Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    593
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    Norway
  • Interests
    Poetry,politics and literature

uthayakumar's Achievements

Mentor

Mentor (12/14)

  • Posting Machine Rare
  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • First Post
  • Collaborator

Recent Badges

488

Reputation

  1. தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன் ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே உங்கள் பொக்கற்றை மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership and planning என்பது தெரிந்து தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆலோசனைகளை அந்த மக்களிடமோ சிவில் அமைப்புகளிடனோ கூடி கதைத்திருக்க வேண்டும். A vision without a strategy remains an illusion. சரியான திட்டமிடலும் மூலோபாயத் திட்டமும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான பாதையாகும். வன்னியிலும் மலையகத்திலும் மனிதர் படும் துன்பம் கண்டும் ஒருவேளை உணவுக்காய் பல சனம் படும் பாடு கண்டும் பள்ளி சென்று படிக்க கூட வழியில்லாமல் பலர் இருக்க யுத்த வடுக்களும் துன்பமும் துயரமும் இன்னும் எம் இனத்தை விட்டு அகலாத போதும் இத்தனை லட்ஷம் பணத்தை இப்படியா தமிழர் கொட்டுவது. நாங்கள் அறிவு சிந்தனை நாகரீகத்தோடு வாழ்ந்த மக்கள் ஆதலால் நாம் இன்று தொலைந்து போன எம் அமைதி வாழ்வையும் சுதந்திரத்தையும் தான் முதலில் தேட வேண்டும். பொருளாதார அவிவிருத்தி மட்டுமே போதும் அரசில் தீர்வும் தேவை இல்லை என்பது தான் இலங்கை அரசின் நிலைப்பாடு. நிரந்தர ஒரு சமாதான தீர்வு இல்லாத எமக்கான பாதுகாப்பு இல்லாத திட்டமிடப்படாத பொருளாதார அபிவிருத்திகள் இப்படியான குழப்பங்கள் பிரச்சினைகளில் தான் முடியும். எது எப்படி இருப்பினும் 2009 க்கு பின் ஈழத் தமிழர் மத்தியிலே பல மாற்றங்கள் நடந்திருப்பது அவதானிக்க முடிகிறது. ஒன்றாக கூடி ஒரே தலைமையின் கீழ் இணைந்திருந்த மக்கள் இன்று அந்தத் தலைமை எதுவும் இல்லாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள். கல்வி கலை ஒழுக்கம் என்று அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் அதேபோலவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கலாச்சார சீரழிவுகளும் போதைப் பொருட்களின் உபயோகமும் என இளைஞர்கள் மத்தியிலே கூடி அங்கு வன்முறைகளாக குழு மோதல்களாக இருந்து வருவதைப் பார்க்கிறீர்கள். ஒரு காலம் கல்வியிலே முன்னேறி இருந்த யாழ்ப்பாணம் இன்று இந்த கலாச்சார சீரழிவுகளினால் மெல்ல சிதைந்து வருவது உண்மைதான். மேய்ப்பவன் இல்லா மந்தைகள் போல சரியான தலைமைகள் இல்லாமல் நாம் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கிறோம். இருந்த போதிலும் இந்த இளையர்களை குறை கூறி என்ன வருவது. இவர்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை சரியான வழிகாட்டல் இன்றி இந்த இளைஞர்கள் பிழையான பாதைகளை தெரிவு செய்கின்றனர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே நல்லவை கெட்டவை என்ற பக்கங்கள் இருக்கும். குழப்பங்களும் பிரச்சனைகளும் எல்லா உலக சமூகத்திலும் தான் இருக்கின்றன தனியவே தமிழர் சமூகத்தில் மட்டும் இல்லை. நாகரீகமான சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இங்கும் எத்தனையோ குழப்பங்களை கண்டிருக்கிறோம். ஒரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும் பொழுது அங்கு கூடி பல குழப்பங்களை விளைவித்து அடிதடியில் முடிவடைவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அரசியல் பொருளாதார பிரச்சினைகள் என்று இருக்கும் தேசங்களில் இது இன்னும் பிரச்சினையானதாகவே இருக்கும். நாமும் நம் மூதாதையினர் விட்டுச்சென்ற நாகரிகமான பாதையில் சென்று அறமும் தர்மமும் ஒழுக்கமும் தொலையாமல் எங்கள் ஒற்றுமையோடு கூடிய தேசிய உணர்வும் அடையாளமும் தொலையாமல் இருப்போம். பா.உதயன்✍️
