-
Content Count
1,626 -
Joined
-
Days Won
4
மல்லிகை வாசம் last won the day on January 5
மல்லிகை வாசம் had the most liked content!
Community Reputation
591 பிரகாசம்About மல்லிகை வாசம்
-
Rank
இணையத் தோழன்
Contact Methods
-
Website URL
mallikaiv.blogspot.com.au
-
ICQ
0
Profile Information
-
Gender
Male
-
Location
மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்
-
Interests
தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து
-
வணக்கம் ராஜ். உங்கள் வரவு நல்வரவு ஆகுக.
-
சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன. அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.
-
இக்காலத்து நிதர்சனங்களைப் பதிவுகளாகத் தொடரும் குமாரசாமி அண்ணருக்கு மிக்க நன்றி. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அன்னைக்கு நிகரான சொந்தம் எதுவுமில்லை.
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
மல்லிகை வாசம் replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன! விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி. -
நன்றி அக்கா. வித்தியாசமான நல்ல படங்களை இங்கு இணைக்கிறீர்கள். மேலே மாங்காய்க்குத் தான் பகிடியாய் ஏதோ எழுதினேன். உங்களுக்கல்ல. தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. ஆனாலும் அதன் வளர்ந்து முன்னேற வேணும் என்ற துடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!
-
நன்றி உடையார். நானும் அவ்வாறே நினைத்தேன்! மற்றச் சொற்களை விட இதுவே விரைவாக நான் ஊகித்தது. மொழி என்றதும் தமிழ் தான் நினைவுக்கு வந்தது முதலில். அதிலிருந்து கதவை ஊகித்தேன். பின்னர் கூகிழில் கதழைத் தேட வேகம் என்ற பொருளைக் காட்டியது. உடனே வேகமாக வந்து விடையைப் பகிர்ந்தேன் நிலாமதி, ஜெகதா அக்காமார், புங்கை அண்ணா கண்களில் பட முன்னம்!
-
கதழ் (விரைவு) த(மி)ழ் (நடுவிழந்த மொழி) கத(வு) (வீட்டின் ஒரு பகுதி)
-
பிஞ்சில பழுத்தது என்பார்கள். விதையாய் மண்ணில் விழு முன் அப்படி என்ன அவசரம் முளைவிட! தாய் மரத்தின்ர உயரத்தை எட்டிப்பிடிக்க இந்தக் குறுக்குவழி எல்லாம் கூடாது பாருங்கோ! எப்படியோ கீழ விழுந்து தான் மறுபடி வளர வேணும். வாழ்த்துக்கள்! (இது நீங்கள் எடுத்த படமா ஜெகதா அக்கா? நல்லாயிருக்கு. இருந்தும் யாரோ photoshop பண்ணின போலயும் இருக்கு!)
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
மல்லிகை வாசம் replied to uthayakumar's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
கவி வரிகளை அவற்றுக்கேற்ப ஏக்கமான தொனியில் வழங்கியமையும், இசையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் உதயன் அண்ணா. -
உடுவை (அகழி) உடு (அகழி) குடுவை (பாத்திரம்)
-
நானும் பல கள உறவுகளின் பெயர்களை எல்லாம் யோசிச்சிட்டு 'main switch'ஐ அடியோட மறந்திட்டன்! நல்ல ஒரு திரி உடையார். உலக தாய்மொழி தினத்தில் நாமெல்லாம் மறந்துவிட்ட, அறிந்திராத பல தமிழ்ச் சொற்களை நினைவூட்டவும், எமது மூளை துருப்பிடிக்காமல் இருக்கவும் நீங்கள் இத்திரியைத் தொடர்வதற்கு நன்றிகளும், பாராட்டுக்களும். தொடருங்கள்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மல்லிகை வாசம் replied to தமிழ் சிறி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
இது நியாயம்... நன்றியுணர்வு இங்க தான் பிரச்சினை ஆரம்பம். பணம் கிடைச்சா மனம் என்னவெல்லாம் சொல்ல, செய்ய தூண்டும். கடவுளுக்கு நன்றியுணர்ச்சி, இதுவரை வேலை தந்த முதலாளிக்கு நடுவிரல். நல்ல ஆரம்பம் சிறி அண்ணா. தொடருங்கள்... -
ஆக மொத்தத்தில மனுஷாள் யாரும் எப்ப கொறோனா ஒழியும் எண்டு கேட்கேல! வழமையான உங்கள் பாணியில் ஒரு நகைச்சுவைக் கதையைத் தந்தமைக்கு நன்றி புத்தன். மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.
-
இது போன்ற பெயர்க்குழப்பங்கள் எனக்கும் வந்ததுண்டு. இலங்கை கடவுச் சீட்டின் படி இங்க பல ஆவணங்களில என் பெயர் குடும்பப் பெயரா இருந்து, அப்பாவின் பெயர் கொண்டு என்னை அழைக்க இப்படி பல குழப்பங்களுக்குப் பிறகு இந்நாட்டு கடவுச்சீட்டு எடுக்கும்போது இக்குழப்பத்தைச் சரிசெய்து கொண்டேன். அதன்படி ஏனைய ஆவணங்கள் பலவற்றையும் சரிசெய்து நேரவிரயமாகியது. ஆனாலும் பெயர்க்குழப்பத்தால வாற சிக்கல்கள் இப்ப இல்லை.
-
நான் இத்தனை நாளா வாலி மட்டும் தான் வாலிபக் கவிஞர் என்று நினைச்சிட்டிருந்தன். இப்ப தான் விளங்குது சுவி அண்ணாவுக்குள்ளும் ஓர் வாலிபக் கவி இருக்கிறார் என்று. வயதாக ஆக வாலிபர்களாவது அபூர்வம். வீட்டில திருஷ்டி சுத்தி போட சொல்லுங்கோ. காதல் ரசமுள்ள கவிதைக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் அண்ணா.