Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1760
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. முரளிதரன் புலிகளை சந்தித்தது போல காட்சி அமைக்கப்பட்டுள்ள்தாக கூறப்படுகிறது இதன் உண்மை தன்மை பற்றி விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
  2. ஆம், வேறு திரிகளி உரையாடியுள்ளோம். பிரித்தானியா இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுக்க காரணமாக இருந்ததிற்கு காரணமாக கூறப்படுவது, பிரித்தானியா அப்போது அதன் கடன் தொகை GDP இல் 240%, தற்போது அமெரிக்கா 122% GDPஇல் கடனை கொண்டுள்ளது, முன்பு கணிக்கப்பட்ட 5% ஆண்டு கடனதிகரிப்பினடிப்படையில் 31 ரில்லியன் கடனில் (தற்போது 33 ரில்லியன்) 50.3 ரில்லியன் கடன் 10 ஆண்டுகளில் ஏற்படும், தற்போது அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆண்டொன்றிற்கு சராசரியாக 5% என்றால் 10 ஆண்டுகளில் கிட்டதட்ட 37.7 ரில்லியன். ஆனால் தற்போது 2.1% பொருளாதார வளர்ச்சி 28.4 ரில்லியன் பொருளாதாரம், தற்போது பணமுறி வட்டி விகிதம் 5.95% வரை அதிகரித்துள்ளது, சராசரி கடனுக்கான வட்டி யாக 2.95% தற்போது செலுத்துகிறது, புதிய கடன் வட்டி 5% மேலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது இதனை கருத்தில் கொள்ளும் போது 10 வருடங்களில் இரண்டாம் உலக போரின் பின்னரான காலத்தில் பிரித்தானியாவின் நிலை அதாவது பொருளாதாரத்தினை விட 2 மடங்கு அதிகமான கடனினை உள்ள நாடாக அமெரிக்கா மாறிவிடும். நீங்கள் கூறுவது போல உக்கிரேனிற்கான 100 அல்லது 200 பில்லியன் செலவு என்பது அமெரிக்காவினை பொறுத்தவரை ஒன்றுமில்லை ஆனால், அமெரிக்க பொருளாதார கொள்கைக்கும் இராஜதந்திர கொள்கைக்குமிடையேயான முரண் பொருளாதார நலிவினை துரிதமாக்குகிறது, எதிர்காலத்தில் தற்போதய அமெரிக்க ஏகாதிபத்தியம் இல்லாமல் போவதற்கு காரணமாகும். இதனை தவிர்க்க வேண்டுமாயின் அதிகரித்த இராணுவ செலவீட்டினை கட்டாயம் மட்டுப்படுத்தியே ஆகவேண்டும் குறிப்பாக பல நாடுகளில் உள்ள தளங்களை உடனடியாக மூடவேண்டும்,மற்றது டொலரினை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும், மூன்றாவது பொருளாதார வளர்ச்சியினை தூண்டுவது, மூன்றாவது முதல் இரண்டிலும் தங்கியுள்ளதுடன் அரசின் பொருளாதார கொள்கையிலும் தங்கியுள்ளது. என கருதுகிறேன் எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  3. உக்கிரேனிற்கான மேற்கின் முழுமையான நிதி உதவி நின்றால் எனவே புட்டின் குறிப்பிட்டதாக கருதுகிறேன். உக்கிரேனது நாளொன்றிற்கான செலவாக் 100 மில்லியன் செலவிடப்படுகிறதாக உக்கிரேன் கூறுகிறது ஆனால் அந்த தொகை 200 மில்லியனுக்கு கூடுதலாக உள்ளதாக அண்மையில் எங்கோ வாசித்த நினைவு. https://kyivindependent.com/reznikov-russias-war-costs-ukraine-100-million-daily/#:~:text=Ukraine spends