Jump to content

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1662
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by மல்லிகை வாசம்

  1. அள்ள அள்ளக் குறையாத நீரூற்றாய் சிந்தனைகளைத் தூண்டிவிட்டது உங்கள் கட்டுரை ஐயா! 😊

    இன்னும் ஒன்று, சிறு வயதில் படித்த ஞாபகம்; மிகச் சுருக்கமாக என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன்: 

    இது நடந்தது அமெரிக்காவோ / ஐரோப்பாவோ தெரியவில்லை. வறுமையில் வாடிய ஒரு இளைஞன் ஒரு முறை ஏதோ ஒரு பணத் தேவை காரணமாகப் பலவாறு யோசித்துக் குழப்பத்தில் இருந்தார். அப்போது கையில் கிடைத்த ஒரு சிறு உலோகக் கம்பியை அங்கலாய்த்தபடியே எவ்வித நோக்கமும் இல்லாமல் வளைத்தபடி இருக்கும்போது சட்டென அவர் மனதில் தோன்றியதே நம்மில் பலர் இன்னமும் பாவிக்கும் safety pin (சட்டை ஊசி). அதை அந்த இளைஞன் கண்டுபிடிப்பாகப் பதிவு செய்து அதன் மூலம் பொருளீட்டினான் என்று படித்த ஞாபகம். அவர் பெயர் தெரியவில்லை. எனவே கையறு நிலை மனித குலத்துக்கு வேண்டிய சில பல பொருட்களையும் கண்டுபிடிக்க வைத்துள்ளது எனக் கூறலோமோ! 😊

     

    கையறு நிலையிலும் நமக்கென்று பல வழிவகைகள் ஒளிந்திருக்கும். அவற்றை அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனிடம் சரணாகதி அடைந்தோ, அல்லது நம் புத்தியைப் பயன்படுத்தியோ தேடிக் கண்டுபிடிக்கலாம் போலும்! 😊

  2. 57 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

    மேலும் ஒரு வெளிப்பாடு எனக்குத் தோன்றுகிறது. அஃது கையறு நிலையில் தனது இறைவனிடமோ இறைவனைப் போல் தான் மதிக்கிற மனிதரிடமோ தஞ்சம் அடைவது. அரசவையில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலுரிய முனைய, பாஞ்சாலி கையறு நிலையில்  'கோவிந்தா, கோவிந்தா !' என்று இறைவனைச் சரணடைவது

    அருமையான வெளிப்பாடும் நல்ல உதாரணமும் ஐயா. இப்படிப் பல உதாரணங்கள் புராண, இதிகாசங்களில் உண்டல்லவா! மணிவாசகர் 'யாரொடு நோவேன்! யார்க்கெடுத்து உரைப்பேன்!' என இறைவனிடம் சரணாகதி அடைந்தது போன்று இன்னும் பல நாயன்மார்கள் கதையையும் இதில் உள்ளடக்கலாம். இந்த சரணாகதி, தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளாக வெளிப்பட்டு இன்றும் பல அடியார்களுக்குப் பயன்படுவது அற்புதம்!

     

    • Like 1
  3. 17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

    மேலே சுட்டிய இலக்கியக் காட்சிகளில் நிந்தனையாக, சினத்தீயாக, அமைதியாக, புலம்பலாக அவ்வெளிப்பாடு அமைவதைக் காண்கிறோம். வேறு எவ்வகைகளில் எல்லாம் அமையும் என்று தீர்மானிக்க நாம் உளவியலாளர்களா என்ன ? 

    இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம்.

    தவிரவும், இந்தக் கையறு நிலையை நகைச்சுவையாக மாற்றியோரும் உளர் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஐயா. பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்த்தால் புரியும். 😊

    கையறு நிலையில் வரும் அறச் சீற்றத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றி அறப் போராட்டமாக, அந்நிலையிலுள்ள பலரை இணைத்து அவர்கள் போல் இருக்கும் பலருக்கு நல வாழ்வு தரும் தொண்டு நிறுவனங்களை அமைப்பதாக என்று ஆரோக்கியமான பாதைகளை உருவாக்குவோரும் உளர்.

    சிந்தனையைத் தூண்டிய அருமையான கட்டுரைக்கு நன்றி ஐயா. 🙏

    • Like 3
  4. 17 hours ago, சுப.சோமசுந்தரம் said:

    மானிட சமூகத்தின் பிரதிபலிப்புதானே இலக்கியமாய் அமைய முடியும் ! எனவே சமூகத்தில் வெவ்வேறு சூழலில் மனிதன் எதிர்கொள்ளும் கையறுநிலையின் வெளிப்பாட்டை அச்சூழலும் மனிதனின் உளவியலுமே தீர்மானிக்கவல்லது.

