-
Posts
7240 -
Joined
-
Days Won
24
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by இணையவன்
-
-
சென்ற திங்கள் திருமண நாளைக் கொண்டாடிய யாழ் கள மூத்த இளைஞர் சுவி அண்ணாவுக்கு எமது இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
- 3
- 1
-
1 hour ago, விசுகு said:
உங்கள் கருத்து ஏற்புடையதே. ஆனால் மதத்தைப் போல ஒரு பொலிஸ் உலகில் இருக்கமுடியாது.?? அந்த வகையில் இருந்து விட்டு போகட்டுமே?
போலிஸ் அல்ல ரவுடி. ஒவ்வொரு கடவுளும் தாம்தான் பெரியவர் உண்மையானவர் என்றே கூறுகின்றனர். கும்பிடுபவனுக்குச் சொர்க்கம், கும்பிடாதவனுக்கு நரகத்தில் சித்திரவதை. சில மதங்கள் இன்னும் மேலே சென்று அந்த மதத்தைப் பின்பற்றாதவர் எல்லோருக்கும் நரகம் என்கிறது.
- 1
-
13 minutes ago, குமாரசாமி said:
மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? என்னென்ன பிரயோசனங்களை தர வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
இன்று உலகில் நடக்கும் மனித அடக்குமுறைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணம் மதம்.
மதத்தைப் புறக்கணிக்கும் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் அமைதியும் பாதுகாப்பும் மனித ஒழுக்கமும் அதிகமாக உள்ளது. ஒருசில விதி விலக்குகள் இருக்கலாம்.
இன்று மனிதனாக வாழ மதம் தேவையில்லை.
-
இன்று ஒன்றுக்கும் பயனில்லாத இந்த மதங்கள் அவசியம்தானா ?
- 3
-
2 hours ago, valavan said:
தமிழர் முஸ்லீம்களுடன் ஒற்றுமைக்கு தயாராக இருந்தாலும், முஸ்லீம்கள் ஒருபோதும் தமிழர்களுடன் ஒற்றுமையாகவோ அல்லது தமிழர் தாயகத்துக்கு ஆதரவாகவோ இருப்பார்கள் என்பது இலங்கை வரலாற்றில் ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லாத ஒன்று.
இலங்கை மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் பிற இனங்களுடன் உள் நோக்கம் எதுவும் இன்றி முஸ்லீம்கள் ஒற்றுமையாக வாழ்வதா சரித்திரமேயில்லை.
தாம் பெரும்பான்மையில்லாத இடங்களில் ஒற்றுமைபோல் நடிப்பார்கள், தமது ஆட்கள் பெரும்பான்மை ஆகிவிட்டால், தாம் வாழும் ஊரையோ அல்லது தாம் வாழும் நாட்டையோ இஸ்லாமிய மயமாக்க துடிப்பார்கள்.
முஸ்லீம்கள் இலங்கையில் தமிழருடன் நிரந்தரமாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது நம்பிக்கையானால், நம்புவதில் தவறில்லை நம்பிக்கையும் வாழட்டுமே.
உண்மை.
ஒரே மொழி பேசும் ஒடுக்கப்பட்ட இரு பிரிவினர் எவ்வளவு கலத்துக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிப் பகைத்துக் கொண்டே இருப்பது ? இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் பகை நாடுகள் நட்பு நாடுகளாகி வளர்ந்துள்ளன. அணுகுண்டுகள் மூலம் அழிக்கப்பட்ட நாடு அதன் எதிரியுடன் நிரந்தரப் பகைமையைப் பேணவில்லை.
