Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1760
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Posts posted by vasee

  1. ட்ரம், பைடன் இவர்களை விட சிறந்த தலைவர்கள் அமெரிக்காவில் இல்லையா?

    வினோதம் நிறைந்த அமெரிக்கா!

  2. தற்போது வரை எந்த ஒரு செயற்கை நுண்ணறிவும் கூகிள் போன்ற இணைய தேடல் மூலம் தரவுகளை தாமாக சேகரிப்பதில்லை.

    இந்த செயற்கை நுண்ணறிவிற்கான தரவுகள் ஊட்டப்படுகிறது.

    பெரும்பாலும் இந்த தரவூட்டலில் பிழைகள் இல்லாவிட்டாலும் அது தெரிவு செய்யும் மாதிரிகள் மற்றும் அல்கோரிதங்கள் தவறாக இருப்பதாலும் இந்த பிரச்சினைகள் உருவாகிறது.

    தரவுகளுக்கான மாதிரிகளை curve fitting அடிப்படையில் தீர்மானிக்கின்றன இதில் பெரும்பாலும் over & under fitting, தவறுகள் ஏற்பட காரணமாகின்றன.

    மற்றது தரவுகளை பிரிப்பதிலும்(splitting data) தவறு ஏற்படலாம், ஆனாலும் இறுதியாக Training data, validate and test இல் இதன் குறைபாடுகலை கண்டுபிடிக்கமுடியும், இது நாளாந்த நடைமுறையில் பாவிக்கும் back test, optimization and forward test போன்ற நடைமுறையே, இந்த செயற்பாடு முழுமையாக பின்பற்ற படவில்லை என்பது தெளிவாகிறது, கூகிள் போன்ற மிக பெரிய கட்டுமானத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தின் செயற்கைநுண்ணறிவு இவ்வாறான குறைபாடுகளுடன் இருப்பது இந்த திட்டம் அவ்வளவு இலகு அல்ல என்பதை உணரகூடியதாக உள்ளது.

    • Like 1
  3. 10 hours ago, விளங்க நினைப்பவன் said:

    உண்மையா தான் அண்ணா  சொன்னேன். நம்பிக்கையானவர்கள் சொன்னது. ரஷ்யா தனது  விமானத்தில் இலவசமாக ஐரோப்பா வுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும் இப்படி சொல்ல முடியாதே இப்படியும்  சொல்வார்களா பிரசாரம் செய்வார்களா என்று தான் முதலில் தோன்றியது. இப்போது  எல்லாம்  இல்லை.

    ------------------------------------------
    வேறு இனத்தை சேர்ந்த தோழி சொன்னார்,  அவரது மதத்தை சேர்ந்த மதவாதிகள் சொன்னார்களாம் தங்கள் கடவுளால்  கொடுக்கபட்ட  பொருளாதார கொள்கைகளை ஐரோப்பியர்கள் களவு எடுத்து செயற்படுத்தி இன்று நல்லநிலையில் வாழ்கின்றார்கள். கடவுள் சொன்னதை சரியாக பின்பற்றாத தாங்கள் ஏழைகளாக  துன்பபடுகின்றவர்களாக  உள்ளோம் என்று.

    நான் பணிபுரியும் நிறுவனத்தில் முன்பு ஒருவர் பணிபுரிந்திருந்தார், 2 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலோனோருக்கு பணிநிறுத்தத்தின் போது அவர் தனது வேலையினை இழந்துவிட்டார், அவரது பெரை சுருக்கி எம் டி என அழைப்பார்கள்.

    அவர் தொடபில் ஒரு நகைசுவை பணியிடத்தில் நிலவியது, நிறுவனத்தின் எம் டி அவர் பணிபுரிந்த பகுதிக்கு தொலைபேசி இணைப்பெடுத்து யார் கதைப்பது என வினவ, இவர் எம் டி என கூறினாராம், அதற்கு நிறுவனத்தின் எம் டி நான் தான் எம் டி என கூற இவர் எதிர் தரப்பில் உள்ளவர் தன்னை கலாய்ப்பதாக நினைத்து இல்லை நான் தான் எம் டி என கூறினாராம் என யாரோ விசமத்தனமாக கதையினை கிளப்பிவிட்டுள்ளார்கள் என கருதுகிறேன்.

    உங்கள் பாணியிலான கருத்திற்கு நான் உட்பட பல இரசிகர்கள் உள்ளார்கள், உங்கள் பாணியினை மாற்றாதீர்கள்.

