Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33807
  • Joined

  • Days Won

    157

Posts posted by கிருபன்

  1. போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃

    இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃

    மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!

     

    இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்:

    1. @பையன்26
    2. @முதல்வன்
    3. @suvy
    4. @ஏராளன்
    5. @நிலாமதி
    6. @Ahasthiyan
    7. @ஈழப்பிரியன்
    8. @kalyani
    9. @கந்தப்பு
    10. @கறுப்பி
    11. @Eppothum Thamizhan
    12. @வாதவூரான்
    13. @கிருபன்
    14. @நீர்வேலியான்
    15. @goshan_che
    • Like 1
    • Thanks 1
  2. 4 minutes ago, நீர்வேலியான் said:

    கிருபன் , 
    நான் மேலே பதில் அளித்த முறை சரியா என சொல்லவும். இந்த கிரிக்கெட் இல் இருந்து நான் தொலைதூரம் போய்விட்டேன், என்ன நடக்கிறது என்று புரியவில்லை, நீங்கள், பையன் மற்றும் ஈழப்பிரியன் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க சும்மா பங்கு பற்றுகிறேன். 

    @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀

    வெற்றிபெற வாழ்த்துக்கள்😃

    இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்:

    1. @பையன்26
    2. @முதல்வன்
    3. @suvy
    4. @ஏராளன்
    5. @நிலாமதி
    6. @Ahasthiyan
    7. @ஈழப்பிரியன்
    8. @kalyani
    9. @கந்தப்பு
    10. @கறுப்பி
    11. @Eppothum Thamizhan
    12. @வாதவூரான்
    13. @கிருபன்
    14. @நீர்வேலியான்

    spacer.png

    • Thanks 1
  3. போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.

     

    இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்:

    1. @பையன்26
    2. @முதல்வன்
    3. @suvy
    4. @ஏராளன்
    5. @நிலாமதி
    6. @Ahasthiyan
    7. @ஈழப்பிரியன்
    8. @kalyani
    9. @கந்தப்பு
    10. @கறுப்பி
    11. @Eppothum Thamizhan
    12. @வாதவூரான்
    13. @கிருபன்
  4. நானும் போட்டியில் குதித்துள்ளேன்!

     

    # Question Team1 Team 2 No Result Tie Prediction
    1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie  
      CSK     Select CSK CSK
      DC     Select DC Select
      GT     Select GT Select
      KKR     Select KKR KKR
      LSG     Select LSG Select
      MI     Select MI Select
      PBKS     Select PBKS Select
      RR     Select RR RR
      RCB     Select RCB Select
      SRH     Select SRH SRH
    2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.          
      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR
      #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR
      #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK
      #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH
    3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS
    4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Qualifier 1: 1st placed team v 2nd placed team
            RR
    5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Eliminator: 3rd placed team v 4th placed team
            CSK
    6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)
    Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
            KKR
    7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்)
    Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
            KKR
    😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT
    10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson
    11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
    12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal
    13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
    14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli
    15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB
    16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah
    17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI
    18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson
    19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
    20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  5. போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

    1 hour ago, கந்தப்பு said:

    17 வது கேள்விக்கு பதிலைக் காணவில்லை

    @கறுப்பி

    17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்

  6. பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன்

    manage-work-relationship.jpgmanage-work-relationship.jpg
     

    சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது.

    இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள்.

    “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள்

    “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான்

    அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள்.

    சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள்.

    “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள்

    “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள்.

    ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

     

    ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது.

    ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும்.

    சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும்.

    பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது.

    எப்படிப் பிரிவது?

    “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க”

    தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

    அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே!

    ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.eric-ward-7KQe_8Meex8-unsplash-300x200.j

    பிரிவதற்கான படிநிலைகள்:

    பிரிவதற்கான காரணங்களை உணர்வது

    பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது

    முடிவை ஏற்றுக்கொள்வது

    பிரிவின் வலியைக் கடந்து வருவது

    பிரிவில் இருந்து முழுமையாக வருவது

    பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு.

    அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும்.

    பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது.

    relationship_problems-1638970335-hero-30முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும்.

    ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.
     

    https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/

  7. எலும்பு வலு இழப்பது ஏன்?

    கு.கணேசன்

    spacer.png

    ம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும்.

    இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது.

    ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன?

    நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும்.

    பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.

    ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.    

     

    காரணங்கள் என்னென்ன?

    எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது. 

    குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு. 

    இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.

     

    என்னென்ன தொல்லைகள்?

    பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.

    நோயைக் கண்டறிவது எப்படி?      

    முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

    இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள்.

    இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும்.

    இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.

    யாருக்கு வாய்ப்பு அதிகம்?

    உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர்.

    கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    • உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
    • லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா?
    • உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா?
    • உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா?
    • அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?
    • அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா?

    சிகிச்சை என்ன?

    இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது.

    முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது.

    கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம். 

    என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

    சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். 

    தடுப்பது எப்படி?

    • இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள்.
    • யோகாசனங்களைச் செய்வதும் நல்லது.
    • புகைபிடிக்கக் கூடாது.
    • மது அருந்தக் கூடாது.
    • காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது.
    • எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும்.
    • 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
    • ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    • நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 
    • இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.

    https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis

  8. கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

    ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.

    அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது.

    மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

     

    https://thinakkural.lk/article/299459

  9. வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம்

    ஜே.ஏ.ஜோர்ஜ்

    “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார்.

    20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது.

    நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார்.

    “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட்.

    அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது.

    கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.

    “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.

    சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

    இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

    அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார்.

    image_81e6adeb69.jpg

    1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது.

    அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது.

    வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

     2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

    இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

    இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன.

    image_273db81166.jpg

    இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார்.

    “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார்.

    இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

    இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    image_258552ed47.jpg

    இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

    வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது.

    இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

    இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.

     

    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077

  10. யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு!

    adminApril 18, 2024
    univercity-if-jaffna.jpg

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.

    அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.

    ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது.

    கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார்.

    வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

    எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.

    சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.

    ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது.

    திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

    இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.

    ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார்.

    இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

    இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

    பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

    ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

    பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன

     

    https://globaltamilnews.net/2024/201875/

  11. போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀

    இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்:

    1. @பையன்26
    2. @முதல்வன்
    3. @suvy
    4. @ஏராளன்
    5. @நிலாமதி
    6. @Ahasthiyan
    7. @ஈழப்பிரியன்
    8. @kalyani
    9. @கந்தப்பு
    10.  
    1. போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
    2.  

    இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்!

    😉

  12. 1 hour ago, வாலி said:

    உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு.

    அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!

    பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?

    • Haha 1
  13. தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன?

    4-18.jpg

    திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது

    இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது

    மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது

    : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்

    : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
     

    https://akkinikkunchu.com/?p=274079

  14. 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம்

    April 18, 2024
     

    இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

     

    https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/


     
  15. சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது!

    1331886716.jpg

    தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது!

    கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்

    (ஆதவன்)

    தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

    இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம்  அவ்வாறானது அல்ல.

    நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ) 

     

    https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!

  16. 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்!

    1402191681.jpeg

    எதிர்வரும் ஒரு வருடத்துக்குள்
    32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்!
    வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

    (ஆதவன்)

    வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

    வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

    ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:-

    ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு.

    இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம்.

    மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ) 

    https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!

  17. 8 hours ago, பையன்26 said:

    @கிருபன்

    பெரிய‌ப்பா பெரிய‌ப்பா
    நான்  ஆர்வக் கோளாறில் முத‌ல் ப‌திந்து விட்டேன் அதை நீக்கி விட்டு புது ப‌திவு போட‌ அனும‌தி உண்டா😂😁🤣.......................

    இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்!

    போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!

     

    போட்டி விதிகள்

    1. போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
    2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
    3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
    4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
    5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.
    6. போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
  18. ஊழ் வண்ணம் : வெற்றிராஜா

    CorpusClock.jpg?resize=579%2C580&ssl=1

    கேம்ப்ரிட்ஜ் மண்ணில் கால் பதித்ததுமே சர் ஐசக் நியூட்டன் படித்த கல்லூரியை, அந்த ஆப்பிள் மரத்தை காண வேண்டும் என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. கேம் என்பது ஒரு நதியின் பெயர். கேம் நதியின் மீது பல அழகிய பாலங்கள் அமைந்துள்ளன. கேம் + ப்ரிட்ஜ் = கேம்ப்ரிட்ஜ். ஒவ்வொரு பாலமும் நுண் வேலைப்பாடுகளுடன், கேம்ப்ரிட்ஜில் உள்ள கல்லூரிகளின் சரித்திரங்களையும், சாதனைகளையும் பறைசாற்றியபடி மிளிர்கிறது. 

    நியூட்டன் கற்ற அதே ட்ரினிட்டி கல்லூரியில்தான் கணித மேதை ராமானுஜமும் படித்தார். ராமானுஜத்தின் ஊழ், அவரை ஈரோடு, கும்பகோணம், மெட்ராஸ் என சுழற்றியடித்து, பல்லாயிரம் மைல்கள் கப்பலில் பயணிக்க வைத்து, கேம் நதிக்கரை வரை இழுத்து வந்திருக்கிறது. சார்லஸ் டார்வின், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஆலன் ட்யூரிங், ஜான் மில்டன், பைரன், சில்வியா பிளாத், ஜவஹர்லால் நேரு,  டேவிட் அட்டன்பரோ, மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகள் படித்த கல்லூரிகள் கேம் நதிக்கரையெங்கும் வீற்றிருக்க, எதை காண்பது எங்கே துவங்குவதென குழம்பி, முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியின் சுவற்றிலிருந்து கார்ப்பஸ் க்ளாக் வினோதமாக ஒலியெழுப்ப, அருகில் சென்று வேடிக்கை பார்த்தேன். அது அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு மெக்கானிக்கல் க்ளாக்.  அதன் மீது ஒரு வெட்டுக்கிளி தனது கால்களால் கடிகார முட்களை தள்ளியபடி, காலத்தின் துளிகளை உணவாக தின்று செரித்துக் கொண்டிருந்தது. Chrono-Phagus அதாவது Time-Eater என்றழைக்கப்பட்ட ”காலத்தை உண்ணும் பூச்சியின்” ரூபம், அதை காண்பவருக்கு அச்சத்தையும் ஆர்வத்தையும் ஒருசேர அளித்தது. கேம் என்ற ஒரே ஒரு நதியின் மீது பல பாலங்களும், கல்லூரிகளும் முளைத்திருக்க, ஒரே ஒரு கல்லூரியைத் தேடி கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி, கங்கை, பிரம்மபுத்ரா என்று பல பெரிய நதிகளை கடந்து சென்ற என் கதை எனக்குள் மின்னலடித்தது. ஊழ் என்பது அத்தனை எளிதாக விளக்கி விட கூடிய ஒன்றா என்ன? புனைவின் வழியாக ஊழ் பற்றி சித்தரிப்பதை விட, என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் மூலமாக ஊழ் வினையை விவரிக்க முயற்சி செய்கிறேன். பாலங்களின் மீது தடதடவென்று ஓடுகின்ற ரயில்களின் ஓசை என் மண்டைக்குள் ஒலிக்க துவங்கியது. காலத்தை உண்ணும் வெட்டுக்கிளி என்னை முறைத்துப்பார்க்க, நான் கார்ப்பஸ் கடிகாரத்துள் நுழைந்து சுழன்றபடி, காலத்தின் பின்னோக்கி சென்று மாணவனானேன்.

