
Sabesh
-
Posts
1250 -
Joined
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by Sabesh
-
-
-
1 hour ago, பையன்26 said:
முதலாவது பருத்திதுறையில் வசிக்கும் கிருஷ்னா
இரண்டாவது விடியோவில் இருப்பது மட்டக்களப்பில் வசிக்கும் அனுஷ்கான் , அனுஷ்கான் சைவ மதத்தை சார்ந்தவர்............
கிருஷ்னா மூலம் பல குடும்பங்களுக்கு நல்ல உதவிகள் போய் இருக்கு நான் பார்த்த மட்டில் அவர் மதம் பார்த்து உதவுவதாய் தெரிய வில்லை...............எல்லாருக்கும் பொதுவாய் உதவுகிறார்
அவேன்ட குடும்பத்தில் இருப்பவர்கள் இப்போது எல்லாரும் சைவ மதத்தில் இருந்து அல்லொலியா மதத்துக்கு மாறி விட்டினம்............
கிருஷ்னாவிடம் பலர் செல்லி இருக்கினம் இப்படி உதவி செய்ய போகிற இடத்தில் மதம் பற்றி கதைக்க கூடாது என்று அதை அவர் ஒழுங்காய் கடை பிடிக்கிறார்..................
எனக்கு உந்த மதம் மாறி கேலி கூத்துகள் போடுவது பிடிக்கவே பிடிக்காது ,
ஒவ்வொரு வருடமும் அவேன்ட பிறந்த நாளுக்கு உந்த கூத்து போட்டால் பலரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவினம்...........சாணக்கியன் கலந்து கொண்டது அனுஷ்கானின் பிறந்த நாளில்............அனுஷ்கான் சிறு வயது முதலே ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்..............அவரின் வாழ்வில் முதல் முறை கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினது என்று சொல்லி இருக்கிறார்
காசு கொடுத்து தான் மக்களை மதம் மாற்றனும் என்றால் அது அந்த மதத்துக்கு தான் அழுக்கு................
நான் அவர்களை ஆதரிக்க காரணம் எமக்காக போராடினவர்களை புலம்பெயர் நாட்டு எலிகள் கைவிட்ட நிலையில் முன்னாள் போராளிகளின் குடும்பத்துக்கு இவர்கள் மூலமாய் தன்னும் உதவிகள் போய் சேருது
நானும் இவர்கள் மூலம் உதவி செய்து இருக்கிறேன்...........எனக்கு ஆதாரத்தை காட்டி இருக்கினம்..........நான் பெரிசா கதைப்பது கிடையாது காசு அனுப்பி போட்டு சொல்லுவேன் அந்த குடும்பத்துக்கு இந்த உதவிய கொண்டு போய் குடுங்கோ என்று................
ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் 1500 இருந்து 2000 ரூபாய் கொடுக்கினம்..................கிருஷ்னா மற்று அனுஷ்கான் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த உதவிய சரியா நேரத்தில் சரியான ஆட்களிடம் கொண்டு போய் கொடுக்கினம்.............
அக்கா நீங்கள் ஊரில் இருந்த படி இப்படி செய்து பாருங்கோ அதுக்கு பிறக்கு தெரியும் நீங்கள் பட போகும் அவமானங்கள் மற்றும் வேதனைகள் இன்னல்கள் கஸ்ரங்கள் ............இவைகளை கடந்து தான் அவர்களின் பயனம் தொடர்கிறது..................எதுவாயினும் தூற்றாமல் இருப்போம் அக்கா..............❤️🙏
அனுஷ்கான் இல்லை அனுசன். கான் ஐ சேர்த்து விட்டீர்களே.
உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா மதத்துக்கு மாறி விட்டினம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது. இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை. இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள். அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை.இரண்டாமவர் அனுசன். அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அம்மா மட்டும் தான். இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார். இவர்கள் சைவ குடும்பம். வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர்.
இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது. உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள். உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள். உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது.
இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம். நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு
இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது. ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள். அதில் குறை எதுவும் இல்லை. தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது. அது அவர்களின் பெரும்தன்மையே.
-
2
-
3
-
-
-
உண்மை தான்... கேட்ட நேரத்தில் இருந்து மனதுக்குள் ஒரு அமைதியின்மை. விபத்து நடந்த நேரத்தில் நண்பரொருவர் பக்கத்தில் உள்ள பிளாசாவில் நின்று இப்படியொரு பெரிய விபத்து நடந்திருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார். அந்த பகுதியில் நிறைய நண்பர்கள் உறவினர்கள் வசிப்பதால் உள் மனதில் ஒரே குடைச்சலாக இருந்தது. மாலை தான் இன்னார் என்று தகவல் வந்தது. மிகவும் அதிர்ச்சியும் கவலையுமான விடையம். யார் என்றாலும் உயிர் தான் என்றாலும் தமிழர்கள் சிறார்கள் என்றதும் என்னையறியாமல் அதிக அழுத்தமும் கவலையும் அளிக்கிறது.
