
அபராஜிதன்
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Posts
2318 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by அபராஜிதன்
-
உண்மையான பான் இந்திய படம் பொன்னியின் செல்வன் : பிரபலங்கள் பேச்சு!
அபராஜிதன் replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
ஆம் என நினைக்கிறேன் கூட்டு தயாரிப்பு தானே நேற்று டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்தினம் கூட நன்றி சொல்லவில்லை ஓரிடமும் அவர் பெயர் வரவில்லை https://m.youtube.com/watch?v=LYMhbm2ORoc பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களிற்குள் கார்த்தி மட்டுமே வந்தியத்தேவனாக ரசிகர்களின் கற்பனைக்குள் இருக்கும் பாத்திரத்திற்கு கிட்டவாக வருவார் என நினைக்கிறேன்.. வந்தியத்தேவனின் இளமையும் குறும்பும் காதலும் வீரத்தையும் நிச்சயமாக கார்த்தியால் கொஞ்சமாவது ஈடு செய்ய முடியும் என நம்புகிறேன் படத்தில் பூங்குழலி வந்தியத்தேவனின் ரகளையையும் ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனின் கூட்டணி களேபரங்களையும் எப்படி எடுத்திருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக உள்ளேன் . -
நீங்கள் எழுதிய அன்று அன்றே எல்லாவற்றையும் படித்து விட்டன, பதில் எழுத முடியவில்லை . படித்து முடிய என் கண்கள் கலங்கி வழிந்தது , அது பேரின்பராஜா SIR நினைத்தா அல்லது சித்தி உங்களை ஹாஸ்டல் ல விட்டிடு போக நீங்கள் பரிதாபமாக பார்த்து கொண்டு நிண்டதை நினைத்தா என தெரியல தரமான பதிவு வாழ்த்துக்கள்
-
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்
அபராஜிதன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
நோயாளர் நலன் புரி சங்கம் தான் எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன் ஆனால் ஏதும் ஒழுங்கமைப்பாக இல்லை. இவ்வளவு பெரிய வைத்தியசாலையில் காண்டீன் அமைப்பு மட்டும் இப்பிடி சொதப்பல் ஆக வைத்துள்ளார்கள் -
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையும் அதன் பணிப்பாளரும்
அபராஜிதன் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்
அவ்வளவு நோயாளர் வந்து செல்லும் இடத்தில் ஒழுங்கான ஒரு canteen இல்லை இருக்கும் ரெண்டிலும் விலைகள் தலை கீழ், காலையில் போய் கேட்டால் சுடுதண்ணி தரமாடடார்கள் அவர்களின் தேநீர் வியாபாரம் குறைந்து விடும் என்பதால். ஒரு பால் தேநீர் 40 ரூ கடந்த பங்குனி மாதத்தில், இப்போது நிலைமை என்னவோ தெரியல. -
வாழ்த்துக்கள்...... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
-
கோட்டா அரசியலும் இருக்கும் கேள்விகளும்
அபராஜிதன் replied to Sasi_varnam's topic in நிகழ்வும் அகழ்வும்
GOTA இலகுவில் பதவியை விட்டு இறங்குவார் என நான் நம்பவில்லை இராணுவ பலத்தை வைத்தாவது தனது பதவியை தொடர கூடும். கிடைக்கும் அயல்நாட்டு உதவிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சிறிது குறையுமாயின் சிங்கள மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது காலம் கடத்தி கொண்டு செல்லும் போது போராடடம் தானாக நீர்த்து போயிடக்கூடும் .. இந்த நிலையிலிருந்து மீண்டுவர குறைந்தது இலங்கைக்கு ஐந்து வருடங்களிற்கு மேலாக எடுக்கும் அடுத்து கைகாட்டக்கூடிய நம்பிக்கையான தலைவர்கள் சிங்களவர்களிடமும் இல்லை சஜித் ரணில் போன்றவர்களின் ஆளுமை திறன் என்பது இந்த பிரச்சினையிலிருந்து மீண்டுவர தக்க முடிவுகள் எடுக்க கூடியவர்களாக தெரியவில்லை , வேறு அரசாங்கம் மாறினாலும் இந்த நிலைமை குறுகிய காலம் நீடிக்கும் மக்களின் போராட்டம்கள் இல்லாமல் போகலாம் சிலவேளைகளில். இன்னொரு தேர்தலுக்கு ஆக வேண்டிய செலவுகளிற்கு பணம் எங்கிருந்து வர போகிறது அதும் மேலதிக கடனாக தானே பெற வேண்டும் தமிழ் மக்களில் வெளிநாட்டில உறவினர்களை கொண்டுள்ளோர்கள் ஓரளவு தாக்கு பிடிக்க கூடியதாக இருக்க மற்றையோர் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அபராஜிதன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
நான் penny stocks களில் அளவான profit உடன் வெளியே வந்து விடுவேன் -
முன்னர் திட்டமிடப்பட்டிருந்திருக்கலாம் மணிவண்ணன் தான் தியாகி அறக்கட்டளை (TCT) முதலாளியுடன் கதைத்து ஒருகோடி்ரூபா நிதி உதவியுடன் மிககுறுகிய காலத்தில் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யபட்டது இப்போது 2.5 கோடி முடிந்துள்ளது என்கிறாரகள் பிக்கு தானாக உள்நுழைந்துள்ளார் தனக்கென வரவேற்புக்கு ஒரு குழுவையும் அழைத்துகொண்டு வரவேற்பு அழைப்பிதழில் பிக்கு மற்றும் ராணுவத்தினர் இடம்பெறவில்லை
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அபராஜிதன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
பங்குகள் வாங்கி விற்ற அளவில் குறுகிய காலத்தில் போட்ட அளவின் 1+ மடங்கினை கடந்த வருடத்தில் எடுத்திருந்தேன் . Option la கால் வைச்சு குறிப்பிட்ட அளவில் நட்டம்.. யாராவது இது சம்பந்தமான அறிவு உள்ளவர்களிடம் கேட்க வேண்டும்.. -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அபராஜிதன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
