Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14855
  • Joined

  • Days Won

    166

நிழலி last won the day on December 1 2023

நிழலி had the most liked content!

About நிழலி

  • Birthday 12/15/1974

Profile Information

  • Gender
    Male
  • Location
    பனி வனம்
  • Interests
    காமமும் கலவியும்

Recent Profile Visitors

34653 profile views

நிழலி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

7.6k

Reputation

  1. காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
  2. கடற்படையினருக்கு நாலு போத்தல் சாராயம் வாங்கிக் கொடுத்து இருப்பினம் அந்தக் கும்பல். இலங்கை இராணுவத்தினர் / கடற்படையினர் லீவு காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று செய்யும் வக்கிரமான செயல்கள் பற்றி சிங்கள ஊடகங்களும், சில தமிழ் சமூகவலைத்தளத்தில் இயங்குகின்றவர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் பல, யாழில் பகிரக் கூசும் அளவுக்கான விடயங்கள்.
  3. கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.
  4. கபிதன், இராணுவ முகாம்கள் தாக்கி அழிக்கப்படும் போது, அதை கொண்டாடியதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களின் முகாம் அது. ஆனால், எம் தமிழ் மக்கள், எல்லைக் கிராமங்களில் உள்ள சிங்கள மக்களை வெட்டிக் கொன்ற நிகழ்வுகளின் போதும், தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பு போன்று, மக்களை குறிவைத்து செய்த தாக்குதல்களின் போதும் அவற்றை மெச்சி கொண்டாடவும் இல்லை, பாராட்டவும் இல்லை. மெளனமாக இருந்தது, கொண்டாடியதாக அர்த்தம் இல்லை.
  5. பெருமாள், யாழில் வந்த செய்தி இது: அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி மட்டும் உயிரிழந்த சம்பவமும் எம் சமூகத்துக்குள் 2022 இல் நிகழ்ந்தது. இப்படியான கொலைகள் எல்லா சமூகத்த்துக்குள்ளும் நிகழ்பவை. இதை இனம் சார்ந்த ஒரு செயலாக நிறம் தீட்ட முடியாது. ஆனாலும், இப்படியான விடயங்கள் தமிழ் சமூகத்துக்குள் நிகழும் போது, அதனை "தமிழர்கள் பயங்கரவாதிகள், எனவேதான் இப்படியான செயல்களை செய்கின்றனர்" என்று சிங்கள ஊடகங்கள், மற்றும் சமூகவலைத்தளத்தில் இயங்கும் சிங்கள தீவிர இனவாதிகள் எழுதியதையும், இனியும் எழுதுவார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் அந்த இனத்தால் தன்னுடன் இருக்கும் ஒரு இனத்தை இனப்படுகொலை செய்து விட்டு, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இருக்க முடிகின்றது. என்னால் 2 மாதக் குழந்தையையும் படுகொலை செய்ததை, சிங்களவர்களுக்கு எதிராக எழுதுவதன் மூலம் எம் இனத்துக்கு சாதகமாக எழுதுகின்றேன் என்ற கோணத்தில் சிங்கள இனவெறியர்களைப் போல் எழுத முடியாது. அவ்வாறு எழுதினால் அந்த சிங்கள இனவெறியாளர்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.
  6. புங்கை அண்ணாவுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
  7. கடந்து போன காதலைப் பற்றி, அப்படி காதல் இருந்தால் அதை மனதில் இருந்து தூக்கி எறியாமல் இன்னொருவருடன் மண வாழ்க்கை வாழ்வது நேர்மையில்லை என்ற உங்கள் கருத்தைப் போன்று ஒரு மிக அபத்தமான கருத்தை காதல் தொடர்பாக அண்மையில் வாசித்ததாக நினைவில் இல்லை. ஆயினும், 96 பற்றி உங்களிடம் வேறு எழுத இனி ஒன்றும் இல்லை என நீங்களே சொன்னபின் மேலும் சாட்டையை சுழற்ற வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை. நன்றி பி,கு: குணா, மற்றும் காதல் கொண்டேன் கதாநாயகிகள் Stockholm syndrome இனால் தான் மன நிலை பிறழ்ந்தவனை ஏற்றுக் கொண்டனர் எனவும் எழுதியுள்ளீர்கள். முதலில் Stockholm syndrome என்றால் என்னவென தெளிவாக அறிந்து விட்டு, அப்படியான syndrome வருவதற்கு, கடத்திய ஆண் எப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்பதையாவது அறிந்து விட்டு எழுதியிருக்கலாம் என நினைக்கின்றேன். அல்லது Natascha Kampusch இன் உண்மையான கதையைப் பற்றியாவது தெரிந்து இருந்தால் நல்லது, நன்றி.
