ragaa
-
Posts
346 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by ragaa
-
-
On 16/10/2023 at 01:26, goshan_che said:
வெள்ளையர்களை விட, அவர்களின் பின் வந்த வெள்ளை அல்லாத குடியேறிகளே அதிகம் no என போட்டதாக சொல்கிறார்கள் (சதவீதம்)?
paramatta electorate ஆனது இப்ப வெள்ளையர் குறைந்த ஒரு இடம்.
அந்த தரவு 👇
Yes. No
37,550 (44. 86%) 46,146 (55.14)
Reference: https://tallyroom.aec.gov.au/ReferendumDivisionResults-29581-140.htm
- 1
-
On 16/10/2023 at 01:26, goshan_che said:
வெள்ளையர்களை விட, அவர்களின் பின் வந்த வெள்ளை அல்லாத குடியேறிகளே அதிகம் no என போட்டதாக சொல்கிறார்கள் (சதவீதம்)?
அந்த தரவை எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை… ஆனால் ஒன்று, இத்தோடு இந்த தொழிலாலர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது.
- 1
-
இது வருத்ததிற்குரிய நிகழ்வு. ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிகளின் உரிமையை இப்பவந்த குடியேறிகள் தீர்மானிப்பதென்பது அபத்தமானது. அதை வெள்ளகளை விட்டு மற்றவர்கள் செய்து காட்டியிருக்கலாம், ஆனால் அவர்களும் NO வை தெரிவு செய்திருக்கிறார்கள். எனது vote எப்போதுமே YES தான்.
- 1
-
1 hour ago, nedukkalapoovan said:
அதே பாலஸ்தீனம்.. ஈழப் போராளிகளுக்கு ஆரம்ப காலத்தில்.. லெபனானிலும்.. பாலஸ்தீனத்திலும் பயிற்சி கொடுத்ததையும் மறக்கக் கூடாது.
அரபாத்தின் இந்த முடிவுக்கு.. ஹிந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோகம் தான் காரணம் என்பது தெரிந்தும்...???! பாலஸ்தீன மக்களை குறை சொல்வது என்ன நியாயம்..??!
ஹிந்தியா தமிழீழத்துக்கு எதிராக முன்னெடுத்த சர்வதேச அளவிலான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய வல்லமையற்றிருந்ததன் தாக்கமே.. பாலஸ்தீனம்.. கியூபா போன்ற நாடுகளின் மக்களின் ஆதரவை நாம் இழந்ததற்கு காரணம்.
முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா.
இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல்
- 1
-
1 hour ago, ஏராளன் said:
Published By: DIGITAL DESK 3
02 OCT, 2023 | 03:55 PM
யாழ்ப்பாணம் - இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார்.
இதில் காந்தி சேவா சங்கத்தினால் வருடாந்த வெளியீட்டு வரும் காந்தீயம் சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இதில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்திரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, மதத்தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைகழக சிரேஸ்ட துணைநிலை பேராசிரியர்கள், கலைத்துறையினர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலியினை செலுத்தினர்.
காந்திக்கும் இலங்கைத் தமிழனிற்கும் என்ன சம்பந்தம். இந்தியப்பணத்திற்காகப் பாடுபடுகிறான்கள்
-
பன்றியுடன் சேர்ந்த பசுவும் மலம் திண்ணும் என்றமாதிரி, எப்ப Republican Party மாதிரியான வலது சாரிகளுடன் கூட்டு வைத்தாரோ, அன்றே அவரது முகத்திரை கிழிந்து விட்டது.
-
On 18/9/2023 at 23:00, பிரபா சிதம்பரநாதன் said:
இந்த வாக்கெடுப்பில் அவுஸ்ரேலிய பூர்வீககுடியின மக்களின் சில பிரிவுகளுக்கிடையிலும் ஒரு தெளிவின்மை உள்ளதைக் காணலாம். இதைப் பற்றி யாழ்கள அவுஸ் உறவுகள் என்ன நினைக்கிறார்கள்?? 🤔
உண்மையில் இது எதிர்கட்சி செய்த பித்தலாட்டங்களைக்கேட்டு நம்பியவர்களாலான பிரச்சனை. Liberal party யிற்கு பூர்வீக குடிகளை அங்கீகரிப்பது பிரச்சனை, அதனால அந்த referendum ஒரு தார்வையும் தராது எ்னறு பிரச்சாரம் செய்கிறார்கள்.
-
Storm shadow வைத்தான் பாவித்து இந்த தாக்குதலை செய்தவர்கள்
-
6 hours ago, vasee said:
அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை அடுத்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய பிரித்தானிய பின் புலம் கொண்டவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் நிலவியிருந்தமையால் பிரித்தானியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு நேசமான உறவு நிலை எப்போதும் நீடித்தே வந்திருந்தது.
