Jump to content

சண்டமாருதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2554
  • Joined

  • Last visited

  • Days Won

    33

Posts posted by சண்டமாருதன்

  1. 8 hours ago, ராசவன்னியன் said:

    ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்"

     

     

    8 hours ago, ராசவன்னியன் said:

    பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..!

    இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும். 

    • Like 1
  2. On 26/9/2020 at 03:53, tulpen said:

    சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள்  இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி  வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும். 

    உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்

    எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். 

     என்னுமொரு சந்தர்ப்பத்தில்  எனது கருத்துக்களை பதிகின்றேன். 

  3. 15 hours ago, ரஞ்சித் said:

    இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம்.

    அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான்.

    1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும்.


    2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது.


    3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.

     

    தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின்  தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும்.  உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும். 

    • Like 2
  4. 12 hours ago, விசுகு said:

    இத்துடன் 

    14 - இவற்றையெல்லாம் மறுத்து மறந்து சிங்களவனுடன் வாழலாம்  வாழ்வோம் என அரைவாசித்தமிழர் தயாரான நிலையில்??????

    சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. 

    தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்)

    இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். 

    வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். 

    ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. 

    தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. 

    தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும்  அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். 

    12 hours ago, Justin said:

    ஈழத்தில் தமிழ் தேசியம் என்பது, நிலம், மொழி, அபிவிருத்தி என்ற மூன்று முனைகளில் முன்னேற வேண்டும். இந்த மூன்று முனைகளிலும் வேலை செய்யக் கூடிய தமிழர்கள்  எந்த அணியில் இருந்தாலும் ஆதரவு மறைமுகமாவது கொடுக்கப் பட வேண்டும்!

    சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும். 

    • Like 6
    • Thanks 1
  5. On 14/9/2020 at 17:18, goshan_che said:

    என்னடாப்பா யாழில் ஆமான திரி இது ஒன்றுதான் ஆனால் இது காத்து வாங்குது.

    தேசிய இனம் என்றால் என்ன?

    இனத் தேசியம் என்றால் என்ன?

    அதன் ஏற்று கொள்ளபட்ட வரையறைகள் என்ன?

    இந்த வரையறைகளின் படி தமிழ் தேசியம் என்றால் என்ன?

    இவற்றை பற்றியும் இந்த திரியில் ஆராய்ந்தால் நல்லம்.

    பிகு: யாழின் ஒரு பண்பட்ட கருத்தாளருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலின் விளைவாக,  இந்த கேள்விகளுக்கான விடையை ஒரு சீரான வகையில், விஞ்ஞான பூர்வமாக அணுக விரும்புகிறேன்.

    உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

     

     

    யார் தமிழர்? தமிழ் தேசியம் என்பதன் வரையறை யாது? என்ற தெளிவு எமக்கு இருந்தால் மட்டுமே அதை நாம் அடுத்த தலைமுறைக்கும் கடத்த முடியும், என்பது என் தாழ்வான கருத்து.

     

    உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். 

    ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை  தமிழ் தேசீய இனமாக கருதி  அவர்கள் மீது ஒடுக்குமுறையை  செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். .

     

    பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து.  கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன். 

     

     

     

     

    • Like 1
  6. 8 hours ago, suvy said:

    இது ஏதோ வழக்கமானது என்று கடந்து போவதைவிட கொஞ்சம் கவனித்து பாருங்கள், வித்தியாசமான மனிதர், வித்தியாசமான பேட்டி .....!

     

    இணைப்பிற்கு நன்றிகள்.இவரது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளவும் உணர்ந்துகொள்ளவும்  நிறைய இருக்கின்றது. 

     

  7. 1 hour ago, வாத்தியார் said:

    எங்கள் அம்மம்மா அப்பப்பா  போன்றவர்களுக்கு உயிராபத்து வந்தால் நாங்கள் எப்படி உணர்வோம் 🤒