  4. On 20/3/2024 at 02:21, ரஞ்சித் said:

    ஈழத்தமிழர் தொடர்பான இந்தியக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்

    டெசோ அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அதே நேரம், தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாரிய மாற்றம் ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. ரஜீவுடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்த மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஜெயார் இட்டிருந்தார். இந்திரா காந்தியின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த ஜெயவர்த்தன, தன்னை இந்தியாவிந்தும், நேரு குடும்பத்தினதும், இந்திய மக்களினதும்  உண்மையான நன்பன் என்றும், பெளத்தத்தினை கடைப்பிடிக்கும் நேர்மையான முதிர்ந்த அரசியல்வாதியென்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் நலன்களை, குறிப்பாக தமிழ் மக்களின் நலன்களைக் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல்த் தலைவர் என்றும் காட்டுவதில் ஈடுபட்டிருந்தார்.

     ரஜீவ் காந்தியுடனான தனது முதலாவது சந்திப்பில் தான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன் என்றும், நேருவின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவன் என்று ஜெயவர்த்தன கூறினார்.

    1941 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஒழுங்குசெய்திருந்த ராம்கார் நிகழ்விலும் அவர் பங்குபற்றியிருந்தார். ஜவர்ஹல்லால் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை அவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்கு நேரு அனுப்பிய பதில்க் கடிதங்களையும் நேரு தொடர்பான ஆவணக் காப்பகத்திற்கு ஜெயார் அனுப்பிவைத்திருந்தார்.

    ரஜீவுடன் பேசிய ஜெயார், தமிழர் பிரச்சினை தொடர்பாக சாதகமான தீர்வொன்றினை வழங்க தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றியிருக்கும் தீவிரவாத அமைச்சர்கள் அதற்குத்தடையாக இருப்பதாகவும் கூறினார். மேலும், தமிழ் ஆயுதக் குழுக்கள் நடத்திவரும் பயங்கவாதத் தாக்குதல்கள் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் தனது முயற்சிகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு ஏதுவான நிலைமையினை இலங்கையில் உருவாக்குவதற்கு ரஜீவ் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

    மேலும், ரஜீவின் தாயாரான இந்திரா காந்தியும் தமிழ்த் தீவிரவாதிகளால் சூழப்பட்டிருந்ததாக ரஜீவிடம் கூறினார் ஜெயவர்த்தன. அதனாலேயே தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திரா காந்தி பக்கச்சார்பான நிலையினை எடுத்திருந்தார் என்றும் ஜெயார் கூறினார். இந்தியாவின் இந்த பக்கச்சார்பான நிலைப்பாட்டிற்கு ஒற்றைக் காரணமாக பார்த்தசாரதியை ஜெயார் குற்றஞ்சாட்டினார். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பார்த்தசாரதி வகித்த பாகம் தொடர்பாக சிங்கள மக்கள் பலத்த சந்தேகங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர் ரஜீவிடம் கூறினார். ஆகவே, புதிய இந்திய அதிகாரிகளை சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடலாம் என்கிற அச்சம் காரணமாக இந்தியாவின் மத்தியஸ்த்தத்தினூடாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது கடிணமானதாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.

    ரஜீவிடம் மேலும் பேசிய ஜெயவர்த்தன, இனப்பிரச்சினைக்கு நீதியானதும், இறுதியானதுமான தீர்வொன்றினைக் காண்பதற்கு தான் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்பதகாவும், இதனைச் செய்வதற்கு இந்தியா தற்போது எடுத்திருக்கும் தமிழருக்குச் சார்பான நிலையிலிருந்து விலகி, பக்கச்சார்பின்றிச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்தியாவுடனான உறவினைப் புதுப்பிக்க தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

    அரசியலிலும், இராஜதந்திரத்தில் கற்றுக்குட்டியாகத் திகழ்ந்த ரஜீவ் காந்தி ஜெயார் விரித்த வலையில்  அகப்பட்டுக்கொண்டதுடன், ஜெயாருக்கு நான்கு வாக்குறுதிகளையும் அளித்தார்.

    1. இந்தியா ஒருபோதும் இலங்கையினை ஆக்கிரமிக்காது.

    2. பேச்சுவார்த்தைகளில் தூதராகச் செயற்படும் பார்த்தசாரதியை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த இந்தியா விருப்பம் கொண்டிருக்கிறது.

    3. இலங்கையுடனான உறவைப் புதுப்பிக்க இந்தியா நாட்டம் கொண்டிருக்கிறது.

    4. இலங்கையில் இறையாண்மையும், ஒருமைப்பாடும் இந்தியாவினால் பாதுகாக்கப்படும்.

    ஆனாலும், தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலேயே தீர்வு அமைந்திருக்க வேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் அழுத்தமாகக் கூறினார் ரஜீவ். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இனப்பிரச்சினை நீண்டு சென்று, இறுதியில் இலங்கை பிளவுபடுவது நடக்கும் என்றும் ஜெயாரை அவர் எச்சரித்தார். 

    அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயார், "உங்களுக்கும் அருகிலிருக்கும் சிறிய நாடுகளின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்ள முயலுங்கள், நீங்கள் இளமையானவர், பெரியதொரு நாட்டிற்குத் தலைவராக வந்திருக்கிறீர்கள், நீங்கள் நிச்சயம உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள், உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

    இந்த பகுதி தமிழர் உரிமை போராட்டத்தில் மிக முக்கிய திசை திருப்ப புள்ளியாக அமைந்துவிட்டது, ஒரு மோசமான நிகழ்வினை ஜே ஆர் தனக்கு சாதகமாக்கி கொண்டார் என்பதனை தெளிவாக காட்டுகிறது.

    ஜே ஆர் தொடர்பாக இந்த தமிழர் போராட்டத்திற்கு காரணமானவர்(UNP) என சிங்கள தரப்பால் குற்றம் சாட்டப்படுகின்றவேளை அவர் தனது சாதுரியத்தினால் தமிழர் போராட்டத்தினை நசுக்குவதற்கான புறக்காரணிகளை உருவாக்கிவிட்டிருந்தார்.

    இவ்வாறான ஒரு தமிழரசியல்வாதி தமிழர் தரப்பில் இதுவரை இல்லை.

    • Like 1
  5. முதலில் இந்த தமிழ் இணைய செய்தியே உண்மையா என்பதை சர்வதேச ஊடகம் மூலம் உறுதிப்படுத்தமுடியுமா?

    இலங்கை ஜனாதிபதியின் இருபுறமும் இருப்பவர்களின் மேல் சட்டை ஓரளவிற்கு ஒத்து போவது போல உள்ளது, இலங்கை ஜனாதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு ஊழியர்களின் படத்தினை மாற்றி அமைத்திருக்கிறார்களா என சந்தேகம் வருகிறது.😁

     

  6. இந்த சமகாலத்தில் ( பனிப்போர் காலம்) இந்த பிராந்தியம் தவிர தென் கிழக்காசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளிலும் இதே போன்ற  சம்பவம் நிகழ்ந்தேறியது, ஆனால் அங்கு வேறு வேறு மதங்கள் இருந்தன அதற்காக குறித்த மதங்களை யாரும் குற்றம் சாட்டவில்லை, அதே போல் எந்த மதத்திலும் போதை பொருள் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவும் இல்லை.

    ஆனால் அனைத்து மதங்களிலும் பிற்போக்கான நடைமுறை இருந்துள்ளது, தற்போதும் இருக்கிறது, இந்த வட்டத்திற்குள் நின்று எந்த மதத்தினையும் குறை கூறுவது கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவது போலாகும்.

    ஒரு பெரும்பான்மையினத்தவர் சிவலிங்கத்தினை பற்றி கேவலமாக கூறினார் (அதனை சைவர்கள் உலகின் படைப்பாக கூறுவர் என நினைக்கிறேன்), அவரிடம் அதற்கான அறியும் ஆர்வம் இருக்கவில்லை, அவரது நோக்கம் கேவலப்படுத்துவதுதான், அவரவர் தாமாக  ஒரு நிலைப்பாடாட்டினை எடுத்து அதற்கு கூறும் காரணங்களை அவர்கள் தம்முடனேயே பொருத்தி பார்க்க தவறுவதாலேயே இவ்வாறான கருத்துகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கும் அவர்கள் குற்றம் சாட்டபடுவர்களுக்கும் எந்தவித வேறுபாடும் இருக்காது என்பதை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

  7. 19 hours ago, nedukkalapoovan said:

    எல்லாம்..ஹராம் ஹராம் என்று கொண்டு இந்த தாடிக்கும்பல் செய்யுற கூத்தே.. தாங்க முடியவில்லை.  அதுகள் உலகம் பூரா வியாபித்திட்டு.. எனி கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகு அல்ல.

    அமெரிக்க உளவு நிறுவனம் தனது நடவடிக்கைகளுக்காக (ஆட்சி கவிழ்ப்பு, அரச எதிர்ப்பு போராட்டங்கள்) ஆசிய நாடுகளில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டது, அதன் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானினூடாக தற்போதும் பெரியளவில் போதைபொருள் இந்தியா இலங்கை போன்ற நாடுக்ளுக்கு கடத்தப்பட்டு வருகிறது, இதற்கு ஏற்ற தொடர்பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் காணப்படுவதால் இந்த நிலை காணப்படுகிறது.

    ஒரு குறிப்பிட்ட சிலரின் செயலுக்கு ஒட்டுமொத்த சமூகத்தினை எவ்வாறு குறை கூறமுடியும்?

  8. அமரர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கியிருந்த வீட்டினை சுற்றி வளைந்த இந்திய தரப்பு அமரர் ராஜீவ் பிறந்த தினம் வரை பொறுத்திருந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டதாக நினவுள்ளது.

    21 minutes ago, satan said:

    சாந்தனின்  மரணத்தின் மூலம் இந்தியா இலங்கைத்தமிழருக்கு சொல்லும் செய்தியென்ன? இன்னும், இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் என சத்தியம் செய்து காத்திருப்போரை என்ன சொல்வது? தமிழக அரசியல்வாதிகள் கூட அவரின் விடுதலைக்காக குரல் கொடுக்கவில்லையே? நம் துயருக்காக நாமே அழுது, நாமே துடைத்து, அதிலிருந்து மீளும் வழியை நாமே தேடுவோம்.            