    நல்லதொரு அவதானிப்பு ஐயா. 👍

     

  5. On 11/9/2022 at 15:57, uthayakumar said:

    சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் 
    சும்மாய் இருக்கவும் முடியவில்லை 
    எப்பவும் கத்துது எதிலும் பாயுது 
    அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் 

    இத்தகைய குரங்கு மனத்தை நெறிப்படுத்திச் சமநிலையில் வைப்பது என்பது வாழ்நாள் நீண்ட ஒரு போராட்டம் தான். இதில் வென்றோர் ஞானியர். அவர்கள் கூட எத்தனையோ சோதனைகளைத் தாண்டியே பல்வேறு பயிற்சிகள் மூலம் தான் ஞான நிலையை அடைந்தனர். 😊

    சிந்திக்கத் தூண்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி உதயன். 😊

    • Like 1
  6. On 13/9/2022 at 02:03, நிலாமதி said:

    வருந்தாதே மனமே  அவனின்றி ஓர் அணுவும் 

     அசையாதே "  வருவது வரட்டும்  வழியுண்டு வாழ்ந்துப்பார்ப்போம் 

    நல்லதோர் அனுபவக் கவிதை அக்கா. இந்த மாதிரியான தருணங்களில் ஆன்மிக, தத்துவார்த்தமான சிந்தனைகள் மனதில் எழுவது இயல்பு. கஷ்டமான காலங்களைக் கடப்பதற்கு மட்டுமன்றி, இனி வரும் காலங்களில் வாழ்க்கையை முதிர்ச்சியான மனநிலையுடன் அணுகுவதற்கும் இந்த சிந்தனைகள் உதவும். வாழ்த்துக்கள் அக்கா. 😊💐

     

    On 13/9/2022 at 07:52, குமாரசாமி said:

    வாழ்க்கை என்பது இடைவேளை இல்லாத ஒரு நாடகம். அதில் ஒவ்வொரு பாத்திரங்களும் வயதிற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்கும்.

     

  7. 56 minutes ago, தமிழ் சிறி said:

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. 
    எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. 
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

    இந்த வரிகள்... சரியானதா? அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?

    தமிழ் சிறி அண்ணா,

    நானும் கீதையைக் கற்கும் மாணவன் தான். கீதை பற்றி விரிவாகக் கற்பது இதுவே எனக்கு முதல் முறை. 

    நீங்கள் குறிப்பிட்ட வாசகங்கள் தொடர்பான விளக்கங்களை இந்த ஆசிரியர் இனி வரும் காணெளிகளில் தான் தருவார். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 😊

    இவை கூட மேம்போக்கான வசனங்கள் தான். தவறு எனக் கூறுவதை விட ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டிய பல விடயங்கள் இது போன்ற வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கின்றன என்பதே பொருத்தமானது. 😊

  8. 1 hour ago, suvy said:

    நல்ல செய்தியுடன் வந்திருக்கிறீர்கள் மல்லிகை  வாசம் எங்கும் பரவட்டும்.........!  👍

    கண்டது சந்தோசம்......!

    நீங்கள் அறிந்திராத விடயங்கள் அல்ல இவை சுவி அண்ணா!😊 எனினும் இது பற்றிய தேடலில் உள்ள எவரும் கேட்டுப் பயன் பெறட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்ந்தேன்.

    எனக்கும் உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி சுவி அண்ணா. 😊🙏

  9. 1 hour ago, vasee said:

    தொடர்ந்து எழுதுங்கள், பொறுமையாக வாசிக்க வேண்டிய விடயங்கள்.

    பொறுமையாகக் கேட்டு, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை இக்காணொளிகளில் தந்துள்ளார் இந்த ஆசான். ஒவ்வொருவர் புரிதலும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை தானே. எனவே தான் இதனை இங்கு அறிமுகப்படுத்துவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்கிறேன். அவரவர் தேடலுக்கேற்பக் கேட்டுப் பயன் பெறலாம் என்பதே என் எண்ணம் அண்ணா.😊

    கீதையை வெவ்வேறு ஆசான்களிடமிருந்து முழுமையாகக் கற்ற பின்னர் தான் எல்லோரும் இது பற்றிக் கலந்துரையாடுவதும் சிறந்தது என நினைக்கிறேன். அதுவும் இணையத்தில் எழுத்து மூலமான கருத்துப் பரிமாற்றங்களில் பல்வேறு புரிந்துணர்வுச் சிக்கல்கள், நேர விரயம் ஏற்படுவதால் வாய் மொழி மூல உரையாடல்களை நேருக்கு நேர் சந்தித்தோ அல்லது Zoom போன்றவற்றின் ஊடாகவோ செய்தலே ஆரோக்கியமானது என நினைக்கிறேன். அதற்கான காலம் கனியட்டும்! 😊

    நன்றி அண்ணா. 😊

     

  10. நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். ஒருவர் எதிர்கொள்ளும் சவாலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் அவரைச் சமாளிப்பதற்காகவே மேம்போக்காக அவருக்கு வழங்கப்படும் வெறும் 'வெத்து வேட்டாட்டான' அறிவுரைகள் பயனற்றவை மட்டுமல்ல பல சமயங்களில் ஆபத்தானவையும் கூட. 

    அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். 

    கீதை இதனை மட்டுமா வலியுறுத்துகிறது? மேற்கூறிய வாசகத்தை மட்டுமா நம்மில் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்? நிச்சயமாக இல்லை! பகவத் கீதை எனும் முழுமையான சுவைமிக்க, சத்தான மாம்பழத்தின் ஒரு சிறு துண்டின் சாற்றின் துளிகள் தான் மேற்கூறிய ஒரு வாசகம்! முழுமையான மாம்பழத்தின் சுவையும், சத்தும் அதைப் பிழிந்து சாறாக நாம் அருந்தும்போது நமக்குக் கிடைப்பதில்லை. 

    அது யாரால், எவ்வளவு நேர்த்தியான செயன்முறை மூலம் பிழியப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது என்பது ஒரு விடயம்; கழிவான சக்கையை நீக்குவதால் இழக்கப்படும் சத்து, சுவை போன்றவை மறு விடயம்; மாம்பழத்தின் தோலை ஆர்வத்துடன் உரிப்பது முதல், அதை ஆசையாகக் கடித்து ருசித்து உண்டு, மீதமுள்ள அதன் விதையையும் ருசித்துவிட்டு அதனை மண்ணில் விதைப்பது வரை நாம் பெறும் திருப்தியான அனுபவத்தைத் தவறவிடுவது இன்னுமோர் முக்கியமான விடயம். 

    அந்த வகையில், கீதை எனும் முழுமையான மாம்பழத்தை அதன் சுவையும், சத்தும் குன்றாமல் எவ்வாறு ரசித்து, ருசித்து இன்புற்றுப் பயனடைவது என்பதை இந்த YouTube தொடர் மூலம் நமக்குக் கற்பிக்கிறார் இந்த நல்லாசான். கீதையின் சமஸ்கிருத மூல சுலோகங்கள், அதன் பதங்கள் மற்றும் தமிழில் விரிவான விளக்கம் மட்டுமன்றி தற்காலத்தில் - நடைமுறையில் எவ்வாறு இந்த அறிவுரைகளை நாம் கைக்கொள்ளலாம் என்பது போன்ற விடயங்களையும் உள்ளடக்கியது சிறப்பு. சுவாமி சின்மயானந்தா அவர்களின் உரையை அடிப்படையாக வைத்தே இந்த ஆசான் நமக்கு இந்தப் பாடங்களைக் கற்பிக்கிறார். 

    இத்தொடர் இன்னும் முடிவடையவில்லை; இன்னும் ஏராளமான சுலோகங்கள் வர இருக்கின்றன. எனினும் மாம்பழத்தின் சிறு பகுதியைச் சுவைத்து இன்புற்ற மகிழ்ச்சியில் இம்மாங்கனி பற்றி உங்களுக்கும் சொல்வதில் நான் ஆனந்தமடைகிறேன்! சுவைத்தலிலும், பகிர்தலே பேரின்பம் அல்லவா! 

    ***இன்னோர் விடயம்; 'கீதை உண்மையில் கிருஷ்ணரால் தான் உபதேசிக்கப்பட்டதா?', 'அவர் பரமாத்மாவா?', 'உண்மையில் இது நிகழ்ந்ததா?', 'போர் செய்து உயிர்களைக் கொல்வதை ஏன் கீதை நியாயப்படுத்துகிறது?' எனும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். ஆனால் நம்மை அர்ஜுனனாகவும், நம் வாழ்வைப் போர்க்களமாகவும் உருவகம் செய்த மனநிலையில் இதில் கூறப்படும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் பின்பற்றினால் மேலுள்ள கேள்விகள் நமக்கு அவசியமில்லை. 

    கீதையிலோ, அதற்கான விளக்கம் தரும் இந்த ஆசான் கூறும் கருத்துக்களிலோ ஆங்காங்கே மிகச்சில ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் ஏதும் இருப்பின் மாம்பழத்தின் அழுகிய மிகச்சிறு பகுதியை நீக்கிவிட்டு உண்பது போல இதனையும் ருசித்துப் பயனடைவோம்! 

