Elugnajiru
கருத்துக்கள உறவுகள்-
Posts
2547 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Elugnajiru
-
பின்லாந்து, சுவீடனை நேட்டோவில் சேர்க்க இணங்கியது துருக்கி
Elugnajiru replied to goshan_che's topic in உலக நடப்பு
குர்திஸ்தான் போராளிகள் இப்போதும் தங்களது போராட்டத்தை சொந்த மண்ணில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிதாக ஒரு பாதிப்பும் பின்லாந்து நாடு துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்த்தால் பிரச்சனை வராது சிறிய பின்வாங்கலே. ஆனால் இதன்மூலம் புலம்பெயர் தமிழர் ஒருவிடையத்தை புரிந்துகொள்ளலாம் என்னதான் இருந்தாலும் தங்களுக்கு ஒன்றென்றால் எவருக்கும் கழுத்தில் கத்தியை வைத்தாலும் பரவாயில்லை எனும் நாடுகள் தான் மேற்குலக நாடுகளாகும் என்பதே- 19 replies
-
- 2
-
- ரஷ்யா
- உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு
-
(and 1 more)
Tagged with:
-
வெளிநாடுகளில இருந்து பணம் அனுப்பி இலங்கைக்குப் பொருதளை அனுப்பமுடியும் ஆனால் அந்தப்பணம் திரும்பவும் வெளிநாட்டு நாணயமாக கைகளுக்கு வராது என்ன கத்தை கத்கையா மகிந்தவினதும் கொத்தாவினதும் படம்போட்ட கடதாசிகளைக் கட்டித்தருவார்கள் அதைச் சுண்டல் சுத்தப் பயன்படுத்தலாம் அதைவிட இன்னுமொரு விடையம் அங்கு எல்லாரும் காணி பூமிகளை வித்துப்போட்டு கனடாவுக்கு வர நிற்கினம் அவர்கள் விற்கும் காணிகளை உந்தக்காசிலை சல்லிசு விலைக்கு வாங்கலாம்.
-
"காலம்" ஆகிய காவல்துறையின் தனது வீரருக்கு இறுதிவணக்க நிகழ்வில் மிகவும் சிறப்புடன் கலந்துகொண்டு பங்காற்றியமைக்கும் இறுதி வணக்கம் செய்தமைக்கும் அனைத்துத் தமிழனத்தினதும் சார்பில் எமது நன்றியையும் வணக்கத்தையும் உரித்துடையதாக்குகிறோம். கனடா தேசம் தனது நாட்டின் மக்களுக்குப் பல்வேறு தருணங்களில் எப்படி மதிப்பளிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். நன்றி. அந்தக் கனடாவின் காவல்துறை வீரனுக்கு எனது இறுதி வணக்கம்.
-
தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை எனும் கோதாவில் நீங்கள் காசு அனுப்புங்கோ நாங்கள் தமிழர்களை வாழவைக்கிறம் எனக்கூறிக்கொண்டு வாக்குவங்கி அரசியலுக்கு அத்திவாரம் போடுகினம். சாணாக்கியன் சுமந்திரன் ஆகியோர் ராஜபக்ச தரப்பையும் ரணில் தரப்பையும் இந்தியத்தரப்பையும் அடிக்கடி சந்திக்கினம்தானே அவர்களிடம் கோரிக்கையாக புலம்பெயர் தமிழர்கள் தங்களது பணத்தில் தாயகத்து உறவுகளுக்கு தற்போதைய உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிப்பதற்காகவேனும் அவர்களாகவே இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்குமாறு. கடந்தகாலங்களில் நாலாம் குறுக்குத் தெருவில் வர்த்தகம் செய்த தமிழர்கள்தானே இறக்குமதியில் ஈடுபட்டார்கள். மத்திய வங்கியில் வெளிநாட்டுப்பணம் கையிருப்பில் இல்லை ஆகவே அவர்களால் எந்தவொரு கொடுப்பனவுக்கும் அனுமதியளிக்க முடியாது. ஆகவே புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்தவாறே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புகொன்டு இலங்கைத் துறைமுகத்தில் பொருதளைக் கையளிக்கும்வண்ணம் ஏற்பாடு செய்ய அனுமது கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தலாமே. உலகமயமாக்கல் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் இப்போதைய போக்கிவரத்து மற்றும் வெளிநாட்டு வியாபார வலைப்பின்னலில் இவை சாத்தியமானதே. முதலில் பொருதளை இறக்குவதாகவிருந்தால் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் அப்படி முயற்சிக்கும்போது வணங்காமுடி கப்பலுக்கு நடந்த கதி நடக்கக்கூடாது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறிது சிறிதாக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு எமது உறவுகள் இப்போதும் பெட்டிகளில் அடைத்துப் பொருதள் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் அதன் கையடக்க விலை ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில்லறை வியாபாரிகளது விற்பனை விலையாக ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளது அதே