கடந்த கால உலக போர்களில் பிரித்தானியாவிற்கு ஆதரவாக அவுஸ்ரேலியா களமிறங்கியிருந்துள்ளது அதே போல் அமெரிக்காவிற்கும் ஆதரவாக இருந்துள்ளது.
இரண்டாம் உலக போரின்போது அவுஸ்ரேலியா அமெரிக்க உதவியினை கோரிய போது அமெரிக்கா அதற்கு உதவியிருந்தது.
இடையில் 1970 காலப்பகுதியில் அவுஸ்ரேலிய பிரதமராக இருந்த விட்லம், அமெரிக்க படைகளின் வியட்நாமில் நிகழ்த்திய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், இங்கிலாந்து அரச குடும்ப அதிகாரத்திற்க்கீழ் தனது இறமையினை அவுஸ்ரேலியா இழந்திருப்பதுடன் வளங்கள் சுரண்ட படுவதாக கருதி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினார், அவர் அவுஸ்ரேலியாவினை ஒரு அணிசேரா நாடாக்க முயன்றார் ஆனால் அவரினை இங்கிலாந்து அமெரிக்க உளவுத்துறையினர் ஆளுனரின் உதவியுடன் பதவியிறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு அவுஸ்ரேலிய அரசியல்வாதிகளை அமெரிக்க, பிரித்தானியாவினை தவிர்க்க முடியாத சூழ்நிலையினை உருவாக்கி விட்டுள்ளது,
இதனால் அவுஸ்ரேலியா பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதுடன், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் புதிய பதற்ற நிலையினை உருவாக்குவதற்கும் அவுஸ்ரேலியா காரணமாகியுள்ளது.
விற்லம் தான் Medicare ஐ உருவாக்கி இன்று நாங்கள் எல்லாம் பயன் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். அவரின் அரசை dismissal பண்ணியது ஒரு controversy ( 1974 dismissal )
- 1
-
On 18/9/2023 at 03:59, nedukkalapoovan said:
தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும்.
பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை.
வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்..
தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..!
இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.
நெடுக்ஸ், பொதுவாக எல்லாருக்கும் இந்த விடயத்தில் மன ஆதங்கம் இருந்தாலும், எல்லாருக்கும் கையாகாலாத நிலைமை. இதை இதில் எழுத பிறகு வாக்குவாதமாக மாறி, இந்த திரி வேறுதிசைக்கு போகும். அதைவிட்டு விட்டு, நாங்கள் இதை எப்படி எமக்கு சாதகமாக மாற்றலாம் என்று பார்ப்போம், ஆராய்வோம். 🙏
- 1
-
8 hours ago, Cruso said:
இவர் ஸ்ரீ லாங்கன் தமிழர் இல்லை. இவர் சிலோனிஸ் தமிழர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே சிலோனிஸ் தமிழர் இடம் இருந்து ஸ்ரீ லாங்கன் தமிழர் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாதுதான்.
எனது அம்மா வழி தாத்தா அம்மம்மா எல்லோரும் மலேசியா, சிங்கப்பூர்வில் இருந்து பின் உலகயுத்தத்தின் போது இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். அவர்கள் சகோதரங்கள் எல்லாரும் அங்குதான் வசிக்கிறார்கள். அவர்களும் இலங்கையை சிலோன் என்றுதான் சொல்லுவார்கள். நானும் அப்படித்தான் சொல்லிறனான். நாங்கள் என்னத்திற்கு சிங்களப் பெயரான சிறீலங்கா என்று சொல்லவேண்டும்.
- 1
-
Luna 25 இன் தொடர்புகள் Roscosmos உடன் துண்டிக்கப்ட்டது எனவும், அது சந்திரனில் மோதிவிட்டதாகவும் Roscosmos அறிவித்துள்ளதென்று ஒரு செய்தி வெளியாகிஉள்ளது.
-
On 20/7/2023 at 05:17, nedukkalapoovan said:
அமெரிக்க வீரர் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு.. நாடு மாறிவிட்டார். என்ன கறுப்பினத்தவர் மீதி பழியை போட்டுவிட்டு.. அமெரிக்கா இதையும் கடத்து போகும். அடுத்தவனுக்கு பிரச்சனை கொடுப்பது என்றால்.. அமெரிக்காவுக்கு ஆலாதிப் பிரியம். தனக்கு ஒரு பிரச்சனை என்றால்.. பூசி மொழுகிற மொழுகு இருக்கே.. சொல்லி வேலையில்லை.
அப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், இனவாதம் அமெரிக்காவில் இப்பத்தான் தலைதூக்கியுள்ளது என்று… பைடன் இருக்கும்போதே இப்படியென்றால், டிரம்ப், டிசான்டிஸ் மாதிரியான வலதுசாரிகள் இருந்தால் எப்படிஇருந்திருக்கும்?
