத் தலத்தில் இத்தகைய ஆடைகளுடன் எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படமே எனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார் அவர். அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பொழுது பயங்கரவாத செயல்கள் தொடர்பான குற்ற வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கென அப்புகைப்படங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. ரமேஷ்குமார் உயர் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அருட் தந்தை நந்தன உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவொன்றின் கீழ் இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றார். அதன் விளைவாக இரண்டு வருடங்களின் பின்னர் ரமேஷ்குமார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்தக் கைது மற்றும் சித்திரவதை என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற வைக்கப்படவில்லை; எச்சரிக்கப்படவுமில்லை. அவர்களில் சிலர் இப்பொழுது ஓய்வு பெற்று, வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். நான் இன்னமும் எனது முச்சக்கர வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ரமேஷ்குமார். அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும் ரமேஷ்குமாரின் சகோதரர் கைது செய்யப்பட்ட பொழுது, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற செய்யப்பட்டார். “நாங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்த பொழுது எதிர்கொண்ட கடும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பு என்பன அவரை வாய் பேச முடியாதவராக ஆக்கியுள்ளன” என ரமேஷ்குமார் கூறுகிறார். அவரால் இப்பொழுது எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது. குடும்பத்தினர் அவரை பராமரித்து வருகிறார்கள். புவனக எஸ் பெரேரா From Pilgrim to Terrorist என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம். https://maatram.org/?p=10776
-
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்! Vhg ஏப்ரல் 01, 2023 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் வன்புணர்வுகையும் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார். ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்துக்கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் வவுனியா காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர். குறித்த மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.battinatham.com/2023/04/10.html
-
மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!
கிருபன் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
தந்தையை சரமாரியமாக வெட்டிக் கொன்ற பிள்ளைகள் – யாழில் பயங்கரம்! 10 மணித்தியாலங்களில் கொலையாளிகள் கைது யாழ் – தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது. கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர். தந்தையார் வீட்டுக்கு செல்வது குறைவு என்றும் தெரிய வருகிறது. இன்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த தீவிர விசாரணையிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என காவல்துறையினர் வினவியபோது, நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தம்மை அழைத்துச் சென்றதாகவும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு அண்மையாக வந்ததும், தம்மை வாளால் வெட்டியதாகவும், தாம் தப்பியோடி விட்டதாகவும், தந்தையை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர். இது பற்றி ஏன் காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காலையில் காவல்துறையினர் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். தம்பியாரை காவல்துறையினர் விசாரித்ததில் கொலை மர்மம் துலங்கியது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் தானும், சகோதரனும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார். வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள குடிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக குடிலுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர். 19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட, தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதன்போது தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும் போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இருவரும் அவரை கழுத்து, முகம், நெஞ்சு, கையில் சரமாரியமாக வெட்டிக் கொன்றுள்ளனர். தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரைக் கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர்கள். கொடிகாமம் காவல்துறையினர் 4 மணித்தியாலங்களிற்குள் இந்தக் கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர். காலையில் 5 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் கொலை மர்மத்தை துலக்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் இரண்டை கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து இன்று மாலை நீண்ட தேடுதலுக்குபின் இரத்த கறைகளுடன் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=242306 -
