Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1756
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா? இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁
  2. இந்த சமகாலத்தில் ( பனிப்போர் காலம்) இந்த பிராந்தியம் தவிர தென் கிழக்காசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தேறியது, ஆனால் அங்கு வேறு வேறு மதங்கள் இருந்தன அதற்காக குறித்த மதங்களை யாரும் குற்றம் சாட்டவில்லை, அதே போல் எந்த மதத்திலும் போதை பொருள் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது, இந்த வட்டத்திற்குள் நின்று எந்த மதத்தினையும் குறை கூறுவது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போலாகும். ஒரு பெரும்பான்மையினத்தவர் சிவலிங்கத்தினை பற்றி கேவலமாக கூறினார் (அதனை சைவர்கள் உலகின் படைப்பாக கூறுவர் என நினைக்கிறேன்), அவரிடம் அதற்கான அறியும் ஆர்வம் இருக்கவில்லை, அவரது நோக்கம் கேவலப்படுத்துவதுதான், அவரவர் தாமாக ஒரு நிலைப்பாடாட்டினை எடுத்து அதற்கு கூறும் காரணங்களை அவர்கள் தம்முடனேயே பொருத்தி பார்க்க தவறுவதாலேயே இவ்வாறான கருத்துகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கும் அவர்கள் குற்றம் சாட்டபடுவர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  3. அமெரிக்க உளவு நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக (ஆட்சி கவிழ்ப்பு, அரச எதிர்ப்பு போராட்டங்கள்) ஆசிய நாடுகளில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டது, அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானினூடாக தற்போதும் பெரியளவில் போதைபொருள் இந்தியா இலங்கை போன்ற நாடுக்ளுக்கு கடத்தப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்ற தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் காணப்படுவதால் இந்த நிலை காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?
  4. அமரர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைந்த இந்திய தரப்பு அமரர் ராஜீவ் பிறந்த தினம் வரை பொறுத்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதாக நினவுள்ளது. இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.
  5. நான் கூறிய விடயம் சாதாரணமானது அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது என கூறியது நீங்கள், தற்போது நீங்களே வந்து மரணவீட்டில் பண்பாடில்லாமல் நகைசுவை செய்கிறேன் என என் மேல் பழி போடுகிறீர்கள். கடவுள் இரண்டு மனிதர்களிடம் கேட்டாராம் உலகை சுற்றி பார்த்துவரும்படி முதலாமர் வந்து சொன்னாராம் உலகம் முழுவதும் அயோக்கியனாக உள்ளார்கள் என்று, இரண்டாமர் வந்து கூறினாராம் உலகம் முழுக்க நல்லவர்களாக உள்ளார்கள் என்று. இந்த கதையினை கூறுவதன் பொதுவான நோக்கம் நல்லவர்களுக்கு மற்றவர்களும் நல்லவர்கள் அது போல தீயவர்களுகும், ஆனால் அடிப்படையில் இதுவும் தவறு உள்ளதை உள்ளவாறு பாருங்கள். இரண்டு விஞ்சானிகள் ஒருவர் தனது தச்சனுடன் வாதிட்டார் எப்படி குட்டிப்பூனையும் தாய் பூனையும் கதவிலுள்ள பெரிய துவாரத்துனூடாக செல்லும் சிறிய பூனை சிறிய துவாரத்தினூடாகத்தான் செல்லும் என, மற்றவர் பணிப்பெண் கொடுத்த கடிகாரத்தினை கொதி தண்ணீரில் போட்டு விட்டு முட்டையினை பார்த்து கொண்டிருந்தார். இதனை சாதாரணமானவர் செய்தால் அதற்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கப்படும் ஆனால் அவ்வாறான செயல்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முகம்சுளிப்பினை ஏற்படுத்தும், ஆடையில்லாமல் சென்ற அரசன் போல, அதிர்ஸ்டவசமாக அதனை மன்னனுக்கு உணர்த்த சிறு குழந்தையாவது இருந்திருக்கின்றது. நன்றி வணக்கம்
  6. இந்த தீர்வுதிட்டத்தினை யார் வேணுமென்றாலும் தயாரிக்கலாம் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், நீலன் தயாரிக்காவிட்டால் வேறு ஒருவர் தயாரித்திருப்பார். ஏற்கனவே தீர்வுதிட்டம் தயாரித்துவிட்டாகிவிட்டது அதன் பின் கொல்வதால் என்ன இலாபம், அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை). இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.