வேற்றுமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இரு பிரிவினருக்கும் முரண்பாடுகள் தொடர்ந்து இருக்கும். சமயம், கலாச்சாரம் வேறுபட்டது. இந்த வேறுபாடுகளுடன் பொதுவான இணக்கப்பாடுகளை இனம்காண்பதுதான் புத்திசாலித்தனம். இதற்கு ஒரு உதாரணம்தான் மேலுள்ள செய்தி. தமிழர்களிடம் மதம் சார்ந்த ஆதரவு எதிர் நிலைப்பாடுகள் இல்லை என்பதை வலியுறுத்தியது.- 2
-
தகுந்த தருணத்தில் தமிழர் சார்பாக வழங்கப்பட்ட சாணக்கியனின் கருத்து சரியானது. இக் கருத்து தமிழர் அழிந்தபோது மகிழ்ச்சி அடைந்த அனைத்துத் தரப்பினரையும் நோக்கியது மட்டுமல்லாது தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் வழியமைக்கும்.
- 3
- 2
-
யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
பலர் அவசரப்பட்டு அறிக்கை விட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.
வீடியோக்கள் படங்கள் அனைத்தும் இது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வாகவே காண்பிக்கின்றன. இதுதான் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடமாம். 30 மீற்றர் விட்டமுள்ள வாகனத் தரிப்பிடத்தில் எவ்வாறு ஆயிரம் பேர் நிற்க முடியும் ?
இதன் தரை வெறும் மண்ணின்மேல் செங்கல் அடுக்கப்படதாகும். வெடித்த இடத்திலிருந்து சில கற்கள் மாத்திரமே தூக்கி எறியப்பட்டு சிறு குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏவுகளையோ வானிலிருந்து வீசப்பட்ட குண்டோ அது விழுந்த இடத்தில் பாரிய சேதத்தை உண்டாக்கும். அருகிலுள்ள வாகனங்கள் தீயினாலேயே சேதமாயுள்ளன. எரியாத வாகனங்களின் கண்ணாடிகள் கூட முற்றாக உடையவில்லை. அருகிலுள்ள கட்டடத்தின் பணிவான கூரை ஓடுகள் அப்படியே உள்ளன. தகரக் கொட்டகை சேதமடையவில்ல...
பலஸ்தீனியர்களின் எறிகணை தவறுதலாக இங்கு விழுந்து வெடித்துள்ளது என்பதே பொருத்தமானது.
இதை வைத்து பலஸ்தீன் நல்லதொரு பரப்புரை போரில் வென்றுள்ளது. இதற்காக இஸ்ரேலியர்கள் அச்சாப்பிள்ளை என்று அர்த்தமல்ல.
- 2
-
எலன் மஸ்கின் Tesla நிறுவனத்தின் நிதி அறிக்கை இன்று வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் இந் நிறுவனம் பாரிய சரிவைச் சந்தித்தது. இன்று 70 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்குச் சந்தையில் இழந்துள்ளதாகக் கூறம்படுகிறது.
-
14 minutes ago, ஏராளன் said:
முன்னாள் உப தலைவர் சட்டத்தரணி எல்.எஸ்.என்.பெரேரா எழுதிய ஈழ மூடநம்பிக்கையின் வெளிக்கொணர்வு நூல்
இந்த நூல் பற்றி யாருக்காவது தெரியுமா ?
இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் மதங்கள். புத்த மதம் உட்பட எல்லா மதங்களும் அரசியலிலிருந்து ஒதுங்கினால் நாடு உருப்படும்.
-
ஈழபிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
- 1
-
11 minutes ago, island said:
மீனை சைவ உணவு ஆக்குவது எப்படி என்பதை @Kavi arunasalam அவர்கள் ஒரு கற்பனை சித்திரம் வரைந்தால் எப்படி இருக்கும்?
2 hours ago, ஏராளன் said:எப்படி முட்டையில் அதிகமான புரோட்டின் இருந்ததால் அதை அசைவத்தில் இருந்து சைவமாக மாற்றி இருந்தார்களோ அதைப்போல மீனையும் மாற்ற வேண்டும்.
ஏற்கனவே முட்டையை மாற்றிவிட்டார்களாம். எப்படி ?
இதே மாதிரி கோழியையும் சைவமாக மாற்றினால் நல்லது.