    நான் +1 வரை ட்யூஷனே படிக்கவில்லை. கிடைத்த ஒளியினை கிரகித்து, கிடைத்த நீரை உறிஞ்சி ஒரு காட்டுச்செடி போல வளர்ந்து கொண்டிருந்தேன். +2 வில் மொத்த வகுப்புமே ட்யூஷன் செல்ல, நான் மட்டும் ட்யூஷன் போகாமல் தவறு செய்கிறேனோ என்ற அச்சத்தால், புதுச்சேரியின் புகழ்பெற்ற பள்ளியொன்றின் ஆசிரியரான விஷ்வகுமார் பற்றி கேள்விப்பட்டு, அவரிடம் ட்யூஷன் போக முடிவெடுத்தேன். என் வீட்டிலிருந்து பள்ளி சென்று வருகின்ற தூரம் 14 கிமீ. விஷ்வகுமாரின் வீடு எதிர் திசையில் இருந்ததால் அங்கே சென்று வர 14 கிமீ. தினம் இப்படி  28 கிமீ சைக்கிளில் பயணித்தால், பிறகு படிப்பதற்கு நேரமேது? ஆனாலும் சவாலை எதிர்கொண்டு களத்தில் இறங்கினேன். பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து யோகப்பயிற்சி செய்வது போல, அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விஷ்வகுமார் வீடு நோக்கி எனது சைக்கிள் பறந்தது. குளித்து பளிச்சென்று நெற்றி நிறைய விபூதி பட்டைகளுடன், முகத்தில் புன்னகையுடன் வரவேற்பார் விஷ்வகுமார். சொற்ப தொகையான ஒரு ட்யூஷன் பணத்தை அவர் வாய் திறந்து கேட்டதேயில்லை. கொடுத்தாலும் எண்ணி பார்ப்பதில்லை.

    ஜெயமோகனின் ”சோற்றுக்கணக்கு” சிறுகதையில் உணவளிக்கும் ‘கெத்தேல் சாகிப்’ பாத்திரம் போல, மாணவர்களுக்கு கல்வியை அள்ளித் தந்தவர் ஆசிரியர் விஷ்வகுமார். அவர் ஒரு அற்புத கதைசொல்லியும் கூட. 

    ஒரு துகள் (எலக்ட்ரான்) அதன் எதிர்-துகளுடன் (பாசிட்ரான்) இணைந்து சக்தியாக மாறுவதை (annihilation), வடலூர் இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த சம்பவத்தை சொல்லி விளக்குவார். பேருந்தில் ஜன்னல் இருக்கைகள் முதலில் நிரம்புவதை வைத்து, எலக்ட்ரான்கள் அதன் சுழல் பாதைகளில் ஒற்றை ஒற்றையாய் அமர்கின்ற விதியை எளிதாக்குவார். பெருமாள் கோவில் சுவற்றின் வெள்ளை மற்றும் காவி வண்ண பூச்சு வரிசைகளை வைத்து ஒளிச்சிதறல்  (ஸ்பெக்ட்ரம்) எடுக்கப்படும். குழாயின் கீழ் உள்ள குடத்தில், நீர் நிரம்புகின்ற ஓசையின் மாற்றங்களை வைத்து ‘டாப்ளர் விளைவு’ நிகழும். இப்படி எண்ணற்ற உவமைகள். ஏராளமான கதைகள். விஞ்ஞானத்துடன் சேர்ந்து விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புகள் பல தருவார். ஒரு பாம்பு தன் வாயால் அதன் வால் கவ்விய வடிவம் கனவில் தோன்றியதை வைத்து August Kekulé உருவாக்கியதுதான் Benzene Ring என்பது ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை மேலும் சுவாரசியமாக்கியது.  நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற தேற்றம் E = m*cஸ்கொயர். மேக்ஸ் பிளாங்க் தேற்றம் E = hv, அதற்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஒரு காகிதத்தில் இந்த இரண்டு முக்கிய தேற்றங்களை இணைத்து, டி ப்ரொக்லீ என்பவர் அலைநீளம் தேற்றத்துக்காக நோபல் பரிசு வென்றதை த்ரில்லர் கதை போல விளக்குவார் விஷ்வகுமார். அறிவுத்துறை எப்படி ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது என்பதை எண்ணி எனது ஆர்வம் பெருகியது. சட்டென்று எனக்கு  பாட புத்தகங்கள் அனைத்தும் கதை புத்தகங்கள் போல் தோன்றின. நனவிலும் கனவிலும் கதைகள் விரிந்து வளர்ந்தன. கற்றல் என்பது மிக இனிமையாகி விட்டது. பரிட்சை ஹாலில் கேள்விகளுக்கு எக்ஸ்ட்ரா காகிதங்களை வாங்கி ஒரு எழுத்தாளன் போல கதைகளை எழுதித் தள்ளினேன். +2 ரிசல்ட் வந்ததும் மதிப்பெண்கள் காண்பிக்க ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன்.

    ‘அடுத்தது என்ன?’ என்றார் விஷ்வகுமார்.

    ‘ஜிப்மர்ல மெடிக்கல் படிக்க ஆசை. என்ட்ரன்ஸ் எழுதி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கேன். கிடைப்பது சாத்தியமில்லை சார்’ என்றேன்.

    ‘வேறென்ன ஆப்ஷன்ஸ் வெச்சுருக்க?’ என்றார்.