around %24100 million,state-run media outlet Ukrinform. உக்கிரேனின் பொருளாதாரம் 200 பில்லியன் பொருளாதாரம், அதாவது நாளொன்றிற்கு 1% தனது GDP இல் செலவு செய்தாக வேண்டும். தற்போது தனது GDP இல் 70% கடனை கொண்டுள்ளது, உக்கிரேனின் வட்டி விகிதம் 18% விகிதத்திற்கு சற்று கூடுதலாக உள்ளது. இந்த நிலவரங்களை வைத்து பார்க்கும் போது உக்கிரேன் மேற்கின் உதவிகள் நிறுத்தப்படுமாயின் தற்போது போல போரினை தொடர முடியாது எனவே கருதுகிறேன். மறுவளமாக எவ்வளவு காலம் இரஸ்சியா இந்த போரினை தாக்குபிடிக்கும்? இரஸ்சிய பொருளாதாரம் ஏறத்தாழ 1 ரில்லியன் என கருதுகிறேன் , அதன் கடன் 20% GDP இல் உள்ளது, வட்டி விகிதம் ஏறத்தாழ 13% அதன் பாதுகாப்பு செலவு 87 பில்லியன், இரண்டு வருட காலம் தொடர்ந்து போரினை தொடர்ந்தால் தற்போதுள்ள கடன் 30% GDP இல் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஏற்கனவே தனது இருப்பில் உள்ள தங்கத்தினை இரஸ்சியா விற்றதாக கூறப்பட்டது(அளவு தெரியவில்லை). இரஸ்சியாவின் சேமிப்பு முழுமையாக இல்லாவிட்டாலும் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனால் தற்போதுள்ள சூழ்நிலையின்படி ( பெற்றோல் விலை அதிகரிப்பு, பலனற்ற பொருளாதார தடை) எந்த வித பிரச்சினையுமின்றி போரினை தொடரமுடியும். பெற்றோலின் விலையினை சரிப்பதற்காக அமெரிக்கா மத்திய கிழக்கில் உற்பத்தியினை அதிகரிக்க கூறிய உத்தரவினை மத்திய கிழக்கு நாடுகள் அலட்சியம் செய்தமையினால் அமெரிக்கா தனது இருப்பினுள் இருந்த பெற்றோலினை குறைந்த விலையில் விற்றுவிட்டு தற்போது வெறும் 17 நாள் இருப்பு எனும் ஆபத்தான கட்டத்தில் நிற்கிறது. முன்பு ஒரு திரியில் குறிப்பிட்ட 2030 இல் இரு வேறுபட்ட வட்டி விகிதத்தில் அமெரிக்க கடன் (வட்டி விகிதம்2.5%) 1 ரில்லியன் கடன் வட்டி, அடுத்த வட்டி விகிதம் (5%) 2ரில்லியன் கடன் வட்டி என ஒரு அண்ணளவான கணிப்பினை அந்த இலக்கங்களுடன் குறிப்பிட்ட நினைவுள்ளது. https://www.foxbusiness.com/economy/the-us-paying-record-amount-interest-on-national-debt இந்த தளத்தில் 2032 1.4 ரில்லியன் கடன் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மொத்த பாதீட்டில் 10% அதிகளவான கடன் வட்டி செலுத்தும் நிலை உருவாகும், ஏற்கனவே அமெரிக்க பணமுறியினை நாடுகள் விற்பதனால் அதன் yeild 5% மேலாக அதிகரித்து விட்டது, பல தடவை ஜெனற் ஜெலன் சீன விஜயம் செய்தும் பணமுறி விற்பனை அதிகரிப்பு குறையவில்லை, இதனை வேறு ஒரு திரியில் அமெரிக்க மத்திய வங்கி 1919 பின் முதல் தடவையாக பண இழப்பை சந்திக்கிறது என குறிப்பிட்ட நினைவுள்ளது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா விரும்பினாலும் இந்த போரிற்கு உதவிட முடியாது. போரினை சமாதானமாக முடிப்பதே சிறந்தது.
  4. தவறான செய்திகள் x தளத்தில் பரப்பபடுகிறதாக கூறப்படுகிறது.
