Jump to content

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14337
  • Joined

  • Last visited

  • Days Won

    22

Posts posted by பெருமாள்

  1. 39 minutes ago, பெருமாள் said:

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

    தமிழரசு கட்சியின் யாப்பை வைத்து ஸ்ரீதரனை தூக்கியவர் அதே யாப்பின் பிரகாரம் நடக்க வில்லையே ?

     

  2. Colombo, March 11 (Daily Mirror) - In response to recent findings published in the British medical journal, The Lancet, concerning child malnutrition and underweight girls, Sri Lanka's health authorities have rejected the content referred to the portrayal of Sri Lanka.

    According to the study, approximately 410,000 girls in Sri Lanka are categorized as underweight, representing a prevalence of 16.4%. Despite efforts and initiatives aimed at improving nutrition and healthcare access, the report claims no detectable change in this distressing statistic since 1990.

    The Lancet publication, which covers data from 1990 to 2022 and was released on February 29, also ranked Sri Lanka second globally, trailing only behind India, for the highest prevalence of dangerously underweight girls aged 5 to 19 years.

    The analysis estimates that nearly 880 million adults and 159 million children lived with obesity in 2022.

    The study, conducted by the NCD Risk Factor Collaboration in conjunction with the World Health Organization (WHO), emphasized that the situation has remained static over the past three decades.

    Furthermore, the research indicates that unlike in Sri Lanka, the prevalence of underweight individuals has decreased in India over a span of 33 years, starting from 1990.

    However, Sri Lankan health authorities have vehemently rejected the conclusions drawn by the global report pertaining to the Sri Lankan context.

    Speaking to Daily Mirror, Secretary of the Ministry of Health Dr. Palitha Mahipala said the findings demarcated in the said study can’t be condoned as they contradict the actual scenario in Sri Lanka.

    At the same time, Director of the Family Health Bureau Dr. Chithramalee De Silva said they are not satisfied with the data the Lancet used to compile the report.

    According to the latest report from the health ministry, Sri Lanka has witnessed severe acute malnutrition (SAM) in 15,763 children [1.2%] in 2023 while 2022 saw 18,420 [1.4%] SAM children.

    The Health Ministry earlier rejected a report from the United Nations Children's Fund (UNICEF) on child malnutrition in Sri Lanka.

    https://www.dailymirror.lk/top-story/Sri-Lanka-rejects-global-report-on-child-malnutrition/155-278640

  3. 1 minute ago, ஈழப்பிரியன் said:

    நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன்.
     

    அது ஒரு கனாக்காலம்.

    கிரிக் கப்பலா ?

    ஏனென்றால் ஆனேக யாழ்ப்பான ஆட்கள் கிரிக் கப்பலில் வேலை செய்வதை பெருமையும் கூடவே பணமும் .

    கனாகாலம் அல்ல பூமியின் சொர்க்கம் .

  4. 1 hour ago, Kavi arunasalam said:

    மருத்துவமனையில்,மயக்கத்தில் இருந்து விழித்த ராஜ்குமாருக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். இந்தியாவில் நாங்கோலி(Nangloi) நகரில் வசிக்கும் ராஜ்குமாருடைய   இரண்டு கைகளும் அகற்றப்பட்டிருந்தன. மிகவும் மோசமான நிலையில் அவரது இரண்டு கைகளும் சிதைந்த நிலையில் இருந்ததால் அவற்றை அகற்றவேண்டி இருந்ததாக வைத்தியசாலையில் அறிவித்தார்கள். 2020ஆம் ஆண்டு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தே ராஜ்குமாரின் இந்த நிலமைக்குக் காரணம்.

    பெயின்றிங் வேலை செய்து வாழ்க்கையை நடாத்தி வந்த ராஜ்குமாருக்கு கைகள் போனதால், அவரது வாழ்வே அவருக்குப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருந்தது. போதாததற்கு அவரது அன்றாடத் தேவைகளுக்கும் அவர் யாரையேனும் எதிர்பார்க்க வேண்டிய சூழலும் சேர்ந்து கொண்டது.

    அவருக்குச் செயற்கைக் கைகளைப் பொருத்துவதாயின் அதற்கான செலவுகளைத் தர அவரிடம் பணம் இல்லை. வேறு யாருடையதாவது கைகளைப் பொருத்தலாமென்றால், அதைத் தருவதற்கு ம் யாரும் இல்லை. போதாதற்கு அப்படிப் பொருத்துவதற்கு இந்திய ச் சட்டத்தில் அனுமதியும் இல்லை.

    தனது இரண்டு கைகளையும் இழந்த கவலையோடு அவர் வாழ்வு நகர்ந்து கொண்டிருந்த வேளையில், 2024இல், மருத்துவமனை ஒன்றிலிருந்து எதிர்பாராத அந்தத் தொலைபேசி அழைப்பு  அவருக்கு வந்தது.

    உங்களுக்கு இரண்டு கைகளையும் பொருத்துவதற்கு வாய்ப்பிருக்கிறதுஎன்ற இனிப்பான செய்தியை அது சொன்னது.

    2024இல் இந்திய மருத்துவச் சட்டங்களில் மாறுதல்கள் வந்தன. அது ராஜ்குமாருக்கு அனுசரணையானது. கல்லூரி ஒன்றின் முன்னாள் பெண் அதிபர் மீனா மேத்தா, தனது இறப்புக்குப் பின்னர் தனது உடல் உறுப்புகளை தானமாக எழுதி வைத்திருந்தார். அவரின் இறப்பு ராஜ்குமாருக்குக் கை கொடுத்தது.

    இரண்டு கைகளும் பொருத்தப்பட்டால் ராஜ்குமாரால் மீண்டும் பெயின்ற் அடிப்பதற்கு கைகளில் தூரிகைகளை எடுக்க முடியுமா? அது சாத்தியமாகுமா? என்ற கேள்விகளுக்கு அப்பால் சத்திரசிகிச்சை செய்து கைகளைப் பொருத்துவது என்று முடிவாயிற்று.

    IMG-6015.jpg

    புது டெல்லியில் உள்ள சேர் கங்கா ராம் வைத்தியசாலையில் ஜனவரி 19ந்திகதி நடந்த பன்னிரண்டு மணி நேர சத்திர சிகிச்சையில், மீனா மேத்தாவின் இரண்டு கைகளும் ஜெயக்குமாருக்குப் பொருத்தப்பட்டன.

    ஜெயக்குமார் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். கைகளை இயக்குவதற்கான பயிற்சிகளை இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிறார். நரம்புகள், தசைநார்கள், தசைகள் எல்லாம் பொருந்தி மறுபடி ஜெயக்குமார் தனது கைகளில் தூரிகைகளை எடுத்துக் கொள்வாரா?  

    நன்றி அண்ணா இணைப்புக்கு பின்னாலே  வடிவேலு போல் நானும் ரவுடிதான் ரேஞ்சில்  ஒருத்தர் சிலது கருத்துகள் வரபோகுது அவை கருத்துகளா என்று இன்னும் எனக்கு தெரியவில்லை .😃 என்ஜாய் .

  5. இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த, ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழிவுகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை தனக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    “எதிர்க்கட்சித் தரப்பில் நான் மட்டும்தான் பிரசன்னமாகியிருந்தேன். சரியான தரவுகள் எங்களுக்கு இல்லாத சூழ்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்க முடியுமா என எங்களால் சொல்ல முடியாது என குறிப்பிட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவு அறிக்கையை எங்களுக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். முதலில் எனக்குத் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.”

    சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று (மார்ச் 11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

    ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

    சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தனிப்பட்ட அழைப்பு

     

    இந்தக் கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    எனினும் இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் மாத்திரமே எதிர்க்கட்சிகள் சார்பில் பங்கேற்றிருந்ததோடு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அனுமதியை தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் அவர் பெற்றிருக்கவில்லை என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

    ஐ.எம்.எப் கூட்டம் : தனிப்பட்ட அழைப்பில் பங்கேற்ற சுமந்திரன் | Sumanthiran Attend Imf Meeting

     

    இந்த விடயம் தொடர்பில் வினவியபோதிலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எவ்வாறெனினும் இந்த கூட்டத்தில் பங்கேற்றமை குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தனக்கு கிடைத்த தனிப்பட்ட அழைப்பிற்கு அமைய பங்கேற்றதாக குறிப்பிட்டார்.

    ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேநேரத்தில், வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பில், யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    https://tamilwin.com/article/sumanthiran-attend-imf-meeting-1710268541

  6. இன்னமும் இந்த திரி இழுபடுதா ?

