Jump to content

MullaiNilavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    125
  • Joined

  • Last visited

Everything posted by MullaiNilavan

  1. உண்மை. ஒருவர் சகல பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபட்டு நெடுங்கேனி காட்டில் கொடரியுடன் விடப்பட்டார். இச்சைக்குள்ளான பெண்கள் குடும்பத்தவர்களாகவும், தவறு தங்கள் மீதும் உள்ளதை புலப்படுத்தி இருந்தார்கள். இறுதியில், வேவுக்காக வந்த சிங்கள படையினா் கழுத்தை வெட்டி கொண்டுபோனார்கள். அவரது தண்டனை காலத்தில் தானாகவே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார். இதன் பின், அவரின் தம்பிகள் இருவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார்கள். மற்றயவர், விசாரனைக்கு விசாரனை நடைபெற போவது தெரியாமல் முல்லைதீவில் இருந்து இருபாலைக்கு வந்து இருந்தார். கேள்விகள் தொடங்கிய சிறு வினாடிகளில், இன்னுமோர் அழைப்புக்காக திரும்பிய தறுவாயில் தனது நஞ்சை அருந்தி மாண்டார். ஒரு பாடம் கற்றுக் கொள்ளபட்டது. பின்னணி, சமூக ஏற்ற தாழ்வினால் உந்தபட்டு குடும்ப பெண்ணையும், போராளியாக இருந்தவரின் சகோதரியையும் படையல் போட்டு இருந்தார். சடலம் முல்லைதீவுக்கு கொண்டுவரபட்டு, அவரது தாயாருக்கும், சகோதரிக்கும் குற்றம் பற்றி அறிவிக்கபட்டு, சடலத்துக்குரிய அடிபடை மரியாைதயுடன் கையளிக்கபட்டது. ஊரவர்கள் அற்ற, உறவுகளும்,புதினம் பார்க்க வந்தவர்களுடன் உறவுகளால் எரியூட்டபட்டார். சம்பவங்கள் நிறைய உள்ளது, தண்டணைகளும் பல நடந்தது.
  2. கெடுகுடி சொல் கேளாது சாகிறவன் மருந்து குடியான்... இந்த "சேரா-மான்", தனக்கு இருந்த அறிமுகங்களை வைத்து, அப்பாவிகளை (தமிழர் தாகம் கொண்டவர்களை) சலவை செய்து "சேற்று -மான்" கூட்டமாக்கி, இன்னோர் சார் குடிகளுக்கு அய்யத்தை உருவாக்கி, ஆயிடை குடிகளை நகைஉரு குடியாக்கி "வம்பிழுத்து சேதமாகி அனுங்குகிறது". "நையாண்டி - எல்லா சர்வாதிகாரிகளினதும் சிம்ம சொப்பனம் " என அறிமுகமும், முகமூடியும் போடும். தடையும்,அணியும் தடுக்கிறது...
  3. வடிவமைக்கபட்ட சில்லைறகளின் அலம்பல்கள், அதன் விளைவு "துவாரகா". தமிழர் இறமையும், திமிரும் கருங்காலிகளுக்கு விளையாட்டாகிவிட்டது. முகவரி கொடுத்தவர்களே முக்காடு போட வைப்பார்கள். நன்றி.
  4. ஐயா! இந்த உண்மையையும் உங்கள் கருத்துகளுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். Diplomatic service officer- Mr S Jaishankar ( Now- Minister of External Officer) இவர் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக இந்தியாவினுடைய உதவிகளை வழங்கி, தமிழர்களின் விடுதலை விருப்புகளை சிதறடிப்பதில், அந்தக் காலத்தில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியும் கண்டார். திரு முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப், அவர்களுடாக தமிழர் எதிர்ப்பு படைகளை உருவாக்கி குறிப்பிட்ட அளவு தமிழர் முஸ்லிம் எதிர்ப்புகளை விதைப்பதற்கு அத்திவாரம் இடப்பட்டது. நாங்கள் எல்லாரும் அறிந்தது போலவே, மிகுதி வடக்கில் மாற்று இயக்கங்களின் அடாவடித்தனமும், கிழக்கில் இவர்களின் அடாவடித்தனமும், அதோடு இணைந்த மாற்றியக்கங்களின் அடாவடியும் நடந்தேறியது. அது இன்று வரை, ஏதோ ஒரு வடிவில் தங்களது நோக்கங்களுக்காக சிலமுறைகளை உருவாக்கி வெற்றியும் கண்டு கொண்டு இருக்கின்றார்கள். Mr S Jaishankar, இந்த ஐயா அடிக்கடி எங்கள் நாட்டுக்கு வந்து செல்கின்றார் , என்ன குறி வைக்கிறார் என்பதும் எங்களுக்கு தெரியும். அந்தக் காலத்தில் சிங்களப் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றியபோது அந்த அளப்பெரும் சாதனையை நிகழ்த்தி முடித்தார்.
  5. நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும். K P க்கு போன் போட்டு கேட்டால் தெரியும் . Sunny Bai ( Carl Lee) உலகமே தேடித் தெரியும் பொழுது, K P யும் அயல் நாட்டுக்காரனுக்கும், உள்நாட்டுக்காரனுக்கும் தனக்கு இருந்த பங்கை விளக்கியதன் விளைவு, எங்களது அழிவு.
  6. இந்திரா காந்தி அம்மையார் வெட்டிய குட்டையில் ஊறிய மட்டைகளால் அடையாளமின்றி போன "தமிழர் இருப்பு", சில அடையாளங்களை தனித்து காட்டி நிற்கின்றது. என்ன ஒரு அற்புதம், தமிழ்நாட்டில் , உள்நாட்டில் ஊட்டி வளர்த்த தமிழர் அரசியல், உலக அரசியலாய் மாறி நிற்கின்றது. கல்லா கட்டுவதற்கு சண்டை, தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்த சண்டை, காட்டி கொடுக்க சண்டை. என்ன செய்வோம்?
  7. ஆம் (ஈழவர்), சிங்கள அடிபடைவாதிகளுக்கு வயிற்றை கலக்குவதற்காக... புலம்பெயர் தமிழர்- மிக அவசியமும், தேவையான புதிய முரன்களை உருவாக்கி,கருத்தாக்கம் பலம் பெற வேண்டும்.
  8. ஜயா, பொறுமை வேண்டும். நீங்கள் "துவாரகா"வின் கதையை படமாக்கி முடியுங்கள். இப்பொழுதுதானே தொடங்கி இருக்கிறீர்கள். நீங்கள் "சேரமானாய்" சேரமால் இருந்தால் நன்று. இந்த திதியில் நிறைய ஆதாரம் இல்லாமல் வடிகட்டி விடுகிறீர்கள். ஜயா, பொறுமை வேண்டும்.
  9. காசி ஐயா கனகச்சிதமாக வேலை செய்கிறார். 90 ஆம் ஆண்டு தீவிரமாக துவங்கிய நோய் 2009களில் நிறைவடைந்து, இன்னும் துரோக சிந்தனைகளும், ஆரவாரங்களும் ஏன்? வெளிப்படையாக உங்களது தமிழினம் சார்ந்த பொது வேலை அனைத்தும் (***காசி அய்யா உங்களது பொதுப்பணி 2001 முடிவுற்றது***) 2009 இல்லாமல் போய்விட்டது இன்னும் உங்களை தன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? தமிழர் எழுச்சி தானே தனக்குரிய பாதையினை உருவாக்கி விட்டது. இறையாகி,இயற்பியலை தூண்டி சுதந்திரமாக காலசக்கரத்தை ஆக்கிரமித்து அக நிறைகளின் ஈர்புடன், எழுச்சி காலம் தானாகவே கனிந்து வரும் நேரத்தில், காசி ஐயா , உங்களுக்கு ஏன் இந்த வியாபாரம்? தயவு செய்து நிறுத்துங்கள்.
  10. நான் இறுதியில் உங்களுக்குச் சொல்கிறேன்,மன்னிப்பு அல்லது தண்டனை

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.