விபத்து நடத்த காணொளிகள் இரண்டு பார்த்தேன் ஒன்று எதிர்திசையில் வந்த வாகனத்தில் இருந்து dash காம் இல் பதிவு செய்யப்பட்டது. அதன் படி அந்த வாகனம் நின்று (எதிர் திசையில் என்பதால் ஒரே சிக்னல்) சில வினாடிகள் பின்னர் தான் விபத்துக்குள்ளான கனரக வாகனம் சிக்னல் க்கு கிட்டவே வருகிறது. அப்போது அம்பர் இல் இருந்து 100% சிவப்பு விளக்கு மாறி இருக்கும். ஆனால் வேகத்தை குறைக்கும் எந்த அறிகுறியும் இல்லை. கவலையீனம் / கவனச்சிதறல்.
இரண்டாவது காணொளி பக்கத்து பிளாசாவில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது பார்த்தேன். இவர்கள் பயணித்த வாகனம் சிவப்பு விளக்கில் காத்திருந்து பச்சை மாறியதும் மற்ற வாகனங்களை விட வேகமாக வாகனத்தை எடுக்கிறார்கள் (எனது கருத்து மிக வேகமாக). சாரதியும் சந்தியின் இருபக்கமும் பார்க்கவில்லை என்பது தெரிகிறது.
இங்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வாகனம் டிரைவ் test செய்யும் போது இதை முக்கியமாக பார்ப்பார்கள். சந்தியை அண்மிக்கும் போது, தொடருந்து கடவையை அண்மிக்கும் போது, நடை பாதையை அண்மிக்கும் போது இரு பக்கமும் பார்க்க வேண்டும் இல்லாவிடில் 95% fail தான்.
டிபென்சிவ் ட்ரிவிங் என்பதும் மிக முக்கியமானது. அதை இவர்கள் தவறியுள்ளார்கள். சட்டப்படி பாரவூர்தி மீது தான் தவறு ஆனால் இவர்களும் பொறுமையாகவும் கவனமாகவும் வாகனத்தை செலுத்தியிருந்தால் 100% தவிர்த்து இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
*எழுத்து பிழை திருத்தம்*
-
2
-
1
-
-
சிறப்பான முயற்சி புத்தன். வாழ்த்துக்கள்.
முன்னர் இலங்கை தமிழர்களின் youtube பார்ப்பது வளமை. அவர்களுக்கும் view and ஊக்கம் கிடைக்கட்டுமென்று , ஆனால் பலரின் அலப்பறை தாங்கமுடியாமல் தற்போது பார்ப்பதில்லை
-
1
-
-
11 hours ago, குமாரசாமி said:
நீங்களே சொல்லுங்கோ ப்ரோ? ராசா நாள் முழுக்க ஊர் மேய்ஞ்சிட்டு நேரகாலத்துக்கு கொட்ட வந்துட்டார் எண்டு உங்களுக்கு சொன்னால் கோவம் வருமோ வராதோ? 😃
அதுதான் வேற லெவெல்ல சம்பவம் செய்து காட்டுவம் எண்டு பாத்தால் கோதாரி விழ எடுபடேல்லை 😂
நான் ஏறி இருந்தால் அதே பூவரச மர தடி புடுங்கி பூசை நடந்து இருக்கும்.
ஒருக்கா கோவில் திருவிழாக்கு என்று சொல்லி கோயிலுக்கு போய் வெளிவழிய ஓடி திரிய எதோ கடிச்சு போட்டுது. நாலு ஐந்து பேர் வீட்டை கூடி வர, வேப்பம் குருத்து சப்பினா விஷம் ஏறின கசக்காது என்று வெப்பம் குருத்தை தர... அது படு கசப்பு. துப்பின உடனை அதே வேப்பம் தடியால் நடந்த பூசைக்கு பிறகு கோயிலுக்கு போன வெளிய பத்தை வழிய ஓடி தெரியிறதில்லை-
2
-
-
மாற்றுத்திறனாளி மாணவர்கள் முழுமையான பயன்பெற வாழ்த்துக்கள்
-
நிலாமதி அக்கா முழுமையான சுகம் பெற வேண்டுகிறேன்
-
35 minutes ago, விசுகு said:
நீங்கள் ஓய்வில் உள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்??🤣
ஓம் ... கேட்டு வாங்கிறார் 😛
-
1
-
-
1 hour ago, Kapithan said:
ஐரோப்பா என்பது உலகம் அல்ல. அது உலகத்தின் ஒரு பகுதி.