    இந்தியா எமக்கு உரிமைகள் பெற்றுத்தராது, அதற்கான புறச்சூழ்நிலையினை உருவாக்கக்கூடிய அரசியல் தலைமளும் எம்மிடம் இல்லை.

  9. 6 hours ago, Justin said:

    சிரிப்பு நல்லது தான், அதற்காக நீங்கள் standup comedian ஆக நடந்து கொண்டிருப்பது இன்னொருவரின் மரணவீட்டில். இது உலகின் எந்த பண்பாட்டிலும் இல்லாத அருவருப்புத் தரும் ஒன்று!

    "ஒன்றாகப் பயணிப்போம்" என்று நேற்று அறிக்கை விட்ட விசுகர், உங்கள் கொமெடியை சீரியசாக மேற்கோள் காட்டியிருப்பதைக் கவனியுங்கள்😎!

    எனவே தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் deadpan comedy script ஐ! எங்களுக்கு சிரிப்பு, விசுகர் போன்றோருக்கு பிடித்துக் கொள்ள ஒரு கற்பனைக் கயிறு! ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!😂

    நான் கூறிய விடயம் சாதாரணமானது அது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது என கூறியது நீங்கள், தற்போது நீங்களே வந்து மரணவீட்டில் பண்பாடில்லாமல் நகைசுவை செய்கிறேன் என என் மேல் பழி போடுகிறீர்கள்.

    கடவுள் இரண்டு மனிதர்களிடம் கேட்டாராம் உலகை சுற்றி பார்த்துவரும்படி முதலாமர் வந்து சொன்னாராம் உலகம் முழுவதும் அயோக்கியனாக உள்ளார்கள் என்று, இரண்டாமர் வந்து கூறினாராம் உலகம் முழுக்க நல்லவர்களாக உள்ளார்கள் என்று.

    இந்த கதையினை கூறுவதன் பொதுவான நோக்கம் நல்லவர்களுக்கு மற்றவர்களும் நல்லவர்கள் அது போல தீயவர்களுகும், ஆனால் அடிப்படையில் இதுவும் தவறு உள்ளதை உள்ளவாறு பாருங்கள்.

    இரண்டு விஞ்சானிகள் ஒருவர் தனது தச்சனுடன் வாதிட்டார் எப்படி குட்டிப்பூனையும் தாய் பூனையும் கதவிலுள்ள பெரிய துவாரத்துனூடாக செல்லும் சிறிய பூனை சிறிய துவாரத்தினூடாகத்தான் செல்லும் என, மற்றவர் பணிப்பெண் கொடுத்த கடிகாரத்தினை கொதி தண்ணீரில் போட்டு விட்டு முட்டையினை பார்த்து கொண்டிருந்தார்.

    இதனை சாதாரணமானவர் செய்தால் அதற்கு வேறு ஒரு வடிவம் கொடுக்கப்படும் ஆனால் அவ்வாறான செயல்கள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முகம்சுளிப்பினை ஏற்படுத்தும், ஆடையில்லாமல் சென்ற அரசன் போல, அதிர்ஸ்டவசமாக அதனை மன்னனுக்கு உணர்த்த சிறு குழந்தையாவது இருந்திருக்கின்றது.

      நன்றி வணக்கம்

    • Like 2
  10. 2 hours ago, Kapithan said:

    என்ன சொல்ல வருகிறீர்கள்? 

     

    1 hour ago, Justin said:

    ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்!

    உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன!

    (விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)

    இந்த தீர்வுதிட்டத்தினை யார் வேணுமென்றாலும் தயாரிக்கலாம் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர், நீலன் தயாரிக்காவிட்டால் வேறு ஒருவர் தயாரித்திருப்பார்.

    ஏற்கனவே தீர்வுதிட்டம் தயாரித்துவிட்டாகிவிட்டது அதன் பின் கொல்வதால் என்ன இலாபம், அத்துடன் அப்படி ஒருவருக்காக பல போராளிகளின் உயிரினை பணயம் வைக்குமளவிற்கு என்ன இலாபம் (நீலன் திறமையான துறைசார் நிபுணர் அவரை எந்த விதத்திலும் தரக்குறைவாக கூறவில்லை).

    இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பதுதான் எனது சந்தேகம், 

    ஜஸ்ரின் உங்களுக்கு சிரிப்பூட்டியதில் எனக்கு சந்தோசம், வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

    • Like 1
    • Thanks 1
    • Haha 1
  11. 2 hours ago, Kapithan said:

    Joseph Elder

    1930-
     

    Joseph Elder is an academic and lifelong Quaker peace activist with experience of mediating conflicts in Kashmir, Vietnam, Korea and Sri Lanka.  He is a currently professor of Sociology and Languages and Cultures of Asia at the University of Wisconsin, USA.

