Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14346
  • Joined

  • Days Won

    157

நிழலி last won the day on March 24

நிழலி had the most liked content!

About நிழலி

  • Birthday 12/15/1974

Profile Information

  • Gender
    Male
  • Location
    பனி வனம்
  • Interests
    காமமும் கலவியும்

Recent Profile Visitors

31661 profile views

நிழலி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Year In

Recent Badges

6.9k

Reputation

  1. மீண்டும் கண்டது மகிழ்ச்சி பரணி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
  2. மாதம் ஓரிரு தடவைகளா! எல்லாம சரி, கோப்பி மட்டும் வாங்கி குடிக்காதீர்கள்🤣
  3. வாசிக்கும் போதே நெஞ்சு பக் என்றது....அதுவும் ஒரு குழந்தையின் carrycot . அதற்குள் குழந்தை இருக்கின்றதா இல்லையா என்று எந்தளவுக்கு பதட்டப்பட்டு இருப்பீர்கள்...! நீங்கள் ஊகிப்பது போல்,வெறும் carrycot ஆகத்தான் இருக்கும். அது என் ராசி 😀 பொதுவாக வேலைக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் போது, நேர்முகத்தேர்வு வைப்பவர் பெண் என்றால் எனக்கு வேலை கிடைக்கும். மேலதிகாரி பெண் என்றால், அந்த வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்த இடத்திலாவது பெண் ஒருவர் இருந்தால், அவரது உதவி எனக்கு கிடைக்கும். என் வாழ்வில் வந்த அனைத்து பெண் உறவுகளும் நல்ல தோழிகளாகவே இருக்கின்றனர்.
  4. ஓம் அண்ணா. சரி பிழைகளுக்கு அப்பால், ஒரு மனித உயிர் என்னால் ஒரு வினாடியில் பறிக்கப்பட்டதே என்ற குற்றவுணர்வில் மிச்ச வாழ்வு கழிந்திருக்கும். என் மனைவிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது நிகழ்ந்த பின் "எனக்கு படிப்பிக்காதையும்" என்ற மாதிரி கதைப்பதை நிறுத்தி விட்டேன். 😄 எனக்கு புனைவு சரிவராது. என் அனுபவத்தை தான் கொஞ்சம் நீட்டி முழக்கி எழுத முடிகின்றது. இன்னொருவரின் அனுபவத்தை கூட என்னால் கேட்டு அப்படியே எழுத முடியாது. என் அனுபவங்களில் மரணம் ஒரு சக பயணியாக, நிழலைப் போன்று வரும் போது, அதைப் பற்றி அதிகம் எழுத்தில் கொண்டு வராமல் இருக்க முடியவில்லை. தனிப்பட்ட ரீதியில் எந்த stress சும் அதிகம் இல்லாத, அந்தந்த கணங்களுக்காக வாழ்வது என் இயல்பு. இது உங்களுக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இப்படி வாழ்வதே மரணம் பற்றிய பிரக்ஞை எப்போதும் இருப்பதால் அத்துடன் நாம் ஒரு காலத்தில் 'மரணத்துள் வாழ்ந்தோம்'
  5. உண்மை அண்ணா. பதட்டத்தில் எதுவும் செய்யத் தோன்றவில்லை. அத்துடன் அவர் வீதியை கடக்க முயன்று வாகனத்தை கண்டவுடன் ஸ்தம்பித்து நின்றரா அல்லது தற்கொலைக்கு முயன்றவரா என்ற கேள்விகளும் எனக்கு இருந்தன. யோசித்துப் பார்க்கும் போது இப்படி எத்தனை தவறுகளை நாம் வாழ்க்கையில் புரிந்து இருப்போம் என யோசிக்க தோன்றுகின்றது. சரியாக அடுத்த வாரமே இந்த தவறைத் திருத்துவதற்கு எனக்கு ஒரு வாய்புக் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விடயமே. சரியாக ஒரு வாரம் கழிய, இரவு 8 மணிக்கு என் மகளை அவள் தோழி வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு வந்து கொண்டு இருந்தேன். ஒரு வீதியில் இருந்து