-
Content Count
15,007 -
Joined
-
Last visited
-
Days Won
65
கிருபன் last won the day on December 23 2018
கிருபன் had the most liked content!
Community Reputation
2,829 நட்சத்திரம்About கிருபன்
-
Rank
வலைப்போக்கன்
Contact Methods
-
Website URL
http://
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
முடிவிலி வளையம்
-
Interests
போஜனம், சயனம்
Recent Profile Visitors
10,544 profile views
-
கூட்டுக் குற்றவாளிகள்!! பதிவேற்றிய காலம்: Feb 22, 2019 அரசியல்வாதிகளுக்கும் நாட்டில் உள்ள மோசமான குற்றவாளிக ளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றமை இலங்கை எத்தகைய கீழ்நிலைக்குச் சென்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்தியாவில் மாத்திரமே இத்தகைய நிலமை இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அது இங்கும் காணப்படுகின்றமையை எண்ணி வெட்கித் தலைகுனியவேண்டும். ஊடகங்கள் அனைத்தும் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவருமான மதுஷ் தொடர்பான செய்திகளைப் பரபரப்புடன் வெளியிட்டு வருகின்றன. இவரை நாட்டில் வைத்துக் கைது செய்வதற்கு அரசால் முடியவில்லை. அந்த அளவுக்கு பண பலமும் அரசியல் செல்வாக்கும் மிக்க ஒருவராக மகிந்த அணியைச் சேர்ந்த ஏராளமான அரசியல்வாதிகளுக்கும் அவருக்குமிடையிலான நெருங்கிய உறவு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன ஆகியோரை இதைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். மகிந்த அணியில் உள்ள காடைத்தனங்களுக்குப் பெயர்போன பலர் இதில் அடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக அவர்களிருவரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் அரசியல் குழப்பமொன்று ஏற்பட்டபோது நாடாளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியும் அங்குள்ள சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தும் அடாவடித்தனங்களில் இறங்கியவர்கள் இத்தகைய நபர்களேயென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது சபாநாயகரையும் தலைமை அமைச்சரையும் கொலை செய்வதற்குக்கூட இவர்கள் முயன்றார்களென வும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர்களிருவரும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்களைத் தம்மிடம் வைத்திருக்கும் அரச தலைவரால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நாட்டின் மோசமான தலைவிதியைக் காட்டுகின்றது. நாட்டின் அதிகாரத்தை அரசியல்வாதிகளே கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றனர். தமக்கு நல்லது செய்வார்களென்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து அதிகார மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியவர்கள் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை எந்த நிலையிலும் மன்னிக்க முடியாது. தாம் பணம் சம்பாதிப்பதற்காக புனிதமான அரசியலைப் பயன்படுத்துவது மகா கேவலமான காரியமாகும்.குற்றங்களைப் புரிகின்ற மேல்தட்டு அரசியல்வாதிகளுக்கு தண்டனைகளிலிருந்து விதி விலக்களிக்கும் ஒரு நாடாவே இலங்கை காணப்படுகின்றது. தற்போதுகூட போதைப்பொருள் வர்த்தகருடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மகிந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்பதார் நீதியின் கண்களும் மூடிக்கொண்டதாகவே எண்ணத் தோன்றுகின்றது. போதைப்பொருள்களின் பாவனை மக்கள் சமுதாயத்தை முற்றாகவே செயலிழக்கச் செய்துவிடக்கூடியது. ஒரு சிலர் கோடீஸ்வரர்களாக மாறுவதற்காக மக்களைச் சீரழிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால் இந்த நாட்டில் அது சாதாரண விடயமாகவே கருதப்படுகின்றது. அதுமட்டுமல்லாது குற்றவாளிகளென முத்திரை குத்தப்பட்டுவிட்டால் அனைவரையும் சமமான நிலையில் வைத்துத்தான் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் பலம்மிக்க பாதாள உலகக் குழுவினருக்கும் பணமும் செல்வாக்கும் படைத்த மோசமான குற்றவாளிகளுக்கும் சிறைச்சாலை களில் சொகுசு வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அவர்கள் சிறைத் தண்டனைக்குப் பதிலாக சொர்க்கவாழ்வையே அனுபவிக்கின்றனர். சிறையில் இருந்தவர்களே குற்றச்செயல்களை வழிநடத்தி வருகின்றனர். போதைப்பொருள் வர்த்தகமும் இவ்வாறே அமோகமாக இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. இதற்குச் சிறையதி காரிகளும் உடந்தையாகச் செயற்படுவதாகக் கூறப்படுகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது நாட்டில் குற்றச் செயல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? சில தென்னமெரிக்க நாடுகளே போதைப்பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்தன. சில வகையான கொடிய போதைப்பொருள்கள் குறிப்பிட்ட ஆசிய நாடுகள் சிலவற்றில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த நாடுகளின் வருமானத்தை ஈட்டக்கூடிய தொழிலாகவும் இதுவரை விளங்கு கின்றது. இந்தப் பொருள்கள் பல நாடுகளின் ஊடாக தென்னமெரிக்க நாடுகளைச் சென்றடைகின்றன. இலங்கையிலும் அவ்வாறானதொரு நிலை காணப்படுவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. இது நாட்டின் நற்பெயருக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பங்கத்தை