Jump to content

island

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    733
  • Joined

  • Days Won

    2

Posts posted by island

  1. 20 minutes ago, பையன்26 said:

    த‌மிழ் சிறி அண்ணா
    அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா
    அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு

    800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ

    ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது
    அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 

    பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 

  2. 11 hours ago, kalyani said:

    மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.

    ஏற்கனவே எனது ஐடியாவை சொல்லி அந்த கருத்தை  மறுதலித்த உறவை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்பதை  வாசித்து கிரகித்து  கொண்டு  பின்னர் கேள்வி கேட்க வேண்டும். 😂

    • Haha 1
  3. 21 hours ago, ஈழப்பிரியன் said:

    @ராசவன்னியன் 

    எப்படி சார் இருக்கிறீர்கள்? வெள்ளத்தால் உங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்புகள்?

    கவனமாக இருங்கள்.

    துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 

    • Haha 1
  4. எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video 

     

  5. @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன். 

     

    பி. கு அனுமதி பெறாமலே😂

    • Like 1
    • Thanks 1
  6. 5 hours ago, குமாரசாமி said:

    எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே.

    தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம்.

    இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன்.


    இப்போது அதுவல்ல பிரச்சனை.

    தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்...
    வெட்டுறம்...
    கொத்துறம்.....
    அடிக்கிறம்...
    வெட்டி
    தாக்கிறம்...
    புடுங்குறம்...
    பொங்கிறம்..
    படைக்கிறம்...
    எங்கடை...
    உரிமைகளை..
    வெண்டெடுக்கிறம்...
    அமெரிக்கவோட...
    கதைக்கிறம்...
    லண்டனோடை...
    கதைக்கிறம்...
    குயின்னோடை ...
    கதைக்கிறம்...
    ஐரோப்பாவோடை...
    கதைக்கிறம்....

    என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள்.

    வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள்.

    தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.

    அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை  இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி  என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா? 

  7. பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 

  8. சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 

  9. மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 

    On 15/4/2024 at 02:34, ஈழப்பிரியன் said:

    நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்

    கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 

    • Thanks 1
  10. 1 hour ago, ரஞ்சித் said:

    அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். 

    தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள்,  ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்? 

    எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! 

     

    6 hours ago, குமாரசாமி said:

    அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒவ்வொரு அரசவையிலும் தமிழ் உயர் அதிகாரிகளும்,அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.
    இன ரீதியாக ஏதாவது நல்ல விடயங்கள் நடந்ததா? அல்லது முன்னேற்பாடுகள் ஏதாவது எடுக்கப்பட்டதா?
    அண்மையில் கூட

    அல்லது நீங்கள்  கூறலாமே!   

    • Like 1
  11. நிச்சயமாக இவை இரண்டும் ஒன்றல்ல. திட்டமிட்ட குடியேற்றங்களும்  கொழும்பு போன்ற Metropole city ஐ  நோக்கிய தமிழரின் குடிப்பரம்பலும் ஒன்றல்ல.

    ஆனால்,  இவற்றை  தடுத்திருக்க  அல்லது  தமிழரின் இனப்பரம்பலை வட கிழக்குப் பிரதேசங்களில்  அதிகரித்திருத்து இதன் ஈடு செய்திருக்கக் கூடிய  அரசியல் தீர்வை பெற கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமக்கே உரி ய பாணியில் தவறவிட்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.  தற்போதைய எமது நிலையில் எமக்கு  சாத்தியமானவற்றை பெற தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் ஒன்றாக இணைந்து முயற்சிப்பது ஒரு வழி  (ஒருவருக்கொருவர் துரோகி பட்டங்களை வழங்குவதன் மூலம் தம்மை புனிதராக காட்ட  விளையும் மூடத்தனமான அரசியல் செய்வதை விடுத்து)  

    அல்லது,  தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட,  துணிச்சல்  கொண்ட  இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம்  மக்களைப் போல்)  அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின்  குடிப்பரம்பலை  வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க  முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக்  கொள்ளலாம். அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள்  என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால்,   இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால்   இலங்கையில் தமிழரின் அரசியல் பலம் இன்னும் இப்போதிருப்பதை விட இன்னும்  மோசமாகும் ஆபத்து கண்முன்னே தெரிகிறது.   ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம். 

    • Confused 1
  12. 3 minutes ago, விசுகு said:

    நீங்கள் அம்பை நேரே பெயர் சொல்லி எழுதும் போது பார்க்கலாம்.

    விசுகு, நான் உங்களை சொன்னதாக தவறாக விளங்கி விட்டார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதற்கு எனது எழுத்தின் தெளிவின்மை  காரணம் என்றால்  மன்னித்தருள்க. 

    நான்  கூறியது எமது அரசியல்வாதிகளின் அரசியல் அவ்வாறு தான் உள்ளது என்பதையே.  

    • Thanks 1
  13. ஆசிய நாடுகளை பொறுத்தவரை படித்தவர்கள் தான் கூடுதலாக பகுத்தறிவுக்கு முரணாண பலவற்றை நம்புவர்களாக உள்ளனர். ஸ்ரிபன் ஹக்கின் தனது நூலில் எழுதியிருந்தார், தான் கீழ் திசை நடுகளுக்கு சொற்பொழிவாற்ற  சென்ற போது  அடுத்த 2000 கோடி வருடங்களில் பிரபஞ்ச சுருக்கம் ஏற்பட்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியலாம் என்ற, “பிரபஞ்ச சுருக்க கோட்பாடு” என்பது பற்றி அங்கு குறிப்பிட வேண்டாம் என்றும் அது பங்கு சந்தையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம்.  அந்த அளவுக்கு 2000 கோடி வருடங்களுக்கு பின்பு நடக்கும் என  கூறப்படும்( அதுவும் இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஆய்வில் இருக்கும் ஒரு கோட்பாடு)  விடயங்களை பற்றி கூட கவலைப்படும் அளவுக்கு அங்கு படித்தவர்கள் கூட இருகிறார்கள். 

  14. @goshan_che @kandiah Thillaivinayagalingam  இதில் குமாரசாமி இணைத்த முதலாவது பதிவும் முன்பு யாரோ ஒருவர் நையாண்டியாக பதிந்த பதிவாக இருக்கலாம். அது  கோஷான் கூறிய முதலாவது வகையை ஒத்த சிலரால் உண்மை என நம்பி முக நூல்களில் பகிரப்பட்டதாக இருக்கும். அது போல் கோஷானின் நையாண்டிப்பதிவும் அவ்வாறு உண்மை என நம்பி   பகிரப்படும் அளவுக்கும்  அதை நம்பும்  குறிப்பிட்ட தொகை ஆட்களும் உள்ளனர்.   

  15. 8 minutes ago, goshan_che said:

    வெடுக்குநாறியை பெளத்த புனித பிரதேசமாக அறிவித்து, இன்னொரு கதரகம ஆக்கிய பின் என்னத்தை பார்த்து, என்னத்தை நெய்தல் போகிறீர்கள்?

     

     முடிஞ்சா அடுத்து என் தெருவுக்கு வாடா பாப்பம் என்று கூறிவிட்டு,  அடுத்து எங்கே  அரசியல் செய்யலாம் என்று தேடி அங்கே சென்றுவிடுவோம். 

    😂😂

  16. 22 minutes ago, குமாரசாமி said:

    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    அது அந்த இயக்கம் இருந்த வரைக்கும் தான்.... அதற்கு முன்னரும் பின்னரும் நடந்த/நடக்கும் ஜில்மா வேலைகளை தாங்களும் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

    நான் கூறியது மக்களை பற்றியும் மத வேறுபாறு இன்றி போராடிய இளைஞர்களை பற்றியும் மட்டுமே. தனிப்பட எந்த இயக்கங்களை பற்றியும் அல்ல. 

    5 minutes ago, விசுகு said:

    இல்லை 

    இவரின் தலைமைப்பீடம் மோடி என்கிறார்கள். பார்க்க ஆவல். 

    மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு. 

  17. 9 hours ago, குமாரசாமி said:

    இன்றிருக்கும் இன மத ஒற்றுமைகள் ஏதாவது முன்னேற்றங்களை தந்துள்ளனவா?

    தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து  போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும்  முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல. 