- 1
-
10 hours ago, Eppothum Thamizhan said:
பிரபா, நானும் நன்னியை எதோ ஒரு உயரத்தில் வைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அமெரிக்கா, மேற்கிற்கு செம்புத்தூக்கும் கனவான்கள் என்று.
மேற்கிற்கு ஆதரவாக எழுதாத ஒரே காரணத்துக்காக நன்னியைத் தூக்கி எறியத் துணிந்துள்ளீர்கள். உங்கள் பார்வையில் நன்னி சிறுகச் சிறுகச் சேமித்து உருவாக்கிய ஆவணங்கள் எல்லாம் அவர் இந்தத் திரியில் எழுதிய மேற்கை ஆதரிக்காத கருத்தால் ஒரு நொடியில் குட்டையிலிருந்து வந்ததாக ஆகிவிட்டது அல்லவா.
எடுத்ததற்கெல்லாம் துரோகிப் பட்டம் கொடுத்துத் தமது தமிழீழ ஆதரவை வெளிக்காட்டும் போலியான தமிழ்த் தேசிதவாதியின் நிலை போன்றது உங்கள் நிலைப்பாடு.
- 5
-
4 நாட்களுக்கு இலங்கைச் சிறுமி ஒருவர் பற்றிய ஒரு செய்தி பரவலாகப் பேசப்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து வந்த இச் சிறுமி குறுகிய காலத்தில் பிரெஞ்சு படித்துப் பிரெஞ்சுப் பாடத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். அத்துடன் பிரெஞ்சு மக்களுடன் ஒன்றிப் பழகி விலங்குப் பாதுகாப்புத் தொடர்பான அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குகிறார். அண்மையில் இவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு கடிதம் அனுப்பியது. இவர் பிரான்சில் தொடர்ந்து வாழத் தகுதியானவர் என்று பிரெஞ்சு மக்களிடமிருந்து ஆதரவு கிழம்பியுள்ளது.
செய்திகளில் பின்னூட்டங்களை வாசித்தபோது பிரெஞ்சு மக்களிடம் இவருக்கு எந்த அளவு ஆதரவு உள்ளதோ அதே அளவு. எதிர்ப்பும் உள்ளது தெரிகிறது. அதில் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.
2009 இலேயே இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் இவர் போன்றவர்கள் உல்லாசப்பயண விசாவில் இங்கு வந்து இங்குள்ள எல்லா வசதிகளையும் அனுபவித்து பிரஜாவுரிமையையும் பெற்று இலங்கைக்கு உல்லாசப்பயணம் சென்று வருகிறார்கள். அரசின் முடிவை மதித்து இவர் இலங்கைக்குத் திரும்புவதே சிறந்தது.
இதை எழுதியவரின் பார்வையில் மக்கள் எங்கு தமக்கேற்ற வசதிகள் உள்ளனவோ அங்கு நோக்கியே நகர்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.
என்னைப் பொறுத்தவரை எந்த நாடாக இருந்தாலும் இலங்கையாக இருந்தாலும் ஓய்வூதியம் ஒரு அடித்தளமே, இதை வைத்து வசதியாக வாழ முடியாது. பெரும்பாலான நாடுகளில் இது ஒருவர் உயிர்வாழ்வதற்கே போதுமானதாக இருக்கும். உழைக்கும் காலத்தில் திட்டமிட்டு பிற்கால வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி வைத்திருப்பதே நல்லது.
- 1
- 1
-
புனைவுக் கதைகள் மூலம் கடவுளை நிறுவ வேண்டிய வழக்கமான நிலையிலுள்ள ஆன்மீகச் சிந்தனையும் பகுத்தறிவின் உண்மைத் தேடலையும் இந்தத் திரி விளக்கி நிற்கிறது.