கிரிப்டோ நல்ல முதலீடு தான் ,நான் doge coin 0.09 $ வாங்கினேன் அது கிட்டதட்ட .50$ வரை ஏறி இப்போது இறங்கி இருக்கிறது ,நான் குறைந்த விலையில் வாங்கி இருந்ததனால் லாபமே, இப்போது shiba inu coin வாங்கி உள்ளேன் ,ஒரு 50யூரோ. / பவுண்/ டொலர் நட்டம் ஆனால் கூட பரவாயில்லை போனால் போகட்டும் என மன நிலை இருப்போர் 50 ற்கு இதை வாங்கி பாருங்கள் 0.1ற்கு இந்த வருட இறுதியில் வரும் என்கிறார்கள் -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அபராஜிதன் replied to goshan_che's topic in வாணிப உலகம்
பங்கு வர்த்தகத்தில் options (call,put) செய்து லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறீர்களா ? -
B.h அப்துல் ஹமீட் சின்னக் கலைவாணர் ‘பத்மஶ்ரீ’ விவேக் அவர்களது இழப்பு........ ‘மரணம்’ -எவ்வேளையும் வரலாம் என, எம்மையும் எச்சரிக்கும் செய்தி. நேற்று, திடீர் மாரடைப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், நிச்சயம் நலம்பெறுவார் என்ற நம்பிக்கையில், அவர் தேறியபின், அனுப்பிவைக்கலாம் என, நேற்று எனது கைத்தொலைபேசியில் பதிந்து வைத்த ஆறுதல் செய்தி இது. ———“அன்பு நண்பர் விவேக். உங்கள் இதயம் பாதுகாப்பாய் மீண்டும் நலமுடன் இயங்கவேண்டுமென, நீங்கள் நட்டுவைத்த 30லட்சம் தருக்களோடு, எம் இதயங்களும் பிராரத்திக்கின்றன” ——— ஆனால்.அதிகாலையிலேயே அந்தத் துயரச்செய்தி வந்து சேர்ந்தது. ‘கலை மக்களுக்காக’ என நம்பும் கலைஞன், அவர்களைக் களிப்பில் ஆழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது, சூழவுள்ள சமூகத்திற்கும் தன்னால் ஆன தொண்டுகள் செய்யவேண்டும் எனத் திடமாக நம்பிய நல்ல மனிதர். முதுகலைப் பட்டதாரியாக திரைத்துரைக்குள் காலடிவைத்த நாள்முதல் முப்பத்தி ஐந்து ஆண்டு காலம், படைப்பாற்றல் திறமையோடு தனித்தடம் பதித்துச் சென்றுவிட்டார். 90 களின் நடுப்பகுதியில், சென்னை ‘நேரு’ உள் அரங்கில் நடைபெற்ற ஒரு நட்சத்திர விருதுவிழாவைத் தொகுத்து வழங்கியபோதுதான், அடியேன்,அவரை முதன் முதலில் நேரில் சந்தித்தேன். விருது பெற வந்தவர் விருதினை பெற்றுக்கொண்ட பின்னர், அதே மேடையில் ரசிகர்கள் முன்னிலையில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசுகிறீர்களே! நீங்கள் இன்னும் எங்களது சென்னைத் தமிழ் கற்கவில்லையா? என்று கேட்டார். உடனே நானும் வேடிக்கையாக ‘ நீங்கள் ஒரு ஆசிரியராக கற்றுத்தரச் சம்மதம் என்றால், நானும் காத்திருக்கிறேன், என்றேன். சில ஆண்டுகள் கழித்து, ராஜ் தொலைக்காட்சி நடத்திய “நட்சத்திரக் கொண்டாட்டம்” விழாவில் ஒரு ‘ஓரங்க நகைச்சுவை நாடகத்தை’ நடத்தித் தர, நண்பர் விவேக் அவர்கள் இணங்கியபோது, ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது ‘இந்த நாடகத்தில் என்னோடு, அப்துல் ஹமீத் சாரும் நடிக்கனும்’ என்று. என்ன பாத்திரம் என்று கேட்காமலேயே, அடியேனும் சம்மதித்தேன். முன்பு விருது விழாவில் நடந்த உரையாடலையே கருவாக்கி, தனது நண்பன் ஶ்ரீனிவாசன் அவர்களைக் கொண்டு அந்த நாடகத்தை எழுதவைத்து, ஒத்திகைக்கும் அழைத்தார். அதாவது, அடியேன் தமிழாராய்ச்சிக்காக இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ள ஆய்வாளர். சைக்கிள் ரிக்ஷாத் தொழிலாளியான அவரைச் சந்தித்து, அவர்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்குப் பேச்சுத்தமிழ் அனைத்தையும் கற்றுக்கொள்கிறேனாம். நாடகத்தின் முடிவில் ‘நல்லதமிழ்’ மறந்துபோய் நானே சென்னைத் தமிழில் பேசுவதாக நாடகம் நிறைவுபெறும். இந்த நாடகத்துக்கு ஒரு நல்ல பெயர் வைக்கும்படி என்னைக் கேட்டார். “தமிழா! இது தமிழா?” எனப் பெயரிட்டேன். இரண்டே மணிநேரம்தான் ஒத்திகை. அத்தனை வசனத்தையும் மனனம் செய்து அவர் ஒப்புவித்த அதிசயத்தைக் கண்டு வியந்தேன்.அடியேனும் பள்ளிக் கலைவிழாக்களில் கலந்து கொண்ட நினைவு வந்தது. ஒரே கலைவிழாவில் இரு நாடகங்களில் ‘கர்ணன்’ மற்றும் ‘ஜான்ஸி ராணி’ என அத்தனை வசனங்களையும் மனனம் செய்து நடித்த காலத்தை இரைமீட்டி, ‘தமிழா இது தமிழா’ நாடக வசனங்கள் அனைத்தையும் பசுமரத்தாணி போல் நினைவில் பதியவைத்து, அன்று மாலையே சென்னை ‘காமராஜர் அரங்கிலே‘ நடித்து முடித்தோம். நடிகர் விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு அரங்கு நிறைந்த ரசிகப்பெருமக்கள் பெரும் ஆரவாரத்தோடு அந் நாடகத்தைக் கண்டுகளித்த நினைவு, இன்னும் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. அதன் பின் பல்வேறு சந்தர்பங்களில் நாம் ஒன்றாகவே - சிங்கப்பூர், மலேசியா எனக் கலைப் பயணங்கள் மேற்கொண்டோம். கிஞ்சித்தேனும் சோர்வின்றி, தன் அன்றாட வாழ்வை கட்டுக்கோப்பாக, நேர்த்தியாக அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் செலவிடும் அவரது பண்பு, நாமும் கற்று ஒழுகவேண்டியது. அவரது அன்பு மகன், எதிர்பாராது வந்த நோய்க்கு ஆளாகி இறந்தபோதும், அந்த இழப்பின் சோகத்தையே சமூகசேவையால் மாற்றி, இளைதலைமுறையின் கல்விக்கு உதவிய மாமனிதர். 59 வயது என்பது, முதுமை அல்ல என உணர்த்தும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த வேளையில் அல்லவா அவரை இழந்திருக்கிறோம். உண்மையிலேயே இது ஒரு பேரிழப்புத்தான்-கலையுலகிற்கு மட்டுமல்ல, முழுச் சமூகத்திற்குமே. மேதகு.அப்துல்கலாம் அவர்களது பெயரால் அவர் ஆரம்பித்த ‘ஒருகோடி மரம்நடும் இயக்கத்தை’ தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று ஒருகோடி இலக்கினை அடைய, கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைவதே, விவேக் என்ற விவேகானந்தனுக்கு நாம் செலுத்தக்கூடிய, நன்றிக் காணிக்கையாகும். அந்த நல்ல மனிதரின் ஆன்மா, நற்பேறு அடையப் பிரார்த்தனைகள். அவரை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.