பொருள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கப்பலில் வந்த கட்டணம், சுங்கம் உள்ளூர் ஏற்றி இறகல் செலவு அந்நிய நாணியப் பரிவர்த்தனைக் கட்டணம் ஒவ்வொரு பொருளையும் உள்ளூரில் விற்பதற்குத் தகுதியுடையதா? வழக்கத்துக்கு மாறான இராசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா எனச்சோதனை செய்ய ஏற்படும் செலவு இவைகளுட சில்லறை விற்பனையாளரது இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கியே இவை அனைத்தும் தாயகத்து உறவுகளுக்குப் போகிறது. சரி அதை விடுங்கள் தமிழ் நாட்டிலிருந்து மொத்த விற்பனையாளர்களிடம் புலம்பெயர் தேசத்தவர்கள் கொள்முதல் செய்து அதை தங்களது உறவுகளுக்கு நேரடியாக அனுப்புவதற்கான ஒரு வலைப்பின்னலை இந்தயாவும் இலங்கையும் சேர்ந்து செய்தாலே ஓரளவு எமது தாயகத்து உறவுகள் பயனடைவார்கள்.
-
முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின்போது தலைவரை தப்ப விடுவதற்காக பசில் ராஜபக்சவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இணைப்பாளராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. தவிர இந்தியா மேற்குலகம் அனைத்தும் சம்பந்தனுக்கும் ஏனைய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கும் புலிகளை அழித்ததன்பின்பாக தமிழர்களுக்கான தீர்வை மிக விரைவில் நடைமுறப்படுத்த அனைத்தும் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததாக யாழ் இணையத்தில் ஒரு கட்டுரை வந்திருந்து அதில் சம்பந்தனையும் போர்குற்ற, இன அழிப்பு விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என கூறப்பட்டிருந்தது. தவிர புலிகளுக்கும் ரணிலுக்கு இடையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சமாதான காலத்தில் சம்பந்தனும் அவரது பரிவாரங்களும் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தார்கள் அப்போது நான் வாழும் நாட்டுக்கும் பயணம் செய்திருந்தார்கள் அதன்போது சம்பந்தன் மூச்சுக்கு முன்னூறு தடவை சுமந்திரனுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு சில அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தார் அப்போது சபை நாணயம் கருதி நாம் இவைகளைச் செவிமடுக்கவில்லை தவிர சுமந்திரன் அவர்களை எதிர்காலத்தில் தமிழர் அரசியலுக்குக் சம்பந்தன் கொண்டுவருவார் என புலம்பெயர் தேசத்தில் புலிகளின் வால்களாகிய நாங்கள் கணித்திருக்கவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் அப்போதே சுமந்திரன் தமிழர் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் என்பது காலப்போக்கில் அறியக்கூடியதாக இருந்தது அப்போது சம்பந்தன் அவர்கள் சுமந்திரனை "சுமன்" என தொலைபேசி உரையாடல்களில் விழித்ததை நான் அவதானித்தேன். ஆக இன அழிப்புத் தொடர்பான போர்குற்ற விசாரணை என வரும்போது தமிழர் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதே எனது கருத்து. இதில் எவரையும் விட்டு வைக்கக்கூடாது. தவிர ஒரு செய்தியாளர் சந்திப்பில் புலிகளதான் தமிழ்தேசிய முண்ணணியை உருருவாக்கினார்களா எனச் சுமந்திரனிடம் கேட்டபோது தனக்கு அதுபற்றித்தெரியாது அப்போது நான் தமிழர் அரசியலிலோ அல்லது கட்சி உறுப்பினராகவோ இருக்கவில்லை என நழுவலான கருத்தை வெளியிட்டதை இங்கி நினைவுகொள்ளவும்
-
பிறகென்ன இன்னுமொரு 1958 டையும் 1983 டையும் தொடங்கி விடுங்கோவன. மகிந்தவை சீனாக்காரன் சவேந்திர சில்வாவை வைத்து சீனன் குடாவில் சிறப்பிடித்து வைத்து இராணுவ ஆட்சியைக்கொண்டுவர எத்தனிக்கையில் மேற்குலகமும் இந்தியாவும் ரணிலை இறக்கி ராஜபக்சக்களைக் காப்பாற்றி அமெரிக்க தூதரகத்துக்கு சவேந்திர சில்வாவை வரவைத்து மிரட்டி அடக்கிவாசிக்கச் சொல்லி, பின்பு கொத்தா உட்பட்ட அனைவரது பாதுகாப்பையும் இராணுவத்திலிருந்து விலக்கி போலீஸ்காரர்களுக்கு மாத்தி ஒரு வழியாக இராணுவ ஆட்சி வரவிருந்ததை நிப்பாட்டி அதே நேரம் இந்திய தூதர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து குடாநாட்டில் உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒழுங்குநடவடிக்கப் பயமுறுத்தல்களை எவரும் அறியாதமாதிரி காதோடு காதாகச் செய்து.