  5. இந்திய அதிகாரிகள் கடன் வழங்குனர்கள் ஒரு குழுவாக செயற்படுவதன்மூலம் கடன் வழங்குனருக்கு சாதகமான விளைவுகளை ஐ எம் எபின் உதவியுடன் உருவாக்க விரும்பியிருந்தனர், ஆனால் இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கிய (40%) சீனாவுடன் தனியான ஒப்பந்தம் ஒன்றினை நிறைவேற்றி உள்ளதுடன் ஏனைய சிறிய கடன் வழங்குனர்களை(இந்தியா உள்ளடங்கலாக 60%) தனக்கு சாதகமான முறையில் கையாள விரும்புகிறது (விகிதாசார கடன் தள்ளுபடி) என கருதுகிறேன், எனது புரிதல் தவறாக இருக்கலாம். இலங்கையின் இராஜதந்திர மற்றும் பொருளாதார நலன் என இரு வகையில் இந்தியாவிற்கான அழுதமாக இதனை பார்க்கிறேன், கள உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன?
  6. Bloomberg News Thu, 12 October 2023 at 2:14 am AEDT·3-min read (Bloomberg) -- China reached a tentative debt agreement with Sri Lanka, front-running separate talks the International Monetary Fund and other creditors are holding with the South Asian nation and catching them by surprise. Most Read from Bloomberg Israel Latest: Sirens Sound in North, Biden Speaks to Netanyahu Israel Latest: Israeli Death Toll in Hamas Attack Reaches 1,200 Israel Forms Emergency Government for War Against Hamas Hamas Got Around Israel’s Surveillance Prowess by Going Dark IMF Caught Off Guard as China Strikes Sri Lanka Debt Deal The deal between Export-Import Bank of China and Sri Lanka was reached late last month, China’s Foreign Ministry said Tuesday, without providing details of the pact. The IMF, Paris Club members including Japan, and other lenders like India are expected to hold talks this week in Morocco on a debt restructuring plan. China, which isn’t part of that official group even though it’s one of Sri Lanka’s biggest creditors, has been pursuing bilateral negotiations with the South Asian nation instead. Peter Breuer, senior mission chief for Sri Lanka at the IMF, said while it was aware discussions were taking place with creditors, “we have not yet been informed about any specific agreements.” The multilateral lender would need to “assess the entire package of agreements in its totality to assess consistency with IMF debt targets,” he said. Officials from two creditor nations, who asked not to be identified, said they weren’t informed about the terms and details of the China deal. The preliminary pact is not expected to change efforts by the official creditor committee to try to reach a debt deal in Marrakech, which would include safeguards to prevent favorable payment terms to China, one of the people said. An Indian official involved in the debt discussions said New Delhi has been pushing for equal and fair treatment in the restructuring plan, and hopes that all creditors are transparent in their approach. Sri Lanka owes about 40% of its bilateral debt to China and 16% to India, according to estimates from the IMF. Reaching a deal quickly with its creditors will allow Sri Lanka to keep tapping funds from its $3 billion bailout program with the multilateral lender. Sri Lanka’s central bank Governor Nandalal Weerasinghe and Junior Finance Minister Shehan Semasinghe are in Marrakech this week at the IMF and World Bank annual meetings. Semasinghe met with Robert Kaproth, deputy assistant secretary for the US Treasury, he said in a post on social media platform X, with the two discussing the IMF program and the debt restructuring process. The official creditors committee was aiming to sign a memorandum of understanding with Sri Lanka at the Marrakech meeting without the participation of China, Bloomberg News reported last month. While nothing has been finalized yet, an announcement on that deal during the meetings this week is looking increasingly unlikely, according to people familiar with the situation, who asked not to be identified.. The Exim Bank deal comes a week before China hosts its third Belt and Road Forum in Beijing, a flagship program by President Xi Jinping that has faced criticism for burdening developing nations like Sri Lanka with debt. --With assistance from Anusha Ondaatjie, Ruchi Bhatia, Ramsey Al-Rikabi and Toru Fujioka. (Updates with status of official creditor deal in penultimate paragraph.) Most Read from Bloomberg Businessweek இலங்கையின் சாதுரியம் எந்த நாட்டிற்கும் இல்லை என கருதுகிறேன்.