  2. சர்வதேச அரசியலில் பூகோள அரசியல் சார்ந்து அதிகாரம் மிக்க நாடுகள் இராஜதந்திர ரீதியாக தமது சுய நலன் சார்ந்தோ அல்லது அவர்கள் மூலோபாயம் சார்ந்தோ சர்வதேச அரசியலில் பொய் சொல்லி வருவதை பார்க்கிறோம். Selfish lies and strategic lies அரசுகள் கூறும் இப்படியான பொய்கள் அவர்களுக்கு நன்மையாகவும் முடிகின்றன அதே வேளையில் தோல்வியாகவும் முடிகின்றன. அரசுகளுக்கு இடையிலான யுத்தங்களுக்கும் குறிப்பாக சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவால் சொல்லப்பட்ட அனைத்து பொய்களும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் எல்லா நேரத்திலும் அது வெற்றி அளிக்காததற்கான பல காரணங்களும் உண்டு. அதிகாரம் கொண்ட இந்த அரசுகளின் பொய்கள் குறித்து அரசியல் வெளியுறவு ஆய்வாளர்கள் இப்படியான தமது தர்க்கங்களை முன் வைக்கிறார்கள். ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் உள்ளதாகவும் அங்கு ஓர் ஆட்சி கவிழ்ப்புக்காக அமெரிக்காவின் நலன் சார்ந்து பொய்கள் பல சொல்லப்பட்டது. இது இவ்வாறு இருக்க இப்படி எத்தனையோ ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ நாடுகளை அமெரிக்கா கவிழ்த்திருக்கிறது. இன்று உலகில் நடக்கும் யுத்ததங்களை பார்க்கும் போது இதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்க சொல்லும் பொய்களை அப்படியே ஏற்றுக் கொண்டு எல்லா உண்மைகளையும் சொல்ல மறுக்கிறார்கள் ஐரோப்பிய தலைவர்கள் இது தான் அவர்கள் ஜனநாயகம். இன்னும் எத்தனை யுத்தங்களை எவ்வளவு காலம் கொண்டு நடத்தப் போகிறார்கள் அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை விடுதலைப் போராட்டங்களை தம் நலன் சார்ந்து அழிக்கப் போகிறார்கள் இன்னும் எத்தனை மனிதப் படுகொலைக்கு உதவப் போகிறார்கள். பொய் சொல்லுவதில் அமெரிக்காவை அடிக்க யாரும் இல்லை. அந்தப் பொய்களை எல்லாம் மூடி மறைப்பதில் ஐரோப்பாவை வெல்ல யாரும் இல்லை. உண்மைகளை உலகுக்கு சொல்ல மறுக்கிறார்கள் பெரிய அண்ணனும் தம்பிமாரும். சிரியாவில் சொன்னது பொய், ஈராக்கில் சொன்னது பொய், ஆப்கானிஸ்தானில் சொன்னது பொய், கியூபாவில் சொன்னது பொய், லிபியாவில் சொன்னது பொய், ஐ. நா. சபையில் அனைத்து தேசங்களுக்கும் சொல்லுவது பொய், ஏன் ஈழத் தமிழர் போரட்டத்திலும் சொன்னது பொய் இப்படி எத்தனை பொய்கள் அமெரிக்க சொன்ன பொய்கள் அதை ஆமோதித்து ஐரோப்பா சொன்ன பொய்கள் எத்தனை. இன்று இஸ்ரேலுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் பொய் சொல்லிக் கொண்டு பெரும் இனஅழிப்புக்கு துணை போய்க் கொண்டு பல்லாயிரக் கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறார்கள். மனிதாபிமானத்தை தொலைத்துவிட்டு இன்று உலகம் கண்ணை மூடி பார்த்துக் கொண்டு இருக்கிறது. பல அரபு நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமைதியாய் இருக்க இன்று தென்னாபிரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இனப்படுகொலை வழக்கின் மீதான விசாரணையை சர்வதேச நீதிமன்றில் (ICJ) தென்னாபிரிக்கா வாதாடி வருகிறது. அடுத்தவர்களின் துன்பத்தை மனிதாபிமானம் கொண்டு பார்க்க வேண்டும் முதலில் மனிதாபிமானம் பேசும் மானிடர்களாக வாழ வேண்டும். அன்பும் கருணையும் தான் ஆண்டவன் மொழி என்பதை மானிடம் உணர வேண்டும். மத அடிப்படை வாதிகளினதும் காலனித்துவவாதிகளினதும் ஏகாதிபத்திய வாதிகளினதும் அடிப்படை சிந்தனைகளிலோ அல்லது அவர்கள் நலன் சார் வெளியுறவுக் கொள்கைகளிலோ இன்னும் மாற்றம் ஏற்படாத வரை யுத்தங்கழும் மனித அழிவுகளும் அகதிகள் பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இன்று உலகம் பெரும் அச்சுறுத்தக்குக்கு உள்ளாகி இருக்கிறது இன்றைய மோதல்கள் நாளை ஒரு பிராந்தியங்களுக்கு இடையிலான மோதலாக வெடிக்குமா என உலகம் அச்சத்தில் உறைந்துள்ளது. Leaders believe lying is wrong but do it anyway. பா.உதயன் ✍️
  3. யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் புலம் பெயர் தமிழரை கூப்பிடப் பார்ப்பார் குள்ள நரி போல கள்ளத் தனமாக காரியம் முடிப்பார் அபிவிருத்தி என்றெல்லாம் பேசி அரசியல் தீர்வை மறக்கவும் செய்வார் அறிவோட தமிழ் இனம் இப்போ ஆழமாய் சிந்திக்க வேண்டும் பேரினவாதத்தில் என்றும் இப்போ பெரிதாய் மாற்றங்கள் வராது இந்தியா சொன்ன 13 ம் தீர்வுக்கும் எந்தப் பதிலும் இதுவரை இல்லை இதக் கூட தராத ரணிலார் பின்ன எதக் கூடத் தருவார் வடக்கு கிழக்கு என்று இனி வலம் வருவார் தேர்தல் வருகிறது திரும்பவும் வருவார் தீர்வு வரும் ஆனால் வராது என்றனர் மக்கள். பா.உதயன்✍️
