Jump to content

Thumpalayan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1480
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Everything posted by Thumpalayan

  1. எங்களுக்கு பழகிய சூழலாக இருப்பதால் உங்களுக்கு feeling healthy யாக இருப்பதில் வியப்பில்லை. அதோட வேலை டென்சன், காசு டென்ஷனுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பச்சைப் பசேல் என்ற ரம்மியமான இயற்கை, அழகிய கடற்கரைகள், உறவுகள், கோயில் திருவிழாக்கள் என்பன மனசை இலகுவாக்க கூடியன. அதேவேளை கண்ட இடத்திலும் குப்பை, வாகன கோர்ன் சத்தம், ஆட்களை ஆக்கள் நெருக்கியடிக்கும் வரிசைகள், ஊழியர்களின் அசமந்தம், நீதி ஒழுங்கின்மை என்பன BP யை எகிற வைப்பன. படங்கள் அருமை - நன்றி
  2. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
  3. வணக்கம் அண்ணை, பெரு மூச்செண்டு இல்லை ஆனா பெடியலின் மைண்ட் செட் விளங்குது இல்லை. நீங்க சொன்ன மாதிரி வள்ளத்தில போய் படம்பாத்திட்டு சாமான் ஏத்திக்கொண்டு வந்த ஆக்கள் இருக்கினம். இதை விட ஒருபடி மேலே போய் இக்கரையிலும் அக்கரையிலும் மனிசி பிள்ளைகள் என்று குடும்பம் நடத்தியவர்களும் இருந்தார்கள்
  4. சிறப்பான அலட்டல்கள் அற்ற Executive Summary நன்றி அண்ணை. நானும் 2019 மார்கழி/2020 தை போய் வந்த பின்னர் போகவில்லை. அடிக்கடி நினைப்பதுண்டுஇ எப்பிடி இந்த விலைகளிலேயும் தாக்குப் பிடிக்கிறார்கள் எண்டு. மத்திய வர்க்கப் பொருளாதாரம் பரந்து செல்லுகிறது. இலங்கை பணக்கார மேட்டுக்குடிகளின் life style வெளிநாட்டு பணக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட முடியாததுஇ அது ஒரு தனி உலகம். அவர்கள் பலருக்கு அவுஸ் போன்ற நாடுகளின் PR இருக்கு. பிள்ளைகள் இந்த நாடுகளில் படிப்பார்கள். 2019 கறுவாத்தோட்டத்திலிருந்த இப்படியான ஒரு குடும்பத்தின் விருந்திற்குப் போயிருந்தேன். பலாலியில் ஏறி சென்னை போய் ஷொப்பிங் செய்து படம் பாத்திட்டு வந்த நண்பர்களும் நெல்லியடியில் தான் இருக்கிறாங்கள். என்னத்த சொல்ல. எனது தாய் மாமா போன கிழமைதான் ஊரிலிருந்து ஜெர்மனி திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருசங்களுக்கு பிறகு போய் மூண்டுக்கிழமை நின்றவர்.ஆள் தனிக்கட்டைஇ இப்பத்தான் ஓய்வூதியம் எடுத்திருக்கிறார். இறால்இ கணவாய்இ நண்டு எண்டு மனிசன் பிரிச்சு மேஞ்சிருக்கிறார். ஊரோட வந்து இருக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டுத்தானாம் ஆள் வெளிக்கிட்டது.