  7. Jump the creek இனை testing the support என கூறுவார்கள் இந்த Support (0.52)இல் ஒரு தொகுதி speculators வாங்குவார்கள், ஆனால் 0.73 விலை மீறும்போது வாங்குவதுதான் சிறந்த முடிவு (நிகழ்தகவு சாதகமானது).
  8. நான் தற்போது AUDJPY நாணய மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபடுவதால் மற்ற முதலீட்டு பொருள்களை கவனிப்பதில்லை சில வேளை எனது கணிப்பீடு தவறாக இருக்கலாம். https://www.youtube.com/channel/UCVD_DPF1dSV9kZRuv6ePckg காணொளி கருத்து பகுதியில் எனது வர்த்தக கணக்கினை இனைத்துள்ளேன் அந்த இணையத்தளத்திற்கு சென்று வரைபடத்தினை அழுத்தினால் எனது வாங்கல் விற்றல் நடவடிக்கையினை அவதானிக்கலாம் அத்துடன் முடிந்த வரை வார இறுதியில் எனது தொழில்னுட்ப ஆய்வினை(AUDJPY) காணொளியாக பதிவிடுவேன். விலை தற்போதுள்ள விலையினை விட அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது போலவே உள்ளது, ஆனால் உறுதிபட கூறமுடியாது. எனது கணக்கு இலாப விகிதம் அதிகமாக இருப்பதற்கான காரணம் எனது கணக்கில் 3% ஒவ்வொரு வர்த்தகத்தின் போதும் Risk ஆக பயன்படுத்துகிறேன் இது ஒரு மிகவும் ஆபத்தான முயற்சி, ஆனால் தற்போது உள்ள சிறிய கணக்கினை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உயர்த்திய பின் ஆபத்தின் அளவினை குறைத்துவிடுவேன,
  9. 2018 இல் 3.00 ஆரம்பித்து பின்னர் அடிப்படை support 0.28 விலையில் பயணம் செய்து பின்னர் கிரிப்டோக்களின் அதீத வளர்ச்சிக்காலமான கோவிட் காலகட்டத்தில்(2021 ஆரம்ப காலத்தில்) 1.60 எட்டியுள்ளது. பின்னர் மீண்டும் 0.28 support வரை கீழிறங்கி (0.30) தற்போதுள்ள நிலையில் உள்ளது. இதனை தொழினுட்ப ஆய்வடிப்படையில் தெளிவாக கூறுவதாயின் கோவிட் காலத்திலிருந்த விலையின் இறங்குமுகத்தின் தொடர்ச்சி இன்னமும் மாறவில்லை. HH = higher high (Uptrend) HL = higher low (Uptrend) LH = Lower high (Downtrend) LL = Lower low (Downtrend) கோவிட் காலத்திலிருந்து தற்போது வரை Downtrend இலேயே உள்ளது, கடைசி Lower high 0.73, ஆனால் விலை 0.30 இற்கும் 0.52 இடையில் விலை ranging எனும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்த ஆண்டு நடுப்பகுதி வரை சென்றுள்ளது. இதனை Accumulation என கூறுவார்கள் இந்த ஆண்டு ஜூலை பகுதியில் ஏற்பட்ட 0.73 விகித அதிகரிப்பு மேலே உள்ள வரைபடத்தில் உள்ள Low volume sell off ஆகும் தற்போதுள்ள விலை நிலையினை Jump the creek இணையாக கூறலாம். அடுத்து நிகழ உள்ளது Mark up விலை 0.73 கடக்கும் போது speculators இணைந்து கொள்வார்கள், அதன்பின் விலை சடுதியாக அதிகரிக்கும். இவ்வாறுதான் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஆனால் அதற்கான வாய்புகள் அதிகம். The three skills of top trading இந்த புத்தகத்தினை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( கிட்டதட்ட 100 அவுஸ்ரேலிய காசளவில் வாங்கலாம்) இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம் மட்டுமே. ஆரம்பத்தில் அவசரமாக எழுதியதால் சரியாக வரைபடத்தினை அவதானிக்கவில்லை. தற்போது 3.00 அதிகபட்ச விலையாக உள்ளது அந்த விலையினை மீறினால் ஒப்பீட்டளவில் நல்ல எதிர்காலம் என கூறலாம்.