-
#FB-2 செத்தா...இந்த மாதிரி நாம செஞ்ச நல்லத கண்ணீர் விட்டு சொல்ல நாலு நல்லத பண்ணிட்டு சாகனும்... வாழ்வின் பெருமை மரணத்தில் தெரியும்... https://m.facebook.com/story.php?story_fbid=4222862314444284&id=100001616704375
-
சமீபத்தில் மறைந்த... என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி மனம் திறக்கச் சொல்கிறார்கள். இந்த அமிலச்சோதனையை நான் எவ்வாறு கையாள்வேன்..? அவனை நினைத்தாலே நெஞ்சு நெகிழ்கிறது. கண்கள் தளும்புகிறது. எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது. இதயம் சோர்ந்துவிடுகிறது. அடுக்கடுக்காக அவன் நினைவுகள் கண்ணீர்மேகமாய் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. பிரசன்ன குமார் - என் பிரசன்னா. 13 வருடங்கள் ஆயிற்று; 14 -ம் வருட வாழ்வு போயிற்று. அக்டோபர் 23 -ல் பிறந்தவன். அக்டோபர் 29 -ல் விடைபெற்றான். 14 வருடங்களின் வருடல் இனி என் நினைவுப்பரப்பில் என்றும் கதறல். இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? இத்தனைக்கும் அவன் நிறையப் பேசுபவன் அல்ல. அவன், அவனது பியானோ, அமர்சித்ரகதா, வீடியோ கேம்ஸ், கால்பந்து, குறிப்பிட்ட சில நண்பர்கள் என்ற ஒரு சிறிய வட்டம் அவன் உலகம். எப்போதாவது பேசுவான். கேமரா, பேட்டி என்றால் கூசுவான். அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான். அந்த வளரிளம்பருவக் குழந்தைக்கு, அம்மாமேல் கால்போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வரும். வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது மனிதருக்கு தோழமை பாப்பா! தெருவில் திரியும் நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்துவந்து, ‘இதை வளர்ப்போம் டாடி!’ எனும்போது கண்கள் மிளிர்ந்து நிற்பான். அவனுடன் நான் பேசிய பேச்சுகள் மிக மிகக் குறைவு. காரணம் அவன் பதில்கள் ‘ஓ.கே.’, ‘உம்’, ‘சரி’, ‘மாட்டேன்’ என ஒற்றை வார்த்தையில் முடிந்துவிடும். ஃபோட்டோவுக்கு நிற்க மாட்டான்; கட்டாயப்படுத்தி நிற்கவைத்தாலும் முகத்தை அஷ்டகோணலாக்கி... அந்த ஃபோட்டோவை பயன்படுத்த முடியாமல் செய்துவிடுவான். அவனுக்குத் தெரியாமல், அவன் புத்தகம் படிக்கும்போது, பியானோ வாசிக்கும்போது, வீடியோ கேம்ஸ் விளையாடும்போது, தூங்கும்போது என எடுத்த ஃபோட்டோக்கள்தான் என் ஃபோனில் உள்ளன இப்போது. அவனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க நான் போராடிக்கொண்டிருந்தேன். அவனைத் திட்டியதில்லை, அடித்ததில்லை, ஏன், அவனைக் கொஞ்சியதும் இல்லை. காரணம் அவன் விடுவதில்லை. அவன் அம்மாவே அவனை முத்தமிட முடியாது. பிடிக்காது. விடமாட்டான். அது என்ன கூச்சமோ?! தன்னைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனிடம் ஏதோ ஒரு புனிதம் இருந்தது. அவனை எல்லோருக்கும் பிடித்துப்போனது. இளையராஜா, அவனை அழைத்து மடியில் அமர்த்தி ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். ஏ.ஆர்.ரஹ்மான் அவனைப் பியானோ அருகில் நிற்கவைத்து ஃபோட்டோ எடுப்பார். ‘இவனுக்கு 18 வயசு வரும்போது முழு இசைக்கலைஞன் ஆகிவிடுவான்’ என்பார்(முந்திக்கொண்டானே!). ஹாரிஸ் தனது ஸ்டுடியோவைச் சுற்றிக் காட்டுவார். தன்னோடு அணைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்வார். அவர் மகன் நிக்கோலஸும் இவனும் அப்துல் சத்தார் மாஸ்டரிடம் பியானோ கற்றுக்கொண்டிருந்தார்கள். அது ஒரு காலம். ஷுட்டிங் இல்லாத நாட்களில் நானே அவனை பியானோ கிளாஸுக்குக் கூட்டிச்செல்வேன். டீக்கடையில் பட்டர் பிஸ்கெட்டும், டீயும் வாங்கிக் கொடுப்பேன். அவன் அம்மாவுடன் சென்றால், இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்காது என்பான். இந்த வருடம் ஏழாவது கிரேடு பியானோ எக்ஸாம் எழுத வேண்டியது. எட்டாவது கிரேடுடன் நிறைவடைகிறது. இப்போது அந்த பியானோ, வாசித்தவன் எங்கே போனான் என்று யோசித்துக் கிடக்கிறது. அவன் விளையாடிய ஃபுட்பால் உதைக்க ஆள் இல்லாமல் ஹாலின் மூலையில் உறைந்து கிடக்கிறது. அவன் விளையாடிய வீடியோ கேம்ஸ், வீணே கிடக்கிறது. தூசி படிந்த அவன் புத்தகங்கள், அயர்ன் செய்துவைத்த யூனிஃபார்ம்கள், பிடித்து வாங்கிய ஷூக்கள்... என வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் கசிந்துகொண்டிருக்கின்றன அவன் ஞாபகங்கள். தோட்டத்தில் உலவினாலும் தொடர்ந்து வரும் சோகங்கள். இதுவரை ‘புத்திர சோகம்’ என்பது ஒரு வார்த்தைத் தொடர் எனக்கு. இப்போதுதான் புரிகிறது அது வாழ்வைச் சிதைக்கும் பேரிடர். கையில் முகர்ந்த வாழ்வெனும் வசந்தத்தை விரலிடுக்கில் ஒழுகவிட்டுவிட்டேன். இழந்த பின்னர் இன்னும் அடர்த்தியாய் மனதில் இறங்குகிறது மகனின் அருமை. அவன் விட்டுச்சென்ற வெறுமை. அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்புக்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம். அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டுச் சின்னஞ் சிறு மனிதர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! பின் குறிப்பு: எப்போதுமே முத்தமிட அனுமதிக்காத என் மகன்... ஒரு முறை அனுமதித்தான். அவன் இறந்த பின், எரியூட்ட அனுப்பும் முன், அவன் நெற்றியில் ஒருமுறை முத்தமிட..! ஒவ்வொரு சனிக்கிழமையும் சாயி பாபா கோவிலில் அன்னதானம் செய்து வந்தோம். வருகிறோம். அந்த அன்னதானத்தில் சிப்ஸ் கொடுக்குறது என்னோட பையன் பிரசன்னா. அவன் ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது கூட அன்னதானம் பண்றத நிறுத்தல. ரொம்ப விரும்பி அவன் அதை செய்றதைப் பாத்திருக்கேன். அதனால அவன் திரும்பி வர்ற வரைக்கும் அவனோட பணியை நானே செய்யலாம்னு நெனச்சு, நான்தான் அப்போ சிப்ஸ் கொடுத்துட்டு இருந்தேன். எப்பொழுதும் நானே கொடுக்கும்படி ஆகுமென்று நினைக்கவில்லை. வீட்டுல எப்பவாச்சும் இரவு கட்டில்ல உக்காந்து நாங்க ரெண்டு பெரும் தலையணை சண்டை போடுறது உண்டு. நான் ஃப்ரீயா இருக்கும்போது என்கூட சண்டை போட அவனும், அவன் கூட சண்டை போட நானும் விரும்புவோம். அவன் இறுதி நாட்களை எடுத்துக்கொண்ட மருத்துவமனை கட்டில், ரிமோட்டின் உதவியால் மேலும் கீழும் அசையுற மாதிரி இருந்துச்சு. அந்த சூழ்நிலையிலும் அந்தக் கட்டிலை ரிமோட் ஊஞ்சலா மாத்தி விளையாடிட்டு இருந்தோம். அந்த கட்டில் இப்போது அவனைத்தேடும். என் வீட்டுக் கட்டிலும், தலையணையும் எப்போதும் அவனைத் தேடும். ‘The Good, The Bad and The Ugly’ என்றொரு இத்தாலிய சினிமா. நான் வீட்டில் இருக்கும்போது யார் என்னை தொலைபேசியில் அழைத்தாலும் எனது பதில், பிரசன்னாவுடன் ‘The Good, The Bad and The Ugly’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். எத்தனை முறைதான் அந்தப் படத்தைப் பாப்பீங்க என்று அவர்கள் கேட்கும் கேள்வியின் பதிலை இப்போதுச் சொல்கிறேன். இசையமைப்பாளர் ‘என்னியோ மொரிக்கோன்’ இசையமைத்த அந்தப் படத்தின் பின்னணி இசைக்காகவே அத்தனை முறைப் பார்ப்பான் என் பிரசன்னா. அவனோடு சேர்ந்து நானும். இனி யாருடன் பார்ப்பேன்? யாருக்குப் புரியும் அவனது ரசனையும், அவன் ரசித்த அந்த இசையும்! நடிகன் என்ற கர்வம் சிறிதேனும் என்னிடம் அவ்வப்போது வெளிப்பட்டு விடும். நடிகனின் மகன் என்ற கர்வம் ஒருபோதும் அவனிடம் வெளிப்பட்டது கிடையாது. எங்கள் ஏரியா சிறுவர்களுடனேயே தொடர்ந்து விளையாடும் பழக்கம் உள்ள அவனுக்கு நண்பர்களும் அவர்களே. அடிக்கடி என்னிடம் பணம் வாங்கிக் கொள்வான். வாங்கும் பணத்தை என்ன செய்கிறான் என்று விசாரித்தபோது, இருபது ரூபாய்க்கு கிடைக்கும் டிவிடி - க்களை வாங்கி அதில் வீடியோ கேம்ஸ் ஏற்றி அவன் நண்பர்களுக்கு கொடுக்கிறான் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன். சந்தோஷப்படுகிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. எப்போதாவதுதான் பேசும் அவன், அடிக்கடி பேசும் வார்த்தை. ‘அப்பா! தண்ணி குடிச்சீங்களா?’