Jump to content

வெண்ணிலா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8195
  • Joined

  • Last visited

Posts posted by வெண்ணிலா

  1. வெண்ணிலா என்னாச்சு உங்களுக்கு. எதையும் மேலோட்டமாக பார்க்காமல் முழுவதுமாக படிப்பதில்லையா??? இங்கு நாசா எனக் குறிப்பிடப்படுவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம். பென்சிலை பாவித்தது ரஸ்யர்கள்.

    இப்ப என்ன சொல்ல வாறியள் வெண்ணிலா நுனிப்புல் மேயுறா னு சொல்ல வாறியளா? :lol::lol:

    நான் சொன்னது நாசா விஞ்ஞானிகள் உவ்வளவு செலவு செய்து கண்டுபிடித்த பேனா போல் ரஸ்யர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையெனிலும் பென்சிலைப் பாவித்தார்கள் ரஸ்ய விஞ்ஞானிகள். சோ நாசா விஞ்ஞானிகளை விட ரஸ்யர்கள் மேலானவர்கள் புத்திசாலிகள். நாசா விஞ்ஞானிகள் உவ்வளாவு செலவு செய்தும் அவர்கள் பாவம் என சொன்னேன். நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததைக் கூட பொருட்படுத்தாமல் ரஸ்யர் பென்சிலைப் பாவித்தனர் என சொன்னேன்.

    இப்ப என்ன உங்களுக்கு புரியலை. நிலா மீது ஏதாவது தனிப்பட்ட பிரச்சினையா? எனக்கு எதுவுமே ஆகல்லை. நல்லாக தான் இருக்கிறேன் :lol:

  2. ஆம் நிலா "நுணாவில் "என்பது தென்மராட்சியில் தான் உள்ளது. லுணாவில் என்றொரு ஊர் நான் கேழ்விப்படவில்லை. வேரும் விழுதுகளும் நுணாவிலில் நடந்தது பற்றி நான் அறியவில்லை.

    தென்மராட்சியில் தான் "நுணாவில்" என்ற ஊர் இருப்பின் நான் சொல்லும் லுனாவில் என்ற பெயரில் ஊர் இல்லை

    ம்ம் அதே ஊரில் தான் 95 ம் ஆண்டு "வேரும் விழுதுகளும்" என்ற மாபெரும் கண்காட்சி நடாத்தினார்கள். இன்றும் என் மனதில் அக்கண்காட்சி நினைவிருக்கு.

  3. காளிமகாதேவியின் அருள் கிடைத்தல்

    அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஆறு, ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. தண்ணீர்ப்பஞ்சமும் உணவுப்பஞ்சமும் தலை விரித்தாடியது. அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்தது. ஆறு, ஏரி, குளம் குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன. சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை புகழ்ந்து வணங்கி ஆசிப்பெற்றனர்.

    இதைப்பார்த்துக் கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து

    "தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்?" வினவினார்.

    அதற்கு தெனாலி ராமன் "மழை பெய்வதும், பெய்யாமல் போவதும், இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன், தங்கள் மகிமையால் தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது, ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். அப்போது பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதைப்பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததால்தான் பனம்பழம் கீழே விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலதான் இந்த ஊர் மக்கள் செயல் இருந்ததால் சிரித்தேன்" என்றாராம் தெனாலிராமன்.

    இதைக்கேட்ட கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து "தம்பி, உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப்பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய்" என்று நல்லாசி கூறினார்.

    இதைக்கேட்ட தெனாலிராமன், காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தார். காளியின் திருஉருவத்தைக்காண பலவாறு வேண்டி தவம் இருந்தார். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினாள். அவளது உருவத்தைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக பலமாக சிரித்தார்.

    அவர் சிரிப்பதை பார்த்த காளி "என் உருவத்தை பார்த்து எல்லாரும் அஞ்சுவார்கள். நீயோ ஏன் சிரிக்கிறாய்?" என்று வினவினாள்.

    அதற்கு தெனாலிராமன் "எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. உனக்கோ ஆயிரம் தலை உள்ளது, ஆனால் இரண்டு கைகளே உள்ளது. உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன், அதனால் எனக்கு சிரிப்பு வந்தது" என்றார்.

    இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்துவிட்டாள். பின்னர் "மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுதிகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும்போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தாள்

    நன்றி

    கதைச் சங்கம்

  4. நுணாவிளான் இணைத்த தெனாலிராமனின் பரிசுக்கதையும் மஜிக் போட்டிக்கதையும் நன்று.

    தமிழீனீ தெனாலிராமன் வளர்த்த குதிரை சாப்பாடு இல்லாமல் வளர்ந்தும் உப்படி ஓடுது எனில் அங்கை தான் தெனாலிராமனின் வளர்ப்பின் சாமர்த்தியம் பிரதிபலிக்குதுங்கோ. ஹீஹீ

  5. எனது ஊர் நுணாவில் அதனால் புனை பெயரை நுணாவிலான் என ஆக்கிக்கொண்டேன். நன்றி கேட்டமைக்கு.

    ஓ அந்த ஊருக்கு பெயர் நுணாவில்?

    அட கடவுளே நான் இன்றுவரை அது "லுனாவில் என்று எல்லோ நினைச்சிருக்கிறன். நன்றியுங்கோ

    ஆமா நீங்க சொல்லுற ஊர் தென்மராட்சி தானே. "வேரும் விழுதுகளும்" என்ற கண்காட்சி ஒருக்கா நடந்திச்சுதே அந்த ஊரா? அல்லது நுணாவில் & லுணாவில் இப்படி 2 ஊரும் இருக்குதா? :)

  6. ஹீஹீ தெனாலிராமனின் குதிரைக் கதை நல்லா இருந்திச்சு நன்றியுங்கோ பதிவுக்குஹாஹா பாவம் பட்டாபி. ஈழதிருமகன் நல்ல கதை சொன்னதுக்கு நன்றியுங்கோ

  7. நிலா அக்கா ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட் அவர் தனிமடலில் தொடர்பு கொண்டிருபார்...................பேபிக்கே தெரியுது என்றா பருங்கோ............ :P :P

    அப்படியாயின் ஏன் இந்த தலைப்பு திறக்கணும்? பெயர் மாற்ரம் செய்ய வேண்டுமெனில் தனிமடலில் தொடர்புகொள்ளுங்க என ஒரு தலைப்பை ஆரம்பித்திருக்கலாமே ஜம்மு

    இல்லை இப்பகௌதிக்குள் எவ்வளவு உறுப்பினர் தம் பெயர்களாஇ மாற்ற சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் மாற்றம் செய்யல்லையே. அதனால் தான் இப்படி கேட்கின்றேன் :lol:

  8. எனக்கொரு சந்தேகம். குள்ளநரியென பெயரிட்டு வந்தவர் தற்பொழுது நளன் என்று பெயர் மாற்றியிருக்கின்றாரே. அதெப்படிங்க அவ்வளவு உறுப்பினர் பெயர் மாற்றம் செய்யச்சொல்லி இத்தலைப்பின் கீழ் சொல்லியும் மாற்றாமல் எபப்டி குள்ளநரிக்கு மட்டும் நளன் என மாறியது?

  9. சுவிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்பிறந்த நாள் நிகழ்வில் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்த பாட்டி நீங்களா? :lol:

    ஓ நீங்கள் அவாவைத் தான் அடிக்கடி பார்த்துட்டு இருந்தியளா? :angry:

    நீங்களும் அரவிந்தனும் புத்துமமாவும் போத்தலோடை நிண்டப்போ நான் ஜம்முபேபி கூட விளையாடிட்டு இருந்தன் ல. பார்க்கல்லையா? :P

  10. :P :P அட புத்து மாமாவுக்கே புத்தர் சிலை கொடுத்திருக்கிறியளா?

    ரொம்ப லொள்ளு பார்டியள் தான் நீங்க.

    கந்தப்பு நானும் வந்திருந்தேன் தெரியல்லையா ஆ? :angry:

    அதுசரி எங்கை புத்து மாமா?

    ஆளைக் காணவில்லை. என்னாச்சு. பிறந்தநாள் அன்று அடிச்சது இன்னும் இறங்கல்லையோ? :lol:

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.