மறு வீதிக்கு திரும்ப எத்தனித்த போது, 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பாதசாரிக் கடவையில் நடந்து தெருவைக் கடந்து வந்து கொண்டு இருந்தான். உடலில் மேற்சட்டை எதுவும் இல்லை. பிஜாமாவுக்கு வரும் காற்சட்டை மட்டும் அணிந்து இருந்தான். குளிர் -20 C (மறை 20) ஆள் தள்ளாடி தள்ளாடித்தான் தெருவைக் கடக்க முயன்றான். அவன் பாதசாரிக் கடவையை கடக்காமல் நடு வீதியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று விட்டு நகர்ந்தான். போதையில் இருக்கின்றான் எனப் புரிந்தது. இங்கு கஞ்சாவை சட்ட ரீதியாக்கிய பின் இவ்வாறு தள்ளாடும் பல இளைஞய வயதினரை அடிக்கடி காண்கின்றேன். நான் Bluetooth இன் மூலம் காரை connect பண்ணி இருந்தமையால், உடனடியாக Call emergency என்று கூறி, 911 இற்கு அழைத்து "இந்தக் குளிரில் ஒரு இளைஞன் மேற்சட்டை இல்லாமல் வீதியில் நிற்கின்றான் " என்ற தகவலை கூற, அவர்கள் தாம் உடனடியாக அங்கு ஆட்களை அனுப்புவதாக உத்தரவாதம் தந்து, என் நம்பரையும் வாங்கி குறித்து கொண்டார்கள். மனசு கொஞ்சம் ஆறுதலடைந்தது. இந்தப் பழக்கம் எனக்கும் உள்ளது. முக்கியமாக என் 17 வயது மகன் காரை ஓட்டும் போது.
  6. அந்தக் கண்கள் *************************** அவருக்கும் எனக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தன. எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன அந்த யுகங்களில் துயரம் ஒரு பேறாறாக பெருகி வழிந்து கொண்டு இருந்தது அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டிருந்தன. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அந்தக் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. மரணம் இரண்டு கைகளையும் விரித்து அரவணைக்க ஆயத்தமானது, நாசிகளில் மரணத்தின் வாசனை. . ************************* எனக்கு பொதுவாக கடைகளுக்கோ அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ செல்லும் போது தனிய போவது பிடிக்காது, மனைவியுடன் அனேகமான நாட்கள் போவது. சில நாட்களில் மகளுடன் போவதுண்டு. மனைவி பக்கத்தில் இருக்கும் கடை என்றாலும் எனக்கு ஒரு 'சிண்' வேண்டும், கதைத்துக் கொண்டு போக. மனைவி பக்கத்தில் இருந்தால், "அந்தக் கார் உங்கள் முன்னுக்கு பிரேக் அடிக்கின்றான்.. காரை ஸ்லோ பண்ணுங்களன்.." என்றோ அல்லது "தூரத்தில் ஒருவர் ரோட்டை க்ரோஸ் பண்ணுகின்றார் கவனம் என்றோ " சொல்வதும் அதற்கு நான் "16 வருசமா ஒரு Traffic டிக்கெட்டும் எடுக்காமல் கனடாவில் கார் ஓடுறன். இப்படி பக்கத்தில் இருந்து கொண்டு எனக்கு படிப்பிக்க வேண்டாம்." என்று பதில் சொல்வதும் நடக்கும். பெண்கள் எப்பவும் பெண்களாக இருப்பது போன்றுதானே ஆண்கள் எப்பவும் ஆண்களாவே இருக்கின்றோம். சில விடயங்களை எப்பவும் மாற்ற முடியாது. ஆனால் அவ்வாறு அன்று அவர் சொன்னதால் தான் என் வாழ்வின் மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இல்லாவிடின் விசரனாக தான் மாறியிருப்பேன். அன்றும் அப்படித்தான் டிசம்பர் மாதம். பனிவிழும் காலம் ஆரம்பித்து இருந்தது. இரவு 8 மணி. சாலைகளில் பனி ஈரத்தில் மினுங்கும் மின் விளக்குகளின் நிழல்களை மீறி இருள் கவிண்டு கிடந்திருந்தது. பனி மூட்டமும், இருளும், இலேசாக தூறும் உறை பனி மழையும் என அந்த இரவு வெளிச்சம் குறைந்த இரவாக இருந்தது. தமிழ் கடைக்காரர் கொஞ்சம் முந்தி தான் தொலைபேசி அழைப்பு எடுத்து "அண்ணை ஊசிக் கணவாய் வந்திருக்கு...