சில கொடூரங்களையும், கொலைகளையும், அழிவுகளையும் பார்க்கும்போதும் (முக்கியமாக ஈழத்தில் நடந்தவை) கடவுள் இல்லையென்றே தோன்றும். அதே சமயம் சில அதிசயங்களையும், மனிதனின் சக்திக்கு அப்பால் நடக்கும் இயற்கையின் செயல்களை பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி இருக்கிறதென சடுதியில் உறைக்கும். வாழ்க்கை முழுவதும் இந்த தளும்பு நிலை இருந்துகொண்டே இருக்கிறது.
எனது வீட்டிலும் பூசை அறை இருக்கிறது, அது இல்லாளின் கட்டுப்பாட்டில். நான் அதிகம் செல்வதில்லை. பெரியாரின் கொள்கைகள் பல பிடிக்கும், ஆனால் கடவுள் மறுப்பில், மேலே சொன்னபடி மனம் இன்னும் தளும்பு நிலைதான்.