    Elder was born in a Kurdish region of Iran, the son of a Presbyterian missionary, and lived in Tehran until he was 15.  While a student at Oberlin College, Ohio, during the Korean War (1950-53), he told his draft board that he would go to jail rather than be inducted. Shortly after, he became a Quaker.

    In 1966, along with Adam Curle, he was part of a Quaker delegation who attempted reconciliation between Pakistan and India following the war in Kashmir.  By listening carefully to each side and not imposing their own opinions, they were able to present the views of each party in the conflict to the other as though from the standpoint of an insider – an approach Quakers call ‘balanced partiality’.

    In 1969, Elder travelled twice to Hanoi on behalf of theAmerican Friends Service Committee to assess medical needs and to deliver medical supplies to civilians in North Vietnam. As well as assessing the need for medical supplies, he was able to convey messages from North Vietnam to the government in Washington.

    In 1984, during the civil war between the Tamil minority and the nationalist Sinhalese government in Sri Lanka, Elder was sent as one of the two-man Quaker delegation to determine whether Quaker involvement in reconciliation efforts was feasible.  They had no prior involvement or contacts in the country and were effectively starting from scratch. Although, on the surface, the two groups were highly polarised, Elder believed that, on the basis of the initial contacts, that Quakers could play a useful role as “message carriers” between the two groups.

    During 1985, Elder and his Quaker colleague travelled repeatedly to Sri Lanka and India to meet with leaders on both sides, on missions funded by QPSW (Quaker Peace and Social Witness) in London. Through a series of private meetings, they were able to sow the seeds for the formal mediation conference convened by the Indian government in Bhutan later that year.

    Elder imposed two key conditions for Quaker involvement.  First, nothing about the Quaker role should be revealed publicly.  Secondly, if either party felt their role was no longer useful, the Quakers would withdraw.  These conditions emphasised that the Quakers had no overriding interests in the conflict and that control of the negotiations remained in the hands of the disputing parties.

    In 1989, Elder found himself once again in the role of message carrier, this time between the North Korean government in Pyongyang and the US government in Washington.

    In the 1990s, Elder helped to found Madison Quakers, Inc. which has built a peace park and a school in My Lai (scene of a massacre during the Vietnam war) , and also provides micro-loans to village and ethnic women in Vietnam.

    In 1995, Elder became a founder member of the International Committee for the Peace Council, a group of religious and spiritual individuals who are internationally known and respected.  They come together to demonstrate that peace is possible, and that effective collaboration between religions to make peace is also possible.

    In 2009, he received a Lifetime Achievement Award for Peacemaking from Wisconsin Network for Peace and Justice.

    Recently, his experience of living in Iran and his long record of studying religion and society in South Asia have led to his views being sought on the tensions and conflict in Iran, Iraq and Afghanistan.

    Speaking of the role of the mediator, Elder said:

    “We have no power. We could easily be dismissed as do-gooders who should be back home minding our own business. The fact that we are taken as seriously… is a never-ending miracle, which I have only been able to explain in the context of our being able to provide a service which apparently is often not available through any other channel. So to this extent we have the power of the powerless of doing something which they can't do and they have no vehicle for doing.”
    https://www.quakersintheworld.org/quakers-in-action/201/Joseph-Elder

    Quakers have a long history of quiet assistance in peace processes in areas as diverse as Sri Lanka, Northern Ireland, Israel-Palestine and South Africa.
    https://www.quaker.org.uk/our-work/international-work/conciliation-work

    நன்றி கபிதான்.

    34 minutes ago, Kapithan said:

    உங்கள் கருத்தின்படி நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படாத எதுவுமே பொதியுமல்ல தீர்வுமல்ல.  சரி அப்படியே வைத்துக்கொண்டாலும்,  நடைமுறைப்படுத்த எந்த முயற்சியுமே எடுக்கப்படாத ஒரு விடயத்திற்கு ஏன் மரண தண்டனை”? 

     

     

    தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை).

    இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன்.

    இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து  அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன்.

    இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது.

    அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.

    • Thanks 2
  12. முன்பு ஒரு தடவை சிஙகள விவசாய அமைச்சர் ஒருவர் கிளிநொச்சிக்கு வந்த போது ஒருவர் மைச்சரை கவர்வதற்காக ஒரு ஆர்வக்கோளாறில் அமைச்சருக்கு வெங்காயத்தில் மாலை செய்து போட்டாராம் அமைச்சர் அதனை மறக்காமல் தான் பேசும் போது ஆர்வக்கோளாறில் தமிழில் வெங்காயம் போட்ட நபரை குறிப்பிடுவதாக எண்ணி "வெங்காயங் போட்ட மாலை" என தனக்கு தெரியாத மொழியினை கேட்டு பிழையாக கூற மக்கள் சிரித்தார்களாம், வெங்காயம் மாலை போட்டவருக்கு அவமானமாகிவிட்டது.