400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம். உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்து உள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன என கூறியுள்ளார். கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என்று அவர் கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=242339
-
நான் துறவி அல்ல, காதலன்! KaviApr 01, 2023 11:31AM ஷேர் செய்ய : சத்குரு படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள். “நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!” என்று அண்மையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார். “நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!” என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்து கொள்ளாத மாணவர்களைப் பார்த்து, “காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள், காதல் வந்தால் கவிதையும் தானே வரும்” என்பார். ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜுன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள். “நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்” என்றேன். குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுப்பூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின்மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப் பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது. எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்து கொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே… தூக்கம்தான் வருகிறது. இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப் போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர்கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு? கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது. காதலை ஆங்கிலத்தில் அழகாக ‘Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும். சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகிவிடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மைவிட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல். கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம். புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். “அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்… “சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப் போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது. எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மையான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்… வேதனையில் அல்லாடுகிறீர்கள்!” உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல… குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம். வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள். காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல் கொள்ளலாம். காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்சனை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல் கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்? https://minnambalam.com/featured-article/sadhguru-on-saint-and-lovers/
-
ஐபிஎல் 2023: முதல் போட்டியில் சறுக்கிய சிஎஸ்கே! Apr 01, 2023 07:38AM IST ஷேர் செய்ய : குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 16வது ஐபிஎல் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) இரவு கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணி வலுவான பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்வாட் அரைசதம் அடித்து தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கெய்க்வாட்டை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சுமாரான ரன்களில் ஆட்டமிழந்தனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ஆட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8வது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிர்ச்சி கொடுத்தார். 20 ஓவர் இறுதியில் சிஎஸ்கே 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார். தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் அணியின் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 63 ரன்களை எடுத்திருந்தார். அதிகப்படியான விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடி வந்த குஜராத் அணி 19.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால் முதல் போட்டியிலேயே சிஎஸ்கே தோல்வியடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஐபிஎல் தொடரின் 2வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மாலை 3.30 மணிக்கு மேகாலயாவில் தொடங்கும் முதல் போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மற்றும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதவுள்ளன. மோனிஷா https://minnambalam.com/sports/ipl-2023-chennai-super-kings-vs-gujarat-titans/