  10. தெரியவில்லை, தற்போது மேலோட்டமாக வரைபடத்தினை பார்த்தேன், தற்போதய uptrend line இலிருந்து விலை கீழிறங்கியுள்ளது, இதனை மட்டும் கருத்தில் கொண்டு விலை வீழ்ச்சியடையும் என கூற முடியாது விலை 0.45 விட்டு கீழிறங்கும் போது downtrend (Market structure) ஆரம்பமாகும். தற்போதுள்ள நிலையில் 0.58 resistance, 0.45 support நீண்டகால கணிப்பீடல்ல இது technical analysis அடிப்படையில் கூறப்பட்டது.
  11. intrinsic value என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
  12. நினைவில்லை, அப்படி கூறுவதற்கான முகாந்தரமும் இருப்பதற்கான வாய்ப்பினை முழுமையாக மறுதலிக்கவில்லை, அவ்வாறு கூறியிருப்பின் எனது கருத்து தவறான கருத்தாகும்.
  13. தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் கூறிய அந்த 4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை). பெரிய நிதிநிறுவனங்கள் தமது கையிருப்பிலுள்ள பங்குகளை விலை குறையாமல் விற்பதற்கு இந்த நல்ல செய்திகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. Buying climax இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4 தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).
  14. தவறு என்பது தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்வது தவறாகாது. தெரியாமல் செய்த தவறை உணர்ந்து அதற்காக வருந்துபவரை மேலும் மேலும் கஸ்டப்படுத்தாமல் விடுவதுதான் சரி.
  15. இல்லை, அப்போது பலர் இனப்பிரச்சினையினை ஐ எம் எப் தீர்க்க வலியுறுத்தும் என்பதற்குதான் அரசு செலவினை குறத்து வருமானத்தினை அதிகரித்து நிகர பாதீட்டினை உருவாக்குவதன் மூலம் தமது கடனை வசூலிப்பதனை உறுதி செய்யும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என குறிப்பிட்டேன்.
  16. ஆர்மேனியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையேயான இராஜதந்திர உறவுநிலை அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கிடையேயான உறவுநிலைக்கு ஒப்பானதாக கூறப்படுகிறது. பொதுவாக தமது சொந்த காலில் நிற்காமல் எந்த ஒரு நாடு வேறு ஒருவரினை நம்பி செல்கிறார்களோ அப்போதோ அவர்களின் தோல்வி உறுதியாகிவிடும். அனைத்து நாடுகளாலும் இந்தியாவினை போல இரண்டு சக்திகளுகூடாக தனது நலனை மட்டும் முதன்மைபடுத்தி இராஜதந்திர நகர்வினை மேற்கொள்ளமுடியாது. ஆர்மேனியா சிறிது காலமாக தனது இராஜதந்திர ரீதியிலான நகர்வினை மேற்கு நோக்கி திருப்பி இரஸ்சியாவிற்கு நெருக்கடி கொடுத்தது (அதற்கான நம்பிக்கையினை அமெரிக்கா ஏற்படுத்தியிருந்தாலும்). அமெரிக்கா நினைத்தது போலவே இரஸ்சியா நடந்து கொண்டது, இரஸ்சியாவின் இராஜதந்திர தோல்வி(ஆர்மேனியாவினை கைவிட்டது). தற்போது ஆர்மேனியாவின் நிலை அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான்.
