-
Content Count
1,833 -
Joined
-
Last visited
-
தமிழ்மக்களின் உணர்வுகளுடன் விளையாட நினைத்தால் என்னாகும் என்பதை சிங்கள அரசுக்கு புரியவைப்பதற்கு இதே நினைவாலயத்தை பிறிதொரு ஏற்ற இடத்தில் அல்லது இதே இடத்தில் இப்போது உள்ளத்திலும் (இடிக்கப்பட்டதிலும்) பார்க்க நூறு மடங்கு பெரிய அளவில் முறைப்படி உரிய அனுமதியுடன் கட்டவேண்டும். புலம் பெயர்ந்த மற்றும் உள்ளூர் தமிழர்களின் உதவிகள் பெறப்பட்டு இத்திட்டத்தை பொறுப்பானவர்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் கணிசமான தொகை ஒன்றை எனது பங்களிப்பாக வழங்கத் தயார்.
-
நான் குறிப்பிட்டது அன்னிய மொழியில் உள்ள ஒரு பெயரை தமிழில் எழுதும்போது உள்ள நடைமுறை, அதாவது சொல்வதுபோல் எழுதுவது. இங்கு பெரும்பாலும் தமிழ் சொற்களுக்கு இருக்கும் எழுதும் இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. ஒலி வடிவத்தை எழுதுவதற்குத் தமிழ்மொழியில் சொற்கள் இல்லையா...? இங்கு எழுத்துகள் இல்லையா என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இல்லை அல்லது ஓரளவுக்கு இல்லை. பெயர்களை மொழிபெயர்த்து எழுத முடியாது. உதாரணமாக Mr. Black என்ற ஒருவரின் பெயரை திரு. கருப்பு என்று தமிழில் எழுதுவதில்லை. மாறாக திரு. பிளாக் என்றுதான் எழுத வேண்டும். மாறாக தமிழில் உள்ள பெயரை வேற்று மொழியில் எழுதும்போது நூறு விழ
-
மாநகர சபை முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா என்பது முதலில் தீர்மானிக்கப்பட்டது. வாக்கெடுப்பு முறை எதுவாகினும் ஒவ்வொரு அங்கத்தவரினதும் தனிப்பட்ட விருப்பம் என்ன என்று அறிவது தான் இந்த வாக்கெடுப்பின் முக்கிய நோக்கம். கட்சிகளின் பின்னணியில் அல்லது குழுக்களாக ஒன்றுபட்ட அங்கத்தவர்களுக்கு மத்தியில் இந்த முறையில் ஒரு திறந்த வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது தான் துரதிஷ்டம். தனக்கு முன்னால் வாக்களித்தவரின் விருப்பு என்ன, எந்த போட்டியாளருக்கு அதிகம் (அல்லது குறைவாக) வாக்குகள் சேர்ந்துகொண்டிருக்கின்றன போன்ற விபரங்களை அடுத்து வாக்களிப்பவர் உடனுக்குடன
-
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை
vanangaamudi replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
பயோ பபல் என்றால் என்ன: A bio-bubble is a safe and secure environment isolated from the outside world to minimize the risk of COVID-19 infection. It permits only authorised sports persons, support staff and match officials to enter the protected area after testing negative for COVID-19. -
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 264.93 மெற்றிக் தொன் என்ற அளவு பிழையான தகவல் என்பதுடன் குறித்த அளவு சுரங்க தொழில் இலாபகரமானதாக அமைவதற்கு ஏற்ற அளவும் அல்ல. 264.93 மில்லியன் மெற்றிக் தொன் என்பதுதான் சரியானது. புரியும்படி சொல்வதானால் அண்ணளவாக 265000000000 கிலோ கிராம். மேலதிக விபரங்களுக்கு: Titanium Sands LTD இணையதளம். Hand auger drilling எனப்படும் நிலத்தில் துளையிடும் சாதனம் (Soil Sampling Tool) பற்றிய சிறு காணொளி:
-
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை
vanangaamudi replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இலங்கையின் இணையவழி விசா விண்ணப்ப வலைத்தளத்தைப் (ETA) பயன்படுத்தி தற்போது ரஷ்யா, உக்ரைன் மற்றும் கசகஷ்தான் ஆகிய மூன்று நாடுகளின் பிரஜைகள் மட்டுமே இலங்கை செல்வதற்கு விசா பெற்றுக்கொள்ளமுடியும். -
