
uthayakumar
கருத்துக்கள உறவுகள்-
Posts
550 -
Joined
-
Last visited
Profile Information
-
Gender
Male
-
Location
Norway
-
Interests
Poetry,politics and literature
Recent Profile Visitors
5093 profile views
uthayakumar's Achievements
-
காலை புலர்ந்தது காலை புலர்ந்தது- பா.உதயன் காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கதிரவன் எழுந்தான் கனவுகள் உயிர்த்தது பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த தாயினை எண்ணுக மனமே எண்ணுக எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா இன்னும் துயிலுவியோ இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக பொங்குக ஆலய மணிகள் அன்பினை ஒலிக்க ஆயிரம் பறவைகள் கூடியே பாடின அழகிய குயில்கள் கூவி இசைத்தன கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் காலையில் எங்கும் கானங்கள் ஒலிக்க கவிதையாய் பூக்கள் மலர்ந்து ஏதோ பேச காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது எழுக தமிழா எழுக எழுக இன்னும் துயிலுவியோ. பா.உதயன் ✍️ 🌺 இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் 🌺
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள்.
uthayakumar replied to தமிழ் சிறி's topic in வாழிய வாழியவே
இனிய நத்தார் வாழ்த்துகள் 🎄🌺 -
மார்கழிப் பொழுதினில் பூக்குதோர் வாழ்வு மரியாளின் மடியிலே தவழ்கிறான் ஜேசு அடிமையின் விலங்கினை அறுத்திட பாலகன் அவதாரம் எடுத்து இங்கு வருவானே தூதன் தேவனின் வருகையால் தெருவெங்கும் பாட்டு தெரியுதோர் விளக்கு ஒன்று வானதில் பாரீர் கவிதையாய் எங்குமே பூக்களாய் பூக்குதே காலை புலர்கையில் தெரியுதோர் வெளிச்சம் பூக்களே பூக்களே புனிதனை பாடு புனித மரியாளின் மடியிலே பூக்களை தூவு குருவியும் குயில்களும் கூடியே பாடுது குறை ஒன்றும் இல்லை இனி மனிதர்க்கு என்றே வானத்து நிலவிலே பூக்களாய் சொரியுதே தேவன் வருகிறான் என்று வெளிச்சத்தை கொளுத்துதே கடலினுள் அலைகளும் கவிதைகள் எழுதுதே கர்த்தரின் வரவினை கரையிலே வரையுதே எங்குமே சமத்துவம் எல்லோர்க்கும் விடுதலை இல்லாதா வாழ்வு என்று இனி எங்கும் இல்லையே பொல்லாத துன்பத்தை போக்கிடப் பாலகன் வருகிறான் என்று எங்கும் பறவைகள் பாடுதே. பா .உதயன் 🌺🎄 இனிய நத்தார் வாழ்த்துகள் 🎄🌺
-
தமிழருக்கு தீர்வு வருகிறதாம்-பா.உதயன் தமிழருக்கு தீர்வு தருவேன் என்றான் ஒருவன். அதுவெல்லாம் முடியாது என்றான் இன்னொருவன். பின்பு முடியாது என்றவன் தீர்வு தருவேன் என்றான். முன்பு முதல் முடியும் என்றவன் இப்போ முடியாது என்றான். அவனிடமும் இவனிடமும் மாறி மாறி கதைத்து ஏமாந்தது தான் மிச்சம். சமஸ்டி தீர்வு என்று கதைத்தாலே சத்தி வருகிறது என்கிறார்கள் பெளத்தத் துறவியார் கூட. கொடுத்தால் பிறகு எல்லாம் நாட்டை பிரித்து எடுத்து விடுவார்களாம். மாகாணசபைக்கு கொஞ்சம் கொடுத்து மடக்க நினைக்கிறார் ரணில். பெரிய நரியார் இவர் ஆச்சே கதையால் எல்லாம் மடக்குவார். 