  17. அவுஸ்ரேலியாவில் இடது சாரி அரசு(தொழில்கட்சி) ஆட்சிக்கு வரும் போது பெருமளவிலான அகதிகள் நிரந்தர வதிவுடமை பெறுவதுண்டு (தற்போது இடது சாரி ஆட்சியுள்ளது), அகதிகளிற்கு மிகவும் கடினமான சட்டங்களை உருவாக்குவது வலது சாரி அரசு (லிபரல்), கடந்த மூன்று தவணை வலதுசாரி அரசின் ஆட்சியில் மிகவும் கடினமான சட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது, அதனால் தற்போது நடத்தப்படும் போராட்டம் எந்த வகையில் தாக்கம் செலுத்தும் என தெரியவில்லை. இதனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தற்போது வேறு சில மேற்கு நாடுகளும் அவுஸ்ரேலியா நடைமுறைப்படுத்துகின்ற அகதிகெளுக்கெதிரான நடமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. ஆரம்பத்தில் வெள்ளைநிற குடியேற்ற கொள்கை கொண்ட அவுஸ்ரேலியா தற்போது அனைத்து மக்களையும் வரவேற்கிறது எந்தவித பாகுபாடுமின்றி, ஆனாலும் சில வேலை வழங்குனர் வெள்ளையினத்தவரே வேலைக்கு வேணும் எனும் வேலை விளம்பரங்களை செய்யும் நாடாகவும் அவுஸ்ரேலியா உள்ளது. கோவிட்டிற்கு பின்னரிலிருந்து மிக அண்மை வரை மாணவ விசாவில் வந்தவருக்கு வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்த அவுஸ்ரேலிய அரசு மீண்டும் ஒரு வாரத்திற்கு குறித்த நேர அளவு மட்டுமே வேலை செய்யலாம் எனும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவிட்டிற்கு முந்தைய காலத்தில் இருந்த குடியேற்ற அளவினை விட பெருமளவில் குடியேற்ற விகிதம் அதிகரித்துள்ளது எனகூறப்படுகிறது. வரலாற்றில் முதல் தடவையாக அதிகளவான உழைப்பாளர்கள் தமது பங்களிப்பினை செலுத்துகிறார்கள், இருந்தும் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை அதற்கு காரணம் அதிகளவான வேலைகள் உருவாக்கபடுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் நிலமை அவ்வளவு சாதகமாக இல்லை, மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை அவுஸ்ரேலியாவிற்கும் ஏற்பட்டுள்ளது, உக்கிரேன் இரஸ்சிய போர், பொருளாதாரத்தினை மந்தமாக்கியுள்ளது. அதனால் ஒரு அலகிற்கான உழப்பாளரின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது (உற்பத்தி குறைவடைய அதனை உற்பத்தி செய்ய உபயோகிக்கும் உழைப்பின் அளவு மாறாதிருப்பதால்). 3.7% ஆக உள்ள வேலையின்மை 4.7% ஆக 2024 இறுதிப்பகுதியில் ஏற்படும் என கணித்துள்ளார்கள். இந்த விடயங்களை பார்க்கும்போது அகதிகளின் விண்ணப்பங்கள் பெருமளவில் பாதகமான முறையிலேயே பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென கருதுகிறேன்.
