Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    6767
  • Joined

  • Days Won

    23

Everything posted by இணையவன்

  1. இந்த விவசாய முறை இங்கும் பிரபலமாகி வருகிறது. குளிரிலும் பயிற்செய்கை பாதிப்படையாது. இத்துடன் இந்த நீரில் மீன்கள் வளர்ப்பதும் பயிர்களைச் செழிப்பாக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
  2. ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ? 😜 நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎
  3. உங்கள் முதலாவது கருத்தில் மிகத் தெளிவாக எழுதியிருந்தீர்கள். சரி அகதிகள் வந்ததால் நாடு பாழாகி விட்டது என்பது சுத்தமான மேற்குலக தீவிர வலதுசாரிக் கருத்து அல்லவா ? அகதியாக வந்த நாம் இன்னொரு அகதியை மேற்குலக நிலையிலிருந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
  4. நெடுக்காலபோவான், தமிழர் மட்டும்தான் மனிதரா, கிழக்கு ஐரோப்பியரும் ஆபிரிக்கரும் தரம் தாழ்ந்த மனிதரா ?
  5. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
  6. நன்றி @nunavilan @பெருமாள் @ஈழப்பிரியன் @ராசவன்னியன் @suvy @தமிழ் சிறி @ஏராளன் @நிலாமதி 🙏
  7. அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியும் கடந்த 2 வருடங்களாக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவும் குறிப்பாக பிரான்சும் ஆயுத ஏற்றுமதியையும் இராணுவச் செலவுகளையும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அவுஸ்திரேலிய நீர்மூழ்க்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் பின் சீனாவும் தன் பங்குக்கு காய்களை நகர்த்தி வருகிறது. பொருளாதார மோதல்களை மீறி வல்லரசுகள் நேரடியாகவே உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.
  8. ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும். இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும். இது ஜனநாயகம்.
  9. கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம். நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல் உள்ளது.😂
  10. யேர்மனியில் எப்படி என்று தெரியாது. ஆனால் போர் ஆரம்பித்தபோது பிரான்சுக்குள் அகதிகளாக நுளைந்த இலட்சக்கணக்கான உக்ரெயின் மக்களில் பெரும்பான்மையாவர்கள் ரஸ்ய படைகள் Kiev இனை விட்டு வெளியேறி சில நாட்களில் நாடு திரும்பி விட்டனர். பிரான்ஸ் உக்ரெயினை விட மோசமானதாகக் கருதியிருக்கலாம்.😂
  11. கருத்துக்களம் எப்படி கள உறவுகளின் எழுத்துக்களால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோலதான் வடிவமைப்பும் காலத்துக்குக் காலம் நிர்வாக உறுப்பினர்களால் வடிவமைக்கப்படுகிறது. உரிமைகோர வேண்டியதில்லை 🙂.
  12. பரிசில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் வீதியெங்கும் குப்பை நிறைந்துள்ளது. சற்று நேரத்துக்கு முன் எதிர்க்கட்சியினரால் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது.
  13. ஆழ்ந்த அனுதாபங்கள் ஏராளன். உங்கள் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.
  14. அனைவருக்கும் நன்றி. 'நலமோடு நாம் வாழ' பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
  15. எனது தந்தை உணவு கட்டுப்பாட்டின்பின் பல வருடங்களாகப் பாவித்து வந்த கொலஸ்ரரோல் மருந்தினைப் படிப்படியாகக் குறைத்து இப்போது தேவை இல்லை என்றாகிவிட்டது.
  16. @பையன்26 குமாரசாமி கேட்டதாலேயே அவரது பதில் நீக்கப்பட்டது.
  17. எத்தனை திரிகளில் மேற்கினைக் கிழித்துத் தொங்க விட்டிருப்போம். அதற்காக மேற்கின் உணவு முதற்கொண்டு உடை வாகனம் மருத்துவம் உட்பட எல்லா வசதியையும் அனுபவிக்காமல் இருக்க முடியுமா! அதுபோலத்தான் 😂