-
சாணாக்கியன் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கும் பின்பாக நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்களைக் கொண்றொழித்த கையோடு மகிந்தவின் கைகளிலிருந்த இரத்த வாடைகூடப் போகாமல் இருக்கும்போது அவருடன் கைகுலுக்கி அரசியல் செய்தவர் இப்போ சுமந்திரனுக்குச் செம்புதூக்கி கூட்டமைப்பில போட்டியிட்டு நாடாளுமன்றம் போனவுடன் நிறையக் கதைக்கிறார். இப்போதெல்லாம் சிங்களத்தின் இரத்த உறவுகள்தான் தமிழர் அரசியலைக் கொண்டுசெல்ல தமிழர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உளவுத்துறையிலும் எப்படி மலையாளிகளது ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அதேபோல் இப்போது சிங்களத்தின் இரத்த உறவுகள் மற்றும் கொண்டான் கொடுத்தான் உறவுகளது ஆதிக்கம் அதிகரித்திருப்பது விரும்பத்தக்கதல்ல. சாணாக்கியன் மறுபடியும் தனது தந்தையரது மொழியை மறந்து தாயாரது மொழியைப்பேசிக்கொண்டு எப்போது சிங்களத்துக்குக் காவடி எடுக்கிறாரோ தெரியாது ஆனால் எப்போதோ ஒரு நாள் இது நடக்கும். எங்கட இளையோர் பலர் இவர் அடுத்த தேசியத் தலைவர் எணு சொல்லிக்கொண்டு திரிகினம் கருணா எனும் முரளிதரன் புலிகளது த்லைவரது இடது வலதாக இருந்தே துரோகியாகின வரலாறு எம்மிடம் இருக்கு. கனடாவிலிருந்து கூட்டமைப்பு தேர்தல் நிதியாக மில்லியன் கணக்கில் சேர்தத பணத்துக்கு என்ன நடந்தது எனக்கேட்ட மகளிர் அணியைச்சேர்ந்தவரை மான நஸ்ட வழக்குப்போடுகிறன் எனப் பயம்காட்டி சுமந்திரன் அடக்கியதுபோல எதிர்காலத்தில் சிங்களத்துடன் சேர்ந்து இவரும் எங்களுக்கு வாலை ஆட்டுவார். பிரேமானந்தாவுக்காக இந்தியா சென்று சாட்சி சொன்ன விக்கியர் (இவரும் சிங்களச் சம்பந்திதான்) அடுத்த சிங்களச் சம்பந்தி சுமந்திரன், இப்போ சாணாக்கியன் இவர்கள் எல்லாம் எமது அரசியலைத் தீர்மானிப்பது காலக்கேடாகும். முதலில் விருååஅம் எண்டால் உங்கட சொத்து சுகத்தை வித்து தாயகத் தமிழருக்குச் சாப்பாடு போடுங்கோ அப்புறம் பாக்கலாம்.