  18. உங்கள் கருத்திற்கு நன்றி, இந்திய இலங்கை இராணுவத்தினரின் உடல்களை தமிழர்கள் எந்தவித அவமரியாதையினையும் செய்யாமல் தகுந்த முறையில் அடக்கம் செய்வதுண்டு. வன்னிக்காடுகளில் இந்திய இராணுவம் தனது இறந்த சகாக்களை அரைகுறையாக புதைத்து விட்டு சென்று நாலைந்து நாளில் அவை ஊதி நிலத்திலிருந்து வெளிதெரிய ஆரம்பிக்கும் போது காட்டு விலங்குகள் அவற்றினை இழுத்து சென்றுவிடும், அக்கால கட்டத்தில் பகல் பொழுதில் உணவு சமைப்பதற்காக அடுப்பு எரிக்க முடியாதநிலையில் (புகையினை வைத்து இடங்களை அடையாளம் காணமுடியும் என்பதால்) இந்த உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து எரிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன், அது போலவே இலங்கை இராணுவத்தினரி உடல்களையும் தகனம் செய்துள்ளார்கள், நினைவு தூபிகளை கூட சேதம் செய்வதில்லை, ஆனால் சிங்கள இராணுவத்தினால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கவில்லை. அது ஒரு சாதாரண சிப்பாயிலிருந்து மொத்த படையணிக்கு பொறுப்பாகவிருந்த சரத் பொன்சேகாவாலும் முடியவில்லை. சிங்களவர்களை இழிவுபடுத்துவது எனது நோக்கம் இல்லை, எனது அவதானிப்பின் அடிப்படையிலேயே கருத்து கூறினேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  19. இந்த தகவல் எனக்கு தெரிந்திருக்கவில்லை, அறியந்தந்தமைக்கு நன்றி, முதன் முதலாக அவுஸ்ரேலியாவில் கடனட்டையினை அறிமுகப்படுத்தியவர் என கூறப்படுகிறது, அதற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் டைனர்ஸ் கிளப், அமெரிக்கன் எக்பிரஸ் என்பனவே புழக்கத்தில் உள்ளதாக கூறுக்கிறார்கள்.
  20. அவுஸ்ரேலியாவில் பூர்வீக குடிகளை அடுத்து அவுஸ்ரேலியாவில் குடியேறிய பிரித்தானிய பின் புலம் கொண்டவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் நிலவியிருந்தமையால் பிரித்தானியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு நேசமான உறவு நிலை எப்போதும் நீடித்தே வந்திருந்தது. கடந்த கால உலக போர்களில் பிரித்தானியாவிற்கு ஆதரவாக அவுஸ்ரேலியா களமிறங்கியிருந்துள்ளது அதே போல் அமெரிக்காவிற்கும் ஆதரவாக இருந்துள்ளது. இரண்டாம் உலக போரின்போது அவுஸ்ரேலியா அமெரிக்க உதவியினை கோரிய போது அமெரிக்கா அதற்கு உதவியிருந்தது. இடையில் 1970 காலப்பகுதியில் அவுஸ்ரேலிய பிரதமராக இருந்த விட்லம், அமெரிக்க படைகளின் வியட்நாமில் நிகழ்த்திய ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்ததுடன், இங்கிலாந்து அரச குடும்ப அதிகாரத்திற்க்கீழ் தனது இறமையினை அவுஸ்ரேலியா இழந்திருப்பதுடன் வளங்கள் சுரண்ட படுவதாக கருதி எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினார், அவர் அவுஸ்ரேலியாவினை ஒரு அணிசேரா நாடாக்க முயன்றார் ஆனால் அவரினை இங்கிலாந்து அமெரிக்க உளவுத்துறையினர் ஆளுனரின் உதவியுடன் பதவியிறக்கி விட்டதாக கூறப்படுகிறது. https://www.theguardian.com/commentisfree/2014/oct/23/gough-whitlam-1975-coup-ended-australian-independence இந்த நிகழ்வு அவுஸ்ரேலிய அரசியல்வாதிகளை அமெரிக்க, பிரித்தானியாவினை தவிர்க்க முடியாத சூழ்நிலையினை உருவாக்கி விட்டுள்ளது, இதனால் அவுஸ்ரேலியா பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதுடன், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் புதிய பதற்ற நிலையினை உருவாக்குவதற்கும் அவுஸ்ரேலியா காரணமாகியுள்ளது.
  21. நன்றி, உங்களது கரிசனைக்கு, நலமாக உள்ளேன்.