    ஒரு முழுமையான ஈ அடிச்சான் திருட்டு கதைக்கு இவ்வளவு அலப்பறையா 2௦2௦ ல் வெளிவந்த த எம்ரி மான்  எனும் ஆங்கில ஹோரர்ர் படத்தில் கொஞ்ச நேர கதையை மட்டுமே திருடி எடுத்து முழு படமாக்கி உள்ளார்கள் மலையாளிகள் .ஆனால் the empty man  கதை கிடங்கில் இருந்துவெளியே  வந்த பின்தான் கதையே சூடு பிடிக்குது ஒரு பேயை வழிபடும் கூட்டம் தாங்கள் பூமியில் வெளிப்படும்  காலம் வரும்வரை ஒரு தொடர்பாளரை தொடர் நிகழ்ச்சியாக உருவாக்கி கொள்வதுதான் கதை கொஞ்சம் matrix கதையையும் தெளித்து விட்டு இருக்கினம்   . கிறுக்குத் தனமாய் எம்மிடையே நம்பும் சிதம்பரத்துக்கு மேல் சாட்டிலைட் வேலை செய்யாது என்பது போல் ஆங்கில கிறுக்கு கூட்டம் பல உண்டு அந்த கூட்டம்களுக்கு இப்படியான திகில் கதை அல்வா சாப்பிடுவது போல் .

    On 11/3/2024 at 14:11, நிழலி said:

    நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.

    ott வாங்க மாட்டர்கள் என்று கொள்ளுபடுகினம் .https://www.republicworld.com/entertainment/malayalam-cinema/manjummel-boys-producers-greed-leads-to-no-ott-deal-for-malayalam-survival-drama/.

    ஒரிஜினல் கதை போல் இருக்க 2௦௦6 ல் நடந்த உண்மை கதை அனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாருக்குமே சொல்லாமல் அந்த கதையை ஒளித்து வைத்து இருந்தார்களாம்  நன்கு சரடு விடுகிறார்கள் குட்டன்ஸ் 😀

    • Haha 2
  7. 12 hours ago, Kapithan said:

    இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

     

    12 hours ago, Kapithan said:

    திஸ் ஸ் டூ மச். 

    நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁

    முதலில் யார் எழுதியது என்பதை பார்க்காமல் என்ன எழுதபட்டு  உள்ளதென்று கவனியுங்கள் .

    ஒன்றரை லட்சம் மனிதர்களை  குண்டு போட்டு அழித்துவிட்டு அந்த அழிவை பெரும் எடுப்பில் கொண்டாடிய சிங்களவர்கள் போன்றா நாங்கள் நடந்து கொண்டோம் ? 

     

    • Like 2
  8. 6 hours ago, alvayan said:

    ஒரு சிறு குறிப்பு National Post....கனடியரால் பெரிதாக விரும்பபப் படாத பத்திரிகை என்பது உண்மையான கனடியருக்கு தெரியும் ..அதைவிட இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது...நம்மினம் என்றால் நிறைய வாந்தியும் எடுக்கும் ..கனடாவில் சிறு பிள்ளைகளுக்கு இது தெரியாமல் இருக்கலாம் ... இங்குள்ள சூரியன் வாரப்பேப்பர் மாதிரி வெட்டி ஒட்டிவிட்டு....படம் காட்டவும் வேண்டாம்.. நன்றி ..இத்துடன் முற்றுப்புள்ளீ.

    புலி வாந்தி கூட்டத்துக்கு National Post  தான்  தஞ்சம் .

     

    5 hours ago, Kapithan said:

    கீழ்சாதிப் பெடியனை தனது மகள் காதலித்து, பெற்றோரின் சம்மதத்தையும் மீறி கூடி வாழ முயற்சித்த காரணத்தால் பெண்ணின் தந்தை அவர்கள் இருவரையும் வாகனத்தால் மோதி கொல்லத்துணிந்தார்.  இது Toronto வில் நடைபெற்றது. 
    அந்தச் சம்பவம் உண்மையா இல்லையா? பதில் உங்களிடம் இருக்காதே  😁

    எலி வடையை கவ்வியது போல் எப்போதோ நடந்ததை 2௦1௦ ல் நடந்த செய்தியை காவிக்கொண்டு இந்த செய்தி யாழில் இருமுறை இணைக்கபட்டு உள்ளது .