  4. இலங்கையின் ஜனாதிபதி ரணில் இந்த வருட இலங்கையின் சுதந்திர விழாவில் ஈழத் தமிழருக்கு தீர்வு என்று சொன்னார். ஒரு சிறு நகர்வு கூட நகர்ந்ததாய் இல்லை. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள் இருக்கும் போதும், வாய் கிழிய பாராளுமண்றத்தில் தீர்வை தாருங்கள் என்று கத்திய போதும், எதுகும் நடக்காத போதும் எதையுமே அவர்களை காதில் போட்டுக் கொள்ளாத போதும், அவர்களிடம் ஏதும் பேசாத போதும், இன்னுமே தொலைத்து போனவர்களுக்கான ஒரு தீர்வை வழங்காத போதும், புத்த சிலைகளை எல்லாம் போகும் இடம் எல்லாம் தமிழர் பூமியில் புதுசாய் நட்டு வைத்தும் எந்த வித நல்லிணக்க செயல்பாடோ Act of reconciliation இது வரை ஏதும் செய்யாமல், தமிழர் தீர்வில் எத்தனையோ ஆணையகங்களின் சிபாரிசுகளை ஏற்க மறுத்தும், தமிழர் மனங்களை வெல்லாமல் Winning the hearts of tamils minds எந்த நகர்வுமே இல்லாமல், எப்படி தீர்வை கொண்டு வருவார்கள். ஏதாவது தீர்வுக்கு ஒரு பாதையை தன்னும் திறந்தால் தானே எவரும் நம்ம முடியும். அற்ப சொற்ப தீர்வான 13 ம் சரத்துக்கு மேல் சென்று தமிழருக்கு தீர்வு வழங்குவோம் என்று பல முறை கூறியும் இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த அண்ணனும் இலங்கை பொருளாதாரம் வங்குரோத்து அடைந்து மூழ்கும் நிலைக்கு போகும் போது கை கொடுத்து தூங்கி விட்ட இந்தியா தமிழருக்கான 13 ம் சரத்து தீர்வை முழுமையாக வழங்குங்கள் என்று ஆயிரம் தடவைக்கு மேல் கூறியும் அதை கூட காதில் வேண்டாத சிங்கள பேரினவாதம் இனி என்ன நல்லிணக்கத்தையோ தீர்வையோ தரப் போறார் ரணில் என்று ஈழத் தமிழர் பேரவை ( Global Tamil forum(GTF) இங்கிலாந்தில் இருந்து வந்து இன ஐக்கியம் பேசுகிறார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம் புதுசாய் ஏதும் நடக்குதோ என்று. இல்லை இன்னும் இன்னும் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாற்றப்படுவார்களா என்று. கடந்த கால அனுபவங்கள் இது சாத்தியமாகுமா இலங்கையில் என்பது கேள்விக் குறியே. எல்லா தமிழர் தரப்பும் ஒற்றுமையாக எந்த நேரத்தில் எப்போ என்று நேரமும் காலமும் அறிந்து தான் நாம் காலை வைக்க வேண்டும். யாரும் பேசலாம் முயற்சி செய்யலாம் அது ஜனநாயக பண்பு இருந்த போதிலும் இலங்கையின் இனப்பிரச்சினையில் எல்லா தமிழர் தரப்பும் ஒற்றுமையோடும் பங்கு பற்றக் கூடிய அடிப்படையில் பலத்தோடு பேச வேண்டும். இராஜதந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விஷயங்களை சரியான பலத்தோடு சொல்லுவதும் எந்த நேரத்திலும் தவறான விஷயங்களைச் சொல்வதையோ அல்லது செய்வதையோ தவிர்ப்பதுமாகும். புத்தர் எதுகுமே வேண்டாம் என்று எல்லா ஆசைகளையும் துறந்து ஞானம் பெற்றார். “Desire is the root of suffering.” ஆசையே துன்பத்தின் வேர் என்றார். பெளத்த மத குருமார்கள் இலங்கையில் புத்த தர்மங்களின் சிந்தனைகள் இருந்து முற்றும் வேறு பட்டவர்கள். இவர்கள் எல்லா வகை ஆசை பற்றுக்களோடு வாழ நினைப்பவர்கள். இலங்கையின் வன்முறையான பாதை ஒன்றிற்கு வரலாற்று ரீதியாக துணை நின்றவர்கள். பேரினவாதத்தின் ஒரு அடையாளமாக இருப்பவர்கள் இவர்களுடனான சமரசம் என்பது சாத்தியமா என்பது கேள்விக் குறியே. தமிழர் ஒடுக்கு முறைக்கான போராடடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து எத்தனை போராட்டங்கள் சாத்வீக வழியில் இருந்து ஆயுதப் போராட்டம் வரையிலும் இன்று வரை சிங்களத்திடம் இருந்து எதுகுமே பெற முடியவில்லை. 13 ம் சரத்து கூட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்தினால் கிடைத்த தீர்வு தான். இது கூட தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அவர்களின் எந்த வித அபிப்பிராயமும் இன்றி இறக்குமதி செய்யப் பட்ட தீர்வாகும். இன்று இலங்கை ஓர் பொருளாதர ரீதியாக அபிவிருத்தி அடைந்து அமைதிப் தேசமாக இருக்க வேண்டுமானால் தமிழருக்கானா தீர்வை உடன் வழங்குவதன் மூலமே சாத்தியம் என்பதை சிங்கள மக்களும் பெளத்த பீட மதகுருமாரும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறும் இனவாத பேச்சின் மூலமும் புலம் பெயர் தமிழர்களை எந்த வித ஆதாரமும் இன்றி பிரிவினை வாதிகள் என்பதும் வெறும் வன்முறையும் வெறுக்கத் தக்க பேச்சின் மூலமும் சிங்கள பேரினவாதம் எதையும் சாதிக்கப் போவதில்லை. முழுமையான எதார்த்தத்தை உணர்ந்து இனியும் ஓரு மாற்றத்தினுடாக சிங்களம் பயணிக்குமா என்பது இன்னும் கேள்விக்கு குறியே. விட்ட பிழைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது போல் Learn from the mistakes சிங்கள தரப்பும் அத்தோடு தமிழர் தரப்பும் உணர்ந்து கொண்டு பயணிக்க வேண்டும். இனியும் சரியான பாதையை தேடவில்லையானால் இன்னும் பல அறகலைய போராட்டங்களை சிங்களம் சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.உதயன் ✍️