தாங்கள் மட்டுமே உலகம் என்று நம்பிகொண்டிருக்கும் ஐரோப்பியர் வரிசையில் எங்கள் ஆட்கள் பலரும் தங்களையறியாமலேயே உள்ளே சேர்ந்துகொண்டுவிட்டனர்.
☹️
அது தான் உண்மை. ஐரோப்பா வாங்கவில்லையென்றால் கிழக்காசிய நாடுகளின் எரிபொருள் தேவை தற்போது பலமடங்காக அதிகரித்துள்ளது
-
On 19/6/2022 at 16:18, goshan_che said:
இது நியாயமான நிலைப்பாடுதான்.
ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?
இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?
இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?
இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.
தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை.
ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது பெற்றோரை கடிவது எப்படி சரியாகும்.தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல. இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து.
கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம். அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100 டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை. பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.
பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம்.
-
1
-
2
-
-
இங்கையும் இறால் அப்படி தான், ப்ரொஸின் ஐ இளக வைச்சு பிரெஷ் எண்டு விக்கிறது. இப்ப நானே ப்ரொஸின் ஆகா வாங்கி விடுவேன். அவர்களுக்கென வீண் சிரமம்
-
இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது? இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்-
1
-
-
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
-
-
44 minutes ago, பெருமாள் said:
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இன்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் 12ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tamilwin.com/article/economic-crisis-in-sri-lanka-angajan-office-fire-1652205571
அலுவலகம் மட்டும் தானா? வீடு இல்லையா?
-
பெரிய பெரிய போதைப்பொருள் வியாபாரிகள் எல்லாம் முக்கிய நகரங்களில் மாடமாளிகைகள் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. இடையில் அகப்படும் அப்பாவிகள் தான் இப்படி தண்டனைகளுக்கு ஆளாகின்றனர்.. கத்திக்குத்துக்கும் ஆளாகின்றனர்.
2 hours ago, தமிழ் சிறி said:யாழில்.. "123 மில்லியன் ரூபாய் பெறுமதியான", கஞ்சா மீட்பு – சந்தேக நபர் கைது!
யாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்.கடற்பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை வழிமறித்து சோதனையிட்டனர்.இதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினையும், கைது செய்யப்பட்ட இளைஞனையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
1
-
-
ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.
-
23 minutes ago, நிழலி said:
சபேஷ்,
நிறைய நிறைய இறைச்சி போட்டு, இலங்கை தக்காளி சோஸ் (MD) போட்டு ஒரு தமிழ் கடையில் விற்கின்றார்கல். 3 றோல்ஸ் 7.50. கொள்ளுப்பிட்டியில் உள்ள இல் upscale breakfast restaurant இல் சாப்பிட்ட மாதிரி இருக்கும். விற்பியில் தான் உள்ளது. பெயர்: Cuisine Xpress. அங்குள்ள எல்லா உணவும் நல்ல தரமானது. ஆனால் விலை...கடும் விலை. (ஒரு கொத்து $13 இல் இருந்து $15 வரை).
நல்ல தரமாக, ஆனால் விலை அதிகமாக விற்கும் சில தமிழ் / இலங்கை உணவுக் கடைகள் அண்மையில் திறக்கத் தொடங்கியுள்ளனர். இது ஸ்பைஸ் லாண்ட், பூரணி போன்ற தரத்தை போன்றவை அல்ல (Example: Bhai biriyani)
நன்றி. ஒரு முறை சென்று பார்க்கிறேன். கொஞ்சம் கூட என்றாலும் தரமான பொருள் என்றால் மகிழ்ச்சியாக வாங்கலாம்
-
12 hours ago, நிழலி said:
விலையும் அப்படித்தானே பெருமாள்.
நாலு பேர் இருக்கும் ஒரு குடும்பம் Mc இற்கு போய் வயிறாற சாப்பிட குறைந்தது $35 ஆவது தேவைப்படும். ஆனால் தமிழ் கடையில் $20 இற்கும் குறைவான விலையில் 20 இட்டலி + சம்பல் + சாம்பார் எல்லாம் சேர்த்து வாங்கி ஒரு வேளை உணவை பூர்த்தி செய்யலாம். இதுவே இடியப்பம் என்றால் $13 இற்கு 25 இடியப்பம் + சொதி வாங்கி medium size இல் கோழியோ அல்லது மீன் கறியும் வாங்கி 4 பேர் சாப்பிடலாம்.