    ‘தெரியல சார்’ என்றேன்.

    ‘என்னது? வீட்ல செய்தித்தாள் வாங்கும் பழக்கமுண்டா?’

    ‘இல்லை சார்’ என்றேன்.

    அருகே மேசையின் மீது இருந்த செய்தித்தாளை பிரித்து, குறிப்பிட்ட ஒரு பக்கத்தை தேடினார்.

    ‘’Regional Engineering College அதாவது மண்டல பொறியியல் கல்லூரியின் விண்ணப்ப படிவம். அப்ளை பண்ணு. முயற்சி திருவினையாக்கும்’’ என்று ஆசிர்வதித்தார்.

    அவரது எட்டு வயது மகள் சிரித்துக்கொண்டே வாழ்த்து சொல்லி எனக்கு டாட்டா காண்பித்தாள். ஆசிரியர் அன்று கத்திரிக்கோலால் எடிட் செய்து தந்தது செய்தித்தாளை மட்டுமல்ல, என் தலைவிதியையும் கூட என்று அப்போது தெரியவில்லை.

    large.IMG_4522.jpeg.e1529034f3045f4faffcc901a207def6.jpeg

    நமது மரபு அணுக்களில் மாற்றம் செய்கின்ற தொழில்நுட்பம் இன்று மிகவும் எளிதாகி, DNA எடிட்டிங் தாண்டி RNA எடிட்டிங் வரை வந்துவிட்டது. டிசைனர் உடைகள் போல டிசைனர் குழந்தைகள் உருவாக்க இயலும். ஆட்டிசம் குறைபாடுகள், சர்க்கரை நோய், ஆட்டோ இம்யூன் போன்ற பல  நோய்களுக்கு தீர்வாக ஜீன் எடிட்டிங் நம்பிக்கை தருகிறது. தாவரங்கள், மிருகங்கள் தாண்டி மனித மரபணுக்களில் சோதனை செய்வதற்கு பல தேசங்களில் தடையென்றாலும், முயற்சிகள் தொடர்ந்தபடிதான் உள்ளது. Watson & Crick விஞ்ஞானிகள், மரபணுவின் வடிவத்தை முதலில் கண்டுபிடித்த நாளன்று , கேம்ப்ரிட்ஜ் பரிசோதனை கூடத்தின் அருகில் இருந்த ஈகிள்ஸ் பப் உள்ளே சென்று, ‘உயிரின் ரகசியத்தை’ கண்டடைந்து விட்டதாக அங்கே அறைகூவல் விடுத்துள்ளனர். டபுள் ஹெலிக்கல் டிஎன்ஏ மாடலுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நான் நின்றிருந்த கார்ப்பஸ் க்ளாக்கிலிருந்து பத்தடி தூரத்தில் ஈகிள்ஸ் பப் தெரிய, உள்ளே நுழைந்தேன். உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகள் பலர் குழுமியிருந்தனர். மிக அருகில் கேவண்டிஷ் பரிசோதனைக் கூடம். ஜே.ஜே தாம்ஸன் எலக்ட்ரானை  கண்டுபிடித்ததும், ஜேம்ஸ் சேட்விக் நியூட்ரானை கண்டுபிடித்ததும் இங்குதான். மாபெரும் அறிவியல் திருப்புமுனைகளை தந்த மகத்தான மனித மனங்கள் நடந்து சென்ற தெரு. அத்தெருவில் சிறிது தூரம் நடந்து சென்று, வலது புறம் திரும்பியவுடன் சார்லஸ் டார்வின் வசித்த வீடு தென்பட்டது. தற்சமயம் இது போன்ற வீடுகளில் கல்லூரி மாணவர்கள் வாடகையெடுத்து வசிக்கிறார்கள். ஒரு அறையிலிருந்து பாட்டு சப்தமும், கூச்சலும், ஆரவாரமும் பீறிட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையை நிரூபிக்க முயல்கிறார்களோ?

     