13 ம் திருத்தம் கூட இந்தியா திணித்த தீர்வாம் பாதி உடைஞ்சு போச்சாம் பழைய கதையாய் ஆச்சாம் கிடப்பில இப்போ கிடக்காம். இனி என்ன நடக்கும் இருந்து பார்ப்போம். இன்னொருக்கா மீண்டும் ஏமாற்றுவார்களா பார்ப்போம். இந்தியா சும்மா இருந்தால் எதுகும் இஞ்ச நடக்காதாம் இவர்கள் ஏதும் சொன்னால் கொஞ்சமா ஏதும் கொடுக்க பார்ப்பினமாம் முந்த நாள் எங்களில் ஒருவர் எழுதி இருந்தார். இந்தியா எப்போதுமே 13 ஐ நடைமுறைப் படுத்துங்கள் என்று வழமை போலவே சொல்லிக் கொண்டே இருக்கிறது. இரு நாடுகளுமே தேசிய நலன்களோடு தங்கள் தங்கள் சுய நலன்களோடு மட்டும் பயணிக்கின்றன. என்னவோ தெரியாது எலக்சனும் வருகுதாம் சும்மாவா ரணில் சுத்திறார் பந்தை தந்திரமாக. எங்களில் சிலருக்கு எப்படி ஆடுவது என்று எதுகுமே புரியல்ல ரணில் தந்திரமாகவே காய்களை நகத்திறார். இலக்கு கூட ஒன்றாய் இருந்தும் எல்லா தமிழ்க் கட்சிகளும் சேர்ந்து ஒரே கொள்கையோடு இது தான் தமிழருக்கான தீர்வாக இருக்க முடியும் என்று கதைக்கினம் இல்லை. தனித் தனியாக அறிக்கைகள் வருகுது தமிழருக்கு கூட குழப்பமாய் இருக்குது. எங்களுக்கான பலத்தை நாம் இழந்த பிறகு வேறு எங்கள் ஒற்றுமையை தவிர வேறு எதைத் தான் எம்மால் செய்ய முடியும். இன்று இலங்கை கூட பொருளாதார ரீதியாக பலம் இழந்து நிற்கிறது ஆகவே தமிழருக்காக தீர்வு விடயத்தில் சரியான வழியில் நாம் ஒன்று சேர்ந்து நகர்த்த வேண்டும். இனவாதம் ஒன்று தான் இலங்கையின் இன்றைய அழிவுக்கு காரணம் என்ற தெளிவு இருந்தால் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று தான் இலங்கை தப்பிப் பிழைக்க ஒரே வழி. இருந்தும் இந்த இலங்கை தேசத்திலே தமிழருக்கானா நியாயமான நீதியான தீர்வில் கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழுமா என்பது பெரும் கேள்வியாகவே தமிழர் மனங்களில் உள்ளது. பெரும் பேரினவாதமும் பிழையான பொருளாதாரக் கொள்கையும் தான் இந்த தேசத்தை இவ்வளவு அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றது. தனியவே தமிழர் அழிப்பில் மட்டும் நரித்தந்திரமான இராஜதந்திரக் கொள்கைகளை சிங்களத் தலைவர்கள் கடைப் பிடித்தார்களே அன்றி இந்தச் சிறிய நாட்டை பொருளாதார ரீதியாகவும் இன ஐக்கியத்துடனும் கட்ட மறந்து விட்டார்கள். எல்லா சட்டங்களுமே தமிழர் உரிமைகளையும் அவர் நிலங்களையும் பறிப்பதற்காகவே கொண்டு வந்தார்கள். தமிழ் இன அழிப்புக்காக கொண்டு வந்த பயங்கரவாதச் சட்டம் பெரும் பான்மை சிங்கள இனத்தை படாத பாடு படுத்தது இப்போ. எத்தனையோ தமிழன் வாழ்வை எல்லாம் இழந்தான் இதற்குள்ள கிடந்து அப்பவெல்லாம் எவனும் கேட்கவில்லை. எதுகும் இப்பதான் தெரியுது சிங்களவருக்கு கூட இதனது கொடுமை. இதை கொண்டு வர நின்ற கொடுமைக்காரர் கூட கத்துகினம் இப்போ கனக்கவெல்லாம் சொல்லி தங்களின் தலையில் வந்த பின்பு துன்பம். உங்களையும் ஒரு நாள் இது துரத்தும் என்று எங்களில் ஒருவன் சொன்னான் தெரியுமா. எது எப்படி இருப்பினும் இன்றைய தமிழர் நிலமையில் தீர்வு முக்கியமே அப்போது தான் இழந்து கொண்டிருக்கும் எங்கள் உரிமையும் நிலப் பறிப்புகளையும் காப்பாற்ற முடியும்.ஆனால் இவை எல்லாம் வெறும் கனவுகளாகத் தான் முடியுமோ என்றும் கதைக்கிறார்கள் பலர். பா.உதயன்
-
லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்
-
ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன்
uthayakumar replied to uthayakumar's topic in கவிதைக் களம்
நன்றிகள் குமாரசாமி ஐயா 🌺 -
ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன்
uthayakumar replied to uthayakumar's topic in கவிதைக் களம்
நன்றிகள் நிலாமதி அக்கா 🌺 -
ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன் வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா பேருக்கும் புகளுக்குமாய் பொய்யான கதை பேசி பெரும் தத்துவங்கள் சொல்வாரடா தம்மை தாமே புகழ்வாரடா தம் உயரம் தெரியாரடா தங்கள் பிழை அறியாரடா தாங்கள் மாற நினைக்காரடா மனிதா புரிஞ்சுக்கடா ஞானம் கொண்ட புத்தனைப்போல் தாமும் என்று நினைப்பாரடா தேடல் ஒன்றும் தெரியாரடா வெறும் வெற்றுப் பேச்சில் விண்ணரடா நல்ல மனம் இல்லாமல் நாளும் பொழுதும் தொழுதாலும் என்ன தான் கடவுள் செய்வார் கள்ள மனம் கொண்டோரை பொய்யான முகங்களுடன் மெய்யான மனிதர் போலே பேருக்கும் புகளுக்குமாய் அங்கீகாரம் தேடி அலைந்தே அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா அந்த கபடம் கொண்ட கள்ள நரி போல் தானடா பாசம் கொண்ட மனிதரைப் போல் பொய் வேஷம் கொண்டு பொய்க்கால் குதிரை கட்டி ஆளுக்கொரு கதை பேசும் நாளுக்கொரு முகமூடிகள் அவர்கள் நாளுக்கொரு நாடகங்கள் புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா. பா.உதயன்✍️
-
ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன்
uthayakumar replied to uthayakumar's topic in கவிதைப் பூங்காடு
நுணாவிலான் பெருமாள் உங்கள் கருத்துக்கு நண்றிகள் 🌺 -
ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன் அனைத்து உலகுக்கும் அரசியல் படிப்பித்தவையாம் அந்தப் பெரிய பிரித்தானியாவாம் அண்மைக் காலமாய் ஆடிப்போய் கிடக்கினமாம் அடிக்கடி தலைவர்கள் மாறியும் போகினம் சங்கீத கதிரை போல் எப்போதும் சுத்துகினம் பகிடி அரசியலோ என்று பார்க்கிறவ கேட்கினம் பவுண்டின் பெறுமதி குறைந்திப்போ போச்சுதாம் பணவீக்கம் எல்லாம் கூடிப் போச்சுதாம் கோணிப்பை நிறைய பணத்தை கொடுத்து பாலும் பாணும் வேண்டத்தான் காணுமாம் இனி வரும் காலம் பிரச்சனை தானம் எப்படி சனங்கள் சமாளிக்கப் போகினம் உலகம் எல்லாம் உன்னிப்பாய் பார்க்கினம் என்னப்பா இனி நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிந்தது கொஞ்சம் பிரச்சினை என்றும் கதைக்கினம் இப்போ என்னமோ ஏதோ இருந்து தான் பார்ப்போம் போரும் ஒரு பக்கம் பொல்லாத உலகமாய் போச்சுதிப்போவெல்லாம். பா.உதயன் ✍️
-
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌺
-
உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன்
uthayakumar replied to uthayakumar's topic in அரசியல் அலசல்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 🌺 -
உலகம் ஏன் இவ்வளவு பிளவு பட்டிருக்கிறது-பா .உதயன் ஐ நாவும் அனைத்து சமாதான இயக்கமும் இரண்டாம் உலகப் போருக்கு பின் இனி வேண்டாம் யுத்தம் உலகில் என்று தானே ஆரம்பித்தார்கள். அதன் பின் எத்தனை யுத்தம் உலகில் நடந்தன, நடக்கின்றன, எத்தனை மனிதர் இது வரை இறந்தனர், எத்தனை குழந்தைகள் வாழ்வை இழந்தனர், எத்தனை தேசங்கள் அழிக்கப்பட்டன. எத்தனை ஆக்கிரமிப்பு யுத்தங்கழும் எல்லை தாண்டிய பயங்கரவாதங்களும் உலகில் நடந்தன. இன்று ருசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக இதை தீர்க்க முடியாமல் அவர் அவர் பூகோள அரசியல் நலன் சார்ந்து பெரும் ஆயத மோதலாக வெடித்துள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பின் ஐரோப்பாவுக்கு பெரும் சவால் மிக்கதாகவும் அவர்கள் பொருளாதாராத்தையே அசைக்க கூடியதோர் யுத்தமாக மாறி இருக்கிறது. ரோமானிய பேரரசின் தத்துஞானி சீசரோ(Cicero) கூறியதுபோல் யுத்த காலங்களில் சட்டமும் ஒழுங்கும் அமைதியாகவே இருந்து விடுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின் இன்று ஐரோப்பா பெரும் யுத்தம் ஒன்றை எதிர் நோக்கியுள்ளது. இன்று நாம் புதிய ஒரு பனிப் போரையும் அரசியல் பொருளாதார சித்தாந்த ரீதியாகவும் அத்தோடு ஏழை பணக்கார நாடுகளாகவும் முகாம்களாக பிரிக்கப்பட்ட