ஏற்படுத்திவிடும். அதிலும் அரசியல்வாதிகள் இதில் ஈடுபடுவது பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே இத்தகையவர்கள் மீது எதுவித தாமதமுமின்றி உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்படல்வேண்டும். இவர்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும்போது அரசியலில் புனிதத் தன்மையே மாசுபடுத்தப்பட்டுவிடும். அரச தலைவர் எதுவித அச்சமுமின்றித் தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் பக்கச் சார்பு என்பதற்கே இடமிருக்கக்கூடாது. மகிந்தவுக்கு ஒரு முகமும் ரணிலுக்கு வேறொருமுகமும் காட்டுவதை அவர்கள் உடனடியாகவே நிறுத்திக்கொள்ள வேண்டும். குற்றங்களைப் புரிகின்ற அரசியல்வாதிகள் தராதரம் பார்க்காது தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் அரசு மீதும் நம்பிக்கை ஏற்படும். https://newuthayan.com/story/12/கூட்டுக்-குற்றவாளிகள்.html
-
மங்களவுடன் த.தே.கூ.ப்பினர் கலந்துரையாடல்! நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன http://www.virakesari.lk/article/50463
-
வங்கியில் பாரிய நிதி மோசடி ; கணக்கு வைப்பாளர்கள் திண்டாட்டம்
கிருபன் posted a topic in ஊர்ப் புதினம்
வங்கியில் பாரிய நிதி மோசடி ; கணக்கு வைப்பாளர்கள் திண்டாட்டம் வவுனியாவில் தனியார் வங்கியொன்றில் பாரிய நிதி மோசடியொன்று இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றிலேயே அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரால் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. குறித்த உத்தியோகத்தரும் அவரது மனைவியும் குறித்த வங்கியிலேயே பணியாற்றி வந்திருந்தனர். இந் நிலையில் குறித்த வங்கியில் பணியாற்றி வந்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக வாடிக்ககையாளர்களின் நிதிகளை தனது கணக்கில் வைப்பிளிட்டு வந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புகளில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றதாக தெரிவித்தும் குறித்த உத்தியோகத்தரே பணத்தை எடுத்துள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவத்துள்ளனர். இந் நிலையில் வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளை குறித்த வங்கியில் செவ்வன பார்த்து வருகின்ற நிலையில் பொலிஸிலும் முறைப்பாடுகளை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர் http://www.virakesari.lk/article/50462 -
கொழும்பில் இளைஞர்களை கடத்தி கொலை செய்த கடற்படை வீரர் கைது கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி அவர்களில் மூவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கடற்படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் காங்கேசன்துறை கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படைவீரர் 2008-2009 இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை காவல்துறை பேச்சாளர் உறுதி செய்துள்ளார். கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் 2018 ஆகஸ்டில் நேவி சம்பத் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மற்றொரு கடற்படை வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு உதவினார் என இலங்கையின் முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50458
-
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிக்குண்டு குடும்ப பெண்ணுக்கு நிகழந்த பரிதாபம்!
கிருபன் posted a topic in ஊர்ப் புதினம்
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் கைகள் சிக்குண்டு குடும்ப பெண்ணுக்கு நிகழந்த பரிதாபம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கே. இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ அணியின் சுமார் 7 மணி நேரப் போராட்டத்தின் பின் இடது கை காப்பாற்றப்பட்டது. கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று மாலை தும்படிக்கும் போது, தும்படிக்கும் இயந்திரத்துக்குள் இரண்டு கைகளும் சிக்குண்டு சிதைவடைந்தன. அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அந்தப் பெண் படுகாயமடைந்து சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேலாகியதால் அவரது கைகளை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கு உள்படுத்துவதில் மருத்துவ நிபுணர்களுக்கு சவாலாகியது. எனினும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணர்கள் கே.இளஞ்செழியபல்லவன், எஸ்.செல்வக்குமார் தலைமையிலான மருத்துவ அணி, அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்தனர். இன்று அதிகாலை வரை சுமார் 7 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் பெண்ணின் இடது கை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை முற்றாக அகற்றப்பட்டது. இதேவேளை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் கே.இளஞ்செழியபல்லவன், கண்டி பேராதனை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்துள்ளார். அவர் இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால்வரை மக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/50456 -
தென்னாபிரிக்கா - இலங்கை இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