அப்படி அல்ல. இராஜதந்திர முறையில் ஒரு நாட்டின் தூதுவரை குழுவாகவும் சென்று சந்திக்கலாம். "நீங்கள் வாங்கோ" என்று அழைத்தால் அது அவரின் தனிப்பட்ட விடயம். பற்றீஸ் அல்லது பொங்கல் சாப்பிடுவது இங்கு முக்கியமில்லை. இது போன்ற பொது விடயங்களை பேசும் சந்திப்புகளுக்கு குழுவாக செல்வதுதான் வழமை. ஒரு நாள் திடீரென்று சுமந்திரன் காணாமல் போனால் அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்க இலகுவாக இருக்கும். கால அவகாசம் கேட்பது அடுத்தடுத்து வரும் சிங்கள அரசுகள் தமது ஆட்சிகாலத்தை கஸ்டமில்லாமல் நகர்த்தி செல்லும் ஒரு உத்தியாகும். இந்தமுறை கால அவகாசம் எவரும் கேட்கவில்லை. கோத்தபாய ஆட்சியில் இணை அன
-
இந்த செய்தியின் தலைப்பே சுமந்திரனின் அரசியல் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தை கொண்டது என்பது வெளிப்படை. செய்தி வேறு வழியில் வெளிவரமுன்பே முந்திக்கொண்டு இதை சுமந்திரனின் சாதனையாக காட்டுவதுதான் இந்த செய்தியின் முதல் நோக்கம் என நான் கருதுகிறேன். இந்த சந்திப்புக்கு சுமந்திரனுடன் தமிழர் தரப்பில் இருந்து யார் அவருடன் சேர்ந்து போனார்கள் என்ற விபரம் தரப்படாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவர் மட்டும் தான் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு இருந்தால் அதுபோன்ற முட்டாள்தனம் வேறு இருக்கமுடியாது. தமிழர் தரப்பில் ஆயிரம் அரசியல்வாதிகள் இருக்கலாம். ஆனால் தமிழருக்கென்று சிறந்த இராஜதந்திரிகள் இருக்கி
-
இந்த அறிக்கை ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு அனுப்பபட்டுவிட்டதா அல்லது இது வெறும் draft தானா? யார் யார் எல்லாம் கையெழுத்திட்டார்கள் எப்போது அனுப்பபட்டது என்பது தெளிவில்லை? அறிக்கை கொஞ்சம் கரடுமுரடாகவும் வழமையான இராஜாங்க தொடர்பாடல் தரத்துக்கு குறைவாகவும் எழுதப்பட்டிருந்தாலும் அதில் சொல்ல வந்த விடயங்கள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளது கவனிக்க தக்கது. எனினும் இதை வேறு விதமாக தெளிவுடன் உருவமைத்து வெளிப்படையாகவே இலங்கை அரசின் மீது தடைகளை விதிக்கும்படி கேட்டிருக்கலாம்.
-
முல்லைத்தீவில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு.!
vanangaamudi replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in ஊர்ப் புதினம்
12 மே 1933 இல் வெளிவந்த இலங்கை வர்த்தமானியில் அன்றைய காணி மற்றும் விவசாய பிரதி அமைச்சர் ஜே.எல். கொத்தலாவல அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு இலக்கம் 195/32 இன் படி குறித்த பிரதேசம் "குருந்தன்மலை காடு" என்ற தமிழ் பெயரால் அழைக்கப்பட்டு காணிகளுக்கான புராதன நில ஒதுக்கீடு பற்றிய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதேயன்றி இவர்கள் கூறுவதுபோல "குருந்த விகாரை" என்று அல்ல. -
நல்ல செய்தி. தமிழர் உயர் பதவிகளில் அமர்வது மிக சிறப்பு. செய்தியின் தமிழாக்கத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டுவதும் இங்கு பொருந்தும் என நினைக்கிறேன். Overseas என்பதற்கு "சர்வதேசம்" என மொழிமாற்றம் செய்வது இங்கு பொருந்தாது. உண்மையான மொழிபெயர்ப்பு "வெளிநாடு" அல்லது "கடல் கடந்த" என்றுதான் வரவேண்டும். ஆகவே "British Overseas Territories" என்பதன் சரியான தமிழாக்கம் "பிரித்தானிய வெளிநாட்டு மண்டலங்கள்" என்பதாகும். குறிப்பு: பிரித்தானிய மகாராணியின் முடிக்குரிய பிரதேசங்களாக பிரித்தானியாவுக்கு வெளியே 14 பிரதேசங்கள் கடல் கடந்த மண்டலங்கலாக உள்ளன. அதில் ஒன்றுதான் Anguilla.
- 1 reply
-
- 1
-