  5. எது நிஜம் எது நிழல்-பா.உதயன் விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகாவின் சர்ச்சையில் எது நிஜம் எது நிழல் என்பது என்று படித்தவனும் அறிந்தவனும் ஆளுமையுள்ளவனும் சரியாக பொய் சொல்லத் தெரிவதும் ஒரு வகை இராஜதந்திரம் என்பது தெரிந்து கொண்டு கடந்து போய் விடுவான். சிங்கள இனவாதம் வேண்டுமானால் இதை தூக்கிப் பிடித்து கன கதைகளை சித்தரிக்கலாம். இதைத் பெரிதாக பெருப்பித்து எழுதுவதும் பேசுவதும் சித்தரிப்பதுவும் நகைசுவை செய்வதுவும் அதை சிலர் ஆதரிப்பதையும் எழுதுவதையும் பார்க்க துவராகாவை கொண்டு வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை போல் தெரிகிறது. இவர்களின் பார்வை எல்லாம் புலிகளை வைத்து அரசியல் செய்வதும் அத்தோடு தாங்கள் புத்திஜீவிகள் போல் காட்டிக் கொள்வதும் தங்கள் சுய நலத்தோடு தாங்கள் எல்லாம் தெரிந்தவர் போல் போலியான ஒரு முகத்தை சமூகத்துக்கு காட்டிக் கொள்வதற்காக மட்டும் இன்றி வேறோன்றும் இல்லை. சிலரது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பார்க்கும் போது ஒன்றும் தெரிவதில்லை இவர்கள் உயரம் மட்மே தெரிகிறது. எதிரிக‌ளை விட‌ துரோகிகளே ஆபத்தான‌வ‌ர்க‌ள். என்ன தான் வேறுபாடுகள் இருப்பினும் சரி பிழைகள் கடந்து தன் சொந்த இனத்தின் வலியும் துயரமும் தெரியாமல் இருப்பவனிடம் மனிதாபிமானம் இருக்கப் போவதில்லை. இவன் தனக்காக மட்டுமே வாழ நினைப்பவன். எந்த ஒரு தேசத்தவனாக இருந்தாலும் அவன் நோர்வேஜியனாகவோ பிருத்தானியனாகவோ பிரான்ஸ்காரனாகவோ அல்லது இத்தாலியனாகவோ ஏன் ஆபிரிக்க எந்த தேசத்தவனாக இருந்தாலும் தங்கள் இனம் சார்ந்து பெருமையாக தான் பேசிக் கொள்வான். ஆனால் தமிழர்கள் ஆகிய நாங்கள் மட்டும் இது எமது முதலாம் தலைமுறையில் இருந்து இரண்டாம் தலைமுறை வரையும் நம் இனத்தை எதுகுமே தெரியாதவர்கள் போல் குறைத்து பேசிக்கொள்கிறோம். எங்கள் சமுதாயக் கட்டமைப்பிலும் பிழைகள் இல்லமால் இல்ல. மாற்றம் ஒன்று தானே மாறாதது எதுகும் எல்லாம் ஒரு நாள் மாறித் தானே ஆக வேண்டும். அமெரிக்க கறுப்பு இன புத்தியீவியும் அந்த இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்த வருமாகிய Malcolm X ஆணித்தரமான கருத்தை தன் சொந்த இனமான அமெரிக்க கறுப்பு இன மக்களை பார்த்து சொன்னார். Who taught you to hate your own kind? Who taught you to hate the race that you belong to, so much so that you don't want to be around each other ... உங்கள் சொந்த இனத்தை வெறுக்க உங்களுக்கு யார் கற்றுக் கொடுத்தது நீங்கள் ஒருவரையொருவர் சுற்றி இருக்க விரும்பாத அளவுக்கு, நீங்கள் சேர்ந்த இனத்தை வெறுக்க உங்களுக்கு யார் எந்தப் பாடசாலை கற்றுக் கொடுத்தது ... இதே போல் ஈழத் தமிழர்கள் தன் இனத்தை தானே குறைவாகவும் வெறுக்கும் அளவுக்கும் ஒற்றுமை இல்லாமல் வாழும் அளவுக்கும் இவர்களுக்கு யார் எந்தப் பாடசாலையில் கற்றுக் கொடுத்தார்களோ தெரியாது. எல்லா சமூகங்களில் நல்லதுக்கு கெட்டதும் இருக்கும் இது தனியவே தமிழ் இனத்துக்கு மட்டும் இல்லை. தூய்மையான போராட்டம் என்று எதுகும் இல்லை பயங்கரவாதி யார் என்பதையும் விடுதலை போராளிகள் யார் என்பதையும் தமது தேசிய நலனுக்கு ஏற்றதால் போல் இந்த உலகின் பலம் வாய்ந்த ஆதிக்க சக்திகளே தீர்மானிக்கின்றன. Thomas Hobbes என்ற அரசியல் தத்துவாசிரியர் ஆரம்பகால மனித வாழ்வு சுய நலன் மிக்கதும் வன்முறை மற்றும் கொடூரமானது என்றார் அது இப்போதும் தொடருவதை பார்க்கிறோம். இந்த உலக வரலாறு வன்முறையால் தான் கட்டப் பட்டுள்ளது. இந்த வரலாறு இன்னும் தொடர்கிறது காசாவில் ஐயாயிரம் குழந்தைகளுக்கு மேல் இறந்தும் இந்த உலகம் அமைதியாக தான் இருக்கிறது. எது எப்படி இருப்பினும் உங்கள் இனத்தினதும் அதோ போல் அடுத்தவர்களின் வலியிலும் துன்பத்திலும் மனிதாபிமானம் மிக்க மனிதராய் நடந்து கொள்ளுங்கள் மனிதர்களை மதிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் அன்பு தான் கடவுள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் இது தான் உண்மையான மனிதனின் அறமும் அன்பும் தர்மமும் என்று விளங்கிக் கொள்ளுங்கள். சரியானவைகளை இனம் கண்டு தேடிக் கொள்ளுங்கள் Be at peace and humanity with a pain and suffering of your own and others. பா.உதயன்
  6. சுவே எந்தத் தேனீக்கள் வந்தாலும் இந்தப் பூ என்னை காப்பாற்றும்.நன்றிகள் 🌺
  7. இனப்படுகொலையும் இரட்டைவேடமும்-பா.உதயன் அமெரிக்காவும் அதன் நண்பர்களும் அடுக்கடுக்காய் பொய் சொல்லுவதில் வல்லவர். அன்று ஒரு நாள் இராக்கில் இரசாயன குண்டுகள் இருப்பதாக சொன்னது போல் இப்போ இஸ்ரேல் போடவில்லை குண்டுகள் மருத்துவ மனையில் என்று மறுபடியும் பொய். இப்படி எத்தனை பொய்கள் உலகத்துக்கு தெரியும். அண்ணன் சொல்லி விட்டார் இனி அவர் தம்பிமாரும் தொடருவார்கள். நீதி நியாயம் எதுகும் இல்லா உலகமாகிவிட்டது. அண்மையில் நோர்வீய ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் நடை பயணம் போகும் போது காணமல் போய் விட்டான் போலீஸ் மக்கள் உட்பட அனைவரும் தேடினார்கள் நாம் எல்லோருமே அவன் உயிரோடு திரும்பி வரவேண்டும் என்றே மன்றாடினோம் ஆனால் துர்அதிஸ்டமாக அவர் இறந்து விட்டான். இது பெரும் அவலம் நோர்வே கூட அழுதது. ஒரே ஒரு சிறுவனுக்காக நோர்வே மக்கள் அழுதார்கள் இது தான் மனிதம் மனித தர்மம் மனித உயிர்கள் மகத்தானது பெறுமதி மிக்கது. இதே போலவே தான் அன்று முள்ளிவாய்க்கால் போல் இன்று பாலஸ்தீனத்திலும் பல்லாயிரம் குழந்தைகள் படுகொலை செய்யப்படுகின்றனர் ஆனல் இன்று இவை எல்லாம் இவர்கள் பார்வையில் மதிப்பு குறைந்த மனிதர்களாக பார்க்கப் படுகின்றனர். எல்லா உயிர்களுமே பெறுமதியானவை. உலகம் முழுவதும், முடிவில்லாத வெறுப்பும், வன்முறையும், மனித அழிவுகளுமாக உள்ளது. நாடுகள் சமூக சீர்கேட்டில் உள்ளன, பொருளாதார பிரச்சினைகள் யுத்தம் பசி பட்டினி என்பது சமூகங்களை அச்சுறுத்துகின்றன, மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர், மற்றும் இனங்கள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. நம் உலகம் துன்பத்தில் உள்ளது. நாகரீகம் கொண்ட உலகில் எங்கேயோ ஒரு மூலையில் மனிதர் மரணித்தபடி பெரும் அவலத்தோடு இருக்க ஒன்றுமோ தெரியாது போல் லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல பலம் மிக்க நாடுகள் அமைதியாகவே இருக்கின்றன. ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட அமெரிகாவினதும் அதன் நண்பர்களினதும் நிகழ்ச்சி நிரலிலும் அவர் சார் நலனின் ஊடாகவே பயணிக்கிறது. நோபல் சமாதான பரிசு வழங்கும் நோர்வே கூட பார்த்திருக்கிறது இவர்களோடு சேர்ந்தே. ஜனநாயக வாதிகள் மனிதாபிமானிகள் என்று தம்மை கூறிக் கொள்ளும் இவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது. சமாதானம் விரும்பிகள் என்று சொல்வோரும் ஐ,நா வினால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல் பலஸ்தீனம் இடையிலான யுத்த நிறுத்தத்தை ஆதரிக்காமல் யுத்தம் தொடருவதை ஆதரித்தனர். இதே நாடுகள் தான் தமது நலனுக்கும் ஆயுத விற்பனைக்கும் ஏற்றபடி யுத்தத்தை ஆதரிப்பதுமாக இருக்குகின்றனர். உலகில் மானுடத்திற்கு எதிரான கொலைகள் புரிபவர்களை விட அதை பார்த்துக் கொண்டு இருப்பவர்களே அவர்களை விட கொடியவர்கள். இது (Genocide and hypocrisy) இனப்படுகொலைகளை ஆதரிப்பதற்கும் இரட்டை வேடம் போடுவதற்கும் சமமாகும் இது பெரும் வெட்கம். it’s shame! ஒவ்வொரு மனிதனும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும். Every human being must be treated humanely. பா.உதயன் ✍️ பா.உதயன்
  8. பற்றி எரிகிறது பாலஸ்தீனம்-பா.உதயன் பற்றி எரிகிறது பாலஸ்தீனம் அன்று ஒரு நாள் முகம் எரிந்த முள்ளிவாய்க்கால் போலவே எரிந்துகொண்டிருப்பது பாலஸ்தீனம் மட்டும் இல்லை அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் பொய்ச் சத்தியமும் போலி முகங்களும் வரலாற்றுத் துரோகங்களும் அவர்கள் மனசாட்சியும் கூடவே எரிகிறது ஐ நாவின் அறமும் அதன் தர்மமும் அமைதியாகவே பார்த்திருக்கிறது எரிந்து கிடக்கும் சாம்பலில் இருந்து எப்போதாவது ஒரு பூ பூக்காத என்று ஏங்கித் தவிக்கின்றன பாலஸ்தீன குழந்தைகள். பா.உதயன்✍️
