எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும் அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத நாவால் வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள் அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.