அனேக தமிழ் கடைகளில் கொத்து ரொட்டி $9 ஆக்கி விட்டார்கள். ஆனால் 3 வாங்கினால் 4 பேர் இரவும் சாப்பிட்டு அடுத்த நாள் 2 பேர் சாப்பிட முடியும்.
Mc, Tim போன்ற கடைகளில் burger போடுவதற்குரிய bun இல் இருந்து fries இற்குரிய உருளைக்கிழங்கு சிப்ஸ் வரை அவர்களது பிரதான பிரிவில் இருந்து தான் franchise களுக்கு அனுப்பி வைப்பர். பீசா என்றால் மாவை (Daugh), cheese போன்றவற்றை அனுப்பி வைப்பர். அவை கடும் தரக்கட்டுப்பாடுடன் இருக்கும். இதனை தமிழ், இந்திய, சீன கடைகளில் எதிர்பார்க்க முடியாது.
எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு. சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர).
நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண்.
வெறும் உருளைக்கிழங்குகை (10 இறத்தல் 3 டாலர்) அவிச்சு அதை மட்டன் gravy ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு ஏன் 1.50 என்று இன்னும் விளங்கவில்லை. அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள்விக்கிரங்கள்2/$. 10-20% கூட்டுறது பரவாய் இல்லை. 50-100% கூட்டுறது கொஞ்சம் கூட.நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை. 100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம். பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில திறக்கிறது. 2. வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை. எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு. 3. தரம்.
-
3 hours ago, தமிழ் சிறி said:
இங்கிலாந்து ஒண்டு தான்.... இங்கிலிஷ் கண்றி.
அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும்...
அங்கு வசித்த பூர்வீக மக்களிடம், ஆட்டையை போட்டது. 🤣கனடாவும் அதே தான் 🤭
2 minutes ago, ஈழப்பிரியன் said:உக்ரேன் ரசியா சண்டையால ஐயா தப்பிவிட்டார்.
உசுப்பேத்தி வழக்கிறதே தப்பிக்க தானே
-
2
-
-
5 hours ago, குமாரசாமி said:
ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு ஒரு ஆட்டுப்புளுக்கை போல் சிறியது.🤪
ரஷ்யா வியாபாரம் செய்ய இந்தியா,சீனா, தென் அமெரிக்க நாடுகளே போதுமானது.மேற்கு நாடுகள் போல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வாங்கு திறன் இல்லை என்று நினைக்கிறேன். அல்லது ரஷ்யா இவ்வளவுக்கு இழுத்து பூட்டி இருக்கும். இரு பக்கமும் வைக்கவும் வாங்கவும் தேவை
-
2
-
-
8 hours ago, தமிழ் சிறி said:
செல்சியின் உரிமையாளர்... அப்ரமோவிச் உள்ளிட்ட, 7 பேரின் "£150 பில்லியன்" சொத்துக்கள் முடக்கப்பட்டன!
அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.ஏழு புதிய உயரடுக்கு வர்த்தக பிரமுகர்களை உள்ளடக்கிய தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள உதைப்பந்தாட்ட அணியின் உரிமையாளரான அப்ரமோவிச், புட்டினுடன் பல தசாப்தங்களாக தான் கொண்டிருந்த நெருங்கிய உறவைக் மறுத்து வந்தார்.
இவருக்கு அடுத்ததாக தடைப்படிட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள Oleg Deripaska, £2 பில்லியன் மதிப்புள்ள தொழிலதிபர், பிரிட்டிஷ் அரசியல் செயற்பாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக இணைப்பட்டஇவர்களுடன் ரஸ்யாவின் 7 பெரும் வர்தகர்களின் 150 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் பிரித்தானியாவால் முடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னர் நாடு நாடக சென்று கொள்ளையடித்தார்கள். இப்போது தங்கள் நாட்டுக்குள் வைத்து கொள்ளையடிக்கிறார்கள்
-
1
-
1
-
-
7 hours ago, Eppothum Thamizhan said:
செலன்ஸ்கி தான் காமெடியன் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்!!
என்ன தான் இருந்தாலும் ரஷ்யா க்கு அடி பலம் தான். ரஷ்யா எதிர்பார்த்திராத அளவான அழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்
கந்தையா அண்ணையின்.... தாயார், இறைபதம் எய்தினார்.
in துயர் பகிர்வோம்
Posted
கந்தையா அண்ணாவிற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்