- 1
-
நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.
-
On 9/8/2023 at 09:02, நந்தன் said:
பதிலளித்த அனைவருக்கும் நன்றிகள்.
நன்னி
இன்னுமொரு வேண்டுகோள் இராணுவ பதவிநிலைகளை ( உ+ம் லெப்டினன்ட்,கப்டன் போன்ற) புலிகள் எப்படி பேணினார்களோ அப்படியே பதிவிடுங்கள் எந்த மாற்றமும் இல்லாமல்
நன்றி
மாவீர்ரர், என்ற அடையாளம் கொடுப்பது எளிது, ஆனால் ராணுவ அந்தஸத்து கொடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பது என்கருத்து. தரைப்பீடம், ராணுவ அந்தஸத்து கொடுக்கும் போது, போராளிகளின் போர் தந்திரோபாயம், போர் அனுபவங்கள், வெற்றிகளை கொண்டே கணித்திருப்பார்கள். அந்த விடயங்கள் முற்றிலுமில்லாமல் அந்தஸத்து கொடுக்கும் பொழுது பல சிக்கல்கள் வரலாம்.
-
ஏதோ ஒருவழியாய் இந்த டிரம்ப் உள்ளுக்குள ( jail) போனால் சரி. இல்லாவிடின், அனைத்து most extreme வலதுசாரிகளும் மற்றைய மேற்கத்தைய நாடுகளில் பதவிக்கு வருவார்கள் அது எமக்கு ( immigrant) ஆபத்து.
-
எங்கட வளவுக்கிளையும் ஒரு அரசமரம் இருக்குது. அதை மெல்லமாய் தறிச்சு விடவேண்டும் இல்லாவிடின், சங்கமித்தை குழுவினர் ஒண்டுக்கு போன இடம் என்று சொல்லி ஆக்கிரமிச்சு போடுவாங்கள்…
- 1
-
4 hours ago, Justin said:
அவ்வளவு நல்ல விடயமாக எனக்குத் தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு, அது என்ன தான் குற்றமாக இருந்தாலும், சட்டப்படி இருக்கும் உரிமைகளில் ஒன்று சட்ட உதவி. இது கிடைக்காத நிலையில் நடக்கும் வழக்கை முறையற்ற வழக்கு என்று மேல் மட்ட நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து இவரை விடுதலை செய்யலாம். அவர் உண்மையிலேயே குற்றவாளியாக இருந்தால் அவருக்கு இது மிக நல்ல முடிவாக இருக்கும், ஆனால் பாதிக்கப் பட்ட தரப்பிற்கு இது அநீதி.
இதைக் கருத்தில் கொண்டு தான் நீதிபதி தவிர்க்க முயற்சிக்கிறார். அமெரிக்காவில், மக்களின் வரிப்பணத்தில் வேலை செய்யும் public defenders இப்படியான சந்தர்ப்பங்களில் சந்தேக நபருக்கு சார்பாக ஆஜராக வேண்டும். ஜனவரி 6 இல், காங்கிரஸ் கட்டிடத்தை சூறையாடிய சந்தேக நபர்கள் பலர் இப்படி எங்கள் வரிப்பணத்தில் தான் சட்ட உதவி பெற்றிருக்கின்றனர்😂.
இப்படித்தான் ஒரு வழக்கு ஆஸ்திரேலியாவில் நடந்தது. என்னோடு வேலைசெய்யும் ஒருவர் jury ( compulsory)ஆக போயிருந்தார்.
அந்த case இல், இரு பெண் சகோதரிகள், தமது தகப்பனார் 1970 களில் மிறைகேடாக நடந்தார் என்று வழக்குப்போட்டிருந்தார்களாம். தகப்பனின் வயது 92, அவர்களுக்கு 60s, தகப்பனார் அவர்சொத்துகள் எல்லாம் பிள்ளைகளுக்கே மாற்றி அவரிடம் ஒன்றுமே இல்லை கொடுப்பதற்கு… கடைசியில் அந்த வழக்கு தகப்பனை சார்பாகவே முடிந்ததாம்.
-
3 hours ago, Justin said:
ஜஸ்டின் பனிப்போர் பற்றிய உங்கள் ஆக்கம் அருமையாக உள்ளது. Looking forward for the rest of the article.
-
24 minutes ago, nedukkalapoovan said:
கஞ்சர்.. கஞ்சா கிஞ்சா கடத்தல்லைத் தானே..?!
இதைத்தான் நானும் ஏழுத நினைத்தேன்🤣🤣
-
11 hours ago, goshan_che said:
இதற்கான தூபம் 2009 முடிந்த கையோடு ஆரம்பித்து விட்டது.