     

    5 hours ago, Kapithan said:

    பெருமாள் உதாரணம் கேட்டார் கொடுத்திருக்கிறேன். அம்புட்டுதே. 

    அதுவா உதராணம் ?

    இரண்டு சம்பவமும் ஒன்றா ?

    5 hours ago, Kapithan said:

    உங்களுக்குத் தரவுகளில் நம்பிக்கை இல்லையென்றால் லங்காசிறியைத் தானே உங்களால் ரசிக்க முடியும்? 

    லங்கா  ஸ்ரீ சுமத்திரனின் உண்மை முகத்தை எழுதுவதால் இணைக்க வேண்டி உள்ளது மற்றைய செய்திகள் மித்திரன் வகையானது .

    • Like 1
  9. 3 minutes ago, Kapithan said:

    இங்கே இணைக்கப்பட்டது National Post எனும் கணேடிய தேசிய நாளிதளின் இணைப்பு. 

    அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உங்களுக்கு இருக்கவே இருக்கிறது லங்கா சிறீ,....🤣

    லங்காஸ்ரீ நீண்ட காலம் யாழில் தடை செய்யபட்ட இணையம்களில் ஒன்று .

  10. 2 minutes ago, Kapithan said:

    மேலே  உள்ளவர் புலம்பெயர்ஸ்  Canadian tamil ஸ் 😉

    இங்கு தரவுகள்தான் உண்மையானது என்று நிறுவுங்கள்  அதை விட்டு   சுமத்திரன் போல் அங்கு போய் படி  இங்கு போய் இத்தனையாம்  பக்கம்  படி என்று உதார் விடகூடாது  Canadian tamil =என் போல் இங்குள்ள யாழ் வாசகர் படிப்பதில்லை  யாழில் உங்களின் உண்மையான கருத்துக்கள் வரவேற்க படுகின்றன ......😀

  11. 6 minutes ago, Kapithan said:

    வெளிநாடுகளில் உள்நாட்டில் நாங்கள் செய்ததெல்லாம் எந்த பிரிவுக்குள் வரும்? 

    வெளிநாட்டில் உள்ளவர் என்ன செய்தார்கள் ?

  12. 3 minutes ago, Kapithan said:

    திஸ் ஸ் டூ மச். 

    நாங்கள் ஒன்றும் குறைந்த ஆட்கள் இல்லையே? 😁

    சும்மா சேட்டை விட வேணாம் உதாரணம் காட்டுங்க அதுக்காக வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் வேறு வழி காட்டா வேணாம் .

  13. 37 minutes ago, ரசோதரன் said:

    பல புறக் காராணங்களே இந்த வேறுபாட்டை உண்டாக்குகின்றன.

    அது எவை என்று விளக்கமாக சொல்ல முடியுமா ?

    • இந்தமாதம் தான் புதிய ஐடியில் வந்து இருகிரியல் வந்ததுக்கு நன்றி இனி வரும்போது புதிய ip யில் வாருங்க .

      March 1
  14. 40 minutes ago, satan said:

    எமது  இனத்துக்கு நடந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசு வறுத்தெடுத்து பாடம் நடத்தியிருக்கும், இலங்கை பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் பிரசுரித்திருக்கும், பாராளுமன்றத்திலும் எதிரொலித்திருக்கும். ஆகவே ..... நாமும் கொஞ்சம் கொட்டித்தீர்ப்போம்.  

     

    இயற்கையாகவே இவர்கள் இரத்தத்தில் ஊறிய குணம், அதை மறைக்க போதை, காணொளி விளையாட்டு என்று எதையாவது சேர்க்க வேண்டியது. சொந்த நாட்டிலே கல்வி கற்ற பாடசாலையிலேயே  இவர் நன்னடத்தை பிரச்சனையை எதிர் கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, சக மாணவனை கொடூரமாக தாக்கியதாக......

     

    இலங்கையின் பூர்வீக குடிகள் அழிக்கப்பட்டதை கிரிபத் எனும் பாரம்பரிய உணவை கொடுத்து வெடி போட்டு கொண்டாடிய இனத்தில் மனிதாபிமானம் இருக்குமா ?

  15. 52 minutes ago, ரசோதரன் said:
    யாழ் மாவட்டத்தில் இருந்து போனவர்களால் அங்கு சாதிக்க முடியாமல் போய்விட்டது.
     
    இதற்கு அங்கு அமைந்த/அமையாத சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.

