Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14275
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Everything posted by பெருமாள்

  1. ஈஸ்டர் நெருங்குது செத்தவன் யாரோ மறுபடியும் நாட்டில் மறுபடியும் தீவிரவாதம் அதவேர் அறுக்கணும் ரிக்கட் போட்டு கொத்தாவுக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கு இன்னமும் தெரியாது குண்டு வைத்தது கோத்தா என்று?????????
  2. இ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃
  3. ஒரு மனிதனின் தாய் இறந்து பத்து நாள் ஆகவில்லை மனிதாபிமானம் அன்பு நீதி இவ்வளவும் உள்ள அவனால் இப்படியொரு கிரிகெட் களியாட்ட விழாவில் கலந்து கொள்ள முடியாது புத்தியில் பண ஆசையும் பழகத்தில் குள்ள நரி போலவும் இருக்கும் நபரால் மட்டுமே முடியும் .
  4. இங்கு நம்மவருக்கு இம்மையும் தெரியாது வறுமையும் தெரியாது ஓசி விசுகோத்து படிப்பு முறை அப்படி சொல்ல முடியாது ஏன் இலவச படிப்பு முறையை எங்களுக்கு தந்தார்கள் ? அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ? அதற்கு விடை தேடினால் பல உண்மைகள் வெளிவரும் . கடந்த உலக யுத்தம்கள் சிலரின் பணத்தை பெருக்கி யுள்ளன எப்படி ?
  5. வழகமான சுத்து மாத்து நேரம் 18.4௦நடந்த விடயத்தையே மாற்றி சொல்கிறார் யார் தனி நாடு கேட்டது இவரிடம் ? பழையது என்றாலும் அவர் சொன்னது மறக்க கூடாது அல்லவா ?
  6. வாழைபழம் உரித்து தட்டில் வைத்து இருக்கு அவரவர் தேவைக்கு ஏற்றபடி நன்றி மீரா . சர்வதேச விசாரணை நடந்து முடிந்து விட்டதாக கூறி தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார்-சுமந்திரன் மீது விக்கி குற்றச்சாட்டு போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்றே சுமந்திரன் பயப்பிடுகிறார். இதற்காகவே, நடக்காத சர்வதேச விசாரணையை, நடந்து முடிந்து விட்டதாக கூறி, தமிழ் மக்களை திசைதிருப்ப முயல்கிறார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது . போர்க்குற்ற விசாரணை முடிந்து விட்டதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சுமந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றார்கள் என்ற தலைப்பில் வெளியான அந்த அறிக்கையில், இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் திரு. சுமந்திரன் அவர்கள். இலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையைசர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி திரு.சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார். இது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இவ்வறிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்களை ஆவணப்படுத்தி உள்ளன. ஆனால் இவ்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளும் இது காறும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கைகளை சர்வதேச விசாரணையின் முடிவுகளே என்று திரு.சுமந்திரன் அவர்கள் சித்திரிக்கப்பார்க்கின்றார். இவ்வாறான செயலால் திரு.சுமந்திரன் அவர்கள் தமிழ் மக்களைத் தடம் மாற்ற முயன்றிருக்கின்றார். தமிழ் மக்கள நீதியைப் பெற வேண்டுமானால் மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையிலோ இலங்கைக்கான ஒரு விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பு மன்றம் முன்னிலையிலோ பாரப்படுத்தப்பட்டு நீதிபாற்பட்ட விசாரணைக்குள்ளாக்கி தண்டிக்கப்பட வேண்டும்.<br /> தமிழ் மக்கள் கூடிய மதிப்புடனும் தொழில்சார் மாண்புடனும் கையாளப்பட வேண்டும். திரு.சுமந்திரன் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது அவற்றின் ஒரே குறிக்கோள் தமிழ் மக்களைத் தடம்புரளச் செய்வதும் ஏமாற்றுவதுமேயாகும் என்றே கொள்ள வேண்டியுள்ளது. உண்மை இதோ! – நடந்தவற்றைக் கூறி தரவுகளைச் சேகரித்திருந்தன ஐக்கிய நாடுகளின் இரு அறிக்கைகளும். எனினும் அம் முயற்சி முடிவடையவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதியப்படவில்லை. தாம் குறிப்பிடும் குற்றங்களைப் புரிந்தமைக்கு யார் பொறுப்பு என்று கூறி தமது பரிந்துரைகளைப் பதியவில்லை. இறுதியாக, நீதியைப் பெறத் தாம் எடுக்கும் முயற்சிகள் ஒரு செயல்பாட்டின் முதல்ப்படியே என்று குறித்த அறிக்கைகளே ஏற்றுக் கொண்டுள்ளன. குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் உண்மையில் கூறும் சில