  18. நீங்களும் விடுவதாக இல்லை 😂 தொடர்ந்து விவாதிப்பதற்கு உங்களிடம் ஒரு பட்டியலைத்தானே கேட்டேன். ரஸ்ய இராணுவத்துக்கு ஆதரவாக எவ்வளவோ எழுதுகிறீர்கள், அவர்கள் வென்ற இடங்களின் பட்டியலை எடுப்பது இவ்வளவு கடினமா ? உங்க்களிடம் எனக்குப் பிடித்தது கள்ளம் கபடமில்லாத பேச்சுத்தான். இது கருத்துக்களம். உங்களுக்குப் பிடித்தவர் பிழையாக எழுதினால் அதைப் பிழை என்று சொல்லும் துணிவு வேண்டும். பிடித்தவரின் கருத்து என்பதற்காக குழுவாதம் செய்து உங்களையும் தாழ்த்த வேண்டாம்.
  19. ரதி அக்கா திடீரெனெ வந்து தனது பார்வையை எழுதிவிட்டுப் போயுள்ளார். அவருக்கும் முழுப் பிரச்சனையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவரது கருத்துக்குப் பதிலளிப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. பட்டியலைத் தாருங்கள் தொடர்ந்து கருத்தாடலாம். இல்லையேல் ஜால்ரா என்றாகிவிடும். நீங்கள்தான் பிரச்சனைய நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்
  20. பையன், கருத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்த்துத்தான் பச்சை குத்துவதாக நீங்கள் இன்னொரு திரியில் ஒத்துக் கொண்டதால் இத் திரியில் பதிலளிக்க வேண்டாம் என்றிருந்தேன். இந்தப் பிரச்சனையையும் இத்துடன் முடித்திருக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் என்னை மேற்கோள் காட்டிக் கிறறிக் கொண்டிருப்பதால் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தான் ஹிட்லர் ஆதரவாளி என்று பகிரங்கமாகக் கூறுபவரையும் பல தடவை தணிக்கை செய்யப்பட்டும் மீண்டும் மீண்டும் அதி உத்தம புதின் வாழ்க என்று வீம்புக்காக திரிகளில் எழுதித் திரிபவரையும் என்ன செய்யலாம் ? உங்களுக்குக் குழு முக்கியம். எனக்கு யாழ் முக்கியம்.
  21. இன்று கருத்துக்கள் மென்பொருள் புதுப்பித்தலுக்காக யாழிணையம் ஐரோப்பிய நேரம் இரவு 9 மணியளவில் 1 மணி நேரம் இயங்காமல் போகலாம். நன்றி நிர்வாகம்
  22. நன்றி. நான் இத் திரியில் தொடர்ந்து உங்களுக்கு முரனாக எழுதியது இதற்காகத்தான். யாழிணையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவே. ஆனால் இன்று ஹிட்லர் ஆதரவு, கிம் யோங் போன்ற அடக்குமுறையாளர்களின் ஆதரவு என பல திரிகளிலும் உங்களது எழுத்துக்கள் பரவி வருகிறது. இன்னும் போனால் தலிபான்களையும் ஆதரித்து எழுதுவீர்கள். இது யாழின் முகம் இல்லை. கருத்துக்களைக் கருத்தால் வெல்ல வேண்டும் என்பது யாழின் கோட்பாடு. ஆனால் உங்கள் குதர்க்கமான பதில்கள் அதற்கு இடமளிக்க மாட்டாது. மேற்கை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையோடு எல்லாத் திரிகளிலும் ஒரே விடயத்தைப் புலம்புவதை அனுமதிக்க முடியாது. அதற்குத் திண்ணை உள்ளது. உங்கள் கொள்கையை நியாயமாக விவாதிப்பதற்கான திரிகள் உள்ளன. நான் மேற்கைப் போற்றுவதாக முன்வைத்த குற்றச்சாட்டும் உங்கள் கற்பனையே. நான் மேற்கைப் புகழ்ந்து எழுதியதை உங்களாலும் ஏனையவர்களாலும் எங்கும் காட்ட முடியாது. ஏனென்றால் நான் உள்ளளவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவன். உங்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது உங்கள் மீது தனிப்பட்ட விரோதமும் கிடையாது. இது பற்றி மேலும் விவாதிப்பதில் பயனில்லை. @தமிழ் சிறி, ஒரே கருத்தைத்தான் நீங்களும் எழுத்துகளுக்கு நிறம் அடித்துப் பல திரிகளிலும் எழுதுகிறீர்கள். கோமாளிகள் கோழைகள் பயந்தவர்கள் என்றெல்லாம் எழுதியவை உங்களுக்கே இது விதண்டாவாதமாகத் தெரியும் என்று தோன்றுகிறது. உங்கள் கருத்தின் சாரம் தொடர்பாக உங்களிடம் ஒரு கேள்வி. கடந்த 6 மாத கால உக்கிரமமான போரில் ரஸ்யா கைப்பற்றிய இடங்களைப் பட்டியலிட முடியுமா ? உக்ரெயின் ரஸ்யாவிடமிருந்து கைப்பற்றிய இடங்களை என்னால் பட்டியலிட முடியும். இதற்கு நீங்கள் பதிலளித்தால் தொடர்ந்து உரையாட முடியும். நன்றி.
  23. ̀ யாருக்கும் விளங்காத உங்கள் அறிவுக்கு மட்டும் விளங்கிய அது என்ன என்று கேட்டும் பதில்லில்லை. உங்கள் முத்தான 4 வசன விளக்கத்துக்காகக் காத்திருக்கிறேன் 🙂.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.