  5. நான் நினச்சன் கொன்ராக் எண்டா இரவு பகலா வேலை நடக்கும் எண்டு. ஊருக்க ரண்டு மூண்டு வீடு கொன்ராக்கில சிங்கள ஆக்களிட்ட குடுத்து கட்டுப்பட்டது. அவங்கள் வந்து ஒரு வீட்ட வாடைக்கு எடுத்து கட கட எண்டு கட்டி முடிச்சிட்டாங்கள். வாகனத்த யோசிச்சு எடுங்கோ. காசு திரும்ப வராது எண்டு நினைச்சுப் போடுங்கோ. மற்றது மோட்டச்சைக்கிள் வாகனம் ஓடுறது வலு கவனம். றோட் றூல்ஸ் ஒருத்தருக்கும் வடிவா தெரியாது, தெரிஞ்சாலும் கடைப்பிடிக்கிறேல்ல. வாகனத்தால அடிச்சு ஆரும் செத்தால் கேம் ஓவர் றிமாண்டுக்க தூக்கிப் போட்டிடுவாங்கள். மற்றது பொலிஸ் மறிக்கேக்க என்ன தான் பிழை விடாட்டிக்கும் கொஞ்சம் இறங்கி வந்து கதைச்சா அலுப்படிக்காம விடுவாங்கள். அவங்கள் அலுப்பு குடுக்க வெளிக்கிடாங்களோ நோண்டிக்கொண்டு நிப்பாங்கள். நான் இலங்கை IC இலங்கை லைசன்ஸ், அதுவும் இருவது வரியப் பழய சாமான், சோ படு லோக்கல், மற்றது சிங்களம் ஓரளவு தெரியும்.
  6. ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன்.
  7. சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 2018 அதை இந்திர விழா போன போது
  8. யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.
  9. மிகவும் அதிர்ச்சியான செய்தி. யாழ் மூலமாகத்தான் கோம்ஸை (என்னை தும்ஸ் எண்டு மனிசன் கூப்பிடும்) எனக்குத் தெரியும். நேரிலே சந்திக்க வேண்டும் எண்டு நினைத்த உறவுகளில் ஒருவர். ஒரு கையில் கோப்பியுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் தனது பால்கனியில் இருந்து விடுப்பு பார்ப்பது அவரது தெரபி. அருமையான, பழக இனிய மனிசன். எல்லாருடைய எழுத்துக்களையும் ஊக்கப்படுத்துவார். எனது சில கிறுக்கல்களையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நடுவுக்கு ஏதாவது ஆக்கம் கேட்டிருந்தார். எனக்கு எழுதப்பஞ்சி/நேரப்பிரச்சினை. கொஞ்சநாளா ஆளை வெட்டி விளையாடிக்கொண்டிருந்தேன். மனிசனும், உந்த கேஸ் உருப்படாது எண்டு பேசாமல் விட்டிட்டார். இலக்கியப் பரப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை, புலம்பெயர் நாடுகள் தவிர தமிழகத்திலும், கிழக்கிலங்கை இஸ்லாமிய இலக்கிய வட்டத்திலும் பல நண்பர்களை கொண்டிருந்தார். போய் வாருங்கள் அண்ணை, ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.
  10. நல்ல விசயம் சந்தோசம். அந்தரத்தில போற சாமான், சென்னை விமான நிலையம் போல கழன்று விழாட்டிக்கு இன்னும் நல்லது, கையோட தமிழக அரசு சென்னை விமான நிலையத்தில உருப்படியான மலசல கூடங்களையும் அமைத்து பராமரிக்க வேண்டும். யார் யார் எத்தினை கோடியை சுட்டு சுவிஸ் பாங்கில போட்டாங்களோ .....
  11. நான் யாழின் நெடு நாள் வாசகன். கடந்த வருடத்தில் தான் நானும் உறுபினராக இணைந்து கருத்து எழுத வேண்டும் எண்ட ஆசை ஏற்பட்டது. ஆனால் இப்போது தான் அதற்குரிய நேரம் கிடைத்துள்ளது. இது தான் எனது முதல் பதிவு, ஆகவே நான் எதாவது தவறு வேடும் பட்சத்தில் கள உறவுகளாகிய நீங்கள் எனக்கு கை கொடுத்து உதவி செய்வீர்கள் என நம்புறன். நான் தற்போது கூகிள் மூலமான மொழி பெயர்பியின் உதவயுடனேயே கருத்து எழுதுகிறன். மற்றைய முறை எனக்கு விளங்கவில்லை. யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்ய முடயுமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.