    இப்ப எனது நிலை வெங்காய மாலை போட்டவரின் நிலை.

    6 minutes ago, Elugnajiru said:

    அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா?

     

    இங்கிலாந்தில் உள்ள குவேக்கர்ஸ் எனும் அமைப்பின் உதவியினுடனான திட்டம் அது, அது உண்மை என அப்போது அவர்களும் உறுதி அழித்ததாக நினைவில் உள்ளது.

  13. 23 minutes ago, island said:

    நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி.  1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட  இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம். 

    நன்றி ஐலன்ட், இப்படித்தான் கடந்தகால அழிவுகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை விழிப்பில் வைத்திருக்கவேண்டும். 

    • Like 1
  14. ஒரு ஊரில் முதல் தடவையாக மக்கள் மனம் கவர்ந்த ஒரு அரசியல் வாதி தேர்தலில் போட்டியிடடார், மக்களுக்கு அவர் ஒளியமயமான எதிர்காலத்தினை தனது வாக்குறுதியாக வழங்கினார், மக்கள் தேர்தலில் அவருக்கு போட்டி  போட்டுக்கொண்டு வாக்களித்தனர்,

    அந்த அரசியல்வாதி அதிக பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.

    மக்கள் தமது ஒளி மயமான எதிர்கால கனவுடன் காத்திருந்தனர்,  நாட்கள் மாதங்களானது எந்த  ஏற்படவில்லை பொறுமையிழந்த மக்கள் அரசியல்வாதியிடம் முறையிட சென்றனர்,

    மக்களை பார்த்து சிரித்துக்கொண்டு அனைத்து சவுகரியங்களுடன்  கொண்டிருந்த அரசியல்வாதி சொன்னார் உங்கள் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    மக்களுக்கு உண்மை புரிந்தது, தாம் ஏமாற்றப்பட்டு விடடோம் என ஆனால் யதார்த்தத்தினை புரிந்து கொண்டார்கள்.

    வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் காலடியில் வந்து விழும், கடந்த காலத்தில் கூட பல தீர்வு திட்ட்ங்கள் தானாக வந்தது, எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழும் நம்புங்கள் மக்களே.

    அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதுவும் இல்லை.

    சிங்கள அரசினை முழுமையாக நம்புங்கள் அவர்கள் சரியான தீர்வினை தருவார்கள்.

    அது எவ்வாறென்றால் திரோபதை சபையில் தனக்கு நிகழ இருந்த அவமானத்தினை தடுக்க அந்த அவையில் இருந்த தனக்கு வேண்டப்படடவர்கள், வேண்டப்படாதவர்கள் என எல்லோரையும் கேட்டு முடியாமல் கடைசியாக கண்ணனிடமும் வேண்டியும் எதுவும் நிகழவில்லை.

    இறுதியாக தனது கைகளை ஆடையில் இருந்து விட்டு இரு கரங்களையும் வானை நோக்கி உயர்த்தி (முழு சரணாகதி) கேட்டு நிகழ இருந்த அசம்பாவிதத்தில் இருந்து தப்பிக்க கொண்டார்.

    இந்த சரணாகதி அரசியல் மூலம் இதுவரை எந்த மக்களும் உரிமைகள் பெற்றதாக நான் அறியவிலலை, ஆனால் முதல் தடவையாக இலங்கை மண்ணில் நிகழ உள்ளது, இதில் கண்ணனாகவும் துச்சாதனகவும் இருப்பது சிங்கள இனவாத அரசு, இந்த புதிய வகை போராடடத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் கல்விமான்களுக்கும் எமது மக்கள் நன்றி கடன்பட்டவர்கள்.

    இது கத்தியின்றி இரத்தம் சிந்தா புதிய புரட்சி, இதற்கு உரிய கால அவகாசத்தினை மக்கள் பொறுமையுடன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    புதிய சரித்திரம் படைப்போம்.

  15. 11 hours ago, Justin said:

    இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!

     இணையத்திலிருந்து ஆதாரம் எதுவும் இணைக்கவில்லை, ஆனால் வேறு உறவுகள் இணைத்துள்ளார்கள், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் என கருதுகிறேன்.

    1 hour ago, விளங்க நினைப்பவன் said:

    தொடர்ந்து கருத்து எழுதுங்கோ குருசோ.உண்மைகள்  யாதர்த்தம் தெரியவர வேண்டும்
    இங்கே உள்ள நிலமை  தவறான தகவலை சொல்லி சீமான் பாணியிலான Vasee யின் கருத்தை இரு தமிழர்கள் விரும்பி உள்ளார்கள் ☹️

     

    எனது கல்வித்தரத்தினை குறிப்பிட விரும்பாத கல்வி தரத்தினை கொண்ட என்னை ஒரு கட்சியின் மதிப்பிற்குரிய தலைவருடன் ஒப்பிட்டு யாழ் களத்தினை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.