-
நல்ல விசயகாரங்களைப் பிடித்து ஒரு புதிய கிருப்டோ கரன்சியை உருவாக்கி நல்லா ஏத்திப்போட்டு "ரெரா லூணா" போல தொப்புகடீர் என போட்டு உடைத்துவிட்டு தட்டி மாறினால் எல்லாம் சரியாகி விடும். இப்போது உலகமெங்கும் ஓர்கானிக் உணவுக்கு நல்ல மவுசு தவிர வேகன் உணவுக்கும் நல்ல மவுசு இது மேட்டுக்குடியினரிடையே ஒரு பாஸ்ன் ஆகிவிட்டுது ஆகவே இப்படியான உற்பத்திகளை மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாக்கினால் ஏற்றுமதியில் காசு சம்பாதிக்கலாம் தவிர எல்லாத்தையும்விட வடக்கையும் கிழக்கையும் பிரிச்சு தமிழரிட்ட கொடுத்தால் ஆரம்பத்தில ஏல்லாரு வெளிநாடுகளில இருந்து ஓடிவந்து டாலர்களைக் கொட்டுவினம் பிறகு அவர்களே நடுரோட்டில நிண்டு ஆளுக்காள் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு அடிபட்டுப் பிரண்டு எல்லாத்தையும் விட்டுட்டு பழையபடி வெளிநாட்டுக்கு வந்திடுவினம் பிறகென்ன மறுபடியிம் சிங்களவன் அதையெல்லாம் ஆட்டையைப் போடலாம் டாலர் ஊருக்குள்ள வந்தபிறகு சிங்களவன் தன்னுடைய ஆட்டத்தை திரும்பவும் தொடங்கலாம்.
-
இலங்கை வரலாற்றில்... மிக நீண்ட, எரிபொருள் வரிசை!
Elugnajiru replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அனேகமாக அனைத்தும் நடந்து முடியவில்லை இதுவே ஆரம்பமாகும் என நினைக்கிறேன். எங்களால் இனவாதம்பேசி நாட்டுமக்களைச் சமாதானப்படுத்தலாம் என்றால் புலியையும் இல்லாதொழிச்சாச்சு, மடவேலை செய்துபோட்டம், இல்லாட்டில் சர்வடேசங்களிட்டையும் புலியின் பெயரைச் சொல்லி சர்வதேசத்திடமும் சமாதானத்துக்கான போர் எனச்சொல்லி காசு பார்த்திருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள்தான் இனிமேல் வந்து நாட்டை முன்னேற்றப்போகினம் என யாழ்குடாவில கதை அடிபடுகுதாம் ஒருதர் கேட்டைடத்தில நான் கூறினேன் புலிகளது காசை அடிச்சவனெல்லாம் ஒதுக்கியதுபோக ஒதுங்கிட்டினம், இனிமேல் ஒருத்தரும் வரபோவதில்லை ஆர்வக்கோளாறில ஒன்றிரண்டுபேர் வெளிக்கிட்டவர்கள் அவர்களிடம் நீங்கள் யாரு யார் உங்களுக்கு அனுமதி தந்தவையள் அப்பிடி எண்டால் அவையள ஒரு அறிக்கை விடச்சொல்லுங்கோ பாக்கலாம் என கேட்டது ஒரு புறமிருக்க மறுபடியும் காசடிக்க வந்திட்டாங்கள் எனப் புறுபுறுக்க வந்த நாலுபேரும் எப்போதோ ஒதுங்கிட்டாங்கள். எனக்கூறினேன். ஆனால் ஒரு விடையம் எனக்கு மனதில பட்டுது சொன்னால் கோவிக்கமாடியள் என நினைக்கிறன் நான் ஊருக்குப் போகும்போது அவசரத்துக்கு ஏதாவது வாகனம் பிடிச்சால் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாது நாலு ஆட்டோவை மறித்தால் ஐந்தாவதுதான் நிக்கும் மற்றப்படி எதுக்கு ஆட்டோ ஓடுறம் எனத்தெரியாமலேயே சும்ம துருவில சவாரி இல்லாமல் திரிவினம். இரவு ஏழு மணிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில இருந்து பத்துக்கிலோ மீறர் தூரம் உள்ள எனது ஊருக்குப் போக இரண்டாயிரம் ரூபாய் கேட்பார்கள் ஏன் எண்டு கேட்டால் பெற்றோல் விலை கூடிப்போட்டுது இரவில வருகிறது பயம் மற்றப்படி திருபிவரும்போது வெறுமனதான் வரவேண்டும் எனக்கன நியாயம் கதைப்பார்கள். ஒருவித