    விளங்கவில்லை உங்கள் கருத்து .

  16.  வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில்  இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது?

    முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள்  கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி  கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் .

    இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு .

     கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான  வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை  விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் .

    இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு  கடல் மீன்வள கொள்ளையை  ஒப்புதல் வாக்கு மூலம்  கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .

     

    • Like 1
    • Thanks 1
  17. இங்கு சுமத்தர் ரணிலுடன் விளயாட்ட பார்ப்பது பிரச்சனையல்ல முதலில் அவரின் சுயம் எது ? என்பதை தமிழ்  மக்கள் தெரிந்து கொள்ளனும் .

    தனக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று பொய்யான செய்தியை சொல்லி புனர்வாழ்வு அளிக்கபட்ட போரில் அங்கவீனர் ஆகிய முன்னாள் புலி போராளிகளை சிங்கள அரசிடம் சொல்லி சிறையில் இட்டு தனக்கு பாதுகாப்புக்கு அதிரடி படையை பெற்றுகொண்டார்  அதே  (இன்னமும் அவர்கள்  சிறையில் தான் உள்ளார்கள் ) அதிரடி படையுடன் மாவீரர் நாளில் போராளி வீட்டுக்குள் சென்று மாவீரர் தினத்தை கடைபிடிப்பார். 

    உலகிலே பெரிய அதிசயத்தை நிகழ்த்தி காட்டியவர் ஒரே ஒரு நாளில் நெல் விதைத்து அடுத்த சிலமணி நேரம்களில் வளர்ந்த நெல்லில் பொங்கல் செய்து காட்டியவர் இந்த பிழைப்புக்கு  யாழ்பாணம் பஸ் ஸ்டாண்டில் துண்டை விரித்து பிச்சை எடுத்து இருக்கலாம் .

    சிங்களவர்களுடன் வாழ்வதே தனக்கு சந்தோசம் என்பவர் முறையான தேர்தலில் வராமல் பின்கதவால் தமிழர் அரசியலுக்குள் வந்து எண்ணற்ற இழப்புகளையும் இழந்து போயிருந்த தமிழருக்கு கிடைக்கவேண்டிய நியாமான தீர்வுகளை சர்வதேச விசாரணை முடிவுகளை குழப்பியடித்தவர் .

    இலங்கை தமிழர்களில் தனக்கு மட்டுமே ஆங்கிலமும் சிங்களமும் எழுத வாசிக்க கதைக்க தெரியும் என்று நம்புபவர் அதை தனது விசுவாசிகளுக்கும் சொல்லி வைத்திருப்பார் ஆனால் பொது மேடையில் இலங்கையின் சட்ட புத்தகம் படிக்க தெரியாமல் உளறுவார் .

    மேலே உள்ள வைக்கு எதிர் வாதம் செய்ய வருவோர் தயவு செய்து சுமத்திரன் தமிழர்  அரசியலுக்கு வந்து  கடந்த 14 வருடத்தில்  தமிழர்கள் பெற்றுக்கொண்ட ஒரு நன்மையை சொல்லிய பின் கருத்துக்களை வைப்பது நல்லது .

     தமிழர் இன அழிப்பை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் நிம்மதியாக உறங்க செல்கிறார்கள் என்றால்   காரணம் இவர் மட்டுமே .

     

    • Haha 1
  18. On 26/2/2024 at 22:34, nunavilan said:

    ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?

     

    Whats-App-Image-2024-03-11-at-8-00-56-AM

     

    Whats-App-Image-2024-03-11-at-8-01-38-AM

    Whats-App-Image-2024-03-11-at-8-01-51-AM

    • Like 1
  19. போதைபொருள் ஜாபர் செய்திகளில் இருந்து இனி விடைபெறுவார் அடுத்து  கொஞ்ச நாளைக்கு ஜெயமோகன் தான் இரு மாநில செய்தி ஊடகங்களிலும் கிழித்து தொங்க விடபடுவார் .இனி என்ன ........................ஸ்டார்ட் மியுசிக் .😀

    • Like 1
  20. இந்த pseudoephedrine பிடிபட்டது சரி அது எங்கிருந்து வந்தது ? தமிழ்நாட்டில் இருந்துதான் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள் ? என்ற விபரங்களை இந்த மழைக்கு  முளைத்த காளான் யுடிப்பர் கூட்டம் கூட ஏன்  மறைக்கின்றனர்?

