-
Posts
9910 -
Joined
-
Last visited
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by தனிக்காட்டு ராஜா
-
-
இன்றுதான் வாசித்தன் ரகுநாதன் உங்கள் ஆதங்கம் நினைவுகள் அனைத்தும் அருமை அடிக்கடி வாருங்கள் இலங்கைக்கு
- 1
-
நடக்கும் நடந்த சம்பவங்களை தெளிவாக கூறியுள்ளார் எனக்கு தெரிந்த அருட் சகோதரி பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் ஆனால் அவருக்கு கிடைக்கும் சம்பளப்பணம் சபைக்கு செல்ல செலவுக்கு தேவையான பணம் முன்னர் 2500 ரூபா வழங்குவார்கள் தற்போது அதிகரித்திருக்கும் என நினைக்கிறன்.
(ஏனென்றால் நான் தான் அந்த புத்தகங்களை அப்டேட் பண்ண வங்கிக்கு செல்வேன் யாருக்கும் தெரியாமல் ) பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பணங்களை வழங்கி இருக்கும் அவர்களுக்கு
பெற்றோரால் காணிக்கை ஆக்கப்பட்டு சென்ற பல இளம் ( ஆண்) சபையின் கட்டுப்பாட்டுக்கும் தங்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாமலும் திரும்பி வந்த சம்பவங்களும் உண்டு ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகளே கடவுளுக்கு கூட காணிக்கையாக்கப்படுகிறார்கள் ( அதிகமாக)
-
20 hours ago, suvy said:
உங்களுடைய வாழ்த்துக்கள் இருக்கட்டும் ......நம்ம யாழிலும் ஒரு சிங்கன் இருக்கிறான் என்று பெருமைப் படும்படி நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது .........! 😁
3 வருடங்களுக்கு பிறகு அடுத்த பெண்குழந்தை பிறந்து 4 மாதமாகிறது .
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலையில் நிற்கிறன் பிறகு ஆறாகினால் நம்ம நிலை ?? 🙂 -
14 hours ago, குமாரசாமி said:
உந்த ஹர்த்தால் கடையடைப்புகளால பாதிக்கப்படுறது பொது சனம். சந்தோசப்படுறது பள்ளிக்கூட பொடியள் 😃 மற்றும் படி எந்த பிரயோசனமும் இல்லை. அரசியல்வாதிகள் தங்களை தக்க வைக்கும் நடவடிக்கையாக ஹர்த்தால்களும் கடையடைப்புகளும் மாறிவிட்டது😡
இந்த அரசாங்கத்தில் இருந்து இந்த தமிழ் கட்சிகள் மொத்தமாக ராஜினாமா செய்து விலகினால் சரிதானே சிங்களவன் ஒரு தீர்வும் தருகிறான் இல்லையென அப்படி செய்வாங்களா சாமியார்?
-
14 hours ago, குமாரசாமி said:
விலாங்கு மீன் ரெக்னிக்....🤣
வேற என்ன கடனகிடன வாங்கத்தான் வாங்கி நம்ம தலையில் கட்டி கட்ட வைப்பான் இப்பதான் வங்காளிட்ட வாங்கின கடன கொடுத்து முடிச்சிருக்கானுகள்
-
18 hours ago, விசுகு said:
ராசா
எதையும் பேசலாம் எழுதலாம்
ஆனால் செயல்???
ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட.
அதாவது புலம்பெயர் தமிழர்கள் கல்வி மற்றும் காசை கொண்டு வந்து அங்கே நின்று அத்தனை சவால்களையும் (நீங்கள் தான் அதிகம் சிரமம் தருவீர்கள்) சமாளித்து செய்யணும். எவ்வளவு சுயநலமான அநியாயமான கற்பனை இது???
ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட.............................................
உண்மைதான் இன்னும் சில காலங்கள் கழிந்தால் செய்வதற்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள் இன்னும் சிறு பான்மையாக இருப்போம் வடக்கு தப்பினாலும் கிழக்கில் ......................
20 hours ago, விளங்க நினைப்பவன் said:தமிழ்நாட்டில் கூட பரீட்சை முடிவுக்காக தற்கொலைகள் நடைபெறுகின்றது.
இன்னும் பரீட்சை முடிவுகள் வெளிவரவில்லையே பிறகு எப்படி ஒரு வேளை அனைத்திலும் பாஸாகி இருந்தால்?
-
கர்த்தால் இல்லை என்னத்தை போட்டாலும் சிங்கள அரசாங்கம் அசையாது
-
கன இடத்துல கதை இப்படித்தான் போகிறது அநேகமாக பல விவகாரத்து வழக்குகள் இந்த சமூக சீர்கேட்டாலே நடக்கிறது.