உலகையும் இன்னும் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி உலகம் பயணிப்பதையும் பார்க்கிறோம். Harvard University அரசியல் பேராசிரியர் Joseph nye என்ற சர்வதேச அரசியல் ஆய்வாளர் சொல்லுவது போல் உலகம் இன்று பல முகாம்களாக பிரிக்கப்பட்டு ஆயத அதிகார அரசியல் பொருளாதாரப் போட்டியாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டி நிலைமையும் யுத்த நிலைமையையும் தணிக்க வேண்டுமானால் கடினமான ஒரு பாதையை (Hard power) தெரியாமல் ஒரு மென் வலு சக்தி (Soft power) ஊடக உலக மோதல்களை தணிக்க முடியும் என தான் எழுதிய (Soft power) என்னும் நூலில் விபரமாக முன் வைக்கிறார். ஏழை நாடுகளின் குழந்தைகள் இறந்தால் எவரும் கேட்பதற்கு இல்லை ஆனால் அதிகாரமும் பணமும் உள்ள நாடுகளின் குழந்தைகள் இறந்தால் அனைவரும் கேட்கிறார்கள். யுத்தற்திற்காகவும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாகவும் எத்தனை கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.ஆனால் இன்று உலகில் எத்தனை வறிய நாடுகள் இருக்கின்றன. எத்தனை குழந்தைகள் இன்று உலகில் உணவு இல்லாமலும் ஒரு வேளை உணவு கிடைக்காமலும் இறந்து போகிறார்கள். எல்லோருக்கும் எல்லாமே சமத்துவமாய் கிடைப்பதில்லை இன்னும் ஆயுதம் செய்வதும் விற்பதுமாக அதிகார வர்க்கத்தின் நலனோடு உருளுதே உலகம். ஐ நா வாக இருந்தால் என்ன ஆயிரம் சமாதானம் பேசும் ஸ்தாபனங்களாக இருந்தால் என்ன எல்லாமே அதிகாரமுள்ள பணபலமும் ஆயுத பலமும் கொண்ட நாடுகளில் நிகழ்ச்சி நிரலிலேயே செயல்படுகின்றன. புவிசார் அரசியல் என்பது இன்று பெரும் போட்டி அரசியல் களமாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரமும் கூட இன்று ஓர் சவால் மிகுந்ததாகவே காணப்படுகிறது. பெரும் தனி நலன் சார்ந்து அரசியல் பொருளாதர ரீதியாக உலகம் பல முகாம்களாக பிரிக்கப் பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி எண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டிருக்கிறார்கள். யுத்தற்திற்காக பெரும் கோடி பணத்தை செலவு செய்கிறார்கள் இதனால் பொருளாதார ரீதியாக பணவீக்கம் கூடி உலக மக்கள் பெரும் பொருளாதார சுமையை சுமக்கிறார்கள். ஏழை நாடுகள் மேலும் வறுமைக்கோட்டுக்குள் கீழ் தள்ளப்பட்டுள்ளன. பல கோடி ஏழை மக்கள் இன்று ஒரு வேளை உணவுக்கே திண்றாடும் நிலை தோன்றியுள்ளது. கொரோனா வருகைக்கு பின் ஏற்பட்ட உலகப் பொருளாதார சரிவின் பின் இன்றும் நிலைமை மேலும் சிக்கல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிகார நலனும் அரசியல் பொருளாதார சுயநலனும் ஆயுத விற்பனையும் தொடரும் வரையில் உலக அமைதி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகிவிட்டது. ஐ நா கூட அவர்களின் கைப் பொம்மை ஆகிவிட்டது. எல்லாமே சும்மா பேச்சுக்கு தான் மனித உரிமையும் ஜனநாயகமும் என்றாகிப் போய் விட்டது. எங்குதான் இருக்கிறது அறமும் தர்மமும். சரித்திரங்களில் இருந்து மனிதர் பாடத்தை கற்க வேண்டும் இரண்டாம் உலகப் போரில் இருந்து பாடத்தை அனுபவத்தை உலகம் இன்னும் படிக்கவில்லையானால் இன்னும் இருண்ட யுகமாகவே உலகம் இருக்கும். உலக சமாதானம் என்பது வெறும் பேச்சாகத் தான் இருக்க முடியுமே தவிர இது சாத்தியமா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. யுத்தத்தை ஆரம்பிப்பதும் கடினம் இதை முடிவுக்கு கொண்டு வருவதும் கடினம். In times of war, the law falls silent” -Cicero பா .உதயன் ✍️
-
உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்🌺