வந்து வாங்க போறியளோ..நாளைக்கு காலம நீங்கள் வாறதுக்கு முன் முடிந்து விடும்" என்று சொல்லியிருந்தார். ஊசிக் கணவாய் என்ற சொல்லை கேட்டாலே எனக்கு வாய் ஊறும். நல்ல உறைப்பாக, கொஞ்சம் தேங்காய்ப்பால் போட்டு, கறி வைச்சு சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். அதுவும் சில ஊசிக்கணவாய்கள் பிஞ்சில பழுத்த மாதிரி, சரியாக வளற முன்னரே வயிற்றில் முட்டையை வாங்கியிருக்கும். அந்த முட்டைகளின் ருசி தனி ருசி! மெல்லிய பனி விழும் இரவின் அழகை ரசித்தவாறு, பின்னனியில் எப்பவும் இசைக்கும் இளையராஜாவின் பாடலைக் கேட்டவாறு, 80 கிலோ மீற்றர் வேகம் அனுமதிக்கப்பட்ட சாலையில் 85 கிலோ மீற்றர் வேகத்தில் , மனைவியுடன் சந்தோசமாக கதைத்து சிரித்துக் கொண்டு ஊசிக் கணவாயை வாங்குவதற்காக சென்று கொண்டு இருக்கின்றேன்.... தூரத்தில் ஒரு கார் எமர்ஜென்சி விளக்குகளை போட்டவாறு வீதியின் கரையில் நிறுத்தி இருப்பது தெரிந்தது. குளிர் காலம் வந்தவுடன் இப்படி கார்கள் இடைக்கிடை வேலை செய்யாமல் வீதி ஓரங்களில் நின்று விடும். அனேகமாக பற்றரி போயிருக்கும் அல்லது போனில் கதைப்பதற்காக நிறுத்தி வைத்து இருப்பர். நான் தொடர்து காரை செலுத்துகின்றேன். திடீரென்று... மனைவி "ஐயோ.... நடு றோட்டில் ஒருவன் நிற்கின்றான்... நிற்பாட்டுங்கோ" என்று அலறினார். 85 கிலோ மீற்றர் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டு வந்த நான், மனைவி போட்ட கூச்சலில் சடுதியாக தன்னிச்சையாகவே ப்ரேக்கினை போடுகின்றேன். என் கார், ஒரு சில மீற்றர்கள் ஓடி, தன்னால் முடியுமானளவுக்கு வேகத்தை சடுதியாக குறைத்து, முற்றாக நின்ற போது எனக்கும் அந்த நபருக்கும் இடையில் இரண்டு அடிகள் மட்டுமே இருந்தன. அவர் எந்தச் சலனமும் இன்றி, நடு வீதியில், என் கார் வந்த திசையில், என்னை பார்த்தாவாறு நின்று கொண்டு இருந்தார். வேகமாக வரும் ஒரு வாகனத்துக்காக வந்தவுடன் மோதி உடலை சிதைக்க வைக்க வேண்டும் என்பதற்காக மோதித் தள்ளினால் மரணம் கட்டாயம் நிகழ்வதற்காக நின்று கொண்டு என் கண்களை ஊடறுத்து பார்க்கின்றார். எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் சில யுகங்கள் நீண்டு பரவிக் கிடந்தன... அந்த யுகங்களில் துயரம் பல பேறாறுகளாக பெருகி கொண்டு இருந்தன.. அந்த துயரை, ஆற்றா மனவலியை, அடக்க முடியாத சோகத்தை, வாழ்வு மீதான அவ நம்பிக்கையை இரண்டு கண்களும் கசிய விட்டுக் கொண்டு இருந்தன.. அந்தக் கண்களை நான் இரண்டடி தூரத்தில் கண்டேன். அவை என்னிடம் தன் மரணத்தை யாசித்துக் கொண்டு இருந்தன. அவை வாழ்வை தன்னிடம் இருந்து பிய்த்து எறியும் ஒரு தருணத்துக்காக காத்துக் கிடந்தன. என்னை கொன்று விட்டு போ என்று இறைஞ்சிக் கொண்டு இருந்தன... அவர் ஆறடிக்கும் மேல் உயரம். சிறு தாடி, 35 வயதுக்குள் இருப்பார், அரேபியராகவோ அல்லது ஐரோப்பியராகவோ இருக்கலாம். ஒரு சில வினாடிகளுக்குள் நிகழ்ந்த பேரதிர்ச்சியில் என் முழு உடலும் நடுங்கிக் கொண்டு இருக்கின்றது நான் சடுதியாக ப்ரேக் போட்டு நிறுத்தியதால் என் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனம் என் காரை முட்டி மோதுவதை தவிர்ப்பதற்காக கடும் பிரயத்தனப்பட்டு கொண்டு இருந்ததை கண்டவுடன்,ப்ரேக்கில் இருந்து காலை எடுத்து வேகமாக அடுத்த லேனுக்குள் விட்டேன். பின்னால் வந்த வாகனமும் ஒருவாறு அவ் நபரை இடிக்காமல் நகர்ந்தது. என் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் சோர்வாக தெரிந்தன. அழ வேண்டும் போலவும் இருந்தது. நெஞ்சு அடைத்துப் போய் விட்டது. அடைபட்ட நெஞ்சில் இருந்து விடுபட்ட மூச்சு பெரு மூச்சாக வெளியே வந்தது. சில நூறு மீட்டர்கள் காரைச் செலுத்திய பின் தான் என்ன நிகழ்ந்தது என்பதை மனம் மீட்டிப் பார்க்க தொடங்கியது. "மோட்டு மனுசன்.. இந்த இரவில் றோட்டை க்ரொஸ் பண்ணுகின்றார்" என்று மனைவி சொன்னார். "இல்லை...அவர் என் காரின் திசையில் உடலைக் காட்டியவாறு நின்றவர்... தற்கொலைக்கு முயன்று இருக்கின்றார்" என்றேன். அப்பதான் இன்னொன்றும் உறைத்தது. அந்த எமர்ஜென்சி போட்ட கார் அவருடையதாகவே இருக்கும். காரைச் செலுத்திக் கொண்டு வந்தவர் ஏதோ ஒரு கணத்தில் தற்கொலையை நாடியிருக்கின்றார். ஒரு புள்ளியில் மரணமே தனக்கு தீர்வு என்று நம்பியிருக்கின்றார்.ஏதாவது வாகனத்தில் அடிபட்டு செத்துப் போவோம் என்று நினைத்து இருக்கின்றார். என்மனைவியின் அலறல் அவரது மரணத்தை தள்ளி வைத்து விட்டது. பிறகு, நான் கடைக்கு போய் கணவாயை வாங்கிவிட்டு வெளியே வந்து காரில் ஏறியபின்... மனைவிக்கு "கவி, எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி இருக்கு... திருப்பி அதே வீதியால் போய் பார்க்க போகின்றேன்.. அவருக்கு என்ன நடந்தது என்று அறியாவிடின் என்னால் கன நாட்களுக்கு நித்திரை கொள்ள முடியாது " என்றேன். அவரும் "சரி.. மனசுக்கு மாதிரி இருக்கு என்றால் போய் பார்ப்பம்" என்றார் மீண்டும் அவ் வழியால் திரும்பி செல்லும் திசையில் சென்ற போது, அவர் நின்ற அதே இடத்தில், வீதி ஓரம் மூன்று பொலிஸ் கார்கள் வரிசையாக நின்று கொண்டு இருக்கின்றதை காண்கின்றேன். அந்த மூன்று கார்களும் அந்த எமர்ஜென்ஸி விளக்குகள் போட்டு நிறுத்தி இருந்த, நான் முன்னர் குறிப்பிட்ட அந்த காரை சுற்றித்தான் நின்றன. நான் அடுத்த சந்தியில் ஒரு யூ ரேர்ன் போட்டு, அந்த பொலிஸ் கார்கள் நிற்கும் இடத்துக்கு வந்து காரை நிறுத்தி விட்டு, மனைவிக்கு "என்ன நடந்தது என்று போய் கேட்க போகின்றேன்" என்றேன். "பயமில்லையா... உங்களை சந்தேகப்பட்டால்" என்று கேட்கின்றார். "இல்லை,... எனக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டும்" என்று விட்டு இறங்கி பொலிஸ்காரர்கள் நின்ற திசையில் நடந்து அவர்களருகில் செல்லும் போது, அவர்களில் இருந்த மூன்று பேர் என்னை நோக்கி வந்து "என்ன விடயம்" என்று கேட்டார்கள். நான் "10 நிமிடங்களுக்கு முன் இதே இடத்தில், இதே வீதியில், ஒருவர் என் காரின் முன் நின்று தற்கொலைக்கு முயன்றார்... அவர் அநேகமாக இந்த காரில் தான் வந்திருப்பார்" என்றேன். அவர்கள் ஆங்கிலத்தில் "dont worry... we are taking care of him now (கவலைப்படாதே நாங்கள் அவரை கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் இப்ப) " என்றனர். அவர்களில் ஒரு