    எமது அம்மா அபபா சகோதரங்கள் பிள்ளைகளுக்கு உயிராபத்து நேரும் போது உணர்வுகள் மிக கனதியாக இருக்கும்.  அதே  கனதி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.. எதிர்கால சந்ததிகளுக்கு உறவுகளின் பிரிவு சாதராண ஒரு நிகழ்வாக இருக்கலாம்.  தாய் தந்தையரின் செத்தவீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கலாம்.  இயற்கையோடு இணைந்த வாழ்வின் உணர்வுகளும்  இயந்திரமயமான இன்றைய தொழில நூட்ப உலகில் இணைந்த  வாழ்வில் உணர்வுகளின் கனதி  ஒன்றாக இருக்கப்போவதில்லை.. மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்து வாழும் விலங்குகள் பறைவைகளிடம் பரிவு பாசம்  பிரிவு உணர்வுகள் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றது. கால்நடையாக சென்ற மனிதன் குறுகிய நேரத்தில்  வேகமாக பயணிக்க  குதிரை மாடுகளை பயன்படுத்தினான் பின்னர் வாகனங்கள் விமானங்கள் என முன்னேறி இன்று  கணனி தகவல் தொழில் நுட்ப காலத்தில் மானுடத்தின் கண்டுபிடிப்புகளே  அவனது நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது..  நேரம் பறிபோகும் போது உணர்வுகள் சுருங்கி மனிதனும் இயந்திரத் தன்மைக்கு மாற நேரிடும். காதல் காமம் பிறப்பு இறப்பு  இவை சார்ந்த உணர்வுள் மாறுபடும்.  இவ் உலகில் கொடிய சுயநலம் மிக்க அறிவுத் திறன் உள்ள விலங்கு என்றால் அது மனிதர்கள் தான்.. நான் எனது பிள்ளைகள் பெற்றோர்கள் உளளடங்கலாக மனிதர்கள் அழிவது ஒரு அற்ப நிகழ்வாக எதிர்காலத்தில் இருக்கும். 

     

  8. 1 hour ago, குமாரசாமி said:

    கலோ கொரோனா ஏலுமெண்டால் டச் பண்ணிப்பாருமன் பாப்பம்.😷

    Bild

    Bild

     

    1 hour ago, Nathamuni said:

    யாழ்ப்பாணத்தில் போலீஸ், புலிகளை தேடுவதுபோல், துப்பறிந்து, யார், யார் இவரது தொடர்பில் இருந்தார்கள் என தேடுகின்றனர். நீங்களாவே வந்துவிடுங்கள், ஓடி ஒளியாதீர்கள், உங்கள் நன்மைக்காக என்று ஊரடங்கு உத்தரவு மத்தியிலும் ஸ்பீக்கர் வைத்து சொல்கின்றனர்.

    படம் இதைக் கொண்டிருக்கலாம்: 17 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் சூட்

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பெண்கள்.... அந்த வகையில் பாராட்ட வேண்டும். 

    பஸ்டாருக்கு வலது பக்கத்தில், வலது கையில் வாட்ச் கட்டின லேடி தான் அவரின் செகிரேட்டரி அண்ட் வைப் போல கிடக்குது.

    கொரோன அணுகாது எண்டு கூட்டம் போட்டு, கூட்டம், கூட்டமா கொரோன வைரஸை கொண்டு திரிச்சிருக்குதப்பா மனிசன்....

    உந்த பாவத்துக்கு, பாவமன்னிப்பு கேட்க வேண்டும். என்னவா இருந்தாலும், சுகம் பெற வேண்டுவோம், மனிதாபிமானத்துடன்...

     

    இந்த இரண்டு நிகழ்விலும் எவ்வளவு புரிதல் இருக்கின்றது.   நாட்டில் மலேரியா வந்தால் வேப்பம் பட்டையை அவிச்சு குடிப்பது வழக்கம். நீண்ட காலமாக வேம்பு மஞ்சள் போன்றவற்றை  நோய்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள்.  அதை இங்கும் முயற்சிக்கின்றார்கள்.  இதனால் கட்டுப்படுத்தலாம் குணமாக்கலாம் என்பது வேறு விசயம். ஆனால்  ஏதோ ஒரு முயற்சியை  வெறும் மத  வழிபாடு ஆராதனை போதனை என்பதை கடந்து செய்கின்றார்கள். 

  9. 1 hour ago, ராசவன்னியன் said:

    ரெயிலிலிருந்து இறங்கி  வரும் பயணிகளை ஒழுங்காக கொரானா தொற்று பற்றி சோதனைக்கு ஸ்கேன் செய்யாமல் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததால், இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

    ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அரசு ஊழியர் இப்படி செயல்பட்டால் எப்படி வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி மக்களை சாவிலிருந்து காக்க முடியும்..?

     

     

     

    இந்த லட்சணத்தில இருந்தா குறைந்தது இருபது வீதம் பேருக்கு அதாவது முப்பது கோடிபேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகும் போல இருக்கு. 

