நந்திக்கடலிடை வந்து தழுவிடும் காற்றில் உம்மூச்சிருக்கும்-அங்கு நாளும் மலர்ந்திடும் காலை மலர்களில் வந்து முகம் சிரிக்கும் ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர் விழிகள் கரைய உருகிஉருகி தினமும் அழுகின்றோம்.... விடியும் காலை மலர்கள் எடுத்து தினமும் தொழுகின்றோம்...