    மேய்ச்சல் நிலங்களில் வேலி போட்டு வாழ்வாதாரத்தை தடுத்து, மெழுகுவத்தி ஏற்றுவதற்கு வரி கட்ட சொன்ன அதிகாரத்தை எதிர்த்து வெடித்த குடியானவர்களின் புரட்சி, கேம்ப்ரிட்ஜ்  மண் வரை பரவியுள்ளது. அரச வம்சங்களுக்கும், பிரபு குடும்பத்தாருக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கல்வியானது, குடியானவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நடந்த போராட்டங்களை “Town versus Gown” என்று கூறுகிறார்கள். கேம்ப்ரிட்ஜின் முதல் எண்ணூறு வருட சரித்திரத்தில் ஆண்கள் மட்டுமே படித்துள்ளனர். சென்ற நூற்றாண்டில்தான் பெண்களுக்காக கல்லூரிகளின் கதவுகள் திறந்து, அவர்களுக்கு பட்டமளிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இரண்டு ராணிகள் கொடையளித்து உருவான கல்லூரியின் பெயரை Queens கல்லூரி என்பதா அல்லது Queen’s கல்லூரி என்பதா என்று குழம்பி, இறுதியில் Queens’ கல்லூரி என்று பெயரிட்டு மொழிச்சிக்கலை தீர்த்துள்ளனர். குயின்ஸ்’ கல்லூரியை தாண்டி கிங்ஸ் கல்லூரியை வந்தடைந்தேன். கிங்ஸ் கல்லூரி ஆறாம் ஹென்றி கொடையளித்து உருவானது. சுற்றி பார்க்க நுழைவு கட்டணம் ஐந்து பவுண்டுகள். ரசீது வாங்கி உள்ளே நுழைந்தேன். நவீன கணிப்பொறியியலின் தந்தை ”ஆலன் ட்யூரிங்” படித்த கல்லூரி இது. பிரம்மாண்டமான வாசல். சீரான பச்சை புல்வெளி. வண்ண மலர்கள் நிறைந்த தோட்டங்கள். அருகிலேயே ஒரு தேவாலயம். கல்லூரியின் பின்புறம் கேம் நதி ஓடிக்கொண்டிருந்தது. செல்வமும் செழிப்பும் இணைந்து கிங்ஸ் கல்லூரியின் ஒவ்வொரு புள்ளியிலும் ஞானத்தின் செறுக்கு தெறித்தது. மீண்டும் வாசலுக்கு வந்து, வடக்கு நோக்கி நகர்ந்து நியூட்டன் படித்த ட்ரினிட்டி கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன். அவரது அறையின் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஆப்பிள் மரத்தை சிலர் புகைப்படம் எடுக்க, சிலர் காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தனர். கல்லூரி விடுமுறை காலத்தில் நியூட்டன் தனது கிராமம் சென்றபோது, அங்கு விழுந்த ஆப்பிளை பார்த்த பின் புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்றும், அந்த மரத்தின் சந்ததிதான் ட்ரினிட்டி கல்லூரியில் நட்டு வைத்து வளர்க்கப்படுகிறதென்றும் பல கதைகள் உலவுகின்றன. கல்லூரியின் ஆலயத்தில் இருந்த நியூட்டனின் சிலையருகில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ட்ரினிட்டி கல்லூரி எட்டாம் ஹென்றியின் கொடை. நான் காலையிலிருந்து டஜன் கணக்கான கல்லூரிகளை கண்டு, அதில் படித்த அறிஞர்களை கிரகிக்க முயன்று மலைத்துப்போய் நின்றிருந்தேன்.  ஜவஹர்லால் நேரு, எம்.எஸ். ஸ்வாமிநாதன், மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகளை உருவாக்கி, இந்தியாவின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானித்ததில்  கேம்ப்ரிட்ஜ் மண்ணுக்கு பெரும் பங்குண்டு என்றே கூறலாம்.

    இந்தியாவின் பெரிய வரைபடம் ஒன்றின் முன்பாக நான் நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் பல்ப் ஒன்று எரிய, திருச்சி துவாக்குடியில் REC கவுன்சலிங் பரபரப்பான கட்டத்தை எட்டியது. அமைதிப்படை அனுப்பிய காரணத்தால் அமைதிப்பூங்காவில் ராஜீவ்காந்தி படுகொலை அரங்கேற, பஞ்சாப் தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள், அஸாம் தீவிரவாதிகள் என தேசத்தின் அனைத்து முனைகளும் பதட்டத்தில் இருந்த காலமது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தெற்கு, மத்திய, மற்றும் வடஇந்தியாவில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்துவிட்டதால் சீட்டுகள் தீர்ந்து, அந்த மாநிலங்களின் மீது மினுக்கிய பல்புகள் விரைவாக அணைந்தன. என் முறை வந்தபோது பஞ்சாப், காஷ்மீர், அஸாம் ஆகிய மூன்று பல்புகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. நான் விரல்களை உயர்த்தி பஞ்சாப், காஷ்மீர் என்று நகர்த்தி கடைசியில் வடகிழக்கு நோக்கி அஸாம் மாநிலத்தை தேர்ந்தெடுத்தேன். அல்லது அஸாம் என்னை  தேர்ந்தெடுத்தது என்றும் சொல்லலாம்.

    புதுவையை சுற்றி கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் என எனது பால்யகால பயணங்கள் யாவுமே பேருந்து சார்ந்தவைதான். பதினெட்டு வயது வரை நான் ரயிலில் பயணித்ததே இல்லை. முதுகில் பதினெட்டு கிலோ லக்கேஜ்ஜையும், நெஞ்சத்தில் பதினெட்டு வருட நினைவுகளையும் சுமந்து கொண்டு, புதுவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டேன். காகிதத்தில் நான் கிறுக்கிய ரயில் ஓவியங்களை விட பிரம்மாண்டமாய் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  நின்றிருந்தது. வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல ரயில் விசுக்கென்று கிளம்பியதும், என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. டி.வியில் சேனல்கள் மாறுவது போல, ரயிலின் ஜன்னல்கள் வழியே தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று காட்சிகள் மாறின. பல வித முகங்கள், மொழிகள், உணவுகள், உடைகள், வண்ணங்கள். இயற்கை காட்சிகள். ஒரிசாவில் பந்த் அறிவித்ததால் காலை துவங்கி மாலை வரை ரயில் ஒரே இடத்தில் நின்று விட்டது. கொல்கத்தாவிலிருந்து கவுஹாத்தி செல்ல வேண்டிய காமரூப் எக்ஸ்பிரஸ்ஸை இனி பிடிக்க இயலாது. அதன் பிறகு Barak Valley ரயில். பள்ளி நாட்களில் இந்திய வரைபடத்தில் நதிகளின் பெயரை எழுதியதுண்டு. அந்த நதிகள் எல்லாம் இன்று உயிர்பெற்று பெருக்கெடுத்து பேரோசையுடன் ஓடிக்கொண்டிருந்தன.  கூவம், கொசத்தலையாறு, ஆரணி, பென்னா, கிருஷ்ணா, கோதாவரி, நாகவல்லி, மகாநதி, பிராமணி, ஹூக்ளி , சுபர்னரேகா, கங்கை, தீஸ்தா, பிரம்மபுத்ரா, பராக் நதி என மிக நீளமான ஒரு ட்ராலி ஷாட் ஏழு உதயங்களையும், ஏழு அந்திகளையும் காண்பித்த பின் நிறைவடைந்தது. நான் கல்லூரிக்குள் காலடி வைத்தேன்.