-
விடுதலை பாகம் 1 – விமர்சனம்! KaviApr 01, 2023 11:33AM ஷேர் செய்ய : கமர்ஷியல் திரைப்படங்கள் தரும் நட்சத்திர நாயகர்கள் எவ்வாறு ஆராதிக்கப்படுகிறார்களோ, அதற்கிணையான பாராட்டுகளை இயக்குனர்களும் அள்ளுவது காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அப்படியொரு வரவேற்புக்குரிய இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார் வெற்றிமாறன். அவர் இயக்கியுள்ள ‘விடுதலை பாகம் 1’ பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பிற்குத் தக்கவாறு ‘விடுதலை பாகம் 1’ அமைந்திருக்கிறதா? படம் பார்த்து வெளியே வரும்போது, இக்கேள்விக்கு மாறுபட்ட பதிலொன்றைத் தர முடிகிறது. பிளாஷ்பேக் சம்பவங்கள்! அருமபுரி மாவட்டத்திற்கு மாற்றலாகிச் செல்கிறார் போலீஸ் கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி). அங்கு அமையவிருக்கும் சுரங்க முதலீட்டுக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் மக்கள் படையைச் சேர்ந்த தலைவர்கள்; அவர்களைப் பிடிப்பதற்காக, ஒரு தனிப்படை முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொறுப்பாளராக போலீஸ் அதிகாரி ராகவேந்தர் (சேத்தன்) உள்ளார். தான் சொல்வதை மட்டுமே முகாமில் இருக்கும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கும் மனிதர் அவர். அவரது ஜீப் ஓட்டுநராக நியமிக்கப்படுகிறார் குமரேசன்.ஆனால், வந்த முதல் நாளே அதிகாரியின் உத்தரவை மீறி உடல்நலமில்லாத ஒரு மூதாட்டியை ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறார் குமரேசன். அது ராகவேந்தரை ஆத்திரப்படுத்துகிறது. அதனால், வாரம் முழுக்க இரவு பகலாகப் பல்வேறு வேலைகளைச் செய்யும் கொடுமைக்கு ஆளாகிறார். அது, அந்த மூதாட்டியின் பேத்தியான தமிழரசிக்குத் (பவானிஸ்ரீ) தெரிய வருகிறது. நாள்பட தமிழரசிக்கும் குமரேசனுக்கும் இடையே ஒரு நட்பு மலர்கிறது; மெல்ல காதலாக மாறுகிறது. அருமபுரி மலைப்பகுதிகளில் சுரங்கம் அமைக்கும் பணி தொடர்பாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. அந்தச் சூழலில், மக்கள் படையினரால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மெனக்கெடுகிறது காவல் துறை. அப்போது, அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரது உறவினர்கள் முகாமின் அருகிலுள்ள கிராமத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. தமிழரசியின் உறவினரும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்தச் சூழலில், மக்கள் படையின் தலைவர் பெருமாள் எனும் வாத்தியாரை (விஜய் சேதுபதி) தான் பார்த்ததாக ரைட்டர் சந்திரனிடம் சொல்கிறார் குமரேசன். அவர் மட்டுமல்ல, யாரும் அதனைக் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லாமல்போய், அதனால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் பதைபதைக்கும்போது, தமிழரசியின் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் முகாமுக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆண்களும் பெண்களும் தொடர் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். பெண்கள் நிர்வாணப் படுத்தப்படுகின்றனர். அந்த அவமானம் தமிழரசிக்கு நிகழ்ந்துவிடக் கூடாது எனும் நினைப்பில், பெருமாள் இருக்குமிடத்தைத் தன் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க ஓடுகிறார் குமரேசன். அவர் சொல் அம்பலம் ஏறியதா இல்லையா? பெருமாள் பிடிபட்டாரா என்பதோடு படம் நிறைவடைகிறது. இந்த படத்தின் ஒவ்வொரு பிரேமையும் புட்டு புட்டு வைத்தாலும், படத்தைப் பார்க்க அமர்ந்தால் தன்னை மறந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு, திரையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறது வெற்றி மாறன் குழு. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்வது போல திரைக்கதை வடிவமைக்கப்படிருப்பதால், பிளாஷ்பேக் சம்பவங்களாகவே மொத்த படமும் நகர்கிறது. அரியலூர் ரயில் பாலம் தகர்ப்பு, வாச்சாத்தி கொடுமை உட்படத் தமிழ்நாட்டு சமூக அரசியல் பரப்பில் கிளர்ச்சியை உண்டாக்கிய பல விஷயங்கள் திரைக்கதையில் செருகப்பட்டிருக்கின்றன. பரோட்டா முதல் போலீஸ் வரை! எத்தனையோ படங்களில் துணைநடிகராகத் தலைகாட்டியிருந்தாலும், ‘வெண்ணிலா கபடிக் குழு’வில் வரும் பரோட்டா சூரியாகத்தான் ரசிகர்கள் பலருக்கும் அவர் அறிமுகம். அப்படிப்பட்டவர் முழுக்கவே சீரியசான பாத்திரமொன்றில் நடிக்கும்போது, நிச்சயம் சிரிப்பு வந்துவிடக் கூடாது. அதற்கேற்றவாறு குமரேசன் பாத்திரத்தைத் தந்திருக்கிறார் வெற்றி மாறன். இத்தனைக்கும் காதல் காட்சிகளில் ‘சுப்பிரமணியபுரம்’ ஜெய் போல தன் பற்கள் தெரியச் சிரிக்கிறார் சூரி; ஆனால், நமக்கு கொஞ்சம் கூட கிண்டலடிக்கத் தோன்றுவதில்லை. காரணம், கனமான