கிருபன் replied to nunavilan's topic in விளையாட்டுத் திடல்
தடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக இடம்பெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் முதல்முறையாக தொடரை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் இலங்கை அணி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இன்று களம் இறங்கியுள்ளது. அதன்படி போர்ட்எலிசபெதில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 15 ஓட்டத்துக்குள் மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. எல்கர் 6 ஓட்டத்துடனும், அம்லா மற்றும் பவுமா எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாபிரிக்க அணி தொடக்கத்திலேயே தடுமாற ஆரம்பித்தது. இருப்பினும் அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி மற்றும் மர்க்ரம் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தினால் அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது. எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 73 ஆவவிருந்தபோது டூப்பிளஸ்ஸி 25 ஓட்டத்துடன் திமுத் கருணாரத்னவின் முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஐந்தாவது விக்கெட் 130 ஓட்டத்திலும் (மக்ரம் 60), ஆறவாது விக்கெட் 145 ஓட்டத்திலும் (முல்டர் 09), ஏழாவது விக்கெட் 157 ஓட்டத்திலும் (மஹாராஜ் டக்கவுட்) வீழ்த்தப்பட்டது. இதேவேளை ஆடுகளத்தில் மறுமுணையில் நின்று டீகொக் நிதானமாக நின்று நிலைத்தாட 9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரபடா அவருக்கு தோள்கொடுத்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஐ கடந்தது. எனினும் டீகொக் 86 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ரபடாவும் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ஒலிவரும் எதுவித ஓட்டமுமின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாபிரிக்க அணி 61.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ, கசூன் ராஜித ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 2 விக்கெட்டுக்களையும், திமுத் கருணாரத்ன ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். http://www.virakesari.lk/article/50434 -
ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 07:04Comments - 0 உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில் அங்கத்துவம் வகித்து வந்துள்ளன. இதுவரை, மூன்றாம் உலகப்போர் ஏற்படவில்லை. ஆனால், அதையொத்த உயிரிழப்புக்களை மனிதகுலம், கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் கண்டுள்ளது. உலகம் பாதுகாப்பான இடமாக இல்லை என்பதை உலகெங்குமுள்ள சாதாரண மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பட்டினியாலும் பசியாலும், நோய்களாலும் தினந்தினம் நூற்றுக்கணக்கானோர் சாகிறார்கள். ஆனால், உலக நாடுகளால் எதையும் செய்ய முடிவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையாலும் எதுவும் ஏலவில்லை. ஏன்? இலங்கையின் போர், தனது கோரமுடிவை எட்டியதன் பின்னணியில், தமிழ் மக்களின் கவனம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கரமான ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது இருந்தது. இன்று போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவே, இன்று மனித உரிமைகள் பேரவையில் இல்லை. அமெரிக்கா, அப்பேரவை தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராகச் செயலாற்றுகிறது என்று, பேரவையிலிருந்து வெளியேறி அவலநாடகத்தையும் கடந்தாண்டு நாம் கண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய மனித உரிமைக்காவலான அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது ஆச்சரியமல்ல. ஆனால், ஏதோவொரு வகையில் ‘மனித உரிமைகளின் பேரால்’ தனக்கு உவப்பில்லாத அரசுகளைத் தண்டிக்க, இப்பேரவையை அமெரிக்கா பயன்படுத்த வந்துள்ளது. அதேவேளை, தனக்கு வேண்டிய வகையில், அரசாங்கங்களைக் கட்டுக்குள் வைக்க, ‘மனித உரிமைகள்’ என்ற பயனுள்ள ஆயுதத்தை, கடந்த இரண்டு தசாப்தங்களாகக் கையாண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஏன் வெளியேறியது என்ற வினாவுக்கானப் பதிலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Foreign Policy சஞ்சிகை கடந்தவாரம் வெளியிட்டது. மிக நீண்டகாலமாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவிகளுக்கு அமெரிக்காவின் ஆசிபெற்றவர்களே நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் துணை அமைப்புக்கள் அனைத்திலும், அமெரிக்காவின் விருப்புக்குரிய நபர்களே முக்கியப் பதவிகளிலும் கொள்கை வகுப்பாளர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான இருந்த பூட்ரஸ் காலி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை வகிக்க இயலாமல் போனமைக்குக் காரணம், அவர் அமெரிக்கா விருப்புக்குரியவராக இல்லாமல் இருந்ததே. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பதவிகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில், சீனா மிகுந்த வினைத்திறனுடனும் இராஜதந்திரத்துடனும், கடந்த சில பத்து ஆண்டுகளாக ஐ.நாவில் செயலாற்றி வந்துள்ளது. இது, ஐ.நாவின் பல்வேறு மட்டங்களில், சீனர்கள் பதவிகளில் அமர்வதற்கு வழிவகுத்துள்ளது. அதேவேளை அமெரிக்காவின் மேற்குலகக் கூட்டணிக்கு மாற்றாக, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளை உள்ளடக்கிய தனக்கான ஆதரவுத்தளத்தை, சீனா ஐ.நாவின் அனைத்து அமைப்புக்களிலும் வலுப்படுத்தி வந்துள்ளது. கடந்தாண்டின் ஆபிரிக்காவின் பேரேரிகள் பிராந்தியத்துக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதியாக சீன இராஜதந்திரி நியமிக்கப்பட உத்தேசிக்கப்பட்டது. ஆபிரிக்காவின் பேரேரிகள் பிராந்தியமானது, புரூண்டி, கொங்கோ, கென்யா, தன்சான்யா, ருவாண்டா, உகாண்டா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இப்பகுதிக்குரிய ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியாக சீன இராஜதந்திரி ஒருவர் நியமிக்கப்படக்கூடாது என்று, அமெரிக்கா கடுமையாகத் தெரிவித்தது. ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹீலி, மிகக் கடுமையான தொனியில் இதை ஐ.நா அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இது அமெரிக்காவுக்கும் ஐ.நாவுக்கும் இடையிலான மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது. ஆபிரிக்கப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள சீனா ஆதிக்கம் தொடர்பில், ஏற்ெகனவே அமெரிக்கா கவலையில் உள்ளது. இந்நிலையில் ஐ.நாவின் பிரதிநிதியாக சீன இராஜதந்திரி நியமிக்கப்படுவது ஐ.நாவைப் பயன்படுத்தி இந்நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்கப் பொறிமுறைக்கு பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என் அமெரிக்கா நன்கறியும். இதனால், இந்த நியமனத்தைத் தடுக்க அமெரிக்கா கடுமையாக முயன்றுள்ளது. இதன் உச்சக்கட்டமாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் ஐ.நாவின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குர்திரேசுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் சீன இராஜதந்திரியின் நியமனத்தை நிறுத்தாவிட்டால், அமெரிக்கா கடுமையாக எதிர்வினையாற்றும் என்று, நிக்கி ஹீலி குர்த்திரேஸை எச்சரித்துள்ளார். அதன் ஒரு கட்டமாக அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகும் என்றும் ஐ.நாவுக்கான நிதியுதவிகளை நிறுத்தும் என்றும் ஹீலி தெரிவித்துள்ளார். ஆனால் நியமனத்தை விலக்கிக் கொள்ள குர்த்திரேஸ் மறுத்துவிட்டார். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகியது. இதன்மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி, ஐ.நாவின் தனது பிடியை உறுதிசெய்ய அமெரிக்கா முயன்றது. ஆனால், கடந்த மாதம் 22ஆம் திகதி, சீன இராஜதந்திரி ஹூவாங் ஷியாவை ஆபிரிக்கப் பேரேரிப் பிராந்தியத்துக்கான சிறப்புப் பிரதிநிதியாக, ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியமித்தார். ஹூவாங் ஷியா நீண்டகால சீன இராஜதந்திரியாக இருந்தவர். நைகர், செனகல், கொங்கோ ஆகிய நாடுகளுக்கான சீனத் தூதுவராகக் கடமையாற்றியவர். இந்த நியமனம் ஐ.நாவின் அலுவல்களில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. உலகப்பெரு மன்றில் அமெரிக்காவின் குறைந்துவரும் செல்வாக்கின் உரைக்கல்லாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஐ.நாவைப் பயன்படுத்தி ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை, சிரியாவில் செய்ய முடியவில்லை. சிரியாவில் மேற்குலகின் அவமானகரமான தோல்வியில், ஐ.நாவின் உதவியுடன் எதையும் செய்ய இயலாமைக்கு ஒரு பங்குண்டு. அதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் சீனாவும் ரஷ்யாவும் எடுத்த கடுமையான நிலைப்பாடுகள் காரணம். இப்போது ஐ.நாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை அமெரிக்கக் கொள்கைவகுப்பாளர்கள் மிகுந்த கவலையுடன் நோக்குகிறார்கள். அமெரிக்காவின் கைப்பொம்மையாக இயங்கிவந்த ஐ.நாவின் அமைப்புக்கள் அமெரிக்க நலன்களுக்கு பாதகமாக மாறும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் அமெரிக்க நலன்களுக்குப் பாதகமான செயற்பாடுகள் என்று நோக்குவது, ஐ.நா அமைப்புக்களின் நடுநிலையானச் செயற்பாடுகளையே என்பதை இங்கு நோக்கல் தகும். ஊலக ஒழுங்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஒருபுறமாக நிகழ்கையில் அதன் மறுமுனையில் சர்வதேச அரங்குகளில் சீனா தவிர்க்கவியலாத சக்தியாகி வருகிறது. அமெரிக்கா செய்துவந்ததைப் போல் சீனா வலிமையின் மூலம் இதைச் சாத்தியமாக்கவில்லை. மாறாக நீண்டகாலத் திட்டமிடல் மூலோபாயம் ஆகியவற்றின் வழி இதைச் சாதித்துள்ளது. இது உலக அமைப்புக்களில் சீனாவுடன் நாடுகள் தொடர்ச்சியாக ஊடாட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. சீனா அமைதியான இராஜதந்திரத்தின் வழி தனது கட்டுப்பாட்டை நிறுவிவருகிறது. இன்றுவரை பிறநாடுகளில் தலையிடுவதற்கு ஐ.நாவை அமெரிக்கா பயன்படுத்தியது போல சீனா பயன்படுத்தவில்லை. மாறாக இவ்வமைப்புகளின் நடுநிலையான செயற்பாட்டையே இதுவரைக் கோரி வந்துள்ளது. சீனாவின் அதிகரித்த செல்வாக்கை நடுநிலைமையுடன் செயற்படும் ஐ.நா அதிகாரிகள் மிகுந்த முற்போக்கானதாகக் கருதுகிறார்கள். அவர்கள் கொள்கை வகுப்பிலும் செயற்படுத்தலிலும் நடுநிலைமையைக் கோரும் சீனாவின் நிலைப்பாடு, பல விடயங்களில் தமக்கு பக்கபலமாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதேவேளை அமெரிக்க சீன நெருக்கடியின் சிக்கலான அத்தியாயங்கள் இனி ஐ.