Jump to content

சண்டமாருதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2554
  • Joined

  • Last visited

  • Days Won

    33

சண்டமாருதன் last won the day on November 20 2019

சண்டமாருதன் had the most liked content!

1 Follower

Profile Information

  • Gender
    Male
  • Location
    Toronto

Recent Profile Visitors

8517 profile views

சண்டமாருதன்'s Achievements

Proficient

Proficient (10/14)

  • Very Popular Rare
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

1.5k

Reputation

  1. அன்னாருக்கு அஞ்சலிகள் . அவரை பிரிந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  2. இந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடுத்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.
  3. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள் எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். என்னுமொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை பதிகின்றேன்.
  4. தனியே தமிழகத்தின் தேசீய எழுச்சியோடு மட்டுமில்லாமல் , உலகமெங்கும் இருக்கும் தமிழர்களுக்குள் இனரீதியாக ஒரு தொடர்பு ஏற்படவேணும். உலகமயமாதலில் சிறுபான்மை இனங்களும் அவர்களின் தேசீயமும் சிதைந்து அழிந்துபோகின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களின் தலைமுறைக்கும் தாயகத்தில் போராட்டம் நடந்த காலத்தின் தலமுறைக்கும் இடையில் தேசீயத்தின் கூறுகள் அடயாளங்கள் உணர்வுகள் அனைத்தும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை நோக்கினால் உலகமயமாக்கலின் தாக்கம் புரியும். உதராணத்திற்கு அன்று இராணுவம் வாழ்ந்த இடத்தையும் விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்தால் வாழ்வு இல்லை. இன்று எதோ ஒரு நாட்டில் வாழலாம் என்ற நிலையில் பலர், விவசாய நிலத்திற்கு பதிலாக ஒரு கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்து பிழைக்கலாம் என்ற நிலை. இவ்வாறான உலகின் போக்கிலும் தலைகீழான மாற்றங்களிலும் இன உணர்வையும் உறவையும் எப்படி தக்கவைப்பது மேம்படுத்துவது என்பதும் பிரதானமானது. இன்றய உலகின் போக்கில் ஈழவிடுதலை என்பது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்குமிடையில் ஏற்படும் ஐக்கியப்பாட்டோடு சம்மந்தப்பட்டே சாத்தியமானது. ஈழத்தமிழர் தமிழக தமிழர் மலேசியா மொறிசியஸ் லண்டன் கனடா தமிழர் என்ற நிலையை கடந்து தமிழர் என்ற பெரு வட்டத்தை நோக்கி நகரதல் அவசியமானது. ஒரு இடத்தில் தமிழர் ஒடுக்கப்பட்டால் உலகெங்கும் இருந்து எதிர்ப்பு எழவேணும். இன்றய உலகின் போக்கில் சிறுபான்மை இனங்களின் ஆயுதப்போராட்டங்கள் தற்கொலைக்கு சமனானது. சிறுபான்மை இனம் என்ற நிலையையோ ஒரு குறுகிய நிலப்பரப்பில் இருக்கின்றோம் என்ற நிலையையோ நாம் கடக்க வேணும். தமிழர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடின்றி சிதறி உலகம் முழுக்க வாழ்கின்றனர் என்பதை பலவீனமாக பார்க்காமல் பலமாக பார்க்க முற்பட வேணும்.
  5. சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.
  6. உங்கள் கேள்விகளுக்கு நேரடியாக வரையறுக்கப்பட்ட விடைகள் காண்பது எளிதல்ல. என்னுமொருவிதத்தில் அவ்வாறான வரையறுப்புகளை நோக்கி பயணித்தால் அது பாதகமாகவும் முடியலாம். ஒரு பெரும்பான்மை மக்கள் கூட்டம் தங்களை சிங்கள தேசிய இனமாக உருவகப்படுத்தி சிறுபான்மை மக்கள் கூட்டத்தை தமிழ் தேசீய இனமாக கருதி அவர்கள் மீது ஒடுக்குமுறையை செய்கின்றது. இவ் ஒடுககுமுறைக்கு உட்படுகின்றவர்கள் தம்மை தமிழ்த்தெசீய இனமாக உணர்ந்து ஒடுக்கு முறையில் இருந்து விடுபட போராடுகின்றனர். இவ்வாறான ஒரு கோணத்தில் தமிழ்த்தேசீயம குறித்த அணுகுமுறைகள் அமையலாம். இதற்கு உள்ளே இறங்கி அலசினால் தமிழ்த்தேசீயத்துக்கான வரையறை வரவாய்ப்பில்லை வேறு நிறைய வரும். . பத்து வருடங்களுககு முதல் இது சம்மந்தமாக பதியப்பட்ட கருத்து. கிருபன் இணைத்த தேசியவாதம் குறித்த சில கருத்துக்கள் என்ற கட்டுரையும் இவ்விடத்தில் பொருத்தமானது என்றே எண்ணுகின்றேன்.
  7. இணைப்பிற்கு நன்றிகள்.இவரது வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அறிந்து கொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் நிறைய இருக்கின்றது.
  8. எமது அம்மா அபபா சகோதரங்கள் பிள்ளைகளுக்கு உயிராபத்து நேரும் போது உணர்வுகள் மிக கனதியாக இருக்கும். அதே கனதி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.. எதிர்கால சந்ததிகளுக்கு உறவுகளின் பிரிவு சாதராண ஒரு நிகழ்வாக இருக்கலாம். தாய் தந்தையரின் செத்தவீட்டுக்கு வருவதை கூட தவிர்க்கலாம். இயற்கையோடு இணைந்த வாழ்வின் உணர்வுகளும் இயந்திரமயமான இன்றைய தொழில நூட்ப உலகில் இணைந்த வாழ்வில் உணர்வுகளின் கனதி ஒன்றாக இருக்கப்போவதில்லை.. மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பித்து வாழும் விலங்குகள் பறைவைகளிடம் பரிவு பாசம் பிரிவு உணர்வுகள் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றது. கால்நடையாக சென்ற மனிதன் குறுகிய நேரத்தில் வேகமாக பயணிக்க குதிரை மாடுகளை பயன்படுத்தினான் பின்னர் வாகனங்கள் விமானங்கள் என முன்னேறி இன்று கணனி தகவல் தொழில் நுட்ப காலத்தில் மானுடத்தின் கண்டுபிடிப்புகளே அவனது நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.. நேரம் பறிபோகும் போது உணர்வுகள் சுருங்கி மனிதனும் இயந்திரத் தன்மைக்கு மாற நேரிடும். காதல் காமம் பிறப்பு இறப்பு இவை சார்ந்த உணர்வுள் மாறுபடும். இவ் உலகில் கொடிய சுயநலம் மிக்க அறிவுத் திறன் உள்ள விலங்கு என்றால் அது மனிதர்கள் தான்.. நான் எனது பிள்ளைகள் பெற்றோர்கள் உளளடங்கலாக மனிதர்கள் அழிவது ஒரு அற்ப நிகழ்வாக எதிர்காலத்தில் இருக்கும்.
  9. இந்த இரண்டு நிகழ்விலும் எவ்வளவு புரிதல் இருக்கின்றது. நாட்டில் மலேரியா வந்தால் வேப்பம் பட்டையை அவிச்சு குடிப்பது வழக்கம். நீண்ட காலமாக வேம்பு மஞ்சள் போன்றவற்றை நோய்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள். அதை இங்கும் முயற்சிக்கின்றார்கள். இதனால் கட்டுப்படுத்தலாம் குணமாக்கலாம் என்பது வேறு விசயம். ஆனால் ஏதோ ஒரு முயற்சியை வெறும் மத வழிபாடு ஆராதனை போதனை என்பதை கடந்து செய்கின்றார்கள்.
  10. இந்த லட்சணத்தில இருந்தா குறைந்தது இருபது வீதம் பேருக்கு அதாவது முப்பது கோடிபேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்ற கணிப்பு உண்மையாகும் போல இருக்கு.
  11. “எல்லா சாதியும் சொந்தம் தான்... இனி இப்படி பண்ண மாட்டேன்... படிக்க ஆசைப்படுறேன்!” - முத்து
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.