இளம்பெண் பொலிசாரும் இருந்தார். நான் அவரிடம் "Did he try to commit suicide" என்று கேட்க "Yes he was" என்று அழகான முகத்தில் ஒரு புன்னகையை தவழ விட்டவாறு சொன்னார். என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவரோ அல்லது அதன் பின்னால் வந்தவரோ 911 இற்கு அடித்து பொலிசாருக்கு தகவல் சொல்லியிருக்கினம். அவர்கள் ஓடி வந்து ஆளை மீட்டு இருக்கினம். யோசித்துப் பார்த்தால், நானும் 911 இற்கு அடித்து உடனே சொல்லி அவர் உயிரை காப்பாற்ற முயன்று இருக்க வேண்டும். நிகழ்வு தந்த பதட்டத்தில் புத்தி எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்னொருவர் அந்த கடமையை செய்து இருக்கின்றார். இது நிகழ்ந்து ஒரு வாரம் போன பின்னும் காரை செலுத்த தொடங்கும் நேரம் எல்லாம் எனக்குள் சிறு பதட்டம் வந்து போகும். அதுவும் அதே வீதியால் போகும் போது உடலில் நடுக்கம் ஏற்படும் இப்ப அப்படி வருவதில்லை...ஆயினும் அந்தக் கண்கள் மட்டும் எப்ப நினைத்தாலும் மனசுக்குள் அப்படியே வந்து போகும். இனி என்னால் ஒரு போதுமே அந்தக் கண்களை மறக்க முடியாது!
  7. என்ன செய்வது, இப்படி தடக்கு பட்டு விழுந்து விழுந்து விழுப்புண்கள் நிறைய வாங்கினாலும், இந்த மனசு மட்டும் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றது..!😂 மனைவியின் இரண்டு சகோதரிகள் உட்பட எல்லாரும் கனடாவில் தான் உள்ளனர் என்பதால், ஊருக்கு போகும் போதோ அல்லது சென்னைக்கு போகும் போதோ குடும்பமாக செல்வதில்லை. அத்துடன் டிக்கெட் செலவில் இருந்து அங்கு தங்கும் செலவு வரை அதிகம் (உறவுகளின் வீடுகளில் தங்குவதில்லை). ... ஆனால் Dominican Republic/ Punta Cana போன்ற கரீபியன் நாடுகளுக்கு குடும்பமாகவே செல்வோம்.. நல்லா வந்துள்ளது. படத்தை சேமித்து வைத்து விட்டேன். மிக்க நன்றி கட்டை வேகும் வரைக்கு மறக்க முடியாத அனுபவம் தான் இது.😄 ஹி ஹி
  8. நல்லதொரு கருத்தை முன்வைத்து ஆக்கம் எழுதியுள்ளீர்கள். இன்றுதான் வாசிக்க நேரம் கிடைத்தது. எனக்கு மன நலம் பாதிக்கப்பட்ட சிலருடன் பழகவும், அவர்களை வைத்து சில நாட்களுக்கு பராமரிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. அதே நேரத்தில் அவர்களை அவர்களின் குடும்பம் எவ்வாறு நோக்கியது என்பதை உணரவும் முடிந்தது. என் அப்பா தனக்கு புற்று நோய் வந்துவிட்டது, இறப்பதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன என அறிந்த போதும் கொடுத்த சிகிச்சைகளாலும், மன நலம் பாதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் மிகவும் கஷ்டப்பட்டார். என்னுடைய இங்குள்ள ஒரு இந்திய நண்பரின் மனைவி மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தார். ஆனால் நண்பர் இதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு வீட்டிலேயே வைத்திருக்க, அவர் மனைவி தன் 2 வயது குழந்தையை கொல்லும் நிலைக்கு சென்று, ஈற்றில் பொலிஸ் தலையிட்டு சிகிச்சைக்கு போக வேண்டி வந்தது.
  9. தொடருங்கள் சுவி அண்ணா ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? கதை ஊரிலா நிகழ்கின்றது?
  10. வரலாற்றின் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ரீஷேர்ட் இது தான்.
  11. - மிகுதி: சரி, விமானம் புறப்படுவதற்கு இன்னும் 2 மணித்தியாலங்கள் உள்ளன. அதற்கிடையில் டுயூட்டி ப்றி (Duty Free) கடை ஒன்றில் நல்ல உடுப்பாக வாங்கி ஜம் மென்று போகலாம் என தீர்மானித்துக் கொண்டேன். புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, சூப்பராக இருக்க வேண்டும். புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட அழகாக தோன்ற வேண்டும் புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, பார்த்தவுடன் இவன் கனடா போன்ற முன்னேறிய நாட்டில் வாழ்பவன், முற்போக்கு வாதி, அறிவானவன் ஆழமானவன், அசராதவன் என்றெல்லாம் மற்றவருக்கு தோன்ற வேண்டும். விமானத்துக்கான காத்திருப்பு அறையை விட்டு, மேல் மாடியில் உள்ள டுயூட்டி ப்றி கடைக்கு செல்ல எஸ்கலேட்டரில் (Escalator) ஏறினேன். சின்ன குழந்தை சுச்சா போன மாதிரி, என் ரீஷேர்ட் எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து சிலர் தமக்குள் சிரித்த மாதிரி தோன்றியது (நல்ல வேளை அணிந்திருந்த டெனிம் காற்சட்டை ஈரமாக தோன்றவில்லை) அதுக்குள் ஒருவர் எஸ்கலேட்டரில் (Escalator) எப்படி இறங்குவது என்று தெரியாமல், ஒரு காலை மேல் படியில் வைத்தவாறு எஸ்கலேட்டரினை கட்டிப் பிடித்தபடி இறங்க முற்பட. அவர் கால்கள் இரண்டும் பப்பரப்பாய் என்று விரிந்து தடுமாறி முழுசிக் கொண்டு இறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து "ப்ளடி கன்றி ப்ருட் (country brute)" என் நினைத்தவாறு நமுட்டு சிரிப்புடன் மேலே ஏறினேன். முதல் பத்து கடைகளுக்குள் உள்ளே சென்று பார்த்தால், மருந்துக்கும் கூட அங்கு உடுப்புகள் விற்க இருக்கவில்லை. சரி, அது எப்படி ஒரு உடுப்புக் கடை இல்லாமல், டுயூட்டி ப்றி இருக்கும்.. கட்டாயம் கொஞ்சம் அங்கால இருக்கும் என நினைத்தவாறு எட்டி நோட்டம் இட்டால், வரிசையாக பல கடைகளில் ஆடைகள் தொங்கிக் கிடப்பது போன்று தோன்ற அவற்றை நோக்கி சென்றேன் அவை பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள். அப்படியும் இரண்டு கடைகளில் ஆண்களுக்கான உடுப்பு இருக்குது என்று சொல்ல, உள்ளே சென்று பார்த்தால், இருக்கும் ரீஷேர்ட் இல் எல்லாம் இந்தியக் கொடி வரைந்தும், ஐ ல்வ் இந்தியா (I love India) என்ற வசனங்களும் இருந்தன. ஐ லவ் சென்னை / தமிழ் நாடு என்று இருந்திருந்தால் ஒரு கேள்வியும் இல்லாமல் வாங்கி இருக்க முடியும்...ஆனால் ஒரு ஈழத்தமிழனான நான் எப்படி ஐ லவ் இந்தியா என்பதை வாங்க முடியும்? ஒரு ரீஷேர்ட் இல் ஜிகினா பட்டெல்லாம் வைத்து தைத்து இருந்து வெறுப்பேற்றினர் இன்னொரு ரீஷேர்ட் இல் சாயிபாபா சயனித்துக் கொண்டிருந்தார். இறுதியாக கடை ஒன்றில் ஒரு தொப்பி அணிந்த இஸ்லாமியரிடம் என் நிலையை சொல்லிக் கேட்க, தன்னிடம் விற்பதற்கு சில ரீஷேர்ட் உள்ளதாக கூறி ஒவ்வொன்றாக காட்ட, அவற்றிலும் ஐ லவ் இந்தியா போன்ற வாசகங்களும் இந்தியக் கொடியும் பொறிக்கப்பட்டு இருந்தன. அவர் காட்டியதில் கடைசி கடைசியாக ஒரு நீல நிற ரீஷேர்ட் சதுரங்கள் பொறிக்கப்பட்டு ஐ லவ் இந்தியா என்ற வசனம் இல்லாம் இருந்தது. இதையும் வாங்காமல் விட்டால், இனி ஒன்றும் வாய்க்காது என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து (1000 இந்திய ரூபாய்கள்!) வாங்கி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த