மனச்சாட்சியும்மில்லாது செயற்படுவார்கள். இந்தவேளையில இதைச் சுட்டிக்காட்டுவது சரியில்லைத்தான் ஆனால் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை. ஏதாவது அலுவலாய் வங்கி வாசலுக்குப் போனால் கழுவிவிட்டு அந்தக்காசை அடிச்சுவிட வந்திட்டினம் எனுமாப்போல் ஒரு பார்வை பார்ப்பினம் பாருங்கோ ச்சா எண்டிருக்கும். ஆனால் நாய் உழைச்சகாசு குரைக்காது என்பதுபோல் நாம் புலம்பெயர் தேசத்தில் நாம் உழைச்சகாசு மணக்காதுதானே. வந்திட்டார் சரம் கட்டிக்கொண்டு தெருவில திரியுறதுக்கு எங்கட ஊரில ஒருவர் வெளிநாட்டிலிருந்து என முதுகூக்குப் பின்னால கதைக்கிறதை நான் நிறையவே கேட்டிருக்கிறன் தவிர முக்கால் காச்சட்டை போட்டாலும் வேட்டி கட்டினாலும் பிறத்தாலை நக்கல் நையாண்டி செய்தவையளையும் யாழ்ப்பாணத்தில நிறையவே கண்டிருக்கிறன். அவர்களில் யாராவது இந்தக்கருத்தப் பார்த்தால் அவை அனைத்தும் அவர்களுக்கே அர்ப்பணிக்கிறன். அதுசரி விடிய விடிய பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்களே இவர்கள் வேலைவெட்டிகளுக்குப் போவதில்லையா யாழ்ப்பாணத்தில். -
ஒரு இறைமை உள்ள நாடு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எல்லா வித உரிமைகளும் இருக்கு அது சிறீ லங்காவாக இருந்தாலும் என்ன தமிழர் நிலம் ஆகவிருந்தாலும் என்ன இன்று மன்னார்பகுதி நாளை கச்சதீவு இப்படி எதிர்காலத்தில் தமிழர் நிலம் எல்லாம் இந்தியனுக்குத் தாரை வார்த்துக்கொடுப்பதை யாழ் களத்தில் எவரும் விரும்பமாட்டார்கள் என அறிகிறேன். மோடி கொத்தாவை அழைத்து சீனாவுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாரை அதானிக்குக் கொடு இல்லையேல் நாம் போர்க்குற்றம் இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு உங்களுக்கு ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியது இப்போது சிங்களவர்களாலேயே வெளியில் வந்துவிட்டது. நாளை வடபகுதிக்கடலில் பல இந்திய மீனவர்களை இந்தியாவே கொன்றொழித்துவிட்ட சிங்களம் செய்தது எனக்கூறி கச்சதீவை ஆக்கிரமிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
-
மாமல்லபுரத்தில் குவிந்த திரையுலகினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்!
Elugnajiru replied to கிருபன்'s topic in வண்ணத் திரை
ஒரு பெண் பல்வேறு பிரச்சனைகள் தோல்விகள் மனக்கசப்புகள் அனைத்தையும் தாண்டி அவரவர் வாழ்கையில் நடக்கக்கூடிய சுப நிகழ்சிகளைச் சந்தித்து வாழ்வது இயற்கையே. இதில் விமர்சிக்க எதுவுமில்லை. ஆனால் என்ன ஒரு விடையம் நெருடலாக இருக்கின்றது , தமது திருமண வைபவத்தை "நெட்பிளிக்ஸ்சில்" விலைபேசி வித்துக் காசு பார்த்ததும், திருமணத்துக்கு வந்திருந்தவர்களது தொலைபேசிகளை புடுங்கி வைத்திருந்ததும். ஆனால் இதில் கடந்த காலத்தில் ஒரு திருமண வைபவத்தில் இயக்குணர் பாலாவினது மனைவியை சுத்திச் சுத்திப் படமெடுத்து என்னைப்போன்ற நடுத்தர வயது தாண்டிய இளசுகளும் இல்லாது கிழடுமில்லாதவர்களை வாயில் வீணி வடிக்கப்பண்ணியதை நினைத்தால் இது பரவாயில்லை. -
மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!
