Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2867
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by கற்பகதரு

  1. எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில் அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫
  2. சிவராம் என்னிடம் நேரடியாக நீங்கள் சொன்னது போலவே சொன்னார்.
  3. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.
  4. ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு இன்னமும் விரக்தி, வேதனை எல்லாம் ஆரம்பமாகவில்லையா?
  5. மாற்று வழி மாணிக்கங்களான எங்கள் தீர்வுக்கான பாதைகள் உங்களுக்கு துரோகங்களாக தெரியும் என்று ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் இல்லையா? ஆகவே அவை பற்றி இந்த களத்தில் கருத்து பரிமாற்றம் சாத்தியமற்றது. மீண்டும், .... இந்தவிதமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தூர விலகிவிடுவதே என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பானது. தனியொருவராக இதனை செய்ய முடியாது. சிலரோடு சேர்ந்து. செய்ய முயன்றாலும் வேகமாகவே துரோகிகளாக காட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். ஆகவே நானும் என்னை போன்ற தீர்வுக்கான பாதை தெரிந்த பலரும் ஒதுங்கி இருக்கிறோம். இந்த மாற்றுவழிகளை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் ஈழத்தமிழரின் பொதுசன தொடர்புசாதனங்களையும் சமுக இணையங்களையும் மக்கள் அமைப்புக்களையும் தமது ஆதிக்கத்துள் வைத்திருப்பவர்கள் இவ்வாறாக புதியதொரு பிறப்புக்கு உண்மையாக மனச்சுத்தத்துடன் முயற்சிக்க வேண்டும். முன்னர் ஈழத்தமிழரின் நிலை பற்றி சர்வதேச மாநாடுகள் நடந்தன. இப்போதும் சில இணையவழி கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மாற்று தீர்வுகள், மாற்று வழிகள் பற்றி இவை போன்ற கலந்துரையாடல்கள் நேர்மையுடனும் உண்மையாகவே மாற்றுவழிகளையும் மாற்று தீர்வுகளையும் காணும் நோக்கத்துடனும் இடம் பெற வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்யுங்கள், அங்கே சந்திக்கலாம். விலை கொடுத்து பெறாதவற்றின் பெறுமதிக்கு நாம் மதிப்பு கொடுப்பது குறைவு. மாவீரர் நாள் நிகழ்வு முடிய மண்டபம் நிறைந்த மக்கள் வெளியேறும் போது இலவசமாக கொடுக்கப்பட்ட தேசிய தலைவரின் படம் இருந்த வெளீயீட்டின் பிரதிகள் மண்டபத்தின் தரை எங்கும் சிதறியிருக்க, அவரின் முகத்தை ஏறி மிதித்துக் கொண்டு வெளியேறும் மக்களை கண்டு சகிக்க முடியாமல் அவர்களை ஏசி விரட்டிவிட்டு அந்த படங்களை எடுத்து மேசைமீது அடுக்கி வைத்த எனக்கு இலவசத்தின் பெறுமதி தெரியும். இத்தனைக்கும் இதே தேசியத்தலைவரே முள்ளிவாய்க்காலில் எனது உறவுகள் பலியானதுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியதும் நானே. இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே இலவசமாக கொடுப்பதற்கு நான் அவரல்ல.
  6. இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு. வன்முறை அல்லது உண்ணாவிரதம் தவிர வேறு எதை பற்றி பேசுபவர்களுக்கும் இங்கே இடம் இல்லை. அப்படியான கருத்துகளை கொண்டிருப்பவர்களை துரோகிகளாக பார்ப்பது ஈழத்தமிழரின் வழக்கம். ஆகவே உங்களுக்கு எஞ்சியுருப்பது: உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.
  7. நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.
  8. 1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.
  9. இந்த பப்பாசி காயால் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் விரிவுரையாளராக இருந்த செந்தில்மோகன் உலகப்புகழ் பெற்றார். பிரித்தானியாவிலும் கிறீஸ்தவ ஐரோப்பிய உலகிலும் கருக்கலைப்புக்கு மருத்துவ காரணம் இல்லாவிட்டால் அனுமதி இல்லை. செந்தில்மோகன் கலாநிதி பட்டத்துக்காக தேர்ந்து கொண்ட ஆய்வு, பப்பாக்காயில் உள்ள இரசாயனங்கள் எப்படி கருக்கலைப்புக்கு உதவுகின்றன என்பதாகும். இவரது ஆய்வின் முடிவு பகிரங்கமானதும் உலகப்புகழ் பெற்றார்.
