Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1478
  • Joined

  • Last visited

  • Days Won

    2

vasee last won the day on May 26 2022

vasee had the most liked content!

1 Follower

Recent Profile Visitors

3962 profile views

vasee's Achievements

Mentor

Mentor (12/14)

  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • First Post
  • Posting Machine Rare

Recent Badges

654

Reputation

  1. பொதுவாக மூலப்பொருள்கள் ஆசிய நாடுகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலிருந்து உற்பத்தி செய்யும் முடிவுப்பொர்ள்கள் மேற்கிலிருந்து அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தற்போது ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகள் ஓரணியில் வந்து விட்டதனை அவதானித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதன் மூலம் விலைகளுக்கு ஒரு விலை நிர்ணயத்தினை ஆசிய நாடுகளால் போட முடியும். அப்படி அவை மூலப்பொருள்களின் விலையினை அதிகரிக்கும் போது உற்பத்தி பொருளின் விலை அதிகரிக்கும், அவற்றினை சந்தை படுத்த நீண்ட தூர பயணங்கள் மூலம் மேலும் செலவு அதிகமாகும், அதனை விட சந்தைக்கு மிக அருகாமையில் தமது உற்பத்தியினை முதலீட்டாளர்கள் அணுகுவார்கள், அத்துடன் விலை குறவான வழ்ங்களை உள்நாட்டில் பெறலாம் குறைந்த ஊதியத்தில் வேலையாள்களை பெறலாம். மெதுவாக நிகழலாம் ஆனால் மாற்றம் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  2. உங்களது கூற்று இந்த விட்யத்தில் சரி என்றே என்னளவில் கருதுகிறேன், உலகம் பல துருவங்கள் கொண்ட பொருளாதார அமைப்பிற்கு மாறும்ப்போது, மேற்கு நேரிடியாக பாதிப்பிற்குள்ளாகும். 1. வியாபார மையமாக உள்ள மேற்கு என்ற நிலை மாறி ஆசியா அந்த இடத்தினை பிடிக்கும். தற்போதுள்ள வழங்கல் பாதையில் மாற்றம் ஏற்படும்(Supply chain) இதனால் ஒப்பீட்டளவில் மேற்கில் பொருள்களின் விலை அதிகரிக்கும். உதாரணமாக நியூசிலாந்து உலகின் ஒரு கோடியில் உள்ளது அதன் சனத்தொகை 5 மில்லியன் மட்டுமே அங்கு பொருள்களின் விலை அதிகமாக காணப்படுவது இதனாலேயே. 2. மேற்கின் பொருளாதார பலமே சுரண்டல் பொருளாதாரம், அடிப்படையில் மேற்கின் உற்பத்தி பொருள்கள் அதிகரித்த விலையில் 3ஆம் உலக நாடுகளுக்கு சந்தைப்படுத்தப்படும்(அதிகரித்த சனத்தொகை), ஆனால் 3ஆம் உலக நாடுகளின் பொருள்கள் ஒப்பீட்டளவில் பல மடங்கு குறைவாக இருக்கும். இந்த மாற்றம் இந்த 3ஆம் உலக நாடுகளின் பொருள்களின் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம், அதனால் மேற்கில் வதியும் ஆசியர்களின் வாழ்க்கை செலவு ஒப்பீட்டளவில் மற்றைய மேற்கத்தவர்கலை விட அதிகரிக்கும். 3.மேற்கு நாடுகளுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டு அவர்களுக்கிடையே போர் மூழும் ஆபாயம் ஏற்படலாம். ஆனாலும் இந்த பல்துருவ பொருளாதாரம் பல நன்மைகளையும் கொண்டுள்ளது தற்போதுள்ள உற்தியற்ற பொருளாதார நிலை இல்லாமல் போகும். உலகில் பட்டினி சாவு குறைவடையும், போசாக்கின்மை, தாய் மற்றும் சேய் மரணவிகிதம் குறையும். ஒப்பீட்டளவில் உலக கல்வியறிவு அதிகரிக்கும், அதனால் நீண்ட கால அடிப்படையில் போர் குறைவடையலாம். இந்த பல்துருவ உலக பொருளாதார மாற்றம் ஒட்டு மொத்த உலகிற்கு நன்மை தரும் விடயம், ஒரு தரப்பு பாதிப்படையலாம் ஆனால் உலக நன்மையுடன் பார்க்கும்போது அது பரவாயில்லை என கருதுகிறேன். இப்படிதான் நடக்கும் என்றில்லை, எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  3. சிங்கள இராணுவத்தினர் 1983 பின்னரான காலகட்டங்களில், சாதாரண நூலகங்கள் பலவற்றினை எரித்தது கூட ஒரு திட்ட மிட்ட செயற்பாட்டினடிப்படையில் என புரிகிறது. அப்படியானால் தமிழாரது கல்வியினை பார்த்து சிங்களம் அச்சம் கொள்கிற நிலை உள்ளது என்பதினை காணமுடிகிறது, (பொதுவாக கல்வி தொடர்பாக இதுவரை எனக்கு பெரியளவில் நன்மதிப்பு இருந்திருக்கவில்லை) இந்த தொடரினை தற்போது எப்போது அடுத்த பதிவு வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து படிக்கும் ஒரு சுவாரசியாமான பதிவாகவும் அதே வேளை வரலாற்றினை சமரசமின்றி கூறும் பதிவாகவும் உள்ளது. நன்றி ரஞ்சித், உங்களது முயற்சிக்கு.
  4. சிலரது தேவையற்ற ஈகோகளுக்காக பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன் படம் முடிவடைகிறது, சேவிங் பிரைவேட் ரையன் படம் போர் நடமுறையினை ஓரளவுக்கு நெருக்கமாக காட்சி படுத்த முயன்றிருந்தாலும் படத்தில் வழமையான கொலிவூட் கலவையினை கலக்கி படத்தினை கெடுத்துவிட்டிருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாவிட்டாலும் ஆக கூடுதலாக நம்பகத்தன்மை அற்ற விகிதத்தில் மனிதாபிமானம் கலந்து விட்டாலும் படம் நல்ல படம்.
  5. நானும் இதைத்தான் யோசித்தேன், இந்தாள் ஏன் இப்பிடி கோர்த்துவிடுகிறது என.
  6. தற்போது உலக எதிர்நோக்கி காத்திருக்கின்ற பொருளாதார சரிவிலிருந்து இலகுவில் மீள முடியாது. Bond yield inverted curve பொருளாதார சரிவு வர உள்ளதினை உறுதிப்படுத்துகிறது, உலக பொருளாதார சரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி வருவதனால் மக்களை திசை திருப்பும் விடயங்களில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளதாக கருதுகிறேன் (இரஸ்சிய, சீனா). எனது கருத்து தவறாக இருக்கலாம். கடந்த காலத்தில் பொருளாதார சரிவு நிகழும் போது நாடுகள், பொருளாதாரத்தினை தூண்டுவதற்காக பொது செலவினை அதிகரிப்பது வளமையாக இருந்துள்ளது அமெரிக்காவில் 2008 இல் பொருளாதார சரிவின் போதும் 1998 மலேசிய பொருளாதார சரிவின் போதும் அவ்வாறே நிகழ்ந்தது. தற்போது ஏற்கனவே அதிகரித்துள்ள பணவீக்கம் உள்ள நிலையில் இது சாத்தியப்படாது என தோன்றுகிறது, அத்துடன் 2020 இலிருந்த பணத்தினலவினை விட பல மடங்கு(அமெரிக்க) பணம் பாவனையிலுள்ளது(M2 money supply) quantitative tightening பயன்படுத்தப்படும் அரச பணமுறி பயனற்று போகும் நிலையில் உள்ளது. இந்த பொருளாதார சரிவு பல துருவங்கள் கொண்ட பொருளாதார உலகினை உருவாக்குமா? வங்கியில் வைத்திருக்கும் பணத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? வங்கிக்கு ஏதாவது மாற்றீடு உள்ளதா? யாழ்கள கருத்தாளர்களே உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
  7. உண்மைதான், பெரியளவில் எதிர்பார்க்கும் ஒரு படம் எமது இரசினையினை பூர்த்தி செய்யாவிட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக இருக்கலாம், வெளிநாடு வந்த காலத்தில் வேலை செய்யும் இடத்தில் நல்ல படத்தினை கேட்டேன் அதில் பலர் கூறிய ஒரே படத்தினை வாடகைக்கு எடுத்து பார்த்தேன், படம் நல்ல படம்தான், முதல் தரம் எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என கருதினேன் ஆனால் காலப்போக்கில் பல தடவை அந்த ப்டத்தின் காட்சிகளை யூடுப்பில் பல தடவை பார்த்தாலும் சலிக்காத படமாக இன்றுவரை உள்ள ஒரே படமாக உள்ள படம். இந்த படத்திலும் சில மோசமான காட்சிகள் உள்ளன.
  8. சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல சாதாரண அகதி முகாம்களில் கூட சில நாள்களில் கெடுபிடி இருக்கும் (முன்னரிந்திய சுதந்திர தினம் போன்ற நாள்களில் நள்ளிரவில் புகுந்து திடீர் விசாரணைகள் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் தற்போது எப்படி என தெரியாது).
  9. ஜேர்மனியின் டொச் வங்கி அடுத்ததாக மூழ்கப்போவதாக கூறுகிறார்கள் இந்த வங்கியினது CDS உம் வங்கி முறிவடையப்போகிறது என கூறுகிறது.
  10. அவ்வாறு தான் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எந்தவித இலாபமும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலும் அவர்களால் அந்த கட்சிக்கு வாக்கு போட முடியாது அந்த நிலையில் எதற்கு கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும். ஆனாலும் திமுக எப்போதும் அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவும் கட்சியாகவே இருந்துள்ளது.
  11. இதற்கு கருத்து எழுதாவிட்டால் உங்களது கருத்திற்கு மதிப்பளிக்காதது போல தோன்றலாம் ஆனால் உங்களது பதிலிலேயே உங்களது கேள்விக்கான விடை உள்ளது. எனது கருத்து வெறும் கருத்து மட்டுமே, அதுதான் சரி என்பதல்ல.
  12. 1991 இன் பின் திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி. குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது. வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது. பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.