    மற்றொன்று, மாம்பழத்தின் சுவையும், சத்தும் நமக்குக் கிடைப்பது மாம்பழத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை; நாம் எந்த மனநிலையில், எப்படி உண்கிறோம் என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது. கீதை போன்ற மிகச் சிறந்த அறிவுரைகளைக் கேட்ட பயனும் அவ்வாறே! - நமது வாழ்க்கை அனுபவங்களால் நாம் பெற்ற பக்குவத்தின் அளவிலும் தங்கியுள்ளது. அத்துடன் மேலும் பக்குவமடைய நாம் காட்டும் முனைப்பிலும் தங்கியுள்ளது எனக் கூறி கீதை எனும் மாங்கனியின் விதையை என் பங்கிற்கு இங்கு விதைக்கிறேன்! 🙏 

    நன்றி 🙏

    👇YouTube இணைப்பு கீழே👇

    https://youtu.be/VlvcYzm6mk0 

    (இந்த இணைப்பு தொடரின் முதலாவது காணொளி மட்டுமே. அந்த YouTube channelஇல் playlist பகுதிக்குச் சென்று 'ஶ்ரீமத் பகவத் கீதை' எனும் தலைப்பில் இத்தொடரில் இதுவரை வெளியான 57 காணொளிகளையும் காணலாம்.)

    • Like 2
  11. சுவியண்ணா, இதை இங்கே பகிரலாமோ தெரியவில்லை. இரு வர்ணப் பழைய பாடற் காட்சி; ஆனால் பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது! மீண்டும் வேறு யாரோ குரலில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். 😊

     

     

    • Like 2
  12. 3 hours ago, ராசவன்னியன் said:

    சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

     

    29 minutes ago, கிருபன் said:

    சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம்.

    லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊

    3 hours ago, ராசவன்னியன் said:

    முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

     

    32 minutes ago, கிருபன் said:

    இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது.

    படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀

  13. 5 hours ago, தமிழ் சிறி said:

    வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

    நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
    அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

    ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
    அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

    பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
    எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

    குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
    உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

    பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

    தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊

    நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை.

    பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊

    மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏

    3 hours ago, ராசவன்னியன் said:

    குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

     

    1 hour ago, கிருபன் said:

    ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

    ராசவன்னியன் அண்ணா, கிருபன்,

    பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்! 

    • Thanks 1
  14. 16 hours ago, suvy said:

    தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

    மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️

    16 hours ago, கிருபன் said:

    இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

    கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

    படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

  15. இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

    ********************************

    🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

    🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

    🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

    🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

    எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

    🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

    பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

    கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

    சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

    இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

    🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

    நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

    🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

    🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

    🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
    (VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
    தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

    ************************************

    🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

    🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

    🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

    🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

    🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

    🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

    நன்றி 😊

    • Like 5
    • Thanks 1
  16. வணக்கம் நிர்வாகம்,

    வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை.

    தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா?

    நன்றி 😊

    பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏 

  17. 4 minutes ago, குமாரசாமி said:

    அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁

    விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀

    • Like 1
  18. 50 minutes ago, நந்தன் said:

    ஆடி அமாவாசை எண்டு வராமல், இங்கே பாயை போட்டு படுங்கள் பிரச்சனை வராது. 

    அதுவும் சரி தான் அண்ணை. 😊

    தொடர்ந்து யாழில் இருக்க விருப்பம் தான். ஆனால் மற்றவர்கள் குறிப்பிட்டது போல வேலைப் பழு தான் தடையாக உள்ளது. 

     

  19. On 7/5/2021 at 19:56, மோகன் said:
    On 7/5/2021 at 18:56, மல்லிகை வாசம் said:

    மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

    நன்றி 

    சரி செய்யப்பட்டுள்ளது

    நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀

    தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂

     

  20. On 3/1/2021 at 03:53, மோகன் said:

    நீண்ட காலத்திற்கு களத்தில் கருத்துக்கள் வைக்காத ஒருவர் பார்வையாளர் என்ற பிரிவுக்கு தானியங்கி நகர்த்திவிடுகின்றது. மீண்டும் அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உறுப்பினர்கள் என்ற உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது பொறிமுறை சரியாக இயங்காமையினாலேயே உறுப்பினர்கள் திருத்தங்களை மேற்கொள்ளவோ புள்ளிகள் இடவே முடியாதுள்ளது.

    மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

    நன்றி 

  21. சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. 

    இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. 

    கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன.

    அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.