விடயங்கள் பின்வருமாறு – 1. டாருஸ்மான் அறிக்கை எனப்படும் “இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமான செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவக்குழாமின்” 2011ம் ஆண்டிற்கான அறிக்கையின் 1ஆ பரிந்துரையின் ஒரு பகுதி பின்வருமாறு – “செயலாளர் நாயகமானவர் உடனே ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும். அதன் ஆணைக்குட்பட்டு பின்வரும் ஒருங்கியல்பான நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். i. குற்றம்சாட்டப்பெற்ற உரித்துமீறல்களை எந்தளவுக்கு இலங்கை அரசாங்கமானது உண்மையாக விசாரிக்கின்றது என்பது உள்ளடங்கலாக உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இலங்கை அரசு எப்படி வழிநடத்துகின்றது என்பது பற்றி கண்காணித்து மதிப்பிட்டு காலத்துக்குக் காலம் செயலாளர் நாயகத்திற்கு தமது கண்டுபிடிப்புக்களைத் தெரியப்படுத்த வேண்டும். ii. குற்றஞ்சாட்டப்பட்ட உரித்துமீறல்கள் சம்பந்தமாக சுயாதீனமாக விசாரித்தறிவது. அதன் போது நம்பத்தகுந்த மற்றும் நற்பலன் அளிக்கின்ற உள்ளக விசாரணைகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.” 2. பெட்ரீ அறிக்கை எனப்படும் 2012ம் ஆண்டின் “இலங்கையில் நடந்த ஐக்கிய நாடுகள் செயற்பாடுகளின் செயலாளர் நாயகத்தின் உள்ளக மதிப்பீட்டுக் குழாமின்” அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதன் செயல் நோக்கம் ஐக்கிய நாடுகள் தான் செய்த தவறுகளை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளுவதேயாகும். பெட்ரீ அறிக்கையின் 82ஆவது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது – “நடைபெற்ற நிகழ்வுகளைக் கணிப்பதும் அவை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் இலங்கையில் எடுத்த நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதும் குழாமின் ஆணைக்கு அப்பாற்பட்டன. எனினும் ஒன்று தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. அதாவது நடைபெற்ற கொடூரமான உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல் அத்துடன் இலங்கையின் பல்வேறு இனங்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெறாமல் நிரந்தர சமாதானமும் ஸ்தீரத்தன்மையும் உதயமாகா. போருக்குப் பின்னரான மற்றும் முன்னேற்றம் சம்பந்தமான பொறுப்பினை ஐக்கிய நாடுகள் இலங்கையில் முடிவுறுத்த இவ்வாறான அடிப்படை எதிர்பார்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே பொறுப்புக்கூறலுக்கான நிபுணர்கள் குழாமால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐக்கியநாடுகள் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வர வேண்டும்.” தமிழ் மக்கள் போலிச் செய்திகளை அடையாளம் காணக்கூடியவர்கள். திரு.சுமந்திரன் அவர்கள் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் அறிக்கைகளில் கூட ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழான முழுமையான விசாரணை நடைபெற்ற பின்னரே சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளை ஆயத்தப்படுத்த முடியும் என்றும் தமிழ் மக்களின் அபிலாஷைளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. உள்ளக பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டா என்றும் இலங்கையின் இராணுவப் பணியாளர்களின் குற்றங்களை மதிப்பீடு செய்ய சர்வதேச நீதித்துறைச் செயற்பாடுகளே பொருத்தம் என்றும் தமிழ் மக்கள் கூறியுள்ளார்கள். ஒருவேளை எந்தவொரு ஐக்கியநாடுகளின் அலகும் சவேந்திர சில்வாவை எந்தவொரு குற்றத்துடனும் தொடர்புபடுத்தவில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் அங்கலாய்ப்புக்கு பதில் கூறும் வகையில் மர்சூகி டாருஸ்மானுடன் திரு.