. என் கைபேசியில் ஒரு அப்ளிகேஷன் வைத்திருக்கிறேன். நேரத்திற்கு தண்ணீர் குடிக்கச் சொல்லி அலெர்ட் செய்யும் என்னை அது. இப்போது அந்த அப்ளிகேஷன் ‘Please drink water Daddy by prasanna’ என்று என்னை அலெர்ட் செய்கிறது. மனம் திறந்து : கடைசி முத்தம்! - நடிகர் விவேக் மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் விவேக் எழுதிய கட்டுரை. †*************************†********** #FB பாவிங்களா இது மைல் கல்றா !ஊர் பேர் . தெரியாத அளவுக்கு இதையும் சாமியாக்கிட்டீங்களேடா..!? விவேக் தவிர வேறு யாராவது சொல்லியிருந்தால்..ஒரு கூட்டம் கொடி பிடித்திருக்கும்.அவருக்கு முத்திரை குத்தி ஒதுக்கியிருக்கும்.கத்தி மேல் நடக்கும் கருத்துக்களைக் கூட விவேக்கால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்ல முடிந்தது. அக்ராஹரத்து அய்யராக நடிக்கும் போது பகுத்தறிவு பேச முடிந்தது.கழுதைக்கு கல்யாணம் செய்தால் மழை வரும் என்ற பாமரர் நம்பிக்கை மூட நம்பிக்கை என்று உடைக்க முடிந்தது. திரைத்துறையில் இருந்து கொண்டே தற்கால திரையிசையை கிண்டலடித்த காட்சிகள் உண்டு. உடலை அலட்டாத உடல் மொழி எனினும்.. அவரின் ஆமாம் கோபால் கொஞ்சம் நடிக்கவும் செய்தேன் அந்த கெட்டப்..பிறகு தென்காசி பட்டணம் படத்தில் அதான் ஒன்பது மணிக்கா இப்படி வந்தேன் பெண் கெட்டப்பில் கலக்குவார். போலி சாமியாராக பல படங்களில் கலக்குவார் . தொலைக்காட்சி ராசிக் கல் விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு,வாஸ்து குறித்து , திடீர் சாமிகள் உருவாவது குறித்து..சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பகுத்தறிவு துணிச்சலாக பேசியும் அவரை ஆத்திகம் எதிர்க்க முடியவில்லை. நாத்திகம் அவரை சொந்தம் கொண்டாட முடியவில்லை . மக்களுக்கு பிடித்த மக்கள் கலைஞராக வாழ்ந்து முடித்த சின்ன கலைவாணரே.. இறந்தும் பலரின் கவலை நோய் தீர்க்கும் மருந்தாக வாழ்வீர்கள்! டே.குன்வர் சோசுவா வளவன்
-
நான் தமிழ் ல இன்னும் பார்க்க வில்லை
-
நான் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் 5-6 வீதமாக வரலாம் சில கணிப்பீடுகள் ஒரு அல்லது இரண்டு ஆசனங்களிற்கு வாய்ப்பு என சொல்கின்றது எனக்கு நம்பிக்கை இல்லை பார்க்கலாம் இந்த முறை திமுக தான் வரும் என அதும் 200 அளவான ஆசனங்களுடன் வர கூடுமென கணிப்பீடுகள் வர தொடங்கி உள்ளன சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை
-
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல்-2021
அபராஜிதன் replied to அபராஜிதன்'s topic in தமிழகச் செய்திகள்
கோவை தெற்கில் கமல் நிக்கிறார் போல் உள்ளது இங்கு காங்கிரஸ் மற்றும் பா ஜ க தான் போட்டியில் வரும் எனவே கமல் தெரிவு செய்ய பட சாத்தியங்கள் அதிகம் கடந்த முறை இங்கு ம நீ மய்யம் 10 -13 % வாக்குகள் பெற்றிருந்தது வேறு யாரும் அதை முன்னெடுப்பார்கள் அண்ணா -
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் கட்சிகள் தமது தொகுதி பங்கீடுகளை முடித்து தேர்தல் பிரச்சாரம்களை ஆரம்பித்து உள்ளன. அந்த தேர்தல் சம்பந்தமாக நம் யாழ் களத்தில் ஒரு மாதிரி வாக்கெடுப்பு. தேர்தலுக்கு முந்தய நாள் நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் வாக்கெடுப்புகள் நிறைவு பெறும் கட்சிகள் எல்லாமே உங்களிற்கு ஏற்கனவே அறிமுகமானவையே தற்போது ஆட்சியிலிருக்கும் அதிமுககட்சி பா ஜ க வுடனும் பா ம க மற்றும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக ஆனது காங்கிரஸ் உடனும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக,இடதுசாரி கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி வழமை போல தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்கிறது. டி வி டி தினகரனின் அமமுக தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்கிறது போல் தெரிகிறது . கமலின் ம நீ மய்யம் சரத் குமாரின் கட்சியுடனும் வேறு சில உதிரி கட்சிகளுடனும் தேர்தலை சந்திக்கின்றது விஜய காந்தின் தே மு தி க இன்னும் கூட்டணி சேரவில்லை அநேகமாக அதிமுக வுடன் சேருவதற்கான சந்தர்ப்பங்கள் தான் அதிகம். உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் விரும்பும் கட்சிகளிற்கு அள்ளி வழங்கி வெற்றி பெற செய்யுங்கள்
-
. அதனால் இதுபோன்ற முதலீட்டாளர்களை `ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்' என்று அழைப்பார்கள் ராபின்ஹூட்என்பது ஒன் லைன் மூலம் இலகுவாக பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு இணைய தளம், இப்போது அமெரிக்கால உள்ளவர்கள் மட்டுமே இதில் கணக்குகளை தொடங்க முடியும் என நினைக்கிறேன்.இதன் மூலமே அதிகளவான புதியவர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனனர் https://robinhood.com/signup உண்மையாக சொல்ல போனால் அமெரிக்கா பங்கு வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து..சரியான தகவல்கள் மூலம் நல்ல பங்குகளை வாங்குவீர்களானால் நல்ல லாபம் பெற பெற முடியும் எனது அனுபவத்தை எழுதுகிறேன் ஆரம்பத்தில் சில ஆயிரம் அமெரிக்கா டொலர் முதலீட்டுடன் பெரியளவான முன் அனுபவம் ஏதும் இன்றி பங்கு மார்க்கெட் ல கால் வைத்தேன் பயோ நானோ டைனமிக்ஸ் சார்ந்த ஒரு பங்கினை அது சம்பந்தமான செய்தியை பார்த்துவிட்டு காலையில் ஆர்டர் பண்ணினேன்(1share/ 1.36$)க்கு. எனக்கு (1share/1 .86$) கிடைத்தது அன்று இரவு அந்த பங்கு கிட்டதட்ட 1 share/7.32 $ வரை போனது.இப்போது அது 1share/10 -12 $ அளவில் போகிறது நன் வாங்கியது சில நூறு பங்குகள் இதுவே ஆயிரம் அளவுகளில் வாங்கியிருந்தால் எனது லாபங்கள் ஆயிரம்களில் இருந்து இருக்கும். எடிட் என்னும் இனொரு மருத்துவத்துறை சார்ந்த பங்கினை 32$க்கு வாங்கினேன் அது இறுதியாக 96 $ வரை உயர்ந்து இப்போது குறைந்துள்ளது.