  9. சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும்-Rule of Law and democracy -பா.உதயன் —————————————————————————————————————— ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே என்பது போல் நானே அரசு “l am the state“ என்றான் 1655 இல் பாரிஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயிஸ். ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம், நீதி, நிர்வாகத்திற்கு (Executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (Separation of power) சமநிலை சட்ட வரையறையும் ( Checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே (Authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவும் இதை இல்லாமல் ஆக்குவதற்காகவும் அரசியலமைப்பு முடியாட்சி, பாராளுமன்ற முடியாட்சி அல்லது ஜனநாயக முடியாட்சி பின்பு முழுமையான மக்கள் ஆட்சி என்று அதிகாரங்கள் மாறின. பெரிய பிருத்தானியாவில் ஏற்பட்ட மாற்றங்களும் பிரஞ்சுப் புரட்சியும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். நீதி, நிர்வாகம், சட்டம் இந்த மூன்று துறைகளுக்கு இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதற்கான (Separation of power) நவீன கோட்பாட்டை முதல் முறையான தோற்றுவித்தவர் பிரெஞ்சு தத்துவவியலாளர் மான்டெஸ்கியூ ஆவர். இவரே இந்தத் துறைகளுக்கு இடையிலான அதிகார பிரிவையும் அதிகார சம நிலையையும் இதன் முக்கிய பங்களிப்பையும் விளக்கினார். அரசியல் விஞ்ஞானத்தில் ஆழமான தத்துவார்த்த சிந்தனை கொண்ட மார்க்கிய வல்லி, தோமஸ் ஹோப்ஸ், ஜோன் லொக், ஜான் ஜாக் ரூசோ. வோல்ட்டயர், ஹெகல், கார்ல் மார்க்ஸ் போன்ற அரசியல் வரலாற்றுத் தத்துவவியலாளர் போலவே மான்டெஸ்கியூ( Montesquieu ) என்று அனைவராலும் அறியபட்டவர். முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார் இதில் சட்டத்தின் உயிர் (The Spirit of Law ) என்னும் புத்தகம் மிகவும் பிரபல்யமானது. இவர் எழுதிய புத்தகங்கள் இன்றும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றன. நீதியை மதிக்காவிடில் தனி நபர் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குறியே. எந்த மக்களுக்கும் சமத்துவமான சட்டரீதியான நீதி கிடைகாது போனால் அது ஒரு தோல்வியான அரசு என்றே கூற முடியும் (Failed State). அதே வேளை அந்த மக்களின் நன் மதிப்பையும் எதிர் காலத்தில் இந்த அரசு இழந்துவிடும். குற்றம் செய்யாதவர்களை சிறையில் அடைப்பதும் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதுவும் நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பான செயலாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு இது முற்றிலும் மாறுபட்டு அதை மதிக்காத ஒரு செயலாகும். இங்கே நீதி என்பது கேள்விக்குறியே. சட்டத்தின் ஆட்சி (Rule of law) சரியாக இல்லாவிடில் மக்கள் எங்கே போய் முறையிடுவது எனவே சரியான நீதி கிடைக்கும் என்ற எல்லா நம்பிக்கைகளையும் மக்கள் இழந்து விடுவார்கள். ஜனநாயகம் மக்கள் ஆட்சி எல்லாம் மறைந்து அரசனின் ஆட்சியில் இருக்கும் ஒரு ஆதிக்கம் போல் ஆகிவிடும் நாடு. இந்த அடிப்படையில் பார்க்கும் போது இலங்கையில் இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாக இயங்குவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. நீதித்துறையில் இருந்து நிர்வாகம் சட்டத்துறை சார்ந்த அனைத்து கட்டமைப்புகழும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வருவதை பார்க்கிறோம். அண்மையில் நீதிபதி ஒருவர் சுயமாக இயங்க முடியாத நிலையில் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தனது பதவியை துறந்துள்ளார். ஒரு நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லையானால் அந்த நாடு ஒரு தோல்வியடைந்த நாடாகும். இது இலங்கையின் நீதித் துறையின் இருப்பையே சவாலுக்கு உட்படுத்தி இருக்கிறது. நீதிபதிக்கு, பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்றால் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள் அதிலும் முக்கியமாக ஈழத் தமிழரைப் பொறுத்த வரையிலும் மற்றும் இஸ்லாம் மக்கள், மலையக மக்களைப் பொறுத்த வரையிலும் இது பெரும் அச்சுறுத்தலாகும். சட்டமும் நீதியும் ஒழுங்கும் சீர்குலையும் போது மக்கள் அமைதியாக இருப்பார்களேயானால் இந்த நாட்டின் எதிர் காலம் என்னவாகும். எந்த வித மாற்றங்களையும் விரும்பாதவரையிலும் இனவாதம் இருக்கும் வரையிலும் இந்த நாட்டினதும் மக்களினதும் எதிர் காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும். நாடு கூட ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி நகர்ந்து தோல்வியடைந்த நாடக (Failed State) அத்தோடு “the begging bowl of the world" “ உலகின் பிச்சைக் கிண்ணம்" ஏந்துகின்ற நாடாக தொடர்ந்து இருகப் போகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பா.உதயன் ✍️ “சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதைச் செய்வதற்கான உரிமையே சுதந்திரம்”
  10. புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும். -பா.உதயன் புலம் பெயர் முதலாம் தலை முறை ஈழத்தமிழர் குடும்ப சமூக நிறுவனம் என்ற அமைப்பு முறைக்கும் இவர்களது இரண்டாம் தலை முறையின் குடும்ப அமைப்பு முறைக்கு இடையில் இடைவெளி கூடிக் கொண்டே போகிறதா. இரட்டைக் கலாச்சாரத்தினால் இவர்கள் தமது இனம் சார்ந்த அடையாளத்தில் இருந்து விலகிப்போகிறார்களா. எதிர் காலத்தில் இரண்டாம் தலை முறையின் குடும்பம் என்கிற ஸ்தாபனம் எப்படியான சவால்களை எதிர் நோக்கப் போகிறது எல்லா சமூகத்தினதும் குடும்ப அமைப்பு முறைமையில் பல குறைகளும் நிறைகளும் இருக்கின்ற போதிலும் ஆசிய குடும்ப அமைப்பு முறைமைகளில் குடும்பம் என்ற ஸ்தாபனம் இயங்கியல் தன்மைக்கு ஏற்ப பல இறுக்கமாக இருப்பதால் இந்த குடும்ப அமைப்பு இன்றும் பலமாக இருப்பதாக ஆசிய ஐரோப்பிய சமூகவியலாளர்களின் ஆய்வு கூறுகின்றது. எது எப்படி இருப்பினும் அரசியல், சமயம், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற முக்கிய நிறுவன அமைப்பு முறை போன்றே குடும்பம் ஒரு முக்கியமான நிறுவனமாகும். குடும்பம் என்பது ஒரு சமூக நிறுவனமாகும், அங்கு குழந்தை முதலில் சமூக விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறது மற்றும் ஒரு தனிநபராக சமூகமயமாக்கப்படுகிறது. "நான்" என்ற அடையாளத்தை இங்கு ஆரம்பத்தில் கற்றுக் கொள்கிறது. (Family as an important Social institution) என்ற ரீதியில் எமது இரண்டாம் தலை முறையின் குடும்ப வாழ்வியல் எப்படி அமையப் போகின்றது என்பது எதிர் காலம் தீர்மானிக்க கூடியதொன்றாகவே அமையுமா. புலம்பெயர் முதலாம் தலை முறையினருக்கும் பல இரண்டாம் தலை முறையினருக்கும் இடையில் பல வேறுபாடுகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. புலம் பெயர் முதலாம் தலைமுறை எப்போதும் குடும்பத்தை தலையில் காவியபடி இருந்தனர். இவர்களின் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறை தனித்து வாழ்வதே தமக்கான தெரிவு என்றனர். நாட்டில் வாழும் உறவுகளின் வயிற்றுப் பசியையும் காத்து இருந்தனர் முதலாம் தலைமுறை. புலம் பெயர் முதலாம் தலை முறை எப்போதுமே தமது தேசம் பற்றிய சிந்தனையோடும் அங்கு போக வேண்டும் வாழ வேண்டும் என்ற கனவோடிருந்தனர் இரண்டாம் தலை முறைக்கு அது பற்றிய சிந்தனையோ எண்ணமோ இப்போதைக்கு இல்லையென்றனர். தமது தாய் தந்தையர் பிறந்த வாழ்ந்த தேசத்தை விட அவர்களின் விருப்பு வெறுப்புகள் வேறுபட்டதாயிருந்தது. புலம் பெயர் முதலாம் தலைமுறை காசு பொருளில் கவனமாக இருப்பார் சேர்த்து வைக்க வேண்டும் எதிர் காலத்துக்காக என்று நினைப்பார். இது பற்றி எந்தக் கவலையும் இரண்டாம் தலை முறைக்கு கிடையாது. முதலாம் தலை முறையினர் எப்படி தம்மை தம் தாய் தந்தையர்கள் தமது முன்னேற்றகரமான பாதைக்கு பல வலிகளை சுமந்து தாய் தந்தை என்ற பாத்திரங்களில் உழைத்தார்களோ அதே போல் தான் புலம் பெயர் முதலாம் தலைமுறையினரும் பல துன்பங்களை சுமந்த போதும் அப்பாக்களாக அம்மாக்களாக தத் தமது பாத்திரங்களோடு தமது கடமையை சரி வரவே செய்தனர். தேசம் தேசியம் நோக்கிய பார்வையும் அந்த அடையாளமும் அதன் வேர்களை தேடுபவர்களாகவும் மறக்காதவர்களாகவும் இப்பொழுது கூட தாம் பிறந்த இடம் நோக்கி படை எடுத்து போவர்களாகவும் அந்த கீரிமலை கடலில் குழிப்பதும் நண்பர்களோடு கூழ் குடித்து மகிழ்வதும் இவர்களின் பிறந்த வாழ்வு முறையோட அமைந்த ஒரு வகை தேசியப் பிணைப்போடு கூடிய பற்றே காரணம் எனலாம். அத்தோடு தம் பிள்ளைகளின் வளர்ச்சி பாதையிலும் பல அற்பணிப்புகளோடு கடந்த வந்த முதலாம் தலைமுறையினர் தலை முடியில் இப்போ வெள்ளை மயிர் அவர்கள் காலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின் இறுதிக் காலம் தனிமையோடு போகுமோ இல்லை வேறு எந்தத் தெரிவை நோக்கி செல்லுவார்கள் என்பது பற்றிய கேள்விகளும் எழாமல் இல்லை. பலர் தமது இறுதிக் காலத்தில் தாயகம் திரும்பி அங்கு இருந்து வாழ விரும்பிய போதும் அந்த நாட்டில் இப்போதும் இனவாதமும் வெறுப்பும் வன்முறை கொண்ட கலாச்சாரமும் இன்னும் இலங்கை தேசத்தை விட்டுப் அகலவில்லை. இனங்களுக்கு இடையிலான பிளவு இன்னும் கூடிக் கொண்டே போகிறது ஆதலால் வயோதிப காலத்தில் அங்கு வாழ்வதும் பாதுகாப்பானதா என்பதும் கேள்விக் குறியே. இறுதியில் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் பாரசீகக் கவிஞரான