  22. தொடர்ந்து எழுதுங்கள், கோவிட் காலத்தில் உலக நாடுகள் பெரியளவில் quantitative easing ஈடுபட்டமையால் சந்தையில் நிரம்பி வழிந்த காசில் பல முதலீடுகள் asset inflation உருவாக்கி விட்டிருந்திருந்தது, எதில் முதலிட்டாலும் இலாபம் எனும் நிலை உருவாகி அதனால் கிறிப்டோக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு போல அடுத்த ஒரு வருடத்திற்கு நிகழாது எனவே தோன்றுகிறது. அவுஸ்ரேலியா தனது முதலாவது வட்டி விகித குறைப்பினை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதமளவில் ஏற்படுத்தும் என கருதுகிறார்கள், ஆனால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது, அத்துடன் தற்போது மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுருக்கம் உழைப்பாளர்களின் ஒரு அலகு உறபத்திக்கான செலவினை அதிகரித்துள்ளது, இது பல நிறுவனந்கள் வேலை நீக்க அதிகரிப்பினை தூண்டும் என கூறப்படுகிறது. இந்த QE மற்றும் QT பயன்படுத்தும் பணமுறி வாங்கல் விற்றல் நடவடிக்கையால் நாடுகளின் மத்திய வங்கிகள் பெரும் இழப்பினை சந்திப்பதாக கூறுகிறார்கள், இது போல 1916 இல் நிகழ்ந்ததாக கூறுகிறார்கள், அதன் தொடர்ச்சியாக பெரும் பொருளாதார பேரிடர் ஏற்பட்டது (இவ்வாறு நிகழும் என எந்த பொருளியல் நிபுணர்களும் இது வரை கூறவில்லை அதனால் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை). இவற்றினை பார்க்கும் போது தற்போது நிகழும் அரசியல் பூகோள சூழ்நிலைகள் மாறாவிட்டால், புதிய முதலீடுகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
  23. தமிழர்கள் கொப்பேகடுவவின் படத்திற்கு கல்லெறிய மாட்டார்கள் என கருதுகிறேன், ஆனால் பொதுவாகவே சிங்களவர்கள் இறந்தவர்களினை அவமரியாதை செய்வது ஒரு பொதுவான விடயமாகவே இருந்து வந்துள்ளது. இதற்கு அவர்கள் கூறும் மிருகத்திலிருந்து சிங்கள இனம் தோன்றியதாக கூறும் அவர்கள் கருத்துகள் காரணமாக இருக்கலாம். சிங்களவர்களை பற்றி கஜேந்திரகுமாருக்கு தெரியாதிருந்திருக்கிறது என்பதனை ஏற்று கொள்ளமுடியாது. 90 களில் இஸ்ரேலிய மொசாட் அதிகாரி ஒருவர் வெளியிட்ட நூலில், இலங்கை இராணுவத்தினர் பயிற்சிக்காகவும், ஆயுத கொள்வனவிற்காகவும் இஸ்ரேல் சென்ற போது அவரது மேல் அதிகாரி அவரிடம் இலங்கை இராணுவத்தினரை குரங்குகள் என்றும் அண்மையில்தான் மரத்திலிருந்து இறங்கினவர்கள் எனவும் கூறி, அவர்களை கண்டு கொள்ளவேண்ட்டாம் எனவும், அவர்களுக்கு தேவையானதை கொடுத்தனுப்பி விடுமாறு (வாழைப்பழம்) கூறியிருந்தார், இலங்கை இராணுவத்தினர் இராடர் சாதனம் வாங்க சென்றிருந்தவர்களுக்கு, இராடர் சாதனம் என கூறி துறைமுகத்தில் எண்ணெய் கசிவுகளை சுத்தம் செய்யும் பெரிய வக்யும் கிளீனரை காட்டி ஏமாற்றியதாகவும், அந்த குறிப்பிட்ட அதிகாரி தனது சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்தாகவும் எழுதி இருந்தாக நினைவில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கே சிங்களவர்களை பற்றி தெளிவாக தெரிந்துள்ளது. இது ஒரு மற்ற இனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வில் கூறவில்லை, நாங்கள் பெருமைப்படும் சில விடயங்கள் மற்றவர்களின் பார்வையில் அசிக்கமாக தெரியும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.