சுமந்திரன் அவர்கள் நடத்திக் கொண்ட கலந்துரையாடல்கள் அமைந்ததாகக் கருதலாம். சவேந்திர சில்வாவின் பயணத்தடையானது அவருக்குகெதிராக முதல்தோற்ற வழக்கொன்று இருப்பதை ஏற்றே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதற்தோற்ற வழங்கானது சர்வதேச உண்மை மற்றும் நீதி சார் செயற்றிட்ட அறிக்கை மற்றும் உண்மையைக் கண்டறியும் தூதுக்குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட வாக்குமூலங்கள் உள்ளடங்கலான பல விசாரணைகள் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதொன்று. (சில்வா சம்பந்தமான நியமனம் பற்றி மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் செயலகத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் “ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் சில்வாவும் அவரின் படையணியினரும் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களிலும் மனித இனத்திற்கெதிரான குற்றங்களிலும் ரூடவ்டுபட்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளன). இன்று அவ்வாறான முதற்தோற்ற வழக்குகள் விசாரணைக்காக முன்னிறுத்தப்பட வேண்டும். ஆகவே திரு.சுமந்திரன் அவர்களின் செவ்விகள் நீதி ரீதியான செயற்பாடுகளில் சான்றாக அமையக்கூடும். ஆனால் அவரின் செவ்வி அறிக்கைகள் சட்ட வலுக்கொண்ட விசாரணையாகா. அவரின் செவ்விகள் பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநாட்டவில்லை. இதை இன்னமும் விளக்குவதாக இருந்தால் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் முக்கியமாகத் தேவையெனினும் ருவண்டா, கம்போடியா மற்றும் முன்னைய யூகோஸ்லாவியா போன்றவற்றிற்கான சர்வதேச தீர்ப்பு மன்றம் போன்ற ஒன்றின் முன்னிலையிலேயே மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க உரித்துண்டு. இலங்கையின் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அதிகம் எதுவும் செய்ய முடியாது என்று தமிழ் மக்களுக்குக் கூறவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கின்றது. அவர்களின் இந்த மனப்பாங்கு அக்கட்சியினரின் கையாலாகாத தனத்தையே எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு சர்வதேச, சுயாதீன பொறுப்புக் கூறல் பொறிமுறையை அமைக்க முன்வருவதற்கான அக்கட்சியின் தயக்கத்தையும் அதற்கான தலைமைத்துவத்தை ஏற்பதற்கிருக்கும் தடுமாற்றத்தையுமே இது எடுத்துக்காட்டுகின்றது. திரு.சுமந்திரன் உண்மையில் பயப்பிடுவது எதற்காக என்று பார்த்தால் போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றிற்கான ஒரு சர்வதேச, சுயாதீன தீர்மானம் வெளிவந்தால் அது சர்வதேச சமூகத்தின் மீது தமிழ் மக்கள் இடையே ஒரு குடிமக்களிடையிலான வாக்கெடுப்பை நடத்த வேண்டிய ஒரு கடப்பாட்டை உருவாக்கிவிடும் என்பதே. வடக்கு கிழக்கில் மனித இனப்படுகொலை நடைபெற்றமை பற்றி 2009ன் பின்னர் வடக்கு மாகாணசபையில் ஒரு பிரேரணையை ஏற்றுக்கொள்ள வைத்த துணிச்சல் மிக்க முதலாவது அரசியல் தலைவர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அவர் தமிழ் மக்களிடையே அவர்களின் அரசியல் ரீதியான முடிவைப்பெற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். நீதியரசர் விக்னேஸ்வரனும் அவருடன் சேர்ந்தவர்களும் குற்றம் புரிந்தோர் யாவரும் விசாரணையின் பின் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளார்கள். ஆகவே முதற்கண் சர்வதேச சமூகமானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அலகுகள் ஊடாக சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் குற்றச் செயல்கள் இழைக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியத்தையும் பெற வேண்டும். இவ்வாறான நடவடிக்கை பொறுப்புக்கூறலுக்குத் தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கும் அவர்களின் மனோநிலைக்கு மருந்தாகவும் தமிழ் மக்களின் வருங்காலத்திற்குரிய அபிலாஷைகளிற்கு அடிப்படையாகவும் அமைவன என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/36210
  7. நீங்கள் 2௦௦8 லிருந்து யாழ் கள உறுப்பினராக இருகிரியல் மேல் உள்ள மூன்று கேள்வியும் இங்கு யாழில் பலமுறை வந்து போயிட்டுது விளங்கங்களும் சக உறுப்பினர் களால் கொடுக்கபட்டுள்ளது உங்களுக்கு மறதி நோய் இருப்பதாக நான் நம்பவில்லை சுமத்திரன் திரிகளில் எதாவது ஒரு திரியிலாகினும் சுமத்திரன் வல்லவன் அறிவாளி நிறுவணும் எனும் உங்கள் ஆசை நிறைவேற போவது கிடையாது ஏனென்றால் சுமத்திரன் தமிழர்களுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை செய்தது எல்லாம் துரோகமும் குழப்பமும் வஞ்சகமும் தான் அநேக தூதுவர்களின் உடனான சந்திப்பு இவர் மட்டுமே சென்று சந்திப்பை மேற்கொள்வார் காரணம் தமிழர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வெளியில் தெரிந்து விடகூடாது எனும் காரணம் .