சச்சி வரவழைக்கப்பட்டதே இந்த நோக்கில்தான்.
இதை உள்ளூர் மட்டத்தில் கிறீஸ்தவ-சைவ ஒருங்கிணைப்பு குழு அமைத்து எதிர்கொள்ள வேண்டும்.
இந்த ச்ச்சி, ஒரு பெளத்த மதசின்னத்தை அடுச்சுக்காட்டட்டும் பார்ப்பம்… கடைசிவரைக்கும் செய்யமாட்டினம்…
சிவலிங்கங்களை சைவப்பள்ளிக்கூடங்களில் நிறுவுவது சரி ஆனால் அதோடு நிக்காமல் எவ்வளவு தமிழ் கிறீஸ்தவ போராளிகள் மக்கள் போராட்டத்திற்காக தம்மை ஆர்ப்பணித்திருக்கிறார்கள் என்று யோசிக்காமல் தமிழ்மக்களிடையே பிரிவை ஏற்படுத்துவது சிங்களவனுக்கே நன்மையைத் தரும்
- 3
-
On 25/6/2023 at 10:13, குமாரசாமி said:
அரசியல் கொலை கொள்ளை எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. அதை ஏன் ரஷ்யாவில் மட்டும் நடக்கின்றது என்ற பிரமையை ஊடகங்களும் நீங்களும் உருவாக்குகின்றீர்கள்??
பைடனின் உக்ரேன் ஊழல்பற்றி யாருமே வாய் திறப்பதில்லை.
ஒரு பக்க நியாயத்திற்கு நான் என்றுமே எங்குமே எதிரானவன்.டிரம்பின் மற்றும் MAGA கார்ரின் கதையை நம்பினால், Fox News பாரத்தால் இப்படித்தான். உங்கள் மேல் ஒரு மரியாதை உள்ளது, ஆனால் மாஜரி கிரீன், லோரன் போபர்ட் மாதிரி கதைப்பதை பார்த்தால்…..
9 hours ago, குமாரசாமி said:எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது, காலம் பதில் சொல்லும்
-
போர்களை போராடி வெல்வதைவிட துரோகிகளை உருவாக்கி வெல்வது இலகுவானது.
அதற்கு நல்ல உதாரணம் இலங்கை.
இப்போது ரஷ்யாவா?
-
3 hours ago, ஏராளன் said:
இரகசிய ஆவண வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் தெரிவிப்பு : இன்று பிறந்த தினம்
Published By: SETHU
14 JUN, 2023 | 10:46 AM
அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை தனது வீட்டில் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் நிரபராதி என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 300 இரகசிய ஆவணங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள ட்ரம்பபுக்குச் சொந்தமான மார் ஏ லாகோ இல்லத்துக்கு அவர் எடுத்துச் சென்றார் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நடத்தப்படும் மார் ஏ லாகோ இல்லத்தில் நடன அறை, படுக்கையறை, குளியலறைகளிலும் மேற்படி இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாக, 49 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பில் மேற்படி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) ட்ரம்ப் ஆஜரானார்.
இவ்வழக்கில் ட்ரம்ப் நிரபராதி என அவரின் சட்டத்தரணி டொட் பிளான்ச், நீதிபதியிடம் கூறினார்.
அமெரிக்க வரலாற்றில், பதவியிலுள்ள அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மத்திய அரசின் கிரிமினல் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் ட்ரம்புக்கு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயணக்கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.
இவ்வழக்கு விசாரணை ஆரம்பமாகுவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட தென் புளோரிடா நீதிபதி அய்லீன் கெனோன் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளார்.
நீதிமன்றத்துக்கு வெளியே ட்ரம்பின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அதேவேளை, ட்ரம்ப்பின் வாகனத் தொடரணி புறப்பட்டபோது, ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறைச்சாலை சீருடையுடன் காணப்பட்டனர். அவர்கள் ட்ரம்பின் வாகனத் தொடரணியை நோக்கிச் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப், மியாமியிலுள்ள கியூப உணவுவிடுதியொன்றக்கு சென்றார்.
அங்கும் அவரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்ததுடன், அவருடன் படம்பிடித்துக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தனர்.
இன்று புதன்கிழமை (14) 77 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் டொனால்ட் ட்ரம்புக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி அய்லீன் கனான் டிரம்பால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்றபடியால் அவரது தீர்ப்பு எப்போதுமே டிரம்பிற்கு சாதகமாகவே இருக்கும். அவர் special master ஐ நியமிக்கும்படி தீர்பபுவழங்கிய போது உயர்நீதி மன்றம் அந்த தீரப்பை தள்ளிபடி செய்தது.
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
in உலக நடப்பு
Posted
டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs