-
Posts
66935 -
Joined
-
Days Won
613
தமிழ் சிறி last won the day on June 27
தமிழ் சிறி had the most liked content!
About தமிழ் சிறி
- Birthday 02/21/2008
Profile Information
-
Gender
Male
-
Location
தூணிலும்,துரும்பிலும்.
-
Interests
இலையான் அடிப்பது.
Recent Profile Visitors
61845 profile views
தமிழ் சிறி's Achievements
-
சுவைப்பிரியன், சத்தம் எழுப்பும் கருவியை… காரின் எஞ்சின் பகுதிக்குள்தான் வைப்பார்கள். அதனால்…. வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு, பாதிப்பு ஏற்படும் என நினைக்கவில்லை. அப்படி பாதிப்பு ஏற்படுத்தும் கருவியாக இருந்தால்…. ஆரம்பக் கட்ட பரிசோதனையிலேயே, அதனை தடை செய்திருப்பார்கள்.
-
சலசலப்பு, சேதாரம் இல்லாமல்… பாய வேணும். ஓரு சின்ன அசுமாத்தம் கேட்டாலும்… ஊரே திரண்டு, உய்யலாலா பாடும்.
-
அதுகும்…. கருக்கு மட்டை வேலி.
-
எந்த ஆண்டில் எந்தப் பெயரில் பிறந்தநாள் விழா கொண்டாடலாம்..?
தமிழ் சிறி replied to Paanch's topic in இனிய பொழுது
நான்… யாழ் களத்தில் இணைந்து, இந்த வருடத்தில் “தந்த விழா” நடக்கிறது. -
கன்னில் தூசி விலுந்தால்... என்ன செய்யலாம்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ் சிறி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
#ரியாரின், சுயமரியாதை இயக்க தொண்டர்கள்... தூக்கி இருப்பார்கள். ஹா...ஹா...ஹா.... அவை நீக்க முதல்... காணொளியை கேட்டு, மனப்பாடம் பண்ணி வைச்சிட்டம். -
இந்த மரநாய், ஜேர்மனியில்... ஒவ்வொரு வருடமும், சராசரியாக 200,000 வாகனங்களை சேதமாக்கி, 65 மில்லியன் ஐரோ பணத்திற்கு நட்டம் ஏற்படுத்துகின்றது. எனது காரின்... குளிர்சாதன குழாய் ஒன்றை கடித்த பின், அது காருக்கு கிட்ட வராமல் இருக்க... மனிதருக்கு கேட்காத, அதி கூடிய ஒலி எழுப்பும்... ஒரு சென்சார் கருவியை பொருத்திய பின் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.
-
அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?
தமிழ் சிறி replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அமெரிக்காவில் லொறி ஒன்றிலிருந்து 46 சடலங்கள் கண்டெடுப்பு! அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நேரப்படி, திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லொறிரியிலிருந்து அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பொலிஸார், கண்டேய்னர் லொறியை திறந்து பார்த்தபோது, அங்கே 46 பேர் சடலங்களாகக் கிடந்தனர். 16 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 16 பேரில் 12 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகள் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 சக்கரம் கொண்ட அந்த கண்டெய்னர் லொறி மூலம், வெளிநாடு தப்ப நினைத்த 100 இற்கும் மேற்பட்ட அகதிகள், கண்டெய்னருக்குள் காற்று இல்லாமை மற்றும் வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்குள் அகதிகளாக வந்து, அங்கிருந்து வெளிநாடுகளுக்குத் தப்ப முயல்பவர்கள், இதுபோன்று உயிரிழக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1288800 -
அணு ஆயுத திறன் கொண்ட... ஏவுகணைகளை, பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவை மெஸ்கோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். லித்துவேனியா, போலந்து ஆகிய அண்டை நாடுகள் தனக்கு எதிராக மோதல் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக லுகசென்கோ தெரிவித்திருந்தார். இந்தநிலையிலேயே அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக புட்டின் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288789
-
இலங்கையின்... ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு, உதவ தீர்மானித்தது சீனா! சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங்கை ஏற்றுமதி பொருட்களுக்கான காட்சியகங்களை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள், இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனாவிடம் உறுதியளித்துள்ளனர். இந்த விற்பனை காட்சியகங்களை நடத்துவதற்கான செலவை சீனாவின் அந்தந்த மாகாணங்கள் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனது தயாரிப்புகளுக்கான சீன சந்தையை அணுகுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹோனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1288780
-
இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா! இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய அமைச்சர் ஜூரிக்கு விளக்கமளித்துள்ளார். தற்போது இலங்கைக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2022/1288768
-
அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த... மேலும், 47 பேர் கைது சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். https://athavannews.com/2022/1288764