-
ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையில் வளர்க்கப்படும் பூர்வீக கலப்பின தேங்காய்களின் விளைவு ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு சுமார் 120+ தேங்காய்கள் ஆகும். மேலும் விவசாய தொழில்நுட்ப ரீதியான நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் முறைகள் தேங்காய் விளைச்சலை ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு 140-150 தேங்காய்கள் எளிதில் அதிகரிக்கும். இலங்கை பல பயிர் செய்கைகள் உள்ளன, அவை நடைமுறையில் இந்த முறையில் அறுவடை செய்யப்படுகின்றன. தென்னை செய்கையில் நவீன விவசாய தொழில்நுட்ப நீர்ப்பாசனம் மற்றும் உரமிடும் முறைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்? தென்னை பெரும்பாலும் வறண்ட பிரதேசங்களில் அதிக மணல் உள்ளடக்கத்துடன் நீர்ரை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் வளர்க்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மண் வேகமாக வெப்பமடைவதால் பயிருக்கு கிடைக்கும் நீர் மற்றும் போசனை அளவு குறைகிறது. பல தென்னை வளரும் பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவலாக மழை பெய்யாது மற்றும் நீண்ட வறண்ட காலங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்களுக்கு தெரியுமா? தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, முறையான நீர்ப்பாசனத்துடன், தென்னை விளைச்சலை 60% ஆகவும், கொப்ராவை 54% ஆகவும் எளிதாக அதிகரிக்க முடியும். இருப்பினும், விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் ஒழுங்கான பசளை மகரந்தச் செய்கை மூலமாக ஆண்டுக்கு ஒரு மரத்திற்கு 150 தேங்காய்கள் வரை கிடைக்கும். நிலத்தடி நீர் பாசனம் மற்றும் போசனை உறிஞ்சும் செயல்திறனை கடுமையாக அதிகரிக்கும். விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் உர பயன்பாட்டு முறை ஒரு சிறப்பு இன்லைன் டிரிப் குழாய் மரத்தை சுற்றி ஒரு வளையம் போன்ற முறையில் நிலத்தடியில் நிறுவப்பட்டு, பயிரின் செயலில் உள்ள வேர் மண்டல பகுதிக்கு தினமும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை (போசனை) வழங்குகிறது. இருப்பினும், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை (தாவர போசனை ) வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்கலாம். நீங்கள் வழங்கும் பசளையின் செயல்திறன் 90% ஐ தாண்டுவதை இது உறுதி செய்யும். இங்கே யூரியா, பொஸ்பெரிக் ஆசிட், MOP , கால்சியம் நைட்ரேட், மக்னிசியம் சல்பேட், இசட்என் சல்பேட், போரான் ஆகியவற்றை நீரில் கரையக்கூடிய உரமாகப் பயன்படுத்தலாம். சேதன பசளை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும். இருப்பினும், வழக்கமான பசளை பயன்பாட்டின் செயல்திறன் 20% க்கும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, இது பசளையின் பணத்தை வீணாக்குகிறது மற்றும் கிடைக்கக்கூடிய விளைச்சலைக் குறைக்கிறது. மேலும், நிலத்தடி நீர் பாசனத்தில், பயிரின் செயலில் உள்ள வேர் மண்டலம் எப்போதும் மண்ணின் சரியான கலவையை பராமரிக்கும் போது நிலத்தின் திறன் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. தென்னை பயிரில், மிகவும் சுறுசுறுப்பான வேர் மண்டல பகுதி சுமார் 2 மீ ஆழம் மற்றும் மரத்தின் அடிவாரத்தில் இருந்து 1.5 மீ ஆழம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், மண்ணின் மேற்பரப்பில் இருந்து 20cm - 130cm பரப்பளவில் உள்ள நீர் மிகவும் முக்கியமானது. தேங்காய் பயிருக்கு முறையான நிலத்தடி நீர் முறையைப் பயன்படுத்தும் போது, அடிப்படை போர்டு கலையில் எப்போதும் ஒரு சிறப்பு இன்லைன் டிரிப் குழாயை வைக்க மறக்காதீர்கள். துளைகளுக்கு இடையிலான தூரம் மண்ணின் அமைப்புக்கு ஏற்ப சொட்டு நீர் திறனை தீர்மானிக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 25-35 லிட்டர் என்ற விகிதத்தில் இரண்டு மணி நேரம் நீர்ப்பாசனம் செய்வது முக்கியமாக தென்னை மரத்தின் தினசரி நீர் தேவை சுமார் 60-70 லிட்டர். நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நீரின் pH மற்றும் மின் கடத்துத்திறனை அறிந்து கொள்வது அவசியம். பசளை சீபார்சு நீரின் மின் கடத்துத்திறன் மற்றும் pH க்கு ஏற்ப மாறுபட வேண்டும், மேலும் உப்பு படிவுகள் அடைப்புக்கான உப்பு பரிகாரம் காலத்துக்கு அதற்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். (ACID பரிகாரம்) நீர்ப்பாசன காலம், பயிர் வளர்ச்சி நிலை மற்றும் பல்வேறு, மற்றும் இப்பகுதியில் ஆவியாதல் வீதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மற்ற நீர்ப்பாசன அமைப்புகளை விட விவசாய தொழில்நுட்ப நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனத்தின் நன்மைகள், *உயர் நீர் மற்றும் பசளை செயல்திறன் (95%) *பயிரின் மேற்பரப்பில் விவசாய பயிர் செய்கை வேலைகளைச் செய்வது எளிது (அறுவடை, களைக் கட்டுப்பாடு, பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவை) எலிகளால் குழாய்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் குறைந்தபட்ச பராமரிப்பு நீர் வழங்கல் அமைப்பின் அதிகபட்ச ஆயுட்காலம் குறைந்தது இருபது ஆண்டுகள் ஆகும் ஒரு குறுகிய காலத்தில் மிக உயர்ந்த தரமான உயர் விளைச்சலைப் பெற முடியும். இலங்கையில் நீர்ப்பாசனம் மற்றும் பயிரிடப்பட்ட தேங்காய் தோட்டங்கள் மிகக் குறைவு. கூடுதலாக, நீர்ப்பாசன பயிர்களில் 98% க்கும் அதிகமானவை குறைந்த செயல்திறன் கொண்ட அடித்தள முறையையும், குழாய்கள் / குழல்களை மூலம் பயிரின் இயந்திரமயமாக்கப்பட்ட நீர்ப்பாசன தளத்தையும் பயன்படுத்துகின்றன. எப்போதாவது நீர்ப்பாசனம் சிறிய தெளிப்பானை தலைகளையும் (sprinkler system) காணலாம். இருப்பினும், மேம்பட்ட நிலத்தடி நீர் வழங்கல் மற்றும் பசளை பிரயோகம் இலங்கையில் தேங்காய் விளைச்சலை அதிகரிப்பதற்கான மிகவும் பொருத்தமான முறையாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றும் சரியான அறிவைக் கொண்டு கணினியை மிகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் திறமையாகவும் வடிவமைக்க சரியான கருவிகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவதை நீங்கள் எளிதாக மேலே https://www.facebook.com/bt.napf2013/posts/1595057607358486 காணலாம் . fb செ.சுதாகரன் (Bsc in Agri and Dip in Agri ) Western province Department of Agriculture, Colombo