நாவில் அரங்கேறும் என்பதையும் எதிர்வுகூறுகிறார்கள். “வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு” என்பதை சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கு உணர்த்தி நிற்கின்றது. ஐ.நாவின் அமைப்புகளின் இயலாமை, ஊழல், வினைத்திறனின்மை, அரசியல்மயமாக்கம் எனச் சீரழிந்துள்ள நிலையிலேயே ஐ.நாவில் சீனா முக்கிய பாத்திரமேற்க முனைகிறது என்பதை கவனிக்க வேண்டும். இதன் காட்சிகள் ஐ.நா மனித உரிமைப் பேரவையிலும் அரங்கேறும். மேற்குலகையும் அமெரிக்காவையும் நம்பியே தமிழ் மக்களின் எதிர்காலம் இருக்கிறது என்று ஜெனீவாவில் நம்பிக்கை வைக்கச் சொன்னவர்கள் இப்போதும் அதையே சொல்கிறார்கள் என்பதுதான் அபத்தம். மனித உரிமைகள் என்பது தேவைக்குப் பயன்படுத்தப்படும் வசதியான கருவியே என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டும். தமிழ் மக்கள் மீதான அக்கறை மேற்குலகுக்குக் கிடையாது. தமிழ் மக்கள் பகடைகளாக உருட்டப்படுகிறார்கள். சீனா என்ற எதிரியைக் காட்டி அமெரிக்காவின் உதவியைப் பெற்று தமிழ் மக்களின் உரிமையை வெல்லலாம் என்ற கணக்குகள் மோசமானவை என்பதை இன்றைய நிலவரம் விளக்குகிறது. 2012 முதல் ‘ஜெனீவாவுக்குப் பின்’ என்று எத்தனையோ ஆரூடங்கள் சொல்லப்பட்டாயிற்று. அவை எல்லாமே கனவுக் கற்பனைகள் என்பதை நாம் இப்போதைக்கு விளங்கியிருக்க வேண்டும். ‘ஜெனீவாவுக்குப் பின்?’ என்ற கேள்விக்குரிய சரியான விடை ‘அடுத்த ஜெனீவா’ என்பதே. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-நாவும்-ஜெனீவாவும்-அமெரிக்கா-எதிர்-சீனா/91-229918
-
இரு தரப்புகளாலும் போர்க்குற்றங்களா? Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 21 வியாழக்கிழமை, பி.ப. 05:49 இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மீது கடந்த சில மாதங்களாகக் காட்டும் அதிகபட்ச கரிசனை தொடர்கிறது. பிரதமர் விக்கிரமசிங்கவின் அண்மைய வடக்கு விஜயம், இந்த நிலைமை தொடர்வதையே காண்பித்திருக்கிறது. ஆனால், கடந்த சில விஜயங்களைப் போலல்லாது இவ்விஜயம், சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இறுதிக்கட்டப் போரில், நாட்டின் இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என, பிரதமர் விக்கிரமசிங்க மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் விடயம் தான், இச்சலசலப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. “கடந்தகாலக் கடினமான வரலாற்றை மறந்தும் மன்னித்தும், இலங்கைச் சமூகங்கள் முன்கொண்டு செல்வதற்கான நேரமிது. தவறுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் மன்னித்து, நல்லிணக்கத்தை அடைய வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார். அவரது இக்கருத்து, மேம்போக்கான கருத்தாக அமைந்த போதிலும், அமைச்சரவையில் “உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு”வை அமைப்பதற்காக அமைச்சரவையில் முன்மொழிவை வைத்த பின்னணியிலும், தவறுகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையால் பயன் கிடைக்காது என்ற அவரது கருத்து மூலமாகவும், போர்க்குற்றங்கள் பற்றியும் அவரது கருத்து அமைந்திருக்கிறது என்பது தெளிவு. அவரது இக்கருத்துத் தொடர்பாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், பிரதமரின் கருத்தை, இரு தரப்புகளும் குற்றங்களைப் புரிந்தன என்று எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளதெனத் தெரிவித்திருந்தார். அதேபோல், பிரதமரால் இக்கருத்து வெளியிடப்பட்டுச் சில நாள்களில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஓரளவுக்கு நேரடியாகவே, இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைப் புரிந்தன என ஏற்றுக்கொண்டிருந்தார். “இறுதிக் கட்டப் போரில் பொதுமக்களின் உயிர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை” என்று, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பொறுத்தவரை, முக்கியமான மாற்றமாக, பிரதமரினதும் அரசாங்கத்தில் இன்னமும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பலத்துடன் காணப்படும் முன்னாள் ஜனாதிபதியினதும் கருத்துகள் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்களின் கருத்துகள், குறிப்பாகப் பிரதமரின் கருத்து, தொடர்பில், ஒரு வகையான நம்பிக்கையீனதும் விமர்சனமும், தமிழ் மக்களில் ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்டிருப்பதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்று சொல்லிவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளை மாட்டிவிட்டுத் தப்பிக்கும் முயற்சி” அல்லது “இரு தரப்புகளும் போர்க்குற்றங்களைச் செய்தன என்பதால், இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாயின் விடுதலைப் புலிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதால், போர்க்குற்ற விசாரணையைத் தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் இப்படிச் சொன்னார்” போன்ற வகையான கருத்துகளைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. சுயாதீனமான நீதித்துறையின் விசாரணைகளின்றி உறுதியாக