மாதிரி சந்தோசத்துடன் அருகில் இருந்த ஆண்களுக்கான வொஷ் ரூமிற்கு (Wash Room) ஓடிச் சென்று, போட்டிருந்த ரீஷேர்ட் இனை கழற்றி குப்பை bin க்குள் திணித்து விட்டு, புது ரீஷேர்ட் இனை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். நான் கடையை விட்டு வெளியே வரவும், Gate open என தகவல் வரவும் சரியாக இருந்தது. பரபரவென ஹாண்ட் லக்கேஜ்ஜினை இழுத்துக் கொண்டு, புது ரீஷேர்ட் போட்ட தெம்பில் எல்லாரையும் ஒரு 'லெவலகாக' பார்த்துக் கொண்டு போர்டிங் பாஸைக் காட்டி விமானத்துக்குள் வந்து அமர்ந்தாயிட்டு. இடையில் ஒரு சிலர் என்னை சற்று உத்துப் பார்த்ததும் புரிந்தது. "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்தவாறு மனசு ரிலாக்ஸ் ஆனேன். விமானம் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலம் 30 நிமிடம் பறந்து Transit டான கட்டாரில் வந்திறங்கியது. கட்டாரில் இறங்கி, காலைக் கடனை முடித்து, முகத்தை நீரால் அலம்பி பிரஷ்ஷாக்கி விட்டு வர லேசாக பசித்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தால், பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல், அங்கும் இங்கும் திரியாமல், நேரடியாக காத்திருப்பு அறைக்குள் சென்றேன். அங்கு ஒரு அழகான தமிழ் இளம் பெண், கனடா பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். சரியாக அவர் பார்வை என்னில் படும் விதமாக, கதிரை சரியுதா என்று ஒருக்கால் செக் பண்ணி விட்டு போய் அமர்ந்தேன். ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தார். பின் தலையை குனிந்து விட்டு, சடுதியாக மீண்டும் நிமிர்ந்து என்னையே பல வினாடிகள் உற்றுப் பார்த்தார். உடலில் இரசாயன மாற்றம் நிகழ தொடங்கியது. ஒரு இனம்புரியாத சிரிப்புடன், சற்று ஏளனமாக சிரித்த போன்று சிரித்து விட்டு தலையை குனிந்து கொண்டார். இன்னும் ஒரு தமிழ் வயதான பெண்மணி என்னை உற்றுப் பார்ப்பதும், பின்னர் எதையோ யோசிப்பதும், மீண்டும் என்னை பார்ப்பதுமாக இருந்தார். நான் எழும்பி சற்று நடப்பம் என்று நடக்கும் போது, அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்ததை அவதானித்து விட்டு அதில் என்று என்னைப் பார்த்தேன். அந்த கண்ணாடி முன் நின்று பார்க்கும் போதுதான் அந்த ரீஷேர்ட் இல் என்ன எழுதி இருந்தார்கள் என்பதும், அந்த சதுரங்களில் என்ன பொறித்து இருந்தார்கள் என்பதும் உறைத்தது. கடும் நீல நிறம். நெஞ்சுப் பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதி இருந்தது. அந்த வரி "என் நட்சத்திரம் என்ன சொல்கின்றது (My Star Says...) என்று இருந்தது. அதன் கீழ் ஒரு சதுரப் பெட்டி அந்த சதுரப் பெட்டிக்குள் சில சின்ன சின்ன சித்திரங்கள். சதுர பெட்டியின் கீழ் இன்னொரு வரி. அந்த வரி "நான் தான் அடுத்த பில்கேட்ஸ்" (I will be the next Bill Gates ) என்று இருந்தது. சதுரத்துக்குள் இருந்த சித்திரங்கள், நான் பில்கேட்ஸ் ஆக வருவதற்கான கிரக நிலைகள். முழுக்க முழுக்க சாத்திரம் சம்பந்தமான விடயங்கள் பொறித்த ரீஷேர்ட் அது, தமிழகத்தில் இருந்து ரொரண்டோவுக்கு சாத்திரம் சொல்ல வரும் சாஸ்திரி கூட இப்படி ஒரு ரீஷேர்ட்டை அணிந்து இருக்க மாட்டார். குக்கிராமம் ஒன்றில் இருந்து