Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76589
  • Joined

  • Days Won

    766

Everything posted by தமிழ் சிறி

  1. இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள், வல்வைலிங்கம்.
  2. வணக்கம் தமிழரசு. உங்களின் அவதார் படத்தைப் பார்த்தவுடன் சங்கிலிய மன்னனின் ஞாபகம் வருகின்றது.

  3. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய ஈழமகள், வெண்ணிலா, தூயவன், டன் ஆகியோருக்கும். இன்று பிறந்தநாள் கொண்டாடும்.... கிளியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தினமும் 20 பதிவாவது எழுதும் வெண்ணிலா ஏன் திடீரென்று காணாமல் போனார் என்று, இன்னும் புரியவில்லை?
  4. 5,6 அமைச்சர்களைத் தவிர, மற்றையோர் புதிய முகங்களாக உள்ளார்கள். பழம் தின்று கொட்டை போட்டவர்களிடம், பொறுப்பை கொடுப்பதை விட புதியவர்களிடம் பொறுப்பை கொடுப்பது நல்ல அணுகு முறையாக உள்ளது.
  5. அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31 சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்): அதிமுக- (160)- 150 தேமுதிக-(41)- 28 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09 இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08 மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02 புதிய தமிழகம்- (03)- 02 கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01 இந்திய குடியரசு கட்சி- (01)- 01 பார்வர்டு பிளாக்- (01)- 01 சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00 திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்): திமுக- (119)- 23 காங்கிரஸ்- (63)- 05 பாமக- (30)- 03 விடுதலை சிறுத்தைகள்- (10)- 00 கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00 இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00 வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00 பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00 பாஜகவும் படுதோல்வி: 193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. -நன்றி தற்ஸ் தமிழ்-
  6. . காங். படு தோல்வி எதிரொலி-தலைவர் பதவியிலிருந்து விலகினார் தங்கபாலு சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாறிப் போய் விட்டதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தங்கபாலு. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மிரட்டி, உருட்டி, விரட்டி 63 தொகுதிகளை சப்ஜாடாக வாங்கிய காங்கிரஸ் கட்சி, உட்கட்சிப் பூசல், ஒருவரை ஒருவர் காலை வாரி விடுவது, போட்டி வேட்பாளர்கள், துரோகம், முதுகில் குத்துவது, ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படு தோல்வியைச் சந்தித்துள்ளது. வெறும் 5 தொகுதிகளில் மட்டும் இக்கட்சி வெற்றி பெற்றது. அதை விட கேவலமாக கட்சித் தலைவர் தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் படு தோல்வியைச் சந்தித்துள்ளார். கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தங்கபாலு செய்த மோசடித் தனம், வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களிடம் காசு வாங்கி விட்டதாக எழுந்த புகார்கள் போன்றவை காரணமாக தங்கபாலு மீது காங்கிரஸார் கடும் காட்டத்துடன் இருந்தனர். தற்போது காங்கிரஸ் கட்சி கேவலமாக தோற்றுப் போய் விட்டதால் தங்கபாலு டீசன்ட்டாக பதவி விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தேர்தலில் பெற்ற முடிவுகளுக்குப் பொறுப்பேற்று நான் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பவுள்ளேன் என்றார். காங்கிரஸ் மேலிடம் தன் மீது கை வைப்பதற்கு முன்பு தானே விலகி விடுவது நல்லது என்று நினைத்தே தங்கபாலு இந்த முடிவை அறிவித்திருப்பதாக தெரிகிறது. -நன்றி தற்ஸ் தமிழ்-
  7. அவர் இப்பவும்... தி.மு.க. வின் இளைஞர் அணியின் தலைவர் தானே..... கருணாநிதி தள்ளுற வண்டியில், தானைத் தலவராக இருக்கும் போது.... ஸ்டாலின் இளைஞராக இருப்பதில் என்ன குற்றம்.