    சாதாரண சம்பாசனைகளை கடந்து சாதாரணமாக கடந்து  விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. 

  16. 22 minutes ago, Justin said:

    உறவே,

    தென்பகுதியிலோ வடக்கு கிழக்கிலோ 50 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பது தான் ஒரிஜினல் சட்டம். இதை யாரும் மறுக்கவில்லையே? ஆனால், உங்கள் முதல் கருத்து இந்த காணி சீர் திருத்தம் மூலம் தமிழர்கள் காணி சிங்களக் குடியேற்றத்திற்கு பயன்பட்டது என்றல்லவா சொன்னீர்கள்? அதைத் தான் ஆதாரமில்லாத கருத்து என்கிறோம். உங்கள் உறவினரின் தென்னங்காணி சிங்களவர்களுக்கு வழங்கப் பட்டதா? இல்லையல்லவா?

     

    ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் எனது உறவினர்களின் அனுபவத்தினையே இங்கு கருத்தாக பதிவிட்டுள்ளேன் என.

     

    22 minutes ago, Justin said:

    அது மட்டுமா? 50 ஏக்கருக்கு கூடிய காணி வைத்திருந்தோர் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் மைனர்களாக இருந்தாலும் ஒரு விலைக்கு விற்கலாம், அல்லது அரசு எடுத்த காணியை அந்தக் குடும்பத்தினர் யாராவது மீள ஒரு நியாய விலை கொடுத்து வாங்கலாம் இப்படியெல்லாம் பல வழிகளில் பரம்பரைச் சொத்து துண்டாடப் படாமல் ஒட்டைகள் விட்டுத் தான் சீர் திருத்தம் நடந்தது.

     

    இல்லை ஒரே குடும்ப உறுபினர்களுக்குள் மாற்றமுடியாது. எனவே கேள்விப்பட்டேன் அதனாலேயே பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருந்தது.

  17. எனது கருத்துகளால் இறந்தவர்களுக்கு இழுக்கு ஏற்படக்கூடாது என விரும்புவதுபோலவே மற்றவர்கள் கருத்துகளாலும் அவ்வாறான இழுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சில கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்துள்ளேன்.

  18. 25 minutes ago, Justin said:

    தரவு என்பது objective அல்லவா? 1972 நிலச்சீர்திருத்தம் மூலம் பெரிதும் காணிகளை இழந்தது தென்பகுதியில் வளவு காரர்கள் என அழைக்கப் பட்ட பணக்காரர்கள். ஏனெனில், மில்லியன் கணக்கான ஏக்கர்கள் வயல் காணிகளும், வயல் செய்யாத காணிகளும் அவர்கள் வசமிருந்தே அரசுக்குப் போனது. அதைக் கூட அரசு உடனே ஏழைகளுக்குக் கொடுக்கவில்லை. அரச கூட்டுத் தாபனங்கள் எதையும் செய்ய முதலே 1977 இல் இந்தச் சட்டமெல்லாம் உதாசீனம் செய்யப் பட்டு விட்டது!

     

    நில உச்ச வரம்பாக வெறும் 50 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டதாக நினைவுள்ளது, தென்பகுதியில் உள்ள தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை வட கிழக்கிலும் அந்த சட்டம் அமுலில் இருந்தது, எனது உறவினர் ஒருவர் பளையில் தென்னந்தோப்பு வைத்திருந்தார் அந்த சட்டத்திலிருந்து தப்ப சட்டத்தரணியினை நாடினார், சட்டத்தரணி அந்த குறிப்பிட்ட நில உச்சவரம்பிற்கு மேலான பகுதியினை தானே சுருட்டிவிட்டார், இந்த இருவரும் எனது உறவினர்கள். அத்துடன் நான் அறிந்தவரை அனைத்து நிலங்களும் விளைச்சலில் உள்ள நிலங்களாக இருந்தது.

  19. 4 hours ago, விளங்க நினைப்பவன் said:

    Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன்.  இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.

    உங்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால் நீங்கள் நினைத்ததுபோல் நான் இல்லை, ஆனால் எனது கருத்துகளை அனுபவத்தினடிப்படையிலும் (உதாரணமாக curve fitting தொடர்பான கருத்து), அனுபவப்பட்டவர்களின் கருத்தினூடாகவும் (உதாரணமாக நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான கருத்து) மட்டுமே கருத்து கூறுவதுண்டு.

    அனைத்து திட்டங்களும் வெளியே நல்ல பெயர்களிலேயே அறிமுகப்படுதப்படுகிறது உதாரணமாக மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சிங்கள குடியேற்றம் போல், இதனை நீங்கள் இணையத்தில் தேடினால் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    எது சரி, பிழை என்பது ஒவ்வொருவரது சுய முடிவில் தாங்கியுள்ளது.