  8. முதலில் இந்த facts என்பதன் அர்த்தம் என்ன அந்த சொல் எங்கு பாவிக்கப்பட வேண்டியது என்பதை அறிந்து பாவியுங்கள் . அவருக்கு சிங்களவர்களுடன் கூடி குலாவுவதே பிடிக்கும் என்று சொன்னவர் ஆனால் இவ்வளவு தீவிரமாய் இருப்பார் என்று நினைக்கவில்லை .
  9. ஏனைய இனம்களை எங்கு நான் குறைத்து கூறினேன் ? எனது கருத்துக்கள் உங்களால் புரிந்து கொள்ளபட முடியவில்லை என்றால் உங்களில் தான் பிழை பெருமாள் எழுதும் கருத்துக்கள் புரிந்துகொண்டு கருத்து எழுதுவது நல்லது பெருமாள் இப்படித்தான் எழுதுவார் எனவே படிக்காமல் கருத்து போட்டு மொக்கேனை படுவது நீங்கள்தான் . 2௦௦9 ல் நாங்கள் அழியும்போது சிங்களவர்கள் வெடிபோட்டு கிரிபத் உணவை பரிமாறி கொண்டாடிய செய்தி இன்றுவரை நீங்கள் கேள்வி படவில்லை போல் தெரிகிறது .
  10. ஜப்பான் வடகிழக்கு அபிவிருத்தி என்று பணம் வாங்கி விட்டு தென்பகுதி சிங்களவரே அனுபவிக்கிறார்கள் என்று உங்களை போல் நானும் நினைக்கிறேன் கணக்கு சரியா ? சிங்களத்துக்கு எவ்வளவு நாளைக்கு முட்டு கொடுப்பதாய் உத்தேசம் ? இந்த கருத்துக்கு பிறகு சிங்கன் எப்படி கருத்து எழுத்வார் என்று தெரியும் 😀லண்டன் நேரம் 12 ஆகிறது அனைவருக்கும் இனிய இரவு .
  11. விலை குறைவோ இல்லையோ தற்போது சிங்கள இனவாத சொறிலங்கா வுக்கு டாலர் பவுன்ஸ் ஐரோ வேணும் அதனால் சொந்த நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் கவலையில்லை மறுபடியும் புலம்பெயர் காலை அவர்களுக்கு தெரியாமலே தொட்டு கும்பிட்டு டாலர் கறக்கினம் .
  12. அங்கு என்னதான் விலை போடுங்க லண்டன் கனடாவுக்கு வரும் மரக்கறிகள் விலை மாற்றம் இல்லையே ? என்ன மரக்கறி என்றாலும் ஒரு தமிழ் கடை வாசலுக்கு வரும் அடக்க விலை கிலோ ஆறு பவுன்தான் .