    அந்திப்பொன் ஒளி பட்டு கேம் நதி ஜொலித்துக் கொண்டிருந்தது. நான் மெல்ல நடந்து கேம் நதியின் படகுத்துறை  வந்து சேர்ந்தேன். படகில் துடுப்பு போட்டு செல்வது Rowing. நீண்ட கழி ஒன்றை நீருக்குள் உள்ள மண்ணில் செலுத்தி துழாவியபடி செல்வது Punting. கேம் நதியில் Punting மிகப் பிரபலம். கேம்பிரிட்ஜ் கல்லூரிகளை படகில் Punting செய்தபடியும் சுற்றி காட்டுகிறார்கள். கோடைக்கால சுற்றுலா பயணிகளை குறிவைத்து வழியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள். நகரின் மையத்தில் சந்தை சுறுசுறுப்பாக இயங்கியது. ஓவியங்கள், கைவினை பொருட்கள், கலைப் பரிசுகள் விற்பனைக்கு இருந்தன. கேம்பிரிட்ஜ் கல்லூரிகளின் படம் அச்சிட்ட டீ சர்ட், டீ கப், பை, பேனா, டை, தொப்பி, பொம்மைகள் என்று கடைகளில் பல வகை  நினைவுப்பொருட்களை விற்றனர்.  ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளை துரிதமாய் வினியோகிக்க, இரு சக்கர வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து கொண்டிருந்தன. நான் ராமானுஜத்தை நினைத்துக் கொண்டேன். முதல் உலகப்போர் நேரத்தில், சைவ உணவு கிடைக்காமல்,  இனவெறி தாக்குதலில் சிக்கி, கடுங்குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 32 வயதிலேயே கணிதமேதை இறந்துவிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளின் தகவல் பரிமாற்றங்களை, ரகசிய குறியீடுகளை கட்டுடைப்பதற்காக புதிய கணிப்பொறி ஒன்றை வடிவமைத்தார் ஆலன் ட்யூரிங். இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நிர்ணயித்த ஆலன் ட்யூரிங், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அவரை கட்டுப்படுத்த மருந்து செலுத்தியதின் விளைவாக அவரது ஹார்மோன்கள் குழம்பி, மார்பகங்கள் உருவாகி, உளவியல் பாதிக்கப்பட்டு 41 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். மகாத்மா காந்திக்கு தோட்டாக்களை பரிசளித்த சமூகம்தானே நாம்? 

    ஊழ் என்றால் என்ன? தலைவிதியா? கடவுளா? அதற்கும் அப்பால் அறிய முடியாத ஒன்றா? ஊழ் என்பது விதி என்றால் விதியை மதியால் வெல்வது சாத்தியமா? ஊழ் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றால் பிறகு மதியால் எப்படி அதை மாற்ற இயலும்? ஒரு தனி மனிதனின் ஊழ் என்பது, சமூகத்தின் ஊழ் மற்றும் பிரபஞ்ச விதிகளுடன் பிணைந்தே இருப்பதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனியொரு மனிதனால் அறிவின் பாதையில் சென்று அகழ்ந்தெடுக்கப்படுகின்ற கணித சூத்திரங்கள், அறிவியல் விதிகள், மகத்தான கண்டுபிடிப்புகள் யாவும் நோபல் பரிசுகளை வென்றாலுமே கூட, ஒரு சமூகமாக அதை கையாளுவதற்கான தகுதியையும் முதிர்ச்சியையும் நாம் அடையாத பட்சத்தில், அந்த கண்டுபிடிப்புகள் அழிவில் முடியக் கூடும். நல்லூழ் தீயூழ் ஆவதும், ஆகூழ் போகூழ் ஆவதும் இப்படித்தான். அணுவை பிளந்து அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்றாலும், அணு ஆயதங்களையும், இயற்கை பேரிடர்களையும் கணக்கில் கொண்டு இன்று உலகில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றது. மரபணு சோதனைகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. ஆலன் ட்யூரிங் மீதான குற்ற வழக்குகளை தள்ளுபடி செய்த இன்றைய நீதிமன்றம், பழைய தீர்ப்புகளை மாற்றி எழுதியது. அரசாங்கமும் சமூகமும் மன்னிப்பு கோரி, ஐம்பது பவுண்டு கரன்சி நோட்டில் ஆலன் ட்யூரிங் படத்தை அச்சிட்டு கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் உள்ள பூர்வகுடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்காக, வளர்ந்த சமூகங்கள் இன்று மண்டியிடுகின்றன. கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் செய்கின்ற பாவங்களுக்கு, எதிர்காலத்தில் பிராயச்சித்தம் தேடுகின்ற நிறுவனத்தின் பெயர்தான் சமூகமோ? இந்தியாவின் ஆன்மா காந்தி. ஆன்மாவை கொன்றுவிட்டு தான் நாமும் வேகமாய் வளர்கின்றோம். 

    அறமற்ற ஒரு சமூகத்தில் அறத்தை நிலைநாட்டுவதே நமது கடமையும் தர்மமும். அப்படி ஒரு செயலில், நம் உயிரே போனாலும் பரவாயில்லை என்று நம்மை தீவிரமாக இயங்க வைப்பதே ஊழ்.  செயலின் நோக்கம்தான் முக்கியமே தவிர, செயலின் பலன்கள் அல்ல. ஒரு செயலின் நோக்கத்தை பொறுத்துதான் ஊழ் என்பது, நல்லூழாகவோ தீயூழாகவோ வடிவமெடுத்து நம்முடன் கைகோர்க்கிறது. யுகந்தோறும் ஊழ் நம்மை கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. அதை தரிசிக்க பூர்வ ஜென்மம், மறுபிறவியெல்லாம்  தேவையில்லை. வாழும் காலத்திலேயே சற்று கூர்மையாக நம்மை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும். 