-
அன்னாசி வளர்ப்பு எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இது பிரமிலசே இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிரிடும் முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும். சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன்படுத்திக்கொள்ள வேண்டும். நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்களை அமைக்க வேண்டும். கொண்டைகள், மேல் கன்றுகள், பக்க கன்றுகள் ஆகியவை நடவு செய்வதற்கு பயன்படுகிறது. 300 முதல் 350 கிராம் எடையுள்ள கன்றுகள் தேர்வு செய்து நட வேண்டும். நடவு செய்வதற்கு முன்பு கன்றுகளை மேன்கோசெப் 3 சதம் அல்லது கார்பன்டாசியம் ஒரு சத கலவையில் 5 நிமிடங்கள் நனைத்து நடவு செய்ய வேண்டும். கன்றுகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 30 செ.மீ ஆகவும், வரிசைகளுக்கு இடையிலுள்ள இடைவெளி 60 செ.மீ ஆகவும் இருக்குமாறு விதை நேர்த்தி செய்த கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 40 முதல் 50 டன் இட வேண்டும். பின்பு செடி ஒன்றுக்கு 16 கிராம், சூப்பர் பாஸ்பேட் 4 கிராம் கலந்து கன்று நட்ட ஆறாவது மாதமும் பின்பு பன்னிரெண்டாவது மாதமும் இட வேண்டும். பின்பு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் வைத்து நீர் பாய்ச்சினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். பழத்தின் எடை அதிகரிக்க நாப்தலின் அசிட்டிக் அமில கரைசலை காய் பிடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தெளிக்கவேண்டும். இதனால் பழங்கள் பெரியதாகி எடை அதிகரிக்கும். களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும், அறுவடை முடிந்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க காய்பிடித்து ஒன்றிரண்டு மாதங்களில் கொண்டையின் குருத்தை கிள்ளி எடுத்துவிட வேண்டும். இதனால் 12 – 20 சதம் வரை பழங்கள் பெரியதாகும். கன்று நட்ட 12 மாதங்களில் பூ வர ஆரம்பித்து 18 மாதங்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகும். பழங்கள் மஞ்சள் நிறமாக மாறியபின் அறுவடை செய்யவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 50 டன் வரை பழங்கள் கிடைக்கும். அன்னாச்சிப்பழ செடி பயன்கள் அன்னாச்சிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன. அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளறு ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும். அன்னாச்சிப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். source-fb
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் பிரதியான 'தனுஜா'வை ( ஈழத் திருநங்கயின் பயணமும், போராட்டமும்) வாசிக்கத் தொடங்கியபோது, அது இற்றைவரை தமிழ்ச்சூழலில் வெளிவராத ஒரு நூலென்ற எண்ணம் தொடக்கத்திலே வந்துவிட்டது. எல்லா privilagesம் இருக்கும் ஆண்களாகிய நாங்களே எமது வாழ்வில் நடந்தவற்றை அருகில் இருப்பவர்களிடம் கூடப் பகிரத் தயங்குகின்றபோது, நமது சமூகத்தில் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட திருநங்கையான ஒருவர் இவ்வளவு நேர்மையாக தன்னை முன்வைக்க முடியாமென என ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருசேர இதை வாசித்தபோது முன்வந்தது. தனுஜாவின் சிறுவயது ஆணுடலுக்குள் சிக்குப்பட்ட பெண்ணின் கையறுநிலை என்றால், பின்னர் ஒரு பெண்ணாக 'நிர்வாணம்' செய்தபின், தனது இந்த நிலைக்காக அவமதித்த ஆண்களை அவர் 'பழிவாங்கும்' (கொழும்பு மாமா போன்றவர்களை) சந்தர்ப்பங்களைக் கூட நம்மால் அவ்வளவு எளிதால் செரித்துக்கொள்ளமுடியாது. ஆனால் இதுதான் நான், என்னை உங்களைப் போன்ற ஆண்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நமது புரிதல்களைக் கேள்விக்குட்படுத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரவிறுதியிலும் நண்பர்கள் சிலர் கலந்து மெய்நிகர் உலகில் பேசிக்கொண்டிருந்தபோத் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் பற்றிய பேச்சுவந்தது. அதன் தொடர்ச்சியில் சாருவின் எழுதிய 'உன்னத சங்கீதம்' கதைகள் போன்றவற்றுக்காய் சாருவை நிராகரிக்கின்றேன் என்று ஒரு நண்பர் சொல்ல அதுகுறித்து பேச்சு இழுபட்டது. நபகோவின் 'லொலிடா'வின் மிக மலினமான கதை 'உன்னத சங்கீதம்' என்பதும், அந்தக் கதை குறித்தே அன்றே புலம்பெயர் பெண்கள் பெரும் எதிர்ப்பை அறிக்கையாக/தொகுப்பாக முன்வைத்தார்கள் என்பதும் நாம் அறிந்ததே. நான் சாருவின் அனைத்துப் புனைவுகளையும் தேடித்தேடி வாசிக்கின்ற ஒருவன். அவரின் மொழியின் எளிமைக்கும், அங்கததற்குமாய் அவரை இன்னும் விடாது பின் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கின்றவன். ஒரு வளர்ந்த ஆணுக்கு, ஒரு சிறுமியோடு சலனம் வருவது சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அந்தச் சிறுமியின் பார்வையை முற்றாக மறுத்து ஒரு வளர்ந்த ஆணின் பார்வையிலும், வரலாற்றுப் பிழைகளோடும் (இந்திய இராணுவம் சிங்களப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்றும்) genuine இல்லாது எழுதப்பட்டதால் உன்னத சங்கீதத்தை எனக்கும் நிராகரிக்கக் காரணம் இருந்தது. அதை அந்த நண்பர்களின் கூடலில் சொல்லியுருமிருந்தேன். எனினும் அடுத்த நாள் ஒரே இருக்கையில் தனுஜாவின் இந்த நூலை வாசித்தபோது நான் சரியாகத்தான் பேசுகின்றேனோ என்பதில் கேள்விகள் எழுந்தன. தனுஜா ஒரு ஆணாகப் பால்நிலை சார்ந்து பிறந்ததால், அவரைப் பெண்ணாக இருக்க மறுக்கும் சமூகத்தில், தன்னைப் பெண்ணாக உணரவைக்கும் ஆண்களை எல்லாம் ஒருவித கருணையுடன் அவர் எதிர்கொள்கின்றார். தனுஜா தனது 12 வயதோடு ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்துவிட்டாலும், அவரின் இந்த ஆணின் உடலுக்குள் அடைபட்ட பெண் தன்மையால், அவர் அதற்கு முன் வாழ்ந்த இந்தியாவிலும், இலங்கையிலும் உடல் சார்ந்த வாதைகளுக்கு உட்படுகின்றார். இந்த நூலில் தனுஜா வயது வந்த ஆண்களோடு தனது சில அனுபவங்களை பாலியல் வன்புணர்ச்சிகளாகவும், சிலவற்றை அவ்வாறில்லாதும் குறிப்பிடும்போது