கதைக்களம். நிச்சயமாக, ஒரு நாயகனாக அறிமுகமாகச் சிறப்பான படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் சூரி. தனிப்படை முகாமில் கடைசி நபராகக் கருதப்படும் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரைக் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்க முயல்வதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம் என்றே சொல்லலாம். விஜய் சேதுபதிக்குக் காட்சிகள் குறைவென்றாலும், ‘விக்ரம்’ பாணியில் அனைவருமே அவரது பாத்திரம் பற்றியே படம் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, ஐம்பதுகளை தாண்டிய ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றும்போதும் நம்மையும் அறியாமல் ஒரு சூப்பர் ஹீரோ’ போல கொண்டாடத் தோன்றுகிறது. இவர்கள் இருவரையும் தவிர்த்து தமிழரசியாக வரும் பவானிஸ்ரீ, அவரது பாட்டியாக வரும் அகவம்மா, தனிப்படை முகாம் அதிகாரியாக வரும் சேத்தன், தலைமைச்செயலாளர் சுப்பிரமணியமாக வரும் ராஜீவ் மேனன், புதிய அதிகாரியாக இடம்பிடிக்கும் கவுதம் மேனன், அமைச்சராக வரும் இளவரசு, மூணார் ரவி என்று பலரும் நம் மனதில் இடம்பிடிக்கின்றனர். இவர்கள் தவிர்த்துப் பலர் இப்படத்தில் முகம் காட்டியிருந்தாலும் ரைட்டர் சந்திரன் ஆக வருபவர் நம் கவனம் கவர்கிறார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கியத்துவம் என்று எதிர்பார்க்கலாம். ‘விடுதலை’யின் முக்கிய பலம், மலைப்பாங்கான பிரதேசத்தை முதன்மைப்படுத்தும் கதைக்களம். அதனைக் கொஞ்சம் கூட அழகுறக் காட்டிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதனாலேயே, அழகழகான இடங்கள் கூடக் காட்சிகளின் கனத்தினால் நம் எண்ணவோட்டத்தில் இருந்து விலகி நிற்கின்றன. அதேபோல, கண்கள் பதறும் அளவுக்கு குறைந்த நொடிகள் ஓடும் ஒரு ஷாட்டை கூடக் காண்பித்துவிடக் கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சியிலும் அதனைப் பின்பற்றியிருப்பது அருமை. போலவே பீட்டர் ஹெய்ன், ஸ்டன் சிவா குழுவினரின் உழைப்பும் அபாரம்.‘காட்டு மல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் ஏற்கனவே பலரது பிளேலிஸ்டை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. அவை திரையில் இடம்பெறும்போது, எவரும் இருக்கையை விட்டு எழவில்லை. டைட்டில் இசையில் ‘ஜெர்க்’ ஆக வைத்தாலும், படம் முழுக்கப் பாவி நிற்கும் பின்னணி இசை நம் கவனத்திற்குப் புலப்படாதவாறு காட்சிகளோடு கரைந்திருப்பது இன்னொரு அதிசயம்.ஊட்டி, கொடைக்கானல் என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் சில பகுதிகளையே பார்த்த கண்களுக்கு, அடர்ந்த காடு இப்படித்தான் இருக்கும் என்று காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றி மாறன். பரீட்சார்த்தமாக அவர் படம்பிடித்தவை மட்டும் மிகச்சில இடங்களில் ஒட்டாமல் தனித்து தெரிகிறது. அவற்றைப் புறந்தள்ளினால் நமக்குக் கிடைப்பது ரத்தினம் போன்ற காட்சியாக்கம். அவற்றில் லாஜிக் மீறல்களைத் தேடினாலும் சுலபத்தில் கிடைப்பதாக இல்லை. வெற்றிமாறனின் தனித்துவம்! அருமபுரி என்ற பெயரைச் சொல்லும்போதே, இது எந்த பிரதேசத்தில் நிகழ்ந்த கதை என்பதை ஊகித்துவிட முடிகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்கள் சூப்பர்பாஸ், வாத்தியார் என்று உச்சரிப்பதெல்லாம் குறிப்பிட்ட தலைவரைச் சுட்டிக்காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன், பெருமாள் வாத்தியார் எனும் பாத்திரம் கூட நக்சல்பாரி கொள்கையை முன்னிறுத்திய ஒரு தலைவரின் சாயலில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அது போன்ற பல தகவல்களை திரையில் அழுத்தம் திருத்தமாகவோ, ஒருசார்பான பிரசாரத் தொனியிலோ வெற்றிமாறன் படமாக்கவில்லை. வெற்றிமாறனின் முந்தைய படங்கள் காவல்துறையின் அத்துமீறல்களைச் சொன்னது போலவே, இதில் தனிப்படையினரின் செயல்பாடுகள் விமர்சிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், மக்களுக்குச் சேவையாற்றும் எண்ணத்தோடு இருப்பவர்களும் கணிசம் என்று காட்டுகிறது திரைக்கதை. வெறுமனே நாயகனை மட்டுமே நல்லவன் என்ற வார்ப்பில் அடக்கவில்லை. பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் காட்ட பாதுகாப்பான கோணங்களைத் தேர்ந்தெடுக்காமல், முழுக்க நிர்வாணமாகப் படம்பிடித்து படத்தொகுப்பில் அப்பிம்பங்களை ‘மங்கலாக்கிய’ எபெக்டிலேயே திரையில் ஓட விடுகிறார். ஒரு கோரத்தை அழகாகக் காட்சிப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறை அதன் பின்னிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும். ஒரு திரைப்படத்தின் இயக்குனருக்கும் அது பொருந்தும். ஆனால், மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் ஒருவருக்கே சமநிலை வாய்க்கும். ஏதேனும் ஒருபக்கம் நில் எனும் எதிர்பார்ப்புக்கு மாறானது இது; கூட்டம் சேர்க்க வழிவகை செய்யாதது. ஆனால், அதனை முன்வைக்கும் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்திற்கு மக்கள் திரளாகக் குவியக் காரணம், அவரது தனித்துவமான படைப்பாக்கமே. அதுவே, நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு வெளியானபோதும் ’அடுத்த பாகம் எப்போது’ என்ற கேள்வியை அவரிடம் முன்வைக்கவும் தூண்டுகிறது. அந்த வகையில், இது ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறி வேறொரு உச்சத்தைத் தொட்ட படமாகவும் இருப்பது சிறப்பு. https://minnambalam.com/cinema/viduthalai-part-1-review-in-tamil-minnambalam-cinema-news/