  18. 6 minutes ago, குமாரசாமி said:

    நான் எங்கேயாவது மேற்குநாடுகளை வெறுக்கின்றேன் என எங்கேயாவது எழுதியிருந்தால்  அதை ஆதாரமாக இங்கே இணைக்கவும்..
    சும்மா பொய் வதந்தி பரப்பக்கூடாது.😎

    வெறுக்கவில்லையா? அப்ப சரி.  😂

  19. 10 hours ago, குமாரசாமி said:

    மேற்குலகு (அமெரிக்கா) தம் நலனுக்காக மட்டும் இந்த நாடுகளை அங்கீகரித்தன. அதிலும் கோசோவோ நாட்டை தம் பழி தீர்க்க அங்கீகரித்தது(ன)

    பொதுவாகவே மேற்கு நாடுகளை வெறுக்கும் நீங்கள் மேற்கு நாடுகளில் ஒன்றான ஜேர்மனியை அங்கீகரித்து ஜேர்மனியில் உள்நாட்டு சட்டங்களை அங்கீகரித்து அங்கு வாழ்வதும் உங்கள் நலன்களின் அடிப்படையிலேயே. 

    • Like 1
  20. 52 minutes ago, குமாரசாமி said:

    என் இனம் வாழவேண்டும் என்றால் எது எந்த அநீதி/பிளவுகள் நடந்தாலும் பரவாயில்லை. 

    இதுதான் இன்றைய உலக நடப்பு.  👈🏽

    எதற்கெடுத்தாலும் நீதி நேர்மையை பார்த்து இருந்ததையும்  பறிகுடுத்ததுதான் மிச்சம். இனியாவது சிந்திப்பீர்களாக.

    எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து  நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்?   

    கருத்தைப்பார்காமல்  ஏதோ என்னிலை இருக்கிற கடுப்பிலை  எழுதீற்றீங்க போல.  இண்டைக்கு இன்றும் ரெண்டு பெக்கை எடுத்திட்டு  படுத்திட்டு  நாளைக்கு கருத்தை  வாசிச்சுப் பாருங்க குமாரசாமி. 😂

  21. 14 minutes ago, putthan said:

    இன்றும் வெளிநாட்டில் செயல் படும் காளிஸ்தான் செயல் பாட்டாளரை இந்திய  வேட்டையாடுகிறது ..கனடா பிர்ஜை அவர்...பிரிவினை கோருபவர்களை எந்த சந்தர்ப்பதிலும் இவர்கள் வர வேற்கப்போவதில்லை...மேற்கின் நலன் கருதி பிரிவனை அடைந்த நாடுகள் தான் அதிகம்

    நான்  காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.  

  22. 10 hours ago, ரஞ்சித் said:

    இது ஓரளவிற்கு உண்மைதான். நாம் வங்கதேச விடுதலை பற்றித் தெரிந்து கொண்டளவிற்கு, காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை.

    இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி இராணுவத்தை அனுப்பியது 1984 இல். அப்போது, புலிகள் உட்பட இயக்கங்கள் எல்லாமே இந்தியாவை தமது நேச சக்தியாகவே பார்த்து வந்தார்கள், குறிப்பாக இந்திராவை. ஆகவே, இந்திராவின் அரசுக்கெதிராகப் போராடிய பிந்தரன் வாலேயிடமிருந்தும், காலிஸ்த்தான் விடுதலை முன்னணியிடமிருந்தும் தம்மை விலத்தி வைத்திருந்ததாக எண்ணுகிறேன். அதாவது, காலிஸ்த்தானுக்கு ஆதரவு கொடுக்கப்போய், இந்திராவின் கோபத்திற்கு ஆளாகி, கிடைக்கும் உதவியையும் கெடுத்துவிடாமல் இருப்பதே சரியென்று எண்ணியிருக்கலாம். சுயநலம் தான். 

    ஆனால், பலஸ்த்தீன விடுதலைப் போராட்டம் குறித்து இயக்கங்களுக்கிடையே அனுதாபம் இருந்தது. பணம் கொடுத்து பயிற்சிக்காக லெபனானுக்கும், பலஸ்த்தீனதிற்குச் சென்றாலும், அம்மக்களின் போராட்டம் குறித்த அனுதாபம் இருந்தது. 

    ஈழத்தமிழர்கள் மற்றைய இனங்களுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பது பரவலான குற்றச்சட்டுத்தான். அதில் உண்மையில்லாமலும் இல்லை. இந்தியா மீதும், தாம் வாழும் நாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.  

    தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆட்சியதிகாரத்தில் இருப்போரையே அமெரிக்கா ஆதரிக்கிறது என்கிறேன். அதாவது, ஆட்சியில் இல்லாத, அதிகாரத்தில் இல்லாத ஈழத் தமிழர்களை அமெரிக்கா எப்படி ஆதரிக்கும்? தமிழர்களுக்கூடாக தனது நலன்களை எப்படி அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொள்ளும்? ஆகவேதான், எமக்கு அமெரிக்கா உடவப்போவதில்லை என்று கூறுகிறேன். சரி, எம்மிடம் என்னதான் இருக்கிறது அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு என்று கூறுங்கள்? நாம் என்ன செய்தால் அமெரிக்கா தனது மனதை மாற்றி எமக்கு உதவ முன்வரும் என்று சொல்லுங்கள்? எம்மால் அமெரிக்காவின் நலன்களை எப்படிப் பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்? நாம் ஒரு இனமாக இனியாவது சிந்திக்கலாம். 

    நான் கூறவந்த விடயம்,  தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்வதும், சில ராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளுவதும் உலக வழமை. அதற்காகவே காலிஸ்தானை உதாரணம் காட்டினேன். தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி,  தனக்கு இலாபம் தரும்  வர்த்தகத  தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள்  நடக்கும் மனித உரிமை விவகாரங்களை  தமிழீழமும்  கருத்தில் எடுத்திருக்காது.  இது இயல்பானது.  நாட்டின் நலன் கருதி அவ்வாறு தான் நடந்து கொள்ளவேண்டும். 

    ஆகவே இதல் மற்றய நாடுகளை குற்றம் சாட்டுவது எமக்குப் பயன்றறதுடன் எமக்கு பாதகமாகவும் அமையும். 

     ஒரு நாடு என்ற அங்கீகாரத்துடன் உள்ள தனது எதிரிக்கு உலகில் இயல்பாக உள்ள அனுகூலங்கள் என்ன  என்பதையும் உலக அங்கீகாரமற்ற இயக்கம் என்ற ரீதியில் உலகில் இயல்பாக எமக்கு உள்ள  பிரதிகூலங்கள் என்ன என்பதையும் ஆழமாக சிந்தித்து  தனது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது போராட்டதை நடத்தும் விடுதலை இயக்களின் கடமையே தவிர உலக நாடுகளின் வேலையோ மக்களின் வேலையோ அல்ல.  உதாரணத்திற்கு தன்னுடன் ராஜதந்திர உறவு இல்லாத  நாட்டு ராஜதந்திரிகளை தமது நாட்டில் இருந்து வெளியேற்றுவது ஐநாவால்  அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நடைமுறை.  உலக அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு விடுதலை அமைப்பு அதே நடைமுறையை பின்பற்றுவது ராஜதந்திரமல்ல.  

    ஐரோப்பியயூனியன் தம்மை பயங்கரவாத பட்டியலில் இட்டது என்பதற்காக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிய செயலால் இலாபமடைந்தது ஶ்ரீலங்கா அரசே. வெறும் உணர்ச்சிவசப்பட்டு இதை சிலர் சிலாகிக்கலாம். ஆனால் உலக அளவில் எமது நிலையை உணர்ந்தே  நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனுல் அதனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.  

     இது போல பல விடயங்களைக் கூறலாம்.  இவையெல்லாம் இனி யோசித்து என்ன பலன் என்றோ அல்லது இவை  பேசாப்போருள்கள் அல்லது பேசாமல் மறைக்கப்பட வேண்டியவை என்று  யாராவது நினைத்தால் அந்த அதே போன்ற தவறுகளையே இனியும் எதிர்காலத்திலும் செய்து எம்மை தாமே நாசப்படுத்திக்கொள்வோம். 

    • Like 1
  23. 58 minutes ago, விசுகு said:

    வெடுக்குநாறியை மறவன்புலவு  சச்சிதானந்தம் காப்பாற்றினால் ???

    யார் குற்றியும் அரிசியானால் சரி.

    மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு  வெடுக்குநாறி  மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன  பண்ணுறது? 

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.