    இப்படித்தான் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து, கேம்பஸ் நேர்காணலுக்காக ஒரு கல்லூரிக்கு செல்ல கோரினார்கள். சில காரணங்களால் என்னால் வர இயலாது என்றேன். அலுவலக பஸ் கல்லூரி நோக்கி கிளம்பிவிட்டது. நான் மாணவர்களை பற்றி யோசித்தேன். சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து வரும் சில மாணவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச தடுமாறுவதுண்டு. மாற்றுத்திறனாளி மாணவர்களை வழக்கமான இண்டர்வியூ முறைகள் பதட்டமாக்கிவிடும். மாணவர்களின் தயக்கத்தை போக்கி சிறிது நம்பிக்கை அளித்தால் அவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை தரக்கூடியவர்கள். கேம்பஸ் இண்டர்வியூ என்பது அவர்கள் வாழ்க்கையை மாற்றவல்ல ஒரு வாய்ப்பு. மறுநாள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நான் கல்லூரிக்கு வந்து விடுவதாக கூறினேன். சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து புதுவை பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தேன். பரபரப்பான சூழலில் HR டீம் என் கையில் ஒரு பயோடேட்டாவை கொடுத்து ஒரு மேசையை காண்பித்தனர். அங்கே ஒரு பெண் தனது நேர்காணலுக்காக காத்திருந்தாள்.

    யார் இவள்? எனக்கு முன்பாக வந்து இங்கே அமர்ந்து இருக்கிறாள். வட்ட முகம். நெற்றியில் விபூதி. மலர்ந்த சிரிப்பு. பரிச்சயமான இந்த முகத்தை இதற்கு முன்பு எங்கோ பார்த்த நினைவு. 

    பயோடேட்டாவை பார்த்தபடி, ,’பெயர்?’ என்றேன். 

    அவள் தனது முழுப் பெயரை சொன்னாள்.

    நான் நம்ப முடியாமல் ‘தந்தையின் பெயர்?’ என்று மீண்டும் கேட்டேன். 

    ‘விஷ்வகுமார்’ என்றாள்.

    ‘என்ன வேலை செய்கிறார்?’

    ‘ஆசிரியர்’ என்றாள்..

     ‘எந்த பள்ளியில் ஆசிரியர்?’

    சொன்னாள்.

    நான் மனசுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு வாழ்த்து சொல்லி டாட்டா காண்பித்த சிறுமி இவள்.

    ‘யுவர் டெக்னிக்கல் ரவுண்ட் ஸ்டார்ட்ஸ் நௌ’ என்றபடி நான் கேள்விகளை கேட்க, அவள் பளிச்சென்று பதில்களை சொல்லத் துவங்கினாள். 

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்

    ***

     

    வெற்றிராஜா 

     

    புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

     

    https://akazhonline.com/?p=6983

  19. இன்னும் 48 மணித்தியாங்களுக்கு குறைவான நேரமே உள்ளது. யாழ்களப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் தாமதிக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.

    போட்டியில் கலந்துகொண்ட @ஏராளன் மற்றும் @நிலாமதி அக்கா வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் குறைந்தது 5 பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி நடக்கும்!

    • Like 1
  20. 10 hours ago, Kandiah57 said:

    அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம்.  திமுக உடையதா   ??🤣

    மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன்.

    கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும்.

    அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது.

    கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு.

    எல்லாமே பகடை பன்னிரண்டுதான்!

    9 hours ago, பையன்26 said:

    இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை 

    இதை காண‌ வில்லை ஹா ஹா................... 

    இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது!

    9 hours ago, பையன்26 said:

     

    கிருஷ்ண‌கிரில‌

     

    வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு

     

    பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪

    வாய்ப்பில்லை ராஜா!😜

    7 hours ago, Kandiah57 said:

    எந்த கட்சி வென்றாலும். எனக்கு சந்தோசம் தான்   ஆனால்  நாம் தமிழர் ஒரு 10% வரும் என்று எதிர்பார்த்தேன்   .    ...கணிப்பில் வரவில்லை   அதோபோல் பாரதிய ஐனத கட்சி   20% எடுப்பார்கள் என்று எதிர்பார்க்வில்லை   பாஐக   பெரிய வளர்ச்சி தான்   காசிக்கு நீங்கள் போங்கள். நான் வரவில்லை 🤣🤣🤣

    பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

    • Like 3
  21. மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறங்கியுள்ளார். 

    அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். 

    பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்போட்டியிடுகிறார். 

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதன் ஜெயபாலன் போட்டியிடுகிறார்.

    திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தேனி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். 

    இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம் 

    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது

    தேனி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி),  போடி,  கம்பம்,  உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் (தனி) பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

    M6qrDAPN-Screenshot-2024-04-17-070833-76

    திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 39% வாக்குகளைப் பெற்று தேனி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார்.

    அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…,தேனி தொகுதியில் இந்த முறை தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

     

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-theni-constituency-dmk-thanga-tamilselvan-wins-with-39-percentage-votes-admk-got-22-percentage-votes/

     

    மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?

    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ராமநாதபுரம் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. 

    இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா ஜெயபால்போட்டியிடுகிறார்.

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில்கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

    ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  ராமநாதபுரம்,  முதுகுளத்தூர், அறந்தாங்கி,  பரமக்குடி (தனி),  திருச்சுழி மற்றும் திருவாடனை பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

    ramanathapuram-1-768x432.jpg

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ராமநாதபுரம்தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

    பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 22% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, ராமநாதபுரம் தொகுதியில் இந்த முறை நவாஸ்கனி வெற்றி பெற்று மீண்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/iuml-candidate-navaskani-won-ramanathapuram-loksabha-constituency-in-minnambalam-mega-survey/

    மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அண்ணாமலைபோட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.

    திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

    கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பல்லடம்,  சூலூர்,  கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் (வடக்கு),  கோயம்புத்தூர் (தெற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்

    coimbatore-768x432.jpg

    திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 36% வாக்குகளைப் பெற்று கோயம்புத்தூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார்.

    அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும்

    பாஜக வேட்பாளர் அண்ணாமலை 29% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, கோயம்புத்தூர் தொகுதியில் இந்த முறை கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

     

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-ganapathy-rajkumar-will-win-coimbatore-constituency-admk-bjp-slightly-behind/

    மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் டாக்டர் பசுபதி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தி.மகேஷ்குமார் போட்டியிடுகிறார்.

    திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வேலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

    வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  வேலூர்,  அணைக்கட்டு,  குடியாத்தம் (தனி),  வாணியம்பாடி,  ஆம்பூர் மற்றும் கீழ்வைத்தினன் குப்பம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

    gECbQ3lX-vellore-768x432.jpg 

    திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 40% வாக்குகளைப் பெற்று மீண்டும் வேலூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார்.

    பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 34% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி 21% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தி.மகேஷ்குமார் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, வேலூர் தொகுதியில் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

     

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-vellore-constituency-report-dmk-kadhir-anand-wins/

     

    மின்னம்பலம் மெகா சர்வே: புதுச்சேரி… புது எம்.பி யார்?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.மேனகா போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்,

    puducherry-768x432.jpg

    காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 47% வாக்குகளைப் பெற்று மீண்டும் புதுச்சேரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

    பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 39% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்,

    அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும்,

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.மேனகா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…,புதுச்சேரி தொகுதியில் இந்த முறையும் வைத்திலிங்கம் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

     

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-puducherry-constituency-congress-vaithilingam-wins/

     

  22. மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. 

    முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ்கட்சியின் சிட்டிங் எம்பி விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். 

    பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்குகிறார். நாம்தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிஃபர் போட்டியிடுகிறார்.

    கன்னியாகுமரி தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் சற்று வலுவாக இருக்கும்நிலையில், போட்டி இவர்களுக்கு இடையில்தான் தீவிரமாக இருக்கிறது.

    களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம் 

    இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்

    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது

    கன்னியாகுமரி  மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட  கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்  ஆகிய  ஆறு சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில், 

    kanyakumari.jpg

    திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 45% வாக்குகளைப் பெற்று  குமரியை மீண்டும்கைப்பற்றத் தயாராகிறார்.

    பாஜகவின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 33%  வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறார்.

    மீனவ முக்குவர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுகவின் வேட்பாளரான பசிலியான் நசரேத் 17%  வாக்குகளைப் பெறுகிறார்.

    நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிஃபர் 4% வாக்குகள் பெறுகிறார்.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரியில்  மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரசின் கொடியே பலமாக பறக்கிறது.

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-kanniyakumari-constituency-congress-vijay-vasanth-wins-45-percent-votes/

     

    மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராபர்ட் புரூஸ் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பா.சத்யா போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். 

    இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

    திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  ஆலங்குளம்,  திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை,  நாங்குநேரி,  இராதாபுரம் பகுதிகளில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

    WhatsApp-Image-2024-04-16-at-22.01.55_bb

    காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 41% வாக்குகளைப் பெற்று திருநெல்வேலி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார்.

    பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 24% வாக்குகளைப் பெறுவார் என்றும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா.சத்யா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, திருநெல்வேலி தொகுதியில் இந்த முறை ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-robert-robert-bruce-won-tirunelveli-constituency/

    மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ஜான்சிராணிபோட்டியிடுகிறார்.

    விசிக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.

    இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம் 

    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது

    சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரியலூர்,  ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம்,  காட்டுமன்னார்கோயில் (தனி) மற்றும் குன்னம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

    chidambaram.jpg

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும்சிதம்பரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

    அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, சிதம்பரம் தொகுதியில் இந்த முறையும் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்று மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/vck-candidate-thirumavalavan-won-chidambaram-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/

    மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். 

    பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில்ஆ.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

    திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நீலகிரி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

    நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான பவானிசாகர் (தனி),  உதகமண்டலம்,  குன்னூர்,  கூடலூர் (தனி),  மேட்டுப்பாளையம் மற்றும் அவினாசி (தனி) பகுதிகளில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

    WW8dKQ83-nilgiris.jpg

    திமுக வேட்பாளர் ஆ.ராசா 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் நீலகிரி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார்.

    அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும்

    பாஜக வேட்பாளர் எல்.முருகன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, நீலகிரி தொகுதியில் இந்த முறையும் ஆ.ராசா வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது.

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-a-raja-will-win-in-nilgiris-constituency-admk-placed-second/

    மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

    2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

    இந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆர்.மணி களமிறங்கியுள்ளார். 

    அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார்.

    திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்

    களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

    உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். 

    இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம் 

    18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண் பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது

    தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  தர்மபுரி,  பாலக்கோடு,  பென்னாகரம்,  பாப்பிரெட்டிபட்டி,  அரூர் (தனி) மற்றும் மேட்டூர் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… 

    F9olyu0O-dharmapuri-768x432.jpg

    திமுக வேட்பாளர் ஆர்.மணி 37% வாக்குகளைப் பெற்று தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

    பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

    அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் 28% வாக்குகளைப் பெறுவார் என்றும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

    1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    ஆக…, தர்மபுரி தொகுதியில் இந்த முறை ஆர்.மணி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

     

    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dharmapuri-constituency-dmk-r-mani-wins-with-37-percentage-votes-soumiya-anbumani-came-second-place/

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.