எதையும் கூறுவது பொருத்தமாக அமையாது. ஆனால், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டன என்பது தான், இதுவரையிலும் காணப்படும் ஆதாரங்கள் சொல்கின்ற விடயங்களாக இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள், இரு தரப்புகள் மீதும் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றன. அதை மறைக்க முனைவது அப்பட்டமான கபடத்தனம். விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்கள், தமிழ் அரசியல் பரப்பில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விடுதலைப் புலிகள் இருக்கும் போது மரணமோ, அச்சுறுத்தலோ பதிலாகக் கிடைத்தது. அவர்களின் முடிவின் பின்னரும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாகவே விடுதலைப் புலிகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், இது நியாயமற்ற நிலைமை. ஏனெனில், விடுதலைப் புலிகளின் தவறுகளை மாத்திரம் பெரும்பான்மையினத் தரப்புச் சொல்வது போல, இராணுவத் தரப்பின் தவறுகளை மாத்திரம் தான் தமிழ் மக்களும் கதைப்பார்கள் என்றால், இரு தரப்புகளுமே ஒன்றாகிவிடாதா? எந்தத் தவறைச் செய்தாலும் இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்று தெற்கு இருப்பதைப் போல, என்ன ஆதாரம் இருந்தாலும் விடுதலைப் புலிகள் மீதான விசாரணைகளை அனுமதிக்கப் போவதில்லை என்று வடக்கு இருக்குமாயின், இரு தரப்புகளுக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? நாட்டின் சட்டபூர்வமான இராணுவம் என்ற அடிப்படையில், இலங்கை இராணுவத்தை, விடுதலைப் புலிகளுக்கான அதே மட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமா என்பது நியாயமான கேள்வி. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உருவான அமைப்பு என்றாலும் கூட, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தவறு செய்தார்கள் என்பதற்காக, இராணுவம் தவறு செய்வதையும் நியாயப்படுத்த முயன்றால், அது கேலிக்குரிய ஒப்பீடாக அமையும். அதேபோல், இறுதிக்கட்டப் போரில், இரு தரப்புகளும் ஒரேயளவிலான குற்றங்களைப் புரிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில், இல்லையென்று தான் அமையும். விடுதலைப் புலிகளோடு ஒப்பிடும் போது, படையினர் மீதான குற்றச்சாட்டுகள் மிக அதிகமானவை. அதற்காக, விடுதலைப் புலிகள் மீது விசாரணைகளே இருக்கக்கூடாது என்பது நியாயமில்லை. இத்தனைக்கும், நாமெல்லோரும் அதிகமாகக் கலந்துரையாடும் 30/1 தீர்மானத்தில் ஒரு பிரிவு, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைப் பற்றியும் அவற்றுக்கான பொறுப்புக்கூறலைப் பற்றியும் மாத்திரம் உரையாடுகிறது. அதற்கு முன்னைய பிரிவு, “அனைத்துத் தரப்புகளினதும்” பாரிய குற்றங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே, உண்மையான பொறுப்புக்கூறலொன்று ஏற்படுத்தப்படுமாயின், இரு தரப்புகளின் தவறுகளும் ஆராயப்படுமென்பது இயற்கை; அது தான் நீதியும் கூட. இதில் புதிதாக வியப்படைய எதுவுமில்லை. ஆனால், “இரு தரப்புகளும் தவறு செய்தன. எனவே, இரு தரப்பின் தவறுகளையும் மன்னிப்போம்” என்ற “இணக்கப்பாட்டு” கதைகளை, தமிழ் மக்கள் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும். இப்படியான கதைகளை, பிரதமர் மாத்திரமன்றி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றோரும் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. “பழையதைக் கிளறி என்ன நடக்கப் போகிறது?” என்பது தான் அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையைக் கண்டறியாமல், மன்னிப்புக்கு இடமிருக்கக்கூடாது. அப்படியான மன்னிப்பு, நிலையான சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ கொண்டுவராது. ஏனென்றால், என்ன நடந்தது அல்லது என்ன செய்தார்கள் என்றறியாமல், எதற்காக ஒருவரை மன்னிக்க முடியும்? யார் செய்தார்கள் என்று தெரியாமல், குறித்த சம்பவத்துக்காக யாரை மன்னிக்க முடியும். இதனால் தான், உலகம் முழுவதிலும் இவ்வாறான ஆயுத முரண்பாடுகள் முடிவடைந்த பின்னர், உண்மையைக் கண்டறிவதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, பரிபூரணமானது என்றில்லை. அதன் மீதும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால், அங்கு ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கத்தில் மிக முக்கியமான ஒரு விடயமாக, உண்மையைக் கண்டறிதல் என்பது காணப்பட்டது. எனவே தான், இலங்கை விடயத்திலும், உண்மையைக் கண்டறிதலுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அது, இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் மீதும் படையினர் மீதும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; விடுதலைப் புலிகளால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்; முஸ்லிம் ஆயுதக் குழுக்களால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்று, அனைத்து வகையான குற்றங்களைப் பற்றியும் ஆராய்வதாக இருக்க வேண்டும். அக்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, உண்மை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட பின்னர், மன்னிப்பதைப் பற்றி ஆராய முடியும். அதை விடுத்து, அதற்கு முன்னர் மன்னிக்குமாறு விடுக்கப்படுகின்ற எந்தக் கோரிக்கையும், பூசி மெழுகுவதற்கான முயற்சியே. அவ்வாறான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதென்பது, முழு இலங்கைக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாக அமையும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரு-தரப்புகளாலும்-போர்க்குற்றங்களா/91-229910