  8. இப்படித்தான்.... கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வைகோவிற்க்கும் தோல்வி ஏற்பட வைத்தார்கள். சரி போகுது..... ஸ்டாலின் சின்னப் பொடியன் தானே....., சட்ட சபைக்கு போக விடுங்கப்பா.... தகப்பன் கருணாநிதி வென்றாலும், முதலைமச்சர் ஜெயலலிதா உள்ள சட்ட சபைக்கு போகும் பழக்கம் இதுவரை இருந்ததில்லையே.... இப்ப... எதிர்க்கட்சித் தலைவர் சான்ஸும் இல்லாமல், பின் வாங்கிலை குந்தியிருந்து... என்னத்தை செய்யப் போறார்.
  9. சுபத்திரன், நீங்கள், டங்குவாரின் ஆளா..... வாங்கோ... உங்களுக்கு இருக்கு கச்சேரி.
  10. . ஈழத்திற்கும், தமிழர் நாட்டு உறவுகளுக்கும்.... பெரிய, கை கொடுக்கும் தோழர் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தோழர் புரட்சிக்கு எனது பிறந்த நாள் பரிசாக.... ஈழத்தின் பிரியமான சாப்பாடான இடியப்பத்தை பரிசளிக்கின்றேன்.
  11. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலாமதி அக்காவுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
  12. எல்லாம், இலவசம் என்று சொல்லி.... வேலை செய்து கொண்டிருக்கும், தமிழர்களையும்.... சோம்பேறியாக்கப் போகிறார்கள். இந்த... இடைவெளியில், மற்ற மாநிலத்துக்காரன் வந்து தமிழரின் இடங்களைப் பிடித்துவிடுவான். நாம் குரல் கதற, கதற.....மேடையில் முழங்கி விட்டு..... குப்புற படுக்க வேண்டியது தான்.....
  13. தமிழகத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருந்தால் தான்...... பிழைப்பை ஓட்ட முடியும். வடிவேலு அதற்கு விதி விலக்கல்ல, மேலும் சென்ற தமிழக தேர்தல் பிரச்சாரத்தில்., வடிவேல், விஜயகாந்தை மட்டுமே... குறி வைத்துத் தாக்கினார். மறந்தும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. இதனை கருணாநிதியும் கண்டு கொள்ளவில்லை. அரசியலில், இதெல்லாம்...... சகசமப்பா....
  14. இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாழ்கள புலவர் பெருமானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
  15. ரஜனி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போதே.... தனது ஆதரவை ஜெயலலிதாவுக்கு என்று முன்பே, அறிவித்திருந்தால், கருணாநிதி படுதோல்வியை சந்திக்க வேண்டி வந்திருக்கும். அவர் கடைசி நேரத்தில் வாக்குச் சாவடியில் வைத்து.... ஜெயலலிதாவுக்கு வாக்குப் போட்டதன் மூலம் கருணாநிதிக்கு நன்மையே செய்திருக்கிறார். வாக்குச் சாவடிக்குள் புகைப்படக் காரரை ஒரு எல்லைக்கு மேல், படம் எடுக்க அனுமதித்ததற்கு அங்கு காவல் கடமையில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினரே.... பதில் சொல்ல வேண்டும். கருணாநிதியின் பேரப்பிள்ளைகளின் சினிமா ஆதிக்கத்தால்.... சினிமாத்துறையினர் கருணாநிதியின் மேல் வெறுப்பாக உள்ளதை கருணாநிதி அறியாமல் இருப்பதுதான்.... ஆச்சரியம்.
  16. காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத்தமிழனுக்கும் நன்மை செய்யாத கட்சி. தமிழக விவசாயிகளுக்கு வரும் காவிரி ஆற்றையும், முல்லைப் பெரியாறு அணையையும் மறித்து கர்நாடக மாநில அரசும், கேரள மாநில அரசும் மறித்து அணைகட்டும் போது, தட்டிக் கேட்காத காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியும் கிடைக்கப் படாது. இந்தத் தேர்தலுடன் காங்கிரஸ் திருந்த வேண்டும். அது வரை காங்கிரசுக்கு தமிழ்மண்ணில் இடம் இல்லாமல் செய்ய வேண்டும்.
  17. இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாதவூரானுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  18. சரியான விடையளித்த, தமிழினிக்கு பாராட்டுக்கள்.
  19. சுஜிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குட்டிக்கு நன்றி.
  20. இது... கருணாநிதியின் மகள் கனிமொழி. ஈழத் தமிழர் 40,000 பேர் வரையில் கொல்லப் பட்டு.... ரத்தம் காயமுதல் வந்த முதல் பேர்வழிகள். மகிந்த ராஜபக்ஸவிடம் காட்டும் .... அன்பையும், வழியும் வீணீரையும் துடைக்கத் தான் ஆள் இல்லை. மற்றும் படி.... கருணாநிதி என்பவன்..... சக்கர நாற்காலியிலை இருந்தாலும்... வாய்ப்பேச்சுக்கு குறைச்சலில்லை.
  21. ஒரு கோழி, ஒரு வருசத்துக்கு எத்தினை முட்டை இடும்?
  22. வழக்கமாக.... இந்த நேரம், யாழ்களத்துக்கு வரும் சுஜியை காணவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கிறா போலை....
  23. இன்று பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடும் சுஜிக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.