குழந்தைப் பிராயத்தில் பாலியல் விழிப்புக்களைப் பற்றி நான் அறிந்துகொண்டவ சரியா என்ற கேள்விகளும் எழுந்துகொண்டிருந்தன. ......................... தனுஜாவின் இந்த நூலின் ஒவ்வொரு பகுதியை வாசிக்கும்போதும் இந்தளவுக்கு ஒருவர் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அதைவிட முக்கியமாக பிறர் எவ்வளவு வன்முறையை/இழிவுகளைத் தனக்குச் செய்திருந்தாலும் எவரையும் judge செய்யாமல் எழுத முடிகிறதென்ற வியப்பே வந்துகொண்டிருந்தது. தனுஜா தனது உடல் சார்ந்த போராட்டங்களை மட்டுமில்லாது, திருநங்கை சமூகங்களுக்கிடையில் இருக்கும் சிக்கல்களையும், பிரச்சினைகளையும், பிணக்குப்பாடுகளையும் மறைக்காது முன்வைக்கின்றார். ஒருவகையில் நாமும் பலவீனமுள்ள மனிதர்கள்தான் என ஒருவர் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி அங்கு நடக்கும் நிகழ்வுகள் சில்வற்றைப் பேசும்போது நமக்குப் புரியவைக்க முயல்கின்றார். இதுவே இந்தப் பிரதிக்கும் இன்னும் சிறப்பைக் கொடுக்கின்றது. ஒரு திருநங்கை இன்னொரு திருநங்கைக்கு வசதியின் நிமித்தமும், இளமையின் நிமித்தமும் பொறாமை கொண்டு ஏதாவது தவறைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்கல் வரும்போது, அந்தச் சர்ச்சைகளை மறந்து நம்மைப் போன்றவர்களுக்கு நம்மைவிட வேறு யார் உதவப்போகின்றார்கள் என்று ஆதரவு அளிக்கின்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அற்புதமானவை. ஜேர்மனியில் வசிப்பவராக இருந்தாலும் தனுஜாவின் புலம்பெயர் வாழ்வைச் சொல்கின்ற அனுபவங்கள் பெரும்பாலும் சுவிஸிலும், கனடாவிலும் நடக்கின்றவையாக இருக்கின்றது. முக்கியமாக கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்கின்றவராக அதுவும் நான் வசிக்கும் அதே நகரில் இருந்திருக்கின்றார் என்பது சுவாரசியம் தரக்கூடியது. அதிலொருவர் குறும்படங்களில் நடிப்பவர். அவரைத் தனுஜா வன்கூவரில் சந்தித்து பிறகு அவரோடும் அவர் குடும்பத்தோடும் ரொறொண்டோவில் வசிக்கத் தொடங்குகின்றார் (குறும்பட உலகு சிறியது என்பதால் அவர் யாரென்பது அடையாளங்காண்பதும் அவ்வளவு கடினமில்லை). கிட்டத்தட்ட ஒரு சிறைபோல அவர் வீட்டுக்குள் இங்கு வைக்கப்பட்டிருந்தாலும், பிற எதைப்பற்றியும் கவலைப்படாது அப்படி ஒரு 'குடும்பப் பெண்'ணாக மட்டுமே இருப்பதே அவருக்கு போதுமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த ஆண் அவரை ஒரு முழுமையான பெண்ணாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதே தனுஜாவுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. இன்னொரு கனேடிய தமிழ் ஆண், அவரை மலேசியாவுக்குப் போவதற்கான பயணத்தின் செலவை ஏற்றுக்கொள்கின்றேன் எனச் சொல்லி தனுஜாவைக் கூட்டிக்கொண்டு இலங்கையின் தென்பகுதி முழுவதும் திரிகிறார். அவர் திருமணஞ் செய்த ஆண். தனது மனைவியின் உறவினர்களைக் காணச் செல்கின்றபோது மட்டும் இவரைக் கைவிட்டுவிடுகின்றார். இவ்வாறு தனக்கான துணையைக் கண்டடைந்துவிடுவேன், ஒரு அற்புதமான வாழ்வை வாழப்போகின்றேன் என்று தனுஜா நம்புகின்ற ஒவ்வொரு பொழுதும் காதலின் நிமித்தம் கைவிடப்படுகின்றார். பிறகு அவருக்கு ஆண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளமுடிகிறது. நீயும் நான் கண்ட இன்னொரு அந்த ஆண்தானே என ஒருவித பரிகாசப் புன்னகையுடன் எல்லா ஆண்களையும் எதிர்கொள்கின்றார். தன்னைப் பெண்ணாகப் பெருமையாக முன்வைத்து வாழ்வின் சவால்களை சந்திக்கின்றார். ஒருகாலத்தில் பெற்றோரினாலும், உறவுகளாலும் ஒடுக்கபப்ட்ட தனுஜாவைப் பிறகு அவரின் குடும்பம் ஏற்றுக்கொள்கின்றது. இடையில் இவரின் பெண் தன்மையைப் புரிந்துகொள்ளபோது இவரின் குடும்பம் ஒடுக்கியபோதும், தனுஜாவின் குடும்பம் அவரைத் தம்மோடு வைத்துக்கொள்வது கூட கவனிக்கத் தக்கது. கெளரவமும், சாதித்திமிரும், அடியுதைகளும், வார்த்தைகளால் அதைவிட வன்முறைகளும் செய்துகொண்டிருக்கும் தனுஜாவின் தந்தைகூட அவரைத் தமது குடும்பக் 'கெளரவத்தின்' காரணமாக வெளியே போகச் சொல்லாதுதான் விட்டு வைத்திருக்கின்றார். திருநங்கைகளுக்கு மட்டுமில்லை, நம் எல்லோருக்குமே தனுஜா தனது அடையாளஞ்சார்ந்து செய்கின்ற தேடல்களும், தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் கற்றுக்கொள்ளவேண்டிய விடயங்களாக இருக்கின்றன. இதுவரை -நாமாக திருநங்களைகளைப் பற்றிப் பேசுகின்றபோது- வைத்திருந்த நிறையக் கற்பிதங்களை உடைத்துச் செல்கின்ற பிரதியாக இந்த சுயவரலாற்று நூல் இருக்கின்றது. தனுஜா தன் அடையாளம் சார்ந்து சுவிஸ், மலேசியா, இந்தியா என்று எங்கெங்கோ தன்னைத் தேடி அலைகிறார். தனக்குப் பிடித்தமான விடயங்களைச் செய்கின்றார். நான் பெண்ணாக உணர்கின்றேன், என்னைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னபோது கேட்காதவர்களை, பிறகு அவ்வளவு அழகாக எதிர்கொள்கின்றார். அத்துடன் திருநங்கைகளைக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு, அதே திருநங்கைகளைக் காமத்தின் பொருட்டு தேடிப்போகின்ற எண்ணற்ற தமிழ் ஆண்களை இந்த நூலில் காண்கின்றோம். உள்ளூர ஒன்றை விரும்பியபடி, ஆனால் அதை 'நாகரிகமாய்' மறைத்தபடி நமது ஆண் உள்ளங்களை நாமே மீண்டும் கண்ணாடியில் பார்ப்பதுபோல இந்த ஆண்கள் நம்மைக் கடந்துபோகின்றார்கள். ................... அதுவும் இன்னமும் முப்பதையே தொட்டுவிடாத தனுஜா கடந்து வந்திருக்கின்ற பாதை மிக நீண்டது. நாம் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் இவ்வாறு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கமுடியாதவளவுக்கு அவ்வளவு கடுமையான பாதையது. ஆனால் அந்த கடின வழியைக் கடந்துவந்து, எதன் பொருட்டும்/எவர் பொருட்டும் தன்னைச் சமரசம் செய்யாது தனுஜா தனது கதையை வெளிப்படையாக முன்வைக்கின்றார் என்பதற்காய் நாம் கரங்களை நன்றியுடன் பற்றி அவரை அரவணைத்துக்கொள்ளவேண்டும். எத்தனையோ சீழ்களையும், புண்களையும் கொண்ட ஒரு சமூகத்தில், தன்னை அதிலிருந்து வெளியேற்றாது, தானும் அதில் ஒருவரே என தன்னையும் முன்வைத்து அதே சமயம் தான் சந்தித்தவர்களைக் கூட அதிகமாய் தாழ்த்தாது, இவ்வளவு அனுபவங்களுக்கிடையிலும் மிகுந்த கம்பீரமாக முன்வைக்கின்றார் என்பதே எனக்கு இந்த நூலில் முக்கியமாக இருந்தது. கொழும்பில் தன்னை அடித்த ஒரு மாமாவை தனுஜா நீண்ட வருடங்களின் பின் இலங்கையில் சந்திக்கின்றார். மாமா