  7. நன்றி கபிதான். தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை). இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன். இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது. அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.
  8. https://www.quaker.org.uk/ இணையத்தில் குவேக்கர் என தேடிய போது இந்த வலைப்பகுதி வந்தது, இவர்களா எனத்தெரியவில்லை.
  9. முன்பு ஒரு தடவை சிஙகள விவசாய அமைச்சர் ஒருவர் கிளிநொச்சிக்கு வந்த போது ஒருவர் மைச்சரை கவர்வதற்காக ஒரு ஆர்வக்கோளாறில் அமைச்சருக்கு வெங்காயத்தில் மாலை செய்து போட்டாராம் அமைச்சர் அதனை மறக்காமல் தான் பேசும் போது ஆர்வக்கோளாறில் தமிழில் வெங்காயம் போட்ட நபரை குறிப்பிடுவதாக எண்ணி "வெங்காயங் போட்ட மாலை" என தனக்கு தெரியாத மொழியினை கேட்டு பிழையாக கூற மக்கள் சிரித்தார்களாம், வெங்காயம் மாலை போட்டவருக்கு அவமானமாகிவிட்டது. இப்ப எனது நிலை வெங்காய மாலை போட்டவரின் நிலை. இங்கிலாந்தில் உள்ள குவேக்கர்ஸ் எனும் அமைப்பின் உதவியினுடனான திட்டம் அது, அது உண்மை என அப்போது அவர்களும் உறுதி அழித்ததாக நினைவில் உள்ளது.
  10. நன்றி ஐலன்ட், இப்படித்தான் கடந்தகால அழிவுகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை விழிப்பில் வைத்திருக்கவேண்டும்.
  11. ஒரு ஊரில் முதல் தடவையாக மக்கள் மனம் கவர்ந்த ஒரு அரசியல் வாதி தேர்தலில் போட்டியிடடார், மக்களுக்கு அவர் ஒளியமயமான எதிர்காலத்தினை தனது வாக்குறுதியாக வழங்கினார், மக்கள் தேர்தலில் அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு வாக்களித்தனர், அந்த அரசியல்வாதி அதிக பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்கள் தமது ஒளி மயமான எதிர்கால கனவுடன் காத்திருந்தனர், நாட்கள் மாதங்களானது எந்த ஏற்படவில்லை பொறுமையிழந்த மக்கள் அரசியல்வாதியிடம் முறையிட சென்றனர், மக்களை பார்த்து சிரித்துக்கொண்டு அனைத்து சவுகரியங்களுடன் கொண்டிருந்த அரசியல்வாதி சொன்னார் உங்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கு உண்மை புரிந்தது, தாம் ஏமாற்றப்பட்டு விடடோம் என ஆனால் யதார்த்தத்தினை புரிந்து கொண்டார்கள். வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் காலடியில் வந்து விழும், கடந்த காலத்தில் கூட பல தீர்வு திட்ட்ங்கள் தானாக வந்தது, எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழும் நம்புங்கள் மக்களே. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் இல்லை. சிங்கள அரசினை முழுமையாக நம்புங்கள் அவர்கள் சரியான தீர்வினை தருவார்கள். அது எவ்வாறென்றால் திரோபதை சபையில் தனக்கு நிகழ இருந்த அவமானத்தினை தடுக்க அந்த அவையில் இருந்த தனக்கு வேண்டப்படடவர்கள், வேண்டப்படாதவர்கள் என எல்லோரையும் கேட்டு முடியாமல் கடைசியாக கண்ணனிடமும் வேண்டியும் எதுவும் நிகழவில்லை. இறுதியாக தனது கைகளை ஆடையில் இருந்து விட்டு இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி (முழு சரணாகதி) கேட்டு நிகழ இருந்த அசம்பாவிதத்தில் இருந்து தப்பிக்க கொண்டார். இந்த சரணாகதி அரசியல் மூலம் இதுவரை எந்த மக்களும் உரிமைகள் பெற்றதாக நான் அறியவிலலை, ஆனால் முதல் தடவையாக இலங்கை மண்ணில் நிகழ உள்ளது, இதில் கண்ணனாகவும் துச்சாதனகவும் இருப்பது சிங்கள இனவாத அரசு, இந்த புதிய வகை போராடடத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் கல்விமான்களுக்கும் எமது மக்கள் நன்றி கடன்பட்டவர்கள். இது கத்தியின்றி இரத்தம் சிந்தா புதிய புரட்சி, இதற்கு உரிய கால அவகாசத்தினை மக்கள் பொறுமையுடன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். புதிய சரித்திரம் படைப்போம்.
  12. இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன். எனது கல்வித்தரத்தினை குறிப்பிட விரும்பாத கல்வி தரத்தினை கொண்ட என்னை ஒரு கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருடன் ஒப்பிட்டு யாழ் களத்தினை சிக்கலில் மாட்டி விடாதீர்கள். சாதாரண சம்பாசனைகளை கடந்து சாதாரணமாக கடந்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.
  13. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் எனது உறவினர்களின் அனுபவத்தினையே இங்கு கருத்தாக பதிவிட்டுள்ளேன் என. இல்லை ஒரே குடும்ப உறுபினர்களுக்குள் மாற்றமுடியாது. எனவே கேள்விப்பட்டேன் அதனாலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருந்தது.
  14. எனது கருத்துகளால் இறந்தவர்களுக்கு இழுக்கு ஏற்படக்கூடாது என விரும்புவதுபோலவே மற்றவர்கள் கருத்துகளாலும் அவ்வாறான இழுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சில கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்துள்ளேன்.
  15. நில உச்ச வரம்பாக வெறும் 50 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவுள்ளது, தென்பகுதியில் உள்ள தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை வட கிழக்கிலும் அந்த சட்டம் அமுலில் இருந்தது, எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள். அத்துடன் நான் அறிந்தவரை அனைத்து நிலங்களும் விளைச்சலில் உள்ள நிலங்களாக இருந்தது.
  16. உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு. அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.
  17. ஜஸ்ரின், ஐலன்ட், கப்பித்தான் உங்கள் கருத்திற்கு நன்றி.
  18. மிக சிறப்பாக கருத்து தெரிவித்துள்ளார், ஆனால் அது எந்த அளவில் சாதாரண மக்களால் உள்வாங்கப்படுகிறது எனும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது, இந்த காணொளியில் இலங்கையின் மோசமான பணவீக்கம், மிக குறுகிய காலத்தில் கிட்ட தட்ட இரட்டிப்பாகும் வரி என்பவை சாதாரண மக்கள் எதிர்வரும் காலத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என கோடிட்டு காட்டுகிறது. இலங்கையின் எதிர்காலம் உவப்பானதாக இருக்க போவதில்லை என்பதனை மக்கள் உணரவில்லையெனவே கருதுகிறேன். இந்திய வங்கி வருகைகள் தற்போது எந்த தாக்கத்தினையும் (பாதகமான) ஏற்படுத்தாது என நம்புகிறேன். இலங்கையின் பொருளாதாரம் வெறும் 90 பில்லியன் பொருளாதாரம், இந்திய வங்கிகள் இலங்கை பண கொள்கைகளில் (Monetary policy) விரும்பினால் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம், அத்துடன் திடீர் பொருளாதார பிரளயத்தினையும் விரும்பினால் உருவாகலாம், சிறிய நடுத்தர முதலீடுகளை சிதைக்கலாம், நாணய மாற்று வீதத்தில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக பொருளாதார ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம், இவை அனைத்தும் எதிர்மறையான விடயங்கள் ஆனாலும் வழமையான பல சாதகங்கள் உண்டு என்பதனை ஏற்க வேண்டும்.
  19. Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம். ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும். இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்). அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது. தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள். இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.
  20. 90 களில் வீரகேசரியில் ஒரு விளம்பரம் (முழுப்பக்க விளம்பரம் என்பதாக நினைவில் உள்ளது) போடுவார்கள், அதில் மேற்கு இந்திய அணி வீரர் ரிச்சி ரிச்சர்ட்சன் கூறுவார் "என்னை கவர்ந்திழுக்க வீசப்படும் பந்துகளை அணுகமாட்டேன் ஏனென்றால் அதுதான் எனக்கு போடப்படும் தூண்டில்" கவனத்தை கவரும் மோசமான பொருளை வாங்காதீர்கள் என கூறுவார். அவர் விளம்பரம் செய்யும் பொருள் ஒரு மதுபானம் என நினைக்கிறேன் (அதனாலேயே அது எனது கவனத்தினை ஈர்த்தது- உடலுக்கு தீங்கு செய்யும் ஒரு பொருளினை அது தரமானது என்பதால் உடலுக்கு தீங்கில்லை என்பது போல் ஒரு மாயையினை வாடிக்கையாளரினை கவர்வதற்காக செய்யும் உளவியல் சந்தைப்படுத்தும் உத்தி). இந்த நகைமுரண் இந்த திரியிலும் காணப்படுகிறது. இந்த திரியில் ஆரம்பத்தில் அனைத்து கருத்தாளர்களுக்கும் பழைய காலத்திலும் தற்காலத்திலும் யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு நடந்தார்கள் (அவர்களின் வார்த்தையில் காட்டுமிராண்டித்தனம்) என கூறியவர்கள் கூட திரியின் இறுதிப்பகுதியில் அந்த செயலுடன் ஏதோ ஒரு வகையில் உடன்பாட்டிற்கு வந்தனையே காணமுடிகிறது. நான் பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஒரு தமிழாசிரியர் சிலேடை பற்றி கூறி மாணவர்களிடம் உதாரணம் கேட்டார் (சிலேடை என்பது ஒரு சொல் அல்லது தொடர் சொல் பல கருத்துக்களை உச்சரிக்கும் விதத்தில் தருவதாகும்). அந்த வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவன் எழுந்து கூறினார் " ஐந்து சதத்திற்கு கொஞ்ச லாம்பெண்ணை". அது ஒரு கலப்பு வகுப்பு, ஆசிரியர் மாணவரை கோபத்தில் திட்டி உட்கார வைத்தார், ஆசிரியருக்கு மட்டுமல்ல அந்த வகுப்பில் இருந்த சக ஆண் மாணவர்களுக்கு கூட ஒரு வகையான தர்மசங்கடமான சூழ்நிலையினை ஏற்படுத்தியது. நாம் மற்றவர்கள் முகம் சுழிக்கும் நிலைக்கு வந்துள்ள யாழ்ப்பாண சமூகம் என ஆரம்பத்தில் கூறிய கள உறவுகள் திரியின் பின்பகுதியில் ஒரு முரண்பாடான கருத்துகளை முன்வைக்கும் நிலைக்கு வந்துள்ளது தெரிகிறது. நிகழ்ச்சிகள் வைப்பதிலோ அல்லது அதில் கலந்து கொள்வதிலோ தவறில்லை ஆனால் அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு இடையூறு (முகம் சுழிக்க வைப்பது போல் நடந்து கொள்வது, மக்கள்நெருக்கடியால் உயிர் உடமைக்கு பாதிப்பு) ஏற்படா வகையில் நடந்து கொண்டால் தவறு இல்லை.
  21. பொதுவாக நாடுகள் தமது சுயநலனின் அடிப்படையில் தமது படைகளை வேறு நாடுகளில் நிலைநிறுத்துகிறது, அதற்கு இந்தியா கூட விதிவிலக்கில்லை, தற்ப்போது அமெரிக்கபடைகள் உல்கெங்கிலும் ஏறத்தாழ 800 நிலைகள் அளவில் கொண்டுள்ளது என கருதுகிறேன். அமெரிக்க நிலைகள் இவ்வாறு உலகளவில் பரந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது, உதாரணமாக இரண்டாம் உலகப்போரின் போது தனது பிரத்தான் வழ்ங்கல் பாதையில் முள்ளாக இருந்த முத்து துறைமுகத்தினை ஜப்பான் அழித்தது. தனிய தேசிய பாதுகாப்பு மட்டுமன்றி பொருளாதார நலனடிப்படையிலும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த படையினருக்கான செலவினை அந்தந்த நாடுகளே பொறுப்பேற்கவேண்டும் அதே நேரம் அந்த தொகை குறித்த நாடுகளின் படை செலவினை விட அதிகமாகும் என நாடுகள் குறைபட்டாலும் அந்த தொகையினை செலுத்த முன்வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் எதிரிகள் தாக்கும்போது அமெரிக்க படையினன் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அமெரிக்கா ஒரு முழு அளவிலான போர் பிரகடந்த்துடன் எதிரி நாட்டுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு. இந்த படைகள் குறித்த நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுகின்ற நிலையில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளினிடையே படைகள் தங்கியுள்ளன, கடந்த காலத்தில் போதைவஸ்து போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக வரும் பணத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் நாடுகளில் குழப்பத்தினை ஏற்படுத்தும் குழுக்களை போசித்தது. நாடுகளின் ஜனநாயக அரசுகள் கூட கவிழ்க்கப்பட்டு, தற்போதுள்ள சர்வாதிகார சூழ்நிலைக்கு வித்திட்டு தனது நலஙளை பின்னர் அவர்களுடனும் மோதும் நிலையில் அமெரிக்கா இருந்து வருகிறது, இதனை குறையாக கூறவில்லை யதார்த்தினை கூறுகிறேன்.
  22. தகவல்களுக்கு நன்றி கப்பித்தான், ஆரம்பத்தில் பார்த்த காணொளியினுடன் ஒப்பிடும் போது இது ஒரு சாதாரண விடயமாக இருந்தது, மேலதிகமாக உங்கள் காணொளியினை பார்க்கும்போது இது ஒரு மிக பெரிய ஒரு முக்கியமான நிகழ்வாக தெரிகிறது, இது தொடர்பான மேலதிக காணொளிகள் இருந்தால் இணைக்கமுடியுமா? குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருந்த அந்த தொழில் முனைவரின் reverse acquisition நிகழ்வினை பார்க்க ஆர்வமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல முக்கியமான விடயங்கள் இந்த நிகழ்வில் பகிரப்பட்டுள்ளதனை உணர முடிகிறது, இந்த நிகழ்வினை முழுமையாக ஆவணப்படுத்தி அனைத்து மக்களிடமும் எடுத்து சென்றிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  23. குறிப்பிட்ட அமைப்பினர் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதல் தொடங்கிவிட்டது, இதனை ஒத்த ஒரு சம்பவம் 90 களில் சோமாலியாவின் தலைநாகர் பகுதியில் அமெரிக்க இராணுவத்தினால் விமான தரையிறக்கம் மூலம் நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது, சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சோமாலியரை சந்தித்த போது அந்த விபரம் கேட்டேன், அவர் பிறப்பதற்கு முன்னர் இச்சம்வம் நிகழ்ந்தாக குறிப்பிட்டார் அந்த விபரம் தெரியவில்லை ஆனால் ஒரு புதிய தகவல் ஒன்றினை கூறினார் அதனை வழமையான ஒரு சதிக்கோட்பாட்டு விடயமாக கடந்து சென்றுவிட்டேன், அவர் கூறிய விடயம் சோமாலியாவின் இயற்கை வழங்கல்களை சுரண்டும் பல மேலைத்தேய நிறுவனங்களு க்கும் அங்குள்ள குழுக்களுகும் உள்ள வாய்க்கால் தகராறின் வெளிப்பாடு என்பதானது. 1953 இல் ஈரானில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியினை கலைத்து மீண்டும் அரச ஆட்சியாளர்களை சி ஐ ஏ ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பிண்ணணியில் அந்த மக்களாட்சிக்கும் இங்கிலாந்து எரிபொருள் நிறுவனமான வி பி நிறுவனத்திற்குமிடையேயான தகராறு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் கூறும் இக்குழுக்களின் பிண்ணனியில் ஈரான் இருப்பதால் அமெரிக்கா ஈரானை தாக்கிறதா என தெரியவில்லை, ஆனால் இந்தியர்கள் இந்த மத்திய கிழக்கு பிரச்சினக்கு பின்னால் சீனா இருப்பதாக நம்புகிறார்கள். இவற்றை பற்றி இந்த திரியில் பேசுவதனை தவிர்க்கிறேன் ( திரியின் தலைப்பிலிருந்து வேறுபட்ட விடயம்), ஏனெனில், பின் எனது கருத்தும் ஒரு கள உறவு ஒன்று கூறும் கருத்து போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும். அண்மையில் ஒரு பிறந்ததின நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன், பெருமளவில் குழந்தைகளும் பெண்களும் மட்டும் அந்த பார்க்கில் இருந்தார்கள்,நண்பரின் தந்தையுடன் சேர்த்து 4 ஆண்கள் மட்டும் ஓரிடத்தில் இருந்தார்கள், வேறுவழியின்றி அவர்க்ளுடன் போய் அமர்ந்து கொண்டேன் அதில் அனைவரும் என்னை விட வயது கூடியவர்கள், ஒருவர் மட்டும் எனது வயதொத்தவராக இருந்தார், அதுவும் அவர் தன்னை எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகப்படுத்திய பின்னரே உணர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தின் பின்னர் அவரை விட ஒரு வயது கூடிய ஒருவரின் பெயரினை கூறி நிங்கள் அவருடன் படித்தீர்களா என கேட்டார், இல்லை அவர் எனது மற்ற அண்ணாவுடன் படித்தவர் எனகூற இன்னுமொரு பெயரை கூறி அவருடன் படித்தீர்களா என கேட்டார் இப்போது எனக்கு குழப்பமாகிவிட்டதுஅவர் முன்னர் கூறியவரை விட இரண்டாவதாக கூறியவருக்கு இன்னொரு வயது அதிகம், ஆரம்பத்தில் எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகம் செய்துவிட்டு எதற்காக இப்படி குழப்பமாக கதைக்கிறார் எனக்கு அதிர்ச்சி, ஒருவாறு, நீங்கள் எனது அண்ணாவுடன் படித்தவர் என கூறிய பின்பு தனது தவறை உணர்ந்து கொண்டார். எந்த திரியானாலும் ஒரே விதமான கருத்தினை தொடர்ந்தும் பதிகிறார், நீங்கள் உள்ளடங்கலாக பலரும் அவரது கருத்தினை கண்டும் காணாமலும் கடந்து செல்வதனை போலவே நானும் கடந்து செல்வதுண்டு ஆனலும் மனதளவில் அனைத்து கள உறவுகளையும் மதிப்பதுண்டு முடிந்தவரை அனைத்து கள உறவுகளின் கருத்திற்கும் பதிலழிப்பதுண்டு, அனைவரிலும் கரிசனை உண்டு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.