-
Posts
14910 -
Joined
-
Days Won
166
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by நிழலி
-
தருணங்களில் வாழுங்கள் இந்த நிமிடம், இந்த வினாடி எவ்வளவு அழகானது எவ்வளவு அர்த்தமானது எவ்வளவு அரியது இது இந்த தருணம் இந்த வினாடி எமக்கு இன்னொருக்கா வரும் என்பது என்ன நிச்சயம் வாழுங்கள்...ஒவ்வொரு தருணங்களிலும்... முதுகு நோகும் தனி மனித கொள்கைகள் வேண்டாம் எவருடனும் ஆத்திரம் வேண்டாம் ஒரு அன்பு மிக்க சொல்லுக்காக பல இலட்சம் மானுடர்கள் காத்திருக்கின்றனர் என்று புரிந்து கொள்ளுங்கள் உங்களை எவர் புறக்கணிப்பினும் அன்புக்காக தவமிருக்கும் இதயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் ஒரு அன்புச் சொல்லுக்காக காத்தி...
-
குளிரின் சில்லிடலில் கட்டுண்டு கிடைக்கையில் வரும் கதகதப்பு ஆயிரம் மன்மத யானைகளை ஏவிவிடும்
-
தமீழத்திற்கான விடுதலைப் போரில் கொல்லப்பட்ட தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், அனைத்து விடுதலைப் புலிப் போராளிகளுக்கும், தாயக விடுதலைக்காக தம் உயிரை கொடுத்த ஏனைய இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.
-
காதல், காமம் எல்லாவற்றையும் கடந்து கை கோர்த்து, ஒருவரின் ஒருவர் கைகளை பற்றி 80 வயதில் நடக்கும் தம்பதிகள் ஒவ்வொருவரும் காலத்தினையும் உணர்வினையும் வென்றவர்கள்
-
முதலாளியின் கீழ் வேலை செய்கின்றீர்கள் என்றால் வாலாட்டப் பழகுங்கள்.. நீங்கள் முதலாளி என்றால் குரைக்கப் பழகுங்கள்
-
ஒன்றில் உண்மை அல்லது பொய். இன்றைய பொய் நாளைக்கு உண்மையாகலாம், இன்றைய உண்மை நாளைக்கு பொய் ஆகலாம். ஆனால் ஒரு விடயம் ஒரே நேரத்தில் உண்மையாகவும் பொய்யாகவும் இருக்க முடியாது.
-
எல்லா மதங்களும் சொல்வது தம் மதத்தினரை மட்டும் போற்றுக என்று எனும் போது மதங்களினூடு மானுட விடுதலை ஏது?
-
குழாப்புட்டு நல்லதா அல்லது நீத்துப் பெட்டி புட்டு நல்லதா...?
-
கூதலின் போது கூடுவதே பேரின்பம்..
-
ஒவ்வொரு வருடமும் முருகப் பெருமான் கலியாணம் முடிக்கின்றார் ஒவ்வொரு வருடமும் Original தலையை சிவன் துண்டிக்க யானைத் தலையை பிள்ளையார் பெறுகின்றார் ஒவ்வொரு வருடமும் நபிகளின் பிறந்த தினமாக மீலாது நாள் வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இயேசு பிறக்கின்றார் மரிக்கின்றார். ஒவ்வொரு வருடமும் மனுசக் குட்டிகள் பிறக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மனுசர்கள் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், வக்கிரங்கள் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு வருடமும் கோவிலிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிகளிலும் பூசைக...
-
மேகங்களுடன் மேகங்களாக பறக்கின்றேன்...மோகித்து சுகித்து மோனத் தவம் கொண்டு உன்னை தழுவுகின்றேன்..
-
தமிழீழ விடுதலைத் தீயில் தம்மை ஆகுதியாக்கிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், அனைத்து விடுதலைப் புலிப் போராளிகளுக்கும், இதே உயரிய நோக்கத்திற்காக தம் உயிரைக் கொடுத்த ஏனைய இயக்க போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலியும் வீர வணக்கங்களும். ஒவ்வொரு மாவீரர் நாளிலும் மீண்டும் மீண்டும் முடிவெடுப்போம்: இனி எக்காலத்திலும் சின்னஞ் சிறிய தேசிய இனமாகிய நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று.
-
பரமசிவன் Neck இல் இருந்து Snake கேட்டது கருடா How Are You?
-
அளவான பணமே சொர்க்கம்..
-
பேசாமல் மாடு மேய்க்க பழகியிருக்கலாம்.. பாலைக் குடித்து தயிர் சாப்பிட்டு சந்தோசமாக இருந்திருக்கலாம்
-
..நேற்று மீண்டும் வருவதில்லை,
-
அஞ்சலி, வீரவணக்கம், மாவீரர் வணக்கம் என்பது எல்லாம் வெறுமனே வியாபாரமாகவும் சம்பிரதாயமாகவும் போய் விட்ட காலம் ஒன்றில் May 18 இனை மெளனமாக கடந்து போகின்றேன்
-
ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும், மகிந்தவும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை: "எங்கோ வாசித்தது"