  8. திருமணத்தின் பின் பழைய காதலை, நுகர்ந்து பார்ப்பது, நினைத்துப் பார்ப்பது, அந்த காதலை நினைவுபடுத்தும் விடயங்களை நுகர்ந்து , படிமமாக இருக்கும் காதலின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பது நெறி தவறிய செயற்பாடுகளா? இங்கு நெறி எனப்படுவது எது? கற்பா? இவ்வாறு பழைய காதலை நினைப்பது கற்பு நெறி சார்ந்த தவறா? உங்கள் பார்வையில் புனிதப்படுத்துவது என்றால் என்ன? புனிதம் கெடுவது என்ன?
  9. ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கட்டுரையை படித்தவர்களுக்கு புரியும், காடுகளில் கொட்டப்படும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்களாலும், வேண்டும் என்றே அங்கிருக்கும் விலங்குகளை துன்புறுத்தி இன்பம் காண்பதற்காக அவற்றின் உணவில் கலந்து கொடுக்கப்படும் கண்ணாடித் தூள்களாலும், வெடிகளாலும் விலங்குகள் அடையும் மரண வேதனை பற்றி. இதில் பெரும்பாலும் ஈடுபடுகின்றவர்கள் இன்று ஜெயமோகனானல் 'கேரளத்து பொறுக்கிகள்" என்று அழைக்கப்படுகின்றவர்கள் தான். இவ்வாறு காட்டுக்குள் சென்று குடித்து, போத்தல்களை உடைத்து அட்டகாசம் செய்யும் பொறுக்கிகளை மெச்சி படம் எடுத்தால், எல்லாரும் பாரட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. தியேட்டர் போய் பார்க்கும் எண்ணம் இல்லை, OTT யில் வரட்டும்.
  10. கொலை செய்ததாக கைதானவர் இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர்...! இந்த இளம் வயதில் மிகக் கொடூரமாக சிறுவர்களை கூட கொன்றுள்ளார்.
  11. இவர்கள் கூரான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. // Officers say an edged weapon was used in the crime. The victims have been identified as Darshani Banbaranayake Hama Walwwe Darshani Dilanthika Ekanyake, 35, her son, Inuka Wickramasinghe, her daughter, Ashwini Wickramasinghe, 4, her daughter, Rinyana Wickramasinghe, 2, and her two-month-old daughter, Kelly Wickramasinghe. Police say a family friend, Ge Gamini Amarakoon, 40, was also killed. // https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/
  12. ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம். ---- By Alex Black, Kaitlin Lee Posted March 7, 2024 4:11 am. Last Updated March 7, 2024 12:27 pm. The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa. The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located. A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries. The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals. The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo. Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke. One person has been taken into custody and police say there is no further threat to the public. Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence. The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today. “This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post. Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement: Ontario Premier Doug Ford is also expressing condolences. Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday. Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out. Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website. Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca. Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live. https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/
  13. இருக்கிற சனத்துக்கு சாப்பாடு போடவே வெளிநாடுகளிடம் இருந்து பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை... இதற்குள் சனத்தொகை குறைக்கின்றது என கவலைப்படுகினம்.
  14. இப்போது இங்கும் வேலை செய்கிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.