ரூமி ( Rumi) என்ற கவிஞன் எழுதியது போல் உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் இல்லை நீங்கள் வில்லுகள் மட்டுமே அவர்கள் அம்புகள் அம்புகள் சரியாக இலக்கை அடைய துணை நிற்கும் வில்லுகள் தான் நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை வழங்கலாமே தவிர உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது என்று அந்தக் கவிஞன் எழுதியிருப்பது நினைவில் வருகின்றது. சிந்தனைகளும் செயல் வடிவங்களும் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாறிக்கொண்டே போகும் என்பது இயற்கையின் விதியாகிறது. இருந்த போதும் அன்பு, பாசம், உணர்வு, சிரிப்பு, சந்தோசம், துயரம், கண்ணீர் எல்லாமே எல்லா மனிதனுக்கும் ஆனதே இதை கடந்து மறந்து துறந்து வருவதென்பதும் கடினமானதே. பா.உதயன் ✍️
  11. புலம் பெயர் ஈழத் தமிழர்களின் இரண்டாம் சந்ததியின் கல்வி வளர்ச்சி -பா.உதயன் கல்வி என்பது கடலைப் போல் அங்கு மூழ்கித் தான் முத்து எடுக்க முடியும். புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப்படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி இல்லாதவர்களாகவும் எல்லாத் துறைகளிலும் வேலை செய்பவர்களாக வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்க உட்பட தமிழன் பெருமை சேர்த்து வருகிறான். அண்மையில் கனடாவில் ஈழத் தமிழன் ஒருவன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வரையில் இந்தியர்களே பல பலம் மிக்க நாடுகளில் அதி உயர் பதவியை வகித்து வந்தனர். இப்பொது ஈழத் தமிழரின் இண்டாம் தலை முறையினரும் பல கெளரமான அந்தந்த நாடுகளில் மதிப்பு மிக்க தொழிலை செய்து வருகிறார்கள். அந்த நாடுகளின் அரச தலைவர்கள் கூட தமிழர் சமய பண்பாட்டுக் கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதும் தமிழர் பெருமை பற்றி அவர்கள் பேசுவதும் பெருமை தான். நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ). நாங்கள் நினைத்தது விரும்பியது கிடைக்கவில்லையே என்று நாம் கவலை கொள்ளக் கூடாது வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் ஒரு அங்கமே ஆதலால் மீண்டும் முயற்சி திருவினையாக்கும் இறுதியில் உங்கள் இலக்கை அடைவீர்கள். கடுமையான உழைப்பும் உன் இலக்கை இறுதியில் அடைவேன் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். நாங்கள் வல்லமை படைத்த இனமாக எழுந்து வர வேண்டும். ஆகவே நாங்கள் எல்லாக் கல்வியையும் கற்க வேண்டும் சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல், (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இராஜதந்திர ரீதியாக பலம் பெற்றவர்களாக உங்கள் இனத்தின் விடுதலைக்காக உங்கள் அடையாளம் தொலைந்து போகாமல் உழைக்க வேண்டும். உலகில் போற்றக் தக்க தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு உலகெல்லாம் தமிழன் பெருமை சேர்த்து வருகின்றான் இருந்தும் தனக்கென ஒரு தாய் நாடு இல்லாதது பெரும் துயரே. எதையும் ஆளமாக பேசவும் எழுதவும் விவாதம் செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள். எழுத்தும் பேச்சும் இல்லாவிடில் இந்த உலகம் மெளனமாகிவிடும். ஆதலால் எபோதும் எழுதுங்கள் பேசுங்கள். எழுதுவதும் சிந்திப்பதும் உங்கள் மனதில் ஒரு பார்வையை உருவாக்குகிறது, சிந்திக்க வைக்கிறது, கருத்துக்களை உருவாக்குகிறது. தொலைநோக்கு பார்வையாளர்கள் தான் உலகை மாற்றுகிறார்கள். எதையும் தேடாமல் விளங்காமல் எதையும் கடக்க முடியாது. தமிழ்ப் புலவன் வள்ளுவன் சொல்லுவது போல் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”கற்றிருந்தால் மட்டும் போதாது கற்றபடி நடக்க வேண்டும். எப்பொழுதும் மனிதர்களை மதித்து நடக்க வேண்டும். பண்பான வார்த்தைகளை எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சுய நலன்களுக்காகவும் தனியவே தமது பெருமைக்காகவும் இருந்து வாழாமல் உண்மை மனிதர்களாக வாழப் பழகுங்கள் உங்களுக்காகவே பல தியாகங்கள் செய்து உங்கள் உயர்வுக்காக பாடு பட்ட பெற்றோர்களையும் மதித்து அன்பும் கருணையும் கொண்டவர்களாக நாங்கள் இருக்க வேண்டும். அவர்களின் அவிலாசைகளையும் நீங்கள் இயன்றளவு பூர்த்தி செய்பவர்களாக இருக்கவேண்டும். வேர்கள் இல்லையேல் மரங்கள் இல்லை. பா.உதயன்✍️
  12. சுவே மற்றும் தமிழ் சிறி நல்ல கருதும் கருத்து மிக்க படங்களும் நன்றிகள்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.