  10. போராட்ட காலத்தில் சில நிகழ்வுகள் போராட்டத்தின் போக்கை மாற்றியிருக்கும் என்ற கருத்துண்டு அவற்றில் சில பூநகரி முகாம் கைப்பற்றப்பட்டிருந்தால் , ஆனையிறவு கைப்பற்றப் பட்டிருந்தால்,  ஆனையிறவுக்கு உதவிக்கு வந்த படைகளை கப்பலில் இருந்து இறங்க முன்ன தாக்கியிருந்தால் என்று பல நிகழ்வுகள் இருக்கின்றது. அவற்றுக்கு ஒத்ததே அன்ரனியும், இவரே கருணா இடத்தில் இருக்கவேண்டியவர் மட்டுமல்லாமல் இவரே கிழக்கு முழுவதுக்குமான தளபதியாக இருக்க வேண்டியவர். இருந்திருந்தால் போரட்ட காலத்தில் போராட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

    வடக்கில் பால்ராஜ் கிழக்கில் அன்ரனி இருவரும் போராளிகளின் அதிக உயிரிழப்பால் ஏற்படும் தாக்குதல் வெற்றி எதிர்காலத் தோல்வி என்று கருதியவர்கள். உயிரழப்பை  தவிர்ப்பதற்காய் பல தாக்குதல்களை தவிர்த்தவர்கள் . இதனால் பல பின்னடைவுகளையும் வெற்றிகளையும் சந்தித்தார்கள். போராளிகளின் அதிக அன்பையும் மதிப்பையும் சம்பாதித்தவர்கள். 

    வீரவணக்கம்.. 

    • Like 3
  11. 2 hours ago, குமாரசாமி said:

    DocBau9XoAAB1d_.jpg

    அம்மாவின் மூலம் கிடைக்கும் இந்த பாக்கியம் இன்றைய சந்ததியினருக்கு கிடைப்பதில்லை. 

    இணைப்பிற்கு நன்றி

    கதை ,, கவிதை தரும் உணர்வை விட அதிகமாக இந்த படம் உணர்வைத் தருகின்றது. எத்தனை நாள் இப்படி வாங்கியிருப்பம் !! 

    • Like 3
  12.  
    Quote

     

    டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்து விட்டு இப்படி ரஜினி காலில் விழுகிறீர்களே வெட்கமா இல்லையா? பாவம் டிராபிக் ராமசாமி இதை பார்த்தால் செத்துடுவார்.
    ----
    உங்கள் வயது என்ன? அவர் வயது என்ன? அண்ணன் என்று கூப்பிடுகிற்கள் காலில் விழுகிற்கள் பார்க்க அசிங்கமா இருக்கு.... உங்கள் வயது தகுந்த தாற் போல் நடந்து கொள்ளுங்கள்..
    ---
    உன் பையன் சின்ன லூசு நீ ஊருக்கே லூசு .த்தூ
    ---
    பையன் ஆழப்போறான் தமிழ்ன்னு பாட்டு பாடுறான் அப்பன் கன்னடன் கால்ல விழுறான்... என்ன எழவுடா இது..... நாசமா போங்க

     

     
    மேலே உ;ள்ள காணொளியில் கண்ட சில பின்னூட்டம்
    • Like 3
    • Haha 2
  13.  

    Yes, 200 years ago, Madras told a very different story. The last week of April 1815 saw temperatures dipping below the freezing point. A city that now knows only three seasons - "hot, hotter and hell" - once also knew what it felt like to blow winter smoke in the dead of the night.

    https://www.indiatimes.com/news/india/200-years-ago-madras-enjoyed-the-occasional-snowfall-had-a-temperature-of-3-degree-celsius-254178.html

    Madras

    • Like 3
  14. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் தொடர்பில்லாமல்  வியாபாத்துக்கு மறுபெயர் ஏமாற்றுதல் என்றாகிவிட்டது. எந்த உணவுப்பொருளில் என்ன ரசாயனம் உள்ளது என்பதை பிரித்தறிய முடியாத நிலை.

  15. 3 hours ago, யாயினி said:
     
     
    முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின் இல்ல அலங்காரம்.........
     · 
    Image may contain: outdoor

     

    பல சிந்தனைகளை தோற்றுவிக்கின்றது...

    மௌனம் அலறுவதுபோல் ஒரு உணர்வு !!! 

    இணைப்பிற்கு நன்றிகள்..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.