Elugnajiru replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர். 1 நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும் 2 ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும். 3 அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும். சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும். பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும். குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும். அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது. என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும். போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே -
முன்னம் இட்டதீ முப்புறத்திலே, அறம் நின்று கொல்லும். ஐ நா உட்பட இந்தியா ஈறாக மேற்குலக நாடுகளுடன் தமிழர்களைக் கொன்றொழித்த பாவம் இப்போது அனைவரதும் அடிமடியிலும் கைவைக்கிறது உக்ரைன் ரஸ்யா ஐரோப்பியா என எல்லாஇடங்களிலும் இருப்பில் நெருப்புப் பற்றிவிட்டது. நிச்சயம் சிறிய ரக அணுகுண்டுகள் இந்த நாடுகளைப் பதம்பார்க்கும். அதன் பின்பு இந்தியாவுக்கும் இதே நிலை வரும்.
-
இவரது அப்பா ஒரு மொடாக்குடியர் தொண்டைமானது மகனும் ஒரு குடிகாரர் ஆறுமுகம் தொண்டைமான் நல்லா தண்ணியைப் போட்டுட்டு படியால விழுந்துதான் செத்துப்போனவர் இரவு செத்தாலும் விடியக்காத்தால செத்ததா கதை விட்டவங்கள். செந்தில் தொண்டைமான் தேர்தலில நிக்கும்போது என்னை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ மலையகத்தை சிங்கப்பூராக மாத்திறன் எண்டார். காலா காலமாக இவரது பூட்டனையும் அப்பஙாரணையும் பாராளுமன்றம் அனுப்பினமே அவர்கள் எமக்கு எதுவுமே செய்யவில்லையே நீ வந்து செய்யப்போறிய எனக் யாரும் யோசிக்கேல்லை.
-
பா.ஜ.க.வின்... தமிழகத் தலைவருக்காக, காத்திருந்த... தமிழ் தலைமைகள்!
Elugnajiru replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இவர்களைப் பார்த்தால் கைதடி வயோதிபர் மடத்தில சாப்பாட்டுக்குக் காத்திருக்கிறமாதிரிக் கிடக்குது என்ன, சுமந்திரந்தான் சாப்பாடு வரும் கொஞ்சம் பொருங்கோ எனச்சொல்லுறார்போல -
இந்த அண்ணாமலை யாருமல்ல திரு ரஜனிகாந் அவர்களை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அவர் வராமல் போக அதன்பின்பு கர்நாடகாவைச்சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக வேலை செய்து அரசியலுக்காக தனது வேலையை விட்டுட்டு இப்போ தமிழ்நாட்டில் பா ஜா கா வின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரு கர்நாடகாக்காரன் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில் நான் முதலில் ஒரு கன்னடன் அதன்பின்பே மற்றவை எல்லாம் எனக்கூறியவர், இப்போ இரண்டு நாளைக்கு முன்பு தயா மோகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளது அரசியல்துறை எனக்கூறி அவருக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டிருக்கும் அசைண்மென்ட் என்னவெனில் இப்போ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் புலம்பெயர் தேசங்களில் யாரும் அரசியல் நடத்துவதில்லை காரணம் அதைத் தடை செய்துவிட்டார்கள் ஆகவே எங்களுக்கு ஒத்துவராத புலம்பெயர் அமைப்புகளை ஓரங்கட்ட வேண்டுமெனில் நீ போய் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை விடு அதன் பின்பு எல்லாரையும் புலம்பெயர் தேசங்களில் லாடஙட்டுவாங்கள் அதுக்குப்பின்பு நாங்கள் இந்திய நலனுக்கான காய் நகர்த்தல்களை தமிழர்கள் நடுவில் செய்வம் என்பது ஒரு புறம் இருக்க இந்தக்கன்னடத்துக்காரனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருக்கு இந்தியா அண்ணாமலை வெறுமனே பா ஜ கா காரன் மட்டுமல்ல தமிழக ஆளுநர் ரவிபோல ஒடு இந்திய உளவுத்துறையின் வேலைகளைச் செய்துமுடிக்கும் உளவாளியுமாகும். நாகலாந்தில் ஆளுநர் ரவி செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமில்லை இப்போ தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் அதுபோல் எல் முருகன் எனும் தலித்தை பா ஜா க தன்னுடன் வைத்திருந்தாலும் காஞ்சி மடத்தில் உள்ள பிராமணியை இருநூறு மீற்றர் தொலைவிலவைத்துப்பார்க்கவே அனுமதி கிடைத்தது
-
சுமந்திரன் அவர்கள் சிறீலங்கா அரசியலில் கவனம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதே காரணம் அவர் கொழும்பில் மிக வசதியாக சிங்கள மக்களுடன் உறவாடி வளந்து இப்போ சிங்களத்தின் சம்பந்தியாக வந்திருப்பதால் அவரது மருமகள்காறி கேட்டதற்கிணங்க இவற்றைச் செய்கிறார் ஆனால் இதற்குள் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழுத்துவிடுவது அப்படி ஒன்றும் சிறப்பானதல்ல.
-
இல்லை அவர்களது செயல் தங்களைப் பாதுகாக்கவே மற்றது வாழ்க்கைத் தரம் என்று எடுத்துகோண்டால் இப்போது தமிழ்நாட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் வாழ்வதே சிறந்தது மேட்டுக்குடியினர்போலும் வாழலாம் அதே நேரம் அளவு சாப்பாடு சாப்பிட்டும் வாழலாம் தவிர இப்போது அகதியாக வந்தவர்களுக்கு மேற்குலக நாடு ஏதாவது ஒன்றில் யாராவது உறவுகள் இருப்பார்கள் அவர்களது உதவியும் அவர்களுக்குக் கிடைத்தால் தவிர அவர் தச்சுவேலை செய்பவராக இருந்தால் கெட்டித்தனமாகச் சம்பாதிக்கலாம். இப்போதெல்லாம் அகதி முகாம்களில் வாழும் வேலைசெய்யத் தகுதியுடையோர் எல்லாரும் ஏதாவது வேலைக்குச் செல்கிறார்கள் நான் இந்தியாவில் உயர்கல்விகற்க நீண்ட நாள் வாழ்ந்தனான் எனது கருத்தின்படி பணம் இருந்தால் உலகததில் சொர்க்கம் எதுவெனில் இந்தியாவில் தமிழ்நாடுதான்.
-
யாழ் கள உறவான கோமகன் அவர்களது சாவுச்செய்தி அனைவருக்கும்போல்போல் எனக்கும் மிக அதிர்ச்சியாகவுள்ளது. மிகவும் நாணயமான கருத்தாடல்களை முன்வைக்கும் உறவொருவரை யாழ்களம் இழந்துவிட்டதில் துயரே மிகுதியாகிறது, அன்னாரில் ஆத்மா வீடுபேறடைய எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன். அவரது துயரால் வாடும் அனைவர்க்கும் எனதும் யாழ்கள உறவுகளதும் ஆழ்ந்த இரங்கள்கள். நான் நினைப்பதுண்டு இங்கு களமாடும் உறவுகள் ஏதோ மிக இளமையானவர்கள் என ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை யதார்த்த நிகழ்வுகளிலிருந்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் நான் யாழ் கள உறவுகளுடன் மனம்புண்படும்படி தர்க்கித்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
Elugnajiru replied to ரஞ்சித்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது. -
ஊரில ஆவாக்குழு சன்னா குழு தாராகுழு இப்படியான வன்முறைக்கும்பல்களும் வன்முறையில் அழகியலைக்காண்கிறார்கள் என இந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் பீ பீ சி எதிர்காலத்தில் கூறினாலும் கூறும். கதையோட கதையாக யாழ் ஏழாலை வடக்கில் இப்போது குடாநாட்டில் ஏற்பட்டுள்ள மதுவுக்கான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்களது குறை தீர்க்கவும் இலகுவழியில் பணம் சம்பாதிக்கவும் அனைவரும் கசிப்புக்காச்சுவதைக் குடிசைத்தொழிலாகத் தொடங்கியிருக்கிறார்கள் என அறியவருகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Elugnajiru replied to goshan_che's topic in வாணிப உலகம்
சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான் அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில் ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன் பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம். TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம் -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Elugnajiru replied to goshan_che's topic in வாணிப உலகம்
கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது. -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Elugnajiru replied to goshan_che's topic in வாணிப உலகம்
இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்