இந்தியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட 80 லட்சம் சிறுவர்கள் வருத்தி வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இறக்கிறார்கள். இவையெல்லாம் பிள்ளையாரின் செயல் இல்லை. லட்சத்தில் ஒரு சிறுவன் எதோற்சையாகத் தப்பிப் பிழைத்தால் கடவுள் உரிமை கோருகிறார். உலகம் முழுவதும் கடவுளின் சக்தி இப்படித்தான் அளவிடப்படுகிறது.
- 3
- 2
-
மூட்டைப்பூச்சி தொல்லை பாராளுமன்ற வாக்குவாதம் வரை சென்றுள்ளது. இன்று காலையில் மகள் படிக்கும் பாடசாலையில் மூட்டைப் பூச்சி ஒன்றைக் கண்டுபிடித்ததால் அந்த வகுப்பறையை மூடி மூட்டைப்பூச்சி வல்லுனர்களை வரவழைத்துள்ளதாக ஈமெயில் வந்துள்ளது.
எங்கள் வீட்டுக்கு இன்னும் வரவில்லை. வந்தால் சுமே அக்காவிடம் ஆலோசனை கேட்க இருக்கிறேன்.
- 1
- 1
- 1
-
On 27/9/2023 at 18:39, பாலபத்ர ஓணாண்டி said:
இப்ப எனக்கு
*நெற் சலரி - 1500€
*அரச உதவி-1200€
மொத்த மாத வருமானம்-2700€
ஓணாண்டி, நீங்கள் சொல்வது சரி. நீங்கள் ஓய்வூதியம் எடுப்பவராக இருந்தாலும் இதுதான் நிலமை. ஒருவர் ஆயுள் முழுவதும் சாதாரண வேலை செய்து 1200 எடுப்பார். இன்னொருவர் வேலையே செய்யாமல் 900€ வும் எடுத்து இலவச சலுகைகளையும் எடுப்பார்.
இந்த அரச உதவி, ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் எங்கிருந்து வருகின்றன ? பிரான்சில் ஒருவர் வேலை செய்து அவர் செலுத்தும் வரிகளூடாகவே இவை இன்னொருவருக்குப் போய்ச் சேருகின்றன. ஒருவரின் ஓய்வூதியத்திற்கு தற்சமையம் 3 பேர் வேலை செய்து கட்டும் வரி தேவைப்படுகிறது.
உங்கள் சமன்பாடு தவறென்று சொல்லவில்லை. நீங்கள் தவறென்று சுட்டிக் காட்டிய சமன்பாட்டிலும் ஏதோ உள்ளபடியால்தானே வேறு பலரும் அதனைப் பின்ன்பற்றுகிறார்கள். தவிர உங்கள் சமன்பாட்டினைப் பெரும்பாலானவர்கள் பின்பற்றினால் நாட்டின் பொருளாதாரமும் சிதைந்துவிடும் அல்லவா.
- 2
- 2
-
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:
தல இதைப்பற்றி ஒரு திரி திறந்து எழுதுங்கோ.. இங்க பலருக்கும் உதவியா இருக்கும்..அநேகம்பேர் பென்சன் எடுக்குற விளிம்பில..
இங்கு விவாதிக்கப்படும் சில விடயங்கள் நான் சுய ஆக்கம் பகுதியில் எழுதியவற்றைத் தொட்டுச் செல்கிறது.
- 1
-
பிரபா சிதம்பரநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'P.S.பிரபா' என மாற்றப்பட்டுள்ளது.
- 2
-
சுத்தம்தான் பிரச்சனை என்றால் மாணவர்களுக்குப் பாடசாலையிலேயே அதற்குரிய அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். குப்பையைக் கண்டபடி வீசுதல் கூடாது என்பது கலாச்சாரத்துடன் இணைக்கப்பட வேண்டிய வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம். நல்ல பழக்கவழக்கத்தினைப் படிப்பிற்பதற்குப் பதிலாக மச்சம் சாப்பிட்டால் சுத்தமில்லை என்று கூறுவது முக்கிய பிரச்சனையை மூடிமறைப்பதற்கு ஒப்பான செயல்.