  10. From the album: இணைப்புகள்

    இலங்சகை னத்தொகை வளர்ச்சி

    © கற்பகதரு

  11. எனக்கு பிடித்த சுவாமிகள் ராஜ்நீஷ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர். அவரது ஆசிரமங்கள் இப்போதும் OSHO International Meditation Resort என்ற பெயரில் இயங்கி வருகின்றன.
  12. எனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா? நன்றி
  13. இலங்கையில் வாங்க விரும்புபவர்கள் “புள் தோசி” என்று கேட்டு முயற்சிக்கலாம். ”தனக்கடா சிங்களம், தன் புறடிக்கு சேதம்” என்பது நானறிந்த துளியளவும் கலப்படம் இல்லாத முற்றிலும் ஈழத்தில் உருவான தனித்துவமான ஒரேஒரு பழமொழி. 😃
  14. யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன. சில உதாரனங்கள் Social Science Research Network ( https://www.ssrn.com/en/ ) Research Gate (https://www.researchgate.net/) LinkedIn (https://www.linkedin.com/) இது தவிர, மாதம் 51 அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.
  15. இது அவர்களது கடமை. இன்று முன்னாள் போராளிகளுக்கு உதவுவதில் முன்னின்று செயற்படுபவர்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ பாதிரிகள். அங்கு உள்ள மக்களுக்கு உதவும் நிறுவனங்களுடன் தொடர்பிருப்பவர்கள் இதை அறிவர். இவ்வாறான உதவி பெறுபவர்களை இந்த பாதிரிகள் மதம் மாற்றுவதில்லை. மாறாக அவர்களின் மத கடமைகளை செய்ய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். இருக்கிறது. துர்க்கை அம்மன் கோவிலில் மறைந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆரம்பித்து வைத்த அநாதை குழந்தைகளுக்கான நிறுவனத்தை மிகச்சிறந்த பொறுப்பான நிறுவனம் என ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி என்னிடம் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். காரணம் இவர் அவ்வளவு எளிதாக ஒரு இந்து நிறுவனத்தை இப்படி புகழ்ந்து பிரேரிப்பார் என நான் நினைத்திருக்கவில்லை. யாழ் களத்தில் இல்லாத மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு உதவுவதில் இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் அங்கு இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.
  16. கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களும் இசுலாமிய மதமும் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்து மதம் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளூர் அரசியல்வாதிகளால் அரசியல் பலம்பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்து மதம் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படாத காரணத்தால் தீவிர மதமாற்றத்தை இந்து மதம் செய்யவில்லை. இந்து தீவிரவாதத்தை முன்வைத்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது மிக அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில், சிவ் சேனா இலங்கையில் உருவாக்கபடுவது, இலங்கையில் மனித உரிமை விடயங்களில் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்யும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத் தலைவர்கள் அஞ்சி ஒதுங்க வழிவகுக்கும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்துக்களை முதன்மைபடுத்தும் தீர்வை தீவிரமாக அமுல்படுத்த முயலலாம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்தவர்கள் முஸ்லிம்கள் போல இலங்கை அரசை ஆதரித்து அதன் ஆட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். போர் முடிந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் இலங்கை அரசை தீவிரமாக ஆதரித்து வந்ததை இவ்விடத்தில் நினைவு கூரூவது பொருத்தமானதாகும்.