    தமிழ்நாட்டில் டெண்டர் விட்டார்கள் அதை யார் எடுத்தார்கள் அதை யார் உற்பத்தி செய்கிறார்கள்  தற்போது இதைப்பற்றி எல்லாம் ஏன் சொல்ல மறைக்கிறார்கள் ?

    ஜாபர் கைது  பேருக்கு நாலு  பேர் கைது அத்துடன் இந்த செய்தியை விட்டு வேறு செய்திக்கு மாறி விடுவார்கள் காரணம் இங்கு எழுதமுடியாது பல ரில்லியன் புழங்கும் அரசியல் சதுரங்கம் .

    கூகிளில் கிண்டுபவர்களால் உண்மையை கொண்டுவர முடியும் முடிந்தால் கிண்டுங்கள் .

  21. 36 minutes ago, nunavilan said:

    இருக்க இடமில்லை. வேலை இல்லை.  frustration ஆக இருக்கலாம்.

    கொலை செய்ய மில்லியன் காரணங்கள் உண்டு.

    சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை  நிமித்த முடியுமா ?

    • Like 2
  22. டாலர் வந்தது வந்து கொண்டு இருக்குது வரப்போகுது டாலர் மழை இலங்கையில் கொட்டப்போகுது இப்படியே சொல்லி சொல்லி கடன் வாங்கியவர்களுக்கு ஆப்பு கொடுக்கிறாரார்கள் .

  23. போகும் நிலை: 20 லட்சம் டன் சரக்கு தேக்கம் - ஆபத்தில் உலக வர்த்தகம்

    பனாமா கால்வாய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    உலகத்தின் முக்கிய கடல் வழிகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கட்டுரை தகவல்
    • எழுதியவர்,மைக்கேல் ஃப்ளூரி
    • பதவி,வட அமெரிக்க வணிக செய்தியாளர், பனாமா
    • 7 மார்ச் 2024
      புதுப்பிக்கப்பட்டது 8 மார்ச் 2024

    உலகத்தின் மிக முக்கியமான செயற்கை கடல் நீரிணைப்புகளுள் ஒன்றான பனாமா கால்வாய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்தக் கால்வாய் வறண்டு போகும் நிலை உருவாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

    சூயஸ் கால்வாய் போலன்றி, அமெரிக்க கண்டத்தின் பனாமா கால்வாய் காதுன் எனும் நன்னீர் ஏரியின் மூலம் நிரப்பப்பட்டு செயல்பட்டு வரும் கால்வாய் ஆகும். இந்நிலையில் சமீப காலமாக அந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணரான நெல்சன் குவேரா, காதுன் ஏரியின் நீர் மட்டம் 5 அடி குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், ஏரியை உருவாக்கும்போது அங்கிருந்த காடுகளின் மரங்கள் பாதியளவு மட்டுமே வெட்டப்பட்டன. ஒவ்வொரு முறை இந்த மாதம் வரும்போதும் அவற்றில் சில தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுண்டு.

    ஆனால், இன்னும் முழுமையாக கோடைக் காலம்கூட தொடங்காத நிலையில் இப்போதே ஒரு காடளவிற்கான மரங்கள் நீர் மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா தனது பயணத்தின்போது கண்டறிந்துள்ளார்.

     
    பனாமா கால்வாய்
    படக்குறிப்பு,

    பனாமா கால்வாயின் அதிகாரபூர்வ நீரியல் நிபுணர் நெல்சன் குவேரா

    பனாமா கால்வாய் குறைந்த வரத்து கொண்ட மழைநீரையே சார்ந்துள்ளது. இந்நிலையில் கால்வாயின் 110 வருட வரலாற்றில் இரண்டாவது முறையாக குறைந்த மழையும், வானிலையும் அதன் வறண்ட ஆண்டுக்கு காரணமாக அமைந்துள்ளன.

    கடந்த அக்டோபர் தான் அதன் வரலாற்றில் முதல் வறண்ட மாதம். அப்போது இயல்பைவிட 41% குறைவாக மழை பொழிந்தது. இது அமெரிக்க - பசிபிக் வழித்தடம் வாயிலாக பயணிக்கும் 270 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.

    இதற்காக கால்வாய் நிர்வாகம் ஒரு சில நீர்சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. குறிப்பாக ஒரு சில கப்பல்களே ஒரு நாளில் கால்வாயை கடக்க முடியும் என்று அது விதியை உருவாக்கியது. காரணம் கால்வாயை இயக்க ஏரியின் தண்ணீரே தேவை.

    இதைத் தொடர்ந்து ஒரு நாளைக்கு கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 24ஆக குறைக்கப்பட்டது. அதிலும் எடைக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு கப்பலும் குறைந்த அளவு சரக்கையே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

    இந்த தேக்கம் உலக வர்த்தகத்தில் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

     
    பனாமா கால்வாய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    பனாமா கால்வாய்

    என்ன சிக்கல் ஏற்படும்?

    பொதுவாக 5 சதவீத உலக கடல்சார் வர்த்தகம் மற்றும் 40% அமெரிக்க கண்டைனர்கள் அட்லாண்டிக் - பசிபிக் வழித்தடத்தையே பயன்படுத்துகின்றன. எனவே, இந்த வழித்தடம் வறண்டு விட்டால், கப்பல் நிறுவனங்கள் வேறு வழித்தடத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை வரும். இது நேரச்செலவை ஏற்படுத்துவது மட்டுமின்றி, பண விரயத்தையும் அதிகப்படுத்தும்.

    மேலும் தண்ணீர் வறட்சி உலக வர்த்தகத்திற்கு மட்டும் பாதிப்பல்ல. பனாமா கால்வாய் நிர்வாகம்தான், அந்நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. எனவே, தொடர் தண்ணீர் வறட்சி இதிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஆனால், தற்போதைக்கு கால்வாய் நிர்வாகம் இந்த தண்ணீர் இன்னும் ஒரு நூற்றாண்டு தாக்குபிடிப்பதற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரியான இலியா எஸ்பினோ டி மரோட்டா, கால்வாயின் பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

     
    பனாமா கால்வாய்
    படக்குறிப்பு,

    பனாமா கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரி இலியா எஸ்பினோ டி மரோட்டா

    பனாமா கால்வாய் சிக்கலுக்கு என்ன தீர்வு?

    இதுகுறித்து அவர் பேசுகையில், “இது ஒரு தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போக்குவரத்து குறைப்பு அல்லது எடைக்குறைப்பு ஆகியவற்றையும் நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

    இந்த நிர்வாகம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிலையான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பூமியில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, இந்த திட்டங்கள் இது போன்ற முக்கிய வழித்தடங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    காலநிலை மாற்றத்தை குறிப்பிட்டு பேசிய இலியா எஸ்பினோ டி மரோட்டா, “பனாமா மிக அதிக மழை பெய்யும் ஒரு நாடு. ஆனால், சமீபத்தில் பல இடங்களை போலவே இங்கும் மழைப் பொழிவு குறைந்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே நிச்சயமாக நாம் எதிர்காலத்தை நோக்கி தயாராக வேண்டும்” என்கிறார்.

    அதில் முக்கியமான ஒன்று தண்ணீரை சேமிப்பது.

    கடல் மட்டத்திற்கு மேலே உள்ள வாயில்கள் வழியாக காதுன் ஏரி மற்றும் சிறிய அலாஜுவேலா ஏரியின் தண்ணீரின் மூலம் படகுகளை கொண்டு செல்வதே பனாமா கால்வாயின் பணியாகும்.

    ஒவ்வொரு படகும் அதை கடப்பதற்கு 5 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு கால்வாயை புதிப்பித்த போது 60% தண்ணீரை சேமிக்கும் வகையிலான நியோ-பனாமாக்ஸ் பூட்டுகள் மாற்றப்பட்டன.

    ஆனாலும், பழைய பனாமாக்ஸ் பூட்டுகளும் செயற்பாட்டில் தான் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது பெரிய திட்டம். இதற்கிடையில், ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்கு அதே நீரை பயன்படுத்துவதற்கான குறுக்கு வழி ஒன்றையும் பனாமா கால்வாய் நிர்வாகம் கண்டுபிடித்தது.

    குறுக்கு வழியில் நீர் நிரப்பும் இந்த திட்டம் மூலம் தினசரி 6 கப்பல்கள் இந்த வழியை கடக்கும்போது பயன்படுத்தும் அளவிற்கான தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    2016இல் புதிய பூட்டுகள் மாற்றப்பட்டதில் இருந்து, நீர்தேக்கங்களை அமைப்பது குறித்து பனாமா கால்வாய் நிர்வாகம் சிந்தித்து வருகிறது.