    • Thanks 1
  20. மிக சிறப்பாக கருத்து தெரிவித்துள்ளார், ஆனால் அது எந்த அளவில் சாதாரண மக்களால் உள்வாங்கப்படுகிறது எனும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது, இந்த காணொளியில் இலங்கையின் மோசமான பணவீக்கம், மிக குறுகிய காலத்தில் கிட்ட தட்ட இரட்டிப்பாகும் வரி என்பவை சாதாரண மக்கள் எதிர்வரும் காலத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட போகிறார்கள் என கோடிட்டு காட்டுகிறது.

    இலங்கையின் எதிர்காலம் உவப்பானதாக இருக்க போவதில்லை என்பதனை மக்கள் உணரவில்லையெனவே கருதுகிறேன்.

    இந்திய வங்கி வருகைகள் தற்போது எந்த தாக்கத்தினையும் (பாதகமான) ஏற்படுத்தாது என நம்புகிறேன்.

    இலங்கையின் பொருளாதாரம் வெறும் 90 பில்லியன் பொருளாதாரம், இந்திய வங்கிகள் இலங்கை பண கொள்கைகளில் (Monetary policy) விரும்பினால் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தலாம், அத்துடன் திடீர் பொருளாதார பிரளயத்தினையும் விரும்பினால் உருவாகலாம், சிறிய நடுத்தர முதலீடுகளை சிதைக்கலாம், நாணய மாற்று வீதத்தில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக பொருளாதார ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம், இவை அனைத்தும் எதிர்மறையான விடயங்கள் ஆனாலும் வழமையான பல சாதகங்கள் உண்டு என்பதனை ஏற்க வேண்டும்.

  21. Curve fitting என்பது தரவு புள்ளிகளை எழுந்தமானமாக நாம் விரும்பியவாறு இணைப்பதன் மூலம் நாம் விரும்பும் காட்சியினை உருவாக்கலாம்.

    ஆனால் உண்மையாக அவை இருக்கமாட்டாது, ஆனால் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என நினைத்து எம்மை நாமே ஏமாற்றுவதில் முடிவடையும்.

    இலங்கையில் தமிழ் மக்கள் செழிபாக இருந்த போது அவர்களை அழிக்கும் எண்ணத்துடன் பொருளாதார ரீதியாக நிலசுவாந்தர்களாக இருந்த தமிழ் மக்களை குறிவைத்து 1972 இல் நில உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்டு குறித்த அளவிற்கு அதிகமான நிலத்தினை அரசு கைப்பற்றி அதனை சிங்கள மக்களிடம் பகிர்ந்தழிக்கப்பட்டது.

    பெருந்தோட்டங்கள் பற்றிய அறிவற்ற சிங்களவர்கள் சோம்பேறித்தனமான போக்குடன் செயற்பட்டு உற்பத்தி வீழ்ச்சியினை ஏற்படுத்தினார்கள் ( இவர்கள் சாரம் சேட்டிற்கு மேல் கோட்டினை அணிந்து கையில் குடையுடன் வலம் வந்தார்களாம்).

    அத்துடன் பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டமாகவே பராமரித்தாலேயே இலாபம் ஈட்ட முடியும், இவ்வாறுதான் சிங்கள அரசுகள் நாட்டிற்கு பேரழிவினை ஏற்படுத்தினார்கள், செல்வந்த வணிகர்களான தமிழ் வணிகங்களை இலக்கு வைத்து நடாத்திய இனக்கலவரங்கள் அவர்கள் விரும்பிய அழிவினை தமிழர்களுக்கு ஏற்படுத்தினாலும் நீண்ட காலத்தில் தற்போது இலங்கை ஆபிரிக்க நாடுகளின் நிலமையினை நோக்கி செல்லும் நிலையினை உருவாக்கி விட்டது.

    தமிழர்களின் கல்வி பொருளாதாரம் என அனைத்தையும் பறித்து அவர்களை ஏதிலிகளாக்கியவர்கள், இன்று உலகத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு, அவர்களே சொந்த செலவில் சூனியம் வைத்து விட்டார்கள்.

    இவ்வளவையும் செய்துவிட்டு எப்படி இந்த சின்ன நாட்டை இரண்டாக பிரிப்பது என அப்பாவியாக கேட்பார்கள், 

    தமிழ் மக்கள் மீண்டும் பழைய நிலை வர விரும்பாத இந்த சிங்கள அரசுகளிற்கு உடந்தையாக இருந்து தமது சுயநலனுக்காக தமது இன மக்களுக்கே தீமை செய்யும் நபர்களும் அதனை நியாயப்படுத்துவர்களும் தமிழ் இனத்தில் மட்டுமே இருக்கமுடியுமா என எண்ணத்தோன்றுகிறது.

     

    • Like 1
    • Thanks 1
    • Confused 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.