ஏன் என்னை எப்போதும் அடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' எனக் கேட்கிறார் (தனுஜாவின் பெண்மைத்தன்மையின் நிமித்தம் சிறுவயதில் இந்த மாமாவின் வன்முறை மிகுந்த கொடுமையானது). அப்படி அந்தப் பெண்தன்மையை வெறுத்த மாமா தனுஜாவை முத்தமிடுகிறார். வாயில் பாம்பு கடிப்பதைப் போல அதிர்ந்துபோனேன் என்று சொல்கின்ற தனுஜா 'இவ்வளவு தானடா உங்கள் குடும்பப் பாசம்? இவ்வளவு தானடா உங்களது தமிழ்ப்பண்பாடு' என நினைத்துக்கொள்கிறார். பிறகு அவரோடு உடலுறவில் ஈடுபடுகிறார். நீங்கள் என்னை எவ்வளவோ அடக்கி வைத்திருந்தாலும், நான் எனது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துப் பெண்ணாக மாறிவிட்டேன். என் ஆன்மா விரும்பியதை நான் சாதிவிட்டேன்' என்பதை அந்த உடலுறவின் மூலம் அவருக்கு அறிவித்தேன்' என்கின்றார் தனுஜா. இப்படிச் சிறுவயதில் கொடுமை செய்த மாமாவுக்கு அவர் வித்தியாசமான ஒரு 'பழிவாங்கலை'ச் செய்கின்றார். ஆனால் வாசிக்கும் நமக்கோ அதிர்ச்சி வருகின்றது. அதையும் புரிந்துகொள்கின்ற தனுஜா இறுதியில் இவ்வாறு கூறூகின்றார். "ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது. பொது அறங்களால் , பொது நீதியால், பொதுக் கலாசாரங்களால், பொது இலக்கியங்களால் , பொதுத் தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுதும் வஞ்சிக்கப்படவர்களான எங்கள் பயணம் புதிர்வட்டப் பாதை. இந்தப் புதிரை யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள் கூட அவிழ்த்ததில்லை.' (அச்சில் வரவிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி) Elanko DSe-fb
-
இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…! இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும். பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. அதனால் இறாலை “கடலின் தூய்மையாளர்” என்றும் அழைக்கின்றனர். இறாலானது ஆழ்கடல் பகுதியில் தான் முட்டையிடுகின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில்(prawn farming business plan) நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன. மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலிலும் அதிகமாக கால்சியம்(calcium), அயோடின்(iodine) மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இறால் வளர்ப்பினை நெல் விவசாயத்துக்கு இணையாகவே பேசுவார்கள். இதிலும் விதை, அறுவடை என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும். கடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது. ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. நல்ல தண்ணீர் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிட்டத்தக்க விஷயம். இறால் வளர்ப்பு முறை மற்றும் குளம் தயார் செய்தல் / prawn farming business plan: நீர்வாழ் இறால்கள் பலவகை இருப்பினும் குறிகிய காலத்தில் கூடுதலாக வளர்ச்சி, கண்ணைக்கவரும் தோற்றம் ஆகிய நீலக்கால் மற்றும் மோட்டு இறாலை தனியாகவோ அல்லது கெண்டை மீன்களுடன் சேர்த்தோ வளர்க்கலாம். நீர்நிலைகளுக்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 1 மீட்டர் ஆழத்திற்கு மணல், வண்டல் மண், களிமண் கலவை 1.5:1 :1.5 என்ற விகிதத்தில் ஒவ்வொரு குளமும் 1000 முதல் 5000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைத்தல் வேண்டும். நிலத்தை நன்றாக காயவைத்து உழவேண்டும். பின் 500 கிலோ நீர்த்த சுண்ணாம்பு இடவேண்டும். கார அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவு வரை உயர்த்த வேண்டும். மாட்டுச்சாணம், கோழிக்கழிவு ஆகியவற்றை குளத்தில் இட்டு குளத்தின் நீர்மட்டத்தை 30 செ.மீ அளவில் அமைக்க வேண்டும். 100 கிலோ யூரியா(urea), 250 கிலோ சூப்பர் பாஸ்பேட்(super phosphate), அடியுரமாக முதலில் போட வேண்டும். 15 நாட்கள் கழித்து நீரின் நிறம் மாறியபின் நீர்மட்டத்தை 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அதை அறுவடை காலம் வரை பராமரிக்க வேண்டும். இறால் மீன் இருப்பு வைத்தல் / இறால் வளர்ப்பு / prawn farming in tamil: தனியார் மற்றும் அரசு இறால் மீன்(prawn farming) பொறுப்பகங்களிலிருந்து நன்னீர் இறாலை பெற்று எக்டருக்கு 50,000 வரை இருப்பு செய்யலாம். இருப்பு செய்வதற்கு முன் நாற்றங்கால் சூழ்நிலையில் வைத்து 2 வாரங்களுக்கு உணவு கொடுத்த பின்னர் விட்டால் பிழைப்பு விகிதம் அதிகமாகும். இறால் இருப்பு செய்தபின் பராமரிப்பு / இறால் வளர்ப்பது எப்படி: இருப்பு செய்தபின் குள நீரை பாதுகாப்பது மிகவும் அவசியம். நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன்(oxygen), கார அமிலத்தன்மை(Alkaline acidity) மற்றும் உயிரினங்களின் உற்பத்தியை கண்காணிக்க வேண்டும். வெப்பம் 26-32 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜன்(oxygen) 5 மி.கி/லிட்டர் இருந்தால் இறால் மீன்(prawn in tamil) நன்றாக வளரும். நீரில் பிராணவாயு(oxygen) அளவை சரியாக பராமரிக்க காற்றூட்டும் இயந்திரத்தை பயன்படுத்தலாம். இறால் மீன் தீவனம் / இறால் வளர்ப்பு தொழில் / prawn farming: ஈரமாகவோ, காய்ந்த நிலையிலோ உணவை தாராளமாய் கொடுக்கலாம். இறால் உணவு செய்வதற்கு மீன், நிலக்கடலை, அரிசி குருணை, கோதுமை புண்ணாக்கு, மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் இறால் தீவனத்தை முறுக்கு, வற்றல் வடிவம் போல் செய்து விற்பனைக்கு விற்று வருகின்றனர். அதை கூட நாம் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இறால் மீன் அறுவடை மற்றும் இறால் மீன் விற்பனை / இறால் வளர்ப்பு தொழில்: 5 மாதங்களில் இறால் சராசரி 50 கிராம் அளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். நீலகால் இறால் அதிகபட்சம் 250 கிராம் வளர்ச்சி அடையும். இறால்களை பிடிப்பதற்கு தண்ணீரை வடித்த பின்னர் இழுவலை அல்லது வீச்சு வலையால் பயன்படுத்தலாம். நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகு கை தடவல் மூலமாகவும் இறாலை பிடிக்கலாம். FB
-
சார்லி பார்த்திருந்தால் ..அதனோடு இன்ச் பை இன்ச் ஒப்பிட தோன்றும் அது பார்க்காமல் இருந்தால் படம் பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு