உண்மை.
ஒருவர் சகல பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபட்டு நெடுங்கேனி காட்டில் கொடரியுடன் விடப்பட்டார். இச்சைக்குள்ளான பெண்கள் குடும்பத்தவர்களாகவும், தவறு தங்கள் மீதும் உள்ளதை புலப்படுத்தி இருந்தார்கள். இறுதியில், வேவுக்காக வந்த சிங்கள படையினா் கழுத்தை வெட்டி கொண்டுபோனார்கள். அவரது தண்டனை காலத்தில் தானாகவே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார். இதன் பின், அவரின் தம்பிகள் இருவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார்கள்.
மற்றயவர், விசாரனைக்கு விசாரனை நடைபெற போவது தெரியாமல் முல்லைதீவில் இருந்து இருபாலைக்கு வந்து இருந்தார். கேள்விகள் தொடங்கிய சிறு வினாடிகளில், இன்னுமோர் அழைப்புக்காக திரும்பிய தறுவாயில் தனது நஞ்சை அருந்தி மாண்டார். ஒரு பாடம் கற்றுக் கொள்ளபட்டது. பின்னணி, சமூக ஏற்ற தாழ்வினால் உந்தபட்டு குடும்ப பெண்ணையும், போராளியாக இருந்தவரின் சகோதரியையும் படையல் போட்டு இருந்தார்.
சடலம் முல்லைதீவுக்கு கொண்டுவரபட்டு, அவரது தாயாருக்கும், சகோதரிக்கும் குற்றம் பற்றி அறிவிக்கபட்டு, சடலத்துக்குரிய அடிபடை மரியாைதயுடன் கையளிக்கபட்டது. ஊரவர்கள் அற்ற, உறவுகளும்,புதினம் பார்க்க வந்தவர்களுடன் உறவுகளால் எரியூட்டபட்டார்.
சம்பவங்கள் நிறைய உள்ளது, தண்டணைகளும் பல நடந்தது.