-
Posts
1048 -
Joined
-
Last visited
-
Days Won
2
vasee last won the day on May 26
vasee had the most liked content!
Recent Profile Visitors
3146 profile views
vasee's Achievements
-
https://www.abc.net.au/news/rural/2021-09-07/rambo-the-fox-escapes-capture-again/100436276 நான் நரியைதான் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்.
-
கோசான் நீங்கள் கூறும் இந்திய நாணயம் இலங்கை நாணயத்தினை மாற்றீடு செய்யுமா என கேட்டால் எனது புரிதலின் படி ஆம் என்பதுதான் பதில், அதற்கான சாத்திய கூறு 90 % உள்ளதாகக்கருதுகிறேன். ஏனெனில் இந்தியாதான் இலங்கையின் முக்கிய வர்த்தக பங்காளி. 1. அது நிகழ்வதற்கு இலங்கை நாணயப்பணவீக்கம் மிகையாக அதிகரித்தல் 2. இலங்கை நாணயம் பெறுமதியிழத்தல் பல நாடுகளில் இந்த மாதிரியான பகுதி மற்றும் முழுமையான நாணய மாற்றீடு காலங்காலமாக நிகழ்கிறது அதில் எந்த சிக்கலும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சீனா இரண்டு நாணெயங்களை கொண்ட நாடு உள்நாட்டு நாணயம் வெளிநாட்டு வர்த்தக நாணயம் என 2 நாணயங்களை கொண்ட நாடு. சில பசுபிக் தீவுகள் நாடுகள் நியுசிலாந்து நாணய்த்தினை தமது நாட்டில் பயன்படுத்துகின்றன. மன்னிக்கவும் கோசான், கடஞ்சா நீங்கள் விவாதிப்பது எனக்கு சுத்தமாக விளங்கவில்லை, இலகுவான முறையில் கூறினால் புரியக்கூடியதாக இருக்கும். மன்னிக்கவும் நான் எப்போதும் கடைசி வரிசை மாணவன்.
-
பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
vasee replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
https://www.investopedia.com/terms/c/currentaccountdeficit.asp -
பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
vasee replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்). முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை. தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன். -
அபாயகரமான கட்டத்தை நோக்கிச் செல்கிறது இலங்கையின் பொருளாதாரம்
vasee replied to nunavilan's topic in அரசியல் அலசல்
இந்த மாத ஆரம்பத்தில் இக்கருத்து எழுதப்படும்போது, இலங்கையிலுள்ள மக்களைப்போல இரணிலின் பிரதமர் பதிவியேற்பு தொடர்பான அதீத நம்பிக்கை எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பதற்கு சாட்சியான பதிவு . இப்போதுள்ள நிலமைகளை பார்க்கும் போது ஐ எம் எப் இலங்கைக்கு தாமதிக்காமல் உதவ முன்வர வேண்டும், ஏற்கனவே முதலீட்டாளர்கள் இலங்கை மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் (இந்த மாதம் 22 ஆம் திகதி இலங்கை மீது வழக்கு தொடுத்துள்ளார்கள்). https://bondevalue.com/news/sri-lanka-to-default-on-dollar-bonds/#:~:text=Its %241bn 5.875% dollar,and resignations of government officials. இது தொடர்பாக இலங்கை வங்குரோத்தானால் என்ன ஆகும் என முன்பொரு திரியில் குறிப்பிட்டதாக நினைவில் உள்ளது, அதில் முதலீட்டாளர்கள் தமது கடனுக்காக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் அதனை விட மோசம் நாடுகளிடம் வாங்கிய கடன். முதலாவது பிரச்சினை தொடங்கிவிட்டது (முதலீட்டாளர்கள்), சில உண்மையாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகள் முக்கியமாக ஜப்பான் கூட தற்போது இலங்கை இப்போது பெறும் கடனை திருப்ப செலுத்தாது என கணித்துள்ளமையால் இலங்கையிடமிருந்து சொத்துகளை பிணையாக கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உலக நாடுகள் இலங்கை மீது நம்பிக்கை இழந்துவிட்ட நிலையினை இது காட்டுகிறது. பொதுவாக இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கே முண்டு கொடுக்கும் வல்லரசுகள், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கிடையில் ஏற்படும் இந்த முதலீட்டாளர்களின் சட்ட சிக்கலை தமது செல்வாக்கின் அடிப்படையில் தீர்க்க வருவார்களா? அல்லது நிலமை மோசமாக மோசமாக இலங்கயினை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என விட்டு பிடிப்பார்களா? கடனை மீழ ஒழுங்குபடுத்தாவிட்டால் இலங்கையினால் நிகர பாதீட்டினை ஏற்படுத்த முடியாது, முதலீட்டாளர்களை இலங்கை எவ்வாறாயினும் தனது செல்வாக்கினை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஐ எம் எப் உதவி வர மாதங்களாகும் என்றார்கள் இபோது வருடங்களாகும் என சொல்கிறார்கள். நிகர பாதீட்டினை ஏற்படுத்தாவிட்டால் ஐ எம் எப் கடன் கொடுக்காது என கருதுகிறேன் ஆனால் இலங்கை தற்காலிகமாக ஒரு நிகர பாதீட்டை ஐ எம் எப் இற்காக சமர்ப்பித்துவிட்டு கடன் கிடைத்த பின் பற்றாக்குறை பாதீட்டினை (அவசரகால) சமர்ப்பிக்கலாம் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.- 1 reply
-
- 2
-
-
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
vasee replied to goshan_che's topic in வாணிப உலகம்
இரஸ்சிய தங்கத்தின் மீதான தடை எவ்வாறான தாக்கத்தினை, தங்கவிலையில் ஏற்படுத்தும்? யாழ்கள உறவுகளின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன். -
இலங்கைக்கு 3/4 ஏற்கன்வே தாராளமாக உள்ளது,நாலாவதாக மூலதனத்தினை கூட பலவழிகளில் இலகுவாகப்பெற்றுவிடலாம் (புலம்பெயர் இலங்கையர் உள்ளடங்களாக), ஆனால் சிங்கப்பூர் நில வளமற்ற நாடு தனியே மனித வலுவைக்கொண்டு முன்னேறும் போது இலங்கைக்கு அது ஒரு பிரச்சினையில்லை, ஆனால் இலங்கையால் முன்னேற முடியாது, ஏன் இப்போது தமிழீழம் கிடைத்தால் இலங்கையினை விட மோசமான நாடாக அதனை மாற்றிவிடுவார்கள் எமது அரசியல்வாதிகள்.
-
இலங்கை அரசு ஏற்கனவே பல வகையிலும் முயன்று கொண்டுதானிருக்கிறது என கருதுகிறேன். எந்த உடனடி தீர்வும் (Quick fix) இருப்பதாக எனக்கு தெரியாது. இப்போது கிடைத்து கொண்டிருக்கும் அன்னிய செலாவணியினை கூட இலங்கை இழக்கும் ஆபாயமே அதிகமுள்ளதாகக்கருதுகிறேன். இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு ஏற்புடைய நாடல்ல எனும் நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது. நிலமை இன்னும் மோசமாகும், ஐ எம் எப் கடன் மூலம் வரும் 5 பில்லியனில் குறைந்தது ஒரு வருடம் ஓட்டி விடலாம். இந்தியா, சீனா, பங்களாதேசம் என அனைத்து நாடுகளிடமும் உதவி கேட்டுள்ளது இலங்கை, அவுஸ்ரேலியாவிடம் உதவி கேட்டுள்ளது. https://www.abc.net.au/news/2022-06-19/sri-lanka-economic-crisis-worsens-pm-asks-australia-for-help/101152402 இந்த பிரச்சினையால் வட பகுதி மக்களும், தமிழகமும் பயனடையும் அதுவே இப்போதுள்ள சிறந்த தீர்வு அதனை இலங்கை மற்றும் தமிழக் அரசு கண்டு கொள்ளாது. போர் நடந்த காலங்களில் தமிழ் மக்களின் பொருளாதார நெருக்கடியில் உதவிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினை கூட வெளிநாட்டில் வாழும் பெரும்பான்மையினத்தவர் திட்டமிட்டு முடக்கியிருந்தனர். உலக வரலாற்றில் பொருளாதார ரீதியாக இயற்கையாக பாதக சூழலில் உள்ள நாடுக்ளே அவற்றை கடந்து பொருளாதார உச்ச நிலையினை அடைந்துள்ளன. ஒரு பொருளாதாரத்திற்கு தேவையான 4 வளங்களில், சிங்கப்பூரிடம் முக்கியமான வளமான நிலம் இருக்கவில்லை அரசு செய்த முதல் வேலை அனைத்து நிலங்களையும் மக்களிடம் இருந்து எடுத்து கொண்டது, பின்னர் அதில் அரச வீடமைப்பு திட்டத்தினை உருவாக்கியது, இரண்டாவதாக மூலதன வலு இல்லாமல் இருந்தது, அத்னை வெளிநாட்டு மூலதனக்களை கவர்ந்தன் மூலம் ஈடுகட்டியது. எல்லாவற்றையும் விட ஊழலை ஒழித்துக்கட்டியதுதான் முக்கியமான விடயம். சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலையினை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர் முயன்ற போது 4 எழுத்து தமிழ்தேசியம் பேசும் ஒரு அரசியல்வாதி இலஞ்சம் கேட்டாராம். முக்கியமாக நல்ல தலமை வேண்டும் அது இப்போது தமிழர்களிடமும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இலங்கையரசு ஏழ்மையான மாகாணங்களுக்கு நிதியினை கூட ஒதுக்காது, வட கிழக்கை கண்டே கொள்ளமாட்டார்கள் அப்படி ஒரு நிலமை கூட வரலாம். இலங்கை எவ்வாறாயினும் வங்குரோத்தாகப்போகிறது கடனுகளை எல்லா நாடுகளிடமும் வாங்கி விட்டு வங்குரோத்தினை அற்வித்து விட வேண்டியதுதான் அதற்கு பிறகு நடப்பதை பிறகு பார்க்கலாம்.
-
மன்னிக்கவும், கோசான் அது உங்களுக்கு நகைசுவைக்காக சொன்னது, அதாவது நீங்கள் மேற்கு நாட்டில் இருந்து கொண்டு அதன் கொள்கைகளை குறை சொல்லும் என்னை போன்றவர்கள் தமது நாட்டிற்கே (இலங்கை ?) திரும்பி செல்லவேண்டும் என்று சொன்னதற்காக கூறியது, இது போன்ற கருத்தாடல்களில் பொதுவாக அனைவரும் கூறுவதனால் ஏன் வெளிநாட்டு கொள்கை பிடிக்காவிட்டால் இலங்கைகு போகவேணும் என்ற கருத்தில் எழுதப்பட்டது (Default thinking). மேலும் நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் கூறவில்லை என தெரியும் (அப்படி கூறியிருந்தாலும் தவறினை சுட்டி காட்டுவதில் தவறில்லை அதனால் பிரச்சினை இல்லை), அதனாலேயே நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதால் அவ்வாறு பதிலளித்தேன். பெரும்பான்மையாக உங்களது கருத்துகளில் எனக்கு எப்போதும் உடன்பாடுண்டு.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
vasee replied to goshan_che's topic in வாணிப உலகம்
தங்கத்தினை விற்றுள்ளேன் தற்போதயநிலையில் 1857 வலயத்தில். -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
vasee replied to goshan_che's topic in வாணிப உலகம்
பங்கு சந்தையில் தாக்குபிடிக்க முக்கிய விடயமாக உளவியலை புரிந்து வைத்திருக்கவேண்டியது முக்கியம் என்பார்கள், ஆரம்பத்தில் சக மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினமான விடயம் என நினைத்ததுண்டு, பின்னர் பங்கு வர்த்தகத்திலீடுபட ஆரம்பித்த பின்னரே என்னைபற்றியே என்னால் இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லை என எண்ணத்தூண்டும். எமது சிந்தனையில் கடுமையாக உழத்தால்தான் பணம் வரும் என நினைப்போம் இலகுவாக வரும் பணத்தினை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். அதனால் அதனை எப்படியாவது திரும்பவும் இழந்து விடுவோம், கட்டு கோப்பாக சிறிது சிறிதாக அனைத்து trading Rules ஐயும் பின்பற்றி கட்டியெழுப்பும் கணக்கினை கண்மூடித்தனமாக ஒரு நாளிலே இழந்து விடுவோம். trading இல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதன் process மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்வார்கள், ஆனால் நடைமுறயில் பணத்தின் வருகையும் இழப்புமே பெரும்பாலும் என்னை ஒவ்வொரு வர்த்தகத்தினையும் தூண்டி தவறான முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. உதாரணமாக சொந்த பணத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனை குறுகிய காலத்தில் மீட்டு விட பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்னும் பாதகமான நிலையினை அடைதல். சாதாரணமாக வர்த்தகத்தில் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 10 இலிருந்து 20 வீதம் வரையான இலாபம் யதார்த்தமானது அதனையே எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முதலிடுவார்கள், ஆனால் பங்கு வர்த்தகத்தில் மட்டும் 5000 முதலினை ஒரு வருடத்திற்குள் 100000 ஆக வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் நீங்கள் மிக தெளிவாகவே ஆரம்பத்தில் செயற்படுவது போல் உள்ளது உங்களது வர்த்தகங்களை பார்க்கும் போது, என்னை பொறுத்தவரை அவசரப்பட்டு பின்வாங்க தேவையில்லை என கருதுகிறேன். இழப்புகள் ஏற்படும் பொழுது உங்களது Risk இனை பல மடங்காக குறையுங்கள் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளார்கள். -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
vasee replied to goshan_che's topic in வாணிப உலகம்
நீங்கள் கூறின ProShares UltraPro எதனூடாக வர்த்தகம் செகிறீர்கள்? மிகவும் ஆர்வமாகவுள்ளது. மேலும், தங்கம் மேலே சொன்னது போல 1857 மற்றும் 1872 வலயங்களை அண்மிக்கும் போது எவ்வாறு செயற்படுகிறது என காத்திருக்கின்றேன். பொதுவாக வார இறுதி நாளில் சிறிய வர்த்தகர்களை சிக்கும் வேலையினை செய்வார்கள் என கூறுவார்கள். உதாரணமாக விலைகள் அதிகரித்து வாங்க தூண்டுவார்கள் வார இறுதியில், பின்னர் திங்கள்கிழமை விலையினை மிகவும் குறைத்து சிறிய வர்த்தகர்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள் என கூறப்படுகிறது. அதனை Bull trap என கூறுவார்கள், அதற்கு எதிர்மாறான செயற்பாட்டினை Bear trap என கூறுவார்கள். அது மட்டுமில்லாமல் பெருமளவானவர்கள் வார இறுதியில் தமது இலாபங்களை எடுத்து கொள்வார்கள்.