  17. ஒருவரின் தாய் மொழியை வைத்து மட்டுமே அவரின் இனத்தை தீர்மானிப்போம் என்றால் அமெரிக்கர்களும் கனேடியர்களும் கரிபியன் தீவினரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிடுவார்கள். பல ஆபிரிக்க இனத்தவர்களை இசுபானியார்களாக கருதப்பட வேண்டியிருக்கும். இலங்கை தமிழரும் இந்திய தமிழரும் ஓரினம் ஆகி அவர்களின் தாய்மண் தமிழ்நாடாக இருக்கும். ஒல்லாந்தர்கள் யாழ்ப்பாண தமிழரை மலபார் இனத்தவர் என குறிப்பிட்டு உள்ளதால் யாழ்ப்பாண தமிழரை பின்னர் வந்த தமிழருடன் கலந்த மலையாளிகள் என கருதுவோர் இருக்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் தாம் அரபு வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள். தனித்து நின்று எந்த சிக்கலையும் தீர்க்க முடியாது என்பது முள்ளிவாய்க்கால் தந்த பாடம். இலங்கை தமிழர் இலங்கையில் பலமற்ற 11.21%. முஸ்லிம்கள் 9.23%. இலங்கையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தேவைகளும் சிக்கல்களும் பல இருக்கின்றன. தமிழர் ஆயுதம் ஏந்தியும் சத்தியாக்கிரகம் செய்தும் கடந்த 50 வருடங்களாக வீணாக்கிய சக்தியுடன் ஒப்பிடும் போது இந்த உறவுப்பாலத்துக்கு தேவையானது மிகவும் குறைவான சக்தியே.
  18. கவிஞர் ஜெயபாலன், நீங்கள் மீண்டும் நலமாக திரும்பி வந்தது மகிழ்ச்சிக்குரியது. நானும் சகோதரரை முள்ளிவாய்க்காலில் இறுதி நாளில் இழந்துவிட்டேன். கடந்த ஆண்டு இலங்கைக்கு போய் மீதம் இருக்கும் குடும்பத்தினரை பார்த்து விட்டு வர முடிந்தது. நீங்கள் எழுதிய உங்கள் (தடுப்பு காவல் மற்றும் நாடுகடத்தல் தவிர்ந்த )அனுபவங்களுடன் எனது அனுபவங்களும் ஒத்து இருக்கின்றன. ஸ்ரீ லங்கா காவல் துறையினர் பண்பாக நடந்து கொள்வது பற்றி இரண்டு விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர்கள் இவ்வாறான மாற்றங்கள் 2005 இடப்பெயர்வின் பின் மக்கள் திரும்பி வந்ததில் இருந்தே ஆரம்பித்து இருந்ததாக தெரிவித்தார்கள். புலனாய்வு துறையினரின் செயற்பாடு அதிக அளவில் முக்கியத்துவம் பெற்று குறிப்பிட்ட அளவில் தமது கவனத்திற்குட்பட்டவர்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. பொது மக்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் காவல்துறை இருப்பாதாக தெரியவில்லை. தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் முஸ்லிம்களும் கூட போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். இலங்கையில் தமிழருக்கு மட்டும் விடிவு தேடி அது கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவானது. இன்று 11.21% (2011 சனத்தொகை ) ஆகவுள்ள தமிழர்கள் 88%மான ஏனையவர்களின் ஆதரவும் இன்றி தமக்கு ஒரு விடிவை காணும் சாத்தியம் கேள்விக்குரியது எல்லோருடைய கவனமும் இன்றைய அரசில் இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சினையை இன்றைய அரசு ஆரம்பிக்கவில்லை. இதற்கு முதல் இருந்த எல்லா அரசுகளுமே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருந்திருக்கின்றன. எடுத்தவுடன் இந்தியாவுக்கு ஓடும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த பெரும் அழிவின் மூலவேரில் இருக்கிறார்கள். இந்தியா தம்மை பாதித்திருப்பது பற்றி தமிழரிலும் பார்க்க சிங்களவர்கள் மிகவும் அறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பொதுவான காரணிகளை அடையாளம் கண்டாவது மக்கள் ஒன்றுபட்டு ஒரு விடிவை காண தங்களை போன்ற செல்வாக்கான வழிகாட்டிகள் உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எரிக் சொல்ஹெய்ம் முதல் நீதி அமைச்சர் ரவுல் ஹக்கீம் வரை எல்லாரும் உங்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால் இந்த சிக்கலில் இருந்து எல்லா மக்களும் விடுபட உதவ முடியும். திஸ்ஸ விதாரண போன்ற அமைச்சர்கள் தங்களை போன்ற புலம்பெயர்ந்தவர்கள் இந்த சிக்கலை தீர்க்க பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஏற்கனேவே கேட்டிருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவோ செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.