* ஏன், புலத்தில் இருக்கும் எம்மவர்களால், இந்த ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை?
* கொலையாளி இன்னும் லண்டனில் ஒழிந்திருப்பதை, ஸ்கொட்லண்ட்யாட்டுக்கு, ஏன் காட்டிக் கொடுக்க முடியவில்லை?
* எம்மால், அங்கு பலியாக்கப்படும் ஊடகவியலாளர்களின் உயிர்களைத்தான் காப்பாற்ற முடியாது, ஆனால் அக்கொலையாளிகள் எம்மத்தியில் ஒழிந்திருப்பதையாவது தடுக்க முடியாதா?
* இலங்கையிலுள்ள கொலையாளிகளைத்தான் நாம் சட்டத்தின் முன் கொணர முடியாது, இங்குள்ள, இக்கொலையாளியை சட்டத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்க வேணும். அதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தோம்?
* எம்மவர் மத்தியில் கதிரைகளுக்காகவும், பெயர்களுக்காகவும் செயற்படும் மனிதவுரிமைவாதிகள் எங்கே?
இதை நாம் செய்யத் தவறுவோமாயின் வரலாறு எம்மை மன்னிக்காது!