எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து
சட்டியை உருட்டும் பூனைகள் போலே
எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா
வெள்ளாடை வேட்டி கட்டி
வேதங்கள் பல சொல்லி
எல்லோர்க்கும் உதவுவதாய்
எல்லாமே தெரிந்தவராய்
நல்லாக நடிப்பாரடா சிலர்
நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா
நட்பு என்றும் உறவு என்றும்
நல்ல பல கதைகள் பேசி
சமூகம் சேவை என்றும்
கோவில் பள்ளி படிப்பு என்றும்
கொக்கரித்து திரிவாரடா
பின்பு கட்டியதை உடைப்பாரட
கண்டபடி கதைப்பாரடா
ஒற்றுமையை தொலைத்து விட்டு
ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா
கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும்
கள்ளப் பூனை போல் தானடா
பின்பு வல்லவர் தான் என்பாரடா
வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா
பேருக்கும் புகளுக்குமாய்
பொய்யான கதை பேசி
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா
தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் அறியாரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா
ஞானம் கொண்ட புத்தனைப்போல்
தாமும் என்று சொல்வாரடா
தங்கள் பிழை அறியாரடா
தாங்கள் மாற நினைக்காரடா
நல்ல மனம் இல்லாமல்
நாளும் பொழுதும் தொழுதாலும்
என்ன தான் கடவுள் செய்வார்
கள்ள மனம் கொண்டோரை
பொய்யான முகங்களுடன்
மெய்யான மனிதர் போலே
அங்கீகாரம் தேடி அலைந்தே
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா
அந்த கள்ளப் பூனை போல் தானடா
அவர்கள் கள்ள நெஞ்சம் கொண்டோரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.
பா.உதயன் ✍️
எனக்கு நீ ஏதாவது
செய்ய நினைத்தால்
என் கல்லறையில் எழுதிவை
எப்பவுமே உன்னை நான்
நேசித்து இருந்தேன் என்று
அதன் அருகில்
ஒரு பூச் செடியை
நட்டு வை
அவ்வப்போது வந்து பார்
அந்தப் பூவிற்குள்
என் முகம் தெரியும்.🙏
அற்புத ஈழத்து கலைஞன் வர்ணாராமேஸ்வரனுக்கு அஞ்சலிகள்.
தாயகக் கனவோடு
சாவினை தழுவிய
சங்கீத சுரமே
ஒரு தரம் உனது
விழியினைக் காட்டியே
மறுபடி உறங்காயே
உயிர்விடும் வேளையில்
உன்னது வாயது
உரைத்ததோ சங்கீதம்
இங்கு கூவிடும் எங்களின்
குரல்மொழி கேட்கிதா.
அந்த காவலூர்காரன் நானும் அந்த காற்றோடும் மண்ணோடும் என் கனவும் பேசியது நினைவிருக்கு.என் கண் முன்னே என் ஊரை கண்டது போல் கவிதை சொல்லியது.மகிழ்ச்சி வாழ்த்துகள்.
வாதவூரன் வல்வை சகாரா யாவர்க்கும் நன்றிகள்.ஐயோ நான் சனியன் என்பது சங்கடம் தரும் கொரோனாவை தான்.இனி எள்ளு எண்ணெய் எரித்து கொல்லாமல் விடமாட்டான்.தப்பா நினைக்காதேங்கோ கொரோனாக்களை தான் சொல்லுகிறேன்.😂
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
Thousand watt ல் கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாளே
சூடான ஜிலேபி போல...
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
அந்தக் கன்னத்தின் குளியில
என்னைத் தள்ளுறாளே
வெள்ளை நிலவின் நிறம்போலே
ரோசாப் பூவின் முகத்தினிலே
லேசா தேனீ கடித்ததுபோல்
யார் வந்து கடித்த மாங்கனியோ
அவ ஹையோ ஹையோ ஹையோ
கொல்லுறாளே
கட்டி கட்டி இழுக்கிறாளே
Thousand watt ல் கண்ணால
காதலால் கட்டி இழுக்கிறாளே
அவ ஹையோ ஹையோ ஹையோ
ஐயோ மெல்லிறாளே
என்னைக் கொல்லுறாளே.
நன்றாக இருக்கிறது உங்கள் டூயட் குமாரசாமி.சும்மா பகிடியா முடித்து வைத்தேன்
அம்மா அப்பா சொல் படி நடப்பியா வீட்டுப் பாடம் ஒழுங்கா செய்வியா ஓம் என்று
சொல்லு மட்டும் உந்த இடத்தை விட்டு அரக்கன் பாரு.நானும் கன நாளா உன்னை கவனிச்சிக்கிட்டு தான் வாறேன் பாரு.