  13. Colombo, March 11 (Daily Mirror) - In response to recent findings published in the British medical journal, The Lancet, concerning child malnutrition and underweight girls, Sri Lanka's health authorities have rejected the content referred to the portrayal of Sri Lanka. According to the study, approximately 410,000 girls in Sri Lanka are categorized as underweight, representing a prevalence of 16.4%. Despite efforts and initiatives aimed at improving nutrition and healthcare access, the report claims no detectable change in this distressing statistic since 1990. The Lancet publication, which covers data from 1990 to 2022 and was released on February 29, also ranked Sri Lanka second globally, trailing only behind India, for the highest prevalence of dangerously underweight girls aged 5 to 19 years. The analysis estimates that nearly 880 million adults and 159 million children lived with obesity in 2022. The study, conducted by the NCD Risk Factor Collaboration in conjunction with the World Health Organization (WHO), emphasized that the situation has remained static over the past three decades. Furthermore, the research indicates that unlike in Sri Lanka, the prevalence of underweight individuals has decreased in India over a span of 33 years, starting from 1990. However, Sri Lankan health authorities have vehemently rejected the conclusions drawn by the global report pertaining to the Sri Lankan context. Speaking to Daily Mirror, Secretary of the Ministry of Health Dr. Palitha Mahipala said the findings demarcated in the said study can’t be condoned as they contradict the actual scenario in Sri Lanka. At the same time, Director of the Family Health Bureau Dr. Chithramalee De Silva said they are not satisfied with the data the Lancet used to compile the report. According to the latest report from the health ministry, Sri Lanka has witnessed severe acute malnutrition (SAM) in 15,763 children [1.2%] in 2023 while 2022 saw 18,420 [1.4%] SAM children. The Health Ministry earlier rejected a report from the United Nations Children's Fund (UNICEF) on child malnutrition in Sri Lanka. https://www.dailymirror.lk/top-story/Sri-Lanka-rejects-global-report-on-child-malnutrition/155-278640
  14. கிரிக் கப்பலா ? ஏனென்றால் ஆனேக யாழ்ப்பான ஆட்கள் கிரிக் கப்பலில் வேலை செய்வதை பெருமையும் கூடவே பணமும் . கனாகாலம் அல்ல பூமியின் சொர்க்கம் .
  15. நன்றி அண்ணா இணைப்புக்கு பின்னாலே வடிவேலு போல் நானும் ரவுடிதான் ரேஞ்சில் ஒருத்தர் சிலது கருத்துகள் வரபோகுது அவை கருத்துகளா என்று இன்னும் எனக்கு தெரியவில்லை .😃 என்ஜாய் .
  16. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.” சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட அழைப்பு இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sumanthiran-attend-imf-meeting-1710268541
  17. இன்னமும் இந்த திரி இழுபடுதா ? ஒரு முழுமையான ஈ அடிச்சான் திருட்டு கதைக்கு இவ்வளவு அலப்பறையா 2௦2௦ ல் வெளிவந்த த எம்ரி மான் எனும் ஆங்கில ஹோரர்ர் படத்தில் கொஞ்ச நேர கதையை மட்டுமே திருடி எடுத்து முழு படமாக்கி உள்ளார்கள் மலையாளிகள் .ஆனால் the empty man கதை கிடங்கில் இருந்துவெளியே வந்த பின்தான் கதையே சூடு பிடிக்குது ஒரு பேயை வழிபடும் கூட்டம் தாங்கள் பூமியில் வெளிப்படும் காலம் வரும்வரை ஒரு தொடர்பாளரை தொடர் நிகழ்ச்சியாக உருவாக்கி கொள்வதுதான் கதை கொஞ்சம் matrix கதையையும் தெளித்து விட்டு இருக்கினம் . கிறுக்குத் தனமாய் எம்மிடையே நம்பும் சிதம்பரத்துக்கு மேல் சாட்டிலைட் வேலை செய்யாது என்பது போல் ஆங்கில கிறுக்கு கூட்டம் பல உண்டு அந்த கூட்டம்களுக்கு இப்படியான திகில் கதை அல்வா சாப்பிடுவது போல் . ott வாங்க மாட்டர்கள் என்று கொள்ளுபடுகினம் .https://www.republicworld.com/entertainment/malayalam-cinema/manjummel-boys-producers-greed-leads-to-no-ott-deal-for-malayalam-survival-drama/. ஒரிஜினல் கதை போல் இருக்க 2௦௦6 ல் நடந்த உண்மை கதை அனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்குமே சொல்லாமல் அந்த கதையை ஒளித்து வைத்து இருந்தார்களாம் நன்கு சரடு விடுகிறார்கள் குட்டன்ஸ் 😀
  18. முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு உள்ளதென்று கவனியுங்கள் . ஒன்றரை லட்சம் மனிதர்களை குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.