-
12 minutes ago, விசுகு said:
ராசா வாய் திறந்தால் நாறிடும்
நாங்கள் எத்தனை முறை ஏமாற்றப்பட்டோம் என்றாவது தெரியுமா?? 😭
அதென்னவோ தெரியாது புலத்து தமிழர்கள் ஏமாந்து தான் போகிறார்கள்
எத்தனையோ வைத்தியர்கள் இருக்கிறார்கள் புலத்தில் அவர்கள் ஓர் வைத்திய முகாம் நடாத்தினாலே சிலரின் வைத்தியச்செலவுகளை குறைக்கலாம் இன்று இந்தியா சாயி பாபாவுக்கு சொந்தமான அமைப்பு ஒன்று வந்து கிழக்கில் காணி வாங்கி அங்கே மருத்துவனை ஒன்றை நிறுவி இதய சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறது இதற்கு முதல் யாழில் செய்த கன இதய சிகிச்சைகள் இன்று மட்டக்களப்பில் செய்யப்படுகிறது கிரான் குளம் பகுதியில் அமைந்துள்ளது அந்த வைத்திய சாலை. நம்மவர்கள் கதைச்சு கதைச்சு காலத்தை ஓட்டுவார்கள்
அண்மையில் புலத்து வைத்தியர் ஒருவர் வந்து கோடி கொடுத்து காணி வாங்கினார் தனியார் மருத்துவனை ஒன்றை நடாத்த என்னத்த சொல்ல மருத்துவ தொழில் இப்ப அமோகமாக நடக்கிறது .
-
On 6/10/2023 at 13:16, Kandiah57 said:
தனிராசா...இந்தக்காலத்தில். சிறியோர் தொடங்கி பெரியோர் வரை செய் என்றால் செய்ய மாட்டார்கள் செய்யாத என்றால் செய்வார்கள்.🤣..எனவே ஆறுதலாக எழுதட்டும். வீட்டில் அலுப்படையும்போது. எல்லாம் இங்கே வந்து எழுதட்டும். ஏன் அவசரப்பட்டு முடிக்க வேண்டும்??? 🤣🤣
விடுப்பு பார்க்கிறதுல ஒரு விருப்பம்தானே அதான் கேட்டுப்பார்த்தன் இந்த 6 மாத விசிட்ட
On 6/10/2023 at 13:42, suvy said:அகவை 24ல் தொடங்கிய தலைப்பு இப்பதான் முடிந்த மாதிரி இருக்கு......அதுக்குள்ளே இவர் ஒருத்தர்......! 😴
அப்ப போதும் என்று சொல்கிறீர்கள் போல அப்ப சரி ஆளை விடுவம்
On 8/10/2023 at 04:08, மெசொபொத்தேமியா சுமேரியர் said:அது முடிஞ்சு ஆறுமாதாமாகப் போகுது 😄
இது தெரியாம நாம திரிஞ்சு இருக்கிறம் என்றா பாருங்கோவன்
- 2
- 1
-
ஆழ்ந்த இரங்கல்கள் ஆன்மா சாந்தி பெறட்டும்
- 1
-
On 10/10/2023 at 23:18, ஈழப்பிரியன் said:
பிரயோசனமான தகவல் .
நன்றி .ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளோர் இதற்கும் விண்ணப்பித்து கிடைத்தும் பின்னர் வராமல் இருக்கிறார்களே.(உதாரணம் மேலே நாதம் எழுதியது)
இதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?@தனிக்காட்டு ராஜா இந்த திரி தொடங்கும் போது உங்களைத் தான் மனதில் எண்ணி பதிந்தேன்.
அலுவல் நடக்குதா?
நம்ம அதிஸ்ரம் தலை கீழாக வேலை செய்கிறது எங்க போனாலும் புலி கடந்து போன பற்றைக்காடுகள் போல் இருக்கிறது அதனால் இனிமேல் எந்த பிரயோசனமும் இல்லை மிக்க நன்றி அண்ணை 😷
-
19 hours ago, suvy said:
தாயும் சேய்களும் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ........! 👍
தந்தை சிங்கனுக்கு வாழ்த்துக்கள் 😜
-
10 hours ago, goshan_che said:
மகிந்த என்ன KFC க்கு வாக்கு போடும் கோழியா ? கூர்ப்பில் முன்னேறிய இனத்தின் மகன்.
இந்தாள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்க சிங்கள மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் நம்ம நாட்டு டிசைன் அப்படி
- 2
-
18 hours ago, விசுகு said:
அந்தந்த வயதுகளில் சில விடயங்களை கண்டும் காணாமலும் செல்ல தயாராக இல்லாத பெற்றார் மற்றும் சமூகம் இன்னும் விலைகளை கொடுக்கும் கொடுத்து கொண்டே இருக்கும்.
எப்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?