     
    பனாமா கால்வாய்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    படக்குறிப்பு,

    பனாமா கால்வாயில் சிறிய கப்பல்கள் நிற்கும் காட்சி

    மழைப்பொழிவு மாதங்களில் அதிக நீரை சேமிக்கவும், வறட்சி காலங்களில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கவும் அந்த நிர்வாகம் அருகில் உள்ள இந்தியோ நதியில் அணைக்கட்ட விரும்புகிறது. மேலும் காதுன் ஏரிக்கு பைப் வழியாக நன்னீரை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கப்பல் போக்குவரத்தை ஒரு நாளுக்கு 12 முதல் 15 வரை அதிகரிக்கும்.

    இந்த திட்டத்தை முன்னெடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. காரணம் இந்த திட்டத்திற்கு இன்னும் காங்கிரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் கூட இதன் கட்டுமானம் முடிய சில ஆண்டுகள் ஆகும்.

    இதில் மற்றுமொரு திட்டம் என்னவென்றால் உப்புநீக்கும் ஆலைகளை உருவாக்குவது. தொடர் மழையின்மை ஏரிகள் மற்றும் நதிகளை அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களை பராமரிப்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. அதே சமயம் இந்த திட்டம் விலை உயர்ந்தது மட்டுமின்றி கடல்நீரில் இருந்து உப்பை நீக்குவதற்கு அதிகளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது.

    இவர்களது திட்டப்பட்டியலில் செயற்கை மழையை வர வைப்பதும் கூட உள்ளது. மேகக்கூட்டங்களில் மழை உருவாக்கும் வேதிப்பொருட்களை தூவி மழை வருவிக்கும் மேக விதைப்பு முறையே இந்த செயற்கை மழை. இதை கேட்க அதிநவீன முறையாக தோன்றினாலும், இது 1940ஆம் ஆண்டிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறைதான்.

    இந்த ஆண்டு ஏற்கனவே மோசமடைந்துள்ள உலக வர்த்தகம், மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டுமானால், இதற்கு உடனே தீர்வு கண்டறிய வேண்டும். தற்போது பனாமா கால்வாய் வழியாக நடக்கும் வர்த்தகத்தின் அளவை அதன் உச்ச அளவோடு ஒப்பிட்டால், 49% குறைந்துள்ளது.

    இதனால் தங்களின் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ் . பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக ஜவுளிப் பொருட்களில் இருந்து உணவுகள் உள்ளிட்ட இரண்டு மில்லியன் டன் சரக்குகள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், வேறேதும் நல்ல குறுக்குவழிகள் இல்லாததே பிரச்சனை என்கிறார் அவர்.

     
    பனாமா கால்வாய்
    படக்குறிப்பு,

    அகுன்சா கப்பல் நிறுவனத்தின் பனாமா கிளை பொது மேலாளர் ஜோஸ் செர்வாண்டஸ்

    பனாமா கால்வாய்க்கு மாற்று இருக்கிறதா?

    செங்கடல் பிரச்னை எழுவதற்கு முன்பு, ஆசியாவிலிருந்து சில சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டன. அது பாதுகாப்பு குறைந்த தேர்வாக இருப்பதன் காரணமாக, பனாமா முழுவதும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

    ஆனால், கப்பல்களில் இருந்து ரயில்கள் மற்றும் வாகனங்களில் சரக்குகளை இறக்கி ஏற்றுவதற்கே அதிக செலவுகள் ஆவதாக கூறுகிறார் ஜோஸ் செர்வாண்டஸ். “அந்த செலவுகள் அனைத்தும் வாடிக்கையாளர் மீதுதான் சுமத்தப்படுகிறது" என்றும் கூறுகிறார் அவர்.

    எதிர்பார்த்தபடி மழை மே மாதத்தில் வந்தால், கால்வாயை கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது நிர்வாகம். ஆனால், அது வெறும் தற்காலிக தீர்வு மட்டுமே.

    மழைபொழிவதில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை உலக வர்த்தகம் மற்றும் பனாமா கால்வாயின் நீண்ட எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தும் என்பதற்கான ஒரு நினைவூட்டல் இது.

    https://www.bbc.com/tamil/articles/cnl78krx8xgo

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.