-
8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்! Apr 01, 2023 13:16PM IST ஷேர் செய்ய : தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாகத் திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ”திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதேபோல் திமுக கொறடா கோவி செழியன், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்கள் நிறைய உள்ளன. மாவட்டத்தில் ஒரு இடத்திலிருந்து தலைநகர் நோக்கிச் செல்ல அதிக பயண நேரம் ஆகிறது. எனவே தங்கள் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று என்னிடத்திலும் முதலமைச்சரிடத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வகையில் மொத்தம் எட்டு மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் ஆர்டிஓ அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும், தாலுகா அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு உண்டான சட்டப்படியான தகுதிகள் அந்தப் பகுதிகளுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல் மாவட்டங்களை பிரிப்பதற்குத் தேவையான நிதி நிலை இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார். https://minnambalam.com/political-news/8-new-districts-in-tamilnadu-kkssr-ramachandiran/
-
வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்யா முயல்கிறது என்பதையும், ஆயுதங்களுக்கு ஈடாக உணவு பொருட்களை ரஷ்யா முடிவு செய்திருப்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான எந்தவொரு ஆயுத ஒப்பந்தமும் ஐ.நா பாதுகாப்பு பேரவை தீர்மானங்களை மீறக்கூடியது ஆகும். ஒப்பந்தத்தின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்றார். எனினும் இதுகுறித்து வடகொரியா மற்றும் ரஷ்யா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை https://thinakkural.lk/article/247420
-
நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம் Published By: Sethu 31 Mar, 2023 | 05:11 PM நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கையைக் கடைபிடித்த இந்நாடுகள், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நேட்டோவில் இணைவதற்கு தீர்மானித்தன. நேட்டோவின் 29 நாடுகள் சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்த நிலையில், துருக்கியும் ஹங்கேரியும் தயக்கம்காட்டி வந்தன. பின்லாந்தின் இணைவுக்கு ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் துருக்கியின் பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் ஏற்கெனவே இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இதன்படி, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கடைசி தடங்கல் நீக்கியுள்ளது. 'நேட்டோவின் 30 நாடுகளும் பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்துள்ளன. அவர்களின் நம்பிக்கைகக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என பின்லாந்து பிரதமர் சவ்லி நீனிஸ்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு ஹங்கேரியும் துருக்கியும் அங்கீகாரம் வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன. https://www.virakesari.lk/article/151856
-
ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம் Published By: Nanthini 01 Apr, 2023 | 11:11 AM (எஸ்.றொசேரியன் லெம்பேட்) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார். மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இந்த போராளி, தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார். 1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார். ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது. இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார். இவர் தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் மகனுக்கு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார். மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார். தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும். வாழ்வாதார உதவிகளை வழங்க விரும்பாவிடினும், தனது மகன் பார்வை பெறுவதற்கான சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளையாவது யாரேனும் வழங்க முன்வாருங்கள் என தமிழ் கீதன் கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/151879
-
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். R https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கேணல்-உட்பட-நான்கு-பேர்-அதிரடி-கைது/73-315084