வரும் பாமரர்கள் கூட இப்படி அணிந்து இருக்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்.. கொலுவில் வைத்து இருக்கும் பொம்மை கூட இதை விட நல்லா உடுப்பு போட்டு இருக்கும். அந்த இளம் பெண் பார்த்தது ஏளனப் பார்வை என்று புரிந்தது அந்த வயதான தமிழ் பெண்மணி பார்த்தது "இவரிடம் சாத்திரம் கேட்டுப் பார்ப்பமா" என நினைத்து என்பதும் புரிந்தது. அவ்வளவுதான். அப்படியே ஒதுக்கு புறமாக நின்று விட்டு, போர்டிங்க் பாஸ் இனைக் காட்டும் இடத்தில் " 2 நாட்களாக சரியாக நித்திரை கொள்ளவில்லை... எனவே ஓய்வெடுக்க கூடிய சீட் தந்தால் நல்லம்" என்று சொல்லிப் பார்க்க, அவர்கள் (சிங்கள இளைஞர்கள் தான் அங்கு வேலை செய்தனர்), உடனே விமானத்தின் ஆகக் கடைசி சீட்டை ஒதுக்கித் தந்தனர். இந்த சீட்டில் பக்கத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து வருவர். நல்ல இட வசதி கொண்ட சீட். எனக்கு பிடித்தமான சீட் அது. அன்று பக்கத்து சீட்டுக்கு ஒருவரும் வரவில்லை என்பதால் மனசுக்குள் ஒரு நிம்மதி. நல்ல வேளை ஒருவரும் இல்லை. விமானம் புறப்பட்டது 14 மணி நேரம் பறந்து விமானம் ரொரண்டோவில் தரையிறங்கியது. வேகமாக கடவுச் சீட்டை காட்டி விட்டு வெளியே வர, மனைவி என்னை பிக்கப் பண்ண மகளுடன் வந்து இருந்தார். 12 நாட்கள் என்னைக் காணததால் கட்டிப் பிடிக்க ஓடிவந்த என் மகள் அருகே வந்ததும் ஓட்ட்டத்தை நிறுத்தி, மூக்கை சுளித்து "அப்பா...உங்களில் ஏன் இப்படி புளிச்ச பால் மாதிரி Bad smell வருகுது" என்று கேட்டு விட்டு இரண்டடி தள்ளி நகர்ந்தவள் மீண்டும் என்னை பார்த்து " Why you are wearing such an ugly T Shirt" எனக் கேட்டாள் ---------------------------- யாவும் மெய் - மெய்யைத் தவிர வேறோன்றுமில்லை பராபரமே
  12. இதுக்கு என்ன தலைப்பு வைப்பது என்று சற்றுக் குழம்பித்தான் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். இப்ப பார்க்கும் போது 'அழகன்டா நீ' என்ற தலைப்பு நன்றாக பொருந்துகின்றது. உண்மைதான்... வழக்கமாக செய்யும் ஒன்றை எப்ப நாங்கள் மறந்து விடுகின்றோ அன்று தான் ஆப்பு ரெடியாகி இருக்கும்.
  13. கோப்பி என்னை குளிப்பாட்டிய பின் நான் பட்ட பாட்டை இனித்தான் எழுதப் போகின்றேன். வெறும் கோப்பியில் கோப்பி மணம் மட்டும் தான் வரும். இது பால் கோப்பி என்பதால், நேரம் செல்ல செல்ல பால் புளித்து பழைய கள் மாதிரி நாற்றமெடுக்க தொடங்கும். அப்படி நாற்றம் எடுத்தவாறு எப்படி பயணிப்பது என்று நான் பட்ட பாடு. நல்ல வேளை யாரும் அந்தக் கோலத்தில் படம் எடுக்கவில்லை. அல்லது, யார் கண்டார் சிசி டிவியில் முழு பால்கோப்பி அபிஷேகமும் ரெக்கோர்ட் ஆகி, அதை எத்தனை பேர் பார்த்து சிரித்தார்களோ...! பொத்தீஸில் மனைவிக்கும், மகளுக்கும் சாறிகளும் லஹங்கா களும் வாங்கி, அதில் விலை கூடிய இரண்டை மட்டும் எடுத்து ஹாண்ட் லக்கேஜில் வைத்து இருந்தேன். நான் பயணம் செய்த காலம், விமானப் பயணத்தில் பயணப் பைகள் அதிகமாக தொலைந்து கொண்டிருந்த காலம் என்பதால் (கொவிட் காலத்தின் பின் ஏற்பட்ட பணியாளர்கள் குறைவு பிரச்சனையால்) எதுக்கும் இருக்கட்டும் என்று அவற்றை எடுத்து ஹாண்ட் லக்கேஜில் வைத்திருந்தேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.