-
தூய்மையான அரசநிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது - மைத்திரி February 21, 2019 தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். இன்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 19வது திருத்தத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அதன் பொறுப்புக்கள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் பற்றி 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதும் அவற்றில் எந்தவொரு விடயமும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை . சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி தான் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மிகவும் பிழையாக வியாக்கியானங்கள் செய்யப்பட்டு விமர்சிக்கப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர்கள் தொடர்பில் தனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தனக்குள்ள பிரச்சினை தன்னால் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட நீதியரசர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதே ஆகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நீதியரசர் ஒருவரின் பெயர் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்படுமானால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு அந்த நீதியரசர்களுக்கு உரிமையுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , தனது பதவி உயர்வை இழக்கின்ற சந்தர்ப்பத்தில் தொழிலாளி ஒருவருக்கு கூட அது பற்றி கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதன் காரணமாக அந்த நீதியரசர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தை கருத்திற் கொண்டும் பதவி உயர்வை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு நியாயமானதும் பக்கசார்பற்றதுமான முறைமையொன்றை ஏற்படுத்தும் நோக்குடனேயே தான் அந்த தலையீட்டை செய்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி , பிரச்சினையை தனக்கு எதிராகவே திருப்பி தன்னைப் பற்றிய பிழையானதொரு விம்பத்தை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிப்பது நீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடம்பெறுமானால் அதற்காக பெயர்களை முன்வைக்கும் ஜனாதிபதிக்கு அது பற்றி அறிந்துகொள்ளும் உரிமை உள்ளது என்றபோதும் இதுவரையில் அந்த பெயர்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அரசியலமைப்பு சபையிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது பற்றி எந்தவொரு விடயமும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் இன்று அரசியலமைப்புச் சபையினால் நிர்வகிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , அரசியலமைப்புச் சபையை நடைமுறைப்படுத்தும் போது ஒரு போதும் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்படுத்தப்படக் கூடாது என்றும் தெரிவித்தார். 19வது திருத்தத்தின் ஊடாக உருவானவையே சுயாதீன ஆணைக் குழுக்களாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி , அது பிழையான வழியில் செல்லுமானால் நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்கும் சமூகம் விரும்பும் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். உலகின் எந்தவொரு தலைவரும் மேற்கொள்ளாத வகையில் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தனது அதிகாரத்தை தானம் செய்த இந்த யுகத்தின் ஒரே தலைவர் நானாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி , தான் அவ்வாறு செய்தது சிறந்ததோர் அரச நிருவாகத்தை உருவாக்கும் தூய்மையான நோக்கத்திற்காகவேயாகும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வது பற்றிய பாராளுமன்றத்தின் தீர்மானம் எதுவானாலும் அன்று போல் இன்றும் தான் அதற்கு உடன்படுவதாகவும் மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/2019/114023/
-
கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு பிரச்சினை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வோம்
கிருபன் posted a topic in ஊர்ப் புதினம்
கேப்பாபுலவு மக்களின் நிலமீட்பு பிரச்சினை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்வோம் February 21, 2019 723 ஆவது நாளாக தொடர்ந்து நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இன்றைதினம் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது நிலமீட்பு தொடர்பில் அரசாங்கத்தினால் ஏதாவது வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் போராட்ட காரர்களின் தற்போதைய நிலைகுறித்தும் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு மக்களிடம் கருத்து தெரிவித்து இலங்கைக்கான சுவீஸ்தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி தான் கடந்த முறை கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடங்களுக்கு வந்தவேளை இந்த மக்கள் சொந்த நிலங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றதாகவும் ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது வந்துள்ள போதும் குறித்த மக்கள் தொடர்ந்து தமது சொந்த நிலத்தை கேட்டு போராடிக்கொண்டிருப்பதை நினைத்து கவலலையடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மக்களின் பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்கனவே இந்த மக்கள் எல்லா தரப்பிடமும் தமது பிரச்சனைகளை கொண்டு சென்றும் அவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாமையானது துரதிஸ்டவசமானது எனவும் தெரிவித்தார். சுவிஸ் தூதரக அதிகாரிகள் கேப்பாபுலவுக்கு சென்றிருந்த வேளையில் அரச புலனாய்வாளர்கள் போராட்ட இடத்தின் சுற்றிலும் நின்று அவதானிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2019/114019/ -
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு ஆதரவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி February 21, 2019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களை விசாரிப்பதற்காகவென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ராஜபக்ச அரசு மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசும் கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை என்பதனை கடந்த நான்கு ஆண்டுகளில் தெளிவாக நிரூபித்துக்காட்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 மார்ச் மாத்தில் சர்வதேச கண்காணிப்பை நீடித்தில் என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடைகின்றது. இந் நிலையில் தமிழ் தலைமைகளின் சம்மதத்துடன் எதிர்வரும் பங்குனி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை நீடித்தல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனைவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும். எனவே இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுத்தி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். திகதி: 25.02.2019 (திங்கட்கிழமை) நேரம்: காலை 8.30 மணி இடம்: கிளி-கந்தசுவாமி ஆலய முன்றல் நன்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் தலைவர் பொதுச் செயலாளர் http://globaltamilnews.net/2019/114017/
-
திருநெல்வேலி ஆல்வா மாதிரி ஒருத்தர்! https://en.m.wikipedia.org/wiki/Margaret_Alva
-
அடையாளங்களும் அடையாளப்படுத்தல்களும் குறிப்பிட்ட கால, உடன் சூழல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆண்-பெண் என்ற பால் அடையாளம் ஒன்றே ஆதியிலிருந்து நிரந்தரமாக உள்ளது. இன, மத, மொழி, சாதி, பிரதேச, பண்பாட்டு அடையாளங்கள் காலவோட்டத்தில் மாறி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அடையாளத்தை முன்னிறுத்துவது தனியன்களாக இல்லாமல் கூட்டாக ஒரு இலக்கை அடைவதற்கும், அல்லது ஒரு குழுவோடு தம்மை அடையாளப்படுத்தி இயங்கவும் உதவுகின்றது. அரசியலில் சிங்களப் பேரினவாதம் சிங்கள, பெளத்த அடையாளங்களைப் பாவித்து தமிழர்களை ஒடுக்குவதும், தமிழர்கள் தமிழ்த் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தி போராடித் தோற்றதும் எமது வரலாறு. தமிழர்கள் தமிழ்பேசும் இனம் என்ற அடையாளத்துக்குள் முஸ்லிம்களை அடக்க முற்பட்டதும், அதை முஸ்லிம்களோ, மலையகத் தமிழரோ ஏற்காமல் போனதும் தமிழ்த் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்தியது. புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் இனமாக ஒன்றுபட்டாலும் இன்று அடையாளச் சிக்கலில் மாட்டுப்பட்டு உள்ளனர். கனடியத் தமிழர், பிரித்தானியத் தமிழர், ஜேர்மனியத் தமிழர் என்று புகலிட நாடுகளுக்கு ஏற்ப புதிய அடையாளங்களைப் பூணுவதும், அதே நேரத்தில் தமது பூர்வீக கிராமம், பிரதேச அடையாளங்களையும் தொடர்வதும் என்று மாறிக்கொண்டே போகின்றது. பிற நாடுகளில், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில், முஸ்லிம் அடையாளம் என்று பெண்கள் முக்காடு அணிவதும் அரசியல் அடையாளமே. 70 களில் முக்காடு அணியாமல் பெண்கள் நடமாடிய எகிப்திய கெய்ரோ, ஈரானிய தெஹ்ரான் போன்ற நகரங்களில் மேற்கு நாட்டவர்கூட தலையை மறைத்துக் கொள்வதும் அடையாள அரசியலினால்தான். உலகில் உள்ள வளங்கள் பல்கிப் பெருகியுள்ள மனித இனத்திற்குப் போதாது என்பதால் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுவர்களும் அடையாளங்களைச் சுமந்துதான் தமது இருப்பைப் பேண முயல்கின்றன. எனவே அடையாளம் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை எப்பாடுபட்டாவது தக்க வைத்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பைத் தக்கவைத்து கொள்ளவேண்டுமானால் இன்னொரு சமூகத்தை அடக்குமுறை செய்யவேண்டும் அல்லது அடக்குமுறைக்கு எதிராக போராடவேண்டும். ஆகவே, பிறரின் அடையாளங்களை மதித்து அன்பைச் சொரிந்து மனிதர்கள் ஒற்றுமையாக வளங்களைப் பகிர்ந்து இப்பூமியில் வாழலாம் என்பது கனவாகத்தான் இருக்கும்!
-
இன்று தனது 11வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடும் தமிழ் சிறி ஐயா பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்🎉🍻
-
தமிழ் மறவர் துயிலும் மன்னவர் மாண்பின் நிலம் கோப்பாய் http://athavannews.com/தமிழ்-மறவர்-துயிலும்-மன்/