மச்சம் உண்பது மனித இனத்தின் இயற்கையான வழக்கம் மட்டுமல்ல ஆதித் தமிழரின் வழக்கமும் கூட.
- 4
-
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:
இன்னொரு திரியில் என்று நினைக்கிறேன் எதில் என்று சரியாக நாபகம் இல்லை..சீமான் வழக்குப்போடவில்லை நோட்டீஸ்தான் அனுப்பி இருக்கிறார் என்று இணையவன் எழுதி இருந்தார்.. அது தவறு சீமான் வழக்கு போட்டு இருக்கிறார்.. ஒருவர் மீது வெறுப்பை வச்சு தவறான தகவல்களை பரப்புவது அழகு அல்ல..
சீமான் எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் என்று தெரியுமா ?
தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன். 🙂
-
பையன், எனது கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டி எழுதிய பதிலிலிருந்து நீங்கள் இக் காணொளியைச் சரியாகப் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.
சீமான் ஏற்கனவே பத்திரிகையாளர்களைக் காக்க வைத்து போலீஸ் நிலையத்துக்கு வருவதாகக் கூறி இரண்டு தடவை வரவில்லை. 18 ஆம் திகதியும் வந்திருப்பார் என்று எந்த நிச்சயமும் இல்லை.
- 1
-
இந்தக் காணொளியிலிருந்து நான் புரிந்து கொண்டவை.
- சீமான் விஜயலட்சுமியைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள மறுக்கிறார்.
- வியயலட்சுமியுடன் திரைமறைவில் சமரசம் செய்துகொண்டுள்ளார்
- விஜயலட்சுமி மிரட்டப்பட்டுள்ளார் அல்லது அவரை இயக்கியவர்கள் அவரைக் கைவிட்டுள்ளனர் (அடிக்கடி சீமானுக்கு அதிக பவர் உள்ளதாக விஜயலட்சுமி அடிக்கடி குறிப்பிடுகிறாரர்).
- இவ்வளவு அவமானப்படுத்தியும் சீமான் விஜயலட்சுமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்று விஜயலட்ச்சுமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்
- விஜயலட்சுமி அழுத்தங்கள் காரணமாகப் புகாரை வாபஸ் பெறுவதாக மட்டுமே பல தடவைகள் கூறியுள்ளார். எந்த இடத்திலும் அவதூறான புகார் என்றோ பொய் என்றோ குறிப்பிடவில்லை.
- 1
-
48 minutes ago, நன்னிச் சோழன் said:
கண்ணீர் நினைவுகள்...
அப்படியென்றால், கிழக்கிலிருந்து வன்னியில் குடியேற வேண்டும் என்்று சொல்கிறீர்களா? (மொக்குத்தனமாக் கேட்கிறன் என்டு நினையாதீங்கோ, விளங்கினத வைத்துக் கேட்கிறேன்!)
இல்லை. யாழ்ப்பாணம் போன்ற நெருக்கமான இடங்களைத் தவிர்த்து எமது குடியிருப்புகளை பரவல் படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் எழுதியது.
75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்
in விளையாட்டுத் திடல்
Posted
வாழ்த்துகள் !
சப்பாத்து அணியாமலே அவர் பயிற்சி செய்திருப்பார். அதன்படியே சப்பாத்து இல்லாமல் போட்டியிலும் கலந்து கொள்வது அவருக்கு வசதியாக இருந்திருக்கும்.
1500 மீற்றரில் முதலாவதாக வந்துள்ளார். 5000 மீற்றரை விட இதுவே கடினமானது, வேக ஓட்டம். ஒருவேளை 5000 மீற்றர் ஒரே நாளில் அல்லது ஒரு நாள் இடைவெளியில் இடம்பெற்றிருக்கலாம். சரியான ஓய்வு இல்லாததால் நான்காம் இடம் கிடைத்துள்ளது.