பிள்ளைகள் கன்பேர் தங்களுக்கு பாலியல் அல்லாத சுதந்திரத்திரத்தை விரும்புகிறார்கள் ( சிலர்) அதற்கு பணம் வேண்டும் பணத்துக்கு பெற்றோர் என்ன செய்வார்கள் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழுந்து வருகிறது அதற்கு உழைப்பு இல்லாத குடும்ப நிலை என்னாகிறது அந்த பிள்ளைகளின் ஆசைகளுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்நேற்று நான் பஸ்ஸில்வரும் போது இரு பெண்பிள்ளைகள் அடியே அவளின்ற 21வயது பிறந்த நாள் போட்டோ எல்லாம் சூப்பாராக இருக்கிறதென்றும் முகநூலில் பார்த்தேன் என சொல்லும் போது அந்த பிள்ளையின் ஆசையும் அதில் அடங்கியுள்ளது ( அவளுக்கும் ஆசை ( உலகம் இன்று பணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பணம் இருந்தால் வீட்டில் பிரச்சினை இல்லை ) அதிகம் எழாது
பணம் அதிகம் இருந்தாலும் பிரச்சினை எழுகிறது இன்னும் நாம் கையாளத்தெரியாமல் பல பிரச்சினைகளை கைகளுக்கும் வைத்து பிரட்டிக்கொண்டிருக்கிறோம் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்கள் அந்த படிப்பை ஈழத்தில் இன்னும் பயன் படுத்த வில்லை மாறாக உழைத்த பணத்தை யே இங்கு பயன் படுத்துகிறார்கள் இது நான் உங்கள் மீது வைக்கும் குற்றம் இல்லை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் புலத்து மூளையால் செய்யப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிடவும் கோவில் சாமர்த்திய வீடுகள் கல்யாண வீட்டு நிகழ்வுகளை தவிர்த்து ???..........................- 3
-
On 7/10/2023 at 01:04, putthan said:
அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ...என்று நிற்குமோ இந்த தூறல்
நன்றி அண்ணை உங்களை காண்பது குறைவாக உள்ளது களத்தில்
On 8/10/2023 at 23:11, ரதி said:தொடர்ந்து எழுதுங்கோ தனி ..நானும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன்
நன்றி ரதி அனுபவங்கள் சம்பவங்கள் கதைகளாக வரும்
- 1
-
1 hour ago, குமாரசாமி said:
நாட்டை,ஊரை,வீட்டை முன்னேற்ற வெளிநாடு வரலாம். ஆனால் இன்று நேர் வழியில் சட்டபூர்வமாக வர ஆயிரம் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. அப்படி வந்தால் சந்தோசம்.
கனபேர் ரோமேனியா வந்து அங்கால வந்து இறங்கின செய்திதான் ஊர் முழுக்க அடிபடுது அப்படி இருக்க இங்குள்ள சனமும் என்ன செய்யும் ஓடி வரத்தான் துடிக்கிறது இங்க இருப்பதை விட எங்காயவது போகலாம் என
வெளிநாடுகளில் இருந்து நீங்கள் என்ன சொன்னாலும் இங்க உள்ள சனத்துக்கு எப்படியாவது இலங்கையை விட்டு வெளிக்கிடவேண்டும் என்ற நினைப்புதான் எனக்கே அந்த நிலையென்றால் பாருங்கோவன்
-
12 hours ago, suvy said:
செல்லப்பிள்ளையாக நுழைந்த தொழில்நுட்பம் இன்று பெரும் அரக்கனாய் வளர்ந்து மக்களைத் தின்ன ஆரம்பித்து விட்டது ........! 😴
நன்றி ஏராளன் ......!
இனி வரும் காலம் இன்னும் பயங்கரமாக இருக்கும் அண்ண
- 1
-
-
On 28/9/2023 at 00:39, Kavi arunasalam said:
“மச்சான் இவன் கல்லு எடுத்து அடிச்சால் இரண்டு மாங்காயவது கட்டாயம் விழும்” என்று நண்பர்கள் சுட்டிக் காட்டும் போது ஒரு ‘கிக்’ ஒன்று தலைக்குள் ஏறி உருவேற்றும். சரியோ பிழையோ இளம் வயதில் அப்படியான சிறு சிறு களவுகள் ஒரு கிளு கிளுப்பை தந்திருந்தது என்பது என்னவோ உண்மை.
கன நாளைக்கு பிறகு நண்பர்கள் கூடினோம் லண்டனில் இருந்து வந்த ஒரு கூட்டாளிக்கு இப்பதான் கல்யாணம் நடந்திச்சு அந்த பார்ட்டியில் குடிச்சிட்டு கிடந்த கூட்டாளீகள் குடிச்சிட்டு பழையதைக் கொட்டிவிட்டானுகள் கூடவே வாந்தியும் எடுத்து
மறக்க முடியாமல் மனதில் குத்தப்பட்ட பச்சைப்புள்ளீகள் அவை அந்த நினைவுகள் -
பாடல் நன்றாக இசையுடன் கோர்த்து எம்மையும் இழுத்து செல்கிறது
- 1
-
1 hour ago, Kavi arunasalam said:
சந்தேகமில்லை, துயரம்தான் சரி.
கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை
-
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
சாதியும் இதுவும் ஒன்றல்ல என்று கூறியும் நீங்கள் வாசிக்காது கருத்து வைக்கிறீர்கள்.
நான் சொல்ல வந்தது இழி சொற்கள் எப்படி வரும் என்பதை
-
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
அவனுக்குத்தான் தெரியும் 😀
ம்கூம்
ஊருலா
in கதைக் களம்
Posted
உங்கள் ஊருலாவின் தேரில் நாங்களும் பின்னால் தொற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கிறோம் அம்மாச்சி நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்